Sunday, December 29, 2013

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......

கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

மறுபடியும் வீட்டுக்கு வந்து, பெட்டியை பிரித்து லாப்டாப் மட்டும் எடுத்துக்கொண்டு, நண்பனின் டிரைவரை அழைத்து நாகர்கோவில் போகணும் என்றதும் உடனே கார் கொண்டு வந்துவிட்டான்.

மறுபடியும் விஜயனுக்கு போன் செய்ததும், ஆபீசர் மற்றும் நண்பர்கள் யாவரும் நாகர்கோவில் நெருங்கி கொண்டிருப்பதாக சொன்னார்.


நான் விஜயன் ஆபீஸ் பக்கம் போயி கொஞ்சம் அளவளாவிக் கொண்டிருக்கும் போதே ஆபீசரும் நண்பன் சுதன் மற்றும் கௌதம், செட்டியார் என்னையும் விஜயனையும் அலாக்காக தூக்கி, திருவனந்தபுரம் நோக்கி விரைந்தது கார்....

பல விஷயங்கள் ஜாலியாக பேசிக்கொண்டே சென்றோம், சுதனை போன தடவை பாவநாசம் போக சந்தித்தபோது மிக மிக அமைதியாக இருந்தார், நானும் சுதன் டைப் அப்பிடிபோல என்று நினைத்தது, இப்போதான் தெரிஞ்சுது அவர் பேச்சில் சரவெடி என்று.

என்னமா பேசுறார், ஒருவேளை கல்யாணம் ஆனப்பிறகு பேசக் கத்துகிட்டாரோ ?

கார் வெகுவாக சீறிக்கொண்டிருந்தது, ஆபீசர் முன்பு வேலைப் பார்த்த குழித்துறை அலுவலகம் சென்று சாப்பிட்டு விட்டு அங்கிருந்து திருவனந்தபுரம் போகலாம் என்று ஏற்கனவே செட் பண்ணி வச்சிட்டுதான் வந்துருக்காங்க.

ஆபீஸ் இருந்த இடம் சுவர்க்கம் [[அலுவலகம்]] என்றால் அது மிகையாகாது சுற்றி இருந்த மரங்கள் மேடு பள்ளங்கள் கண்களை வெகுவாக கவர்ந்து குளிமையாக இருந்தன, ஆபீசர் அலுவலகத்துக்குள் போனதும் அங்கே எல்லாரும் பரபரப்பானார்கள்.
பிசினஸ்  மேன்கள்,பல ஆபீசர்கள் என யாவரையும் ஆபீசர் அறிமுகப்படுத்தினார், சாப்பாடுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது, சாப்பாடு சுதன் ஏற்பாடுன்னு ஆபீசர் சொன்னார், அருமையான சாப்பாடு, கொஞ்சமாக சாப்பிட்டாலும் ருசியாக இருந்தது.
[[ஆபீசர்கள், தொழிலதிபர்கள் அறிமுகம்]]

ஆபீசர் வழக்கம் போல மெதுவாக அமர்ந்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார், நாங்கள் யாவரும் சாப்பாட்டு அறையில் இருந்து வெளியே வந்த பிறகும் ஆபீசர் வெளியே வரவில்லை, தனியாக ஏதும் கவனித்தார்களான்னு ஒரு சின்ன சந்தேகம் ...ஹி ஹி.

அப்புறம் யாவரிடமும் விடை பெற்று ஆபீசரை வழக்கமாக கிண்டல் பண்ணிக்கொண்டே  வந்தோம்,இன்றைக்கு ஏதாவது ஆடு என்னை வெட்டுங்கய்யான்னு வரும்னு பார்த்தால், அடுத்த நாள் காலைவரை ஒரு ஆடும் சிக்கவில்லை.
[[சிக்கன், மீன் என்று செம கலக்கல் காக்டெயில்]]

ஆனால் கார் மட்டும் நாங்க போகவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்திற்கு போகாமல் எங்கேயோ சுற்றுவது போல ஒரு டவுட் வந்துட்டே இருந்துச்சு....

டிஸ்கி : உலகத்துலேயே திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் வரை எலும்பு முறிவு ஆஸ்பத்திரியின் எண்ணிக்கை அறுபத்து நான்கு, இது நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த தகவல், இப்போ எத்தனைன்னு தெரியாது....!

சொல்றேன்........

Wednesday, December 18, 2013

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....!

வாழ்க்கையில் நாம் நினைப்பது சில நடக்காது என்பது மறுபடியும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது என் வாழ்கையில்...!


மும்பையில் இருந்து [[ஏன் பஹ்ரைனில் இருந்தும்]] ஆசையாசையாக நண்பர்களையும், என் அம்மாவையும் சந்திக்க சென்ற எனக்கு ஏமாற்றமாகவே திரும்ப வேண்டிய சூழ்நிலை.
[[எங்கள் ஊர் மருந்துவாழ் மலை]]

இருந்தாலும் சில உயிர் நண்பர்களை சந்தித்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தாலும், பார்க்காமல் இருந்த நண்பர்களை பார்க்க முடியாமல் திரும்பியது, நான் கூட ஏன் ஆபீசர், விஜயன் கூட எதிர்பார்க்காத ஒன்று என்றால் அது மிகையில்லை.
[[எனது பால்ய நண்பன் ராஜகுமார் மருந்துவாழ் மலை மற்றும் பொத்தயடி டாஸ்மாக் கடை அருகில்]]

மும்பை டூ நாகர்கோவில் டூ நெல்லை டூ மேக்கரை டூ சென்னை டூ மும்பை என்று இருந்த புரோகிராம், காலையில் விரைவாக எழும்பி பெட்டி கட்டி ரெடியாக வைத்துவிட்டு, டிபன் சாப்பிட்டு, என்னடா இன்னும் ஆபீசர் போன் வரலையே என்று காத்திருந்தும் ஆபீசர் போன் வரவில்லை.

விஜயனுக்கு போன் செய்தேன், இதோ இப்போ ரெடியாகி விடும் ரெடியாக இருங்கள் என்றார், நானும் உற்சாகமாக அம்மாவிடம் பிளாக் காபி போட்டு தாம்மா என்று வாசல் படியில் உட்கார்ந்து இருந்தேன்.

விஜயன் போன்.....

"மனோ, ஆபீசர் போன் செய்தாரா ?"

"இல்லையே என்னாச்சு ?"

"மேக்கரையில் புக் செய்து வைத்திருந்த ரூம், அதில் தங்கி இருந்தவர்கள் இன்னும் ரூமை காலி செய்யவில்லையாம்"

"ம்ம்ம்ம்"
[[நம்ம ஆபீசர் சங்கரலிங்கம்]]

"இன்னும் அதற்காகத்தான் ஆபீசர் வெயிட் செய்துட்டு இருக்கார் நீங்களும் ஒரு ஒன் ஹவர் வெயிட் பண்ணுங்க"

"ஓகே"

எப்படியும் ரெடியாகி விடும் என்று நினைத்து மறுபடியும் ஒரு முறை பெட்டியை செக் செய்து பார்த்துக் கொண்டேன்.

கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் விஜயன் போன்..."மனோ, மேக்கரையில் ரூம் கிடைக்கவில்லை அதனால் திருவனந்தபுரம் போகலாம் என்று சுதன் ஆபீசரிடம் ஐடியா சொல்லி இருக்கார் இருந்தாலும் அவர்கள் கிளம்பும் போது சொல்கிறேன்" என்றார்

அப்பவே பொடீர்னு மனசுக்குள்ளே ஒரு சத்தம்....

நண்பன் ராஜகுமாரை அழைத்து, "வாய்யா விஜயனிடம் இருந்து போன் வரும் வரை எங்கேயாவது சுற்றலாம்" என்றேன்

பொத்தயடி மலையடிவாரம் போகும் போது விஜயனின் போன்..."மனோ, ஆபீசரும், சுதனும், செட்டியார் கவுதமும் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள், திருவனந்தபுரம் போவதற்கு" என்றார்

என்னடா வடக்கே நோக்கி போகவேண்டிய ஆளுங்க [[வண்டி]]மேற்கே நோக்கி வருகிறார்களே என்று நினைத்து....
[[தம்பானூர் [[திருவனந்தபுரம்]] நோக்கி விரையும் கார்]]

ராஜகுமாரிடம் "எட்றா வண்டியை டாஸ்மாக் நோக்கி" என்றேன்......

தொடரும்.....

டிஸ்கி : சென்னை நண்பர்கள் மன்னிச்சு........ மன்னிச்சு...... மன்னிச்சு.... உங்களை இந்த தடவையும் பார்க்க எனக்கு "கொடுப்பினை இல்லாமல் போனது" என்பதுதான் உண்மை.


Sunday, December 8, 2013

பலவந்தமாக சமயலறையில் மாட்டின பதிவர் !

காலையில்....

"பாப்பாவை நான் ஸ்கூல் கொண்டு விட்டுட்டு வரட்டுமா பிள்ளே ?"

