Monday, May 30, 2011

மலையாள சேட்டனின் லீலைகள்

நான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உண்மையா வதந்தியா தெரியாது]] அதாவது சவுதியில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய ஒரு மலையாளியின் லக்கேஜை சோதனை செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்,


லக்கேஜினுள் தங்கம் இருப்பதாக கருவி காட்டி குடுக்க, மலையாளியிடம் கேட்டபோது தங்கம் இல்லவே இல்லை என்று சொல்ல, லக்கேஜ் பிரிக்கபட்டது. பிரிச்சு பார்த்தால் தங்கம் இல்லை. சரின்னுட்டு மறுபடியும் பாக்ஸை திரும்ப கட்ட சொல்ல மலையாளியும் திரும்ப கட்டினான்.


மறுபடியும் கருவி சோதனையில் பீப் பீப் சவுண்ட் வர, மறுபடியும் பிரிக்க சொன்னார்கள். மறுபடியும் நன்றாக சோதனை செய்தார்கள். ஒன்றுமே இல்லை. மறுபடியும் பெட்டியை கட்ட சொன்னார்கள். மறுபடியும் கருவி பீப் பீப்.......


மறுபடியும் பெட்டியை அவிழ்க்க சொன்னார்கள், அவிழ்த்து உள்ளே இருந்த பெரிய பெரிய சோப் கட்டிகளை அறுத்து பீஸ் பீசாக்கி சோதனை செய்தும் உஹும் ஒன்றுமே இல்லை. மறுபடியும் பெட்டியை கட்ட சொன்னார்கள், ஹி ஹி மறுபடியும் பீப் பீப்....


இப்பிடி பல முறை சோதனை செய்தும் தங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை [[மலையாளியா கொக்கா]] ஒரு கஷ்டம்ஸ் ஆபீசர் [[நம்ம உணவு ஆபீசர் அல்ல]] மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சார், மலையாளியிடம் விசாரித்தார்.


ஹலோ சேட்டன் உங்க லக்கேஜ்ல கண்டிப்பா தங்கம் இருக்கு ஏன்னா மிஷின் [[அசின் அல்ல]] பொய் சொல்லாது என்று வடிவேலு ரேஞ்சுக்கு அழாத குறையாக கேட்டும் சேட்டன் அசரவில்லை.


பின்பு அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து செட்டனிடம் சொன்னார்கள், சேட்டன் நீ நிச்சயமா தங்கம் கடத்துகிறாய் என்பது நல்லாவே தெரியுது, அதனால எந்த டெக்னிகல அயிட்டத்தை உள்ளே வச்சிருக்குறேன்னு சொன்னா உன்னை விட்டுர்றோம் [[தங்கத்தையும்தான்]] என்று அழ...


உஷாரான சேட்டன், அப்போ கஸ்டம்ஸ் எவரிதிங் கிளியர் பேப்பர்ல கையெழுத்து போட்டு தாருங்கள் என கேட்க, ஆபீசரும் சைன் போட்டு கொடுத்தார். அப்புறமா பெட்டி பக்கம் வந்த சேட்டன், பெட்டியை அவிழ்த்து, பெட்டி கட்டிய பிளாஸ்டிக் கயிறை அறுத்து காட்ட.....உள்ளே பிளாஸ்டிக் கயிறுக்குள் தங்கம் நம்ம எலக்ட்ரிக் ஓயருக்குள் இருக்குமே அப்பிடி இருந்ததாம்...!!!


சரி எப்பிடி பெட்டியை பிரித்து சோதனை செய்யும் போது கருவிக்கு தெரியாம போச்சு...??? அங்கேதான் நிக்குறார் நம்ம சேட்டன்... ஹி ஹி. அதாவது ஒவ்வொரு முறையும் பெட்டியை அவிழ்க்கும் போதும், அந்த பிளாஸ்டிக் கயிறை சேட்டன் அப்பாலிக்கா தூக்கி போட்டுடுவார். பின்னே எப்பிடி கருவிக்கு தெரியுமாம் ஹே ஹே ஹே ஹே பெட்டியை கட்டும் போது மட்டுமே சேட்டன் கயிறை அப்பாலிக்கா இருந்து எடுத்து கட்டுவார், கருவி "ங்கே"....!!!!


டிஸ்கி : இது காதில் கேள்வி பட்டு சுவாரஸ்யமா நண்பர்களுக்குள் பேசிகொண்டிருப்போம்...!!!

