Saturday, November 5, 2011

இன்றைய நாட்டு நடப்பு....!!!


புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடந்த ஜி- 20 மாநாட்டை முடித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங் தாயகம் திரும்புகிறார். பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே எழுந்துள்ளது.

[[கொய்யால நிம்மதியா ஊர் சுத்திபாக்க விடமாட்டேங்குராணுவ நாசமாபோகட்டும் பெட்ரோல் விலை, அடுத்து எங்கே பயணம் கிளம்புரதுன்னு யோசிக்கணும்...!!!]]

சென்னை:தமிழக அமைச்சரவையில், ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிதாக அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இது தவிர, செங்கோட்டையன் உட்பட ஐந்து அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

[[இது நமக்கு புதுசா என்ன, கோயம்பேடு பஸ் நிலையமே மாறினாலும் ஆச்சர்யபாடுறதுக்கு இல்லை, அம்மா'ன்னா சும்மாவா...???]]

கடலூர் மாவட்டத்தில் குறுநில மன்னர்களாக இருந்த மாநில இணைச் செயலர் வேல்முருகன், துணைத் தலைவர் திருமால்வளவன், நகரச் செயலர் ஆனந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். குறுநில மன்னர்கள் ஆதிக்கத்திலிருந்து மாவட்ட பா.ம.க.,வை மீட்டுக் கொடுத்த நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னியர் சங்கத் தலைவர் குரு, பா.ம.க., தலைவர் மணி ஆகியோருக்கு, மாவட்ட பா.ம.க., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 


[[உங்க கட்சியே அட்ரஸ் இல்லாமல் இருக்கு போங்க போயி வலை வீசி தேடுங்க, உங்களை நினைச்சா சிப்பு சிப்பா வருது...!!!]]



[[ஹா ஹா ஹா ஹா இப்பவாவது கண்டுபிடிச்சாரே, இனி கருப்பு பணம் எல்லாம் வெளியே வந்துரும் போங்க...]]


[[நீங்க வெளியேறின அடுத்த நிமிஷமே திமுக'வும் வெளியேறும், உளவுத்துறை தகவல்...!!!]]

புதுடில்லி:பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், மீண்டும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அப்படி விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என, நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.


[[கோர்ட்'டுங்க எல்லாம் கூடி அம்மாவை கும்மி அடிக்கிறதை பார்த்தால் ஹி ஹி சந்தோஷமாதான் இருக்கு...!!!]]

பெட்ரோல் விலை பத்து முறை ஏறியதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிர்ரென ஏறும் நிலை உருவாகும் என்பதால், நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் வயிற்றில் தற்போதே "புளி'யை கரைக்கிறது. 


[[காங்கிரஸ் ஆட்சி நாசமாபோகட்டும்]]]

கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் உடல்களை தானம் செய்ய இருக்கிறார்கள்...!!!


[[உருப்படியான செயல்கள் பாராட்டுக்கள்..!!!]]

புதுடில்லி: 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழி எம்.பி., ஜாமின் கோரி, டில்லி ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். அவருடன் கலைஞர் டி.வி., நிர்வாகி சரத்குமார், ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.


[[கடல்லையே அந்த ஜா'மீன் இல்லையாமே....!!!]]

தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களுக்கு ஆதரவாக, இடிந்தகரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை உண்ணாவிரதத்தை துவக்கினார்.


[[மக்கள் போராட்டத்துக்கு முதலாவது கை கொடுப்பது வைகோ அண்ணன்தான் வாழ்க வாழ்க இன்குலாப் ஜிந்தாபாத்...!!!]]

புதுடில்லி: ஊழல் தொடர்பாக விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் காங்கிரஸ் தலைவர் சோனியா மவுனம் காப்பது ஏன் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வு குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


[[சோனியா பூந்திக்கு நல்லாவே தெரியும் வாயை திறந்தால் என்ன ஆகும்னு, வாயையே நாறடிக்க ஆளுங்க ரெடியா இருக்காங்க...!!!]]

நன்றி : தினமலர் மற்றும் கூகுள்...