"ஒன்னும் வேண்டாம் ஸ்கூல் போற வழியில்தான் உங்க "குண்டா" நண்பனுங்க நின்னுட்டு இருக்கானுக, உங்களைக் கண்டால் காலையிலேயே தூக்கிட்டுப் போயிருவானுக, நானே பாப்பாவை விட்டுட்டு வாறேன்"

"அவ்வ்வ்வவ்"

"என்ன அவ்வ்வ்வவ்?"

"இல்ல வடாபாவ் சாப்புட்டுட்டு வரலாம்னு நினைச்சேன்"
"அதெல்லாம் வெளியில சாப்பிடப்டாது"

"கிழிஞ்சிது போ" மனசுக்குள்ளே

"ஆங்...மனசுக்குள்ளே என்ன சொன்னீங்கன்னு எனக்கு நல்லாப் புரியுது"

"அவ்வ்வ்வவ் இது வேறயா ?"

"சரி நான் பாப்பாவை விட்டுட்டு வாரேன்"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

சரி வடாபாவ் வாங்கிட்டு வருவாங்கன்னு நினைச்சா......வெறும் பாவ் மட்டும் வருது....
"என்ன இது ?"

"ஆங் பாவ்.....பட்டோட்டோ பாஜி பண்ணித் தாறேன் பாவ் கூட சாப்பிடுங்க, அப்புறம் எழும்புங்க, அந்த ரெண்டு பட்டட்டோவை எடுத்து நறுக்கித் தாங்க சீக்கிரம்"

"வசமா மாட்டிகிட்டியோ மனோ ?" மனசுக்குள்ளே

"அதான் அப்பவே சொன்னேம்ல நீங்க மனசுல என்ன நினைகிறீங்கன்னு"

"சீக்கிரம் பட்டட்டோ நறுக்கிட்டு, இந்த ரெண்டு வெங்காயத்தை நறுக்குங்க"

"இதெல்லாம் அநியாயம் இல்லியா?"

"மனசுக்குள்ளே அது இதுன்னு நினைக்காம சீக்கிரம் வெட்டுங்க"

"யாரை ?"

"அருவா காலுக்கு கீழேதான் இருக்கு வேணுமா?"

"ஏன் ஏன் இப்பிடி கொலைவெறியா இருக்கே ? நறுக்குன்னா நறுக்குறேன், வேட்டுன்னா ச்சே ச்சீ வெட்டுன்னா வெட்டுறேன், இன்னும் என்னவெல்லாம் நறுக்கணும் தா...."

"நாலு பச்சைமிளகாய் எடுத்து நறுக்குங்க, அப்புறம் நாலஞ்சி பல் பூண்டு எடுத்து, கொஞ்சூண்டு இஞ்சி எடுத்து நல்லா இந்த கப்புல போட்டு இடிச்சு தாங்க"

"அவ்வ்வ்வ்வ்வ்வ் ஊருக்கு டிக்கெட் எடுத்திட்டியாலேய் தம்பி..."

அவனும் என் அவஸ்தை புரிந்தவனாக [[சிரிச்சுட்டே இருக்கான் ராஸ்கல்]] "ஆமா டாடி அது நேற்றைக்கே எடுத்தாச்சு"

"எலேய் நீ சும்மா இரு, நீங்க இங்கே வாங்க அந்த சட்டியை அடுப்புல தூக்கி வச்சி அடுப்பை பத்த வையுங்க"
"நீ எனக்கு எம்புட்டு செல்லம் தெரியுமா ?" ஹி ஹி...

"மஸ்கா மாலீஸ் ஒன்னும் வேண்டாம், கொஞ்சூண்டு எண்ணெய் சட்டியில ஊத்துங்க, கொஞ்சூண்டு கடுகு அள்ளிப் போடுங்க...."

"அய்யய்யோ அம்மா ஆத்தா....கடுகு வெடிச்சி சிதறுதே"

"ம்ஹும்....எனக்கு இத்தனை நாள் எப்பிடி இருந்திருக்கும், ம்ம்ம்ம்ம் அந்த கறிவேப்பிலை எடுத்து சட்டியில போடுங்க"

"அய்யய்யோ சட சட'ன்னு பொரிஞ்சி இப்பிடி பயங்காட்டுதே...?"

"அந்த வெட்டுன வெங்காயத்தை உள்ளே அள்ளிப் போடுங்க, போட்டு கிண்டி"கிட்டே இருங்க.."

"சென்னை போனா கண்டிப்பா கிண்டி போவேன்"
"நான் கரண்டி எடுத்து கிண்டி"ன்னு சொன்னேன், அப்புறம் அந்த இடிச்சி வச்ச இஞ்சிப்பூண்டு எடுத்து போட்டு வதக்குங்க"

"நீதான் இப்போ என்னை வதக்கிட்டு இருக்கே"

"என்ன ?"

"ஹி ஹி" காலுக்கடியில் அருவாள் சாக்கிரத மனோ....

"அப்புறம் அந்த அவித்த மேஸ் பட்டட்டோ எடுத்து உள்ளே போட்டு நல்லா கிண்டுங்க அப்பிடியே கொஞ்சூண்டு மஞ்சள் போடி.........ச்சே ச்சீ மஞ்சள் பொடி....."

"நான்தான்னா உனக்குமா டங் சிலிப் ஆகுது ?"

"ஆங் உங்களுக்கு வாக்கப்பட்டுருக்கேனே....சரி....இனி ஏதாவது சட்டியில போடனுமான்னு "நல்லா" யோசிச்சு சொல்லுங்கப் பார்ப்போம் ?"

"ப்பூஊஊஊ.........உப்பு போடனும், இது கூட எனக்குத் தெரியாதா என்ன ?"

"ச்சே இன்ட்ரஸ்டா போயிகிட்டு இருந்தது இப்பிடி சப்புன்னு போயிறிச்சே...?"
ஆஹா.....இதை சொல்லைன்னா பூரிக்கட்டை அடி குடுக்கலாம்னு பிளான் பண்ணி இருப்பாயிங்க போல....

ஆக...பட்டட்டோ பாஜி ரெடி, கீழே இறக்கி வச்சி...ஒரு பாத்திரத்தில் போட்டு, பாவ் கையிலெடுத்து பியித்து என் வாயில் ஊட்டி விட்டாள் செல்லம்....சுவர்க்கம் பூமியில் தெரிந்தது எனக்கு....!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் "மனோ"கரா...?

Sunday, December 1, 2013

நண்பனின் நண்பனுக்கு அசத்தலாக உதவிய பதிவுலக சக்கரவர்த்தி !

கீழே உள்ள ஸ்கூல் பையன் லிங்கை வாசித்து விட்டு அப்புறமா கீழே வாசிக்கவும்.


ஷாபி சேட்டன் பஹ்ரைன் வந்துவிட்டதாக அறிந்த நான், அவருக்கு போன் பண்ணவில்லை காரணம் அவர் லீவுக்கு போயிருந்த நாட்களுக்கான பணி சுமைகளை தீர்த்து முடிக்கும் பிஸி என்னவென்று எனக்குத் தெரியும் அதனால் அவரை தொந்தரவு செய்ய இயலவில்லை.
ஒரு பிரச்சினை காரணமாக ஜி எம்"மை காணப் போன எனக்கு, அவர் இல்லாததால் முதலாளி ஆபீசில் இருந்தபடியால் முதலாளி செகரட்டரி "மனோஜ் அந்த ஆளை பார்ப்பதை விட முதலாளி இருக்கிறார் அவரைப் பார்த்து செல்" என என்னை சோபாவில் அமரவைக்க...

கொஞ்ச நேரம் கழித்து முதலாளி ஆபீசில் இருந்து திடீரென வெளியே வந்தது ஷாபி சேட்டன், என்னைப் பார்த்ததும் கட்டி அணைத்துக் கொண்டு, கரம் பற்றினார், பயங்கர பிஸி கையில் மூன்று போன்கள், மூன்றுமே ரிங்காகிக் கொண்டிருக்கிறது பேசக்கூட நேரமில்லாமல் பேசினார்.

மனோஜ்.....உன் நண்பன் செய்த உதவியை என் வாழ் நாட்கள் முழுவதும் மறக்க மாட்டேன், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல சென்னையில் இருந்தேன், உன் நண்பன் ஸ்கூல் பையன்தான் எனக்கு கண்ணாக இருந்தார், மிகவும் நல்ல குணமும் நல்ல மனசும் நிறைந்தவர் உன் நண்பன். [[பிடித்த கையை விடவே இல்லை]]

படபடவென்று பேசினார், செகரட்டரி மேடம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார், கண் ஆபரேஷன் என்னாயிற்று என்று கேட்டதற்கு, ஆபரேஷன் செய்ய வயது பத்தாது என்று பெங்களூரில் டாக்டர் சொல்லிவிட்டதாக சொன்னார்.

முன் பின் தெரியாத ஒரு நண்பன், அவன் வீட்டிற்கே என் குடும்பத்தை அழைத்து விருந்து வைத்தான் என்றால் ? ஒ மை காட்....நான் கொடுத்து வைத்தவன்...தமிழன் விருந்தோம்பல் பற்றி படித்து இருக்கிறேன், ஆனால் நேரில் இப்போதுதான் பார்கிறேன், இதே கேரளா என்றால் முன் பின் தெரியாதவனை அவன் இருக்கும் தெரு பக்கம் கூட கூட்டிட்டு போகமாட்டான்...!

