Thursday, May 10, 2012

நம்ம வீட்டு விஷேசம்....!!!

ஆபீசர் மகள் கல்யாண விஷேசம் பற்றி வாழ்த்தி அநேக பதிவுகள் பதிவர்கள் எழுதியாச்சு அதனால நான் எடுத்த போட்டோக்களை போட்டு அதற்க்கு விளக்கமும் சொல்றேன். நான் போட்டோ எடுப்பதை தடுக்க நக்கீரன் எம்புட்டோ முயன்றும் தோற்றுபோனார். அப்புறம் என் போன் மெமரி கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பேரம் நடந்து கொண்டிருந்தது சென்னை [[மெட்ராஸ் பவன்]] வரை....!!!

போனில் ஆபீசர் : ஹலோ மனோ நெல்லை வந்துட்டீங்களா..?

நான் : ஆமாம் ஆபீசர் பாளையங்கோட்டையில் மச்சினன் வீட்டில் இருக்கேன்.

ஆபீசர் : அப்போ முடிஞ்சா அங்கே பக்கத்தில் இருக்கும் செல்வி கல்யாண மண்டபம் வாங்க நாளை நடக்கும் பங்ஷனுக்கு மண்டபத்தை சுற்றி பார்க்கலாம் வாறீங்களா?

நான் : ஓ தாராளமா.....

கல்யாணத்தின் முந்தைய நாளில் இருந்து போட்டோ ஆரம்பிக்குது.....!!!

ஆபீசர் கல்யாணத்தில் இன்னொரு விஷேசம் என்னன்னா, கல்யாணத்திற்கு "பசுமை விடியல்" சார்பாக கவுசல்யா கையால் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாருக்கும் ஆயிரம் மரக்கன்றுகள் கொடுத்ததுதான், தம்பி "கற்போம்"பிரபு கிருஷ்ணாவும் பெங்களூரில் இருந்து வந்து கவுசல்யா'வுக்கு உதவிகொண்டிருந்தான். திருமண வரவேற்பு நேரம் கவுசல்யாவும் அவர் கணவர் ஜோதிராஜும் அவர்கள் இரு மகன்களுமாக சேர்ந்து மரக்கன்று கொடுத்து கொண்டிருந்தார்கள் [[வாழ்த்துகள் வாழ்த்துகள்]]


 செல்வி கல்யாண மண்டபத்தின் கிச்சன் பாத்திரங்கள்.

 ஆபிசரின் நண்பர்கள் டீம் அதிரடி சோதனைகள்.

 முந்தய நாளின் சோதனையின் போது ஆபீசரும், அவர் அக்காள் கணவரும் [[வேஷ்டி சட்டை]] ஒரு பவர்புல் ஆபீசரும்.....

 மண்டபத்தின் கிச்சன் சுத்தமாக இருக்கிறதா சோதனை செய்யப்படுகிறது.

 முன்னூற்றி அம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும், சோதனை.

 என்னய்யா எல்லாம் சரியா இருக்கா இல்லை பெல்டை உருவட்டுமா...?

 கரண்ட் இல்லைன்னா ஏசி எப்படி ஓடும், ஜெனரேட்டர் செக் செய்யப்படுகிறது...!!!

 திருமண மண்டபம்.


 கல்யாண நாளன்று காலையில் ஆபீசர் சுறுசுறுப்பாக.....மணமகள் அறை முன்பு.....

 உனக்கு மனோ'கிட்டேயும், விக்கி'கிட்டேயும் அடி வாங்குறதே பொழப்பா போச்சு.........சிபி'யும் ஆபீசரும்.

 சிபி, நக்கீரன், சம்பத், வீடு'சுரேஷ், கவிதைவீதி, கருண்........டேய் சிபி போனை ஏண்டா அந்த நோண்டு நோண்டுத...?
 எனது போன் மெமரி கார்டு ஏலம் போடுறாங்க, சிகப்பு கோடுபோட்ட சட்டை போட்டிருப்பவர் ஜோதிராஜ் [[கவுசல்யாவின் கணவர்]]


 மணமேடையில் ஆபீசர்.


