Saturday, February 25, 2012

ஈரோடு ரயில்நிலையமே ஆச்சர்யப்பட்டு போன பதிவர்கள் அன்பு...!!!

யப்பா ஒரு வழியா ஈரோட்டை புயல்கள் இரண்டும் கடந்துருச்சு, ரயில் கொஞ்சம் முன்னமே வந்ததால் வீடு சுரேஷ்'க்கு வரமுடியவில்லை என்று சொன்னதால் வரமுடியவில்லையம், திருப்பூர் வரட்டுமான்னு கேட்டார், இந்த ரயில் திருப்பூர் வராதுய்யா'ன்னு சொன்னதும் சரிண்ணே அப்புறமா சந்திக்கலாம்னு சொல்லிட்டார்.



சேலம் தாண்டி ரயில் ஈரோட்டை நோக்கி விரைந்ததுமே நெஞ்சம் டப் டப், பின்னே நண்பனை பாக்குறதுன்னா சும்மாவாய்யா.! சேலம் தாண்டி வந்துட்டு இருக்கேம்ன்னே என்று சொன்னதும் [[ஆன்லைன்லதான் நம்பர் பெட்டிக்குள்ளே இன்னொரு போன்ல மாட்டிக்கிச்சு]] அவனை உன் நம்பரை அனுப்புன்னு சொன்னதும் [[எனக்கு என் நம்பர் தெரியலை ஹி ஹி]] அனுப்பினான் நான் போன் செய்தேன் சிபிக்கு.....


அண்ணே இன்னும் அரைமணி நேரத்தில் ரயில் ஈரோடு வந்துரும்ய்யா.

சிபி : அப்பிடியா ஈரோடு வந்ததும் வெளியே தலையை காட்டிட்டு வா உன் கோச் நம்பர் சொல்லு [[கொய்யால எத்தனை தடவைதான் சொல்றது?]]

நம்பரை சொன்னேன்.

சிபி : தம்பி என்ன வேணும் உனக்கு ? தண்ணீர் [[ராஸ்கல் எந்த தண்ணின்னு கேக்கவே இல்லை]] ஸ்நாக்ஸ் சம்திங்..?

மனோ : வேண்டாம் அண்ணே.

சிபி : ஏதாவது புக்ஸ் வேணுமா என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வாரேன்.

மனோ : ஒன்னும் வேணாம் அண்ணே நீ வந்து சேர்.

சிபி : ஓகே [[ கஞ்சன் பாவி]]

ரயில் ஈரோட்டை நெருங்கியதும் வந்தது காவேரி நதி, பார்க்க பறந்து விரிந்து அழகாக இருக்கிறது ஆனால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை....!!!


ஆனால் தென்னை மரங்களும், வயல்களும், மஞ்சள் கலரில் ஒரு வயல் போல தெரிந்தது வயலா மஞ்சளா தெரியவில்லை ஆனால் அழகோ அழகு போங்க, ஈரோடு சிட்டியை விட கிராமங்கள் அம்புட்டு அழகாக இருக்கும் என்று மனசு சொன்னது...!!!

ஈரோடு ஸ்டேஷன் நெருங்கவும் வாசலில் நின்ன அண்ணாச்சியை உள்ளே இழுத்து விட்டுட்டு நான் வாசலில் நிற்கவும் முறைத்தார் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்...!

பிளாட்பாரத்தில் ரயில் புகவும் தேடினேன் சென்னிமலையானை, அட கொன்னியா அங்கேயும் கண்ணாடி போட்டுட்டுதான் நின்னுட்டு இருந்தான் [[நீ மட்டும் யோக்கியமா?]]

இறங்கியதும் ஓடிவந்து கட்டி பிடித்துக்கொண்டான், அருகே இருந்த பயணிகள் ஜெர்க்காகி ஆச்சர்யமாக பார்க்க தொடங்கினார்கள்...!