டிஸ்கி : நேரில் பார்த்த இன்னும் பல டக்கால்டி'கள் உண்டு, ஒன்னொன்னா சொல்றேன் என்ன...!!!

Sunday, May 29, 2011

எங்கள் பெண்மணிகளின் கண்ணீர்




நான் வளர்க்கும் டேபள் ரோஜா செடி......!!!
மரம்தான் வளர்க்க முடியலை செடியாவது வளர்ப்போம் ம்ஹும்...

பேஸ்புக்'ல நான் டேபிள் ரோஜா செடி படம் போட்டு மேலே சொன்ன கமெண்ட்ஸ் போட்டுருந்தேன். அதுக்கு வந்த கண்ணீர் கமெண்ட்ஸ் என் நெஞ்சை விம்ம வைத்து விட்டதுமல்லாமல், இயலாமையை நினைத்து கூனி குறுகி போனேன்....
கீழே வரும் ஒரு [[பல]] சகோதரியின் கண்ணீரை பாருங்கள்....!!! 

Swathi Swamy 
 இதை ஜப்பான் ரோஜா என்று சொல்வார்கள் எங்கள் ஊரில். மண்ணில் நட்டால் கொடியாக படர்ந்து அடர்ந்து வளரும். பல வர்ணங்களில் இந்த ரோஜாவை யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தேன். கடும் சூரிய ஒளி இதற்கு ஆகாது. அதே போல் கோழியும் இதன் இலைகளை கொத்தி கொத்தி தின்று செடியை மொட்டையாக்கிய பரிதாபமெல்லாம் எனக்கு அனுபவம். அதன் பின் கம்பி வலையால் அதை சுற்றி வேலி போட்டு தடிகள் ஊன்றி கொடியாக படரவிட்டு தந்தார் என் அப்பா. அந்த அயலில் எல்லாரின் வீட்டிலும் என்னுடைய ஜப்பான் ரோஜாவின் துளிர்கள் நடப்பட்ட வரலாறும் உண்டு.. ! :):)



Swathi Swamy ஊரில் எதெது எல்லாம் ஆசை ஆசையாக செய்தோமோ அதையெல்லாம் இங்கு இத்தனை வசதியிருந்தும் செய்ய முடிவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கும்..எனக்கு ஒரே ஒரு காரணம் தான் என்னுடைய ஆன்மா இன்னும் என்னுடய யாழ்ப்பாண வீட்டை விட்டு அமெரிக்காவுக்கு குடிவரவில்லை என்பது மட்டும் தான்.. :(



நாஞ்சில் மனோ செடிகளை இவ்வளவு நேசிக்கிரீங்களா வாவ் சூப்பர்....!!!!



நாஞ்சில் மனோ ‎//என்னுடைய ஆன்மா இன்னும் என்னுடய யாழ்ப்பாண வீட்டை விட்டு அமெரிக்காவுக்கு குடிவரவில்லை என்பது மட்டும் தான்.. :(// கவலை படாதீர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் கண்டிப்பாக வரும்....விடியலும்.....



Vanathy Ravi Oh! now I remember this plant's name. Japan Rose. Thanks, Swathy. Uncle, you r a kind man!



Swathi Swamy 
 என்னுடைய வீட்டு முன் முற்றம் முழுவதும் பூக்களாகவே இருக்கும்..பின் பக்க வளவு மா மரம், பனைமரம், மிளகாய், துளசி, தக்காளிச் செடி என்று இருக்கும். எனக்கும் அப்பாவுக்கும் செடி வளர்ப்பு அப்போது வெறி பிடித்த பொழுது போக்கு. கடைசியாக 1989ல் ஊர் போன போது அந்த வீடும் இல்லை..தரைமட்டமாகிவிட்டது; பூத்துக் குலுங்கிய வளவெல்லாம் புதரும் புல்லும்.. பனைமரங்கள் மொட்டையாக விமானத்தாக்குதலில் பட்டுப் போய்...நல்ல வேளை அதைப் பார்க்காமலே அப்பா இறந்து போனார்.. அவர் ஆசை ஆசையாய் ஒவொரு கல்லாக கட்டிய வீடும் வளவும்...அவருக்கு இன்னொரு பிள்ளை மாதிரி நேசித்தார்,.





Vanathy Ravi Swathy your story sounds like mine too.





நாஞ்சில் மனோ மனசு கலங்க வச்சிட்டேனோ சாரிப்பா......:[





Vanathy Ravi uncle, kannai thodainga. enga smile pannuga... cute





நாஞ்சில் மனோ என் மனசும் கலங்கி போச்சு மக்கா...





