Monday, June 30, 2014

அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி !

https://www.facebook.com/ngomathi?fref=ts பிரபல பதிவுலக எழுத்தாளர் கோமதி நடராஜன்.

ஐயோ அக்கா....நெஞ்சம் பொறுக்குதில்லையே...இனிய எழுத்துகளால் என்னை உரிமையோடு கொஞ்சி கலாயித்து மகிழ்வித்த தாயே...உன்னை பார்க்காமலேயே என்னை பிரிந்து விட்டாயே அக்கா...

அக்கா போனில் பேசிய உங்கள் சப்தம் என்றும் என் நெஞ்சில் இருக்கும்...

தம்பியின் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலியும், சொர்க்கத்தில் நாமும் சந்திப்போம் நிச்சயமாக...

எங்கள் அக்கா கோமதி நடராஜன் அவர்களின் மறைவை அடுத்து, நாஞ்சில் மனோ வலைத்தளங்கள் யாவும் கண்ணீரோடு இரண்டு நாள் மவுனம் கொள்கிறது மிகுந்த கண்ணீரோடு....

அக்கா.....அக்கா....அக்கா.........................


உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Tuesday, June 24, 2014

பத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ?

பத்து கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லுங்க இல்லைன்னா கனவுல வந்து கண்ணை குத்திருவேன்னு ஏஞ்சல் மேடம் சொன்னதால, உண்மையாவே கனவுல வந்துறப்பிடாதே அதான் உடனே பதில் சொல்லிட்டேன்.


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?


கலைஞர் போல [[அவரது குணமல்ல குடும்பம்]] கொண்டாடுவேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கப்பல், ரயில் மற்றும் விமானம்...... ஹி ஹி......சரி விடுங்க...கிட்டார் இசை மற்றும் டிரம்ஸ் அப்புறம் பெண்களின் மனசு !

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

பெண்களுடன் பணி புரிவதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை, எனக்கு சிரிப்பு வந்தால் இழவு வீட்டுலேயும் சிரிச்சு தொலைச்சிருவேன், சீரியஸான இடங்களுக்கு போனால் ஒன்று என் அக்காள் என் கூட இருந்து கவனிச்சுப்பாங்க, இல்லைன்னா வீட்டம்மா.

சிரிச்சு செமையா வாங்கி கட்டியிருக்கேன் !

விழுந்து விழுந்து சிரிச்சதுன்னா நம்ம விஜயன் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டது, அதாவது....

மலேசிய அரசாங்கம் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வந்துருக்காம் "முஸ்லீம் அல்லாதோர் அல்லா என்று சொல்ல கூடாதாம்" அதுக்கு விஜயன் பதில்..."செத்தாண்டா மலையாளிகள்" என்று...ஏன்னா ஒரு நாளைக்கு எந்த மலையாளியாக இருந்தாலும் சராசரி நூறு தடவையாவது அல்லா [[இல்லை]] என்ற வார்த்தையை பிரயோகிப்பார்கள்...

மலேசியாவின் தண்டனை தெரியும்தானே ?


4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


இங்கே [[பஹ்ரைன் மற்றும் மும்பை]] பவர்கட் இருப்பது இல்லை அப்படியே ஊரில் இருந்தாலும் வெளியே காற்று வாங்க மற்றும் தோப்பு காட்டில் சிறிய வேலைகள் செய்துவிட்டு லேஸா மப்பும் ஏத்திகிட்டு வர வேண்டும்.


5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 


ஆஆ...முப்பத்தி ஒன்பதுதானே தாண்டியிருக்கு அவ்வ்வ்வ்....
என்னைப்போல நாடோடியாக வாழாதீர்கள், அருகில் தாய் தந்தை ஆதரவும் அன்பும், மனைவி பிள்ளைகளின் அன்பு இல்லாமல் அப்பா வாழ்ந்து விட்டேன் [[இருக்கிறேன்]] நீங்கள் அப்படி இல்லாமல் சேர்ந்தே வாழுங்கள்.


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?


ஏழ்மை மற்றும் நோய்கள் !


