Sunday, October 28, 2012

நாட்டாமைக்கே நாட்டாமை வச்ச அம்மிணி...!

வேலை முடுஞ்சி ஹோட்டலுக்கு வெளியே காருக்காக வெயிட் பண்ண போன நான், வெளியே வெயிலாக இருந்தபடியால் ஹோட்டலுக்கு உள்ளேயே உள்ள [[ரிஷப்சன் அருகில்]] படிகட்டில் கீழே ஒரு சோபாவில் அமர்ந்திருந்தேன்.
அந்த நேரம் பார்த்து துருக்கி யுவதி ஒருத்தி [[எங்கள் ஹோட்டல் நடன அழகி]] ஸ்கட் ஆடை அணிந்து நம்ம ரம்பா போல வாட்டசாட்டமாக "ஹைஹீல்ஸ்" காலணி அணிந்து, என்னை ஒரு லுக்கு விட்டுவிட்டு, ஒய்யாரமாக சட சடவென படியில் வேகமாக ஏறியவளுக்கு [[ஹைஹீல்ஸ் போட்டுட்டு அதுவும் படியில ஒடுறியா கொய்யால...?]] நீளசெருப்பு வினையாகிவிட, அம்மணி படியில் தடுமாறி விழுந்து "தொத்தக்கதை" என கீழே உருண்டு [[நான் கண்ணை மூடிகிட்டேன்]] வந்து என்காலடியில் கிடந்தாள்...!
அய்யோ பாவமென தூக்கிவிட்டேன், கொஞ்சநேரம் மிரண்டு.......... சுதாரித்தவள், என்னைப் பார்த்து சொன்னாள்...."நீ என்னை பார்த்ததால்தான் நான் தடுக்கி விழுந்தேன்" என்றாளே பார்க்கலாம்...?!!!

"இதென்ன வம்பாபோச்சு, நான் சும்மாதானே இங்கே உக்காந்து இருந்தேன்"

"இல்லை நீ என்னை பார்த்ததால்தான் நான் கீழே விழுந்தேன், நீ என்னை எப்படி பார்க்கலாம்..?"

"அய் இது நல்லாயிருக்கே, கிளப்ல நீ ஆடும் நடனத்தை எல்லாரும்தான் பார்கிறார்கள் அதுக்காக நீ எப்பவும் இப்படியா விழுகிறாய்...?"

"இல்லை இதை நான் ஒத்துகொள்ளமாட்டேன், கூப்பிடு மேனேஜரை"

"நான்தான் டேமேஜர் ச்சே மேனேஜர்"

"அப்போ முதலாளியை கூப்பிடு"

"ஓ இந்த பிரச்சினைக்கு இனி நான் லண்டன்ல இருக்குற முதலாளியை வேற கூப்பிடனுமா...போ போ இல்லைன்னா ஆபீஸ் ரூம்ல பஞ்சாயத்தை வச்சிருவேன் ஜாக்கிரதை"

"இந்தியாக்காரன் நீ மறந்துவிடாதே, என்னை எப்படி நீ பார்க்கலாம்...?"

ஆஹா பிரச்சினை விவகாரமாகுவதை உணர்ந்த நான் [[பெண்ணாச்சே]] செக்கியூரிட்டியை கூப்பிட்டு ஜீ எம்மை அழைப்பித்தேன், அவளோ குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டிருந்தாள் [[படியில் விழுந்த அடி பலமா இருந்துருக்கும் போல]] மேனேஜர் வர கொஞ்சம் தாமதம் ஆனது...!

