Saturday, December 29, 2012

அப்பாடா இனி ஒருவருஷம் இவன் தொல்லை இருக்காது...!


வலைப்பதிவுகளில் அழகான தரமான எழுத்து நடையில் எழுதி வந்த சில கன்னியாகுமரி மாவட்டம் பதிவர்கள்  [[தமிழ் தெரிந்த மலையாளிகள் ]] எழுதுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார்கள்...!?

நான் பதிவுலகம் வந்த புதிதில்,மிகவும் பிரபலமாக இருந்த பதிவர் ஒருவரை சிலர் "நீ மலையாளி நாயர்தானே" என்று கிண்டலும் கோபமுமாக கமெண்டியதால், வெறுத்து போயி கிளம்பி விட்டார்கள்.
அவர்களின் தமிழ் எழுத்துகளுக்கு நான் ரசிகனாக இருந்தேன், கவிதைகள் புரியும் விதத்தில் அழகாக புனைவார்கள், சாடல் கோபம் கிண்டல் காதல் கல்யாணம் என்று வெரைட்டியாக நகைச்சுவை கலந்து எழுதி வந்தார்கள், வாசிக்க வாசிக்க ரசனையாக இருக்கும்...!

நம்மாளுகளுக்கு ஒருத்தன் நல்லா இருந்தாலே அவன் பூர்வீகத்தை தோண்டி [[நோண்டி]] பார்க்கும் குணம் எங்கிருந்து வந்துச்சோ தெரியல...!

தமிழை விரும்பிப் படித்து எழுதும் மற்ற மாநில நண்பர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், காரணம் எனக்கு மலையாளம் கற்று தந்த மலையாளி நண்பன் மோகன்சி, நான் மலையாளம் படிக்க ஆர்வமாக இருந்தேனோ இல்லையோ ஆனால் அவன் மிகவும் ஆர்வமாக மலையாளம் எழுத வாசிக்க கற்று தந்தான்.
அவர்கள் மொழியை நான் படிப்பதை அவர்கள் பெருமையாகவே கருதுகிறார்கள், எங்கே போனாலும், மலையாளிகள் அவர்கள் மொழியில் பேசுகிறார்கள், மராட்டியர்களும் அப்படியே....!

இந்தமுறை நான் ஊர்[[மும்பை]] போனபோது, எங்கள் ஏரியா கீரைத் தோட்டத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போனதையடுத்து, போலீஸ் விசாரனை ஆரம்பம் ஆனது, கீரைத்தொட்டத்தில் எங்கள் நண்பர்களே அதிகமாக அங்கே கொட்டம் அடிப்பதால், நண்பர்கள் மீது போலீஸ் பார்வைவிழ....

நண்பன் கிருஷ்ணா போலீஸ் இன்ஸ்பெக்டருடன் மராட்டியில் பேசி விஷயத்தை அவர்களுக்கு புரியவைத்ததுடன், சம்பந்தம் இல்லாத எங்கள் நண்பர்களையும் விசாரணையில் இருந்து காப்பாற்றினான்.

இவன் பேசிய மராட்டியை ரசித்த போலீஸ்காரர்களுக்கு அது பெருமையாக இருந்தது, ஒரு தமிழன் அழகாக மராட்டி பேசுகிறானே என்ற ஒரே காரணத்துக்காகவே எங்கள் நண்பர்களை போலீஸ் சுற்றி வளைக்காமல் விட்டது என்றே நான் மனதில் நினைத்துக்கொள்வேன்.

ஆம் அவர்கள் மொழியை அடுத்தவர்கள் பேசுவது அவர்களுக்குப் பெருமையாகவே இருக்கிறது.

இனி ஒருவாரத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம் சொல்றேன் பாருங்க....