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பலரிடமும் கேட்பதுண்டு அதில் என் மனதை அசைத்த ஒரு அட்வைஸ் விஜயன் மற்றும் நம்ம ஆபீசரும் சொன்னது, "மனோ எப்போதும் ஒருப்போல இருக்காது நாலு காசு சேர்த்து வைக்கனும் நமக்கு வயசாகிட்டு இருக்கு என்பதை நினைவு கொள்ள வேண்டும்" என்றதுதான், உஷாரா இருக்கேன் ஆண்டவர் கிருபையில்...!


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

கேள்வியே இல்லை தூக்கிப்போட்டு மிதிதான்...[[பயந்துராதீக]]


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு ? நண்பனுக்கு நண்பனின் மனசு நன்றாகவே தெரியும் கட்டிபிடிக்கும் பொது ஆறுதலாக உணர்வான்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

சத்தம் காட்டாமல் நண்பர்களுக்கு போன் போட்டு வர செய்து பாட்டல் பற பற...சாப்பாடு நற நற...அப்புறம் வீட்டம்மா வந்து தர தர அவ்வ்வ்வ்....

தொடர ஆசைப்படுபவர்கள் தொடரலாம்.

Saturday, June 21, 2014

யார் எதிர்த்தால் என்ன வாங்க நாம ஹிந்தி பேசுவோம் !

தலீவர் எம்புட்டு தூரத்துக்கு ஹிந்தியை எதிர்கிறாரோ, நாம அம்புட்டு சீக்கிரமா ஹிந்தி படிச்சுனும், தலீவர் ஹிந்தியை எதிர்க்க காரணம் என்னன்னா அவருக்கு கீழே உள்ள மாதிரி யாரோ சொல்லி குடுத்து மண்டையில ஆயிரம் கொட்டு கிடைச்சிருக்கும் போல...
சரி வாங்க நாம தலிவருக்கு எப்பிடி சொல்லி குடுத்தாங்கன்னு பார்ப்போம்....

ஹம் ஆப்கே ஹை கோன் - நான் கோன் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன் 


ஏக் மார் தோ துக்குடா - தூக்குடா அவனை

மர்த் டாங்கே வாலா - மார்த்தாண்டம் எங்கேடா இருக்கு 

தேஜாப்  - வாஜ்பாய் 

சடக் - சாவுடா 

கர்மா - வர்மா 

பத்மாஷ் - பெட்ருமாஸ் 

கபர்தார் - கழுத்தறுத்தார்

அபேய் சாலெய்  - சாலையில் பேய் 

கூப் சூரத்  - சூரத்திலும் கூவம் 

அந்தா கானூன் - அந்தா பறக்குது பலூன் 

கயாமத்சே கயாமத்தக் - பயப்பட்ட இடத்தில் இருந்து அந்த இடம் வரை 

குச் குச் ஹோத்தா ஹே  - கெட்ட வார்த்தை எவனாவது சொன்னா குச்சை கொண்டு அடி 

ஆக்ரி ரஸ்தா - ரசகுல்லா சாப்புடுரியா 

சௌதாகர் - சௌகார் ஜானகி 

சப்பல் சே மாருங்கி  - கப்பலை வித்து மாருதி வாங்குவேன்

லோக் சபா  -  நடன மாளிகை 

ராஜ்ய சபா  - காபரே மாளிகை 

ஷோலே  -  போலெய்

பந்தர்  - பந்தல் 

கபர்ஸ்தான்  - பாகிஸ்தான் 

ஷேர் கா பச்சா  -  ஷேர் ஆட்டோ 

ஹிம்மத் வாலா  -  மண் லாரி 

தர்மாத்மா  - தர்ம அடி 

ஏக் காவ் மே கிசான் ரேஹத்தாத்தா - பேய் உன் சங்கை கடிச்சு துப்ப

தம்மாரோ தம்  -  ஒரு தரம் ரெண்டு தரம் 

பாந்த்ரா - நீ பாத்தியா 

மைனே பியார் கியா  - மைனாவை பிக்கப் செய்தது யாரு 

ஒ மேரா துஷ்மன்  - மோர் வேணாம் பால் போதும்

குத்தா  -  குத்தவச்சி உக்காரு 


ஏ தில் மாங்தே மோர்  - மாங்காய் துன்னு 

முக்ய மந்திரி  -  முக்காம எந்திரி 

கலிங்கட்  -  கலிஞர் 

இனி மறுபடியும் முதல்லே இருந்து படிங்க.

Monday, June 16, 2014

நம்மை ரசிக்கும் ரசனை மிகுந்த சில ரசிக நண்பர்கள் !


