Wednesday, May 25, 2011

ஓவர் சீனும் ஓகே சீனும்



[[ஆபீஸ்ல வேலை இல்லாம போரா இருக்கு மக்கா, அதான் இந்த கதைய சுட்டுருக்கேன் நீங்களும் அனுபவிங்க]]
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்த்ச்சி, ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது  தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருக்க, திருடனை பார்த்த நாய் குறைக்காமல் கம்முன்னு சும்மா இருந்திச்சு.
சரியா சோறே போடுறது இல்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குறைக்கவில்லை. அதை பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குறைச்சு முதலாளிய  எழுப்புவான்னு  பாத்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சிது.
சத்தம் கேட்டதும் திருடன் ஓடி விட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திரிச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டைய எடுத்து பளார்னு கழுதை தலையில ஒரே அடி கூறு கெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதைய திட்டி விட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.



நீதி : ஆபீஸ்ல என்ன வேலை கொடுத்துருக்கோ அதை மட்டும்தான் செய்யணும்,

ஓவரா ஸீன் போட்டா இப்படித்தான்.

இந்த கதை மற்றொரு கோணத்தில்.....
கழுதை கத்தியதும் எழுந்த சலவை தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணமாத்தான் கத்தியிருக்கும் என்று எழும்பி பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது என புரிந்து கொண்டான்.
அடுத்த நாள் கழுதைக்கு வகை வகையான சாப்பாடு போட்டான்.
நாயை கண்டு கொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக் கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்து விட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யுறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதைய செய்ய வைத்தான். நாய் செய்து  கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல் சுமத்தப் பட்டது, நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதைய பார்த்து சிரித்து கொண்டிருந்தது, வேலை செய்து அலுத்து போன கழுதை இப்போது வேறு வேலைக்கு C V [அப்ளை] அனுப்பிகிட்டு இருக்கு..........


நீதி : ஆபீஸ்ல ஓவரா ஸீன் போட்டா இப்படியும் நடக்கலாம்.
[[அட மக்கா....... கவர்மெண்ட்லதான் இப்பிடின்னா, உங்க ஆபீஸிலும் இப்படியா.....]] 
[எங்கயோ படிச்சது, எழுதிய நண்பருக்கு நன்றி]

டிஸ்கி : இது ஒரு மீள்பதிவு...

106 comments:

  1. மொதோ வெட்டு

    ReplyDelete
  2. தலைப்பை பாரு..

    கொத்து ரொட்டியும் உப்புமாவும் எண்டமாதிரி..

    ReplyDelete
  3. 1. மரத்த வச்சவேன் தண்ணி ஊத்தணும்.......

    2. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.........!

    ReplyDelete
  4. 'கழுத"கதை சொல்லுதாம்லே...மனோ!!

    ReplyDelete
  5. ஒரு கதைக்கு ரெண்டு கிளைமாக்ஸ், பெரிய டைரக்டர்-அ வருவீக போலருக்கே

    ReplyDelete
  6. அதேன் நாய் வால்'ல மட்டும் ஜூம் போயிருக்கு??

    ReplyDelete
  7. போட்டது கழுதை பதிவு..

    அத ஒருதடவை போட்டதே பெரிய விஷயம்..

    அதுல மீள் பதிவு வேறையா??

    ReplyDelete
  8. விக்கி வந்திட்டாரு,,

    வேண்டிய சேதாரத்தை அவர் வைப்பார் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete
  9. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    மொதோ வெட்டு//

    ஒரே போடா போடு...

    ReplyDelete
  10. //மைந்தன் சிவா said...
    தலைப்பை பாரு..

    கொத்து ரொட்டியும் உப்புமாவும் எண்டமாதிரி..//

    ஹேய் இந்த தலைப்பும் நல்லா இருக்கே...?

    ReplyDelete
  11. //விக்கி உலகம் said...
    1. மரத்த வச்சவேன் தண்ணி ஊத்தணும்.......

