Friday, September 16, 2011

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக துள்ளி எழும் பதிவுலகம்...!!!


கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கு ஆதரவாக பதிவர்கள் படையெடுக்கும் இந்த நேரத்தில், நேற்று தம்பி பலே பிரபு சாட் பண்ணினான், அண்ணே இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டிருக்கும் நம் பதிவர் கூடல்பாலா போன் நம்பர் உங்ககிட்டே இருக்கான்னு, அதற்க்கு நான் இல்லை தம்பி தேடிபார்கிறேன், கிடைத்தால் உனக்கு தருகிறேன் உனக்கு கிடைத்தாலும் எனக்கு அனுப்பு என சொன்னேன்.

தம்பி நல்ல பொறுப்பா எனக்கு இன்றைக்கு கூடல்பாலாவின் போன் நம்பர் அனுப்பியிருந்தான் [[நன்றி தம்பி]] பரபரவென மனசினுள் பதட்டம் வந்தது. தாமதிக்காமல், உடனே போன் செய்தேன் பாலா'வுக்கு. அவர் சொன்ன போராட்டங்களின் விவரம் கீழே....

இன்றைக்கு உண்ணாவிரதம் ஆறாவது நாளாக நடைபெறுகிறது, கள்ளிகுளம் காலேஜ் ஸ்டுடன்ட்ஸ், கூத்தங்குளி அன்னை அப்பா காலேஜ் ஸ்டுடன்ஸ், இன்னும் ஒரு காலேஜ் ஸ்டுடன்ஸ்'களும் மேலும் கலந்து கொண்டார்களாம்.

உண்ணாவிரதம் இருப்பவர்கள் மொத்தம் நூற்றி இருவது பேர், மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருவதாயிரத்துக்கும் மேலாக இருக்கிறது.

நாகர்கோவில் டாக்டர் உதயகுமார் பொறுப்பாக போராட்டத்தை கவனிக்கிறாராம், இவர் உலகநாடுகள் அனைத்துக்கும் போய் வருபவர், ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி நேரில் போயி பத்துநாள் தங்கியிருந்து பார்த்திட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஐந்து அமைச்சர்கள் பேச்சி வார்த்தை நடத்தியிருக்கிறார்கள், அவர்கள் சொன்னது போராட்டத்தை கைவிட்டுட்டு, அம்மாவுடன் பேச வாருங்கள் என சொன்னார்கள். மக்கள் உண்ணாவிரதம் இருந்துகிட்டே பேச்சு வார்த்தை நடத்தலாமே என சொல்ல அமைச்சர்கள் எஸ்கேப்...!!!

வைகோ, அண்ணன் சீமான், வெள்ளையன்  போன்ற தலைவர்கள் நேரில் போயி போராட்டத்தை வலுபடுத்தினார்கள்.

வணிகர் சங்கம் வெள்ளையன் அவர்கள் தமிழகம் எங்கும் கடையடைப்பு நடத்த போகிறார், போராட்டத்துக்கு ஆதரவாக....

போராட்டம் நடக்கும் இடத்தில்  இருந்து பதினைந்து மைல் சுற்றளவுக்கு, வாகனங்கள் உள்ளே போகாதபடி போலீசார்
தடுத்து வைத்து  இருக்கிறார்கள்...!!!

காலையிலேயே கௌசல்யா கூடல்பாலா'வுக்கு போன் செய்து நானும் வரட்டுமா என்று கேட்டதற்கு, பதினைந்து மைல் சுற்றளவுக்கு போலீஸ் உள்ளே வர போலீஸ் கெடுபிடி பண்ணுமே மேடம், வந்து கஷ்டப்பட்ட வேணாம்னு பாலா சொன்னாராம்....!!!

இன்றைக்கு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதோடு அல்லாமல் ஜி கே மணியை போராட்ட இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்.

சரத்குமார் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கையும், குரலும் குடுத்து வருகிறார்.