ஆயிரம் தினார் [[ஒன்னரை லட்சம் ரூபாய்]] நஷ்ட ஈடு கிடைத்திருக்கிறது பாகிஸ்தான் நண்பனுக்கு, இன்னும் கூடுதல் கிடைக்க வாய்ப்பு இருந்தும் ஒரு அரபி நம்மளை இளக்காரமாக பார்த்து இது போதும் என்றே பேச்சை நிப்பாட்டினான் !

நான் மூவாயிரம் தினார் எதிர் பார்த்தேன் !

சென்ற பதிவின் தொடர்ச்சி.
---------------------------------------------------------------------------------------------------




ஞா ங இப்பவும் எழுத தெரியாத நண்பன், படிக்கும்போது மிரட்டலோடு என் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பான், நான்தான் எழுதி கொடுப்பேன்....மக்குன்னா மக்கு அப்பிடி ஒரு மக்கு, சாப்பாடுன்னா அடிச்சிபிடிச்சு சாப்புடுவான், மொத்த வாத்தியார்களும் தங்கள் தங்கள் வீட்டு கோபத்தை தாங்கிய உடம்பு !

இவன் உருப்படமாட்டான்னு எழுதியே வச்சிட்டோம் ?

இப்போ அவன் எங்க ஊருக்கு ஹீரோ !

ஆம் அவன் மனைவி எங்க ஊருக்கு வார்டு மெம்பர் !

இந்த தடவை லீவுக்கு ஊருக்கு வந்த பொது, அம்மாவுக்கு சீனி, அரிசி [[நல்ல அரிசி]] வாங்கி குடுக்க நானும் ராஜகுமாரும் ரேஷன் கடைக்கு போனபோது அவன் அங்கே நின்று ரேஷன் கடை ஆளை பார்த்து சொன்னான் "அண்ணே இவன் என் பால்ய சிநேகிதன் பார்த்து போடுங்க" அவ்வ்வ்வ்....

அவன் மனைவியை இன்னும் நான் பார்க்க வில்லை [[என்னை தெரியும் என்று ராஜகுமாரிடம் சொன்னாளாம் கூடுதல் விசாரிக்க வில்லை [[மூன்றே நாள்தான் ஊரில் இருந்தேன்]] அடுத்தமுறை போயி பார்த்தே ஆகவேண்டும்]]

பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும், அழகாக இவனை செதுக்கி இருக்கிறாள் !

சில பெண்மை அழகில்லாத ஆண்மையை அழகாக்கி விடுகிறதை நிறைய இடங்களில் காண்கிறேன், மனைவியாக மட்டும் இல்லை தோழி, மற்றும் அக்காள் தங்கைகள்...!

[[ஆஆ...அதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஆகிருச்சா ? ஆபீசர், சுதன் மற்றும் நான், மலரும் நினைவுகள்...!]]

சில ஆண்களும்...ஒரு முறை ஊருக்கு போயி விஜயனை பார்த்துவிட்டு பக்கத்தில் துணிக்கடையில் வேலை செய்யும் நண்பனையும் பார்க்க போனபோது, எனக்காக ரெண்டு சட்டை செலக்ட் செய்து தந்தார் விஜயன்.

அத்தான் ஆஹா சூப்பர் செலக்ஷன் என்று சொல்ல, இது விஜயன் செலக்ஷன் என்று சொன்னேன் "அதானே பார்த்தேன்"னு உறுமிகிட்டு போச்சு சீவலப்பேரி...

சரி பஹ்ரைன் வரை இந்த ரெண்டு சட்டயும் வருமான்னு சந்தேகமா இருந்துச்சு என் மகன் பார்த்த பார்வையில்...

வெளிநாடு வந்துதான் கவனித்தேன் அந்த ரெண்டு சட்டையும் மிஸ்ஸிங் அவ்வ்வ்வ்....

[[அந்த ஒரு சட்டை]]\

ஒரு சட்டை என் குடும்பமும் விஜயன் குடும்பமும் பத்மநாதபுரம் அரண்மனை மற்றும் திற்பரப்பு அருவிக்கு போகும் போது போட்டுருப்பேன் பதிவு போட்டுருக்கேன், இன்னொன்னு நம்ம ஆபீசர் மகள் பிருந்தா கல்யாணம் அன்று காலையில் போட்டிருப்பேன் !