    2. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.........!//

    சரிய்யா ஃபீல் பண்ணாதே...

    ReplyDelete
  12. //மைந்தன் சிவா said...
    'கழுத"கதை சொல்லுதாம்லே...மனோ!!//

    சத்தியமா அந்த கழுதை சிபி இல்லை...ஹி ஹி...

    ReplyDelete
  13. // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஒரு கதைக்கு ரெண்டு கிளைமாக்ஸ், பெரிய டைரக்டர்-அ வருவீக போலருக்கே//

    டைரக்டரா ஆவதுக்கு நம்ம சிபி'தான் முயற்சி பண்ணிட்டு இருக்கான்...ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  14. //மைந்தன் சிவா said...
    அதேன் நாய் வால்'ல மட்டும் ஜூம் போயிருக்கு??//

    ஹே ஹே விடும்ய்யா விடும்ய்யா...

    ReplyDelete
  15. இந்தக் கதைக்கு நான் இன்னொரு கோணமும் சொல்லுறேன் கேளுங்க

    திருடனைப் பார்த்துக் கத்தினதால ஓடிவந்த முதலாளி கழுதைக்கு கூட தெரிஞ்சிருக்கு , இந்த நாய்க்குத் தெரியலையே அப்படின்னு நாய அடிச்சு தொரத்தி விட்டுட்டு கழுதய ரொம்ப செல்லமா பர்திக்கிட்டாராம ?
    ( ஹி ஹி.. இப்படியும் நடக்கலாம் )

    ReplyDelete
  16. //மைந்தன் சிவா said...
    போட்டது கழுதை பதிவு..

    அத ஒருதடவை போட்டதே பெரிய விஷயம்..

    அதுல மீள் பதிவு வேறையா??//

    நமக்கும் நேரம் போகனுமில்லையா...

    ReplyDelete
  17. //மைந்தன் சிவா said...
    விக்கி வந்திட்டாரு,,

    வேண்டிய சேதாரத்தை அவர் வைப்பார் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்//

    யோவ் அந்த பய துப்பாக்கியை காட்டி மிரட்டுவான்யா விட்ருங்க மீ பாவம்...

    ReplyDelete
  18. //கோமாளி செல்வா said...
    இந்தக் கதைக்கு நான் இன்னொரு கோணமும் சொல்லுறேன் கேளுங்க

    திருடனைப் பார்த்துக் கத்தினதால ஓடிவந்த முதலாளி கழுதைக்கு கூட தெரிஞ்சிருக்கு , இந்த நாய்க்குத் தெரியலையே அப்படின்னு நாய அடிச்சு தொரத்தி விட்டுட்டு கழுதய ரொம்ப செல்லமா பர்திக்கிட்டாராம ?
    ( ஹி ஹி.. இப்படியும் நடக்கலாம் )//

    பாருய்யா, வருங்கால ரேடியோ ஜாக்கி'யின் கோணத்தை...!!!

    ReplyDelete
  19. /// பாருய்யா, வருங்கால ரேடியோ ஜாக்கி'யின் கோணத்தை...!!!///

    ஹி ஹி.. உங்கள் நம்பிக்கை பலித்தால் சந்தோசமோ சந்தோசம் :-)

    ReplyDelete
  20. ஒரு கதை
    இரண்டு விளக்கங்கள்
    இரண்டும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வணக்கம் பேராசிரியரே....

    ஒரு கல்லுல இரண்டு மாங்க...

    ReplyDelete
  22. //வணக்கம் பேராசிரியரே....

    ஒரு கல்லுல இரண்டு மாங்க.///

    ஹி ஹி ஹி.. அண்ணன போய் பேராசிரியர்னு சொல்லி .. ஹி ஹி .. ஹய்யோ ,ஹய்யோ .. ( இன்னிக்கும் கொஞ்சம் நேரம் இருக்கு , இங்கதான் வீட்டுக்குப் போக வரைக்கும் வேலை ..)

