Sunday, May 12, 2013

ஹோட்டலில் ஒரு அமெரிக்காகாரனும் மொரோக்காகாரியும்...!

எப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மிஸ் கால் கொடுப்பதுதான் வழக்கம், ஏதாவது அவசரமென்றால் மட்டுமே போன் செய்வாள்.

அப்படி இருக்க நேற்று வழக்கத்துக்கு மாறாக போன் வருகிறது, இப்படி போன் வரும்போது வெளிநாட்டில் என்னைப்போன்றோர் பதட்டமடைந்து விடுவோம். வந்த போனை கட் செய்துவிட்டு நான் போன் செய்தேன்.

"ஹலோ...ஹலோ..."

".................................."

"ஹலோ ஹலோ...."

"வ்வ்வ்வ் ம்ம்ம்ம்ம் ஆவ்வ்வ்வ் ஆஆஆஆ....அவ்வ்வ்வ்வ்..." [[அழுகை]]

என் மகள் ஜோய் என்பது புரிந்து விட்டது.

"என்னம்மா செல்லம் என்ன ஆச்சு ஏன் அழுறே சொல்லும்மா..."

"மம்மி என்னை அடிச்சுட்டாங்க வ்வ்வ்வ்வ் ஆஆஆ ம்ம்ம்ம்..."

"ஒ அப்பிடியா நீ திருப்பி அடிச்சுரும்மா..."

"அடிச்சா மறுபடியும் அடிக்குறாங்க வ்வ்வ்வ்வ்...."

"அப்போ வெளியே போயி ஒரு கல்லை எடுத்து எறிஞ்சிட்டு ஓடிரு, இல்லைன்னா வீட்டுக்கு வெளியே இருக்கும் கடி நாயை வீட்டுக்குள்ளே இழுத்துட்டு வந்து மம்மிகிட்டே விட்டுரு..."

"ஐ....ஓகே டாடி...இப்பவே கல்லேடுத்துட்டு வாறன்...ஆனா டாடி, நீங்க பேசுனதை ஸ்பீக்கர்ல மம்மி கேட்டுட்டாங்களே...ஹா ஹா ஹா ஹா..."

அடப்பாவிபய மகளே இப்பிடியா கோர்த்து விடுறது?

"என்ன மனசுல உள்ளதெல்லாம் வெளியே வந்துருச்சோ...?" வீட்டம்மா.

"அது வந்து வந்து நொந்து பாப்பா வந்து....."

"என்ன உளருதீங்க...?"

"பாப்பா அழுதா இல்லையா அதான் சமாதானப்படுத்தலாம்னு...."

"அதுக்கு கடி நாயும், கல்லுமா...?"

"ஹி ஹி நீ என் செல்லம்ல....அதான் மெல்ல பாப்பாவை சமாதானப் படுத்தலாமேன்னு...."

"அவள் என்ன பண்ணுனா தெரியுமா...?

"ஒ அப்பிடியா ? அப்போ அடி பின்னிரு விட்டுறாதே அவளை..."

"மாட்டுனீங்களா அவளும் இதோ ஸ்பீக்கர் போன்ல கேட்டுட்டுதான் இருக்கா ஹா ஹா ஹா ஹா...."

போனை அம்மா கையில் இருந்து புடுங்கி...

"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்திஹோ மம்மிசே ஏக் பாத் கர்த்திஹோ, ஜாவ் மை ஆப்சே பாத் நஹி கர்ணா ஜாத்தி ஹூம்..."[[நீங்க நல்ல டாடி இல்லை, அம்மாகிட்டே ஒரு பேச்சு பேசுறீங்க என்கிட்டே ஒரு பேச்சு பேசுறீங்க போங்க நான் உங்ககூட இனி பேசமாட்டேன்]]

அடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்கப்பட்டவளும் ஒன்னு சேர்ந்துட்டு நாட்டாமைய தீர்ப்பு சொல்லவிடாம, காமெடி பீசாக்கிப் புட்டாயிங்களே...

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."

"என்ன அவ்வ்வ்வ்...? தலையில கொஞ்சம் எண்ணெய் தேச்சி முடி சீவி விடலாம்னு முடியைப் பிடிச்சா உங்க மக என்னை அடிச்சிட்டா, அதான் ரெண்டு போடு போட்டேன், உடனே நேரே உங்களுக்கு போனடிச்சிட்டா...அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்துருக்கு..."

"உன்னை மாதிரின்னு நான் சொல்லவே இல்லை சொல்லவே இல்லை..."