ரொம்ப நன்றி மனோஜ்.....ஸ்கூல் பையனுக்கும் அவர் குடும்பத்திற்கும் எனது நன்றிகளை சொல்லிவிடு, இனி சென்னை போனால் உன் நண்பர்களை பார்க்காமல் திரும்ப மாட்டேன் என்று கண்ணில் கண்ணீர் மல்க கூறினார், இன்னும் பிடித்த கையை விடவே இல்லை.

அவர் பேசிய ஒவ்வொரு  பேச்சிக்குமிடையில் அவரின் கரத்தின் இறுக்கம் எனக்கு பல அர்த்தங்களை புரிய வைத்துக் கொண்டிருந்தது, நண்பன் உதவிய உதவி எப்படி என்று அவர் பேசியதை விட, கரம் பற்றலை வைத்து நன்றாக உணர்ந்து கொண்டேன்.

கடைசியாக அவர் என்னிடம் கேட்டது "சென்னை ரொம்ப அழகா இருக்குல்ல ?"

"அப்பிடியா நான் பார்த்ததில்லை அங்கே போனதே இல்லை சேட்டா"

கிண்டல் பண்றானோன்னு நினைச்சுட்டே "என்ன நீ பார்த்ததில்லையா ?"

"நான் மும்பைவாசின்னு உங்களுக்கு தெரியும்தானே ? அதனால கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி'யோடு சரி, இப்போ ஆபீசர் நண்பராக கிடைத்தமையால் நெல்லையையும் சுற்றி பார்த்து வருகிறேன் அதோடு சரி, முடிந்தால் இம்முறை நண்பர்களை சந்திக்க போகவேண்டும்" என்றேன் ஆச்சர்யமாக பார்த்து சென்றார்.

ஸ்கூல் பையனுக்கும் அவர் குடும்பத்துக்கும், உதவிய நண்பர்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை சொல்லி வணங்குகிறேன்....

பதிவுலகம் எனும் ஒற்றை சொல் மூலம் நண்பர்களை பெற்ற நான் பாக்கியம் நிறைந்தவன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!

ஷாபி சேட்டனை சந்தித்தபின் பதிவு எழுதலாம் என்று இருந்தேன் ஆனாலும் சற்று தாமதமாகி விட்டது.

Tuesday, November 26, 2013

ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம் தொடர்....


இம்முறை டிஸ்கோவில் தகராறு செய்து செக்யூரிட்டிகளால் தாக்கப்பட்டு நாட்டாமை ரூமுக்கு கொண்டு வரப்பட்டு, என்னைக் கண்டதும் வெலவெலத்துப் போனான், ஏற்கனவே பூசை கிட்டியதால் உடனே அவனை பிளாக் லிஸ்ட் செய்து வெளிய அனுப்பி, ரிஷப்சனில் அவன் போட்டோ ஒட்டி வைத்துவிட்டேன்.
மறுபடியும் ஒரு வாரம் கழித்து வந்தவனை, எம்புட்டோ கெஞ்சி கேட்டும் ரூம் கொடுக்கவே இல்லை, உடனடியாக வெளியேற்றப் பட்டான்.

கொஞ்சநாள் கழித்து இரண்டு ரூம்கள் ஆன்லைனில் புக் செய்யப்படுகிறது, அன்று எனக்கு லீவு வேற, இவனும் அவளும், மற்றும் இரண்டு நண்பர்களும் வந்து நிற்க, பதறிப்போன ரிஷப்சனிஷ்ட், புக்கிங் என்பதால் டிராவல் ஏஜென்சியில் ஹோட்டல் பெயர் டேமேஜ் ஆகிறக்கூடாது என்பதற்காக இரண்டு ரூம் கொடுத்து விட்டாள். இவனுக்கும் பெண்ணுக்கும் ஒரு ரூம், மற்ற நண்பர்களுக்கு ஒரு ரூம்.
அன்று முழுவதும் சரக்கடித்து விட்டு டிஸ்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான், அலம்பலும் ஓவராக இருந்துள்ளது.

அடுத்த நாள் நான் டியூட்டியில் இருக்கும் போது, அந்த பெண் கீழே இறங்கி வந்து என்னை எங்கே என்று விசாரிக்க, நான் வெளியே வந்ததும் இரண்டு கன்னத்திலும் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் கொடுத்தாள் [[இது அரபிகள் ஸ்டைல், ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் பிரியமானவர்களுக்கு இப்படி முத்தம் கொடுப்பது வழக்கமே, இது வளைகுடா நாடுகளில் வசிப்போருக்கு தெரியும்]] மனதில் கடுப்பாக இருந்தாலும், வேற வழி இல்லை, மன்னிப்பு கேட்டாள். காபி ஷாப் போயி சரக்கடித்துவிட்டு ரூமுக்கு போய் விட்டாள்.
அப்புறம்தாம்ய்யா அலும்பு ஆரம்பிச்சுது...

திடீரென போன் வர, உடனே என்னை ரூமுக்கு வரும்படி அழைத்தாள், எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சுது, மனோ இன்னைக்கு நீ செத்தடே'ன்னு மனசு சொல்லுது, ஆனாலும் ஒரு செக்கியூரிட்டியை கூட்டிக்கொண்டு ஓடினேன் அங்கே.

ரூம் பெல் அடித்ததும் ஓடி வந்து கதவை திறந்தவள் என் கூட நிற்கும் காவலாளியை முறைத்து விட்டு, என் கையை பிடித்து உள்ளே இழுக்க நான் காவலாளி கையை சேர்த்தே பிடித்து இழுத்து சென்றேன்.
அங்கே அந்த அரபி பேச்சு மூச்சு இல்லாம கிடந்தான், "ஐய்யய்யோ என் மாப்பிளை செத்து போனான் செத்து போனான்" என்று அவள் அலற....நான் கிடுகிடுன்னு நடுங்க....வெளிக்காட்டிக்காமல் அவன் நெஞ்சில் கைவைத்து நாலு அமுக்கு அமுக்க...ஜெர்க் ஆனவன் போல மூச்சு வந்தது.

ரெண்டும் மூக்கு முட்ட சரக்கில்....

டேக் கேர் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் [[ஓடிவிட்டேன்]] அடுத்த அரைமணி நேரத்தில் அடுத்த ரூமில் இருந்து போன்....அவளேதான் "உடனே ரூமுக்கு வரவும்" [[ஆண்டவா ]]

மறுபடியும் அடுத்த ரூமுக்கு முன்பு போல போனேன், அங்கே அந்த மற்ற இரண்டு நண்பர்களுடனும் சேர்ந்து, "பொல்லாத" ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள், என்னைப் பார்த்ததும் நீயும் வந்து ஆடு என்று பிடித்து இழுக்க...நான் மறுத்துவிட்டு...

"எதுக்கு என்னைக் கூப்பிட்டாய் ?"

"என் மாப்பிளை செத்துட்டானா உயிரோடே இருக்கானா போயி பார்த்து சொல்லேன்" அவ்வ்வ்வ்வ்....

" போடீங்..." என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்.
மறுபடியும் போன்....

அலறுகிறாள் ஓடிவா ஓடிவா என்று, மறுபடியும் அவள் ரூமுக்கு ஓடிப்போயி கதவைத்திறந்தால், அந்த இரண்டு நண்பர்களும் அவளை நிர்வாணமாக்கி நாசம் செய்து கொண்டிருக்க...அவள் மாப்பிளை என்பவன் சரக்கில் மல்லாந்து கிடக்க...

ரேப் செய்ய எத்தனித்தவர்களும் நல்ல மப்பு அவளும் நல்ல மப்பு, ஸ்லோ மோஷனில் எல்லாம் நடக்குது அங்கே, அதிரடியாக செக்கியூரிட்டியும் நானுமாக நாலு சாத்து சாத்தி, அரபிகள் ரெண்டு பேரையும் ரூமில் கொண்டுபோய் தள்ளினோம்.

அவள் உடலெங்கும் நகமும், பல்லும் பட்ட தடங்கல்....திரும்பி இவள் ரூமுக்குள் வந்து பார்க்கும்போது அப்படியே நிர்வாணமாக மட்டையாகிப் போனாள், ஒரு துணியை எடுத்து போர்த்தி விட்டு டோரை லாக் செய்துவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த நாள் அவளைப் பார்க்கும் போது கிழிந்த புது துணி போல கந்தலாகி இருந்தாள், என்னைப் பார்த்ததும் அதே முத்தங்கள்...மனசு ரணமாகிப் போனது எனக்கு "நேற்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு "

"ஒ நல்லா தெரியுமே..."

"என்னத் தெரியும் ?"

"என் ரூமில் வந்து அவர்கள் என்னைப் பலவந்தப் படுத்துனதும் நீ வந்து நாலு அப்பு அப்பி அவனுகளை இழுத்துப் போனதையும், எனக்கு போர்த்தி விட்டதும் தெரியுமே "

"உன் வீட்டய்யாகிட்டே சொன்னியா ?"

"அவன் கெடக்கான் குடிகாரப்பய"

"அப்போ நீ ?"