டிஸ்கி : படங்கள் எல்லாம் கூகுளில் இருந்து எடுத்தது.


ஏ யப்பா அபூர்வமான படம் இது, சேலையில் நமீதா....!!!

25 comments:

  1. //[இது நமக்கு புதுசா என்ன, கோயம்பேடு பஸ் நிலையமே மாறினாலும் ஆச்சர்யபாடுறதுக்கு இல்லை, அம்மா'ன்னா சும்மாவா...???]]
    //

    எதுவும் நடக்கும்

    ReplyDelete
  2. நமிதா சுமார் தான் .. (சேலை...)

    ReplyDelete
  3. கருண் முந்திடார்

    ReplyDelete
  4. கலக்கிடிங்க தலைவா

    ReplyDelete
  5. கடல்லையே இல்லையாம்!
    ஹா ஹா!

    ReplyDelete
  6. கோர்ட்டுகள்கூடி அம்மாவைக்கும்முது.
    வேலியில போற ஓணானை........

    ReplyDelete
  7. படங்களெல்லாம் சூப்பர் நாஞ்சில் சார்.........

    ReplyDelete
  8. அண்ணே சூப்பர்...அப்படியே ஒரு குத்து போட்டுட்டீங்க போல ஹிஹி!

    ReplyDelete
  9. நல்ல அலசல்.படங்கள் ரொம்ப நன்னயிருக்கு.

    //அம்மா'ன்னா சும்மாவா...???]]//

    ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  10. //[[காங்கிரஸ் ஆட்சி நாசமாபோகட்டும்]]]///

    இந்த ஒரே வார்த்தைக்காக, உங்கள் பதிவில் வாந்தி எடுத்துவிட்டு வெளியேறுகிறேன்....

    :-)

    ReplyDelete
  11. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    //[இது நமக்கு புதுசா என்ன, கோயம்பேடு பஸ் நிலையமே மாறினாலும் ஆச்சர்யபாடுறதுக்கு இல்லை, அம்மா'ன்னா சும்மாவா...???]]
    //

    எதுவும் நடக்கும்
    சூப்பர்...தமிழ்நாடுகூட ஆந்திராவா மாறலாம்.

    ReplyDelete
  12. தி.மு.க வெளியேறப் போகுதா, திரினாமுல் வெளியேறாது என்ற நம்பிக்கையில் போட்டுட்டீங்களா?

    ReplyDelete
  13. ஆனா இந்தியா வரும்போது பார்த்து வா மக்கா..

    அப்புறம் சுத்துபோடப்போறாங்க...

    ReplyDelete
  14. அண்ணே மன்மோகன் படம் சூப்பர்

    ReplyDelete
  15. மக்களே....
    வழக்கமா போடுற மனோதத்துவம் எண்ணா ஆச்சு...

    ReplyDelete
  16. ஒவ்வொரு செய்திக்கும் தங்களின் குசும்பான
    கமெண்ட்ஸ் பட்டைய கிளப்புது மக்களே...

    ReplyDelete
  17. அடடா மன்மோகன் சோனியா படம் சூப்பர் ( கவனிக்க சூப்பர் என்றுதான் சொன்னேன்.... அவ்வ )

    ReplyDelete
  18. எப்புடி அண்ணே உப்புடி படம் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது..... அது சரி இனி எப்போ இந்தியா போறீங்க???

    ReplyDelete
  19. எல்லாம் ஒரே எகத்தாளமா இருக்கு. ஹா ஹா ஹா.

    ReplyDelete
  20. அம்மா'ன்னா சும்மாவா...???]/

    நாட்டு நடப்புகளின் பகிர்வுகளுக்கு நன்றி..

    ReplyDelete
  21. எனக்கு அந்த நமீதா படம்தான் புடிச்சிருக்கு.

    ReplyDelete
  22. நாட்டு நடப்பிற்கேற்ற நச்சென்ற அருவா மொக்கைகள்....ரசித்தேன்...

    செம காமெடியா கடிச்சிருக்கிறீங்க.

    மம்மோகன் சோனியா ஜோடிப் போட்டோ சூப்பர்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!