எங்க ஹோட்டல் ரிசர்வேஷனை செக் பண்ணும்போது, சென்னையில் இருந்து சுப்பிரமணி அய்யர் என்ற பெயரில் ஒருவர் வருவதாக பார்த்தேன்...
அவரும் வந்தார் கூடவே ஒரு மலையாளி டாக்சிகாரன், என் முன்னிலையில் மலையாளியோடு அழகாக தமிழ் பேசினார்,  நான் தமிழில் பேசியபோதோ அண்ணாச்சி ஆங்கிலத்தில்தான் பேசினார், நான் எவ்வளவோ அவரைத் தமிழ் பேசவைக்கவேண்டும் என்று நினைத்தேனோ அவ்வளவு ஆங்கிலத்தில் டாக்கினார்...முடியாமல் போடாங்கொய்யா என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

ஸோ ஏன் நம்மாளுங்க இப்படி இருக்கிறார்கள்...? தமிழ் வாழனும் வாழனும் என்று வெறும் காற்றை ஊதினால் இப்படிதான் இருக்கும்.

தமிழ் நல்லா வாழும்டேய் போங்க...

தமிழ் எழுதுவோரை வாழ்த்துவோம், தமிழை நேசிப்பவரை நாமும் நேசிப்போம் அதுவே தமிழனுக்கு அழகு...!
----------------------------------------------------------------------------------------

இந்த வருஷம் சிறந்த எழுத்தாளர், சிந்தனை[!]யாளர், இணையதள போராளி, இணையத் தளபதி, இப்பிடியெல்லாம் விருது தரப்போறதாக தினமலர், குங்குமம், ஆனந்தவிகடன், குமுதம், சிபி, பன்னிகுட்டி, டெரர் குரூப் இன்னும் பலர் அழைப்பு விடுத்த வண்ணம் இருப்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது [[சரி சரி விடுங்க விடுங்க]] 
அவனவன் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டுறான்னா நீ கண்ணுக்குள்ளே காலையே விட்டு ஆட்டுறியேன்னு கல்லை தூக்கிறாதீக...

இனி இந்த வருஷம் முழுவதும் பதிவு எழுதவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணிருக்கேன்,  அடுத்த வருஷம் எழுதுறேன் போதுமா...? சந்தோஷமா...? 

Sunday, December 23, 2012

பெண்மையை அடுப்பங்கறையில் அடைத்துவிடாதீர்கள்...!


வெண்ணிலா என்று ஒரு தோழி[[பெயர் மாற்றப்பட்டுள்ளது]], கவிதைகள் புனைவதில் வல்லவர், சிரிப்புகள் கொளுத்தி போடுவதில் மொத்த மனசும் ரிலாக்ஸ் ஆகிவிடுமளவுக்கு சொந்தமாக ஜோக் எழுதிய அந்த சகோதரியை அவர்கள் வீட்டய்யா எழுத விடாமல் தடுத்ததை அடுத்து, அவர்கள் வேறு பெயர்களில் வந்தாலும் கண்டுபிடித்து தர்க்கங்கள் நடந்ததால்....இப்போது பிளாக், பேஸ்புக் வாசிப்பதோடு சரி, எழுத முடியாதபடி பண்ணி விட்டார்கள். 
அவர்கள் ஒருநாள் சாட்டில் வந்து அழுதுவிட்டு போனதோடு சரி, ஆளையே காணவில்லை, "எங்கிருந்தாலும் உங்கள் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருப்பேன்னு சொல்லிட்டு போனாங்க", அதுதான் கடைசி....!

அவங்களைப்போல நிறையபேர் இருக்காங்க, ஆபீசில் வேலை செய்யும்போது வாசிக்கலாம், ஆனால் எழுத முடியாது [[டைப்பிங் சத்தம்]] வீட்டிலோ நெட் கனெக்ஷன் கிடையாது, அவர்கள் என்னசெய்வார்கள்.?

உலகம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு முதன்முதலாக இணைய உலகில் நாம் வரும்போது, எல்லாவற்றையும் தெரிந்துகொண்டா வந்தோம்...? நான் மூன்று வருடங்கள் இணையதளம் வாசித்தபின்பே நண்பர்கள் உதவியுடன் இணையத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.
மனம் திறந்து உண்மைகளை எழுதமுடியாதபடி மனதிற்குள் புழுங்கும் மனித[[ஷி]]ர்களுக்கு, நம்மை போன்றோர்களின் சுதந்திரமான எழுத்துக்களை பார்த்து, சற்றே ஆறுதல் அடைவார்கள் என்றே நினைக்கிறேன். 