 கல்யாண வீட்டில் எல்லார் கவனத்தையும் கவர்ந்த வேஷ்டி உடுத்திய ஜோடி...!!!



 மணப்பெண் வெளியே வருகிறார்.

 சடங்குகள் நடைபெறுகிறது.


 மணமக்கள்...


 வரவேற்பில் ஆயிரம் மரக்கன்றுடன் கவுசல்யா மற்றும் தம்பி பிரபு கிருஷ்ணா...!!!

 மரக்கன்றுகள் ஒவ்வொன்றாக பிரித்து பேக் செய்கிறார்கள்.....!

 மரக்கன்றுகளை ஊழியர்கள் கொண்டு கொடுப்பதை பத்திரப்படுத்துகிறார்கள்.

 எவம்லேய் அது நடுரோட்டுல நின்னு போட்டோ எடுக்கிறது...?? சுரேஷ் மற்றும் கவிதைவீதி.

 மனோ அண்ணே மனோ அண்ணே நீங்களும் சிபி அண்ணனும் அந்த கார் மேல ச்சே அந்த கார்ல சாஞ்சி நில்லுங்க ஒரு போட்டோ எடுத்து ஆனந்த விகடனுக்கு அனுப்பனும்..............பிரகாஷ் மற்றும் கருண்.

 இது யார் தெரியுதா சாமி படம் வில்லன் [[ரவுடி]] மாதிரி இருக்கார்....!!! ஆபிசரின் மூத்த அண்ணன் சண்முக வேலாயுதம் [[எலேய் சண்முக பாண்டி உன் அருவா இவரு முன்னாடி தோத்து போச்சுலெய் இனி அருவாளுக்கு இவர்தான் வரப்போறார் ஹே ஹே]] சாப்பிடும் போது என்னை முறைச்சு பார்த்துட்டு இருந்தார் லேசா சந்தேகம் வரவும் ஆபீசர் நண்பர் சாகுல் ஹமீதை கூப்பிட்டு யார்னு கேட்டேன் ஓ இது நம்ம ஆபிசரின் அண்ணன் என்றார்.

ஒரு வணக்கம் போட்டேன் தலையால், அவரும் தலையாட்டி வணக்கம் சொல்லிட்டு அருவா வெளியே இருக்கா'ன்னு கேட்க எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்.......டேய் அவர் உன்னைத்தான் அருவா பார்டின்னு கிண்டல் பன்றார்னு சிபி சொன்னான்.

ஆனால் ஒன்றுய்யாஆபீசர் அண்ணன் நம்ம பிளாக் எல்லாம் பேஸ்புக் அடக்கம் சத்தமில்லாமல் படிச்சிகிட்டு இருக்கார்னு நல்லா தெரிஞ்சிகிட்டேன் காரணம் என் மகளை பார்த்ததும் கண்டுபிடிச்சிகிட்டார், பேஸ்புக் போட்டோவுல கலக்கினது நீதானேன்னு ம்ம்ம்ம்.....நாலடி தள்ளி நில்லுங்கலேய் மக்கா....!!!
 கூடல்பாலா, கண்ணாடி சிபி, கவிதைவீதி.



 தன் மகன் சுகமில்லாமல் சீரியஸாக இருந்த போதும் நட்பை போற்றும் நண்பன் திவானந்தா[[ரோஸ் கலர் சட்டை] கடைசியில் விஜயன்.

 ஆபீசர் வீட்டு கல்யாணத்துக்கு நாங்களும் ஓடியாடி வேலை செய்வோம்ல, ஒரு கார் போவதற்கு ஒரு பைக்கை தூக்கி அப்புறப்படுத்துகிறார் விஜயன்.

 போட்டோக்களை எண்ணும் விஜயனும் சிபியும், விஜயன் மூஞ்சியில எவம்லேய் இருட்டடிச்சது...?