மெதுவா வந்த ஜி எம் பொறுமையாக அவள் குற்றசாட்டை கேட்டார், கேட்ட மூதேவி சும்மா இருக்கவேண்டியதுதானே மேட்டரை கேட்டதும்.....ப்பூப்பூப்பூப்பூ....... என்று வாயை பொத்தி சிரித்தவன் வாயிலிருந்து எச்சில் தெரிக்கும்படியாக சிரித்துவிட்டான்...! [[நானும் கிக்கிலி காட்டுனாப்ல நிக்காம சிரிச்சிகிட்டே இருந்தேன்]]
அவளுக்கோ ஆத்திரத்துக்கு மேல ஆத்திரமாக வருகிறது, இதற்கிடையில் ஆட்களும் கூடிவிட அதுவுமல்லாமல் மற்ற நடன பெண்களும் ஸ்கட் [[அவளை விட சின்னதாக அணிந்து கொண்டு]] அணிந்து கொண்டு வந்து கொண்டிருக்க, கூடி இருந்தவர்கள் எல்லாருமே சிரிக்க ஆரம்பிக்க....!
அம்மிணி நியாயம் கேட்ட அரபி பெண்களும் அலறி சிரித்துக்கொண்டே, என்னைப்பார்த்து கண்ணடித்தவாறே  [[கொய்யால பிச்சிபுடுவேன்]] அவளை கட்டி அணைத்துக் கொண்டு சிரிக்க... அவளுக்கும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள்....! 

வீட்டுக்கு வந்தும் என் சிரிப்பு அடங்கவே இல்லை....!

பஞ்சாயத்து ஓவர்.....

போகும்போது "ஒரு மாதிரியா" திரும்பி என்னை பார்த்தாள் பாருங்க ஒரு பார்வை "ஆத்"தீ....." இப்பவும் அடிவயித்துல புலி ச்சே புளிகரையுது, டேய் விக்கி அண்ணே...!

ஸ்பெஷல் டிஸ்கி : இது ஐநூறாவது பதிவு, ஊக்கம் ஆக்கம் அளித்த என் உயிர் தமிழுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி...!

Wednesday, October 24, 2012

என்னை சுற்றி கும்மியடிக்கும் காமெடி கலாட்டா...!

எங்க ஹோட்டல்ல காப்பி ஷாப் மானேஜர் [கோவா'காரன்]] ஒருவன், அடிக்கடி அங்கே சாப்பிட [!!!] வரும் ஒரு சவூதி பெண்ணிடம் வழி வழி யென வழிவதை பார்த்து கடுப்பான அரபிச்சி ஒருநாள், சிரித்து கொண்டே  அவனைப்பார்த்து சோன்னாள்...."ஜஹாஸ்" என்று...
மானேஜருக்கோ  சந்தோஷம் தாங்கமுடியவில்லை [[அரபி தெரியாது]] சரி அப்பிடியே சும்மா இருக்கலாம்தானே, அவன் கிரகம் அவனை இருக்கவிடாம மூதேவிகிட்டே வந்துட்டான்... நான்தான் ஹி  ஹி...
"மனோஜ் மனோஜ் அந்த அரபிச்சி என்னை நேசிப்பதாக சொல்லிவிட்டாள் ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா" [[என்னை கடுப்பெத்துறானாம்]] 
நான் அர்த்தம் புரிந்தவனாக..."அப்படியா இது பெரிய சந்தோசமான விஷயமாச்சேப்பா....ஒன்னு செய்யேன் போயி அதோ நிக்குறானே அரபி செக்கியூரிட்டி அவன்கிட்டே சொல்லேன் அவனும் கொஞ்சம் கடுப்பாகட்டுமே...!"
அவனிடம் போகிறான்....

"ஹலோ டியர் பாரு, உங்க ஊருப்பொண்ணு என்னை நேசிக்கிறாள் தெரியுமா..?!"

அவனும் ஆச்சர்யமாக [[ஜாலி டைப்]]

"ஒ அப்பிடியா...? வல்லா ஆச்சர்யமா இருக்கே....அப்பிடி என்னதான் சொன்னாள் சொல்லு...?"

"ஜஹாஸ் என்று சொன்னாளே..."

"ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....." [[அரபி வயிற்றை கையில் பிடித்து கொண்டே அலறி சிரிக்க...]]
நம்மாளு கலவரமாகிட்டான்.....அரபி செக்கியூரிட்டி சும்மா இருந்தானா...கொய்யால எல்லாருகிட்டேயும் சொல்லி சொல்லி, மொத்த ஹோட்டல் ஸ்டாஃபும் சிரியோ சிரின்னு சிரிச்சு பெரிய காமெடி கலாட்டாவே நடந்துருச்சு...!