"ஐ டோன்ட் லைக் யுவ்வர் அட்வைஸ் ஓகே ?"

"அடுத்த தடவை உன்னை நான் இங்கே பார்த்தேன் பிச்சிபுடுவேன் பிச்சி ஓகே ?"

செல்லக் கோபத்தில் போய்விட்டாள்.

அப்புறம் ரொம்பநாள் கழித்து ரூம் எடுக்க வந்தவர்களுக்கு பகலில் யாரும் ரூம் கொடுக்காததால் திரும்ப போய்விட்டதாக அசிஸ்டென்ட்கள் சொன்னார்கள் நான் நிம்மதி மூச்சு விட்டேன்.

அன்று இரவு ராத்திரி ஒருமணிக்கு இவர்கள் இருவரும் கையைப் பிடித்தபடி ரிஷப்சனில் என்னை நோக்கி வர, திகிலடித்தது எனக்கு, அந்த பெண் கர்பமாக இருக்கிறாள், உண்டாகி ஆறு மாதம் போல தெரியுது...!

ரிஷப்சனில் லேசாக வயிறை முட்ட செய்து என்னை அருகில் அழைத்தாள், அவனும் கூடவே அவள் கையைப் பிடித்த வண்ணம், "அய்யய்யோ ரூம் இல்லை ரூம் இல்லை" என்று நானும் மொரோக்கோ"வும் கதற...

என்னை அருகில் வா என்று கூப்பிட, கர்ப்பமாக இருந்தபடியால் பழைய படி முத்தம் கொடுக்க இயலாத படியால், மொரோக்கோ என்னை பிடித்து தள்ளிவிட...அதே பழைய முத்தங்கள்...!

"ரூம் கிடையாது ஆமா சொல்லிப்புட்டேன்"

"நாங்க வேற ஹோட்டல்ல தங்கி இருக்கோம் போதுமா ?"

"இங்கே எங்கே ?"

"டிஸ்கோ போறோம்"

"வயித்துல குழந்தையை வச்சிகிட்டு டிஸ்கோவா ?"

"கல்லிவல்லி" [[டோன்ட் கேர்]] என்று சொல்லி அன்னநடை நடந்து போகுது மெதுவாக...

சொல்லுங்க என்ன வாழ்க்கை இது ? எனக்கு மனசு முழுவதும் ரணம்....

முற்றும்......நன்றி.....

Sunday, November 24, 2013

ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம் தொடர்....!

முந்தய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்....

ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம்...! முதல் பாகம்.

சுதாரித்தவன்........அப்படியே எங்கள் செக்கியூரிட்டி ஒருவனை பதம் பார்க்க, செக்கியூரிட்டிகள் அவனை நோம்பி நெம்பி எடுத்துவிட்டு நிறுத்த....அவன் என்னைப் பார்த்து துப்ப...மறுபடியும் நெம்பல் தொடர, விடுய்யான்னு சொல்லி "போலீஸ்'க்கு போன் பண்ணு" என்று நான் சொன்னதுதான் தாமதம்...
இவனும், மயங்கி கிடந்த பெண்ணும் திடீரென எழும்பி [[நடிப்பா அவ்வ்வ்வ்]]  "சாமீ போலீஸ்க்கு மட்டும் போன் பண்ணிறாதீங்க" என்று கதற....நாட்டாமை ஆபீஸ் திறக்கப்பட்டது, குடிக்க லெமன் ஜூஸ் கொடுத்து கரளை கட்டையை அவர்கள் கண்ணில் காட்டிக் காட்டி போதை தெளிய வைத்து விவரம் கேட்கும் போது, வாயடைத்து போனோம்...!

அப்பிடி ஒரு ஃபேமிலி அவர்கள் ஃ பேமிலி, போலீஸ் வந்தால் மொத்தம் டீடெயில் கொடுத்தாலே இவங்க குடும்ப மானம் சந்தியில், அப்படி ஒரு அரசாங்க உயர்பதவியில் அவன் அப்பா இருக்கிறார்.
இவர்கள் இங்கே இப்படி கூத்தடிப்பது தெரிந்தால் கண்டிப்பாக குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் என்பது நன்றாகவே புரிந்தது.

பார்க்க பரிதாபமாக இருந்ததால்...சரி நீங்க சேதப்படுத்துனதுக்கு அம்புட்டுக்கும் டபுள் ஜார்ஜ் என்று சொல்லி பணம் வாங்கிவிட்டு விரட்டி விட்டோம்.
அப்புறம் ஒரு பத்துநாள் கழித்து, நான் டியூட்டியில் இருக்கும் போது திடீரென இவன் ஹோட்டல்ல இருந்து இறங்கி வாறான், எனக்கு தலை சுத்த ஆரம்பிக்குது கிர்ர்ரர்ர்ன்னு....

"டேய்....நீ இங்கே எப்பிடி வந்தே ?" [[நடிகர் பிரபு வாய்சில் படிக்கவும்]]

"என்னை மன்னித்துவிடு, நான் கொஞ்சம் டென்ஷனில் அப்படி நடந்து கொண்டேன், இனி ஒரு பிராப்ளம் இருக்காது ஸாரி...உங்க மேனேஜர்'கிட்டேயும் மன்னிப்பு கேட்டேன்"

"ஆமா....அது எங்கே ?" [[பொண்ணு]]

"அவள் இனி இந்த பக்கமே வரமாட்டாள், கூட்டிட்டே வரமாட்டேன் போதுமா ?"

"இனி ஏதாவது பண்ணினே மவனே பிச்சிபுடுவேன் பிச்சி, அவள் இந்தப் பக்கம் இனி வரப்டாது ஆமா ?"

"கண்டிப்பாக" என்று கையை பிடித்து முத்தம் கொடுத்தான்...

மறுபடியும் ஒரு மகாபெரிய அத்துமீறலை சந்திப்பேன்னு கனவுலேயும் நினைத்து பார்க்கலை சாமீ.....
இவன்கூட இன்னும் ரெண்டுபேர் வந்து தங்கி..அவளை பலாத்காரம் செய்ய போக....

பயங்கரம் தொடரும்.....[[பயந்துறாதீக அடுத்த பதிவில் பயங்கரம் தெரிந்து, தொடரும் முடிந்துவிடும்]]

Sunday, November 17, 2013

ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம்...!

எங்கள் ஹோட்டலுக்கு புரியாத புதிர்களும், புரிந்த புதிர்களும், காமெடி பீஸ், சீரியஸ் பீஸ், ஃபீலிங் பீஸ் கத்தரிக்காய் பீஸ் சரி விடுங்க, இப்படி பலதரப்பட்ட "கேரக்டர்"கள் வந்து போவதுண்டு, சுவாரஸ்யமான பீஸ்'களும் வந்து போவதுண்டு நடிகை பஸ்தூரி மாதிரி.
சரி ஒரு சோகமான கேரக்டரை பற்றி சொல்றேன்...

ஒரு அரபி [[எந்த நாடுன்னு சொல்லமாட்டேன் நீங்களே யூகிக்கவும், எங்க நம்மளை கடத்திட்டு போயிருவாங்களோன்னு பயமா இருக்கு ஹி ஹி]] இங்கே வந்தான், ஆள் பார்க்க வாட்டசாட்டமில்லை, என்னை மாதிரி கொஞ்சம் குள்ளம், ரொம்ப அழகு...[[சரி சரி நாம மேட்டருக்குள்ளே போயிருவோம்]]

ரூம் கேட்டான், சாதாரணமாக விருந்தினர் பணம் சார்ஜ் செய்தோம், அமைதியாக தங்கிவிட்டு போனான், ஒரு பத்துநாள் கழித்து இன்னொரு நண்பனுடன் வந்தான், அப்போதும் நண்பனுடன் டிஸ்கோ, பஸ்கோ என்று சந்தோஷமாக என்ஜாய் செய்து போனான்.
மறுபடியும் ஒருநாள் ஒரு அழகு பெண்ணுடன் [[அரபி குதிரை]] வந்தான், அரேபியன் இரவுகளை போல ஜோலி ஜொலிக்கும் அழகு [[வர்ணித்தது போதும் ஹி ஹி]] தேவதை...!

ரூம் கொடுத்தோம் இருவரும் கைகோர்த்து டிஸ்கோ, பஸ்கோ, பார் அப்பிடி பல இடங்களுக்கு ஓடி விளையாடினார்கள், மறுபடியும் பத்து நாள் கழித்து வந்தார்கள், அப்போது அவர்களுக்குள் ஒரு சிறிய சண்டை, அப்புறம் ராசியாகி போனார்கள்.
அவனை பார்க்க நல்ல பெரிய இடத்து ஆளாகத்தான் தெரிந்தான் பாஸ்போர்ட் செக் செய்து பார்க்கும்போது கண்டிப்பாக இவன் ராஜவம்சம் இல்லை, ஆனால் பெரிய குடும்பத்து ஆள்.

பெண்ணும் அப்படியே, வேறொரு வம்சாவளி, அரபிகளுக்கு தனி தனி வம்சாவளி இருக்கிறது, நாம் ஜாதி பிரித்து வைத்திருப்பதுபோல் இங்கேயும் அப்படி என்று நினைக்கிறேன்.