Kalpana Rajendran hi swathi sagothari .. ninalvugal valiyaai irupinum sila samayangalil ninavugal pokkisham pontrathu.. nitchayam neengal vazntha vazhvu ungaku virivil kidaikkum .. :))) dont feel .. we are with u .....





Swathi Swamy அதெல்லாம் இல்லை சார்...இது எங்களுக்கு பழகிப் போனது தான்..யாழ்ப்பாண நினைவு கலங்கிப் போக வைத்தாலும் அவை தான் எங்களைப் போன்றோரை இயக்கிக் கொண்டுமிருப்பவை...





Swathi Swamy நன்றி கல்பனா...





Kalpana Rajendran that's spirit..nice .. nice to meet u sago..





Swathi Swamy nice to meet you sis...



டிஸ்கி : என் கண்ணீரால் இந்நிலை மாறுமின், நாளெல்லாம் அழுவேனே.......!!!

டிஸ்கி : மனிதன்தான் கல்லாகி போனான்...!!!
ஆண்டவனே நீயும் கைவிட்டாயோ..???


ஏ வானமே அகன்று போ...
ஏ பூமியே நீ சுழல்வதை நிறுத்து...
ஏ மேகமே நீ பொழிவதை நிறுத்து...
எங்கள் பெண்மணிகளின் 
கண்ணீரே பொழிகிறது ரத்தமாய்...
ஏ கடலே நீ உலர்ந்து போ...
எங்கள் கண்ணின் கண்ணீரால்
உனை நிரப்பி விடுவோம்...
ஏ தென்றலே உன் சுகம் வேண்டாம் எனக்கு 
நீ போய் உனது பண்டகசாலையில்
ஒளிந்து கொள்..
ஏ புயலே பயந்து நடுங்கு 
எம் பெண்மணிகளின்
பெருமூச்சு உன்னை ஒடசெய்யும்...
ஏ சூறாவழியே சுருட்டி கொண்டு ஓடு
எங்கள் இருதயம் 
பெரும் சூறாவளியாய் 
கனன்று கொண்டிருக்கிறது...
ஏ ஆறுகளே உங்கள் 
ஓட்டத்தை நிறுத்துங்கள்
நீங்கள் அருகதை அற்றவர்கள்...
ஏ வனங்களே எரிந்து போங்கள் 
எங்கள் பெண்மணிகளின் 
கண்ணீரை கொண்டு 
உங்கள் அக்கினியை அமர்த்துவோம்...!!!

கண்ணீருடன் நாஞ்சில் மனோ.....

பேஸ்புக் லிங்க் கீழே...

"தக்காளி" என்னை போடா வெண்ணை என்றான்

வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆன ஒருவன், கடவுள்ட்ட போயி ஆண்டவா ஏன் என்னை இப்பிடி சோதிக்குற எனக்கு ஒரு ரெண்டு லட்சரூபாய் பணம் குடு என கேட்க, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டுர்ர்ர்ர் சவுண்டுக்கு அப்புறம் கடவுளும் தோன்றினார்.


கடவுள் அவனிடம் கேட்டார் உனக்கு ரெண்டு லட்சம் பணம் வேணும்னா உன் ரெண்டு கையையும் தா, அஞ்சி லட்சம் வேணும்னா உன் ரெண்டு காலையும் தா, ஒரு கோடி பணம் வேணும்னா உன் ரெண்டு கண்ணையும் தா, அஞ்சி கோடி பணம் வேணும்னா உன் மூளையை தா, 


பத்து கோடி பணம் வேணும்னா உன் நாக்கை தா, இருவது கோடி பணம் வேணும்னா உன் கிட்னியை தா, முப்பது கோடி பணம் வேணும்னா உன் செவியை தா, என அடுக்கி கொண்டே போன கடவுளை பார்த்து இவன் கேட்டான், 


சாமீ நான் அம்புட்டு விலை உயர்ந்தவனா என கேட்டு ஆச்சர்யப்பட்டான்...!!! கடவுள் சொன்னார், போடா வெண்ணை போய் ஒழுங்கா சோம்பேறியா சுத்தாம வேலையை பாரு'ன்னு [[சிபி'யை நினைவில் கொண்டு இதை படிக்கவும் ராஸ்கல் பிட்டு படம் பார்த்துட்டு ஒழுங்கா வேலைக்கு போகமாட்டேங்குறான் மூதேவி]]


இன்னொரு தருதலையும் [[தக்காளி அல்ல]] கோவிலுக்கு ஓடினான் பஞ்சமடைந்து, கடவுளே கையிலே அஞ்சி பைசா இல்லை எனக்கு லாட்டரி அடிக்க செய் என்று மனமுருகி வேண்டினான், 


அடுத்தமுரையும் ஓடினான் கோவிலுக்கு, ஆண்டவா தாங்க முடியலை பிட்டு படம் பார்க்க கூட கையில காசு இல்லை ஆகவே எனக்கு லாட்டரி அடிக்க செய் என்று பணிந்து வேண்டினான். 


