Tuesday, June 28, 2011

குற்றாலம் பிரயாணம்

ஆபீசரிடமிருந்து விடை பெற்று கொண்டு நான்கு சக்கர சைக்கிள் குற்றாலம் நோக்கி சீறி பாய்ந்தது சிபியையும் செல்வாவையும் ஏற்றிக்கொண்டு...

குற்றாலத்தில் நாங்கள் சாப்பிட்ட நொங்கு....

இரவு நேரம் என்பதால் அக்கம் பக்கம் இடங்களை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் சிபி கூட பேசிட்டே போயிட்டு இருந்தேன் செல்வா நல்லா தூங்கிட்டே வந்தான், சிபி அரை மயக்கத்துலையே என்கூட பேசிட்டு [[நான்தான் பேசினேன்]] வந்தான் [[நடிச்சுட்டு வந்தான் ராஸ்கல்]]


என் மச்சினன் சைக்கிளை மிக லாவகமா ஓட்டிட்டு இருந்தான் [[நான்தான் குலை நடுங்கிட்டு இருந்தேன் ஏன்னா அவன் புது டிரைவர், அது இந்த ரெண்டு நாதாரிக்கும் தெரியாது ஹே ஹே ஹே ஹே]]


நேரே ஆபீசர் ஐடியா படி தென்காசி'ல போயி ஹோட்டல்ல ரூம் போட போனோம், சிபி மூதேவி மூஞ்சிய பார்த்ததும் ஒரு பய ரூம் தரமாட்டேன்னுட்டான்....!!!!

தென்காசி சைக்கிள் நிலையம் ஸாரி பேருந்து நிலையம்...

எப்பிடியோ காலை கையை பிடிச்சி நானும் என் மச்சினனும் ஒரு ஹோட்டல்ல ரூம் ரெடி பண்ணினோம். ஆனா அங்கே எங்கள் அட்ரஸ் உள்ள ஐடி கார்ட் கேட்டார்கள். நான் உடனே எனது பான் கார்டை எடுத்து பந்தாவாக [[சிபிக்கு முன்]] எடுத்து கொடுக்க...

தென்காசி ஆட்டோ ஸ்டேன்ட்....

அந்த ரிசப்ஷனிஸ்ட், எனது பான் கார்டில் காறி துப்பி இது செல்லாது என சொல்ல நான் சிபி'க்கு முன் கூனி குறுகி போனேன். சரி டேய் மூதேவி உன் ஐடி கார்டை குடுடா நாயே என்றேன். சொன்னான் பாருங்க அதுக்கு பதில்....


நான் எங்கே போனாலும் எந்த புரூப்பும் வச்சிக்கிரதில்லை [[புரூப் இல்லாம அடி வாங்கிட்டு வருவானோ]] என்பதை பாலிசியாக வச்சிருக்கேன்னு சொன்னான் பாருங்க, அங்கேயே தூக்கி போட்டு நாலு மிதி மிதிக்கனும்னு தோணவே, சரி என்னதான் இருந்தாலும் நாதாரி நண்பனாயிட்டானேன்னு விட்டுட்டேன் அந்த ராஸ்கல....


அடுத்து நாங்கள் படும் சிரமத்தை கவனித்த ரிஷப்சனிஸ்ட், சார் டிரைவர் லைசென்ஸ் இருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னதும் நிம்மதி ஆச்சு, எலேய் மச்சினா ஆல்பர்ட் வாடா மாப்பிளை உன் டிரைவிங் லைசென்சை குடுன்னு சொன்னதும்...

கார்லதான் உறங்குனான்னா இந்த பிசாசு போட்டோவுலையும் உறங்குது பாருங்க...

என்ன மச்சான், லைசென்சா அப்பிடின்னா.....??? டேய் சைக்கிள் [[கார்]] ஓட்ட லைசென்ஸ் வச்சிருப்பியே அதை குடுடா, ஸாரி மச்சான் எனக்கு லைசென்சே கிடையாதுன்னு சொல்ல அடபாவி பயலுகளா ஒரு மார்க்கமாத்தான் குற்றாலம் தள்ளிட்டு வந்துருக்காணுக போல.....!!!