[[ஆபீசர் மகள் கல்யாண நாள் அன்று கல்யாண மண்டபத்துக்கு வெளியே வேடந்தாங்கல் கருண் நான் சிபி அண்ணன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ், அந்த இன்னொரு சட்டை]]

எல்லாரும் பாராட்டிய செலக்ஷன், இனி ஊர் போனால் விஜயனைதான் தூக்கிட்டு போகணும் துணி வாங்க, என்னையே அழகாக போட்டோ எடுத்து மிகவும் சொல்லி ரசிப்பார் நண்பர்களிடம்...!

Tuesday, June 10, 2014

வன்மமே உனக்கு ஒரு வன்மம் வராதா ?

உண்மையாக மனசுக்கு பட்டதை ஓப்பனாக சொல்வது என்னுடைய மனசு, அதனாலேயே பல துன்பங்களையும் அனுபவிச்சிருக்கேன், உதாரணம் மும்பையில் ஒரு தாதாவை வாய் நாறுதுன்னு சொன்னதில் இருந்து என்ன நடந்திருக்கும்னு உங்க யூகத்துக்கே விட்டுருதேன்...

பாகிஸ்தான்....

தொன்னூறு சதவீதம் இந்தியர்கள் வெறுக்கும் ஒரு நாடு...

 அந்த நாட்டின் வரலாறு என்ன ?

அவர்கள் யார் ?

அவர்கள் தம் அன்பு என்ன அவர்கள் தம் பண்பு என்ன ?

கலாச்சாரம் ? மனம் கொண்டது மாளிகை அதற்குள் போவது மனிதம் இல்லை..!

நம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது என்ன அவர்களைப் பற்றி ?
வரலாறு பாடத்தில் நம் தலைமுறைகளுக்கு என்ன சொல்லப்படுகிறது ?
அசோகர் ரோட்டுல மரம் நட்டார்ன்னு தெரியும், எதுக்கு நட்டார்ன்னு தெரியாது, அசோகர் சக்கரவர்த்தின்னு தெரியும், எதுக்கு சக்கரவர்த்தின்னு தெரியாது ! அவர் எந்த நாடு முதல் எந்த நாடு வரை ஆண்டார்ன்னு உங்க பிள்ளைங்ககிட்டே கேளுங்க ?

எனக்கு பாகிஸ்தான் நண்பர்களை ரொம்ப பிடிக்கும், என்ன பந்தமோ புரியலை என்னை பார்த்ததும் அவர்களுக்கும் பிடித்து விடும், என் கூட மலையாளி தமிழ் மற்றும் இந்திய நண்பர்கள் இருந்தால் பாகிஸ்தானியை கண்டதும் சைடில் ஒதுங்குவது உண்டு, அவன் அவர்களை மைண்ட் செய்யாமல் என்னை வந்து கட்டி பிடிப்பதும்  உண்டு...!

"மும்பைல பாம் வச்சா முதல்ல எனக்கு சொல்லிருய்யா ஏர்போர்ட் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை தாண்டிதான் என் பிள்ளைங்க ஸ்கூல் போகணும்" என்று நான் ஜாலியாக சொல்வதை ஏற்று சிரிக்கும் பாகிஸ்தானி நண்பர்கள், மற்ற இந்தியர்கள் இப்படி சொன்னால் அடி நிச்சயம் !

 பாகிஸ்தான் ஆண்கள் மட்டுமில்ல....பத்து வருஷம் முன்னாடி பாகிஸ்தான் முஜ்ரா என்னப்படும் நடன அழகி ஷக்கீனா என் உயிர் தோழியாக இருந்தாள், அன்புன்னா அப்பிடி ஒரு அன்பு, மனோஜ் என்று பெயரை உச்சரிக்கும் போதே உருகி விடுவாள் !

சரி அதெல்லாம் போகட்டும் விஷயத்திற்கு வருவோம்.....

முந்தாநாத்து நான் டியூட்டியில இல்லை, எங்க ஸ்டாஃப் எல்லார்கிட்டேயும் டேமேஜர் சொல்வது...... கெஸ்ட் இஸ் ஆல் வேய்ஸ் ரைட்.....நான் சொல்வது...லெப்ட்டு ரைட்டு பார்த்து நட...அடிச்சம்ன்னா திருப்பி அடி, அடி வாங்கிட்டு என் முன்னாடி வராதே குடுத்துட்டு வான்னு சொல்றது நம்ம நாட்டாமை மனசு...!

