Sunday, November 27, 2011

எனக்குள் நான் பயங்கரடேட்டா....!!!

நண்பன் கோகுல், எனக்குள் நான் [[பயங்கர டேட்டா]] பதிவுக்கு தொடர்பதிவு எழுத சொல்லி கேட்டுருந்தார், சரி நண்பன் வேண்டுகோளை தட்டமுடியுமா, அதான் எனக்குள்ளே உறங்கும் [[உறுமும்]] என்னை சொல்லி இருக்கேன் ஹி ஹி.....

நான் : நான் ஒன்றும் பிரபல பதிவர் சிபி, விக்கி மாதிரி பிராப்ள ச்சே ச்சீ பிரபல ஆளு கிடையாது, உங்களுக்கு நான் நாஞ்சில்மனோ, அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காளுக்கு நான் மனாசே, நண்பர்களுக்கு மனோஜ், மனைவி குடும்பத்தாருக்கு மனோ...


சந்தோஷ தருணங்கள் : குழந்தைகளுடன் குழந்தையாக இருப்பது, விக்கி'யை சாட்டிங்கில் திட்டி தீர்ப்பது, ஆபீசர் [[சங்கரலிங்கம்]] அருகில் அமர்ந்து இருப்பது, கே ஆர் விஜயனுடன் ஊர் சுற்றுவது, மனைவி குழந்தைகளுடன் வெளியே போயி சாப்பிடும் நேரம், பஹ்ரைன் மலையாளி நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடித்து சிரிப்பது.....!!!


மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!


வாழ்க்கை : கடுமையாக போராடிகிட்டு இருக்கேன் ஒற்றை மனிதனாக, இதுவும் சுகமாகவே இருக்கிறது...!!


காதல் : முதல் காதல் சோகத்தில் முடிந்தது [[தோல்வி அல்ல]] அடுத்த காதல் தென்றலாக வந்து, என்னை அணைத்தவள்தான் என் மனைவி லீதியாள், இரு வீட்டு பெற்றோரின் சம்மதப்படி கல்யாணம் மும்பையில் நடந்தது, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.


நட்பு : நட்புன்னு நம்பி ஏமாந்த கதைகள் நிறைய உண்டு, அதைவிட ஏராளமான நல்ல நட்புகள் என்னை சுற்றி இருக்கிறார்கள் ஏன் நீங்களும் கூடத்தான்....!


மரணம் : சர்வ சிருஷ்டியையும் உண்டாக்கிய தெய்வம் கையில் இருக்கிறது, இதை முற்றிலும் நம்புகிறவன்...!!!


சோகம் : ஈழத்தமிழ் மக்களின் நிலை...!!!


கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!


நினைப்பது : சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்...!!! [[நன்றி பாக்யா]]


கவர்ந்த வரிகள் : துஷ்டனை கண்டால் தூர விலகு [[பைபிள் வசனம்]]


ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!


பலம் : தெய்வ நம்பிக்கை....!!!

பலவீனம் : ஓவர் செலவு, கண்ட்ரோல் பண்ண முடியவில்லை....!!!


டிஸ்கி : ஒ இனி தொடர் பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா, போன தொடருக்கே [[குழந்தை உலகம்]] கூப்பிட்ட ஒருத்தன் [[ராஸ்கல்ஸ்]] சத்தத்தையும் காணோம், ம்ம்ம்ம் யாரை போட்டு குடுக்கலாம்....??

பன்னிகுட்டியை அழைக்கிறேன், காமெடியா இல்லை சீரியஸா போட்டாலும் சுவாரஷ்யமா இருக்கும் அடுத்து, கில்மா நாயகனை [[சிபி]] அழைக்கிறேன், கவிதைவீதி'யை அழைக்கிறேன்.

மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?

113 comments:

  1. ஹேய் வடை...(ரொம்ப நாளாச்சு)

    ReplyDelete
  2. Naan than annikkae pathivu
    pottutene......

    PUTHANDU VARA POKIRATHU...
    KUDAVU THODER PATHIVUGALUM.......-NU

    athan ellam varisai katti varuthu....
    Mano nan kuppitta thoder pathivu
    enna AAAACHI ???????????????

    ReplyDelete
  3. போண்டா, பஜ்ஜின்னு ஒரு நூறு சாப்பாட்டு ஐட்டம் போடுவோமா?

    ReplyDelete
  4. வேண்டாம் பதிவு படிச்சிட்டு ஒழுங்கா கமென்ட் போடுன்னு மனோ கத்தியோட ஓடி வருவார்.. சரி போடுவோம்...

    ReplyDelete
  5. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஹேய் வடை...(ரொம்ப நாளாச்சு)//

    தின்னும்ய்யா வாத்தி உமக்கு இல்லாததா ஹி ஹி..

    ReplyDelete
  6. NAAI-NAKKS said...
    Naan than annikkae pathivu
    pottutene......