    ReplyDelete
  23. //கோமாளி செல்வா said...
    /// பாருய்யா, வருங்கால ரேடியோ ஜாக்கி'யின் கோணத்தை...!!!///

    ஹி ஹி.. உங்கள் நம்பிக்கை பலித்தால் சந்தோசமோ சந்தோசம் :-)//

    வீரியமுள்ள விதை முளைக்காமல் அடங்காது எண்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...

    ReplyDelete
  24. //Ramani said...
    ஒரு கதை
    இரண்டு விளக்கங்கள்
    இரண்டும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    நன்றி குரு....

    ReplyDelete
  25. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    வணக்கம் பேராசிரியரே....

    ஒரு கல்லுல இரண்டு மாங்க...//

    பேராசிரியர்.....!!!!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  26. சகோ, இதில் உள் குத்து எதுவும் இல்லையா.

    ReplyDelete
  27. //கோமாளி செல்வா said...
    //வணக்கம் பேராசிரியரே....

    ஒரு கல்லுல இரண்டு மாங்க.///

    ஹி ஹி ஹி.. அண்ணன போய் பேராசிரியர்னு சொல்லி .. ஹி ஹி .. ஹய்யோ ,ஹய்யோ .. ( இன்னிக்கும் கொஞ்சம் நேரம் இருக்கு , இங்கதான் வீட்டுக்குப் போக வரைக்கும் வேலை ..)///

    சம்பளம் கேட்டு டார்ச்சர் பண்ண மாட்டியே...???

    ReplyDelete
  28. யாரோடையோ நொந்த அனுபவத்தை எழுதியிருக்கிறீங்க சகோ.

    ReplyDelete
  29. கழுதைக் கதையில் யாரோ ஒரு ப்ராப்ளத்தை நீங்க திட்டுவதாக உணர்கிறேன். தத்துவங்கள் அருமை.

    ReplyDelete
  30. நல்ல உள்குத்து பதிவு... குத்தியபட்டவங்க யாரோ..? உண்மையிலேயே அங்கங்கு இப்படி அதிக பிரசங்கிகள் இருப்பதுவும் உண்மைதான்.. எமது அலுவலகம் உட்பட...பகிர்வுக்கு மிக்க நன்றி மனோ..!!

    ReplyDelete
  31. //நிரூபன் said...
    சகோ, இதில் உள் குத்து எதுவும் இல்லையா.//

    ஹி ஹி சிபி'கிட்டதான் கேக்கணும்...

    ReplyDelete
  32. //நிரூபன் said...
    யாரோடையோ நொந்த அனுபவத்தை எழுதியிருக்கிறீங்க சகோ.//

    விக்கி'கிட்டே கேட்டா தெளிவா சொல்லுவான் மக்கா...

    ReplyDelete
  33. //நிரூபன் said...
    கழுதைக் கதையில் யாரோ ஒரு ப்ராப்ளத்தை நீங்க திட்டுவதாக உணர்கிறேன். தத்துவங்கள் அருமை///

    யோவ் ஏதேனும் வம்பை கொளுத்தி போட்ராதீங்கய்யா கொலை வெறியா கிளம்பிற போறாயிங்க...

    ReplyDelete
  34. //தங்கம்பழனி said...
    நல்ல உள்குத்து பதிவு... குத்தியபட்டவங்க யாரோ..? உண்மையிலேயே அங்கங்கு இப்படி அதிக பிரசங்கிகள் இருப்பதுவும் உண்மைதான்.. எமது அலுவலகம் உட்பட...பகிர்வுக்கு மிக்க நன்றி மனோ..!!///

    ஹி ஹி ஹி ஹி ஹி நான் இல்லை நான் இல்லை மக்கா....

