Sunday, November 24, 2013

ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம் தொடர்....!

முந்தய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்....

ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம்...! முதல் பாகம்.

சுதாரித்தவன்........அப்படியே எங்கள் செக்கியூரிட்டி ஒருவனை பதம் பார்க்க, செக்கியூரிட்டிகள் அவனை நோம்பி நெம்பி எடுத்துவிட்டு நிறுத்த....அவன் என்னைப் பார்த்து துப்ப...மறுபடியும் நெம்பல் தொடர, விடுய்யான்னு சொல்லி "போலீஸ்'க்கு போன் பண்ணு" என்று நான் சொன்னதுதான் தாமதம்...
இவனும், மயங்கி கிடந்த பெண்ணும் திடீரென எழும்பி [[நடிப்பா அவ்வ்வ்வ்]]  "சாமீ போலீஸ்க்கு மட்டும் போன் பண்ணிறாதீங்க" என்று கதற....நாட்டாமை ஆபீஸ் திறக்கப்பட்டது, குடிக்க லெமன் ஜூஸ் கொடுத்து கரளை கட்டையை அவர்கள் கண்ணில் காட்டிக் காட்டி போதை தெளிய வைத்து விவரம் கேட்கும் போது, வாயடைத்து போனோம்...!

அப்பிடி ஒரு ஃபேமிலி அவர்கள் ஃ பேமிலி, போலீஸ் வந்தால் மொத்தம் டீடெயில் கொடுத்தாலே இவங்க குடும்ப மானம் சந்தியில், அப்படி ஒரு அரசாங்க உயர்பதவியில் அவன் அப்பா இருக்கிறார்.
இவர்கள் இங்கே இப்படி கூத்தடிப்பது தெரிந்தால் கண்டிப்பாக குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் என்பது நன்றாகவே புரிந்தது.

பார்க்க பரிதாபமாக இருந்ததால்...சரி நீங்க சேதப்படுத்துனதுக்கு அம்புட்டுக்கும் டபுள் ஜார்ஜ் என்று சொல்லி பணம் வாங்கிவிட்டு விரட்டி விட்டோம்.
அப்புறம் ஒரு பத்துநாள் கழித்து, நான் டியூட்டியில் இருக்கும் போது திடீரென இவன் ஹோட்டல்ல இருந்து இறங்கி வாறான், எனக்கு தலை சுத்த ஆரம்பிக்குது கிர்ர்ரர்ர்ன்னு....

"டேய்....நீ இங்கே எப்பிடி வந்தே ?" [[நடிகர் பிரபு வாய்சில் படிக்கவும்]]

"என்னை மன்னித்துவிடு, நான் கொஞ்சம் டென்ஷனில் அப்படி நடந்து கொண்டேன், இனி ஒரு பிராப்ளம் இருக்காது ஸாரி...உங்க மேனேஜர்'கிட்டேயும் மன்னிப்பு கேட்டேன்"

"ஆமா....அது எங்கே ?" [[பொண்ணு]]

"அவள் இனி இந்த பக்கமே வரமாட்டாள், கூட்டிட்டே வரமாட்டேன் போதுமா ?"

"இனி ஏதாவது பண்ணினே மவனே பிச்சிபுடுவேன் பிச்சி, அவள் இந்தப் பக்கம் இனி வரப்டாது ஆமா ?"

"கண்டிப்பாக" என்று கையை பிடித்து முத்தம் கொடுத்தான்...

மறுபடியும் ஒரு மகாபெரிய அத்துமீறலை சந்திப்பேன்னு கனவுலேயும் நினைத்து பார்க்கலை சாமீ.....
இவன்கூட இன்னும் ரெண்டுபேர் வந்து தங்கி..அவளை பலாத்காரம் செய்ய போக....

பயங்கரம் தொடரும்.....[[பயந்துறாதீக அடுத்த பதிவில் பயங்கரம் தெரிந்து, தொடரும் முடிந்துவிடும்]]

14 comments:

  1. காத்திருக்கின்றேன் ஐயா அடுத்த பதிவிற்கு

    ReplyDelete
  2. ரொம்பப் பெரிய இடத்துப் பிள்ளைங்கல்லாம் இந்த மாதிரி தான் நடந்துக்குதுங்க! ஹுஊஊஊம்! மறுபடியும் ஒரு மகாப் பெரிய அத்துமீறலா? பாவம்யா நீரு!

    ReplyDelete
  3. அடடா... பயங்கரம் தொடர்கிறதே.....

    ReplyDelete
  4. பயங்கரமாகத் தான் இருக்கு அண்ணே...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. செமயாப் போகுதே..ஏன் அடுத்த பார்ட்ல முடிக்கிறீங்கண்ணே?..தொடருங்கள்.

    ReplyDelete
  6. 1௦௦% அரபிகள் இந்த வேலை செய்ய வாய்ப்பு இருக்கு. நல்லாதான் போகுதே..பின்ன என் முடிகிறிங்க...

    கணேஷ்குமார்.ராஜாராம்

    ReplyDelete
  7. ராஜேஷ்குமார் கதை படிக்கறமாதிரி இருக்கே

    ReplyDelete
  8. பயங்கரமான அனுபவம்தான்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  9. அடுத்து வீடியோ பதிவா போடுங்க

    ReplyDelete
  10. //சேதப்படுத்துனதுக்கு அம்புட்டுக்கும் டபுள் ஜார்ஜ் என்று சொல்லி பணம் வாங்கிவிட்டு// அது சரி...இதிலே ஒரு பங்கு ஹோட்டலுக்கு...இன்னொன்னு...? (அதுதானே இதுவா?)

    ReplyDelete
  11. ஆஹா...
    அண்ணா... நாட்டாமை...
    சஸ்பென்ஸ் எல்லாம் வைத்து சூப்பர் கலக்குங்க...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!