அடுத்தும் ஓடினான் கடவுளே தாங்க முடியலை ஏன் பொண்டாட்டி பணம் கொண்டு வந்தால்தான் சாப்பாடு தருவேன்னு சொல்லி என்னை விரட்டுகிறாள், இப்பவாவது ஒரு லாட்டரி அடிக்க செய்யுன்னு வேண்டினான்.


இனியும் ஓடினான் கோவிலுக்கு ஐயோ ஐயோ ஆண்டவா என் பொண்டாட்டி பிள்ளைகளெல்லாம் பட்டினி கிடந்தது பசியால் வாடுது கடவுளே என்னால் சாவுரதை தவிர வேறே வழியே இல்லை இப்பவாவது லாட்டரி அடிக்க செய் என கதறினான்.


சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என சவுண்ட் எஃபக்ட்டோடு கடவுள் தோன்றினார், தோன்றிவிட்டு சொன்னார், எலேய் நாதாரி லாட்டரி அடிக்கணும் லாட்டரி அடிக்கணும்னு வேண்டிக்கிறியே, போடா வெண்ணை போயி முதல்ல லாட்டரி சீட்டு எடுடா மூதேவி, லாட்டரி சீட்டு எடுக்காமலே வந்து லாட்டரி அடிக்கணும் அடிக்கணும்னு லந்து பண்ணுறியே ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி என திட்டி அனுப்பினார்.


நீதி : செய்வதை திருந்த செய் ஹி ஹி ஹி ஹி எப்பூடி....!!!

டிஸ்கி : என்னாது தலைப்பா....?? அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதுதான் இப்போதைய டிரென்ட்டாம், மூதேவி சிபி சொன்னான் ஹி ஹி அதான்.....

Saturday, May 28, 2011

நொந்து போனோர் சங்கத்தின் புலம்பல்ஸ்

௧ : நான் ரேசன் கடைக்கு போற அன்னிக்குத்தான் அங்கே கூட்டம் அதிகமா இருக்கு...!!!


௨ : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!


௩ : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க...!!!


௪ : நான் வாட்ச் கட்டுற அன்னிக்குத்தான் வாட்ச் உயிரை விடுது...!!!


௫ : பந்தி வெளம்புரவன் என் பக்கத்துல வரும் போதுதான் பாயாசம் தீர்ந்து போகுது...!!!


௭ : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!


௭ : அவசரமா பாஸ் அழைப்பு வரும் போதுதான், அவர் சொல்லும் காரியங்களை எழுத பென் எடுத்தால் அதில் மை இல்ல...!!!


௮ : அவசரமா வீட்டம்மா கூப்பிட்டு உங்க கூட பேச ஆசையா இருக்குன்னு சொல்லும் போது, எனது போனில் கிரெடிட் தீர்ந்திருக்கும்...[[அப்புறம் என்ன ஆப்பை கரண்டி சத்தம்தான்]]

௯ : பசியோடு சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தான், பாஸ் போன் பண்றான்...!!!


௰ : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!


௧௧ : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!


௧௨ : நான் ஏர்போர்ட் வார அன்னிக்குத்தான் டாக்சி ஆட்டோ ஸ்ட்ரைக் நடக்குது...!!!


௧௩ : அவசரமா ஒரு இடத்துக்கு பஸ்ல [[பேருந்து]] போகும் போதுதான் டிராபிக் ஜாம் ஆகி லேட்டாகுது...!!!


௧௪ : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!


௧௫ : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!


டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???

டிஸ்கி : இப்பிடி பிரச்சினைகள் இருப்பவர்கள் "தக்காளி"யை அணுகவும் ஸ்ஸ்ஸ் அப்பாடா....




Friday, May 27, 2011

கொலைவெறியோடு வாராம்லேய் மக்கா

1 : சுவத்துல ஆணி அடிக்கலாம், ஆணியில சுவத்தை அடிக்க முடியுமா...???


2 ; வீரியமுள்ள  விதை முளைக்காமல் அடங்காது...!!!