பின்பும் ஒருநாள் ஜோடியாக வந்தார்கள், ரூம் ரெண்ட் டிஸ்கவுன்ட் வேண்டுமென்று வருந்தி கேட்டதால் நாங்களும் கொடுத்தோம்.
அன்று இரவு, ரத்தகளறியாக ரிஷப்சன் வந்தான் அவன்...ஒரே அலறல்...என்னான்னு கேட்டால்...பதில் சொல்லாமல் அலறுகிறான்...எனக்கு உடனே அந்த பெண்ணின் நினைவு வர, உடனடியாக செக்கியூரிட்டியை ரூமுக்கு அனுப்பினேன், அங்கே அவள் மயங்கி கிடப்பதாக தகவல் வர...நான் ஓடினேன் அங்கு...

அங்கே அவள் குப்புற விழுந்து கிடக்கிறாள், ரூம் கண்ணாடிகள், டேபிள்கள், டிவி மற்றும் போன் இத்தியாதிகள் யாவும் நொறுங்கி கிடக்கிறது, அதிர்சியான எனக்கு, அவள் உயிரோடு இல்லை என்று நினைத்து...
அவளை நெருங்கி மல்லாக்க படுக்கவைக்க சொன்னேன் செக்யூரிட்டியோடு, மெதுவாக மூக்கில் கைவைத்து பார்த்தேன், ஆஹா மூச்சு இருந்தது ஆனால் நாற்றம்...சரக்கு நன்றாக குடித்து இருக்கிறாள்.

அப்புறம் ஆசுவாசமாக அறையை நோட்டினேன் [[அதாம்பா நோட்டம் விட்டேன்]] மினி பார் வசதி கொண்ட ரூம் என்பதால், அந்த மினி பார்'ல் ஒரு பாட்டலுமில்லை எல்லாம் நொறுக்கப்பட்டிருந்தது.

திருப்பியும் அந்த அரபியை கூட்டி வர செய்து [[அவனும் நல்ல சரக்கில்]] என்ன இது என்று கேட்டேன், சற்றே சுதாரித்தவன்....
சரக்கு தொடரும்...

டிஸ்கி : நாங்களும் தொடர் எழுதுவோம்ல்ல.


Monday, November 11, 2013

பேரரசர் அசோகர் பற்றி நாம் அறியாத தகவல்கள்...!

கலிங்கப்போர். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மாவீரனான அசோகன் மனமாற்றம் அடைந்து அகிம்சைக்கு மாறிய கதை. ஆனால் கலிங்கப் போருக்கு முந்தைய அசோகனையும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் தேவலை.

மவுரிய வம்சத்தை நிறுவியவர் சந்திரகுப்தர். அவருடைய மகன் பிந்துசாரன். பிந்துசாரனின் எண்ணற்ற மனைவியர்களில் ஒருவர் சுபத்ராங்கி. சம்பா என்கிற நகரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணரின் மகள். இவரை கைப்பிடித்தால் அரசனுக்கு ஜோதிட அடிப்படையில் உயர்வு கிடைக்குமென்று ஜோதிடர்கள் கதைவிட, பிந்துசாரரின் மனைவியானார் சுபத்ராங்கி. பேரரசருக்கும், அரசிக்கும் அப்போது ஏதோ மனத்தாங்கல் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு மகன் பிறந்தபிறகு ‘நான் இப்போது வருத்தமில்லாமல் இருக்கிறேன்’ என்று பொருள் வரும்படியான பெயரை மகனுக்கு சூட்டியிருக்க மாட்டார். அசோகரின் பெயருக்கு இப்படியொரு கதை சொல்லப்படுகிறது.

அசோகருக்கு முன்பே பிந்துசாரருக்கு நிறைய மனைவிகள் மூலமாக ஏராளமான மகன்களும், மகள்களும் உண்டு. தனக்கும், தன்னுடைய அம்மாவுக்கும் பேரரசில் போதிய முக்கியத்துவம் இல்லையென்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை. அரச குடும்பத்துப் பண்புகளை மீறி முரடராகவே வளர்ந்தார் அசோகர். மற்ற இளவரசர்கள் பட்டாடை அணிந்து பளிச்சென்று இருக்க எப்போதுமே அசோகர் மட்டும் கடுமையான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வியர்வை வழிய, கடைமட்ட போர்வீரன் மாதிரி திரிவார். ஒரு முறை அரசர் பரிவாரங்களோடு வேட்டைக்குச் சென்றபோது, இளவரசரான அசோகரும் கூட சென்றிருந்தார். காட்டில் திடீரென்று சிங்கத்தின் கொடூரமான உறுமல். வேட்டைக்குச் சென்றவர்கள் ஒருகணம் விக்கித்துப் போனார்கள். வாளையும், வேலையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு சுற்றிலும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அசோகரை திடீரென்று காணவில்லை. அவரிடம் வாள் கூட இல்லை. இளவரசரை காணோமென்று பயங்கர பரபரப்பு.

மீண்டும் சிங்கத்தின் உறுமல் கேட்டது. ஆனால் இம்முறை சற்று பலகீனமாக. சத்தம் வந்த திசைக்கு எல்லோரும் ஓடிச்சென்று பார்த்தபோது, மரணமடைந்துவிட்ட சிங்கத்தின் மீது கம்பீரமாக நின்றிருந்தார் அசோகர். அவரது கையில் சிங்கத்தின் ரத்தம் சொட்டச் சொட்ட வெறும் மரக்கட்டைதான் இருந்தது. கட்டையால் அடித்தும், குத்தியும் மட்டுமே சிங்கத்தோடு தீரமாக போரிட்டு வென்றிருந்தார் இளவரசர். மரணத்துக்கு சற்றும் அஞ்சாத தன்னுடைய மகனை பேரரசை விரிவாக்கும் போர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் பிந்துசாரர். அவந்தி மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை அடக்க அசோகர் விரைந்தார். சற்றும் மனச்சாட்சியற்ற இராணுவ இயந்திரமாக போர்க்களத்தில் அவர் செயல்பட்டார். எதிரிகளுக்கு மரணத்தைத் தவிர வேறெதையும் அளித்திட அசோகருக்கு மனமில்லை. மவுரிய பேரரசுக்கு டேக்கா கொடுத்துக் கொண்டிருந்த பல சிற்றரசர்களை வாள்முனையில் சந்தித்தார். வீரத்துக்குப் பரிசாக உஜ்ஜயினியின் ஆளுனராக அசோகர் நியமிக்கப்பட்டார்.

பிந்துசாரரின் மறைவுக்குப் பிறகு பதவியேற்க பல மூத்தவர்கள் இருந்தாலும் அசோகர் அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் பேரரசர் ஆனார். குறிப்பாக அப்பாவின் அமைச்சரவையில் இருந்த ரதகுப்தாவின் ஆதரவு அவருக்கு அமோகமாக இருந்தது. பதிலுக்கு ரதகுப்தா அசோகரின் அமைச்சரவையில் முதலமைச்சர் ஆனார். இயல்பிலேயே மூர்க்கத்தனமும் சந்தேகக் குணமும் கொண்டவராக ஆரம்பகால பேரரசர் அசோகரை வரலாறு பதிவு செய்கிறது. அரசவையில் இருந்தவர்களுக்கு விசுவாச சோதனை வைப்பாராம். அதில் தோற்பவர்களுக்கு மரணம்தான் கதி. நூற்றுக்கணக்கானவர்கள் இம்மாதிரி கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆனாலும் அசோகரின் ‘அந்தப்புரம்’ அமோகமாகதான் இருந்திருக்கிறது. ஐநூறு மனைவியராவது இருந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடாவடியாக அரசி ஆக்கப்பட்டவர்கள். முரட்டுத் தோலும், சிடுசிடு முகமுமாக இருந்த அசோகரை பல அரசிகள் விரும்பவில்லை. இல்லறத்துக்கு முரண்டு பிடித்த பல அரசிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அசோகரின் அரசாங்கத்தில் ‘டார்ச்சர் முகாம்’கள் இருந்ததாகவும், தண்டனைக்கு உள்ளானவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தெரிகிறது. இதனாலேயே மன்னருக்கு ‘சண்டா அசோகா’ என்கிற பட்டத்தை பயத்தோடு மக்கள் சூட்டியிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த எட்டே ஆண்டுகளில் மவுரியப் பேரரசை பரப்பளவில் பன்மடங்கு விரிவுப்படுத்தினார். ஆனால் எட்டாண்டுகளாக போர் நடந்தும் கலிங்கத்தை மட்டுமே அவரால் வெல்ல முடியவில்லை. நேரடியாக அசோகர் படைகளுக்கு தலைமை தாங்கி களமிறங்கியதும் நிலைமை வெகுவேகமாக மாறியது. வெற்றியை உரித்தாக்கிக்கொள்ள மவுரியர்கள் இழந்தது அதிகம். போர் முனையில் ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழந்தார்கள். ஒன்றரை லட்சம் பேர் அங்கஹீனமானார்கள். கலிங்கமே மவுரியப்படையில் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மூர்க்கத்தனமான முரடரும், கொடூர மனம் படைத்தவருமான அசோகருக்கே அந்த கோரம் சகிக்கவில்லை.