விஜயகாந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டதுமல்லாமல், நேரில் வருகிறாராம்....!!!

திமுக'வும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும்படி தீவிரமாக யோசிப்பதும் அல்லாமல், ஸ்டாலின் நேரில் வருவதாக இருக்கிறதாம்...!!!

ஜெயலலிதா, அணுமின் நிலையம் பாதுகாப்பாவே இருக்கிறது என்கிறார்...!!! [[ மக்களுக்கு பாதுகாப்பு எங்கே மேடம்...?]]

கூடல்பாலா போராட்டத்தின் பேச்சுக்கள், போட்டோக்கள் எல்லாம் நிறைய எடுத்து வச்சிருக்காராம், ஆனால் லேப்டாப்பின் நெட் கனெக்ஷன் டெத் ஸ்லோவா இருக்கிறதுனாலே பதிவில் போடமுடியவில்லை'ன்னு மிகவும் வருத்தப்பட்டார்...

அவரிடம் பேசினதில் இருந்து தெரியவந்தது என்னான்னா, பதினஞ்சி மைல் சுற்றளவுக்கு உள்ளே மக்கள் [[போராட்டத்துக்கு]] போகமுடியாதபடி போலீஸ் தடை செய்வது ஏன்..?? அடங்கொன்னியா உனக்கும் சேர்த்துதானே போராடுறாங்க...?? சுனாமி, பூகம்பம் வந்தா மக்களை  பாதுகாக்க முடியாத அணு உலையை வச்சிட்டு, எப்பிடிய்யா மக்கள் நிம்மதியா இருப்பாங்க...???

அண்ணே இன்னும் ரெண்டுநாள்ல போராட்டம் முடிவுக்கு வந்துரும்ண்ணே, இந்தபோராட்டம் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் அணு உலைகளும் மூடும்படி, நாம் உலகத்துக்கே முன்மாதிரியா இருப்போம் அண்ணே'ன்னு கூடல்பாலா சொன்னார் [[நான் நெகிழ்ந்து போனேன், உமக்கு நல்ல மனசுய்யா...!!!]]

பதிவுலகம் இப்போதான் ஷாக் அடிச்சாமாதிரி துள்ளி எழும்பி இருக்கு, பதிவர்களே, சுனாமியால் ஜப்பானில் அணு உலையால் மக்கள் பட்ட இன்னல்களை கண்டோம் அல்லவா..? நாம் சுனாமி வந்ததுக்கே தாங்கமுடியாத வேதனையை அனுபவித்தோமே..? அதேஇடத்தில் அணு உலையும் வந்தால்......நினச்சி கூடபார்க்க முடியவில்லை.

நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க, கூடுமானவரை கைகோர்த்து போராடுவோம்....

லைவ் நியூஸ் தெரிந்துகொண்டு பதிவிடுங்கள் போனைபோடுங்கள் கூடல்பாலாவுக்கு 0091'9940771407

koodalpaalaa'வின்  பிளாக் 
ஆணிவேர் வலைத்தளம்

 மனதோடு மட்டும் கௌசல்யா
தமிழ்வாசி" பிரகாஷ்
போராட்டத்தில் தமிழ்வாசியின் இந்த பதிவு மேடையில் வாசிக்கபட்டதாம்...!!!
வைறை சதீஷ்

56 comments:

  1. ட்விட்டர் தளத்தில் கூட நண்பர்கள் இதை செய்கிறோம். போராடத்தான் முடியவில்லை. இப்படியாவது செய்து அவர்கள் போராட்டம் வெற்றி பெற உழைப்போம்.

    ReplyDelete
  2. //நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க//

    உண்மை.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. Prabu Krishna said...
    ட்விட்டர் தளத்தில் கூட நண்பர்கள் இதை செய்கிறோம். போராடத்தான் முடியவில்லை. இப்படியாவது செய்து அவர்கள் போராட்டம் வெற்றி பெற உழைப்போம்.//

    சரியாக சொன்னாய் தம்பி...