காரணம், அவர்களின் மொத்த குடும்பங்களும் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருப்பார்கள், சின்னதாக ஒரு எழுத்து மாறிவிட்டாலும் குடும்பத்தில் பஞ்சாயத்தை கூட்டி விடுவார்கள், அம்புட்டு கெடுபிடிகள் உள்ளவர்களையும் நான் அறிவேன்.

நான் எழுதுவதை என் மொத்த குடும்பத்தினரும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார்கள், சுதந்திரமானது மற்றவர்களின் சுதந்திரத்தை பரிக்காவண்ணம் நாம் இருப்பது மிகவும் முக்கியம்.
இன்றைக்கு உலகம் கைகளுக்குள் அல்ல, விரலிடுக்கில் வந்துவிட்டது,  இணையம் மூலமாக எல்லாவற்றிர்க்கும் தீர்வு சொல்கிறார்கள், மருத்துவமா, ஆன்மீகமா, தாம்பத்தியமா, விவாகரத்தா, ஏன் எதற்கு எப்படி என்று அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது சமூக வலைத்தளங்களில்....

பெண்கள், அவர்கள் மனைவியாக இருக்கட்டும் சகோதரிகளாக இருக்கட்டும், எழுத வாசிக்க அனுமதியுங்கள் அவர்கள் சுதந்திரத்தின் எல்லைகளை அவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர்வதாயின் பிரசினைகளே இல்லை என்பதே உண்மை...
ஆக்டிவேட்டாக இல்லை என்பதற்காக, உங்களை தொல்லைகள் செய்யாமல் இருப்பவர்களை பதிவுலகத்திலோ, பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலோ  பிளாக் செய்து முடக்கி விடாதீர்கள், தொல்லைகள் செய்பவர்களை உடனே பிளாக் செய்யுங்கள் அதில் நியாயமுண்டு...!

நான் எப்போவோ எங்கேயோ படித்த ஒரு கதையுண்டு...

புது மணத்தம்பதிகள் சந்தோஷமாக தேன்நிலவு முடித்துவிட்டு பஸ்சில் ஊர் திரும்புகிறார்கள், பஸ்சில் தன்னோடு பிரயாணம் செய்த ஒரு குழந்தையோடு அந்தப்பெண் கொஞ்சி குலாவியபடி வருகிறாள்...

இவர்கள் ஊர் வந்ததும் பஸ்சில் இருந்து இருவரும் இறங்குகிறார்கள், கொஞ்சதூரமே போன பஸ்மீது மலையில் இருந்து உருண்டு வந்த பெரியகல் விழுகிறது, பஸ்சில் பயணித்த யாவருமே இறந்து போகிறார்கள்...
கணவன் சொல்கிறான் "அப்பாடா நாம இங்கேயே இறங்கினபடியால் தப்பித்தோம்" என்று சந்தோஷமாக சொல்கிறான்.

ஆனால் அந்த பெண்ணின் கண்ணோட்டமோ வேறாக இருந்தது..."நாம இங்கே இறங்கினபடியால்தானே எல்லாரும் செத்துபோனாங்க, நாம இங்கே இறங்கலைன்னா ஐந்து நிமிஷத்தில் பஸ் அந்த இடத்தை தாண்டி போயிருக்குமே, எல்லாரும் நலமாக இருந்திருப்பார்களே..." என்று கதறி அழுகிறாள்...

அதுதான் பெண்மை, அவள்தான் பெண்...பெண்கள் நாட்டின் கண்கள் என்று குருடாக இருக்காமல், பெண்கள் நமது கண்கள் என்று போற்றுவோம்....

மனதின் தோன்றல்கள் தவறு இருப்பின் மன்னிக்க....

Monday, December 17, 2012

நன்றி மறப்பது நன்றன்று, ஒரு குமுறல் ரிப்போர்ட்...!

வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் கண்டுகொள்வதில்லையா, இல்லை நமக்கென்ன நம்ம வேலை முடிஞ்சுதா போயிகிட்டே இருப்போம் என்ற மனநிலையா என்னவென்று புரியவில்லை எனக்கு, சில விஷயங்களை சொல்கிறேன் சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்கப் பார்ப்போம்...?
விமானத்தில் பயணம் செய்த நாம், பத்திரமாக தரை இறங்கியபின், விமானத்தை விட்டு இறங்கும்போது அந்த விமான ஒட்டிக்கோ அல்லது விமான பணிப்பெண்ணுக்கோ நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் முகங்கள் நமக்கு நியாபகம் இருப்பதுண்டா...?
தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும்போது, அந்த ரயிலில் எத்தனை ரயில் ஓட்டுனர்கள் இருந்தார்கள், எத்தனை பேர்கள் மாறி வந்து ரயிலை இயக்கினார்கள், பத்திரமாக ஊர் வந்து இறங்கியபின் அவர்களுக்கு நன்றி சொன்னதுண்டா [[மனதிலாவது]] அவர்கள் முகங்கள் நியாபகம் இருப்பதுண்டா...?
டவுன் பஸ்ஸாக இருக்கட்டும், தொலைதூர பேருந்தாக இருக்கட்டும், மாட்டுவண்டியைவிட கேவலமாக ஓட்டுறானே பேசாம நடந்து போயிறலாமோ என்று கிண்டல் பேசும் நாம், பத்திரமாக ஊரில்போயி இறங்கும்போது அந்த ஓட்டுனருக்கு நன்றி சொன்னதுண்டா...? அவர் முகம் நமக்கு நியாபகம் இருப்பதுண்டா...?

ஆட்டோக்காரனை திட்டிக்கொண்டே ஊர்வலம் போகும் நாம், டிப்பர் லாரிக்கும், தண்ணி லாரிக்கும் நம்மை தப்புவித்து கொண்டு சேர்த்தமைக்கு, அவனுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? அவன் முகம் நியாபகம் உண்டா...?
அறுவடை நாட்களில் அதிகாலையில் உறக்கம் களைந்து வந்து, உங்கள் வயல்களை அறுத்து உங்கள் களஞ்சியங்களில் சேர்த்த உழைப்பாளிகளுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் ஏழைமுகம் நம் நியாபகத்தில் இருப்பதுண்டா...?
பசியாக ஹோட்டலில் சாப்பிடப்போனால், அவன் பசியையும் பார்க்காது நமக்கு அன்பாக உணவு பரிமாறிய சர்வருக்கு நாம் நன்றி சொன்னதுண்டா..? அவன் முகம் நமக்கு நினைவிருப்பதுண்டா...? அங்கே அதே சமையலை சமைத்து தந்தவரின் முகங்களை நாம் பார்த்ததுண்டா...? அந்த ஏழைப்பட்ட மனிதனுக்கு நாம் நன்றிகள் சொன்னதுண்டா...?
நாற்றத்தைப் பொருட்படுத்தாது, ஒரு குவாட்டரை உள்ளே தள்ளிவிட்டு, நம் வீட்டு கழிவறைகளை சுத்தம் செய்பவனுக்கு நாம் நன்றி சொன்னதுண்டா...? பேரூந்து நிலையங்களின் கழிவறை குறைகளை சொல்லும் நாம், அங்கே கழுவி சுத்தம் செய்பவருக்கு நன்றி சொன்னதுண்டா...? அவர்கள் ஏழைமுகம் நமக்கு நினைவிலுண்டா...?

கண்ணில்லாமலும், காலில்லாமலும் தன வயிற்றை கழுவ, ஊனமுற்றோர்கள் நடத்தும் டெலிபோன் பூத்களில் போன் செய்யும் நாம் அவர்களுக்கு நன்றிகள் சொன்னதுண்டா...? அவர்கள் ஊனமுகம் நமக்கு நினைவிலிருப்பதுண்டா...?