செக்கியூரிட்டி பாகிஸ்தானி, மூனாவது மாடி டிஸ்கோவில் களவாண்ட ஒரு அரபியை லிஃப்டில் போட்டு சாத்த...லிஃப்ட் கீழே வரவும், ரிஷப்சனில் அடி நடக்க...அரபிக்கு நல்லா அடி குடுத்துருக்கான்...[[கேமராவில் பார்த்தேன்]]
பரஸ்பரம் அடி...

அப்பிடியே விட்டாலும் ஓகே....இதுலதான் நம்ம ஆளு ரெண்டுபேர் உள்ளே புகுந்தது, அதுவும் மலையாளி...... சொல்லவா வேணும் ? இன்னும் மற்ற அரபி செக்கியூரிட்டிகள், பற்றி கூலராக மலையாளிகள்...... செய்ததை கேமராவில் பார்த்து ஆடிப்போனேன்...!

சண்டை என்பது யாதெனில்...

நண்பன் தப்பே செய்திருந்தாலும் அவனை அடித்தவனை ஏன்னு கேக்காமல் அடித்து நொறுக்குவது என் நண்பர்கள் பாலிஸி...! அதே போல வேலை செய்யும் இடத்திலும் அந்நியன் தாக்கும் போது அவனை தூக்கிப்போட்டு மிதிப்பது தப்பில்லை ஆனால்...

 இந்த இரண்டு மலையாளி நண்பர்களும் செய்தது என்ன தெரியுமா ?
பாகிஸ்தான் நண்பனை கட்டியாக பிடித்து வைத்து அரபிக்கு முன்பாக நிப்பாட்ட....பீஸ் பீஸ் ஆகிவிட்டான், மூக்கில் நாலஞ்சி குத்து பொன்னாசி உடைந்து மூக்கு பெயர்ந்து போனது, ரத்தம் வந்தபின்தான் இவர்கள் பிடியை விட்டார்கள்...!

பத்தே நிமிஷத்தில் நடந்து முடிந்து போலீஸ் கேஸும் ஆகிவிட...அரபி இப்போ ஜெயிலில்...

அடுத்தநாள் நான் டியூட்டிக்கு வரும்போது என் முன்னிலையில் இவர்கள் பேசினார்கள்..."அவனே கொறச்சி கூடுதலா இருன்னு, பிடிச்சி கொடுத்தல்லே மோனே...அவன்ற அடப்பு தெற்றி போயல்லோ ஹா ஹா ஹா ஹா..." [[அவனுக்கு ரொம்ப அகங்காரம் அதான் பிடிச்சி குடுத்தொம்ல கொய்யால]]

 எனக்குள் இருந்த மிருகம் வெளியே..."ப்ப்ப் எர்க்வெஹ்வ்ர்ஹ் ஜ்ர்க்ர்க் உஎஜெர்ஹ்ஜ்ர் இஈஹ்ஜெர் ஜவே உவ்வ் உஈரெர்ஜ்ட் ஈஜ்ட்ட்ஜ்ஜ்ற்ற்...."

இதோ இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இப்பவரை அவனுகளை காணவே இல்லை !

ரெண்டுநாள் லீவு முடிந்து [[ட்ரீட்மென்ட்]] என்னிடத்தில் வந்தவன் சொன்னது, "பரஸ்பரம் சண்டை வந்தால் ஒருத்தன் அவனை பிடிக்க வேண்டும் இன்னொருத்தன் என்னை பிடிக்க வேண்டும், இவனுக ரெண்டு பேரும் சண்டை என்னும் பெயரில் என்னை பிடித்து அவனுக்கு வாய்ப்பு கொடுத்ததின் நோக்கமென்ன மனோஜ் ?" [[என்னிடத்தில் பதில் இல்லை]]

 இப்படியும் வன்மமா...? தன் ஜென்ம சுபாவத்தை சில இடங்களில் காட்டும் சில மலையாளிகளை நான் மன்னிப்பதே இல்லை !

இனி மறுபடியும் முதல்லே இருந்து படியுங்க....