ரயில் உள்ளே அழைத்து வந்து அமரவைத்தேன், லேப்டாப்பை காண்பித்தேன், டேய் நீ இன்னும் திருந்தலையா'ன்னு திட்டினான் [[ஹி ஹி ]]

சரி வா போட்டோ எடுப்போன்னு ரெடியாகவும் எனது ரயில் நண்பன் உள்ளே வரவும் பரஸ்பரம் அறிமுகம் செய்து விட்டு, போட்டோ எடுக்க சொன்னேன், ரயில் உள்ளே ஒரே இருட்டு சரி வாங்க வெளியே போயி எடுக்கலாம்னு வெளியே வந்து போட்டோக்கள் எடுத்து கொண்டோம், அவர் பெயர் நித்தியானந் [[அவ்வ்வ்வ்வ்வ்]]

அப்புறம் பரஸ்பரம் பேசிகொண்டிருக்கும் போதே விக்கி பக்கி'க்கு போனை போட்டு மிஸ்கால் அடித்தால் அந்த பரதேசி மூன்று முறை போனை எடுத்து என் காசை காலி பண்ணிட்டு [[டேய் டேய்]] ஹி ஹி தம்பி உன் நம்பர் வரவில்லை அதான் எடுத்துட்டேன் என்று சமாளித்தான், சிபியும் அவனோடு பேசினான்.

இப்பிடி பேசிட்டு இருக்கும் போதே சிபிக்கு ஒரு போன் வரவும், நாஞ்சில்மனோ வந்திருக்கிறான் பேசுறீங்களா என்று என்னிடம் போனை தந்தான், யாருடா அண்ணா எனவும், ராஜி [[ காணாமல் போன கனவுகள்]] என்றான்.

ஹலோ தங்கச்சி எப்பிடி இருக்கீங்க?

ராஜி : நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்பிடி இருக்கீங்க?

நான் : வீட்டில் எல்லாரும் நலமா?

ராஜி : ஆமாண்ணா எல்லாரும் நல்லா இருக்காங்க..

நான் : ஹலோ ஹலோ ஹலோ ஹலோ...டேய் சிபி என்னடா லைன் கட்டாகிருச்சு...

சிபி மறுபடியும் போன் பண்ணவும் ராஜி போனில் சார்ஜர் அவுட்டே..

சரி நான் ஊர் வந்ததும் பேசுறேன்ம்மா'ன்னு சொல்லி இருக்கேன்...

சரி வாடா சிபி நீதான் ஒண்ணுமே குடிக்க மாட்டியே வா ஏதாவது சப்பிடுவோம்னு சொன்னதும் சரி வான்னு கூட்டிட்டு போயி ஒரே ஒரு சமோசா வாங்கி தந்துட்டு நீதான் எங்க ஏரியாவுக்கு வந்துருக்கே நான்தான் காசு கொடுப்பேன்னு பெருந்தன்மையாக சொன்னான் பாருங்க, ராஸ்கல் அங்கே இருக்கிறான் ராஸ்கல்...!


ஒரு வழியாக ரயில் கிளம்பவும், பிரியா விடை கொடுத்து கட்டிபிடித்து பிரிந்தோம், மறுபடியும் நெல்லையில் சந்திப்பதாக சொல்லி, ஆபீசருக்குக்கும் போன் பண்ணி விஷயத்தை சொன்னதும், எப்போ வேணும்னாலும் வாங்க மனோ, ஒருநாள் முன்பு மட்டும் சொல்லிருங்க எல்லா ஏற்பாடும் பண்ணிருவேன்னு சொன்னார்...!!

நன்றி மக்கா சிபி, நன்றி ஆபீசர் உங்கள் அன்புக்கு நன்றி நன்றி.....!!!

ஒரு ஃபிகரை பார்த்துட்டு சிபி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க, அதை அவனே சொல்லட்டும் கொய்யால....

டிஸ்கி : அக்கம் பக்கம் நின்றிருந்த பயணிகள் எங்கள் அன்பை பார்த்து ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் எங்கள் மனம் உவகை கொண்டது, ஈரோடும் இனி என் தாய் மண்ணுதான்...!!!