    ReplyDelete
  35. Hi . . I share your post to my facebook profile

    ReplyDelete
  36. கொடூர பேய்க்கதை

    எச்சரிக்கை : இதைப் படித்து பயந்து உயிர் பிழைத்தவர்கள் ஏராளம்!

    ஒரு ஊர்ல ஒரு பயங்கரமான பேய் இருந்திச்சாம் , அப்போ காட்டுக்குள்ள இருந்து கர்கர்கர் னு குயில் கூவுற சத்தம் கேட்டுச்சாம்! அப்போ ஒரு குரங்கு மரத்துமேல இருந்து மணி பார்த்திச்சாம்! மணி 6 ஆகிருந்துச்சாம்! உடனே பைக்க எடுத்திட்டு பக்கத்துக் காட்டுக்குப் டிவி பார்க்கப்போச்சாம்.

    இத பார்த்த அந்த பேய்க்கு பயங்கர கோபம் வந்து ஒரு பொந்துக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிச்சாம்! ஆனா அதுக்குள்ள இருந்த எறும்பு ஒரு பெரிய காட்டு மனுசன பிடிச்சு கழுத்த அறுத்து அவன் ஒடம்புல இருந்து வந்த பச்ச கலர் ரத்தத்தைக் குடிச்சிட்டு இருந்ததாம்.

    இதப் பார்த்த அந்த பேய் " எனக்கு பயமா இருக்கு, என்ன விட்டுரி அப்படின்னு கத்திச்சாம். அதுக்கு அந்த எறும்பு சொல்லுச்சாம் நான் உன்ன உயிரோட விடணும்னா நைட் 12 மணிக்கு சுடுகாட்டுக்குப் போகணும் அப்படின்னு சொல்லிச்சாம்! அப்புறம் அந்த பேய் என்ன பண்ணுச்சுனா ?

    ( எனக்கு எப்படி தெரியும் , அதான் நைட் 12 மணி சொல்லிருக்குல, இப்ப மணி 6 தான் ஆச்சு! அதனால என்ன பண்ணுச்சுனு எனக்கு தெரியாது! )

    ReplyDelete
  37. What are you brother . . Dog or donkey

    ReplyDelete
  38. //என் ராஜபாட்டை"- ராஜா said...
    Hi . . I share your post to my facebook profile//

    நன்றி மக்கா...!!

    ReplyDelete
  39. நல்லா இருக்கு சார் நீதிக்கதைகள்.

    ReplyDelete
  40. //கோமாளி செல்வா said...
    கொடூர பேய்க்கதை

    எச்சரிக்கை : இதைப் படித்து பயந்து உயிர் பிழைத்தவர்கள் ஏராளம்!//

    அவ்வ்வ்வ் புலம்ப வச்சிட்டானே.....

    ReplyDelete
  41. ஒரு ஊர்ல ஒரு பயங்கரமான பேய் இருந்திச்சாம் , அப்போ காட்டுக்குள்ள இருந்து கர்கர்கர் னு குயில் கூவுற சத்தம் கேட்டுச்சாம்! அப்போ ஒரு குரங்கு மரத்துமேல இருந்து மணி பார்த்திச்சாம்! மணி 6 ஆகிருந்துச்சாம்! உடனே பைக்க எடுத்திட்டு பக்கத்துக் காட்டுக்குப் டிவி பார்க்கப்போச்சாம்.//

    ஹய்யோ ஹய்யோ காப்பாத்துங்க காப்பாத்துங்க..

    ReplyDelete
  42. //இத பார்த்த அந்த பேய்க்கு பயங்கர கோபம் வந்து ஒரு பொந்துக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிச்சாம்! ஆனா அதுக்குள்ள இருந்த எறும்பு ஒரு பெரிய காட்டு மனுசன பிடிச்சு கழுத்த அறுத்து அவன் ஒடம்புல இருந்து வந்த பச்ச கலர் ரத்தத்தைக் குடிச்சிட்டு இருந்ததாம்.//

    சிபி இந்த கதைய படிச்சாம்னா உடனே தீக்குளிக்க போயிருவானே....