இப்போ அரபி ஜெயில்ல ஒன்னு களவு கேஸ் ரெண்டு இவன் மூக்கில் குத்திய கேஸ், சவூதி எம்பஸி பேச்சு வார்த்தைக்கு வந்தாலும் [[பணம்தான்]] நான் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை காரணம் அடுத்த வாரம் அவனுக்கு மூக்கில் ஆபரேஷன் இருக்கு.

காசு கிடைத்தால் எங்களுக்கும் பங்கு வேண்டும், என்று இப்பவே மலையாளிகள்  ரெண்டு பேரும்  கொடி பிடிக்க..."மனோஜ் நல்ல டீல்ல பணம் வந்துச்சுன்னா பாதி நீ எடுத்துக்கோ ஓகே ?"

"நீ ரத்தம் சிந்திய காசு எனக்கு எதுக்குடா ? என் பிள்ளைங்களுக்கு அது சாபமாக மாறிவிடும் வேண்டாம்" என்றேன்

"அப்போ இவனுக ? "

என்னிடம் பதிலில்ல, தெரிஞ்சா சொல்லுங்க....

Tuesday, June 3, 2014

ஆஆ....கோச்சடையான் ரஜினியா இது !

 ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சினிமா, இப்போ வரும் சினிமாக்களை பார்ப்பதை விட நம்ம பதிவர்களின் [[சினிமா பிரியர்கள்]] எழுத்தையும் அதாம்ய்யா விமர்சனம், அவர்கள் தம் குண நலன்களை வைத்தே ஒரு யூகத்தில் கணிப்பது உண்டு, இருந்தாலும் சினிமா பார்க்கும் ஆவல் என்னமோ குறைந்து விட்டது அதற்கு இந்த கோச்சடையானும் அடக்கம்...!
இந்த படத்தை வலுக்கட்டாயமா பார்க்க காரணம் எனது சோம்பேறி தூக்கம் காரணம், "டேய் அளவுக்கதிகமா தினமும் [[பனிரெண்டு மணி நேரம் அவ்வவ்]] தூங்காதே அப்புறம் ரோட்டுல எங்கேயாவது கிறுகிறுத்து விழப் போறே" என்ற நண்பனின் அட்வைஸ் படி, என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்போ, சினிமா நியாபகம் வர, இணையதளத்தில் தேடினேன் தமிழ் படம் ஏதாவது ஓடுதான்னு பார்த்தால், ஆஆ கோச்சடையான் அல் ஹம்ரா தியேட்டரில் ஓடிட்டு இருக்கு..!



கோச்சடயான் விமர்சனங்கள் பல தரப்பில் இருந்தும் சரியாக ஒரே கண்ணோட்டத்தில் வரவே இல்லை பலரும் பல விதத்தில் பிடிச்சிருக்கு பிடிக்க வில்லை, சிலர் குழைந்தைகள் மிகவும் ரசிக்கிறார்கள் [[இல்லவே இல்லை]] என்றே எழுதி வருகிறார்கள் !
நான் தியேட்டருக்கு மதியம் [[நூன்]] பனிரெண்டு மணிக்கு போனேன், மொத்தம் நான்கே நான்குபேர் மட்டும் தியேட்டரில் என்னையும் சேர்த்து [[!]] 

தீபிகா படுகோனை எம்புட்டு கேவலப் படுத்தணுமோ அம்புட்டு பண்ணிட்டாங்க ?

சரத்குமார் சும்மா லுலாலிக்கா வந்துட்டு போறார்...! [[படம் முழுக்க சில இடங்கள் தவிர்த்து ரஜினியின் மேனரிசம் சரத்குமார் மாதிரியே இருக்கு]]


அருமையான நடிகர் நாகேசையும் கேவலப் படுத்தி இருக்காயிங்க ?


பிளஸ் 



கோச்சடையான் அண்ணாச்சி வந்ததும் எனக்கு தூக்கம் வர ஆரம்பிச்சி தூங்கி தூங்கி அப்புறம் கொஞ்சம் கதையில் சூடு பிடிக்க தூக்கம் கலைந்தது, எதிரிகளையும் மன்னிப்பது என்ற கொள்கை எனக்கு பிடிக்க நிமிர்ந்து அமர்ந்தேன் !
எதிரிகளை மன்னிப்பது என்று அப்பா சொல்லி இருந்தாலும் அதை மீறி ராணா ரணகளம் ஆடுகிறார் [[ம்ம்ம் கதைக்கும் தேவைதான் வேற வழி ?]] எல்லா நடிகர்களின் முக பாவனைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறது, கோபத்திலும், சிரிப்பிலும் ஒரே முக பாவனை [[ஒ கார்ட்டூன் இல்லையா]]



ஒன்னுமே இல்லை படத்தில்....