Friday, February 24, 2012

நாசமாபோன ரயில் பயணம்....!!!

வாழ்க்கையில் முதல் முறையாக ஏசி கோச் ரயில் பயணம், ஆனால் இனி ஜென்மத்துக்கும் அதில் கூடியவரை போக கூடாதுன்னு முடிவு பண்ணிவிட்டேன்....!

அதிகமதிகமாக முதியோர்களே பிரயாணம் செய்வதால் அவர்களுக்கு நாம் இடைஞ்சலா இருக்கிறோமோ என்ற ஃபீலிங், காலை பாத்ரூம் போனால் அவர்களே லைனில் இருக்கிறார்கள் அதுவும் பெண் தாய்மார்கள், நான் செக்கண்ட் கிளாஸ் கொச்சுக்கு ஓடிவிட்டேன்..!

அடுத்து என் அருகில் பிரயாணம் செய்த ரயில்வே ஊழியர்களின் இடைவிடாத சோமபானம் வாசம், ஏசி கோச் என்பதால் ஒரே துர்நாற்றம் எல்லா பயணிகளையும் முகம் சுளிக்க வைத்ததும் அல்லாமல் நாற்றம் அதிகம் என்பதால் தூங்க முடியவில்லை..!

மும்பை டூ சோலாப்பூர் வரை பயணம் செய்த என் வாசகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது, திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாக இருக்கிறாராம், பெயர் சோமு நன்றி நண்பா, நான் லேப்டாப் வச்சி டைப் பண்ணிட்டு இருந்ததை பார்த்து நீங்க பிளாக் எழுத்தாளரா என கேட்டார், பெயர் நாஞ்சில்மனோ'தானே என்றார் ஆமாம் என்றேன், ஓ பிரோஃபைலில் கண்ணாடி போட்டுட்டே இருப்பீங்களே என்றார் [[அவ்வ்வ்வ்வ்வ்வ்]]

சோலாப்பூர் தாண்டியதும் கொஞ்சம் கொள்ளையர்கள் பயம் வந்தாலும், சக பயணி திகிலூட்டி கொண்டே இருந்தார், அவரும் குடும்பமாக வந்துட்டு இருந்தார்...!!![[நல்லவேளை தப்பிச்சோம் இல்லைன்னா அதுக்கும் ஒரு பதிவு வந்திருக்கும் ஹி ஹி]]

ஆனந்தவிகடன் படிக்கும்போது சிபியின் ஒரு ஜோக் வந்ததை படித்து சிரித்தேன் அது கீழே உங்கள் பார்வைக்கு...

ஊழல்வதிகளுக்கு கட்சியில் இடம்'இல்லைன்னு அறிக்கைவிட்டது தப்பாபோச்சு!'

'ஏன் தலைவரே...?

'கட்சியில் இருக்கிற எல்லாரும் போன் பண்ணி என்னை நீக்கியாச்சான்னு ? னு கேக்குறாங்க!

ரயில் தர்மாவரம் தாண்டியாச்சு ஆந்திராவில் ரயில் ஓடிட்டு இருக்கு, சேலம்  அப்புறம் ஈரோடு பார்ப்போம் நண்பர்களை பார்க்க முடியுதான்னு.

கூடங்குளம் போயி நண்பன் கூடல்பாலா'வையும் அண்ணன் உதயகுமார் அவர்களையும் பார்க்கலாம்னு நானும் கவுசல்யாவும் போனில் பேசி வைத்துள்ளோம், கண்டிப்பாக போக மனம் தீர்மானித்து உள்ளது.

பார்க்கலாம் நண்பர்களே, மெட்ராஸ் பவன் சிவகுமாரும், அண்ணன் நக்கீரனும் சென்னை வரலைன்னா அருவாள் கன்பார்ம்'னு சொல்லி பயம் காட்டுராயிங்க பார்க்கலாம் முடிந்தவரை வரப்பார்க்கிறேன்...!