    ReplyDelete
  43. மச்சி ஆபிசுல ஒர்க் இல்லைன்னா டேபிள் மேல தூன்குவியா! அதவிட்டுப்புட்டு இப்புடி கதை போட்டு கொல்லுறியே !

    ReplyDelete
  44. இதப் பார்த்த அந்த பேய் " எனக்கு பயமா இருக்கு, என்ன விட்டுரி அப்படின்னு கத்திச்சாம். அதுக்கு அந்த எறும்பு சொல்லுச்சாம் நான் உன்ன உயிரோட விடணும்னா நைட் 12 மணிக்கு சுடுகாட்டுக்குப் போகணும் அப்படின்னு சொல்லிச்சாம்! அப்புறம் அந்த பேய் என்ன பண்ணுச்சுனா ?//

    அய்யோ பேய் பயந்துருச்சா...?? அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  45. இப்ப கிளம்புறேன்.. ஆனா மறுபடியும் வருவேன்.. ஹி ஹி :-)

    ReplyDelete
  46. //( எனக்கு எப்படி தெரியும் , அதான் நைட் 12 மணி சொல்லிருக்குல, இப்ப மணி 6 தான் ஆச்சு! அதனால என்ன பண்ணுச்சுனு எனக்கு தெரியாது! )//

    கொலை வெறியோடு சுத்துறானே ஆண்டவா....

    ReplyDelete
  47. நம்ம எல்லோருக்கும் டை தெரியும் மக்கா!அத வேற எக்ஸ்போஸ் பண்ணி காட்டணுமா? குளோசப் படம் போடுலே!

    ReplyDelete
  48. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
    What are you brother . . Dog or donkey//

    நான் அவன் இல்லை....

    ReplyDelete
  49. // தமிழ் உதயம் said...
    நல்லா இருக்கு சார் நீதிக்கதைகள்.//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  50. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    மச்சி ஆபிசுல ஒர்க் இல்லைன்னா டேபிள் மேல தூன்குவியா! அதவிட்டுப்புட்டு இப்புடி கதை போட்டு கொல்லுறியே !//

    தூங்க விட மாட்டேங்குறான்

    ReplyDelete
  51. //கோமாளி செல்வா said...
    இப்ப கிளம்புறேன்.. ஆனா மறுபடியும் வருவேன்.. ஹி ஹி :-)//

    டேய் நீ அண்ணனை மிரட்டுறுயாக்கும் ம்ஹும்...

    ReplyDelete
  52. ஆபீஸ்ல வேலை இல்லாம போரா இருக்கு மக்கா, அதான் ...///
    எப்பவும் இங்கன தானே இருக்கிறீங்க.

    12B படம் போல இரண்டு கதை/க்ளைமாக்ஸா. அவ்வ்வ்வ்.... கர்ர்ர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  53. //Blogger கோமாளி செல்வா said...
    கொடூர பேய்க்கதை//
    கதைக்கு கதையா!

    ReplyDelete
  54. // ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    நம்ம எல்லோருக்கும் டை தெரியும் மக்கா!அத வேற எக்ஸ்போஸ் பண்ணி காட்டணுமா? குளோசப் படம் போடுலே!//

    குளோசப் படத்தை பார்த்துட்டு சிபி தூக்கத்துல எழும்பி அலறுறானாம் அதான் மாத்திட்டேன் ஹி ஹி...

    ReplyDelete
  55. //MANO நாஞ்சில் மனோ said...
    // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஒரு கதைக்கு ரெண்டு கிளைமாக்ஸ், பெரிய டைரக்டர்-அ வருவீக போலருக்கே//
    டைரக்டரா ஆவதுக்கு நம்ம சிபி'தான் முயற்சி பண்ணிட்டு இருக்கான்...ஹே ஹே ஹே ஹே...//
    ஆஹா,இது வேறயா!