    ReplyDelete
  4. RAMVI said...
    //நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க//

    உண்மை.

    தகவலுக்கு நன்றி.//

    வாங்க வாங்க ராம்வி..

    ReplyDelete
  5. செர்னொபில், புகுஷிமா போன்ற உலைகளின் வெடிப்புகளின் பாதிப்பு இன்னும் மனதில் இருந்து மறைந்து விடாத நிலையில், ஆற்றலை அதிகரிக்கிறேன் என்னும் போர்வையில் மக்களின் உயிரை மிக மலிவாக அரசு எண்ணி விடக்கூடாது.
    போராட்டம் வெல்லட்டும். நிரந்தர தீர்வை கொண்டு வரட்டும்..

    ReplyDelete
  6. அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
    பதிவுலகத்தின் சக்தி இதன் மூலம் புரியட்டும்
    த.ம 5

    ReplyDelete
  7. நானும் தொலைபேசி எண்களைத் தான் தேடிக்கொண்டிருந்தேன்.
    நன்றி மக்களே.....

    ReplyDelete
  8. Our bloggers always support to Good things

    ReplyDelete
  9. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஒன்னா சேந்து வெல்லணும்-ணே!

    ReplyDelete
  11. நமது ஆதரவு அவர்களுக்கு தார்மீக பலத்தைக் கொடுக்கும்.

    சீக்கிரம் போராட்டம் முடிவுக்கு வந்து நல்ல முடிவு எட்டப்பட வேண்டும்.

    ஜெ. இந்த விஷயத்திற்கு ஆதரவாக இறங்கினால் மக்கள் அவரைக் கொண்டாடுவார்கள்.

    ReplyDelete
  12. பாரத்... பாரதி... said...
    செர்னொபில், புகுஷிமா போன்ற உலைகளின் வெடிப்புகளின் பாதிப்பு இன்னும் மனதில் இருந்து மறைந்து விடாத நிலையில், ஆற்றலை அதிகரிக்கிறேன் என்னும் போர்வையில் மக்களின் உயிரை மிக மலிவாக அரசு எண்ணி விடக்கூடாது.
    போராட்டம் வெல்லட்டும். நிரந்தர தீர்வை கொண்டு வரட்டும்//

    இன்குலாப் ஜிந்தாபாத் அணுமின் நிலையம் முர்தாபாத்....

    ReplyDelete
  13. Ramani said...
    அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்
    பதிவுலகத்தின் சக்தி இதன் மூலம் புரியட்டும்
    த.ம 5//

    போராடித்தான் பெறவேண்டி இருப்பது மிகப்பெரிய அவலம் இல்லையா குரு...

    ReplyDelete
  14. மகேந்திரன் said...
    நானும் தொலைபேசி எண்களைத் தான் தேடிக்கொண்டிருந்தேன்.
    நன்றி மக்களே.....//

    உங்களை பற்றி நான் போனில் பேசும்போது கூடல் பாலா சொன்னார்...

    ReplyDelete
  15. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Our bloggers always support to Good things//

    நிச்சயமாக ஆமாம் ராஜா...

    ReplyDelete
  16. FOOD said...
    தமிழ்மணம் ஏழு.//

    நன்றி ஆபீசர், நல்லா இருக்கீங்களா?

    ReplyDelete
  17. பாலா said...
    போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    உங்கள் ஆதரவுக்கு நன்றி மக்கா...

    ReplyDelete
  18. சத்ரியன் said...
    ஒன்னா சேந்து வெல்லணும்-ணே!//

    கண்டிப்பா மக்கா...

    ReplyDelete
  19. பதிவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது! வெற்றி விரைவில்!நன்றி மனோ!