Thursday, February 16, 2012

கலவரமில்லாமல் நடந்த தேர்தல்...!!!

நேற்று இனிதே, கலவரமில்லாமல் தேர்தல் நடந்து முடிந்தாலும், முதல் முறையாக நண்பர்களுக்குள் சிறிது சலசலப்பு தவிர்க்க இயலவில்லை காரணம், இம்புட்டு நாள் காங்கிரஸ் ஆதரவாக இருந்த நண்பர்களை நான் வந்து காங்கிரஸுக்கு எதிராக திருப்பியதை அவர்களால் நம்பவும் முடியவில்லை ஜீரணிக்கவும் முடியவில்லை....!!!



காங்கிரஸின் கையாலாகாதனத்தையும், ஒரு இனத்தையே சாகடித்த நாதாரி அரசு என்று சொன்னாலும் புரிந்து கொள்ளும்  நிலைமையில் அவர்கள் இல்லை, அவர்கள் சொல்லும் காரணமே வேறு, அதை பதிவில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன், ஆனாலும் என் நிலைப்பாடு ஒன்றே...!!!


அறுபத்தைந்து சதவீதம் சிவசேனா வெற்றி என ரகசிய ரிப்போர்ட் வந்துள்ளது, நேற்றே காங்கிரஸ் அல்லக்கைகளின் முகம் கருத்து விட்டது...!!!

[[எங்கள் ஏரியா தமிழ் சங்க தலைவர் அண்ணன் மணி அவர்கள்]]

போலிங் முடிந்ததும் நண்பர்களுக்குள் கலவரம் சூழும் நிலை வரவும் உடனே எல்லாரிடமும் சொன்னேன், நாம் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல ஜஸ்ட் ஆதரவு மாத்திரமே...!

[[சிறு வயது முதல் ஆச்சி ஆச்சி என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் படையாச்சி ஆச்சியை ஓட்டு போட தூக்கிட்டு போகும் நண்பர்கள் கிருஷ்ணா, ஆண்டனி]]

நீ எந்த கட்சிக்கும் ஓட்டு போட்டுக்கோ, ஆனால் நாம் நண்பர்கள் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள், எனக்கு தமிழன் ஒருவனை நம்ம ஏரியாவில் பிரபலமாக்க வேண்டும் என்பதே நோக்கம் தமிழனின் நன்மைக்காக, அடுத்து காங்கிரஸை வேரடி மண்ணோடு சாய்க்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்...!! 


சிவசேனா ஜெயிக்கும் பட்சத்தில் ஒரு பதவி என் நண்பனுக்கு கிடைக்க இருக்கிறது என்பது எங்க ஏரியாவின் சரித்திரம், இத்தனை வருஷம் இங்கே வாழும் தமிழனின் தலையெழுத்து மாறப்போகிறது என்பதில் என் பங்கும் இருப்பதை நினைத்து மனம் உவகை கொள்கிறது....!

[[சிவசேனா ஜெயிக்கும் பட்சத்தில் பதவி வகிக்கப்போகும் நண்பன் சில்லி என்ற செல்வராஜ்]]

எப்படியோ தகராறு இல்லாமல் தேர்தல் நடந்து விட்டது, இன்றைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பார்ப்போம், ஜெயமா பராஜெயமா என்று....!!! 

Wednesday, February 15, 2012

மும்பை நகரசபை தேர்தலும் நாஞ்சில்மனோ'வும்....!!!

அப்பாடா வந்துட்டம்ய்யா, காங்கிரஸை வேரடி மண்ணோடு புடுங்க வேண்டும்னு நான் பல பதிவு எழுதினாலும், செயல்பாடுன்னு ஒன்னு இருக்கா இல்லையா அந்த வாய்ப்பு எனக்கு இப்போ மும்பையில் கிடைத்திருப்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கிறேன், காங்கிரசுக்கு எதிராக.....