    PUTHANDU VARA POKIRATHU...
    KUDAVU THODER PATHIVUGALUM.......-NU

    athan ellam varisai katti varuthu....
    Mano nan kuppitta thoder pathivu
    enna AAAACHI ???????????????//

    மெதுவா வாறேம்னே கொஞ்சம் பொறுங்க...

    ReplyDelete
  7. எங்களுக்கு நீங்கள் நாஞ்சில் மனோ தான், குட்..

    ReplyDelete
  8. வேடந்தாங்கல் - கருன் *! said...
    போண்டா, பஜ்ஜின்னு ஒரு நூறு சாப்பாட்டு ஐட்டம் போடுவோமா?//

    அடப்பாவி தொடங்கியாச்சா மறுபடியும் முதல்ல இருந்தே ஹி ஹி..

    ReplyDelete
  9. வேடந்தாங்கல் - கருன் *! said...
    வேண்டாம் பதிவு படிச்சிட்டு ஒழுங்கா கமென்ட் போடுன்னு மனோ கத்தியோட ஓடி வருவார்.. சரி போடுவோம்...//

    சபரிமலைக்கு போன ஆளு இங்கே என்னய்யா பண்ணுதீறு...?

    ReplyDelete
  10. வாழ்க்கை பற்றிய உங்களுடிய வரிகள் (போராட்டம்), சுகம் என சொல்லி இருப்பது சூப்பர்.

    ReplyDelete
  11. வேடந்தாங்கல் - கருன் *! said...
    எங்களுக்கு நீங்கள் நாஞ்சில் மனோ தான், குட்..//

    ஹி ஹி வாத்தி....

    ReplyDelete
  12. வேடந்தாங்கல் - கருன் *! said...
    வேண்டாம் பதிவு படிச்சிட்டு ஒழுங்கா கமென்ட் போடுன்னு மனோ கத்தியோட ஓடி வருவார்.. சரி போடுவோம்...//

    சபரிமலைக்கு போன ஆளு இங்கே என்னய்யா பண்ணுதீறு...?///

    காலையில வந்துட்டோம்ல..

    ReplyDelete
  13. வேடந்தாங்கல் - கருன் *! said...
    வாழ்க்கை பற்றிய உங்களுடிய வரிகள் (போராட்டம்), சுகம் என சொல்லி இருப்பது சூப்பர்.//

    போராட்டத்துலையும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுதுய்யா...!!

    ReplyDelete
  14. ஏன் நீங்களும் கூடத்தான்....!// அட..

    ReplyDelete
  15. ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது,/// தசாவதானி மனோ .. வாழ்க..வாழ்க..(நாம தமிழ்நாடு தெரியனும்ல)

    ReplyDelete
  16. வேடந்தாங்கல் - கருன் *! said...
    வேடந்தாங்கல் - கருன் *! said...
    வேண்டாம் பதிவு படிச்சிட்டு ஒழுங்கா கமென்ட் போடுன்னு மனோ கத்தியோட ஓடி வருவார்.. சரி போடுவோம்...//

    சபரிமலைக்கு போன ஆளு இங்கே என்னய்யா பண்ணுதீறு...?///

    காலையில வந்துட்டோம்ல..//

    காலையிலேயே வந்த ஆளு இன்னுமா தூங்காம கம்பியூட்டருல காலை விட்டு ச்சே ச்சீ கையை விட்டு ஆட்டிகிட்டு இருக்கீங்க...
    ?

    ReplyDelete
  17. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஏன் நீங்களும் கூடத்தான்....!// அட..//

    ஹி ஹி.....

    ReplyDelete
  18. போன தொடருக்கே [[குழந்தை உலகம்]] கூப்பிட்ட ஒருத்தன் [[ராஸ்கல்ஸ்]/// அருவாளோட போங்க, எழுதுனாலும் எழுதுவாங்க..

    ReplyDelete
  19. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது,/// தசாவதானி மனோ .. வாழ்க..வாழ்க..(நாம தமிழ்நாடு தெரியனும்ல)//

    ஆஹா தசாவதானின்னு டி ராஜேந்தரை அல்லவா சொல்லுவாயிங்க, உள்குத்தா இருக்குமோ...

    ReplyDelete
  20. மனோ தத்துவம்.. கலக்கலோ, கலக்கல் (ஒருவேல உள்குத்தா இருக்குமோ)

    ReplyDelete
  21. வேடந்தாங்கல் - கருன் *! said...
    போன தொடருக்கே [[குழந்தை உலகம்]] கூப்பிட்ட ஒருத்தன் [[ராஸ்கல்ஸ்]/// அருவாளோட போங்க, எழுதுனாலும் எழுதுவாங்க..//

    அருவாளோடு போங்க இல்லை வாங்கன்னு சொல்லும்ய்யா, ஏன்னா உங்களையும் கூப்புட்டு இருந்தேன் ஹீ ஹீ ஹீ ஹீ....