டேய் சிபி போடா போயி செல்வாகிட்டே ஏதாவது ஐடி ஏதும் இருக்கான்னு கேளுடா நாயே'ன்னதும் ஓடினான் பாருங்க ஒரு ஓட்டம், நாலஞ்சி கார்கள் சடன் பிரேக் போட்டு நின்னுச்சி நெல்லை பாஷையில் அவனுக திட்டினது இந்த பயலுக்கு புரியலை போல, என் மச்சினன் கி கி கி கி'ன்னு சிரிச்சிட்டு நின்னுட்டு இருந்தான்.


கார்'ல உறங்கிட்டு இருந்த செல்வாவுக்கு நாலு மிதி போட்டு எழுப்பினான், டேய் தம்பி உன்கிட்டே ஐடி ஏதாவது இருக்கான்னு கேட்க, அவன் அவனுக்கே உரிய பதிலை சொல்ல, மிரண்டு போனான் கண்ணாடி சிபி,

ஒரு வழியா செல்வாவின் ஐடியை கொடுத்து ரூம் போட்டோம்..[[இதனால் சொல்ல வரும் நீதி என்னான்னா இனி சிபி கூட ஊர் சுத்த போறவிங்க கொஞ்சம் உஷாரா இருந்துக்கொங்க]]


கொஞ்சம் மழை தூறிக்கொண்டே இருந்ததால் நல்ல குளிரா இருந்தது தென்காசி........

தொடரும் பயணம்........

டிஸ்கி : என்னாது சிபி'யை குரங்கு கடிச்ச மேட்டரா....??? அது குற்றாலத்துல இது தென்காசி'ல.......!!!

டிஸ்கி : தமிழ்வாசி"யின் விஜயகாந்த் வீடியோ மேட்டரை பற்றி பேசியதும் என் மச்சினன் உடனே பிரகாஷின் போன் நம்பரை கேட்டான் ஹி ஹி நான் குடுக்கலை காரணம், மச்சினன் பாளையங்கோட்டையில் விஜயகாந்த் கட்சியின் ஏதோ ஒரு பதவியில் தீவிரமா இருக்கான் ஹே ஹே ஹே ஹே தமிழ்வாசி சாக்குரதைலேய்....ஹா ஹா ஹா ஹா.....

57 comments:

  1. குற்றால அருவியில குளிச்சாலும் அடங்காது...

    ReplyDelete
  2. தம்பி லேப் டாப் மனோ.. நாங்க 3 பேரும் தூங்கிட்டு இருந்தப்போ நீ மட்டும் நைட் 2 மணீக்குப்போய்ட்டு 3 மணிக்கு வந்து சத்தம் இல்லாம படுத்துக்கிட்டியே.. அதை பற்றி சொல்லலையா? ஹி ஹி

    ReplyDelete
  3. ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் ஏதோ கவிதை பேப்பர் குடுத்தியே .. அதைக்கூட சொல்லையே...ஏன்?

    ReplyDelete
  4. குணசேகரன்... said...
    Nice enjoyment ah? Stills la Jamal seer ga!//

    ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா...

    ReplyDelete
  5. பாட்டு ரசிகன் said...
    குற்றால அருவியில குளிச்சாலும் அடங்காது...//

    எதுய்யா தெளிவா சொல்லுங்கப்பா....

    ReplyDelete
  6. பாட்டு ரசிகன் said...
    வாங்க மனோ வாங்க...//

    அப்பாடா ரெண்டு ஓட்டு கன்பாம்டு....

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி லேப் டாப் மனோ.. நாங்க 3 பேரும் தூங்கிட்டு இருந்தப்போ நீ மட்டும் நைட் 2 மணீக்குப்போய்ட்டு 3 மணிக்கு வந்து சத்தம் இல்லாம படுத்துக்கிட்டியே.. அதை பற்றி சொல்லலையா? ஹி ஹி//

    டேய் நான் பாத்ரூம் போனதை சொல்ரியாக்கும்.....