    ReplyDelete
  56. மனோ ஆள் எப்படியோ லோகோல ஷோ காட்ற மாதிரி பதிவு எப்படியோ, டைட்டில் நல்லா வெச்சுட்டான் ஹா ஹா

    ReplyDelete
  57. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்?
    சூப்பர் மனோ!

    ReplyDelete
  58. //வேலை செய்து அலுத்து போன கழுதை இப்போது வேறு வேலைக்கு C V [அப்ளை] அனுப்பிகிட்டு இருக்கு.//

    C V இல் இருக்கும் படத்துல அந்த கழுத டை கட்டியிருக்குமே? வாழ்த்துக்கள் விரைவில் வேறு வேலை கிடைக்க.

    ReplyDelete
  59. vanathy said...
    ஆபீஸ்ல வேலை இல்லாம போரா இருக்கு மக்கா, அதான் ...///
    எப்பவும் இங்கன தானே இருக்கிறீங்க.

    12B படம் போல இரண்டு கதை/க்ளைமாக்ஸா. அவ்வ்வ்வ்.... கர்ர்ர்ர்ர்ர்ர்...///

    ஏன் பல்லை கடிச்சி பயங்காட்டுறீங்க மி பாவம்....

    ReplyDelete
  60. //FOOD said...
    //Blogger கோமாளி செல்வா said...
    கொடூர பேய்க்கதை//
    கதைக்கு கதையா!//

    பாருங்க ஆபீசர், என்னை போட்டு தள்ளனும்னு சுத்துறதுல இவனும் ஒருவன் நோட் பண்ணிக்கோங்க...

    ReplyDelete
  61. //FOOD said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    // ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    ஒரு கதைக்கு ரெண்டு கிளைமாக்ஸ், பெரிய டைரக்டர்-அ வருவீக போலருக்கே//
    டைரக்டரா ஆவதுக்கு நம்ம சிபி'தான் முயற்சி பண்ணிட்டு இருக்கான்...ஹே ஹே ஹே ஹே...//

    ஆஹா,இது வேறயா!//

    என்னெல்லாம் பிளான் பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா ஆபீசர்..??

    ReplyDelete
  62. //சி.பி.செந்தில்குமார் said...
    மனோ ஆள் எப்படியோ லோகோல ஷோ காட்ற மாதிரி பதிவு எப்படியோ, டைட்டில் நல்லா வெச்சுட்டான் ஹா ஹா//

    எலேய் நான் ஷோ காட்டுற ஆள் மாதிரியா இருக்கேன்...??

    ReplyDelete
  63. சென்னை பித்தன் said...
    ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்?
    சூப்பர் மனோ!//

    நன்றி தல....

    ReplyDelete
  64. கக்கு - மாணிக்கம் said...
    //வேலை செய்து அலுத்து போன கழுதை இப்போது வேறு வேலைக்கு C V [அப்ளை] அனுப்பிகிட்டு இருக்கு.//

    C V இல் இருக்கும் படத்துல அந்த கழுத டை கட்டியிருக்குமே? வாழ்த்துக்கள் விரைவில் வேறு வேலை கிடைக்க.//

    நானில்லை நானில்லை சிபி அண்ணன்'தான் கழுதை....

    ReplyDelete
  65. அண்ணன் ஆபீசில் எப்படி?

    ReplyDelete
  66. //NKS.ஹாஜா மைதீன் said...
    அண்ணன் ஆபீசில் எப்படி?//

    ரெண்டாம் பாகம்தான் ஹி ஹி....

    ReplyDelete
  67. ஹி..ஹி... இந்த கதையை எங்கோ படிச்ச மாதிரி இருக்குதே...

    ReplyDelete
  68. அட மீள்பதிவா? அப்ப உங்க பதிவுலதான் படிச்சிருப்பேன்.