படுபந்தாவா வலம் வந்த காபி ஷாப் மானேஜர் அதன் பிறகு காபி ஷாப்பை விட்டு வெளியே வருவதே இல்லை....[[இதற்குதான் ஆசைப்பட்டாயா நீ ஹி ஹி ]]

சரி அப்பிடி அந்த அரபிச்சி என்னய்யா சொன்னாள்...?
"நீ ஒரு பெரிய கழுதை" [[ஜஹாஸ்]]
---------------------------------------------------------------------------
இன்னும் ஒரு ஜோக்.....
தீ அலாரம் ஹோட்டலில் அடிக்கவும், முறையே சைலன்ட் பண்ணும் விதம் தெரியாமல் நான் மேனுவல் பார்த்து முயற்சி பண்ண சற்று தாமதாகிவிட....ஃபயர் இஞ்சினியர் [[தமிழர்]] ஓடிவந்து டென்ஷன் ஆக, நான் ஃபயர் ஸ்டேசன் போன் பண்ணி ஃபால்ட் அலாரம் என்று விளக்க [[இல்லைன்னா உடனே தீ வண்டியோடு வந்து விடுவார்கள் சைரன் அடித்துக்கொண்டு]] 

ஃபயர் பிரச்சினை என்றால் அதன் உத்திரவாதி இந்த இஞ்சினியர்தான், மனுஷன் செம டென்ஷனாகி எங்கே புகை வருகிறது என்று கண்டுபிடிக்க ஓடிக்கொண்டிருந்தவர்....

ஹோட்டலில் முக்கியமான நபர்களுக்கு வாக்கிடாக்கி கொடுக்கப்பட்டிருப்பதால், உடனுக்குடன் தகவல் அறியலாம்...அந்த வகையில் தகவல்கள் ஆங்கிலத்தில் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

அன்னைக்கு நம்ம இஞ்சினியருக்கு என்னாச்சுன்னே தெரியல...."மனோஜ் அண்ணா காப்பாத்துங்க அண்ணா" என்று பத்தாவது மாடியில் இருந்து தமிழில் வயர்லெசில் கதறிவிட....மொத்தபேருக்குமே ஷாக்....! பிரச்சினையை சால்வ் பண்ணி கம்ப்ளேயின்ட் இல்லாமல் பண்ணிவிட்டேன் அவருக்காக....

ஆனால் ஜி எம்மில் இருந்து முக்கிமுக்காத டேமேஜர்களுக்கு "அதுக்கு" என்னா அர்த்தம்னு பதில் சொல்லி தாவு தீர்ந்து போனது எனக்கு, சொன்னவர்  என் பெயரை சொல்லாமால் சொல்லி இருக்கலாம், கொய்யால "மனோஜ்" அண்ணா காப்பாத்துங்க அண்ணா என்று என் பேரை சேர்த்து சொல்லி கொடுமை படுத்திட்டார் போங்க...

இனி ஹோட்டல் உள்ளே இந்தியன் பாஷையில் பேசக்கூடாது என்று அவருக்கு வார்னிங் லெட்டர் மட்டும் கொடுத்து இருக்கேன். பாவம் என் உயிர் தமிழ் இல்லையா...?

Sunday, October 21, 2012

சிலர் நலம் வாழ நாம் ஏணிப்படி ஆவதில் தப்பில்லை...!

என்னோடு எங்கள் ஹோட்டலில் ஏசி மெக்கானிக் வித் எலக்ட்ரீஷியன் வேலை செய்யும் ஒரு சேட்டன், நான் புதிய ஸ்டாஃப் அவனோ நான்கு வருஷமாக இங்கே வேலை செய்கிறான், அவன் ஊருக்கு போன் செய்வதையும் பேசுவதையும் அடிக்கடி கேட்டுருக்கிறேன், மிகுந்த கடனில் இருப்பது நன்றாகவே புரிந்தது.
ஒருநாள் ஸ்டாஃப் ரூமில் சற்று ரிலாக்ஸாக இருக்கும் போது உள்ளே வந்தவனை சற்று கிளறினேன், குடும்ப மேட்டரை சொல்லி கண்ணீர் விட்டுவிட்டான், எனக்கு என்னடா எதுக்குடா கேட்டோம்னு ஆகிருச்சு, நான்கு வருடங்கள் ஒரே சம்பளத்தில் [[ரொம்ப குறைவு]] வேலை செய்வதாக சொன்னான் [[உண்மைதான்]] அதன் பின்னணி வேறு.
"யோவ் அப்பிடின்னா வேறே இடங்களுக்கு போயி வேலை செய்யலாமே உனக்குத்தான் கையில் தொழில் இருக்கே, தைரியமா போயி வேலை தேடுய்யா....நீ இப்போ வேலை பார்க்கும் ஹோட்டல் பெயரை சொன்னாலே உடனே உனக்கு வேலை கிடைக்குமே..? அதுவும் நான்கு வருட அனுபவம் இருக்கு போய்யா போயி வேறே வேலை தேடு."
"சேட்டா, வேற நல்ல இடத்துக்குப் போகணும்னா நம்ம ஹோட்டல் சர்டிபிக்கேட் கேக்குறாங்க, நான் மானேஜர்கிட்டே சர்டிபிக்கேட் கேட்டதுக்கு எங்கே நான் போயிருவேனொன்னு நினச்சி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க சேட்டா..."

