Sunday, August 14, 2011

சுதந்திர நாடெனும் போதினிலே......!!!

சுதந்திர இந்தியாவில்......

ஒரு லட்சத்தி எழுபத்தாறு லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் செய்துவிட்டு ஹாயாக ஜெயிலில் நாளை கழிக்கும் குடும்பம்....!!! # சி பி ஐ விசாரணை நாசமா போயாச்சு.....!!!???


பத்மநாத சுவாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தங்கம்......!!! அப்பிடின்னு முதல்ல சொன்னவிங்க, இப்போ ஒரு லட்சத்தி அம்பதாயிரம் கோடி தங்கம்னு சொல்றாயிங்க # அப்போ மீதி தங்கம் போன இடம் எங்கே.....???


காமென்வெல்த் ஊழல் செய்தவன் விரைவில் விடுதலை, மறதி நோய் பிடிச்சிருக்காம் # பொண்டாட்டியாவது நினைவிருக்குமா...???


யோகா மாஸ்டர் ராம்தேவ் போராட்டம்னு ஓங்கி அடிச்சார், அவருக்கு காங்கிரஸ்காரன் வச்ச ஆப்புல எஸ்கேப் # பணம் பத்துமில்லை, ஓடவும் வைக்கும்.....!!!!??


தமிழகத்தையே மொத்தமா விலைக்கு வாங்கிய குடும்பமும் கட்சியும் படும் அவஸ்தையும், பாடும் இருக்கே.....!!!?? # ராவா குடிக்கிரவன் ஊறுகாயை நக்கியே ஆகணும் [[ஹி ஹி]]


டாஸ்மாக் கடையும் இவன்தான் திறந்து வச்சிருக்கான், கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு போலீஸ்காரன் ஊதுங்குறான் # கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா...???!!!


மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு # போயஸ்கார்டனில், கோபாலபுரத்தில், சி ஐ டி காலனியிலும் மின்வெட்டு உண்டா..?? டவுட்டு....!!!


தலையில ஹெல்மெட் இல்லாம ஸ்டைலா போகமுடியலை, போலீஸ்காரன் அம்பது ரூவா வாங்கிட்டு இருந்தவன் இப்போ நூறு ரூவா தான்னு வெக்கமே இல்லாமல் கேக்குறான் # யோவ் சாவுறது நான்தானே, நீயான்னு சண்டை நடக்குது....!!!


பிள்ளைங்க சுமக்கும் பாடபுஸ்தகங்களை, புஸ்தகமூட்டைன்னு சொல்லுங்கன்னு பிள்ளைங்க சொல்லுது # பாவம் பிஞ்சிகள்....!!!

பிளாக்ல தகிரியமா எழுதுனா மைனஸ் ஓட்டு # நல்லதுதானே எழுதுறோம்...!!!

டிஸ்கி : இப்பிடி ஆயிரத்தேழு கேள்விக்கு மேலே இருக்கு சொன்னா எவன் கேக்குறான்........

டிஸ்கி : பாத்தீங்களா இதுதான் நம்ம சுதந்திர நாட்டின் நிலை.....!!!

"ம்ஹும் ஊழல் நிறைந்த நாட்டில், சுதந்திரம் கண்ணீர் வடிக்கிறது என்பதே உண்மை"

38 comments:

  1. சுதந்திர தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. /////
    பத்மநாத சுவாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தங்கம்......!!! அப்பிடின்னு முதல்ல சொன்னவிங்க, இப்போ ஒரு லட்சத்தி அம்பதாயிரம் கோடி தங்கம்னு சொல்றாயிங்க # அப்போ மீதி தங்கம் போன இடம் எங்கே.....???

    //////////////

    இதையெல்லாம் ஞாபகம் படுத்திகிட்டு...
    யாரோ ஆதரவு தராங்க விடுங்க...

    ReplyDelete
  3. ////////
    காமென்வெல்த் ஊழல் செய்தவன் விரைவில் விடுதலை, மறதி நோய் பிடிச்சிருக்காம் # பொண்டாட்டியாவது நினைவிருக்குமா...???

    ////////

    பொண்டாடியை விடுங்க..
    கொள்ளையடிச்ச பணம் அதையாவது ஞாபகம் வச்சியிருக்கிறா

    நாசமா போச்சி...

    ReplyDelete
  4. ////////
    பிளாக்ல தகிரியமா எழுதுனா மைனஸ் ஓட்டு # நல்லதுதானே எழுதுறோம்...!!!

    //////////

    உண்மைய சொலல நீங்கயாருங்க...

    உண்மையை சொன்னா மைனஸ் ஓட்டுபோடடு ஜனநாயக கடமையை ஆற்றுவோம்...

    ReplyDelete
  5. //////////
    "ம்ஹும் ஊழல் நிறைந்த நாட்டில், சுதந்திரம் கண்ணீர் வடிக்கிறது என்பதே உண்மை"
    ///////////////



    நெஞ்சம் கணக்கும் நிலை...
    மாறும் என்ற நம்பிக்கையில் கைபோர்ப்போம்...


    சுதந்திரதின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. இணைக்க முடியவில்லை..