ஏண்டா நீ சிவசேனாவுக்கு ஆதரவா நிக்கிறியே அவன் தமிழனை அடிக்கிரவனாச்சென்னு கேக்குற விக்கி பக்கிக்கெல்லாம் நான் சொல்வது, நாங்க அடிச்சிக்குவோம் பின்னே சேர்ந்துக்குவோம், ஆனால் ஒரு இனத்தையே அழித்த காங்கிரஸை நான் சும்மா விடுறதா இல்லை....!!!


அந்த வேதனை ரணமாக மனசில் வலிச்சிகிட்டே இருக்கு....

இன்னைக்கு ஓட்டு போட்டுட்டு நாளையில் இருந்து தொடர்ந்து வந்துருவேன், இன்னைக்கும் பலமான உள்ளடி வேலை பார்க்கணும் நேர்மையை என்னால் முடிந்த வரை செயல் படுத்திட்டு இருக்கேன் பார்ப்போம்.


என் தங்கச்சி ராஜி, ஆபீசர், இன்னும் பலர் எனக்கு அவார்டு தந்தும் வாழ்த்தியும் எனக்கு அவர்கள் பதிவுகளுக்கு தொடர்ச்சியா போக முடியாமைக்கு வருந்துகிறேன் [[கொஞ்சம் பொறுங்கப்பா]]

ஒரு பதிவு எழுதனும்னு ஆன்லைனுக்கு வந்தா விக்கியும், நக்கீரனும் என்னை படுத்துற பாடு இருக்கே முடியலை, நக்கீரன் போன் வந்தாலே என் மொத்த குடும்பமும் போனை தூக்கி தூர எறிஞ்சி நடுங்குராயிங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]


அதான் இன்னைக்கு அந்த கொய்யால அண்ணன்மார்களுக்கு பயந்து அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி பதிவு எழுதிட்டு இருக்கேன் ஆனாலும் ஒருத்தன் இப்போ உள்ளே வந்துட்டான் [[பிரகாஷ்]] தம்பி உறக்கம் வரலையாக்கும்...?

விரைவில் தமிழகத்தில் நாஞ்சில்மனோ, ஆபீசரை, மற்றும் நண்பர்களை பார்க்க ஆவலுடன்.......!!!

Friday, February 10, 2012

குடி சாவியை கண்டுபிடிக்கும்....!!!

பொதுவாக பஹ்ரைனில் வேலை செய்யும் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு, ரெண்டு பேருக்கு ஒரு ரூம் வீதம் ஹோட்டல் நிர்வாகம் கொடுப்பது உண்டு, அப்படி தங்கியிருந்த ஆரம்ப காலத்துல நடந்த ஒரு சிரிப்பு சம்பவம்.


ஒரு நாள் அடுத்த ரூம் பாட்னர்களின் பார்ட்டி நடந்தது. பொதுவாக ரூம்ல தங்கி இருக்கும் மலையாளிகள் சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் கூட அவிங்க அவிங்க பெட்டியை பூட்டி சாவியை மறைத்து வைப்பது வழக்கம்.

நாலுபேர் கொண்ட பார்ட்டி, பார்ட்டி தொடங்கியது [[நான் ரொம்ப நல்லவன் முதல்லயே சொல்லிர்றேன், தக்காளி ரேஞ்சுக்கு நினச்சிராதீங்க]] முதலாவது ரவுண்ட் ரெட் லேபல் உள்ளே போனது, ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாயிக்க தொடங்கினார்கள். 

கூட வேலை பார்ப்பவர்களின், மேனேஜர்களின் டவுசர்கள் துகுலுரியப் பட்டன. ஜாலியாக பேச்சு நடந்து கொண்டிருந்தது, இரண்டாவது ரவுண்ட் போகவும் கரண்டும் உயிரை விட்ருச்சி....