"ஸோ, சும்மா நம்ம ஹோட்டல் சிம்பல் வச்சு நீயா ஒரு சர்டிபிக்கேட் ரெடி பண்ணிறவேண்டியதுதானே..? உங்காளுங்களுக்கு இது புதுசா என்ன...?"
"இல்லை சேட்டா, நம்ம ஹோட்டல் ஒரிஜினல் லெட்டர் பேட்'தான் வேணும், புது இடத்தில் அந்த லெட்டர் பேடின் தரம் மற்றும் தன்மை சோதிக்கப்படும் [[அதாவது டூப்பிளிகட் பணம் செக் செய்யும் மிஷின்]] அதனால ஒன்னுமே செய்யமுடியலை."

"இத்தனை வருஷமா இங்கே இருக்கே, எப்பிடியாவது அந்த பேப்பரை தூக்கி இருக்கலாமே...?"

"இல்லை சேட்டா, ஒருத்தனும் என்னை சீண்டிக்கூட பார்க்கவே இல்லை, என் கவலையும் அவர்களுக்குப் புரியவும் இல்லை...!"
"சரி அந்த லேட்டர்பேட் எங்கே இருக்கு தெரியுமா...?"

"உங்ககிட்டேதான் சார் [[சேட்டன் ஸ்லாங் மாறி இப்போ சார்]] இருக்கு...!"

"என்னாது என்கிட்டே இருக்கா [[ஹி ஹி]]....?"

"ஆமா சார் உங்க ஆபீஸ் ஃபைலில்தான் இருக்கு...!"

[[அடங்கொன்னியா எனக்குத் தெரியாமப் போச்சே]]

"ஸோ....?"

"அனுக்கிரகம் பண்ணவேண்டும்....."

"அதெல்லாம் முடியாது....ஜி எம்'முக்கு  தெரிஞ்சா என் வேலை போயிரும் ஆளை விடுய்யா...."
"சார் சார் பிளீஸ் இதை வெளியே யாருகிட்டேயும் சொல்லி என்னை மாட்டிவிட்டுறாதீங்க சார் பிளீஸ்...."

"நான் என்ன உங்க ஊர்காரன்னு நினைச்சியா போய்யா..."

அதுக்கப்புறம் எனக்கு மனசு கேக்கவேயில்லை, இவனின் சம்பளக்குறைவும், குடும்பபாரமும் மனசை குடைய ஆரம்பிச்சுது, நாமளும்தான் குடும்பபாரம் சுமக்கிறோமே நமக்குத் தெரியாதா என்ன...? கவலையாக சிலநாள் கழிந்தன, என்னை பார்க்கும் நேரமெல்லாம் பயந்து ஒதுங்க ஆரம்பித்தான் அவன், ஒருநாள்.....

எங்கள் ரிஷப்சன் ஏசி பழுதடையவே, இவர்களின் டிப்பார்ட்மெண்டை வயர்லஸ்ல் அழைத்தேன் அப்போது டியூட்டியில் இருந்தவன் இந்த சேட்டன், ஏசியை சரி செய்வதற்கு இவன் மட்டுமே தனியாக வந்தான், நானும் ரிஷப்சனில் அப்போது தனியாக இருந்தேன்.