    ReplyDelete
  20. மனோ நல்ல பதிவு போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. செங்கோவி said...
    நமது ஆதரவு அவர்களுக்கு தார்மீக பலத்தைக் கொடுக்கும்.

    சீக்கிரம் போராட்டம் முடிவுக்கு வந்து நல்ல முடிவு எட்டப்பட வேண்டும்.

    ஜெ. இந்த விஷயத்திற்கு ஆதரவாக இறங்கினால் மக்கள் அவரைக் கொண்டாடுவார்கள்.//

    இன்னும் ரெண்டு நாளில் முடிவு தெரியவேண்டும் என்பதே எல்லார் விருப்பமும்....

    ReplyDelete
  22. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன் நண்பா...///


    இதோ வாரேன்...

    ReplyDelete
  23. கொலை வாளினை எடுக்கணுமோ அண்ணா இல்லன்னா உள்ள போகமுடியாதா?

    ReplyDelete
  24. ////நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க, கூடுமானவரை கைகோர்த்து போராடுவோம்..////

    எளிய மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வன்முறைகள்- ஏமாற்றுத்தனங்களுக்கு எதிராக கைகோர்த்து போராடுவதே அவசியமானது. இது எல்ல பகுதிகளிலும் பொருந்தும்.

    ReplyDelete
  25. ஒன்று படுவோம். 2 நாளாக ட்விட்டரில் கலக்கிட்டோமில்ல?

    ReplyDelete
  26. சென்னை பித்தன் said...
    பதிவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது! வெற்றி விரைவில்!நன்றி மனோ!//

    மிக்க நன்றி தல...கடந்த என் பதிவை நீங்க படிகலையோ உங்க பெயர் இருந்ததே...?

    ReplyDelete
  27. கும்மாச்சி said...
    மனோ நல்ல பதிவு போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.//

    நன்றி மக்கா...

    ReplyDelete
  28. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    கொலை வாளினை எடுக்கணுமோ அண்ணா இல்லன்னா உள்ள போகமுடியாதா?//

    அகிம்சையா போராடுவோம் நல்ல முடிவு வரும்...

    ReplyDelete
  29. சி.பி.செந்தில்குமார் said...
    ஒன்று படுவோம். 2 நாளாக ட்விட்டரில் கலக்கிட்டோமில்ல?//


    சிபி'யா கொக்கா ?? தொடர்ந்து பதிவுகளை போட்டுட்டு இருடா அண்ணா...

    ReplyDelete
  30. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஒன்றுபடுவோம் .//

    இன்குலாப் ஜிந்தாபாத் அணுமின் நிலையம் முர்தாபாத்....

    ReplyDelete
  31. மருதமூரான். said...
    ////நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க, கூடுமானவரை கைகோர்த்து போராடுவோம்..////

    எளிய மக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வன்முறைகள்- ஏமாற்றுத்தனங்களுக்கு எதிராக கைகோர்த்து போராடுவதே அவசியமானது. இது எல்ல பகுதிகளிலும் பொருந்தும்.//

    சரியாக சொன்னீர்கள் மருதமூரான்....

    ReplyDelete
  32. இந்த ஆதரவை பார்த்தாவது அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டும்..

    முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

    ReplyDelete
  33. பதிவு லைவ் டெலிகாஸ்ட் மாதிரி இருந்தது...

    பாலா என்னிடம் சொன்ன அத்தனையும் அப்படியே இங்கே பதிவில் இருக்கிறது. நன்றிகள் மனோ.

    இதை படிப்பவர்களுக்கு சரியான விவரங்கள் போய் சேருகிறது உங்களின் மூலமாக...!!

    போராட்டம் வெற்றி பெற வேண்டும்...நம் எல்லோரின் முயற்சி நிச்சயம் வீண் போகாது...

    நல்ல தீர்வுக்காக காத்திருப்போம்.

