Sunday, December 29, 2013

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......

கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

மறுபடியும் வீட்டுக்கு வந்து, பெட்டியை பிரித்து லாப்டாப் மட்டும் எடுத்துக்கொண்டு, நண்பனின் டிரைவரை அழைத்து நாகர்கோவில் போகணும் என்றதும் உடனே கார் கொண்டு வந்துவிட்டான்.

மறுபடியும் விஜயனுக்கு போன் செய்ததும், ஆபீசர் மற்றும் நண்பர்கள் யாவரும் நாகர்கோவில் நெருங்கி கொண்டிருப்பதாக சொன்னார்.


நான் விஜயன் ஆபீஸ் பக்கம் போயி கொஞ்சம் அளவளாவிக் கொண்டிருக்கும் போதே ஆபீசரும் நண்பன் சுதன் மற்றும் கௌதம், செட்டியார் என்னையும் விஜயனையும் அலாக்காக தூக்கி, திருவனந்தபுரம் நோக்கி விரைந்தது கார்....

பல விஷயங்கள் ஜாலியாக பேசிக்கொண்டே சென்றோம், சுதனை போன தடவை பாவநாசம் போக சந்தித்தபோது மிக மிக அமைதியாக இருந்தார், நானும் சுதன் டைப் அப்பிடிபோல என்று நினைத்தது, இப்போதான் தெரிஞ்சுது அவர் பேச்சில் சரவெடி என்று.

என்னமா பேசுறார், ஒருவேளை கல்யாணம் ஆனப்பிறகு பேசக் கத்துகிட்டாரோ ?

கார் வெகுவாக சீறிக்கொண்டிருந்தது, ஆபீசர் முன்பு வேலைப் பார்த்த குழித்துறை அலுவலகம் சென்று சாப்பிட்டு விட்டு அங்கிருந்து திருவனந்தபுரம் போகலாம் என்று ஏற்கனவே செட் பண்ணி வச்சிட்டுதான் வந்துருக்காங்க.

ஆபீஸ் இருந்த இடம் சுவர்க்கம் [[அலுவலகம்]] என்றால் அது மிகையாகாது சுற்றி இருந்த மரங்கள் மேடு பள்ளங்கள் கண்களை வெகுவாக கவர்ந்து குளிமையாக இருந்தன, ஆபீசர் அலுவலகத்துக்குள் போனதும் அங்கே எல்லாரும் பரபரப்பானார்கள்.
பிசினஸ்  மேன்கள்,பல ஆபீசர்கள் என யாவரையும் ஆபீசர் அறிமுகப்படுத்தினார், சாப்பாடுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது, சாப்பாடு சுதன் ஏற்பாடுன்னு ஆபீசர் சொன்னார், அருமையான சாப்பாடு, கொஞ்சமாக சாப்பிட்டாலும் ருசியாக இருந்தது.
[[ஆபீசர்கள், தொழிலதிபர்கள் அறிமுகம்]]

ஆபீசர் வழக்கம் போல மெதுவாக அமர்ந்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார், நாங்கள் யாவரும் சாப்பாட்டு அறையில் இருந்து வெளியே வந்த பிறகும் ஆபீசர் வெளியே வரவில்லை, தனியாக ஏதும் கவனித்தார்களான்னு ஒரு சின்ன சந்தேகம் ...ஹி ஹி.

அப்புறம் யாவரிடமும் விடை பெற்று ஆபீசரை வழக்கமாக கிண்டல் பண்ணிக்கொண்டே  வந்தோம்,இன்றைக்கு ஏதாவது ஆடு என்னை வெட்டுங்கய்யான்னு வரும்னு பார்த்தால், அடுத்த நாள் காலைவரை ஒரு ஆடும் சிக்கவில்லை.
[[சிக்கன், மீன் என்று செம கலக்கல் காக்டெயில்]]

ஆனால் கார் மட்டும் நாங்க போகவேண்டிய இடத்துக்கு சரியான நேரத்திற்கு போகாமல் எங்கேயோ சுற்றுவது போல ஒரு டவுட் வந்துட்டே இருந்துச்சு....

டிஸ்கி : உலகத்துலேயே திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் வரை எலும்பு முறிவு ஆஸ்பத்திரியின் எண்ணிக்கை அறுபத்து நான்கு, இது நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த தகவல், இப்போ எத்தனைன்னு தெரியாது....!

சொல்றேன்........

12 comments:

  1. சீக்கிரம் டவுட் கிளியர் பண்ணுங்க...!

    என்னது 64 ஆஸ்பத்திரியா...?!

    ReplyDelete
    Replies
    1. இப்போ அதை விடவும் கூடுதல் இருக்கலாம், காரணம் ரோட்டில் நடக்கும் விபத்துகள் அப்படி...!

      Delete
  2. நல்ல பகிர்வு!உங்களுக்கு (எவருக்கும்)ஒன்றும் எலும்பு/கிலும்பு முறியவில்லையே?(ட்ரீட்மெண்டு பொ........ங்க தான் குடுக்குறாங்களாம்!

    ReplyDelete
  3. எதனால தலைவரே, அங்க அவ்வளவு ஆஸ்பத்திரி,

    ReplyDelete
  4. படமெல்லாம் கொஞ்சம் மங்கலா இருக்கே... அது சரி, சென்னைக்கு ஏன் வரலைன்னு சரியான காரணம் அடுத்த பதிவில் சொல்லுங்க....

    ReplyDelete
  5. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. நானும் பாத்திருக்கேன், அது ஏன்யா அங்க மட்டும் அத்தன எலும்பு ஆஸ்பத்திரி?

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு..... திருவனந்தபுரம் செல்ல நானும் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு....
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
  9. தொடரின் சுவாரஸ்யம் இப்போது
    எங்களுக்குள்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!