ஏசி வேலை செய்துகொண்டிருந்தவனை பார்த்து என் மனசுக்குள் அவன் நிலைமையை நினைத்துப்பார்த்து வேதனை அடைந்தவனாக........அந்த லேட்டர்பேட் இருந்த டிராயரை ஒப்பன் பண்ணி காட்டினேன்...

"இங்கே பாருய்யா நீ சொன்ன லேட்டர்பேட் இதுதானே...?"

"ஆமாம் சார்...!"

"ஓ சரி, அப்போ இது இந்த டிராயரில் இருக்கு, வேணும்னா உனக்கு பத்து நிமிஷம் டைம் தருகிறேன், நான் கெஸ்ட் கூடப் பேசிட்டு இருக்கும்போது, எனக்கே தெரியாமல் இதை நீ லவட்டிக்கொண்டு போகவேண்டும் முடியும்னா எடுத்துக்கொள் அப்புறம் உன் இஷ்டம்"ன்னு  சொல்லிட்டு நான் ஃபிரன்ட் ஆபீஸ் வந்துவிட்டேன்...[[சேட்டன்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன]]

சிலநாள் கழித்து கேள்விப்பட்டேன் சேட்டன் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாகவும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை கிடைத்துவிட்டதாகவும் அறிந்தேன்....மனதில் சந்தோசம்.....அன்று நிம்மதியாக தூங்கினேன்...!

இது நியாயமா...? தர்மமா...? என்றால் என்னிடம் பதில் இல்லை......எனக்கு அவனின் கண்ணீரும் கம்பலையுமே கண்ணின் முன் நின்றது...! [[எங்கள் ஸ்தாபனத்தில்  பலருக்கு அவர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம் இல்லை என்பதும் உண்மையே...!]] 

அவனவன் வேதனையும் வலியும் படும் அவனவனுக்குதான் தெரியும் இல்லையா....!

டிஸ்கி : மேலே இருக்கும் ஒரு ஹோட்டலில்தான் நானும் குப்பை கொட்டுகிறேன், ஆனால் அது எந்த ஹோட்டல்'னு காட்டமாட்டேன், என் முக்கிய நண்பர்களுக்கு தெரியும் ஹி ஹி....
------------------------------------------------------------------------------------------
ஒரு ஜோக்...

"இவரு நல்லா பாடுவாருன்னு ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்"

"அப்புறம் என்னாச்சு...?"

"எழும்பி மைக்கை பிடிச்சு பாட ஆரம்பிச்சுட்டார்"

"அய்யய்யோ அப்புறம்...?"

"அப்புறம் என்ன...பொதுவா மேடைக்கு கீழே இருக்குறவனுகதான் சாவானுங்கன்னு பார்த்தா....கொய்யால அவனுக ஓடி தப்பிச்சுட்டாணுவ....."

"அப்புறம் என்னாச்சுய்யா...?"

"என்ன நொன்னே ஆகும்...? மேடையில இருந்த தலைவனுக ஓடமுடியாம மண்டையை பூட்டானுக..."

ஆஹா இப்பிடியும் ஒரு ஐடியா இருக்கா...? எலேய் விக்கி அண்ணே, இது என் சொந்த சரக்கு அதனால இது பாடத்துல வரனும், அண்ணனுக்கு தஞ்சாவூர் கோவில்ல சேலை ச்சே செலை வச்சி கல்வெட்டுல எழுதனும் சொல்லிப்பூட்டேன் ஆமா...!

Thursday, October 18, 2012

தமிழ் எங்கள் உயிர்மூச்சு...!