அதிகாலையில் நம் வீடுகளில் இட்டுப்போகும் நியூஸ் பேப்பர் பையனுக்கு நன்றி சொன்னதுண்டா, அவன் கஷ்டனிலைகளை நாம் அறிந்ததுண்டா...?
ரயில் பிரயாணங்களில் [[தூர]] நம்மோடு ராணுவ உடையில் சேர்ந்துவரும் நாட்டின் எல்லைகாக்கும் வீரர்களின் கரம்பற்றி நாம் நன்றிகள் சொன்னதுண்டா...? அவர்கள் அமர இருக்கைகள் கொடுத்ததுண்டா...? அவர்களை தனிமைப் படுத்தாமல் அவர்களோடு அளவளாவியதுண்டா..? அவர்கள் குழி விழுந்த கன்னங்கள் நினைவிருப்பதுண்டா...?

பணம் கொடுத்தாச்சு, வேலை முடிஞ்சிருச்சு, இதே இப்போதைய மனிதனின் சுயநலமாக போய்விட்டதின் அர்த்தம் என்ன...? அன்பு.... பாசம்.... நேசம்.... அறம்... மனிதநேயம்...உதவிக்கரம்...பண்பு..பொறுமை...நன்றி மறவாமை இதெல்லாம் எங்கேய்யா போச்சு இந்த உலகத்துல....? இந்த எழவுக்காவது உலகம் அழிஞ்சிபோகட்டும் என்றே தோன்றுகிறது...!

என் மனதில் தோன்றிய வேதனைகளை உங்களோடு பகிர்ந்துகொண்டேனே தவிர யாரையும் புண்படுத்த அல்ல, மன்னிக்கவும்...! 

Thursday, December 6, 2012

கேரளாவுக்கு தமிழக தலைவர்கள் கிடுக்கிப்பிடி...!

நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி...?


பத்து நிமிஷத்தில் டாஸ்மாக் கடை பூட்டிவிடும் என்றால், சரக்கு வாங்க எப்படி யாருக்கும் தெரியாமல் [[ஓடமுடியாது]] வேகமாக நடப்பமோ அவ்வண்ணம் தினமும் அரைமணி நேரம் நடந்தால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் உண்டாகும்...!
-----------------------------------------------------------
டாக்டர் : "இம்புட்டு சுகரும், பிரஷரும் இருக்குற நீ ஐ சி யூல இருக்க வேண்டியவன்  ஆச்சே எப்பிடிய்யா நடமாடிட்டு திரியுதே...?"

பேஷன்ட் : "அதான் டாக்டர் எனக்கும் புரியல, உங்க செக்கிங் மெஷின் நல்லா ஒர்க் ஆகுதா இல்லையான்னு இன்னும் பத்துபேரை செக் பண்ணிட்டு சொல்லி அனுப்புங்க அப்புறமா வாறன் வர்ட்டா...."[[நான் இல்லைங்கோ]]
-----------------------------------------------------------
நண்பர் ஒருவர் :"குளிர் காலத்துல ஆறுமாசம் குதேபியாவுல [[பஹ்ரைன்]] இருந்து சல்மானியா ரோடு வழியா வாக்கிங் போ, போகிற வழியில் நிறைய வேப்பமரங்கள் நிக்குது அதின் இலைகளை பறிச்சு தின்னுட்டு தினமும் நடய்யா சுகர் காணாமப்போயிரும்...
அடுத்து, சூடு காலத்துல சுகர் லோ ஆகிருச்சுன்னா, மனாமா மெரீ னா பீச் ஹைவே வழியா வாக்கிங் போ, போகிற வழியில் நிறைய பேரீச்சம் மரம் நிக்குது, அதன் பழங்களை பறிச்சு சாப்புட்டுட்டே தினமும் நடய்யா சுகர் லெவல் ஆகிரும்..."
நானும் முதலில் சொன்ன இடத்துக்கு முதல்நாள் வாக்கிங் போனேன், கொய்யால ஒரு வேப்பமரத்துலேயும் ஒரே ஒரு இலைகூட இல்லை அங்கே...!

ரெண்டாவது சொன்ன இடத்துக்கும் சூடு நேரம் பார்த்துப் போனேன், அங்கே பேரீச்சம் மரமெல்லாம் பனைமரம் உயரத்துக்கு நிக்குது, எப்பிடி பறிக்கமுடியும்...?! சின்ன மரத்துல இருக்குற ஒன்னையும் காணோம்...!