    ReplyDelete
  34. போராட்டம் நிச்சயம் வெற்றி பெறணும். உலகம் முழுக்க இத்தனை அசம்பாவிதங்கள் நடந்ததைப் பார்த்த பின்னாடியாவது நாம விழிச்சுக்க வேணாமா..

    ReplyDelete
  35. துஷ்யந்தன் said...
    இந்த ஆதரவை பார்த்தாவது அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டும்..

    முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது//

    அந்த சிங்கிடி பிரதமருக்கு இந்த மேட்டர் தெரியுமான்னு கூட தெரியாது....

    ReplyDelete
  36. Kousalya said...
    பதிவு லைவ் டெலிகாஸ்ட் மாதிரி இருந்தது...

    பாலா என்னிடம் சொன்ன அத்தனையும் அப்படியே இங்கே பதிவில் இருக்கிறது. நன்றிகள் மனோ.

    இதை படிப்பவர்களுக்கு சரியான விவரங்கள் போய் சேருகிறது உங்களின் மூலமாக...!!

    போராட்டம் வெற்றி பெற வேண்டும்...நம் எல்லோரின் முயற்சி நிச்சயம் வீண் போகாது...

    நல்ல தீர்வுக்காக காத்திருப்போம்.//

    நன்றி கௌசல்யா...

    "இன்குலாப் ஜிந்தாபாத் அணுமின் நிலையம் முர்தாபாத்"

    ReplyDelete
  37. அமைதிச்சாரல் said...
    போராட்டம் நிச்சயம் வெற்றி பெறணும். உலகம் முழுக்க இத்தனை அசம்பாவிதங்கள் நடந்ததைப் பார்த்த பின்னாடியாவது நாம விழிச்சுக்க வேணாமா..//

    உலகமே உள்ளங்கையில் இருக்கும் காலமிது, உலகத்தில் என்னவொரு அசம்பாவிதம் நடந்தாலும் குக்கிராமத்து மக்கள் கூட அந்த செய்தியை அறிந்துவிடும் இந்தகாலத்தில், ஜப்பான் அழிவை பார்த்த மக்கள் எப்படி ஆபத்தை அருகில் வைத்து கொண்டு வாழ முடியும்...???

    ReplyDelete
  38. தொலைபேசி எண் தந்து உதவியமைக்கு நன்றி. நேரில் செல்ல வேண்டும் என்ற மனதை சில பல காரணங்களால் அடக்கி இருந்தேன். மாலை உங்க பதிவில் எண்ணைப் பார்த்ததும் பாலாவிடம் பேசி விட்டேன். இதன் காரணமாய் பல பதிவர்கள் தன்னிடம் பேசி விட்டார்கள் என்று சொன்னார். உண்ணாவிரதத்தில் இருக்கும் போது பேசுவதில் அதிக சக்தியை செலவழிக்காதீர்கள் என்று சொன்னேன். பதிவர்கள் அவரிடம் பேசினாலும் குறைவாக பேசி முடித்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  39. அவர்கள் ஜெயிப்பார்கள் நண்பரே

    ReplyDelete
  40. vanakkam najillar. nan kadantha 20 varusama kalpakkam anu min nilaiya kudiyiruppil vasithu varukinren.

    enakku onnum aka villai.

    ReplyDelete
  41. நாம் சுனாமி வந்ததுக்கே தாங்கமுடியாத வேதனையை அனுபவித்தோமே..? அதேஇடத்தில் அணு உலையும் வந்தால்...

    enna kodumaiyada... nam nattil sunami vanhtha pothu kalpakkam anu ulaiyin meethum adiththathu enna achu.

    enga anna anru control roomil than irunthar. thodarnthu 12 hours avarkal veetuku kuda varamal pondatti, pullai kuttikal pathi kavalaip padamal anu ulaiyai shut down seithu pinnar 10 days after commission seitharkal. onnum valaiye. sunami aditha pothum anu ulai pathu kappaka irunthathu. CM sonnathu pola pathu kappu visayathil namma alluka romba mukkiyaththuvam therukinrarkal.