    ReplyDelete
  22. வேடந்தாங்கல் - கருன் *! said...
    மனோ தத்துவம்.. கலக்கலோ, கலக்கல் (ஒருவேல உள்குத்தா இருக்குமோ)//

    செலவு செய்யும் பொது கடுப்பா பார்க்குரானுகய்யா அதான் இப்பிடி ஒரு குண்டை போட்டேன்...

    ReplyDelete
  23. தம்பி, லேப்டாப்பை விட்டுட்டியே ஹி ஹி

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said...
    * வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது,/// தசாவதானி மனோ .. வாழ்க..வாழ்க..(நாம தமிழ்நாடு தெரியனும்ல)//

    ஆஹா தசாவதானின்னு டி ராஜேந்தரை அல்லவா சொல்லுவாயிங்க, உள்குத்தா இருக்குமோ...// உள்குத்து,வெளிக்குத்து எதுவுமே இல்லை...

    ReplyDelete
  25. அண்ணே கலக்கலா சொல்லி இருக்கீங்க...அதே நேரத்துல அது என்ன சாப்பாடு மட்டும்..தண்ணி அடிக்கறேன்னு வெளிப்படயா சொல்லுயா வென்று!

    ReplyDelete
  26. யோவ் அது என்ன 1947 எடுத்த போட்டோவா அம்புட்டு ஓல்டா கீது!

    ReplyDelete
  27. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி, லேப்டாப்பை விட்டுட்டியே ஹி ஹி//

    டேய் மூதேவி அடங்குடா ராஸ்கல்...

    ReplyDelete
  28. வேடந்தாங்கல் - கருன் *! said...
    MANO நாஞ்சில் மனோ said...
    * வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது,/// தசாவதானி மனோ .. வாழ்க..வாழ்க..(நாம தமிழ்நாடு தெரியனும்ல)//

    ஆஹா தசாவதானின்னு டி ராஜேந்தரை அல்லவா சொல்லுவாயிங்க, உள்குத்தா இருக்குமோ...//

    உள்குத்து,வெளிக்குத்து எதுவுமே இல்லை...//

    ஹா ஹா ஹா ஹா எந்த குத்தா இருந்தா என்ன ஹி ஹி...

    ReplyDelete
  29. விக்கியுலகம் said...
    அண்ணே கலக்கலா சொல்லி இருக்கீங்க...அதே நேரத்துல அது என்ன சாப்பாடு மட்டும்..தண்ணி அடிக்கறேன்னு வெளிப்படயா சொல்லுயா வென்று!//

    நான் என்ன விக்கியா...?? ஹி ஹி...

    ReplyDelete
  30. வேடந்தாங்கல் - கருன் *! said...
    இந்த மேட்டரில பெண்கள் கழுவுற தண்ணீரில் நழுவுகின்ற மீன் மாதிரித் தான் நடந்து கொள்வார்கள்.//

    ஒ அப்படித்தான் நடந்து கொள்வார்களா?//

    என்னய்யா வாத்தி, ராக்கெட் மாறி வந்துருச்சோ ஹி ஹி..

    ReplyDelete
  31. விக்கியுலகம் said...
    யோவ் அது என்ன 1947 எடுத்த போட்டோவா அம்புட்டு ஓல்டா கீது!//

    டேய் ரெண்டு பிள்ளை பெத்தாச்சு இனி ஒல்டா இருந்தா என்ன கோல்டா இருந்தா என்ன விட்றா விட்றா ஹி ஹி...

    ReplyDelete
  32. //ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!//
    ஓ! ம்யுசிக் எல்லாம் தெரியுமா? சூப்பர்! :-)

    ReplyDelete
  33. ஜீ... said...
    //ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!//

    ஓ! ம்யுசிக் எல்லாம் தெரியுமா? சூப்பர்! :-)//

    ஆமாம்ய்யா.....

    ReplyDelete
  34. இம்புட்டு விஷயத்தை இப்படி புட்டுபுட்டு வச்சிட்டியே மனோ...

    உங்களப்பத்தி முழுசா தெரிஞ்சிக்க இந்த பதிவு போதும்ன்னு நினைக்கிறேன்...

    அப்படியோ என்னையும் கோத்துவிட்டாச்சா...

    ReplyDelete
  35. உங்க கோபத்துக்கு --வாழ்த்துக்கள்.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  36. துஷ்டனை கண்டால் தூர விலகு அப்படி ன்னு போட்டுட்டு துஷ்டர்கள் படமா போட்டு இருக்கீங்க..
    நான் மோதி மிதித்து விடு பாப்பா ஜாதி, நீங்களும் அப்படி தான்னு நினைச்சேன்

    ReplyDelete
  37. வணக்கம் மனோ!
    உங்களை பற்றி இன்னும் அதிகமாய் புரிந்து கொண்டேன்..

    ReplyDelete
  38. மும்பைல செஞ்ச செயலுக்கு சல்யூட் தலைவா.