எலக்ட்ரீசியன கூப்பிட்டு சரி செய்து விட்டு, டான்ஸ் ஆரம்பம் ஆச்சு, மூணாவது ரவுண்ட்ல கொஞ்சம் தள்ளாட்டம் ஆரம்பிச்சது, நாலாவது ரவுண்ட் எல்லாரும் நிக்கமுடியாமல் சோபாவில் உக்கார்ந்து கொண்டே நடனம் [[நடனமா அது..??]] செய்தார்கள்.

ஐந்தாவது ரவுண்ட் ரெண்டுபேர் மட்டையாகி சாய்ந்தார்கள், சாப்பாடு அவர்கள் வாயில் வலுகட்டாயமாக திணிக்கப் பட்டது. அதில் ஒருத்தன் ஆம்பிலேட்டும் போட்டுட்டான். எல்லாரும் சாப்பிட்டு [[எங்கே எல்லாம் அப்பிடியேதான் கிடந்தது]] கிளம்பினோம். நான் ஒருத்தனை தூக்கிட்டுதான் போனேன்.

அப்போது அதே ரூமில் தங்கியிருந்த நண்பன் அலறினான், என்னடான்னா டேய் சூட்கேஸ் சாவியை காணோம்டா'ன்னு சொல்ல தேடினோம் தேடினோம் கிடைக்கவே இல்லை, ரூமை சல்லடையாக போட்டு தேடியும் கிடைக்கவில்லை, சரி நாளை தேடலாம்னு சொன்னாலும் அவன் கேட்கவில்லை நாங்கள் போனபின்பும் விடிய விடிய தேடியும் சாவி கிடைக்கவில்லை.

இப்படியிருக்க, ஒரு ஆறேழு நாள் கழிச்சி இன்னொரு ரூம்ல பார்ட்டி நடந்தது. அங்கேயும் நாலு நண்பர்கள்தான், அவர்கள் சீட்டு விளையாடி கொண்டே சரக்கடித்தார்கள் [[எனக்கு சீட்டு விளையாட்டை கண்டாலே வாந்தி வாந்தியா வரும்]] முதல் ரவுண்டு போச்சு...

சீட்டு விளையாட்டு ஜோரா நடக்குது, அதில் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தான் நம்ம சாவி தொலைத்த நண்பன். இரண்டாவது ரவுண்ட் போக சீட்டு கட்டை வேகமா போட்டு விளையாடினார்கள், மூன்றாவது ரவுண்டும் போச்சு உள்ளே, சாவி தொலைத்தவன் ஒரு மாதிரியா செருமினான்.

மூணாவது ரவுண்டும் உள்ளே போனது, சீட்டின் வேகமும் கூடியது, நாலாவது ரவுண்ட் கிளாசில் ஊற்றி ஒரு சிப் குடித்த சாவி நண்பன், ஆங் என சொல்லி இருக்கையை விட்டு எழும்பினான் சீட்டை கீழே போட்டுவிட்டு, இதோ இப்போ வாறேன்னு சொல்லிட்டு அவன் ரூமை நோக்கி ஓடினான்...

நானும் அவன் பின்னால் அவனுக்கு தெரியாமல் போனேன், பயபுள்ள எங்கேயோ கைவிட்டான். எடுத்தது சாவியை, என்னடான்னு கேட்டேன் சாவி கிடச்சிருச்சுன்னு சொல்றான், நண்பர்களிடம் வந்து சொல்லி சிரி சிரின்னு சிரிச்சோம்...
என்னா நடந்துச்சுன்னா, முதல் நாள் பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் இவன், எங்கே ஓவரா குடிச்சி மட்டையாகிருவோமோ'ன்னு பயந்து யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் சாவியை மறைத்து வைக்க, பார்ட்டி முடிஞ்சதும் அடிச்ச மப்புல சாவி வச்ச இடத்தை மறந்துட்டான்.


இப்போ நடந்த பார்ட்டியில மூணாவது ரவுண்ட் அடிச்சதும் நியாபகம் வந்துருச்சி பயபுள்ளைக்கு, இப்பவும் யாராவது ஏதாவது தொலைச்சா எங்களுக்கு இவன் நியாபகம்தான் வரும், அப்படியே யாராவது எதையாவது தொலைச்சா முதல் கேள்வி நீ நேற்று எத்தனை பெக் அடித்தாய் என கேட்பது இப்பவும் எங்களுக்குள்ளே வழக்கமாக இருக்கிறது...!!!

