Tuesday, November 8, 2016

அந்த கண்டெயினரு பணம் என்னாகும் ?!



சத்தியமாக நான் இதை எதிர் பார்க்கவே இல்லை, எங்கே இதெல்லாம் நடக்கப் போகிறதுன்னு கிண்டலா முந்தாநாள் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்...

கூரைகளிலும், செப்டிக் டேங்குகளிலும், கிணறுகளிலும், பாம் ஹவுஸ்களிலும், பூமிக்கடியில், காடுகளிலும் மறைத்து வைக்கப்பட்ட  1000, 500 ரூபாய் நோட்டுகள்...இனி கணக்கு காட்ட முடியாமலே, திருடனுக்கு தேள் கொட்டின கதையாகிவிடும்...

தொழிலதிபர்கள், அரசியல்வியாதிகள், கள்ளத்தனம் செஞ்ச மொத்தக் களவாணி பயலுகளுக்கும் சரியான ஆப்பை, உருக்கும் உலையில்  அனல் தகிக்க எடுத்து பொச்சக்குன்னு குத்தி வச்சிட்டார் மோடி...

எல்லாத்துக்கும் மேலே... இந்த தீவிரவாதி, பயங்கரவாதி நாய்ங்களுக்கும் சேர்த்து ஆப்படித்திருப்பது மகிழ்ச்சி...

உண்மையிலேயே ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும்....நெஞ்சில் மாஞ்சாவும், கட்சும் உள்ளவர் மோடி என்பதில் சந்தேகமில்லை...!

ஆரம்பத்தில் மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் இது வரவேற்க வேண்டிய விஷயம் என்பதால், நாம் மோடி கரத்துக்கு வலு கொடுக்கத்தான் வேண்டும்.

வாழ்த்துக்கள், ராயல் சல்யூட்டுகளும் இந்திய மைந்தனுக்கு...

நமக்கு 2000 ஓவா  நோட்டு பார்க்கலாம், ஆனால் நோட்டு கட்டுகளை கூகுள்ல மட்டும்தான் பார்க்க முடியும் என்பது கொசுறு...!

அப்புறம் என் கவலையெல்லாம் அந்த கண்டெய்னர் காசெல்லாம் இனி என்னாவும் ?



2 comments:

  1. ஒரே நாள்ல மோடி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம செய்துட்டார்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!