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...
    ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட்டிடம் ஏதோ கவிதை பேப்பர் குடுத்தியே .. அதைக்கூட சொல்லையே...ஏன்?//

    அடங்கொன்னியா அது ரயில் டிக்கட்டுடா டுபுக்கு....

    ReplyDelete
  9. செந்தில் அண்ணா எல்லார் கிட்டயும் பல்பு வாங்குறாரே..

    ReplyDelete
  10. ம்..ம்..நடக்கட்டும்..நடக்கட்டும்..இன்னைக்கு நைட் என் பதிவுல இருக்கு கச்சேரி.

    ReplyDelete
  11. அடப்பாவமே ஒரு சரணாலயமே குளிக்க போயிருக்கே ஹிஹி!

    ReplyDelete
  12. நிறைய உண்மைகள் வெளிய வந்து கிட்டு இருக்கு!!?? இருந்தாலும் எப்பவுமே ஒரு பயண அனுபவம் சுகமானது..

    ReplyDelete
  13. ஏற்க்கெனவே குற்றாலத்தில் குரங்குகள் இம்சை ஜாஸ்தி.
    இங்க ஒரு ஜூவே புறப்பட்டு போயிருக்கு...
    குத்தாலத்துக்கே
    அநேகமா வைத்தியம் பாக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  14. குற்றாலம் போனீங்களே, அங்க தேனருவியில குளிச்சீங்களா? அந்த இடம் ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கும்.. செண்பகாதேவி அருவியில குளிச்சீங்களா?

    ReplyDelete
  15. சுகமான பயண அனுபவம்.

    ஆமா... குற்றாலம் போனத சொல்றேன்னு சொல்லிட்டு எங்க சிபி அண்ணாவை வாரு வாருன்னு வாருறதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  16. நல்லாத்தான் இருக்கு இந்த பயண அனுபவம்..

    ReplyDelete
  17. குளு,குளு;சிலு,சிலு;கல,கல பதிவு!குரங்கு கடித்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!அந்தக் குரங்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  18. நல்லா எஞ்சாய் பண்ணி இருக்கிறீங்க. தொடருங்கோ....

    ReplyDelete
  19. Shiva sky said...
    செந்தில் அண்ணா எல்லார் கிட்டயும் பல்பு வாங்குறாரே..//


    ஹா ஹா ஹா ஹா சரி சரி விடுங்கய்யா....!

    ReplyDelete
  20. செங்கோவி said...
    ம்..ம்..நடக்கட்டும்..நடக்கட்டும்..இன்னைக்கு நைட் என் பதிவுல இருக்கு கச்சேரி.//

    அடப்பாவமே இது வேறயா.....!!!

    ReplyDelete
  21. பதிவை படிச்சு சிரிச்சுட்டு இருக்கேன்..பதிவ சந்திப்புலாம் ரொம்ப கலக்கலா நடந்துருக்கு,கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.

    ReplyDelete
  22. விக்கியுலகம் said...
    அடப்பாவமே ஒரு சரணாலயமே குளிக்க போயிருக்கே ஹிஹி!//

    அண்ணே நீ அந்த சரணாலயத்துல இருந்து தப்பி ஓடினவந்தானே..??? ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  23. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    நிறைய உண்மைகள் வெளிய வந்து கிட்டு இருக்கு!!?? இருந்தாலும் எப்பவுமே ஒரு பயண அனுபவம் சுகமானது..//

    கண்டிப்பா மக்கா அனுபவம் சுகமானது....

    ReplyDelete
  24. உலக சினிமா ரசிகன் said...
    ஏற்க்கெனவே குற்றாலத்தில் குரங்குகள் இம்சை ஜாஸ்தி.
    இங்க ஒரு ஜூவே புறப்பட்டு போயிருக்கு...
    குத்தாலத்துக்கே
    அநேகமா வைத்தியம் பாக்க வேண்டியிருக்கும்.//

    சத்தியமா நாங்க டீசெண்டா நடந்துகிட்டோம் சிபி தவிர.......

