Friday, July 26, 2013

திருநெல்வேலி போலீஸுக்கு அடி உதை, ஏன்...?

ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கப் போனான்.
ஆனா, கடைசியில மனம் திருந்திட்டான்.
*
*
*
ஏன்?
*
*
*
ஏன்னா?
*
*
*
கடைசியிலதான் அவன் காதலி அந்த
வார்த்தையை சொன்னா...
*
*
*
என்ன சொன்னா?
*
*
*

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"

நன்றி : வானம்
----------------------------------------------------------------------------------
அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்//

முதல்ல இந்தாளை தூக்கி கடல்ல போடுங்கய்யா, இந்தாளு வாயை திறந்தாலே அங்கே தமிழனை கொல்கிறார்கள், தமிழன் தமிழன் என்று உசுப்பேத்துற தெலுங்கன் வாழ்க ப்பூப்ப்....
------------------------------------------------------------------------------------
தனித் தெலங்கானா அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதியில் 23 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
------------------------------------------------------------------

நெல்லையில் கைதிகளை ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு சென்ற போலீசாரை வக்கீல்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் 40 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதை கண்டித்து, வக்கீல்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் கோர்ட்டுக்கு வரவும் தடை விதித்துள்ளனர்.
---------------------------------------------------------
கன்னியாகுமரியில் நேற்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 2 படகுகளும் தரை தட்டி நின்றன. இதனால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நீண்ட நேரமாக துவங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து தரை தட்டிய படகுகள் இயல்பு நிலைக்கு வந்தது. தொடர்ந்து படகுகள் இயக்கப்பட்டது.
---------------------------------------------------------
பதினான்காவது வருஷம் கார்கில் வெற்றி கொண்டாட்டம்//

என்னைப் பொறுத்தவரை கார்கில் போரில் நாம் தோற்று விட்டோம்...!
-------------------------------------------------------

அரிதான ஒரு படம், அண்ணன் பிரபாகரனும், அண்ணன் வைகோ"வும் கூட ஒரு புலிக்குட்டி....! உங்கள் பார்வைக்கு.
-----------------------------------------------------------------------

மனோ'தத்துவம் : எல்லாருக்கும் எல்லாமே தெரியும்னு நாம பேசனும்.

18 comments:

  1. கடல் நீர் உள்வாங்குவது என்றாலே அதிர்ச்சியாகத் தான் இருக்கு... அரிய புகைப்படத்திற்கு நன்றி... நல்ல தத்துவம்...!

    ReplyDelete
  2. //மனோ'தத்துவம் : எல்லாருக்கும் எல்லாமே தெரியும்னு நாம பேசனும்.//
    மகா தத்துவம்.

    ReplyDelete
  3. //"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"//
    உடனே மலையிலிருந்து குதிச்சிருக்கணுமே! ஹா ஹா

    ReplyDelete
  4. ///அனைத்து நாடுகளிலும், வாழும் இலங்கை தமிழர்களிடையே, பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு தீர்வு காண்பது தான், இலங்கை தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்//


    அனைத்து நாடுகளிலும், வாழும் திமுக உறுப்பினர்களை வைத்து பொது ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களின் கருத்தைக் கேட்டு திமுக கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதுதான் தான், திமுகவின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும்' என, திமுக தொண்டர்கள் கூறுவது தலைவர் காதுக்கு விழ வில்லையா

    ReplyDelete
  5. தங்கச்சியா தங்கச்சியா எங்க இருக்கு ? அட்ரஸ் கொடுங்கப்பா

    ReplyDelete
  6. மிகவும் அரிதான புகைப்படம்,, நன்றி மக்கா...

    ReplyDelete
  7. Avargal UnmaigalJuly 26, 2013 at 7:55 PM

    தங்கச்சியா தங்கச்சியா எங்க இருக்கு ? அட்ரஸ் கொடுங்கப்பா
    >>
    உங்க ஹவுஸ் பாஸ் போனுக்கு மெசேஜ் பண்றேன் இருங்க

    ReplyDelete
  8. புகைப்படம் அருமை!

    ReplyDelete
  9. ஐயா மட்டும் இல்லீங்க இங்க தமிழன்னு யார் சொன்னாலும் அங்க அவிங்களுக்கு அடிதான். அது அம்மாவான்னாலும், வைகோவான்னாலும்!

    ReplyDelete
  10. தமிழினத் தலைவரை கடலில் போட்டாலும் அவர் கட்டு மரமாக மிதப்பார்

    ReplyDelete
  11. அரிதான புகைப்படம்! மனோதத்துவம் சிறப்பு! முதல்ல இந்த மு. க வை நாடு கடத்த வேண்டும்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  12. எல்லாமே அருமை...

    ஐயா அதுக்குத்தான் சொல்லியிருக்காரு.... தமிழர்களே... தமிழர்களே... என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக........ அப்படின்னு...

    தெரியுமில்ல...

    ReplyDelete
  13. இந்தாளைத் தூக்கி கடல்ல போடுங்கய்யா....ஹிஹி !

    ReplyDelete
  14. கார்க்கில் யுத்தத்தில் இந்தியா தோல்வி நிஜம் தான் அண்ணாச்சி அதை பொதுவில் சொல்ல ஒரு தில்லு வேணும் அது உங்களிடம் நிறையவே இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் படையினர் பற்றி எந்த தகவலுமே இந்தியாவுக்கு தெரியவில்லை, [[தற்போது சீன ஊடுருவல் கவனிக்கவும்]] அவர்கள் கெத்தாக வந்து செட்டில் ஆனபின்னாடி, ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கையில் சாராய பாட்டல்கள் வித்தியாசமாக தெரிய வர....அதற்க்கு பின்தான் இந்தியாவுக்கே விஷயம் தெரியும் இது மறுக்க முடியாத உண்மை....!

      பின்னே என்ன "இதுக்கு" இன்டலிஜென்ஸ், ரா போன்ற உளவு அமைப்பு வச்சிருக்கானுங்களோ ஒன்னும் புரியல...!

      Delete
  15. அனைத்தும் அருமை மனோ......

    ReplyDelete
  16. மனோ எல்லாமே சிறப்பான செய்திகள் படங்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!