"மனோ"தத்துவம் : அநேகமாயிரம் கார்கள் உருண்டோடினாலும், ரோடுகள் கவலைப்படுவதில்லை...!!! [[டியூட்டிக்கு ரோட்டில் நடந்தே போவோர் சங்கம்]]


Wednesday, February 8, 2012

அணுமின் நிலையத்தின் அழிவுகள் என்ன, மூத்தோர்கள் பார்வையில்......!!!!

தமிழ் பறை நண்பர்கள் எனக்கு இன்று அனுப்பிய ஈமெயில் உங்கள் பார்வைக்கு........


கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் - அரங்கக்கூட்டம் 
இடம் : லயோலா கல்லூரி 
நாள் : 4-2-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம்


அருள் எழிலன் அறிமுக உரை

தோழர் பா. செயபிரகாசம் உரை

தோழர் குறும்பனை பெர்லின் உரை

தோழர் பாஸ்கர் சக்தி உரை

தோழர் நிர்மலா கொற்றவை உரை

தோழர் அஜயன் பாலா உரை

தோழர் மனுஷபுத்திரன் உரை

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பாளர்கள் [[நானும்]] நண்பர்கள் தமிழ் பறை இயக்கத்தினர் எனக்கு அனுப்பிய ஈமெயில்....

தோழர் பாமரன் உரை

அண்ணா பல்கலைகழக மாணவன்  உரை

ஞானி உரை





நண்பன் கூடல் பாலா கவனத்திற்கு, தம்பி நான் தற்போது மும்பையில் இருக்கிறேன் விரைவில் ஊர் வருகிறேன் உங்களையும், நண்பரும் அண்ணனுமான உதயகுமார் அவர்களையும் நேரில் சந்திக்க வருகிறேன், மற்றவை போனின் தெரிவிக்கிறேன் நன்றி.....


Friday, February 3, 2012

தீவிர கண்காணிப்பில் மும்பை விமானநிலையம்....!!!

தீவிர கண்காணிப்பில் மும்பை ஏர்போர்ட், காரணம் நாஞ்சில்மனோ'வின் தீவிரமான வருகை விமான நிலையத்தை நிலைய குலைய வைத்திருப்பதாக பன்னிகுட்டியின் செய்தி சானல் செய்தி வெளியிட்டு உள்ளது [[நாசமா போக]]

ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்ததும் என்னை போட்டு தள்ள விக்கி என்ற பக்கி பிளான் பண்ணுனதை ஆபீசர் உளவுத்துறை மூலம் அறிந்து அந்த நாதாரி ராஸ்கலின் முயற்சியை முறியடித்தார் என்ற செய்தி பன்னிகுட்டி பிளாக் மூலம் தெரிய வருகிறது....!!!

மும்பை ஏர்போர்ட் மானேஜர் வேலையை ராஜினாமா பண்ணிவிட்டு போய்விட்டார் [[ஓடிவிட்டார் என்று படிக்கவும்]]  நாஞ்சில்மனோ வந்த விமான மாலுமி விமானத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி.....

நாஞ்சில்மனோ'வுடன் யாத்தரை செய்த பயணிகள் எல்லாரும் மூர்ச்சையாகி அவசராமாக ஆம்புலன்ஸ் வரவச்சும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மூர்ச்சை ஆகிவிட்டார் நாஞ்சிலாரை பார்த்து....

விமான நிலைய கிளீனர்கள் எல்லாம் துடப்பகட்டை இத்தியதிகளுடன் தயார் நிலையில் காரணம் மும்பை நாதாரி நண்பனுங்க என்னை பழி வாங்கனும்னு ஏர்போர்ல வச்ச பிளக்ஸ் போர்ட்...