    ReplyDelete
  25. கவிதை காதலன் said...
    குற்றாலம் போனீங்களே, அங்க தேனருவியில குளிச்சீங்களா? அந்த இடம் ஒரு சொர்க்கம் மாதிரி இருக்கும்.. செண்பகாதேவி அருவியில குளிச்சீங்களா?//

    இந்த மூதேவிங்க ரெண்டு பெரும் ஈரோடு உடனே கிளம்பனும்னு சொல்லிட்டானுங்க அதனால பார்க்க முடியலை மக்கா...!

    ReplyDelete
  26. சே.குமார் said...
    சுகமான பயண அனுபவம்.

    ஆமா... குற்றாலம் போனத சொல்றேன்னு சொல்லிட்டு எங்க சிபி அண்ணாவை வாரு வாருன்னு வாருறதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

    எங்கே போனாலும் எதையாவது பண்ணி வாங்கி கட்டிட்டு இருக்கானே ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  27. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    நல்லாத்தான் இருக்கு இந்த பயண அனுபவம்..//

    ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா.....!

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...
    குளு,குளு;சிலு,சிலு;கல,கல பதிவு!குரங்கு கடித்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!அந்தக் குரங்கு என்ன ஆச்சு?//

    அந்த குரங்கை அரெஸ்ட் பண்ணி கொண்டு போயிட்டாரு ஆபீசர்.....!

    ReplyDelete
  29. vanathy said...
    நல்லா எஞ்சாய் பண்ணி இருக்கிறீங்க. தொடருங்கோ....//

    இன்னும் இருக்கு ஹே ஹே ஹே ஹே....!

    ReplyDelete
  30. //டிஸ்கி : என்னாது சிபி'யை குரங்கு கடிச்ச மேட்டரா....??? அது குற்றாலத்துல இது தென்காசி'ல.......!!!//
    பாவம் அந்த குரங்கு.

    ReplyDelete
  31. மக்கா... உங்க மச்சானுக்கு என் வணக்கத்தை சொல்லிருங்க....

    ReplyDelete
  32. //MANO நாஞ்சில் மனோ said...
    சென்னை பித்தன் said...
    குளு,குளு;சிலு,சிலு;கல,கல பதிவு!குரங்கு கடித்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!அந்தக் குரங்கு என்ன ஆச்சு?
    >>>>>>>>>
    அந்த குரங்கை அரெஸ்ட் பண்ணி கொண்டு போயிட்டாரு ஆபீசர்.....!//
    சிபிய கடிச்ச செத்த(கொஞ்ச) நேரத்தில செத்து போச்சு!

    ReplyDelete
  33. மனோ அண்ணா நானும் கடந்த ஆண்டு குற்றாலத்தில் குளித்தேன் அந்த ஞாபகத்தை உங்களின் 7 ஒரு படம்  காட்டுகிறது நல்ல குளியல் ஆனால்  பின் 3நாட்கள் நல்ல காய்ச்சல் இனியும் ஒரு முறை முயற்ச்சிக்கலாம் உங்கள் பதிவைப் பார்த்த பின். பாவம் சி.பி உங்களிடம் நல்லா மாட்டிக்கிட்டார் .

    ReplyDelete
  34. இதுவும் தொடருமா? வெளங்கிரும்.... கடேசி வரைக்கும் சிபி என்ன பண்ணுனாருன்னு சொல்ல போறதில்ல....?

    ReplyDelete
  35. மனோ!நோகாம நொங்கு திங்கிறீங்க!அனுபவிங்க.

    பி.கு:பேரிச்சம் பழம் காத்துகிட்டிருக்குது:)

    ReplyDelete
  36. FOOD said...
    //டிஸ்கி : என்னாது சிபி'யை குரங்கு கடிச்ச மேட்டரா....??? அது குற்றாலத்துல இது தென்காசி'ல.......!!!//
    பாவம் அந்த குரங்கு.//

    ஹா ஹா ஹா ஹா.......

    ReplyDelete
  37. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா... உங்க மச்சானுக்கு என் வணக்கத்தை சொல்லிருங்க....//

    ஹா ஹா ஹா ஹா சொல்றேன் சொல்றேன் ஹி ஹி.....