    ReplyDelete
  39. //மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?//

    தெலுங்க படம் டப்பிங் மாதிரி இருக்கே தல. லேட்டஸ்ட்டா யோசிங்க. I worker, eat burger. You what?

    ReplyDelete
  40. ////கடுமையாக போராடிகிட்டு இருக்கேன் ஒற்றை மனிதனாக, இதுவும் சுகமாகவே இருக்கிறது..///

    இதுதான் நிதர்சனமான வாசகம் ..
    தனிமனித உழைப்பில் கிடைக்கும் சந்தோசம் இதுதான் மக்களே..
    தங்களை பற்றி மேலும் தெரியவைத்தது இந்தப் பதிவு...

    ReplyDelete
  41. பன்னிக்குட்டிய இன்னொரு பயங்கர டேட்டாவ எழுத சொல்றதுல ஏதோ ப்ளான் இருக்கு. கன்பர்ம்.

    ReplyDelete
  42. நினைப்பது : சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்...!!

    எனக்குள் நான் பயங்கரடேட்டா....!!!

    கொடுத்துட்டு சமத்தா பதில் சொல்லி இருக்கேங்க அண்ணா :) எல்லாமும் ரசிக்கும் படியாய் இருந்தது :)

    ReplyDelete
  43. பயங்கர டேட்டாவா? யார் சொன்னா?
    அருமையான தொகுப்பு. இன்னும் உங்களை அதிகம் அறிய வைத்தது. மும்பை சிறுமி சம்பவத்தில் உங்களுக்கு பெரிய சல்யூட் சகோ.

    காதல், இறைவன், பலம், மரணம், நட்பு, சந்தோஷம்,குடும்பம் என உங்களின் ஒவ்வொரு நிலைபாடும் ரொம்ப அருமை

    ReplyDelete
  44. //பன்னிக்குட்டிய இன்னொரு பயங்கர டேட்டாவ எழுத சொல்றதுல ஏதோ ப்ளான் இருக்கு. கன்பர்ம்.//

    அடுத்து இன்ட்லியா? தமிழ் 10 ஆ? யாருக்கு எதிரா கொடி தூக்க போறோம்??? ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
  45. வணக்கம் அண்ணே, நலமாக இருக்கிறீங்களா?


    மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!//

    கண்டிப்பா நாம எல்லோரும் மீண்டும் அடுத்த வருடம் சந்திக்கிறோம்!
    கலக்குறோம்!

    நான் ஆப்பிசரிடம் இது தொடர்பாக பேசுறேன்!

    ReplyDelete
  46. உங்களின் கோப உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்,
    காலமறிந்து கடமை செய்திருக்கிறீங்க!

    சுய அறிமுகம், உங்களின் விருப்பு வெறுப்புக்களை அழகாகச் சொல்லியிருப்பது அருமை.

    ReplyDelete
  47. "மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!


    இந்த கோபம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள் .............. நமக்கென்ன வம்பு என்று போகும் இந்த காலத்தில் உங்களின் கோபத்திக்கு ஒரு salute sir.

    ReplyDelete
  48. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    இம்புட்டு விஷயத்தை இப்படி புட்டுபுட்டு வச்சிட்டியே மனோ...

    உங்களப்பத்தி முழுசா தெரிஞ்சிக்க இந்த பதிவு போதும்ன்னு நினைக்கிறேன்...

    அப்படியோ என்னையும் கோத்துவிட்டாச்சா...//

    நண்பனை போட்டு தள்ளலைன்னா உறக்கம் வராதே அதான் ஹி ஹி...

    ReplyDelete
  49. உங்களை பத்தின டேட்டாக்கள் அருமை

    ஆமா பயங்கரம்ன்னா என்ன அண்ணே? நான் பயந்த மாதிரி ஒண்ணும் இல்லையே!! (?)

    ReplyDelete
  50. RAMVI said...
    உங்க கோபத்துக்கு --வாழ்த்துக்கள்.
    நல்ல பதிவு.//

    மிக்க நன்றி ராம்வி...

    ReplyDelete
  51. suryajeeva said...
    துஷ்டனை கண்டால் தூர விலகு அப்படி ன்னு போட்டுட்டு துஷ்டர்கள் படமா போட்டு இருக்கீங்க..
    நான் மோதி மிதித்து விடு பாப்பா ஜாதி, நீங்களும் அப்படி தான்னு நினைச்சேன்//

    அப்பிடியே கோபம், அதில் என்ன போட்டுருக்கேன் பாருங்க.....

    ரவுத்திரமும் இருக்கும் இருக்கவேண்டிய நேரத்தில்....

    ReplyDelete
  52. காட்டான் said...
    வணக்கம் மனோ!
    உங்களை பற்றி இன்னும் அதிகமாய் புரிந்து கொண்டேன்..//

    நன்றிலேய் மக்கா...

    ReplyDelete
  53. ! சிவகுமார் ! said...
    மும்பைல செஞ்ச செயலுக்கு சல்யூட் தலைவா.//

    நன்றிய்யா...