    ஓட்டிட அப்புறம் வருகிறேன்..

    ReplyDelete
  7. இணைத்தது யாரோ??? நான் தானே.!!!!!!!!!!

    ReplyDelete
  8. 100 mein 80 bheman bhir be bharat mahan.

    ReplyDelete
  9. சுதந்திர தின வாழ்த்துக்கள்....

    tamilmanam connected.....

    ReplyDelete
  10. புதிய வானம் புதிய பூமி
    எங்கும் ஊழல் மழை பொழிகிறது
    இதை பார்க்கையிலே அடடா
    அருமை வாழ்க பாரதம்

    ReplyDelete
  11. சுதந்திர தின சிந்தனைகள்
    ஏற்படுத்திப்போகும் சங்கடங்கள்
    அருமை அருமை
    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சுகந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ///// ராவா குடிக்கிரவன் ஊறுகாயை நக்கியே ஆகணும் [[ஹி ஹி]]//////

    தத்துவம்...?

    ReplyDelete
  14. ////பிளாக்ல தகிரியமா எழுதுனா மைனஸ் ஓட்டு # நல்லதுதானே எழுதுறோம்...!!!///////

    யாருய்யா இந்த வேலய பாக்குறவன், சொல்லுயா போட்டுத்தாளிச்சிடுவோம்...

    ReplyDelete
  15. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. //////"ம்ஹும் ஊழல் நிறைந்த நாட்டில், சுதந்திரம் கண்ணீர் வடிக்கிறது என்பதே உண்மை"//////

    சரியா சொன்னீரு....!

    ReplyDelete
  17. சுதந்திர தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. "ம்ஹும் ஊழல் நிறைந்த நாட்டில், சுதந்திரம் கண்ணீர் வடிக்கிறது என்பதே உண்மை"
    உண்மையான சுதந்திரம் மலர வாழ்த்துக்கள்.......மிக்க நன்றி பகிர்வுக்கு மனோ சார்.

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு.
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  21. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  22. மாப்பிள உனக்கே மைனஸ் ஓட்டா .. யாரையா அந்த நாதாரிப்பயல்.. அவனை பதிவுலகை ஒரு ரவுண்டு வரச்சொல்லு.. மைனஸ் ஒட்டு போட்டே செத்துடுவான்யா....!!!!?????

    ReplyDelete
  23. :)

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் மக்கா!

    ReplyDelete
  24. பாஸ் உங்களுக்கும்
    எனது சுதந்திர தின வாழ்த்துக்கள் ^_^

    ReplyDelete
  25. :)

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

    அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  28. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் பாஸ்!
    நான் வந்திட்டேன் தெரியும்லே?!

    ReplyDelete
  29. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் பாஸ்!
    நான் வந்திட்டேன் தெரியும்லே?!

    ReplyDelete
  30. தமிழ்மணம் ஏழாவது!

    ReplyDelete
  31. /டாஸ்மாக் கடையும் இவன்தான் திறந்து வச்சிருக்கான், கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டு போலீஸ்காரன் ஊதுங்குறான் # கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா...???!!//

    நீங்க கூடத்தான் 'எனது கிறுக்கல்கள்'ன்னு வலது பக்கம் போட்டுருக்கீங்க. ஆனா இதுவரை கிறுக்காம டைப் மட்டும்தான அடிச்சிருக்கீங்க? அது மட்டும் நியாயமா?

    ReplyDelete
  32. //
    மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு # போயஸ்கார்டனில், கோபாலபுரத்தில், சி ஐ டி காலனியிலும் மின்வெட்டு உண்டா..?? டவுட்டு....!!!//

    இப்பதான கோபாலபுரத்துக்கு அஞ்சி வருஷம் 'பவர்' கட் பண்ணி இருக்காங்க. அப்புறம் என்ன டவுட்டு...

    ReplyDelete
  33. // இப்பிடி ஆயிரத்தேழு கேள்விக்கு மேலே இருக்கு சொன்னா எவன் கேக்குறான்//

    டைப் அடிச்சா எப்படி கேக்க முடியும். ஆடியோ ரிலீஸ் பண்ணுங்க..

    ReplyDelete
  34. சுதந்திர தின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  35. //ஒரு லட்சத்தி எழுபத்தாறு லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழல் செய்துவிட்டு ஹாயாக ஜெயிலில் நாளை கழிக்கும் குடும்பம்....!!! # சி பி ஐ விசாரணை நாசமா போயாச்சு.....!!!???

    ஒரு லட்சத்தி எழுபத்தாறு கோடியே நாசமா போயாச்சு.... இதுல சி.பி.ஐ.விசாரணை நாசமா போனா என்ன போகலைன்னா என்ன?! :)

    ReplyDelete
  36. @ vikki

    தம்பி, டெம்ப்ளேட் கமெண்ட் தான் எப்பவுமே போடுவியா?

    ReplyDelete
  37. பிள்ளைங்க சுமக்கும் பாடபுஸ்தகங்களை, புஸ்தகமூட்டைன்னு சொல்லுங்கன்னு பிள்ளைங்க சொல்லுது # பாவம் பிஞ்சிகள்....!!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!