    ReplyDelete
  69. //தமிழ்வாசி - Prakash said...
    ஹி..ஹி... இந்த கதையை எங்கோ படிச்ச மாதிரி இருக்குதே//

    யோவ் இதை எழுதுனது வேற ஒரு முகம் தெரியாத ஆளுய்யா...

    ReplyDelete
  70. //தமிழ்வாசி - Prakash said...
    அட மீள்பதிவா? அப்ப உங்க பதிவுலதான் படிச்சிருப்பேன்.//

    ஹய்யோ ஹய்யோ....

    ReplyDelete
  71. கழுதைனாலே வேலை செய்யதானே. கட்டய கொடுப்பது என்று மதுரை சொலவடை உண்டு அதுதான் நினவிற்கு வருகிறது.

    ReplyDelete
  72. என்னய்யா இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு.

    ReplyDelete
  73. சாகம்பரி said...
    கழுதைனாலே வேலை செய்யதானே. கட்டய கொடுப்பது என்று மதுரை சொலவடை உண்டு அதுதான் நினவிற்கு வருகிறது.///

    அப்பிடியா....?

    ReplyDelete
  74. //தினேஷ்குமார் said...
    நல்ல கதை அண்ணே ....//

    ஹே ஹே ஹே நன்றி தம்பி....

    ReplyDelete
  75. தினேஷ்குமார் said...
    ஹய்யா வடை//

    பெரியபுள்ளைதனமா நாளை சொல்றேன் ஓகே ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  76. இப்ப என்ன நான் ஆபிஸ்ல வேலை செய்ய கூடாது.. அவ்வளவு தானே.!! சரி.. செய்யல செய்யல செய்யல..

    ReplyDelete
  77. ஒரே விசயத்தை எப்படி இரு விதத்தில் யோசிப்பது என்பதற்கு இந்தக் கதை உதாரணம் மனோ!

    கமல் இதே டெக்னிக்கைத்தான் விருமாண்டில வைத்தார்!

    இதுலருந்து என்னா தெரியுதுன்னா நீங்க கமல் மாதிரியே யோசிக்கிறீங்க:)

    ReplyDelete
  78. இந்த தத்துவத்தை படிச்சதும் மனசு நெருடி போச்சி. நீங்க.....அதை எப்படி...ரொம்ப நெகிழ்ந்து....என்ன சொல்றது...அதாவது.....

    ReplyDelete
  79. MEE THE FIRSTU...

    APPADIEY NAMA KADAI PAKKAMUM VAANGA..

    ReplyDelete
  80. appuram neenga nama kadaikku varati.....

    nanum oru kathai cholla vendi varum..unga kathaikku oru neethi cholla vendi varum..:)

    ReplyDelete
  81. மக்க ஒரு டவ்ட்டு
    கழுதை , நாயி
    இந்த ரெண்டுலயும் எந்த மாதிரி நீங்க வொர்க் பண்ணுறது ?

    ReplyDelete
  82. ஒரு கதைக்கு மூன்று மாதிரி முடிவு (கோமாளி செல்வா சொன்னதையும் சேர்த்து) இன்னும் ஒரு மீள்பதிவு போட்டாலும் தாங்கும் தல!! ஹீ.. ஹீ..

    ReplyDelete
  83. //வீரியமுள்ள விதை முளைக்காமல் அடங்காது எண்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...//

    தத்துவம் நம்பர் 176,000

    ReplyDelete
  84. என்னைய்யா உங்களோட வம்பா போச்சு. ஊர் உறங்குற நேரத்தில் இப்படி அரட்டை அடிச்சிக் கிட்டிருக்கீங்க! மீ அபீட்ட்டு..

    ReplyDelete
  85. முடியல! சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு! :-)

    ReplyDelete
  86. //குணசேகரன்... said...
    nice title...i like it

    May 25, 2011 12:06 PM//

    நன்றி குணா....