    ReplyDelete
  54. சிவகுமார் ! said...
    //மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?//

    தெலுங்க படம் டப்பிங் மாதிரி இருக்கே தல. லேட்டஸ்ட்டா யோசிங்க. I worker, eat burger. You what?//

    ஹா ஹா ஹா ஹா முடியல.....

    ReplyDelete
  55. மகேந்திரன் said...
    ////கடுமையாக போராடிகிட்டு இருக்கேன் ஒற்றை மனிதனாக, இதுவும் சுகமாகவே இருக்கிறது..///

    இதுதான் நிதர்சனமான வாசகம் ..
    தனிமனித உழைப்பில் கிடைக்கும் சந்தோசம் இதுதான் மக்களே..
    தங்களை பற்றி மேலும் தெரியவைத்தது இந்தப் பதிவு...//

    நன்றி மக்கா, இன்னைக்கு உங்க கவிதை படு சூப்பரா இருந்ததுய்யா...!!!

    ReplyDelete
  56. சிவகுமார் ! said...
    பன்னிக்குட்டிய இன்னொரு பயங்கர டேட்டாவ எழுத சொல்றதுல ஏதோ ப்ளான் இருக்கு. கன்பர்ம்.//

    எனக்கும் அவருக்கும் டெலிபதி உண்டுய்யா ஹி ஹி....

    ReplyDelete
  57. ரேவா said...
    நினைப்பது : சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்...!!

    எனக்குள் நான் பயங்கரடேட்டா....!!!

    கொடுத்துட்டு சமத்தா பதில் சொல்லி இருக்கேங்க அண்ணா :) எல்லாமும் ரசிக்கும் படியாய் இருந்தது :)//

    ஹா ஹா ஹா ஹா நன்றிம்மா தங்கச்சி...

    ReplyDelete
  58. ஆமினா said...
    பயங்கர டேட்டாவா? யார் சொன்னா?
    அருமையான தொகுப்பு. இன்னும் உங்களை அதிகம் அறிய வைத்தது. மும்பை சிறுமி சம்பவத்தில் உங்களுக்கு பெரிய சல்யூட் சகோ.

    காதல், இறைவன், பலம், மரணம், நட்பு, சந்தோஷம்,குடும்பம் என உங்களின் ஒவ்வொரு நிலைபாடும் ரொம்ப அருமை//

    மிக்க நன்றி ஆமீனா மேடம்...

    ReplyDelete
  59. ஆமினா said...
    //பன்னிக்குட்டிய இன்னொரு பயங்கர டேட்டாவ எழுத சொல்றதுல ஏதோ ப்ளான் இருக்கு. கன்பர்ம்.//

    அடுத்து இன்ட்லியா? தமிழ் 10 ஆ? யாருக்கு எதிரா கொடி தூக்க போறோம்??? ஹி..ஹி...ஹி...//

    ஆத்தாடி அப்போ சண்டைக்கு ரெடியா இருக்கீங்கன்னு சொல்லுங்க, டெரர் குரூப்கிட்டே போட்டு குடுத்துற வேண்டியதுதான் ஹி ஹி...

    ReplyDelete
  60. நிரூபன் said...
    வணக்கம் அண்ணே, நலமாக இருக்கிறீங்களா?


    மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!//

    கண்டிப்பா நாம எல்லோரும் மீண்டும் அடுத்த வருடம் சந்திக்கிறோம்!
    கலக்குறோம்!

    நான் ஆப்பிசரிடம் இது தொடர்பாக பேசுறேன்!//

    அப்படி நடப்பதாக இருந்தால், ஆண் பதிவர்கள் குற்றாலம் போகவும் ஏற்பாடு செய்ய சொல்லுங்கள்...

    ReplyDelete
  61. நிரூபன் said...
    உங்களின் கோப உணர்ச்சிக்கு ஒரு சல்யூட்,
    காலமறிந்து கடமை செய்திருக்கிறீங்க!

    சுய அறிமுகம், உங்களின் விருப்பு வெறுப்புக்களை அழகாகச் சொல்லியிருப்பது அருமை.//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  62. எனக்கு பிடித்தவை said...
    "மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!


    இந்த கோபம் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள் .............. நமக்கென்ன வம்பு என்று போகும் இந்த காலத்தில் உங்களின் கோபத்திக்கு ஒரு salute sir.//

    மிக்க நன்றி....

    ReplyDelete
  63. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    உங்களை பத்தின டேட்டாக்கள் அருமை

    ஆமா பயங்கரம்ன்னா என்ன அண்ணே? நான் பயந்த மாதிரி ஒண்ணும் இல்லையே!! (?)//

    அப்பிடி டெரர் பன்னுனாப்ல பாவ்லா காட்டுறது ஹி ஹி...

    ReplyDelete
  64. உங்கள் கோவம் பாராட்டத்தக்கது அண்ணா

    ReplyDelete
  65. மக்கா அருமையான பகிர்வுகள்....
    இருந்தாலும் விக்கி, சிபியை கலாய்க்காம விட மாட்டிங்க போல...


