Thursday, May 24, 2012

மகாராணியின் வீணையும், ராஜாவின் கொட்டும்...!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மனாபபுரம் அரண்மனை படங்கள் தொடர்கிறது....!!!

 மகாராஜா கைகழுவ வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் சட்டுவம் [[சிறிய வார்ப்பு]]

 ராஜா ரிலாக்ஸாக அமர்ந்து காற்று வீசியபடி பாடல் கேட்கும் இடம்...!

 மகாராஜாவின் பேனா...!!!


 மகாராஜாவும் ராணியும் பாட்டு கேட்கும் இடம்.

 மகாராணியின் வீணையும், ராஜாவின் கொட்டும்...!!!

 ராஜாக்களின் குழந்தைகளின் தொட்டில்...!!!

 ராஜாவின் செருப்பும், ஊன்று கோலும், விசிறியும்.

 வகை வகையான ஊறுகாய் ஜாடிகள்...!!!

 ராஜாக்களுக்காக உபயோகப்படுத்திய பாத்திரங்கள்...!!!

 ராணியின் கிச்சன்....!

 அறிகிலாம்ப் லைட்டும், உரிகளும்....!

 சாப்பிட்டுவிட்டு ராஜா கை அலம்பும் இடம்...!

 மகாராஜாவின் மாமனார் வீட்டில் நானும் என் வீட்டம்மாவும், விஜயன் தங்கச்சி மகன் அஸ்வினும், அஸ்வின் ஒரு பூச்சியுடன் விளையாடுகிறான் அந்த படத்தையும் காட்டுறேன் வாங்க....

 மகாராஜாவின் மாமனார்  வீடு, இதை நாங்கள் போகும் ரெண்டு நாள் முன்பாகத்தான் திறந்தார்களாம்.

 அஸ்வின் விளையாடிய பூச்சி இதுதான், இந்த பூச்சியை லேசாக தொந்தரவு செய்தாலும் உடனே சுருண்டு கொள்ளும்....!

 பூக்கள்.


 ஆஹா அழகு...!

 ராணிகளும், இளவரசிகளும், அவர்கள் சொந்தங்கள் மட்டுமே குளிக்க பயன்படுத்தும் நீச்சல் குளமும், அவர்கள் அழகை ராஜா மட்டுமே ரசிக்கும் படியான உப்பரிகையும், ஐந்து படித்துறைகள் இருக்கிறது, வீட்டுக்குள்ளே இருக்கும் படித்துறையில் ராணிகளுக்கு மட்டுமே அனுமதி...!!

 ராஜாவின் மாமனார் வீட்டுக்கு போகும் பாதை.

 டேய் மனோ நில்லுய்யா என்னை விட்டுட்டு இம்புட்டு வேகமா ஓடுறீங்களே, என் பின்னால் வருவது சீவலப்பேரி அருவாள் [[ஹி ஹி வீட்டம்மா]]

 தண்ணீர் தொட்டிகளும் பாத்திரம் கழுவும் இடமும்.

 உட்கார்ந்து பாத்திரம் கழுவும் இடம், இதை விஜயன் ராஜாக்கள் ச்சூ ச்சூ போகும் இடம்னு சொல்லி அலற வைக்க ஒரு கைடு வந்து விளக்கம் சொல்ல வேண்டியதா போச்சு ம்ஹும்.

ராஜாக்கள் பெண்களை நின்று ரசிக்கும் உப்பரிகை இதுதான், ம்ம்ம்ம்ம்ம்ம் நமக்குதான் கொடுத்து வைக்கலை ச்சே என்று புலம்பிகிட்டு போட்டோ எடுத்த விஜயன்.

டிஸ்கி : போட்டோ உபயம் விஜயன்.

தொடரும் போட்டோக்கள்........

20 comments:

  1. முத ராஜா நான்தேன்!

    ReplyDelete
  2. அந்த விசிறி, ஊறுகாய் ஜாடிகள் சீனர்களின் பாரம்பரியத்தை சொல்வதைப்போல.. இங்கே உள்ள (மலேசிய) மியுசியத்தில் இதுபோன்ற பொருட்கள் இருந்தால், அது சொல்லாமலேயே சிம்போலிக்காக சீனர்களது. அருமையான பகிர்வு. சரீஈ.. எப்படி உங்களை கேமராவோடு உள்ளே விட்டார்கள்? எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டீர்கள், நாங்கள் போய்ப் பார்க்க வேண்டுமென்கிற ஆர்வமில்லாமல் போய்விட்டது. :( நாட்டிற்கு டூடிஸ்ட் வருமானம் பாழ்..மனோவால்.. ஹிஹி.. புழு பூச்சிகளையெல்லா..ஹஹஹ..நன்றி மனோ..