    இன்னும் ரெண்டுநாள்ல போராட்டம் முடிவுக்கு வந்துரும்ண்ணே, இந்தபோராட்டம் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் அணு உலைகளும் மூடும்படி, நாம் உலகத்துக்கே முன்மாதிரியா இருப்போம் அண்ணே'ன்னு கூடல்பாலா சொன்னார் [[நான் நெகிழ்ந்து போனேன், உமக்கு நல்ல மனசுய்யா...!!!]]

    ithu mathiri peru kidaikkanu enral athukku niraiya nalla visayangal irukku. athukka eenn oru development project yai ethirkka vendum. vennum enral kalpakkam varungal nan suthi kamikkinren.

    ReplyDelete
  42. நமக்காக போராடும் நல் உள்ளங்களின் போராட்டம் வெற்றி பெற நாமும் ஓன்றிணைந்து குரல்கொடுப்போம்

    நாம் எழுப்பும் குரல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசுகளை தட்டி எழுப்பட்டும்

    போரட்டம் வெற்றி பெற மனப்பூர்வ வாழ்த்துக்கள் என் ஆதரவும் கூட

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  43. போராட்டம் வெற்றி பெற
    இன்னும் அதிக பதிவுகள்
    உங்களைப் போல எல்லா
    வலைகளும் வெளியிட வேண்டும்
    தொலைக் காட்சிகளும் செய்தித்
    தாள்களும் அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை என்பது
    வருந்த வேண்டிய செய்தி
    நன்றி!மனோ!

    புலவர் சாஇராமாநுசம்

    ReplyDelete
  44. பித்தனின் வாக்கு said...
    நாம் சுனாமி வந்ததுக்கே தாங்கமுடியாத வேதனையை அனுபவித்தோமே..? அதேஇடத்தில் அணு உலையும் வந்தால்...

    enna kodumaiyada... nam nattil sunami vanhtha pothu kalpakkam anu ulaiyin meethum adiththathu enna achu.

    enga anna anru control roomil than irunthar. thodarnthu 12 hours avarkal veetuku kuda varamal pondatti, pullai kuttikal pathi kavalaip padamal anu ulaiyai shut down seithu pinnar 10 days after commission seitharkal. onnum valaiye. sunami aditha pothum anu ulai pathu kappaka irunthathu. CM sonnathu pola pathu kappu visayathil namma alluka romba mukkiyaththuvam therukinrarkal.

    இன்னும் ரெண்டுநாள்ல போராட்டம் முடிவுக்கு வந்துரும்ண்ணே, இந்தபோராட்டம் மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் அணு உலைகளும் மூடும்படி, நாம் உலகத்துக்கே முன்மாதிரியா இருப்போம் அண்ணே'ன்னு கூடல்பாலா சொன்னார் [[நான் நெகிழ்ந்து போனேன், உமக்கு நல்ல மனசுய்யா...!!!]]

    ithu mathiri peru kidaikkanu enral athukku niraiya nalla visayangal irukku. athukka eenn oru development project yai ethirkka vendum. vennum enral kalpakkam varungal nan suthi kamikkinren.//

    இயற்கையின் சீற்றம் முன்பு மாதிரி இல்லை சார், ஆனானப்பட்ட ஜப்பானையே குப்புற கவுத்த இயற்கையின் சீற்றம், அப்படி இருக்கும் போது நாமும் பாதுகாப்பாக இருப்பதில் தவறில்லை சார், இன்னும், நிறைய நாடுகளில் அணு உலைகளை மூடி வருவது தங்களுக்கு தெரியாதல்ல இல்லையா...