என்னய்யா நீ தமிழ் தமிழ்னு உயிரை விட்டுட்டு இருக்கே உன் பிள்ளைக்கு தமிழில் பேசக்கூடத் தெரியலையே, இப்படி அநேகர் என்னிடம் கேட்டதுண்டு, அண்மையில் குழந்தையோடு பேச மும்பைக்கு போன் செய்த "மனதோடு மட்டும்"கவுசல்யா தமிழில் மகளிடம் பேச, என் மகளுக்கோ தமிழ் பேச வரவில்லை...! அப்புறம் நான் மேலே சொன்ன வாக்கியத்தைதான் அவர்களும் என் வீட்டம்மாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார்கள்.
என் பிள்ளைங்களுக்கு தமிழ் பேசத்தெரியாது வாசிக்கத்தெரியாதுன்னு பெருமையா பேசிகிட்டு திரிந்த பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சலாகவும் மூஞ்சில நாலு அப்பு அப்பனும் போலவும் இருந்த காலம் உண்டு, ஆனால் நான் பெருமையாக சொல்லாமல் மனசுக்குள் கூனிக்குறுகி இருக்கேன் பல இடங்களில்.
நாங்கள் வளர்ந்த வாழ்ந்த சூழ்நிலைகள் அப்படி, மும்பை ஒரு யுத்தபூமி, அடிக்கடி இடமாற்றம் நடப்பதுண்டு எல்லார் குடும்பத்திலும், நிரந்தரமாக தங்கி இருக்குறாப்ல நம்ம ஊரை மாதிரி அங்கே கிடையாது, கூடியமட்டும் அஞ்சி வருஷத்துக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு வேறு இடம் போயி விடுவார்கள் மும்பை தமிழ்வாசிகள்...!
என் குடும்பம் மட்டுமே நிலையான ஒரே இடத்தில் இருக்கிறோம், அதுவும் நான் வெளிநாட்டில் இருப்பதாலோ என்னவோ..? இப்போ மும்பையில் தமிழ் ஸ்கூல் கிடையாது அப்படியே தாராவியில் இருந்தாலும் எங்களுக்கு அம்புட்டு தூரம் போக இயலாது.
என் அக்கா குடும்பம் எங்கள் ஏரியாவில் இருந்தபடியால் [[அக்காவையும் மும்பையில்தான் கல்யாணம் செஞ்சி குடுத்துருக்கோம்]] என் மகன் தமிழ் எழுதப்படிக்க கற்றுகொண்டான், என் அக்கா ஹிந்தி எழுதப் படிக்க தெரிந்திருந்தாலும் யாரிடமும் ஹிந்தியில் பேசமாட்டாள், கேட்டால் ஏன் தமிழுக்கு என்ன குறைச்சல், வேண்ணா அவங்க என்கிட்டே இருந்து தமிழ் கத்துக்கட்டும் என்று கறாராக சொல்லிவிடுவாள் [[தமிழ் பக்தி]] மராட்டிகாரர்கள் அக்காவிடம் தமிழ் பேச கற்று கொண்டார்களோ பின்னே காய்கறி கடைக்கு போனால் அக்கா கேட்கும் காய்கறிகள் அனைத்தும் அவர்கள் சமத்தா எடுத்து கொடுப்பதை பார்த்துருக்கிறேன்...!
என் மனைவி வீட்டில் அவர்கள் அக்கா தங்கச்சி அண்ணன் தம்பிகள், இவர்கள் யாருமே தமிழில் பேசுவதே கிடையாது, காரணம் இவர்கள் மும்பையில் பிறந்து மராட்டிய இன்னும் பல மாநிலத்தவர்கள் மத்தியில் வாழ்ந்தபடியால், ஹிந்தியிலேயே பேசிப் பழகிவிட்டார்கள், இவர்கள் அம்மாவும் என் அக்கா மாதிரிதான்,வீட்டில் அம்மாவோடும் அப்பாவோடும் தமிழ் பேசுவார்கள்....ஆக வெளியிலோ அல்லது வீட்டிற்குள் சொந்தங்களுடன் பேசும்போதும் ஹிந்திதான்.
என் பையன் பிறந்து வளரும்போது என் மாமியார் அருகில் இருந்தபடியாலும், என் அக்காளின் படிப்பாலும் தமிழ் "ஓரளவு" கற்று கொண்டான், ஆனால் மகள் வளரும்போது என் மாமியார் உயிருடன் இல்லை, என் அக்காக்களும் தூரமான இடங்களுக்கு போய்விட்டார்கள்.
சரி தமிழ் டியூசனாவது சொல்லிக்குடுக்க யாராவது இருக்காங்களா என்று பார்த்தாலும் யாரும் இல்லை, என் மனைவிக்கோ தமிழ் வாசித்தாலும் அதன் உள் அர்த்தம் தெரியாது, ஸோ நானும் அருகில் இல்லை, எனவேதான் நாங்கள் ஊருக்கு வரும் வேளையில் கொஞ்சி கொஞ்சி தமிழ் கற்று பேசுவாள், நானும் தமிழில் பேசியே பழக்குவேன், தாயாரிடம் பேசும்போது ஹிந்தியில் ஆரம்பித்து விடுவாள்...!
மறுபடியும் மும்பை வந்ததும் கற்ற தமிழ் மறந்துவிடும் அவளுக்கு, என்ன செய்யவென்று நாங்கள் வாழும் சூழ்நிலையை நினைத்து தலையில் அடித்து கொள்வதை தவிர வேற வழியில்லை. 
மும்பையில் கல்யாணம் ஆகி வீட்டம்மாவை ஊருக்கு கூட்டி வந்துட்டு, அவளுக்கு தமிழ் கற்று கொடுக்க நான் பட்டபாடுக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்லுறேன், பைக்கில் கன்னியாகுமரி டூ நாகர்கோவில் வரும் வழியில், வயல் வெளிகளை வீட்டம்மாவுக்கு காட்டிக்கொண்டு வந்தேன். மற்றும் வயல் அருகில் அழைத்து சென்றும் காட்டினேன்.
"அதோ பார் அதான் வயல்"