    ReplyDelete
  38. FOOD said...
    //MANO நாஞ்சில் மனோ said...
    சென்னை பித்தன் said...
    குளு,குளு;சிலு,சிலு;கல,கல பதிவு!குரங்கு கடித்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!அந்தக் குரங்கு என்ன ஆச்சு?
    >>>>>>>>>
    அந்த குரங்கை அரெஸ்ட் பண்ணி கொண்டு போயிட்டாரு ஆபீசர்.....!//


    சிபிய கடிச்ச செத்த(கொஞ்ச) நேரத்தில செத்து போச்சு!

    ஐயய்யோ ஆபீசர், அப்போ சிபி'யின் கதி...????

    ReplyDelete
  39. Nesan said...
    மனோ அண்ணா நானும் கடந்த ஆண்டு குற்றாலத்தில் குளித்தேன் அந்த ஞாபகத்தை உங்களின் 7 ஒரு படம் காட்டுகிறது நல்ல குளியல் ஆனால் பின் 3நாட்கள் நல்ல காய்ச்சல் இனியும் ஒரு முறை முயற்ச்சிக்கலாம் உங்கள் பதிவைப் பார்த்த பின். பாவம் சி.பி உங்களிடம் நல்லா மாட்டிக்கிட்டார் .//

    குற்றால'த்துல விழுற தண்ணி எல்லாம் மூலிகை தண்ணீர்'ய்யா உமக்கு எப்பிடி காய்ச்சல் வந்தது ஆச்சர்யமா இருக்கே...!!!!

    ReplyDelete
  40. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அந்த பிங்க்கு சட்ட யாரு?//

    அந்த மூதேவி பேரை வேற நான் சொல்லனுமா...???

    ReplyDelete
  41. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இதுவும் தொடருமா? வெளங்கிரும்.... கடேசி வரைக்கும் சிபி என்ன பண்ணுனாருன்னு சொல்ல போறதில்ல....?//

    ஹா ஹா ஹா ஹா வெயிட் பண்ணுங்க மக்கா.....

    ReplyDelete
  42. ராஜ நடராஜன் said...
    மனோ!நோகாம நொங்கு திங்கிறீங்க!அனுபவிங்க.

    பி.கு:பேரிச்சம் பழம் காத்துகிட்டிருக்குது:)//

    என்னாது.....பேரீச்சம்பழமா எங்கே எங்கே....???

    ReplyDelete
  43. ஆபீசரிடமிருந்து விடை பெற்று கொண்டு நான்கு சக்கர சைக்கிள் குற்றாலம் நோக்கி சீறி பாய்ந்தது சிபியையும் செல்வாவையும் ஏற்றிக்கொண்டு...//

    அப்ப மனோவை எங்கே இருத்திக் கூட்டிக் கிட்டுப் போனாங்க?
    பாஸ் உங்களுக்கு சீட் கூடத் தரவில்லை என்று சிபி பேசிக்கிறாரே, உண்மையா?

    ReplyDelete
  44. என் மச்சினன் சைக்கிளை மிக லாவகமா ஓட்டிட்டு இருந்தான் [[நான்தான் குலை நடுங்கிட்டு இருந்தேன் ஏன்னா அவன் புது டிரைவர், அது இந்த ரெண்டு நாதாரிக்கும் தெரியாது ஹே ஹே ஹே ஹே]]//

    அடடா...இது வேறை நடந்திச்சா..
    ஹி....ஹி...


    நல்ல வேளை, சிபி கிட்ட வண்டியை ஓட்டச் சொல்லி குடுக்கலை. நீங்க குடுத்திருந்தீங்க. மலையில் இருந்து கீழே தள்ளி விட்டிருப்பாரு.

    ReplyDelete
  45. அந்த ரிசப்ஷனிஸ்ட், எனது பான் கார்டில் காறி துப்பி இது செல்லாது என சொல்ல நான் சிபி'க்கு முன் கூனி குறுகி போனேன். சரி டேய் மூதேவி உன் ஐடி கார்டை குடுடா நாயே என்றேன். சொன்னான் பாருங்க அதுக்கு பதில்....//

    ஆஹா....சமயோசிதமான ஆளு நம்ம சிபி என்று நினைக்கிறேன்.
    ஹி...