சரி படத்தை தூக்கி [[கொஞ்சம்]] நிறுத்தி இருப்பது ?

முதலில் ஏ ஆர் ரஹ்மானின் துள்ளல் இசை, வேற யாரும் இந்த இடத்தில் நினைத்து பார்க்கவே முடியாது !




ரஜினியின் இளமையான வாய்ஸ் !

எங்க அண்ணன் கே எஸ் ரவிக்குமாரின் கதை வசனம் !

ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு !

எல்லாப் பாடல்களும் எனக்கு பிடித்திருந்தது !

ஷோபனா கேரக்டர் கொஞ்சம் டச்சிங் டச்சிங் !



நாசர்..... வாஆஆஆஆவ்......சூப்பரு.!

கடைசியாகவும் முதலாகவும் நான் ரசித்தது "எதிரிகளை மன்னிப்பது" மட்டுமே...

அல்லாமல் இது குழந்தைகளுக்கான படமே அல்ல...கண்டிப்பாக அவர்கள் தூங்கி இருப்பார்கள், இது வந்து ரஜினி வாய்ஸ் தெரிந்தவர்கள் அந்த குரலுக்காக, ரஹ்மானின் இசைக்காக பார்க்கலாம்.


இன்னும் எனக்கு புரியாத ஒரு விஷயம், அதென்ன சௌந்தர்யா ரஜினிகாந்த் அப்புறம் கணவர் பெயர், முதலாமவர் கனிமொழி கருணாநிதி அப்புறம் கணவர் பெயர் ? ஏம்யா ஏம்யா ஏம் ? தெரிஞ்சவிங்க சொல்லுங்க பிளீஸ்.



என்னை பொறுத்த வரை கோச்சடையான் "நொண்டி குதிரை"

யப்பா தொடரும்ன்னு ஒரு ரஜினி வந்தாரு பாருங்க, அப்போ எடுத்ததுதான் ஓட்டம் ரூம் வந்து சேரும் வரை சத்தியமா திரும்பியே பார்க்கலை !

Sunday, June 1, 2014

ரஜினிகாந்தே பயப்படும் போது நாம எங்கிட்டு ?

எழுபத்தெட்டு வயசுகாரர், அவர் தோப்பும் எங்க தோப்பும் கொஞ்சம் அருகருகில், அவரும் பஹ்ரைனில் இருந்தவர்தான்...


ஊரில் அவருக்கு ஏகப்பட்ட நல்ல பெயர் காரணம் அவர் சாராயம் குடிப்பதே கிடையாதாம் ! [[எங்கப்பா அவரை கள்ளப் பய என்று அடிக்கடி குறிப்பிடுவது உண்டு]]


எங்கள் தோப்பருகேதான் டாஸ்மாக் கடையும் இருக்கு, நான் போன லீவுக்கு முந்தின அதற்க்கு முந்தின தடவை ஊருக்கு போன போது ஒருநாள் டாஸ்மாக் பந்த்"தானது, எங்கள் குடிசையின் இரு ரோட்டின் பக்கமும் ஜன்னல் இருப்பதால் லேப்டாப்பில் உங்ககூட பேஸ்புக்ல விளையாடிகிட்டு இருந்தேனா...


காலையில ஒரு பத்து மணி இருக்கும் அண்ணாச்சி வேகமா தோப்பு பக்கமா அருவாளோடு விறைய, சந்தேகமாக நானும் அருவாளை தூக்கி கொண்டு பின்னாடியே போனேன், சீவப்பேரி ஆளு பயந்து போனாள் [[ஹி ஹி]] அவளும் என் பையனும் பின்னாடி ஓடி வர, "ஏ பிள்ளே நான் அந்தாளு என்ன செய்யப்போறார்னு பாக்கத்தான் போறேன் நீங்க வராதீங்க"ன்னு சொல்லிட்டு போனாலும் என் பையன் நானும் வருவேன்னு அடம்பிடிக்க, அவனையும் மிரட்டிவிட்டு வேகமாக நடந்தேன்.