3 : பொற்கொல்லனுக்கு ராக்கெட் நுணுக்கம் தெரியாது...!!!


4 : மரணம் என்பது ரயில் பிரயாணம் மாதிரி, அவரவர் ஸ்டேசன் வந்தா இறங்கியே ஆகணும். மற்றவர்கள் அவரவர் ஸ்டேசன் நோக்கி தொடர்ந்து போயிகிட்டே இருக்கணும்...!!!


5 : அண்ணே என சொன்னால் உதடுகள் ஒட்டாது, தம்பி என்றால் உதடுகள் ஒட்டும்...!!! [[ம்ஹும் நாங்களும் சொல்லுவோம்ல]]


6 : அக்கா என்று சொன்னால் உதடு ஒட்டாது, தமக்கை என்று சொன்னால் உதடு ஒட்டுதே...!!! [[சரி சரி விடுங்க விடுங்க]]



7 : ஜன்னலை திறந்தாலும் காற்று வரும் [[சத்தியமா உள்குத்து இல்லை]]


8 : நான்கு செல்போனும், நான்கு பாக்கெட் சிகரெட்டும் கையில் இருந்தால்தான், அரபிகள் தங்களுக்குள் தங்களை மதிப்பார்கள். இது லேட்டஸ் டிரன்ட்....!!! [[போங்கடா]]


9 : ஃபிகரை நம்பாதே நம்பி குடைசாய்ந்து கதறாதே...!!!


10 : கடமை கண்ணியம் கட்டுபாடு என சொல்சிலம்பாடியவர்கள் எல்லாம் இப்போது மவுன விரதம்....!!!


11 : சொல்லால் அடிக்கும் சுந்தரி, செருப்பாலும் அடிப்பாள் ஜாக்குரதை...!!!


12 : பொண்டாட்டி பேச்சிக்கு மறு பேச்சு பேசாம இருக்குறவன் எல்லாம் சீக்கிரம் பணக்காரன் ஆகிவிடுரானே.....!!!????  ஒரு நண்பனின் ஆதங்கம்...!!


13 : ஆட்டை  கடிச்சி மாட்டை கடிச்சி கடைசியில மனுஷனையே.....நோ நோ நோ நோ இப்போல்லாம் டைரக்டா மனுஷனையே கடிக்க ஆரம்பிச்சாச்சு...!!!


14 : அப்பா என்று கூப்பிடவே பத்துமுறையாவது ரிகர்சல் பார்க்கும் எனக்கு முன்பாக, என் எட்டு வயது மகள் சொல்கிறாள் தன் தோழியிடம் எங்க டாடிக்கு அறிவே இல்லையென...!!! [[உளறிட்டேனா]]


15 : நீ எத்தனை கோடி ரூவாயில் வாங்கினாலும் செருப்பு என்னைக்கும் காலில்தான், தலையில் வைக்க முடியாது...!!!


16 : எல்லையில் சீன ராணுவம் ரகசியமாக என்னெல்லாமோ செஞ்சிட்டு இருக்கு, நம்ம ராணுவ மந்திரி அண்டணி சேட்டன் மொட்டை மாடியில உக்காந்து வானத்தை பார்த்து இன்னமும் பேசிட்டு இருக்காராம், "என்கிட்டே அப்பிடி என்னதான் திறமை இருக்கு ராணுவ அமைச்சர் ஆகுறதுக்கு"ன்னு ம்ஹும் இவர் அதை கண்டுபிடிக்கும் முன் ஆட்சியும் முடிஞ்சிரும்...!!!


17 : ஒவ்வொரு குவாட்டர் துளியிலும் குடிமகனின் [[குடிப்பவன்]] பெயர் எழுதபட்டிருக்கிறது...!!!


18 : வேலி இருந்தா பாம்பும் இருக்கத்தான் செய்யும், எவ்வவோ நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ளும் தீமை இருக்கத்தான் செய்யும்...!!!


19 : ஒரே சிகரெட்டை நான்குபேர் அடித்தால் அதற்க்கு பெயர் நட்பு, அதே சிகரெட்டை நான்கு பேர் ஜெயிலில் அடித்தால் அதன் பெயரென்ன..??


20 : மூன்றெழுத்தில் ஒரு கவிதை சொல்லு...??? 
"அம்மா" [[எப்பமோ விகடனிலோ, குமுதத்திலோ வாசிச்ச ஞாபகம்...!!!


டிஸ்கி : இவர் எப்பவும் ஒற்றை விரல் நீட்டி பேசும் அர்த்தமென்ன...??? டவுட்டு...



நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!