 மணமக்களை வாழ்த்தி கவிதைவீதி'யின் கவிதை...!

..
 நான், வெடிவால்'வடிவேல், சிபி. ஒருத்தரும் பேசலைன்னாலும் போனை எப்பவும் செவியில வச்சிகிட்டு இருக்கியே ராஸ்கல் ஏண்டா...?



 சென்னை, நாகர்கோவில், நெல்லை, திருப்பூர், கோயம்புத்தூர்...!!

 கேமரா என் வாழ்க்கையில் இனி எங்கேயும் கொண்டு வரமாட்டேன்னு சபதம் போட்ட [[499]] ஆளு கேமராவோடு வந்தது எல்லாரையும் ஆச்சர்யபடுத்தியது ஹா ஹா ஹா ஹா அருகில் டார்ச்சர் லகுடபாண்டி அண்ணன் நக்ஸ்.

 யோவ் கல்யாண மேடை அங்கே இருக்குய்யா அங்கே போயி போட்டோ எடுங்க, பாக்குறவிங்க என்னா நினைப்பாங்க...?

 மணமக்களுக்கு ஒரு கவிதை பரிசளிக்கிறார் கவிதைவீதி, பின்னால் நம் பதிவர்கள் தொடர்கிறார்கள்.



 இதுதான் அந்த டார்ச்சர் பார்ட்டி மாப்பிளை இவரை நியாபகம் வச்சுக்கோங்க, பின்னாடி இவர் வரலாறை சொல்றேன், மாப்பிளைக்கு இவர்களை அறிமுகப்படுத்துகிறார் ஆபீசர்.

 நான் திரும்பிதான் நிப்பேன் மரியாதையா போட்டோ எடுங்க...

 அய் சிபி போட்டோ எடுக்கிறான் ஆனால் அவன் பின்னம்மண்டையில வழுக்கை ஹை ஜாலி ஜாலி.....

 பிச்சிபுடுவேன் பிச்சி எவம்லேய் என்னை போட்டோ எடுக்கிறது...? எட்றா அந்த வீச்சருவாளை டேய்.........[[அவ்வ்வ்வ் ஆபீசர் அண்ணன் சண்முக வேலாயுதம் வேறொரு கெட்டப்பில்]]

 ச்சே நமக்கு சாப்பாடு கிடைக்காதோ இப்பிடி முழுங்குறானுகளே....

 கிறு கிறுப்புடன் நக்ஸ், பாந்தமாக ராஜபாட்டை ராஜா.

 தனியாக அமர்ந்து சாப்பாட்டை விளாசும் சிபி, இது அவன் அறியாமல் எடுத்த போட்டோ..[[மாட்னான்]]

ஜோதிராஜ், நான், ஆபிசரின் நண்பர்கள் இருவர், கருப்பு சட்டை சாகுல் ஹமீத், யப்பா இவிங்களும், சுதன், ஆபிசரின் அக்கா புருஷன், மற்றும் பெயர் தெரியாதவர்கள் நிறைய பேர் சேர்ந்து பண்ணுன டீம் ஒர்க் இருக்கே சூப்பரா பக்காவா செய்து முடிச்சிட்டாங்க ஏன்னா அத்தனை பேரையும் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல....!!!

சும்மா பம்பரமா சுழன்டாங்க, சாப்பாடும் மிக மிக அருமையாக இருந்தது பாயாசத்தில் பப்படத்தை பொடித்து போட்டு திங்கும் சுகமே சுகம்....!!!

மீண்டும் மணமக்களை மனமார வாழ்த்துகிறேன்.........!

27 comments:

  1. முதலில் திரும்ப வாழ்த்துக்கிறேன்
    மீ தி FIRST WISHES HERE..

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் நேரில் கலந்துகொண்ட உணர்வு அண்ணா

    ReplyDelete
  3. அண்ணே போட்டோ அருமை ... இவ்வளவுதானா .. இல்லை இன்னும் இருக்கா ?