“நான் என்னதான் செய்திருக்கிறேன்? அப்பாவி குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதை வெற்றி என்றா சொல்லமுடியும்? பலர் கணவர்களை இழந்திருக்கிறார்கள். அப்பாவை இழந்திருக்கிறார்கள். குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். பெற்றோர் அற்ற அனாதைக் குழந்தைகள் ஏராளம். காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் இரையாகவா மனிதர்கள் பிறந்தார்கள்?” என்று புலம்பினார். இந்த குற்றவுணர்ச்சியே அவர் பவுத்தத்தை தழுவ காரணமானது.

அதுவரை கொடூரமானவராகவும், கொலை பாவங்களுக்கு அஞ்சாதவருமாக பார்க்கப்பட்ட மாமன்னர் அசோகர் அகிம்சை வழிக்கு மாறியபிறகு உலகப்புகழ் பெற்றார். புத்தருக்கு ஞானம் கிடைத்த கயாவுக்கு சென்றார். மகாபோதி ஆலயத்தை நிறுவினார். தன்னுடைய மகனையும், மகளையும் பவுத்தத்தை பரப்ப வெளிநாடுகளுக்கு அனுப்பினார்.

ஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு விடும்.


நன்றி : https://www.facebook.com/ssssaravanans

நமக்கு தெரியாத தகவல்கள் இதில் இருப்பதால் உங்களோடும் பகிர்கிறேன் நண்பர்களே.

Saturday, November 9, 2013

மனம் தளராத இரும்பு மனிதர்...!



“என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்: என் நேர்மைக்கும் நான் நேசிக்கும் என் தொழிலுக்கும் களங்கம் விளைவித்த ஆபத்தான சவாலான அதை “சத்தியம் ஒரு நாள் நிச்சியம் ஜெயிக்கும் என்ற என நம்பிகையினாலும் தெய்வத்தின் அருளாலும் ஜெயித்தேன் “ என்கிறார் நம்பி நாராயணன்.

 எதிர்பாராத நேரத்தில் சவால்கள் எழுவதும் அதை எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பதும் பெரிய நிருவனங்களில், அல்லது துணிவுடன் எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லை. ஒரு தனிமனிதன் வாழ்க்கையிலும் நிகழக்கூடியது என்ற நிதர்சனமான உண்மையை புரிய வைக்கிறது இந்த விஞ்ஞானியின் வாழ்க்கை.
நம்பி நாராயணன் ஒரு விண்வெளியியல்விஞ்ஞானி.
 
ஏரோநாட்டிகல் எஞ்ஞினியரிங்கும், ராக்கெட் சையின்ஸும்படித்த பின் இந்திய விண்வெளித்துறையில் (ISRO)அப்துல் கலாம் சதிஷ் தாவன் போன்றவர்களுடன் 1970களில் பணியாற்றியவர். திரவ எரிபொருளின் சக்தியில் இயங்கும் ராக்கெட்மோட்டர்களை. எந்த வெளிநாட்டின் உதவியுமில்லாமல் 1970லேயே உருவாக்கியவர். மிக பெரிய வல்லரசுநாடுகள் மட்டுமே அறிந்தந்திருந்த அதிவேக ராகெட்களை செலுத்த தேவையான கிரையோஜினிக் என்ற திரவ எரிபொருளை உள் நாட்டிலியே தயாரிக்க ரஷ்ய பிரெஞ்ச் அரசு நிறுவனங்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து அதை கற்றவர்.செய்யும் தொழிலையே தெய்வமாக நினைக்கும் இந்த மனிதருக்கு தன் தொழிலைத்தவிர வேறுஎதுவும் தெரியாது.

1994லில் ஒரு நாள் திருவனந்தபுரத்தில் இவர் வீட்டுக்கு வந்த போலீஸ் படைஇவரை கைது செய்கிறது. மறுநாள் தலைப்பு செய்திகள் சொன்ன தகவல் இவர் ராக்கெட் ரகசியங்களையும் ராணுவ ரகசியங்களையும்  பாக்கிஸ்தானுக்கு விற்கிறார். என்பது.இன்று போல் செய்திகளை துரத்தும் டிவி சேனல்கள் அன்று இல்லை. ஆனால் மாநில மற்றும் தேசிய நாளிதழ்களில்  தொடர்ந்து ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல செய்திகள் விஸ்வரூபம் எடுத்து நம்பி நாராயணணையும், அவரது சகா சிகுமாரையும் தேசதுரோகிகளாக வர்ணித்தன.

 மலையாளத்திலும் தமிழிலும் பல வாரபத்திரிகைகள் தொடர்களில் உண்மை”கதைகளை” வெளியிட்டன. ஒவ்வொருமுறையும் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லும்போது துரோகி என முகத்தில் குத்தி காரி உமிழ்ந்தனர் சிலர்... சிறையில் ”உன்னை சரியாக நடத்தாத மேலதிகாரியை மாட்டிவிடு” என்று கொடுத்த அட்வைஸை ஏற்காததால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யபட்டார்.. இரண்டாண்டு நீண்ட பலவிசாரணைக்கு பின் சிபிஐ 1996ல்அறிவித்த முடிவு  ”இது பொய்யாக புனையபட்ட ஒரு வழக்கு. வழக்கை தொடர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், அவர்களுக்கு கோர்ட்மூலம்தகுந்த  தண்டனையும் தரபடவேண்டும்”
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 1998ல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபட்டார். ஆனாலும் மாநிலபோலீஸ் கேரள உயர்நீதிமன்றத்திற்கு போனது. அங்கும் வழக்குதள்ளுபடி செய்யபட்ட நிலையில் நம்பி நாராயணன் சந்தித்த அடுத்த சோதனை மாநில அரசு முழுவழக்கையும் மீண்டும் மாநிலபோலீஸ் மறுவிசாரண செய்ய இட்ட உத்தரவு.

ஏன் இவருக்கு இது நேர்ந்தது.? போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செல்வாக்குள்ள பணக்கார்களும் வில்லனின் கூட்டாளியாக கூட்டு சேர்ந்து அப்பாவி கதாநாயகனை பலிகடாவாக்கி தங்கள் பிரச்னைகளை தீர்த்துகொள்ள முயலும் தமிழ் கிரைம் திரில்லர் சினிமா திரைக்கதையின் உண்மைவடிவம்தான் இவரது கதை. தனது உயர் அதிகாரியை பழிவாங்க ராணுவ ரகசியம் கடத்தல் என ஒர் கற்பனை செய்தியை கசிய விட்ட போலீஸ் அதிகாரி, ஒரு பெரிய பத்திரிகை குடுமபத்தில் எழுந்த வாரிசு போரட்டத்தில் தனக்கு உதவாத அதே உயர் போலீஸ் அதிகாரியை வஞ்சம் தீர்க்க காத்திருந்த செல்வாக்குள்ள ஒருதினபத்திரிகையின் அதிபர், பொறியாக இருந்த இந்த பிரச்சனையை பெருந்தீயாக வளர்த்து, ”தேசத்ரோகிகளை காப்பற்ற முயல்கிறார் இந்த முதல்வர்” என சொல்லி அரசியல் பிரச்னையாக்கி. முதல் அமைச்சரையே பதவியிழக்க செய்த  அரசியல்வாதிகள் என சேர்ந்த ஒரு கூட்டணியின் வெற்றி இந்த மனிதரின் வாழக்கையை பகடைகாயாக்கி ஆடியதில் பெற்றது..

வழக்கு நடைபெற்ற காலங்களில் நாரயணன் அடைந்த துயரங்களின் உச்சம் மன அழுத்தினால் அவர் மனைவி தன் செயல் திறன்களை இழந்து நின்றது. ”என்னால் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. நான் தேசதுரோகி என என் காதுபடவே பேசுவார்கள்” என்கிறார் நாராயணன். நிரபராதி என அறிவிக்கபட்ட பின்னரும் அரசின் மறு விசாரணை அறிவிப்பினால் வெகுண்ட நம்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். அங்கும் கேரள அரசின் அணுகுமுறையை மிக கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து கடிந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. உச்சநீதிமன்றம். அரசு பதவி திரும்ப கிடைத்தாலும் கெளரவங்களை இழந்தார்.

 மூத்த விஞ்ஞானியான இவருக்குஅதிகாரமில்லாத நிர்வாக பணிகளே தரபட்டது. மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இன்று திட்டமிடுகிறது இந்திய விண்வெளிதுறை. அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்க ,உழைத்த , விருதுகள் வழங்கபட்டிருக்கவேண்டிய இந்த விஞ்ஞானி, எந்த கெளரவவும் இல்லாமல் 2001ல் பதவி ஓய்வு பெற்றார்.பொய் வழக்கு போட்டதற்காக குற்றம் சாட்டபட்டபட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அந்த போலீஸ் அதிகாரிகள் பதவிஉயர்வு பெற்றார்கள். அதில் ஒரு மூத்த அதிகாரி ஓய்வுக்கு பின்னரும் பெரிய அரசு பதவி அளிக்கபட்டு கெளரவிக்கபட்டிருக்கிறார், கிளைமாக்ஸாக சிபிஐயின் பரிந்துறையின் பேரில் இந்த பொய்வழக்கை போட்ட போலிஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்த வழக்கை அரசு கைவிட்டது. சொன்ன காரணம்  “பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நீண்ட காலமாகிவிட்டது.”