ஆக...அம்புட்டு சுகர் அண்ணாச்சிங்க இருக்காயிங்க போல இங்கே, ஏன்ய்யா பச்சைபுள்ளையை இப்பிடி அலையவைக்குறீங்க...?
---------------------------------------------------------

எங்கள் கேரளாவில் விவசாயம் பரிவர்த்தனைகள் செய்ய மக்களுக்கு பிடிக்கவில்லையா அல்லது அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லையான்னு தெரியவில்லை ஆனால், கேரளாவில் 42 நதிகள் இருக்கிறது [[சரியான்னு தெரியலை]] அதன் நீர்கள் வேஸ்டாகவே ஓடுகிறது, அந்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதால் எங்களுக்கு அங்கேயுள்ள விவசாயிகள் அரிசியும் காய்கறிகளும், பூக்களும் தருகிறார்கள் சொல்ப பணத்திற்கு, தமிழர்கள் கடும் உழைப்பாளிகள் என்பது மறுக்கமுடியாத உண்மை.....!!!

ஒரு மெத்தபடித்த அரபியிடம் பேசிய ஒரு சேட்டனின் உள்ளான அபிப்பிராய கருத்து இது...!
இதைத்தானேய்யா கேரளா பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சக்கரியாவும் எழுதியும் சொல்லியும் வருகிறார்...!
------------------------------------------------------------

அடுத்தும் காங்கிரஸ் கூட்டணியே நடுவில் ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுகள் வயிற்றில் புளியை கரைக்கிறது, பா ஜா க'வில் மக்களை கவர்ந்த ஸ்டார் தலைவர்கள் இல்லை என்பதே இவற்றிற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது...!!

கிழவர்  பொல்லாதவர்தான் போல ம்ம்ம்ம் பயங்கரமாக அரசியல் கணிப்பு கணிச்சிருக்கார்....!
-------------------------------------------------------------

சாட்டிங்கில்....

"அண்ணே, பேஸ்புக்ல போட்டோ அப்லோட் ஆகமாட்டேங்குது என்ன செய்யனும்...?"

"கம்பியூட்டரை கீழே தூக்கிப்போட்டு நாலுமிதி மிதிக்கவும்..."
[[கீழே பர்சனலா அவன் சொன்னது]]
"ஓ அப்பிடியா அண்ணே, எங்கே போனாலும் மும்பை வந்துதானே ஆகனும், அன்னைக்கு வச்சுக்குறேன்"

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....
-------------------------------------------------------------

முல்லைப்பெரியார் மேட்டரில் கேரளாவுக்கு சரியான கிடுக்கிபிடிபோட்டு செமையா முட்டுகட்டை போட்டே வைத்துள்ளார்கள் நம் தமிழக தலைவர்கள், வைகோ அண்ணன் உட்பட, இது கேரளா நண்பர்கள் பேச்சில் நன்றாகவே தெரிகிறது...!
என்னதான் தமிழக தலைவர்களை நாம் திட்டினாலும், இதற்காக வாழ்த்தையும் சொல்ல கடமைபட்டுள்ளோம் நிச்சயமாக...!
------------------------------------------------------------

பாராளுமன்றம் கேன்டீனில் சாப்பிடவாவது ஒருமுறை எம் பி ஆகிவிட வேண்டும்...! அம்புட்டு விலை குறைவாம்...!

மீன்கறி சாப்பாடு வெறும் பதினேழு ரூபாய்...! [[விஜயன் கவனத்திற்கு]]
------------------------------------------------------------

வரிகளை மரியாதையா கொடுக்காதவனேல்லாம் இன்னைக்கு தலைவனும், நேதாக்களுமாக இருந்து தேசியம் பேசுவதுதான் ஆச்சர்யமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது...! சரத்பவாருக்கு கோடிக்கணக்கில் வரிபாக்கி இருக்கிறதாம்...!

[[பக்கி நீ நல்லாயிருடே...அவனுக்கு சுகந்த ஒயின் குடிக்ககொடு, நாடு உருப்படும்]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!