"கொன்னேப்புடுவேன்"

பொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்தோசமாதான்ய்யா இருக்கு இல்லையா...?
---------------------------------------------------------------------------
அமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க பிரதமரிடம் சோனியா காண்டி வலியுறுத்தல்//

கேனப்பய ஆட்சியில் நாமளும் கேனப்பய போல வாழ்கிறோமென்னு நினைக்கும் போது மனசு வலிக்குதாய்யா......டெல்லி நாடாளுமன்றத்தில் ஒரு பூகம்பம் வந்த்துறாதான்னு மனசு ஏங்குதய்யா...!

ஒட்டு மொத்த கவர்மெண்டையும் கையில வச்சிட்டு இந்த இத்தாலி அம்மாவின் பேச்சைப் பாருங்க, மக்களே இனியாவது கொஞ்சம் உணர்வடையுங்கள். என்னாமே வேஷம்தான் என்று அறியுங்கள்.
----------------------------------------------------------------------------------------------
ஒன்னு அந்த பக்கமா போ அல்லது இந்த பக்கமா போ....

எதுக்குய்யா நடுவுல நின்னுகிட்டு அவனையும் போக விடாம இவனையும் போக விடாம லந்து குடுக்குறீங்க, கடைசில ரெண்டு பக்கமும் இல்லாம நீ ஓடவேண்டி வரும் ஜாக்கிரதை - யாருக்கோ

----------------------------------------------------------------------------------------------

டியூட்டில இருக்கும் போது வயர்லஸ் திடீரென அலற.....ஹோட்டல் செக்கியூரிட்டி...

"மனோஜ் அவசரமா பத்தாவது ஃபிளோருக்கு ஓடிவா..."

நாமள ஓடிப்போ"ன்னுதானே எல்லாரும் சொல்வாயிங்க இதென்னடா புதுப்பழக்கம்ன்னு நினைக்குமுன்னே...

"மனோஜ் அவசரமா ஓடிவா..."

"என்ன பிராப்ளம்னு சொல்லு முதல்ல அப்புறமா நான் தீர்மானிக்குறேன் ஓடி வரணுமா இல்ல ஓடிப்போகனுமான்னு..."[[ஹி ஹி]]

"ஐயோ மனோஜ் ஒரு ரூம்ல பயங்கர சத்தமா இருக்கு ஓடிவா..."

"என்னா சத்தம்னு சொல்லுய்யா, சண்டைன்னா சொல்லு ஜம்ப் பண்ணி ரோட்டுல விழுந்து ஓடிருதேன்..."

"இல்ல இல்ல சண்டை இல்லை ஓடிவா..."

அவசரமா வயர்லஸ்ஸ கையில பிடிச்சுட்டே ஓடினேன் பத்தாவது மாடிக்கு.....அங்கே செக்கியூரிட்டியை காணோம்....!
"அடேய் எங்கேய்யா இருக்கே நீ...?" வயர்லெசில்

"நான் கீழே வந்துட்டேன், நீ அந்த எட்டாம் நம்பர் ரூம் பக்கத்துல போ இதோ நான் வந்துட்டே இருக்கேன்"

"ஓகே"

குறிப்பிட்ட அறையின் முன்பு போனால் பலத்த சத்தம்.....நல்லபாம்பும் சாரை பாம்பும் சங்கமிக்கும் சப்தம்...கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்....கொய்யால....

செக்கியூரிட்டிக்கு போட்ட போடில் மெடிக்கல் லீவு எடுத்துட்டு போயிட்டான்....என்னாக் கொலைவெறில சுத்துறாயிங்க பயபுள்ளங்க.
சரி அந்த ரூம்ல எந்த நாட்டுக்காரங்க தங்கி இருக்காங்கன்னு பாஸ்போர்ட்டை செக் செய்யும்போது, ஒரு அமெரிக்கனும், மொரோக்கோகாரியும் [[அமெரிக்கன் பாஸ்போர்ட்]] தங்கி இருக்காங்க...ஆஹா...அனுபவிங்க மக்கா...!
----------------------------------------------------------------------------------------------

ஒரு மனிதனின் வாழ்க்கை மரணத்தோடு நின்று போவதில்லை உதாரணம் பலபேர் இருக்காங்க இருந்தாலும் சிலபேர் பெயரை சொல்றேன்...

காமராஜர், அறிஞர் அண்ணா, என் எஸ் கிருஷ்ணன், எம்ஜியார், பெரியார், அம்பேத்கார், இந்திரா காண்டி[[காந்தி அல்ல]] , மகாத்மா காந்தி, முல்லைப் பெரியார் அணையை கட்டிய பென்னி குக், சுபாஷ் சந்திரபோஸ், எங்கள் அண்ணன் பிரபாகரன்.............!