    ReplyDelete
  87. ஒரு கதை
    இரண்டு விளக்கங்கள்
    இரண்டும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  88. //தம்பி கூர்மதியன் said...
    இப்ப என்ன நான் ஆபிஸ்ல வேலை செய்ய கூடாது.. அவ்வளவு தானே.!! சரி.. செய்யல செய்யல செய்யல..//

    ஹே ஹே ஹே ஹே அனுபவத்தை பாரு....!!!

    ReplyDelete
  89. //ராஜ நடராஜன் said...
    ஒரே விசயத்தை எப்படி இரு விதத்தில் யோசிப்பது என்பதற்கு இந்தக் கதை உதாரணம் மனோ!

    கமல் இதே டெக்னிக்கைத்தான் விருமாண்டில வைத்தார்!

    இதுலருந்து என்னா தெரியுதுன்னா நீங்க கமல் மாதிரியே யோசிக்கிறீங்க:)//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  90. //! சிவகுமார் ! said...
    இந்த தத்துவத்தை படிச்சதும் மனசு நெருடி போச்சி. நீங்க.....அதை எப்படி...ரொம்ப நெகிழ்ந்து....என்ன சொல்றது...அதாவது.....//


    புரியுது புரியுது ம்ஹும்....

    ReplyDelete
  91. // siva said...
    appuram neenga nama kadaikku varati.....

    nanum oru kathai cholla vendi varum..unga kathaikku oru neethi cholla vendi varum..:)//

    ஆஹா இப்பிடி வேற கிளம்பியாச்சா அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  92. // FARHAN said...
    மக்க ஒரு டவ்ட்டு
    கழுதை , நாயி
    இந்த ரெண்டுலயும் எந்த மாதிரி நீங்க வொர்க் பண்ணுறது ?//

    உங்க சாய்ஸ்'கே விட்டுட்டேன் மக்கா ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  93. //எம் அப்துல் காதர் said...
    ஒரு கதைக்கு மூன்று மாதிரி முடிவு (கோமாளி செல்வா சொன்னதையும் சேர்த்து) இன்னும் ஒரு மீள்பதிவு போட்டாலும் தாங்கும் தல!! ஹீ.. ஹீ..//

    போட்ருவோம் போட்ருவோம் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  94. //எம் அப்துல் காதர் said...
    //வீரியமுள்ள விதை முளைக்காமல் அடங்காது எண்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...//

    தத்துவம் நம்பர் 176,000//

    ஏ யப்பா என்னய்யா நம்பரு இது...??

    ReplyDelete
  95. //எம் அப்துல் காதர் said...
    என்னைய்யா உங்களோட வம்பா போச்சு. ஊர் உறங்குற நேரத்தில் இப்படி அரட்டை அடிச்சிக் கிட்டிருக்கீங்க! மீ அபீட்ட்டு..//


    ரிப்பீட்டு....

    ReplyDelete
  96. //ஜீ... said...
    முடியல! சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு! :-)//

    ஹி ஹி விடுங்க விடுங்க மக்கா...

    ReplyDelete
  97. போளூர் தயாநிதி said...
    ஒரு கதை
    இரண்டு விளக்கங்கள்
    இரண்டும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//


    நன்றி மக்கா..

    ReplyDelete
  98. கழுதைகள் சங்கத்துல இருந்து அண்ணனுக்கு ஒரு உதை பார்ஸல்

    ReplyDelete
  99. சோ கம்முன்னு இருக்கிறவன்தான் உயர்வான் எங்கிறீங்களா? என்னா ஒரு தத்துவம்!

    ReplyDelete
  100. So....namma velaiyai seyyama irupathu than intha kali kalathila pozhappai otta mudiyum.....

    ReplyDelete
  101. ஹா... ஹா.. ஹா. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு...!! செம கலக்கல் பகிர்வு தல..!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!