    நம்ம தளத்தில்:
    எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

    ReplyDelete
  66. உளறுவாய் நாராயணா,

    பார்ல போயி சாப்பாடு மட்டும்-னு சொன்னா யாராவது நெம்புவாங்களா?

    ReplyDelete
  67. அண்ணே நீங்க பலாப் பழம் போல. பார்க்க கடுமையா இருந்தாலும் பழக எளிமையா இருப்பீங்க போலஉங்க புகைப்படத்தை பார்த்து இத்தனை நாள் தவறா மதிப்பிட்டிருந்தேன். மன்னிசுக்குங்க அண்ணே).

    ReplyDelete
  68. ராஜி said...
    உங்கள் கோவம் பாராட்டத்தக்கது அண்ணா//

    காட்டவேண்டிய இடத்தில் காட்டியே ஆகவேண்டும் கோபத்தை இல்லையா...

    ReplyDelete
  69. தமிழ்வாசி பிரகாஷ் said...
    மக்கா அருமையான பகிர்வுகள்....
    இருந்தாலும் விக்கி, சிபியை கலாய்க்காம விட மாட்டிங்க போல...//

    அவனுகளை போட்டு தாக்கலைன்னா உறக்கம் வரமாட்டேங்குது என்ன செய்ய ஹி ஹி...!!!

    ReplyDelete
  70. சத்ரியன் said...
    உளறுவாய் நாராயணா,

    பார்ல போயி சாப்பாடு மட்டும்-னு சொன்னா யாராவது நெம்புவாங்களா?//

    யோவ் சிங்கை சாமி, பார்ல போயி சாப்புட்டு பாருங்க அதுல இருக்கிற ருசியே தனிதான் ஹி ஹி...

    ReplyDelete
  71. ராஜி said...
    அண்ணே நீங்க பலாப் பழம் போல. பார்க்க கடுமையா இருந்தாலும் பழக எளிமையா இருப்பீங்க போலஉங்க புகைப்படத்தை பார்த்து இத்தனை நாள் தவறா மதிப்பிட்டிருந்தேன். மன்னிசுக்குங்க அண்ணே).//

    ஹா ஹா ஹா ஹா பச்சை பிள்ளையை எப்பிடி மதிப்பீடு பண்ணி இருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  72. //மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!//

    என்னை சந்தித்ததுதான் நீங்கள் வாழ்க்கையில் செய்த பாக்கியம் என்று குறிபிடாததால் தீ குளிப்பேன்.... செ செ டி குடிப்ப்....... (சங்கரலிங்கம் சார் காசில் ) அறிவித்து எனது கடுமையான சந்தோசத்தை பதிவு செய்கிறேன்

    நால்வரி செய்திக்கு இருபது வரி அடங்குர மாதிரி போட்டோ வேற... நல்லா குடுக்குராங்கய்ய பயடேட்டா

    ReplyDelete
  73. எல்லாம் தள்ளுங்க நாந்தான் பிர்ச்டு கமெண்ட் போடுவேன்

    ReplyDelete
  74. அட கொஞ்சம் லேட் ஆகிடு அண்ணாச்சி அதுக்குள்ள
    எத்தன பேரு வந்துட்டாக
    ம் அருமை ஒரு ஒரு பதிலும்
    நிதானம்
    உண்மை
    சந்தோசம்
    ஒரு நல்ல மனிதர் நீங்கள்
    வாழ்க வளமுடன்
    எல்லாம் வல்ல இறையை உங்களுக்கவும்
    வேண்டுகிறேன்
    அன்புடன்
    தம்பி சிவா

    ReplyDelete
  75. உங்களின் நல்ல குணங்களை பற்றி தெரிந்திக்கொண்டோம்... மனோ சார்

    ReplyDelete
  76. பகிர்வுக்கு நன்றி...சார்..

    ReplyDelete
  77. ஷர்புதீன் said...
    //மறக்க முடியாதது : நெல்லை பதிவர் சந்திப்பை, ஏன்னா இனி அப்பிடி மொத்தமாக ஒரே இடத்தில் பதிவர்கள் சந்திப்போமா தெரியவில்லை...!!!//

    என்னை சந்தித்ததுதான் நீங்கள் வாழ்க்கையில் செய்த பாக்கியம் என்று குறிபிடாததால் தீ குளிப்பேன்.... செ செ டி குடிப்ப்....... (சங்கரலிங்கம் சார் காசில் ) அறிவித்து எனது கடுமையான சந்தோசத்தை பதிவு செய்கிறேன்

    நால்வரி செய்திக்கு இருபது வரி அடங்குர மாதிரி போட்டோ வேற... நல்லா குடுக்குராங்கய்ய பயடேட்டா//

    எங்கேய்யா போயி தொலைஞ்சீர், ஆளையே பார்க்க முடியலை...!!!