15 comments:

  1. ஸ்பீக்கர் இல்லாத ஒரு மொபைல் வேண்டும்...! ஹிஹி... அவர்கள் செய்யும் குறும்பிற்கு நிகரான சந்தோசம் ஏது...?

    முடிவில் : பலரும் இன்னும் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

    ReplyDelete
  2. குடும்பச் சேட்டைகளே மனதுக்கு இதம்தான். அதுவும் வெளிநாடகளில் வசிப்பவர்களுக்கு ,இதுதான் எனர்ஜி பூஸ்டர்.

    ReplyDelete
  3. இனிய வணக்கம் மக்களே...
    உண்மைதான்யா பிள்ளைகள் அம்மாவிடம் சண்டை போட்டுக்கிட்டு
    நமக்கு போன் பண்ணும்போது அவர்களை சமாதானப்படுத்துவதே
    ஒரு தனி சுகம் தான்...
    ஆனாலும் உங்களை இப்படி கோர்த்துவிட்டு இருக்கக்கூடாதுதான்...
    நடந்துருச்சே..
    ஹா ஹா ஹா ஹா ...
    உங்கள் இளவரசியின் நிழற்படம் மிகவும் அழகு.

    ReplyDelete
  4. //எப்போதுமே வீட்டம்மா என்கூட பேச வேண்டுமென்றால் மிஸ் கால் கொடுப்பதுதான் வழக்கம்//
    அப்போ அந்த “மிஸ்” கால் வேறயா!

    ReplyDelete
  5. //கொஞ்ச நேரம் ஷாக் ஆகி நின்றுவிட்டு எடுத்தேன் பாருங்க ஓட்டம்....//
    தெரிஞ்சேதான் உங்களை கவுத்திருக்காரு உங்க செக்யூரிட்டி. ஹா ஹா ஹா

    ReplyDelete
  6. ஸ்பீக்கர் ஃபோன் வாங்கிக் கொடுத்து இப்படி மாட்டிக்கிட்டீங்களே மக்கா! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
  7. அடப்பாவிகளா......பிராது கொடுத்தவளும் பிராது கொடுக்கப்பட்டவளும் ஒன்னு சேர்ந்துட்டு நாட்டாமைய தீர்ப்பு சொல்லவிடாம, காமெடி பீசாக்கிப் புட்டாயிங்களே..///////////////////////////////////////

    ஹஆகாஹா நாட்டமை மாட்டிகிட்டார்

    அண்ணே அந்த ரூம்ல என்ன நடந்துச்சு கதவு ஓட்ட வழிய பார்த்து இருக்கலாம்ல

    ReplyDelete
  8. //பொண்ணு பிள்ளைங்க பண்ணும் சேட்டைகள் மனசுக்கு சந்தோசமாதான்ய்யா இருக்கு இல்லையா//
    அதுக்கு கீழ அந்த பொம்பள படம்.அது(அந்த பொம்பள) பண்ணுத சேட்டை மனசுக்கு சந்தோசமாவா இருக்கு?

    ReplyDelete
  9. அமெரிக்க நல்ல பாம்புக்கும்,மொராக்கோ சாரைப்பாம்புக்கும் கூட பாஸ்போர்ட் இருக்கா. ஊரு நாடு என்னமா முன்னேறிருக்கு.

    ReplyDelete
  10. //"டாடி ஆப் அச்சா நஹிஹே, மெரெசெ ஏக் பாத் கர்திஹோ மம்மிசே ஏக் பாத் கர்த்திஹோ, ஜாவ் மை ஆப்சே பாத் நஹி கர்ணா ஜாத்தி ஹூம்//
    இதோட விட்டுரும்.ஒமக்கு இந்தி தெரியும்னு ஒத்துக்கறோம்.

    ReplyDelete
  11. குழந்தைகளின் குறும்புகள் எப்போதுமே அழகுதான்

    ReplyDelete
  12. என் பெண்ணும் தலை வாரிக் கொள்ள அடம் பிடிப்பவள்தான்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  13. makal settai unmaathanga....


    santhosam...

    ReplyDelete
  14. மகள் குறும்புக்காரிதான் போங்க அண்ணாச்சி விடுமுறைக்கு ஊர் திரும்பும் போது வீட்டுக்காரி அருவாளைத்தீட்டப்போறா!ஹீஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  15. சின்னக் குழந்தைகளின் எல்லாச் செயல்களும் அழகு தான் .குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அல்லவா

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!