தவறாக குற்றம்சாட்டபட்டு பொய்வழக்குகள் போடபட்டு தாமதமாக கிடைத்த நீதியினால் தன் வாழ்க்கையின் வசந்தத்தை இழந்து போன நம்பி மனித உரிமை ஆணையத்தில்  தொடர்ந்த வழக்கில் அது கேரள அரசுக்கு இட்ட ஆணை நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய். கொடுக்க வேண்டும் என்பது. ஆணை இடபட்டது 2001ல். 2012 வரை கேரள அரசு அசையவில்லை.. வேறு எந்த மனிதனும் வீபரிதமான முடிவுகளை கூட எடுத்திருக்க கூடும் என்ற நிலையில் நம்பி நம்பிக்கையுடன் உயர் நீதிமன்றத்தை அணுகியதில் ”உடனடியாக 10 லட்சம் கொடுங்கள். பிரச்னைகளை பிறகு பேசுங்கள் என மாநில அரசை. எச்சரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் (இந்த கட்டுரைஎழுதும்வரை) அந்த பணமும் தரப்படவில்லை.
எனது பிரச்னை பணமில்லை. என் நேர்மையும் அநீதியை எதிர்த்ததில் நான் சந்தித்த சத்திய சோதனைகளும் பதிவு செய்யபடவே போராடுகிறேன்” என்கிறார் நாராயணன்.
”பத்திரிகைகளும், காவல்துறையும் அரசியல்வாதிகள் செய்த பொய்பிரசாரத்திற்கு அப்பாவி கேரளமக்கள் பலியாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்கள் சார்பில்மன்னிப்பு கேட்கிறேன், கேரள எழுத்தாளர்கள், அறிவிஜிவிகள் சார்பாக மன்னிப்புகேட்கிறேன் பத்திரிகைகள் சார்பில் மன்னிப்புகேட்கிறேன் “எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பி சார்” என்று மிகசிறந்த கேரள இலக்கிய வாதிகளில் ஒருவரான பால்சக்காரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஓரு பத்திரிகையாளார் கூட்டதில் பேசியபோது அங்கிருந்தவர்களும், அதை மறுநாள் செய்திதாட்களில் படித்தவர்களும் அதை தாங்கள் கேட்ட மன்னிப்பாகவே உணர்ந்து நெஞ்சம் நெகிழந்தது நிஜம்.

நன்றி : சுவடுகள் 

ஒரு மலையாளி நண்பன் சொன்ன தகவல் இது, உடனே கூகுளில் அந்த பெயரை தேடினேன், மனம் நொந்து போனேன், அதனால்தான் உங்களுக்கும் இதை பகிர்ந்துள்ளேன்.

Sunday, November 3, 2013

ஆமாய்யா நான் போலீஸ்தான் என்ன சொல்லு ?

காமெடியா எழுதனும் அதை அனைவரும் ரசிச்சி சிரிச்சி ரிலாக்ஸ் ஆகனும்னு மனசு நினைத்தாலும், நம் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் சொல்லும், செய்யும் கோபப்படும்படி உள்ள காமெடிகளைப் பார்க்கும் போது....இவர்களை நடு ரோட்டில் தூக்கிப்போட்டு மிதிச்சா என்னான்னு தோணுது....!
காமன் வெல்த் மாநாடு.

இலங்கை"க்காக ஒரு துரும்பைக் கூட கொடுக்கக் கூடாது கொடுக்கவும் விடமாட்டேன், மீறினால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்று சொன்ன கருணாநிதியின் குடும்பம்தான் [[கேடி பிரதர்ஸ்]] சிங்களனோடு கூட்டணி அமைத்து இலங்கையில் வியாபாரம் செய்கிறார்கள்.

எப்பிடியும் இனி காங்கிரஸ் ஜெயிக்க முடியாது என்பதை நன்றாக அறிந்த இந்த மானமுள்ள [[த்தூ]] தலீவன், பிஜேபி பக்கம் போக இது ஒரு நல்ல சந்தர்ப்பம், பிஜேபி கூட திமுக கூட்டணி அமைக்குமானால் அது பிஜேபி"க்கு வெற்றி இல்லை, ஆப்பு மீது தானாக வல்கராக ஏறுவது என்று அர்த்தம்.

கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமுக்கமாக இருந்த நா....சரி வேணாம் நீ, காலையில் ஒரு சட்டி நிறைய இட்லியை தின்னுட்டு உண்ணாவிரதம் இருந்து நடித்து காட்டிய நீ, இப்போது சொல்கிறாய், இலங்கைக்காக ஒரு துரும்பை கூட எடுக்கக் கூடாது என்று...!

யுத்தம் என்று வந்தால் நல்லவன் ஒருவன், வெற்றியோ தோல்வியோ எப்போதும் ஒரு பக்கமே நிற்பான்....அதற்க்கு எங்கள் மானமுள்ள ஒரே தலைவன் எம்ஜியார் நல்லதொரு எடுத்துக்காட்டு....!

இலங்கையில் போராளி குழுக்கள் பலவும் பிரிந்து கிடக்கும் போதே, நியாயமுள்ள போராளி குழு எது என்பதை கண்டுபிடித்து, கடைசி வரை ஆதரித்து கை தூக்கி [[தாங்கி]] வந்தார். வீரியமுள்ள விதை அதுதான் என்று கண்டறிந்தார்...!

ஆனால் இந்த துரோகியோ....துரோகிகளுக்கு ஆதரவளித்து தாங்கி வந்தார்...ஒ...இனம் இனத்தோடுதான் சேரும் இல்லையா ?!
[[இந்த ஒரு படமே போதும் மானமுள்ள தலீவன் நாண்டுகிட்டு நிக்க]]

இப்போது அல்ல..........அப்போது இருந்தே சொல்லி வருகிறேன்....திமுக"வோ காங்கிரஸோ இரண்டுமே தமிழர் விரோத கட்சி என்பதை உணருங்கள் உணருங்கள் உணருங்கள்....!

என்னடா மனோ ரொம்ப அரசியல் பேசுறானே இவன் என்னத்தை செஞ்சான்னு கேட்டீங்கன்னா, போனதடவை நான் ஊர் வந்தபோது, எங்கள் ஏரியா [[மும்பை]] காங்கிரஸ் பார்ட்டியை வேரடி மண்ணோடு சாய்த்து, சிவசேனா கொடியை நட்டுகிட்டுதான் பஹ்ரைன் வந்தேன், என்னால் முடிந்தது அதுதான்.
[[மும்பை தேர்தல் பிரச்சாரத்தின் போது]]

காங்கிரஸ் நாதாரிகள் நான் போய் வரும் பாதையை ஸ்கெட்ஜ் போட்டதையும், அதை அறிந்த எனது நண்பர்கள் நான் அறியாமலேயே எனக்கு பாதுகாப்பு கொடுத்ததையும், என்னை வழியனுப்ப ஏர்போர்ட் வந்த நண்பர்கள் சொன்ன பின்புதான் அறிந்து மலைத்துப் போனேன்....! 
------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ரிலாக்ஸ்....

எங்கள் ஹோட்டல் நம்பரும் போலீஸ் ஸ்டேஷன் நம்பருக்கும் இடையில் ஒரே ஒரு நம்பர் மட்டுமே வித்தியாசம்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லையா ? அப்பிடி ஒரு போன் லைன் மாறி வருது....ரிஷப்சன் பொண்ணு எடுத்து பேசுது...நான் உள்ளே ஆபீஸில் இருந்து கேட்டுட்டு இருக்கேன்.

"...................."

"ஆக்சுவலி......"

"..............................................................."

"சர்....."

"......................................................."

"நோ நோ........."

"................................................................."

"அய்யோஓஓஓஓ.......மனோஜ்........"

நான் ஓடி வரவும் பொண்ணு போனை தூக்கி என்மீது எறிய....

"ஹலோ...." 

"நீ போலீஸ்தானே நீ போலீஸ்தானே.....?" மேட்டரு எனக்கு புரிஞ்சிருச்சு [[அவ்வ்வ்வவ் இன்னைக்கு என்னப் பண்ணப் போறானோ]]

"சார் ஆக்சுவலி...." இடை மறிக்குறான் 

" ஏ......நீ போலீஸ்தானே போலீஸ்தானே ?" அவ்வ்வ்வவ்

" நோ சர், நான் வந்து இது வந்து..." குழப்பத்தில் வாய் குழற...

"டேய் நீ போலீஸ்தானே போலீஸ்தானே ?"

"ஹோலோ ச்சே ஹலோ......நீ யார்கிட்டே பேசிட்டு இருக்கே தெரியுமா ?"

"நீ போலீஸ்தானே போலீஸ்தானே ?" ஆஹா....