    ReplyDelete
  4. கலக்கல்ஸ் பாஸ்!
    எனது வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  5. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த ஆபீசருக்கு மிக்க நன்றி..

    அப்புறமா ஆர்கெஸ்ட்ரால்ல நம்ம சிபி டான்ஸ் ஆடுனது..

    எதோ மர்மமான பொருள் வாங்க மெடிக்கல் சாப் ஒதுங்கியது..

    நாய் நக்ஸ் காலைல 9 மணி வரைக்கும் தூங்கியது..

    எதையுமே மறக்க முடியாது அண்ணாச்சி..

    கடைசி வரைக்கும் செல்போன அடுத்தவங்க கைக்கு குடுக்கவே இல்ல..(சிவா கவனிக்கவும்)

    ReplyDelete
  6. என் ராஜபாட்டை"- ராஜா said...
    அண்ணே போட்டோ அருமை ... இவ்வளவுதானா .. இல்லை இன்னும் இருக்கா ?//

    இனி விஜயன் எடுத்த போட்டாதான் இருக்கு.

    ReplyDelete
  7. என் முகத்தை மட்டும் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்க்கு மிகவும் டெக்னிக்கலாக படம் பிடித்ததற்க்கு நன்றி..... என் முகத்தை காட்டத்தான் தடையில்லையே இருந்தும் ஏன் ஓர வஞ்சனை..... சொட்டை தலையைக்கூட அருமையாக படம் பிடிக்கும் அந்த கேமிரா முகத்தை மட்டும் கோட்டை விடுவதன் ரகசியம் என்னவோ???????

    ReplyDelete
  8. இருந்தாலும் உம் கடமை உணர்ச்சியை பாராட்டியே ஆகவேண்டும் கிச்சன் முதல் பங்ஷன் வரை படமாக்கிவிட்டீரே.......

    ReplyDelete
  9. யோவ் வாழ்த்துக்கள்...திருமண வைபவத்தில் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிச்சது..மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது...!

    நிற்க...

    யார கேட்டு கிச்சன்ல இருக்க பாத்திர பண்டத்த எல்லாம் போட்டோ எடுத்த...அதுவும் இல்லாம அந்த கவுந்த ரெண்டு கல்லுகள் உணர்த்தும் தத்துவம் என்னன்னு சொல்லவே இல்லயே ஹெஹெ!

    ReplyDelete
  10. அண்ணே வணக்கம் ..
    போட்டோ அனைத்தும் கலக்கல் ..
    நேர்ல வராத குறைய உங்க போட்டோ போக்கிடுசி ...

    ReplyDelete
  11. சாப்பிடும் போது என்னை முறைச்சு பார்த்துட்டு இருந்தார் லேசா சந்தேகம் வரவும் ஆபீசர் நண்பர் சாகுல் ஹமீதை கூப்பிட்டு யார்னு கேட்டேன்
    ////////////////////////
    எங்கிட்ட அப்பவே கேட்டாரு யாருலே இந்த பய அண்டா...குண்டாவையெல்லாம் போட்டா எடுக்குதாம்ல....மண்டபத்து வாட்ச்மேனா அப்படின்னு....
    நான் அவரு ஆபிசர் பிரண்டு மனோ தாம்ண்ணே! அப்படின்னு சொன்னேன் மக்கா! ஹிஹி!

    ReplyDelete
  12. சும்மா பம்பரமா சுழன்டாங்க, சாப்பாடும் மிக மிக அருமையாக இருந்தது பாயாசத்தில் பப்படத்தை பொடித்து போட்டு திங்கும் சுகமே சுகம்....!!!
    ///////////////////////
    ஒரு அண்டா பாயசமும் பத்து பாக்கெட் பப்படமும்...காணவில்லை என்று சமையல்காரர் சொன்னது சரிதான்......வௌங்கிரும்!