    ReplyDelete
  3. ரெண்டாவது ராஜா நாந்தான்

    ReplyDelete
  4. பதிவ விட போட்டோக்கள் பிரமாதம் :-)

    ReplyDelete
  5. அடிங்கோ!பொதுவா சாக்கடை பதிவர்கள்,கசுமால பதிவர்கள்,இப்படிப்பட்ட பதிவர்களைதான் ஸ்பூப் பண்ணுவாங்கோ.இந்த கசுமாலதையும்
    ஸ்பூப் பண்ணி சாக்கடையோட மானத்த கெடுத்துப்புடீங்களே.ஹே.ஹே.ஹே,

    ReplyDelete
  6. ஆளுயர ஊறுகாய் ஜாடியை மிஸ் பண்ணி விட்டிர்களே?

    கைதிக்கு தூக்குதண்டணை விதிக்கும் உபகரணத்தைக்கூட நான் பார்த்ததாக ஞாபகம்.

    ReplyDelete
  7. ராஜாக்கள் பெண்களை நின்று ரசிக்கும் உப்பரிகை இதுதான், ம்ம்ம்ம்ம்ம்ம் நமக்குதான் கொடுத்து வைக்கலை ச்சே என்று புலம்பிகிட்டு போட்டோ எடுத்த விஜயன்.///
    அன்றைய ராஜாக்களும், இன்றய அரசியல் வியாதிகளும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரிதானே இருக்கிறார்கள்...??? ஒருவேளை இதெல்லாம் ராஜ குணமோ..... நாமும் அக்கம் பக்கம் எட்டிப்பார்த்தால் தவறில்லையோ????? உம்முடைய பதிவை படித்தால் இப்படியெல்லாம் தான் சிந்திக்க தூண்டுகிறது.

    ReplyDelete
  8. இரவு வானம் said...
    பதிவ விட போட்டோக்கள் பிரமாதம் :-)/// அதானே நம்ம இனம் இல்லையேன்னு பார்த்தேன்...பாராட்ட நல்ல மனசு வேணும்யா...சுரேஷ்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  9. அண்ணே கலக்கி புட்டிக .. செம அசத்தல்

    ReplyDelete
  10. ராஜாவின் மாமனார் வீட்டுக்கு போகும் பாதை. photo super..

    ReplyDelete
  11. போட்டோக்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மக்களே..
    நான் அடிக்கடி பார்த்து பார்த்து ரசித்த இடம்..
    அரண்மனை அடக்கமாக இருந்தாலும்
    அதன் உள்ளே இருக்கும் குளிர்ச்சியும்
    காற்று வீசும் லாவகமும்
    மனத்தைக் கொள்ளையடிக்கும்...

    ReplyDelete
  13. சூப்பர் மனோ,ஒரு சுத்து அரண்மனை யை சுத்திய களைப்பு!முக்கிய சில அம்சங்களையும்(சின்னதாக)படம் பிடித்த காமேராமேனுக்கும்,அதுக்கு சிறப்பு சேர்த்து எழுதிய மனோவையும் பாராட்டியே தீரனும்!

    ReplyDelete
  14. அரண்மனையை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் தலைவா ..!

    ReplyDelete
  15. போட்டோக்கள் அனைத்தும் அருமை !

    ReplyDelete
  16. அது சரி முன்னாளில் நான் போனப்போ போட்டோ எடுக்க கூடாதுன்னு கண்டிஷன் போட்ட மாதிரி ஞாயபகம் . இப்போ அப்படி இல்லையா? அந்த கால பொருட்களை பத்திரமா பாதுகாப்பதை பாராட்டணும்

    ReplyDelete
  17. அழகான படங்கள் நல்ல இடமும் கூட பார்க்க இருக்கு நன்றி அண்ணாச்சி அறிமுகத்திற்கு!

    ReplyDelete
  18. விஜயனின் பார்வையும்(!), உங்களின் கமெண்டுகளும் கலக்குதே.

    ReplyDelete
  19. இந்த ராஜா ரொம்ப ஏழையா இருந்திருப்பாரோ?

    ReplyDelete
  20. ம்; ராஜா வீடு பாத்தாச்சு

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!