"ஆமாய்யா நான் போலீஸ்தான் என்ன சொல்லு ?" ரிஷப்ஷன் பொண்ணு சுவாரஸ்யம் ஆகுறாள் [[கொய்யால]]

"ம்ம்ம்ம்ம்ம் கார்பார்க்கிங்க்ல நிறுத்தி வச்சிருந்த என் கார் மேல யாரோ ஒரு பில்"லை வச்சிட்டு போயிருக்காங்க, நான் ஒன்னுமே சாப்பிடலை எனக்கு ஒன்னும் தெரியாது என்னான்னு சொல்லமுடியுமா ?"

"சரி.....அந்த பில்"ல என்ன எழுதி இருக்கு ?"

சாப்பாடு அயிட்டங்களை நிறைய சொல்கிறான்.

"இவளவும் நீ சாப்புட்டியா ?" எனக்கு புரிஞ்சி போச்சு.

"வல்லா.....எனக்கு இந்த சாப்பாடெல்லாம் எப்பிடி இருக்கும்னே தெரியாது"

"சரி அதுக்கு இப்போ என்ன செய்யலாம் ?"

"நீ போலீஸ்தானே நீ போலீஸ்தானே...?" கண்டுபிடிச்சுட்டானோ ?

"போலீஸ்தாம்ப்பா சொல்லு...?"

"நீ போலீஸா இருந்துகிட்டு என்ன செய்யலாம்னு என்கிட்டே கேக்குறே ? சரி நான் இந்த பில்"லை செட்டில் பண்ணலைன்னா கார்பார்க்கிங் கேட்"டை திறக்க மாட்டாங்களே அதான் பயமா இருக்கு, எனக்கு உடனே அவசரமா சவூதி போகணும்..."

"நோ பிராப்ளம் சார், நான் இப்பவே போன் பண்ணி சொல்லுறேன் நீங்க தாராளமா போங்க..."

கட்.
அல் ஒஸ்ரா ரெஸ்ட்டாரண்ட் சாப்பாடு மெனு கார்டை விளம்பரத்துக்காக காரில் செருகி வச்சிருந்ததை பார்த்துட்டு மப்புல ஏதோ கார் பார்க்கிங் பில்"ல்லுன்னு நினைச்சி போலீஸ்"க்கு போன் பண்ணுறேன்னு அதுலயும் குளறுபடி பண்ணி எனக்குன்னு வந்துருக்கான் பாருங்க அவ்வ்வ்வ்.....

ரிஷப்சன் பொண்ணு விஷயத்தை கேட்டு தெரிஞ்சிகிட்டு முதுகுல குத்தி குத்தி சிரிக்குது, நமக்கு சிரிப்பதா அழுவதா ஒன்னுமே வெளங்கல, வாங்கி வந்த வரம் அப்பிடி போல ம்ஹும்.

Tuesday, October 29, 2013

காந்தி பிறந்த மண்ணில் இருந்து ஒரு தலைவன்....!

ஒரு நாட்டை நாறடிக்க வேண்டும் என்றால் இந்த காங்கிரஸ் கட்சி ஒன்றே போதும், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் நடத்தும் அழிச்சாட்டியங்களை இந்திய மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள்...!

இது வேறெந்த நாட்டிலும் இல்லாத அநியாயம், ராஜீவ் பூந்தியை கொன்னது யாருன்னு கூட இன்னமும் தெரியாமல், ஒரு இனத்தையே கருவறுத்தவர்களின் உண்மை முகம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

மனதில் வஞ்சம் வைத்து, வெளியே இன்முகம் காட்டும் அன்னை, முசோலினி, நாடு பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்களின் பரம்பரையில் வந்தவருக்கு இங்கே மிகப் பெரிய சக்தியாக உருவாக வழி அமைத்துக் கொடுத்தது யாரு ?

உலக மக்கள் தொகையே 700 கோடிதான், ஆனால் இவர்கள் களவாண்ட மக்கள் பணமோ [[ஸ்பெக்ட்ரம்]] ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் கோடி....! உலகளவில் தமிழனின் வீரம் தெரியப்பட்டதும் அல்லாமல், களவாங்குறதிலேயும் நாங்க கில்லாடிடான்னு, காட்டிட்டான் தமிழன்...!

ஆட்சியை தன் கையில வச்சிகிட்டே "எங்க பாட்டி, அப்பா மாதிரி நானும் கொல்லப்படலாம்"னு கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூவுது ஒரு ஆக்கங்கெட்ட கூவ....!

அடுத்து...

தமிழ்நாட்டுல ஒரு குடும்பம் தமிழ்நாட்டை மொத்தமா வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்று பிரிச்சு ஊரை அடிச்சி உலையில போட்டுகிட்டு இருக்கு....!

அடுத்து தலைநகரை கைப்பற்றும் கட்சி கூட கூட்டு வைக்க பலமான சிந்தனையில் இருக்கு இவங்க தலைமை, பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அதுவும் மோடி பிரதமராக வரும் பட்சத்தில் "பழம் மொழி" களி திங்க மறுபடியும் திகார் போகவேண்டி வரும்...!
அதான் என்னடா பண்ணலாம் என்கிற யோசனையில் இருக்கு தலைமை, காங்கிரஸை விட்டுட்டு போலாம்னாலும், காங் இவிங்களை விடுறதா இல்லை, ரெண்டு மூன்று தடவை முயற்சித்தும், காங்கிரஸ் பயங்கரமான மறைமுக தாக்குதல் நடத்தியதும் அடங்கி விட்டார்கள்.

ஆக புலி வால் பிடித்த கதையாக உடன்பிறப்புகள் இருக்கிறார்கள், என்ன இனி இவிங்க ஜெயிச்சு வாறது என்பது என்னைப் பொறுத்தவரையில் கானல் நீர்தான், பேசாம இருக்குற காசை எடுத்துட்டு போயி பேரிக்காவில் செட்டில் ஆகச் சொல்லுங்கள்.

காங்கிரஸ் கட்சி வேரும் வேரடி மண்ணோடும் சா[ய்க்க] யவேண்டும் என்பது என் பிரார்த்தனை, வேண்டுதல்.... இவர்களைக் கொண்டு நாட்டுக்கு ஒரு பிரயோசனம் இல்லை, மெத்த படித்த பொருளுதார மேதை அன்னையின் காலில் மண்டிபோட்டுகிட்டு கேவலமே இல்லாம இருக்காம்ன்னா மக்கள் கதி ?
மக்களே இனியாவது யோசிப்போம் செயல்படுவோம், பத்து வருஷம் பட்டது போதும், இனியாவது ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்....!

ஓ....நம்ம கவலை இனி விஜய்"யின் ஜில்லா பற்றியும், அஜித்"தின் ஆரம்பம் பற்றியும்தானே இருக்கப் போகுது ?!!!

அடபோங்கப்பா......


Wednesday, October 23, 2013

ஆஹா வடை போச்சே......!

உங்கள் "நாஞ்சில்மனோ" வலைத்தளம் பற்றி எங்கள் பத்திரிகையில் தெரிவிக்கப் போகிறோம், உங்கள் போட்டோ மற்றும் உங்களைப் பற்றிய விபரங்கள் தெரிவிக்கவும் என்று தினமணி பத்திரிக்கை எனக்கு மெயில் அனுப்ப.....

எல்லா நாளும் மெயில் ஒப்பன் பண்ணி பாக்குற நானு, ஒரு ஆறு நாட்கள் பாக்காம விட்டதால சான்ஸ் போயிருச்சு, நீங்க உடனே ரிப்ளை தராததால வேறே ஆளை செலக்ட் பண்ணிட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்.

எங்க அப்பா ஒரு கதை சொன்னது இப்போது நியாபகம் வருகிறது, ஒரு பரம ஏழை ஒருவன் தினமும் கடவுளிடம், என்னை பணக்காரன் ஆக்கிவிடு என்று பலநாள் வேண்டியும், கேட்காத கடவுள்...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுளச்சி, என்னங்க அவன் உங்கள் முரட்டு பக்தன்தானே? ஏதாவது செய்யப்புடாதான்னு கேக்க...சரி இப்பபாரு என்று சொல்லிவிட்டு...

பக்தன் நடந்து வரும் பாதையில் ஒரு ஐந்துகிலோ தங்கத்தைப் போடுகிறார் கடவுள்.
சரியாக தங்கம் இருக்கும் இடத்தின் அருகில் வந்தவனுக்கு "அப்ப"தான் தோனுச்சு, கண்ணில்லாதவர்கள் எப்படி நடந்து போகிறார்கள், கொஞ்சம் கண்ணை மூடி நடப்பமேன்னு நடக்க....தங்கம் போச்சு...

அப்பத்தான் கடவுள், கடவுளச்சிகிட்டே சொன்னாரு, பார்த்தியா எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும் புரிஞ்சுதா ?

நீதி : தினமும் மெயில் ஒப்பன் செய்து செக் செய்யவும், யோகம் எப்ப வந்து கதவை தட்டும்னு தெரியாம டரியல் ஆகாதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா.
------------------------------------------------------------------------------------

'என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம்': ராகுல் பூந்தி திடீர் அலறல்//

யப்பா சாமீ.....அப்பிடியாவது சீக்கிரமா போயி சேருங்கடே....மக்கள் பாவம்....!


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!