"வயல்னா...?"

"நெல்லு புள்ள..."

"நெல்லுன்னா...?"

"அரிசி அரிசி கொய்யால..."

"திட்டாதீங்க என்ன...? அத்தான் பக்கத்துல கூட்டிட்டு போங்களேன்"

வயல் அருகில் போனதும் ஒரு நாத்தை மட்டும் கையில் புடுங்கி எடுத்தவள் கேட்டாள் பாருங்க...!

"அய் அத்தான் இதுதான் "அரிசி மரமா...?"
ஸ்ஸ்ஸ்ஸ் அபா......அன்னைக்கு கட்டுன கண்ணுதான் இன்னும் தொறக்கவே இல்லை....!

இது எங்கள் நாடோடி வாழ்க்கையின் கஷ்டங்களின் சூழ்நிலைகளா, சூழ்நிலையின் கஷ்டங்களா எப்படியென சொல்லத்தெரியவில்லை.....போனில் பேசும்போது விக்கி"யின் மகன் அழகாக தமிழ் பேசுவதை மிகவும் ரசித்து கேட்பேன், அழகா கத்து கொடுத்து வச்சிருக்காங்க அவன் வீட்டம்மா...! ம்ம்ம்ம் நமக்கு கொடுப்பினை இல்லை அம்புட்டுதான்...!
---------------------------------------------------------------------
உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ, ரசிக்க இதோ ஒரு இலவச தளம், என்ஜாய்....!


Thursday, October 11, 2012

எவம்லேய் அங்கே கல்லை தூக்குறது...?


மனோ"தத்துபித்துவங்களும், புலம்பல்களும்....!

 @பார் ஓய்ந்தாலும் பார்"கள் ஓய்வதில்லை...!

@கனவுகள் மெய்ப்பட, அந்த கனவுகள் நினைவில் நிற்பதில்லை...!

@சில்லறைகள் வாழ்க்கைக்கு உதவுவது இல்லை...!

@அழகும் பணமும் நிலைப்பதில்லை, போய்விடும்...!
[[கனகா....ம்ம்ம்ம் எப்பிடி இருந்தவங்க...அழகும் மாயையே...!]]

@நஞ்சிருக்கும் இடத்தில் அமுதம் இருக்குமானால் திரும்பிப் பார்க்காமல் நஞ்சை குடித்துவிடு...!

@ஓடும் வாழ்க்கையை வளைத்துப்பார், வளைந்தால் அண்டர் கண்ட்ரோல், இல்லைன்னா அவுட்டாஃப் கண்ட்ரோல்...!

@நீ...... நீயே அழைக்காமல் தாசி"யும் திரும்பிப் பார்க்கமாட்டாள்...!

@கண்ணாடியை நம்பாதே சில வேளைகளில் அதுவும் பொய் சொல்லும்...!

@கர்நாடகா"காரனை திட்டாதே ஏன்னா நம்ம சூப்பர்ஸ்டார் மனசு வலிக்கும்...!

@நாக்கில் காயம் வந்தால் ஆறிப்போகும் ஆறாதே நாவால் பட்ட காயம்...!