பொதுவாக கிராமங்களில் ஒரு ஆள் போகும் திசையை வைத்து அருவாள் எதற்கு கையில் இருக்கிறது என்பதை கணித்து விடுவார்கள், தோப்புக்கு போயி மரம் செடிகளை லேசாக கொத்தவும், பண்படுத்தவும் அரவங்கள் கடித்து விடாமலிருக்கவும்தான் அந்த அருவாள் !
அதனால் என்னை யாருமே பொருட்படுத்தவில்லை, இங்கே எங்கள் ஊரில் தோப்பை விளை என்று சொல்லுவோம் ஆகவே இனி விளை  என்றே சொல்கிறேன்.


எங்கள் விளையை அவருக்கு தெரியாமல் உள்ளே புகுந்து, சருகு சத்தம் கூட கேட்கா வண்ணம் அவர் அருகில் போயி ஒளிந்து கொண்டேன்.


அங்கேயும் இங்கேயுமா சுற்றி பார்த்தவர், ஓரிடத்தில் போயி மண்ணை கிளறினார்...ஆஆ...வெளியே வந்தது ஒரு குவாட்டர் பாட்டல் [[ச்சே போன் கொண்டு வந்திருந்தால் போட்டோவே எடுத்துருக்கலாம்]]


மறுபடியும் சுற்றி முற்றி பார்த்தவர், மடியில் இருந்து ஊறுகாய் மட்டையை எடுத்தார், ராவாக மொத்தமும் குடித்து விட்டு ஊறுகாய் மட்டையை நக்கினார், பாட்டலை ஒரு மூலையில் விட்டெறிந்தார்...

சற்று நேரத்தில் என் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்...


"எலேய் மனாசே நீ இங்கே என்னடே பண்ணிகிட்டு இருக்கா ?"


"தா பா தா நா கே போ..." நானு 


"என்னடே இப்பிடி நடுங்குத ?"


"இல்ல இல்ல இந்த பக்கமா ஒரு பாம்பு வந்துச்சா அதை விரட்டிகிட்டு வந்து சத்தங்காட்டாம பம்மி இருக்கேன் ஹி ஹி..."
"என்னாது பாம்பா...? அதை நீ விறட்டுனியா ? யப்போ யப்போ...மனாசே பாம்பை விரட்டிகிட்டு நம்ம விளைக்குள்ளே வந்தானாம் ஹா ஹா ஹா ஹா....[[அவ்வ்வ்வ்]]....வீட்டு வேலிக்குள்ளே பாம்பை பார்த்துட்டு பயந்து மீன் கடைக்கு போன அம்மாவை தேடி ரெண்டு கிலோமீட்டர் அலறி ஓடி வந்தவன்தானே நீயி ஹா ஹா ஹா ஹா...

மாங்கா களவாங்கதானே வந்தே களவாணிப் பயல..... அப்பாகிட்டே கேட்டாதான் பறிச்சு தந்துருப்பாவல்லா [[ஆஹா]] இங்கே வா நானே முறிச்சி தாறேன்"


என்னை விட ஒரு வயது குறைந்தவள், என்னை மிகவும் கிண்டல் பண்ணி விளையாடும் தங்கச்சி, அப்பங்காரர் கள்ள முழி முழிச்சிட்டு இருக்கார் அவ்வவ்...
சரி வந்த வேலை முடிஞ்சிதுன்னு மாங்காயோடு வீடு வந்தாச்சு, வீட்டுல உள்ள மெம்பர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டேன், அன்னைக்கு லீவு அல்லவா ஆகவே அண்ணனும் இருந்தான், நடந்ததை சொன்னதும்...

"என்னை லூசு அரை லூசு முக்கா லூஸு முழு லூசு"ன்னு சொன்னது  பரவாயில்லை, அப்புறம் என்மீதே சந்தேகப்பட்ட அண்ணன், என்னை ஊத சொன்னான் பாருங்க, சீவலபேரி கண்ணில் எரிமலை ..அவ்வ்வ்வ்வ்.


அப்புறம் தோப்புக்கு போகும் போதெல்லாம் அருவாளை எடுத்து மண்ணை கொத்தி பார்க்குறதுதான் வீட்டம்மாவின் வேலையாப்போச்சு...


இதுதான் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுறதோ ?



நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!