    ReplyDelete
  45. நாய்க்குட்டி மனசு said...
    தொலைபேசி எண் தந்து உதவியமைக்கு நன்றி. நேரில் செல்ல வேண்டும் என்ற மனதை சில பல காரணங்களால் அடக்கி இருந்தேன். மாலை உங்க பதிவில் எண்ணைப் பார்த்ததும் பாலாவிடம் பேசி விட்டேன். இதன் காரணமாய் பல பதிவர்கள் தன்னிடம் பேசி விட்டார்கள் என்று சொன்னார். உண்ணாவிரதத்தில் இருக்கும் போது பேசுவதில் அதிக சக்தியை செலவழிக்காதீர்கள் என்று சொன்னேன். பதிவர்கள் அவரிடம் பேசினாலும் குறைவாக பேசி முடித்துக் கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்//

    நீங்கள் சொல்வதும் சரிதான் மேடம்...

    ReplyDelete
  46. M.R said...
    அவர்கள் ஜெயிப்பார்கள் நண்பரே//



    ஜெயிக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்..

    ReplyDelete
  47. சம்பத்குமார் said...
    நமக்காக போராடும் நல் உள்ளங்களின் போராட்டம் வெற்றி பெற நாமும் ஓன்றிணைந்து குரல்கொடுப்போம்

    நாம் எழுப்பும் குரல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசுகளை தட்டி எழுப்பட்டும்

    போரட்டம் வெற்றி பெற மனப்பூர்வ வாழ்த்துக்கள் என் ஆதரவும் கூட

    நட்புடன்
    சம்பத்குமார்//

    மிக்க நன்றி சம்பத்குமார்....

    ReplyDelete
  48. புலவர் சா இராமாநுசம் said...
    போராட்டம் வெற்றி பெற
    இன்னும் அதிக பதிவுகள்
    உங்களைப் போல எல்லா
    வலைகளும் வெளியிட வேண்டும்
    தொலைக் காட்சிகளும் செய்தித்
    தாள்களும் அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை என்பது
    வருந்த வேண்டிய செய்தி
    நன்றி!மனோ!

    புலவர் சாஇராமாநுசம்//


    இன்குலாப் ஜிந்தாபாத் அணுமின் நிலையம் முர்தாபாத்....

    ReplyDelete
  49. நாம் எலியோ பூனையா குரங்கோ அல்ல சோதனை செய்து பார்க்க, கூடுமானவரை கைகோர்த்து போராடுவோம்....//

    உண்மை

    ReplyDelete
  50. ஒரே ஒரு மனிதர் டெல்லில உண்ணாவிரதம் இருந்தா அதற்க்கு ஒட்டுமொத்த இந்திய மீடியாக்கள் எல்லாமே ஆதரவா இருக்கு... ஆனா இந்த மாதிரி ரொம்ப சென்சிடிவ் விசயங்கள பெருசா எந்த மீடியாவும் கண்டுக்கறது இல்ல... எதோ பதிவர்கள் எங்களால் ஆனா முயற்சியையும் மேற்கொள்வோம்ண்ணே... எங்களோட முழு ஆதரவு இதுக்கு இருக்கு..

    ReplyDelete
  51. கட்டாயம் ஒன்றுபடுவோம் இதில நாங்க ஒன்றுபடவில்லைன்னா பின்ன எதில...??

    ReplyDelete
  52. Real Santhanam Fanz said...
    ஒரே ஒரு மனிதர் டெல்லில உண்ணாவிரதம் இருந்தா அதற்க்கு ஒட்டுமொத்த இந்திய மீடியாக்கள் எல்லாமே ஆதரவா இருக்கு... ஆனா இந்த மாதிரி ரொம்ப சென்சிடிவ் விசயங்கள பெருசா எந்த மீடியாவும் கண்டுக்கறது இல்ல... எதோ பதிவர்கள் எங்களால் ஆனா முயற்சியையும் மேற்கொள்வோம்ண்ணே... எங்களோட முழு ஆதரவு இதுக்கு இருக்கு..


    ஆமாய்யா எனக்கும் புரியாத புதிராகவே இருக்கையா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!