    ReplyDelete
  78. siva said...
    எல்லாம் தள்ளுங்க நாந்தான் பிர்ச்டு கமெண்ட் போடுவேன்//

    ஹா ஹா ஹா ஹா வாங்க போடுங்க...

    ReplyDelete
  79. siva said...
    அட கொஞ்சம் லேட் ஆகிடு அண்ணாச்சி அதுக்குள்ள
    எத்தன பேரு வந்துட்டாக
    ம் அருமை ஒரு ஒரு பதிலும்
    நிதானம்
    உண்மை
    சந்தோசம்
    ஒரு நல்ல மனிதர் நீங்கள்
    வாழ்க வளமுடன்
    எல்லாம் வல்ல இறையை உங்களுக்கவும்
    வேண்டுகிறேன்
    அன்புடன்
    தம்பி சிவா//

    மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்...

    ReplyDelete
  80. சிநேகிதி said...
    உங்களின் நல்ல குணங்களை பற்றி தெரிந்திக்கொண்டோம்... மனோ சார்//

    மிகவும் நன்றி சிநேகிதி...

    ReplyDelete
  81. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ம் ...//

    ஹா ஹா ஹா ஹா ஏதாவது சொல்லுங்க மக்கா...

    ReplyDelete
  82. சசிகுமார் said...
    பகிர்வுக்கு நன்றி...சார்..//

    நன்றி நன்றி சசி...

    ReplyDelete
  83. அமுதா கிருஷ்ணா said...
    அசத்தல் டேட்டா’s//

    மிக்க நன்றி...

    ReplyDelete
  84. அண்ணனை பற்றி அறிய தந்த பதிவுக்கு நன்றி ... எளிமையா இருந்துச்சி அண்ணே ..

    ReplyDelete
  85. மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?//எல்லாவற்றையும் விட இது அசத்தல்.

    ReplyDelete
  86. அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  87. கலக்கிட்டிங்க சூப்பர்.
    உங்க கோபம் ரொம்ப பேருக்கு வந்தால் நல்லது.
    நீங்க நினைப்பதை தான் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  88. அண்ணனே உங்களை பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிய உதவியது உங்கள் பதிவு... ஹீ ஹீ....

    ReplyDelete
  89. கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!<<<<<<<<<<<<<<<<<<


    உங்களுக்கு ஒரு சல்யுட் அண்ணே ....
    ரியலி கிரேட் ..... மரியாதை வருது.....

    ReplyDelete
  90. //ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!//
    கவிதையாய் உங்கள் வாழ்க்கை...
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  91. ///கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது////
    நல்ல காரியம் செய்தீர்கள். துணிச்சலுக்கு பாராட்டுகள். பால்காரன் பட்டத்தை வாபஸ் வாங்கி கொண்டு உங்களுக்கு "சமுககாவலர் " என்ற பட்டத்தை வழங்குகிறேன்.

    ///எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்///
    ஐயா யாருக்குதான் காதல் செய்ய பிடிக்காது. எல்லோருக்கும் காதல் செய்ய பிடிக்கும் ஆனால் காதலித்தவனை/ளை கைபிடிக்க பாதி பேருக்கு மேல் பிடிக்காது . ஆனால் கைபிடித்தவர்களில் நாமும் ஒருவர்தான்

    ReplyDelete
  92. //மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!//

    நல்ல விஷயம்.

    ReplyDelete
  93. அருமையான வரிகள் .அதில் உங்கள் உள்ளம் கண்ணாடி போல்

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  94. சும்மா வளவளன்னு இல்லாம.....சுவையா உங்க பாணியில பயங்கரடேட்டா படிக்க நல்லாருக்குங்க..

    இதுலயும் தக்காளிய தாளிச்சிருக்கீங்களே ஏன்தான் இம்புட்டு பாசமோ..?

    பேஸ்புக்குல கார்டூனை பார்த்தேன் ரொம்ப சந்தோசம் அண்ணாச்சி.....

    ReplyDelete
  95. கலக்கல் பயோடேட்டா!!

    ReplyDelete
  96. அரசன் said...
    அண்ணனை பற்றி அறிய தந்த பதிவுக்கு நன்றி ... எளிமையா இருந்துச்சி அண்ணே ..//

    நன்றி அரசன்...

    ReplyDelete
  97. ஸாதிகா said...
    மனோ'தத்துவம் : நான் உழைக்கிறேன் நான் சாப்புடுறேன் உனக்கென்னடா....?//

    எல்லாவற்றையும் விட இது அசத்தல்.//

    ஹா ஹா ஹா ஹா நன்றி ஸாதிகா...

    ReplyDelete
  98. கோகுல் said...
    அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

    November 28, 2011 4:57 AM


    கோகுல் said...
    கலக்கிட்டிங்க சூப்பர்.
    உங்க கோபம் ரொம்ப பேருக்கு வந்தால் நல்லது.
    நீங்க நினைப்பதை தான் செஞ்சுக்கிட்டு இருக்கீங்க.//

    நன்றிய்யா...