    ReplyDelete
  46. கார்லதான் உறங்குனான்னா இந்த பிசாசு போட்டோவுலையும் உறங்குது பாருங்க...//

    நீங்க ரெண்டு பேரும் தான் சின்னப் பையன் செல்வாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக அறிந்தேன். மெய்யாலுமே.

    ReplyDelete
  47. டிஸ்கி : என்னாது சிபி'யை குரங்கு கடிச்ச மேட்டரா....??? அது குற்றாலத்துல இது தென்காசி'ல.......!!!//

    ஆஹா..அடுத்த பாகம் வெகு ஜோராக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஆவலுடன் காத்திருக்கேன்.

    ReplyDelete
  48. டிஸ்கி : தமிழ்வாசி"யின் விஜயகாந்த் வீடியோ மேட்டரை பற்றி பேசியதும் என் மச்சினன் உடனே பிரகாஷின் போன் நம்பரை கேட்டான் ஹி ஹி நான் குடுக்கலை காரணம், மச்சினன் பாளையங்கோட்டையில் விஜயகாந்த் கட்சியின் ஏதோ ஒரு பதவியில் தீவிரமா இருக்கான் ஹே ஹே ஹே ஹே தமிழ்வாசி சாக்குரதைலேய்....ஹா ஹா ஹா ஹா.....//


    என்ன மனோ மச்சினன் சார், தமிழ் வாசியோட நம்பர் கேட்கிறீங்களா?
    என்கிட்ட......................



    இல்லைன்னு சொல்ல வந்தேன்.

    ஹி.....ஹி...

    ReplyDelete
  49. தலைவா செல்வா சொன்ன பதில போடலியே என்ன காரனம்

    ReplyDelete
  50. மனோசார் இந்தியாவுல எல்லோரும் தான் சம்பாதித்ததை சுவிஸ் பேங்குல போட்டு வைக்குறாங்க ஆனா நீங்க பஹைரன்ல சம்பாதித்தை எல்லாம் உங்க வயித்துகுள்ள போட்டு ஒளிச்சு வைச்சுருக்கிங்க மாதிரி இருக்கு.பார்ர்த்து ஜாக்கிரதை உங்க குற்றால போட்டோவை நான் CBI ஆபிஸுக்கு அனுப்பி வைச்சுருகேன் பாருங்க விரைவில் கேரளா பத்மநாபா கோயில் சுரங்கத்தில் உள்ளவைகளை எடுத்து கணக்கு போடுகிற மாதிரி உங்கள் சுரங்கத்தில் இருந்து கணக்கு எடுக்க போறங்கா தோழரே

    ReplyDelete
  51. உங்கள் நண்பர் சிபி "எம்ஜியார்" போல நல்ல போஸ் கொடுக்குறார்.. அடுத்த எலக்சன்ல பதிவாளார் சார்பாக அவரை நிறுத்தலாம் நீங்க என்ன சொல்லுறிங்க ? உங்கள் பதிவின் மூலம் அவருக்கு "பதிவுலக எம்ஜியார்" என்ற பட்டத்தை அளிக்கிறேன்.

    ReplyDelete
  52. சிபி இப்ப உங்கள் மைச்சினருக்கு எதிரி ஆகிவிட்டார் புரியலையா? கருப்பு எம்ஜியார்க்கு போட்டியாக பதிவுலக எம்ஜியாராக பதிவி உயர்வு கொடுத்து இருக்கோமே

    ReplyDelete
  53. குற்றால குரங்கு சிபி யை கடித்தால் தென் காசி குரங்கு யாரை கடித்தது?

    ReplyDelete
  54. இந்தக் கதைதானே வேணாங்றது...நீங்க சாப்பிட்ட நொங்கை எப்படிங்கண்ணே படம் புடிச்சிங்க....?

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!