    ReplyDelete
  13. திருமணத்தை நேரடியாகப் பார்ப்பதுபோன்று
    அருமையான புகைப்படங்கள்
    இடையே இடையே வரும்
    கமெண்ட்கள் வெகு சுவாரஸ்யம்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. //அப்புறம் என் போன் மெமரி கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பேரம் நடந்து கொண்டிருந்தது சென்னை [[மெட்ராஸ் பவன்]] வரை....!!//

    படை வீரர்கள் மெமரி மறதியால் மெமரி கார்டை கைப்பற்ற முடியவில்லை. இன்னும் பயிற்சி வேண்டுமோ..

    ReplyDelete
  15. //செல்வி கல்யாண மண்டபத்தின் கிச்சன் பாத்திரங்கள்.//

    இதுக்குத்தான் சொன்னேன்..கேமராவை புடுங்குங்கப்பான்னு.

    ReplyDelete
  16. //முன்னூற்றி அம்பது பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும், சோதனை.//

    அதுவும் நாஞ்சில் மனோவுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்...சத்திய சோதனை...

    ReplyDelete
  17. // தன் மகன் சுகமில்லாமல் சீரியஸாக இருந்த போதும் நட்பை போற்றும் நண்பன் திவானந்தா[[ரோஸ் கலர் சட்டை]//

    ‘திவானந்தா லீலைகள்’ தொடர் எழுதலாம்னு இருக்கேன்.

    ReplyDelete
  18. Yoooowwww...
    Mano....

    Enkaiya....
    TOILET-I
    sothanai potta....
    Photo.....???????

    Appuram....
    Antha ....
    Kuppai thotti.....
    Photo....

    Athaium....poduya....

    ReplyDelete
  19. என் வீட்டுத்திருமணத்தில், என் நண்பர்கள் பங்கு மிகச்சிறந்த விதமாய் அமைந்தது, இறைவன் எனக்களித்த வரம்.
    அந்த கூட்டணி இல்லை யென்றால், என்னால் வந்த விருந்தினர்களை நன்கு உபசரித்திருக்க முடியாது.
    அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்,மனோ.

    ReplyDelete
  20. முதல்நாள், நம்முடன் வந்த அந்த ஆஃபிசர்-என் நண்பர் திரு.இசக்கிமுத்து(3வது படம்). சும்மா சினிமா வில்லன்போல இருப்பார்.அவர்தான், பந்தியை சுழண்டு,சுழண்டு கவனித்துக்கொண்டவர்.அவருடன், நண்பர்கள் அரசகுமார், சாகுல்ஹமீது,மகாலிங்கம், சுதன், பழனி,முத்துகிருஷ்ணன் ஆகியோர்தான் டீம் ஒர்க் பண்ணியவர்கள்.

    ReplyDelete
  21. @நாய்நக்ஸ்: நண்பர்கள் எல்லாம், நல்ல விஷயங்களைப் பற்றி பேசும்போது, நக்ஸ் மட்டுமே குப்பைத்தொட்டியைப்பற்றியும், கழிவறையைப்பற்றியும் கவலைப்படுகிறார். சரிதான், அதற்கும் ஒரு ஆள் வேண்டுமே! :))

    ReplyDelete
  22. திருமணத்தை அருகில் இருந்து பார்ப்பதுபோன்று நீங்கள் பகிர்ந்த
    அருமையான புகைப்படங்களின் தொகுப்போடு நீங்கள் கொடுத்த கமெண்ட்கள் மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
  23. திருமணத்தை நேரில் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியது தங்களது புகைப்படங்கள் ..!

    ReplyDelete
  24. போட்டோஸ் அருமை.. வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  25. நாங்களும் கலந்து கொண்டதுபோல் இருந்தது மனோ!அருமையான பதிவு மனோ!உங்க வீட்டு
    ஃபங்சனுக்கு இன்னும் கூட்டம் அதிகம் இருக்குமே???உங்க மனசு போல?

    ReplyDelete
  26. மக்கா, அனைத்து போட்டோக்களும் அருமை....


    மீண்டும் ஆபீசர் வீட்டுக் கல்யாணத்தை கண் முன் கொண்டு வந்தமைக்கு நன்றி....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!