    ReplyDelete
  99. துஷ்யந்தன் said...
    அண்ணனே உங்களை பற்றி கொஞ்சம் கொஞ்சம் அறிய உதவியது உங்கள் பதிவு... ஹீ ஹீ....

    November 28, 2011 5:01 AM


    துஷ்யந்தன் said...
    கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!<<<<<<<<<<<<<<<<<<


    உங்களுக்கு ஒரு சல்யுட் அண்ணே ....
    ரியலி கிரேட் ..... மரியாதை வருது.....//


    மிக்க நன்றி...

    ReplyDelete
  100. வெண் புரவி said...
    //ஒய்வு கிடைத்தால் : ஆர்மோனியம் இசைத்து வாசித்து பாட்டு பாடுவது, மனைவி பிள்ளைகளுடன் போனில் அரட்டை, நண்பர்களுடன் பார்களில் சாப்பிடுவது சாப்பாடு மட்டும்தான் ஹி ஹி...!!!//


    கவிதையாய் உங்கள் வாழ்க்கை...
    தொடர வாழ்த்துக்கள்.//

    வாங்க வாங்க புதிய வரவுக்கு நன்றி...

    ReplyDelete
  101. Avargal Unmaigal said...
    ///கோபம் : மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது////
    நல்ல காரியம் செய்தீர்கள். துணிச்சலுக்கு பாராட்டுகள். பால்காரன் பட்டத்தை வாபஸ் வாங்கி கொண்டு உங்களுக்கு "சமுககாவலர் " என்ற பட்டத்தை வழங்குகிறேன்.

    ///எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்///
    ஐயா யாருக்குதான் காதல் செய்ய பிடிக்காது. எல்லோருக்கும் காதல் செய்ய பிடிக்கும் ஆனால் காதலித்தவனை/ளை கைபிடிக்க பாதி பேருக்கு மேல் பிடிக்காது . ஆனால் கைபிடித்தவர்களில் நாமும் ஒருவர்தான்//

    ஹா ஹா ஹா நன்றி மக்கா...

    ReplyDelete
  102. Robin said...
    //மும்பையில் பதினான்கு வயது சிறுமியை பூங்காவில் மறைத்து வைத்து சீரழிக்க முயற்சி செய்த ஒருவனை என் கண்ணால் கண்டு, அவனை மயங்கி விழும் வரை துவைத்து போட்டுவிட்டு, சிறுமியை வீட்டில் கொண்டுபோயி விட்டுட்டு அவள் அப்பனையும் அவன் வீட்டுலேயே போட்டு அப்பினது...!//

    நல்ல விஷயம்.//

    வாங்க வாங்க ராபின்...

    ReplyDelete
  103. M.R said...
    அருமையான வரிகள் .அதில் உங்கள் உள்ளம் கண்ணாடி போல்

    பகிர்வுக்கு மிக்க நன்றி//

    நன்றி எம் ஆர்...

    ReplyDelete
  104. veedu said...
    சும்மா வளவளன்னு இல்லாம.....சுவையா உங்க பாணியில பயங்கரடேட்டா படிக்க நல்லாருக்குங்க..

    இதுலயும் தக்காளிய தாளிச்சிருக்கீங்களே ஏன்தான் இம்புட்டு பாசமோ..?

    பேஸ்புக்குல கார்டூனை பார்த்தேன் ரொம்ப சந்தோசம் அண்ணாச்சி.....//

    மிக்க நன்றி....

    ReplyDelete
  105. S.Menaga said...
    கலக்கல் பயோடேட்டா!!//

    நன்றி மேனகா.....

    ReplyDelete
  106. அது எப்படிங்க சர்வ சாதாரணமா செஞ்சுரி போடுறீங்க

    ReplyDelete
  107. பயோடேட்டா அருமை!..வாழ்த்துக்கள் சகோ உங்கள் நல்ல மனதுக்கு .அவசியம் பார்க்கவேண்டிய கவிதை
    காத்திருக்கு ...

    ReplyDelete
  108. rufina rajkumar said...
    அது எப்படிங்க சர்வ சாதாரணமா செஞ்சுரி போடுறீங்க//

    எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்தான்...!!!

    ReplyDelete
  109. அம்பாளடியாள் said...
    பயோடேட்டா அருமை!..வாழ்த்துக்கள் சகோ உங்கள் நல்ல மனதுக்கு .அவசியம் பார்க்கவேண்டிய கவிதை
    காத்திருக்கு ...//

    மிக்க நன்றி

    ReplyDelete
  110. வாழ்க்கை என்பது போராட்டமே...!!

    ReplyDelete
  111. வணக்கம் அண்ணாச்சி

    பயோடேட்டா சூப்பர்

    அழகா சொல்லியிருக்கீங்க..

    அதிலும் உங்கள் கோபம் மிகச்சரியே..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!