பவுல்தாக்கரே கோவணம் கட்டி போராட்டம்....[எதுக்குகுலேய் ராஸ்கல், நான் குருணாநிதின்னு நினைச்சியா? நான் ஒரிஜினல் தமிழம்லேய் கொய்யால மும்பைன்னாலும் பிச்சிபுடுவேன் பிச்சி, சிபி உயிரை பணயம் வச்சாவது போட்டு தள்ளிப்புடுவேன் ]]

எலேய் நாயே நீ உன் வீட்டம்மாவை பார்க்கத்தான் ரெடி ஆகி கடைசியா கவிதைன்னு ஒரு கருமத்தை பதிவுன்னு போட்டே எங்களுக்கு தெரியும்டி...[[ சிபி அண்ணே நீ மனசுல கருமுறது நல்லா தெரியுதிடி பிச்சிபுடுவேன் ராஸ்கல்]]

என் உயிரிலும் மேலான நண்பர்களே, தோழிகளே, என் உயிர் தங்கைகளே, பதினெட்டாவது மாடியில் இருப்பதாலும் கீழே அமெரிக்கன் நேவி கப்பல் தளம் இருப்பதாலும் பதிவும் எழுத முடியவில்லை, உங்கள் பிளாக்கும் வர முடியவில்லை மன்னிக்கவும், காரணம் அமெரிக்கன் ராணுவம் நெட் கனக்சனை கட் செய்து வைத்து இருப்பார்களாம், அதான் அப்பவே சொன்னேன் விக்கி'கிட்டே டேய் நாயே அமெரிக்கா'காரன்கிட்டே வச்சிக்காதேன்னு கேட்டானா கொய்யால...

இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோங்க அருவா பொளந்துகிட்டு வந்து உங்கள் காலடியில் நன்றியுடன் கிடக்கும் நன்றி....

டிஸ்கி : ஆண்டவா மும்பை ஏர்போர்ட் என்ன ஆகப்போகுதோ....? 

டிஸ்கி : எலேய் நான் இல்லாத மும்பை எப்பிடிலேய் இருக்கு..? 
அண்ணே இதுவரை நல்லாத்தான் இருந்துச்சு இனி நாரிப்போயிரும், நம்ம கல்பரக்ஷா பாரும் [பார்] பார் முதலாளி திருப்பதி ஓடிட்டான்னு இப்பமே நியூஸ் வந்துருச்சு.....

நமக்கு இதெல்லாம் புதுசா என்ன விடுறா, ஒயிட் பக்கார்டி இப்பமே ஆர்டர் பண்ணி வெச்சிரு இதோ வந்துட்டேன், அப்புறம் ஜெர்மன் கார்னு ஒரு டப்பா காரை வச்சிருந்தியே அதை ஏர்போர்ட் அனுப்பிரு டிக்கியை பதம் பார்த்து அனுப்புறேன் சரியாடா...?
அண்ணே நீங்க உருப்படவே மாட்டீங்க...
ஹி ஹி...

ஸ்பெஷல் டிஸ்கி : ஆம் நண்பர்களே வேலை கொஞ்சம் பிரச்சினையாக இருப்பதாலும், என் மனைவி குழந்தைகளை பார்க்க மனசு ஏங்குவதாலும், நான்கே மாசத்தில் மும்பை வருகிறேன், அடுத்த பத்தாவது நாளில் தமிழ்நாடு வருகிறேன், என் உயிர் நண்பர்களை சந்திக்க காட் இஸ் கிரேட்...!!!

டிஸ்கி : கவுசல்யா சொல்வாங்க, மனோ நீங்க ஆபீசரை சந்திச்சிங்கன்னா ஆபீசருக்கு பத்து வயசு குறஞ்சிரும்னு அவளவு சந்தோஷமா என்னை பற்றி பேசுவார் போல, வாரேன் ஆபீசர் விஜயனையும் கூட்டிட்டு, உங்களுக்கு இருவது வயசு குறைஞ்சிடும்...!!!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!