@என்னைப் பார்த்து ஏமாந்து விடாதே நான் இப்போதும் ஒரு குடிசைவாசிதான், வெளிநாட்டில் இருந்தாலும் ஏழையாகவே இருக்கிறேன் இன்னும்...!

@மது அருந்தினால்தான் கண்கள் சிவக்கும் என்று எவன் சொன்னான்...? ரசம் கொட்டும் உன் இதழ்களைப் பார்த்தாலே எனக்கு கண்கள் சிவக்கிறதே...!

@களவும் கற்று மறக்குமுன், அடிவாங்குறது யாரு உன் பாட்டனா...?

@பலபேர் மத்தியில் நெருங்கிய பெண்களை நீ ரொம்ப அழகுன்னு சொல்லிப்பாருங்க, ஆஹா அந்த ஷணம் அவர்கள் முகத்தை பாருங்கள், ஆஹா அழகோ அழகா கொட்டும்...! [[அடி வாங்குனா நான் பொறுப்பல்ல]]

@நீல் நதிக்கரையில் நின்னாலும், கங்கை நதிக்கரையில் நின்னாலும், காவேரி நதிக்கரையில் நின்னாலும், தாமிரபரணி நதிக்கரையில் நின்னாலும் காதலை சொன்னால்தான் அடி கிடைக்கும் ச்சே ச்சீ ஸாரி பதில் கிடைக்கும்...!

@வாழ்க்கை வாழ்வதற்கே......நாய்களும் வாழ்வதற்கே...... ஸோ வாலு ச்சே வாழு, வாழவிடு...!

@அலைவரிசை மாறும்போது யுத்தம் தன் கடமையை செய்கிறது...!

@தஞ்சாவூர் பொம்மை மட்டும்தான் தலையாட்டுமா...? ஏன் எங்கள் பிரதமருக்கு என்ன குறைச்சலாம்...?

@டி ராஜேந்தர், பவர்ஸ்டார், ரித்தீஷ் இவர்களைப் போன்றோரை மட்டும் குறி பார்த்து அவர்கள் "பவரை" புடுங்குவதின் நோக்கம் என்ன...? பொறாமையா கடுப்பா...?

@காருல போறவனுக்கே வலிக்குதாம், தக்காளி அப்போ நடந்து போறவனுக்கு...?

@வண்ண வண்ண கலர்களில் வண்ணப்பூக்கள் சுற்றி பறந்தாலும், மொய்த்தாலும் மனம் அதில் லயிக்கவேயில்லை ஏனோ...!!!

@மாதவிகளும் அவர்களுக்கான ரூல்ஸ் பேசுகிறார்கள் ஆச்சர்யமாக இருக்கு, ஒவ்வொரு ஆணும் பர்ஸில் ஆணுறை வைத்து கொல்லவேண்டுமாம் ச்சே ஸாரி கொள்ளவேண்டுமாம் அவ்வ்வ்வவ்....!!! 

@நான் மிகவும் ரசிப்பது, எங்கள் சிபி அண்ணனின் அழகும், ஆபிசரின் கம்பீரமும், விக்கி"யின் சுறுசுறுப்பும், விஜயனின் நிதானமும்...!

@கற்பனைகளும் ஒரு குரங்குதான்...!

@"நாள்தோறும் மோர் சாப்பிடாதே வயிறுக்கு நல்லதல்ல"

"என்னய்யா டாக்டரே மோர் நல்லதுன்னு சொல்றாங்க நீ வேறே"

"டாக்டர்கள் அப்பிடி பலதும் சொல்லுவாங்க, ரோகி இல்லைன்னா அவிங்களுக்கு பொழப்பு எப்பிடி ஓடும்...? அதான் மோர் குடிக்க சொல்லி ரோகம் வரவைக்குறாங்க"

அடங்கொன்னியா இப்பிடியும் கிளம்பிட்டீங்களாடா...?

@உன் கோபங்கள் பூங்காற்றை திசை மாறச்செய்யாது...!

@உன் அன்பும் புயலை அடக்க முடியாது, அதது தன் தன் கணக்கை முடித்துவிட்டே செல்கிறது...!

எம்புட்டு அடிக்கனுமா பின்னூட்டத்துல வந்து அடிங்க, எனக்காக அடிவாங்க நம்மகிட்டே ஆள் இருக்கு....!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!