Sunday, January 20, 2013

சுற்றுலா போகிறவர்களுக்கான ஆலோசனையில் ஒன்று...!

லேட்டாகிடுச்சே என்று இரவு டியூட்டிக்கு வேகமாக வந்த நான் ரிஷப்சனில் ஒரு குடும்பம் டியூட்டி பெண்ணுடன் கலவரமான தர்க்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தேன், என்னைப்பார்த்ததும் அந்த குடும்பத் தலைவனுக்கும் தலைவிக்கும் முகத்தில் பலமான நம்பிக்கை மின்னல் கீற்று...
என்ன சம்பவம்...?

கேரளா தம்பதி, மூன்று குழந்தைகள் ஒரு குழந்தைக்கு பனிரெண்டு வயது இன்னொரு குழந்தைக்கு பத்து வயது இன்னொன்றுக்கு எட்டு வயது, இவர்கள் ஓமனில் இருந்து சுற்றுலாவிற்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு வந்தவர்கள், ஆனால் பிள்ளைகள் இருப்பதாக குறிப்பிடவில்லை, ரெண்டு அடல்ட் என்றே குறிப்பிட்டு அதன் பணத்தை செலுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் வந்ததோ ஐந்துபேர், அவர்கள் செலுத்திய பணம் இரண்டுபேர் தங்குவதற்க்கே, எனவேதான் பிலிப்பைனி ரிசப்சனிஸ்ட் அவர்களை அனுமதி மறுத்துக் கொண்டிருந்தாள்.
என்னிடம் பஞ்சாயத்து வந்ததும் நானும் அவர்களிடம் விளக்கி சொன்னேன் ஆனாலும் அவர்கள், இல்லை நாங்கள் ஒரு ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் எங்களுக்கு நோ பிராப்ளம் என்றார்கள், "இல்லை சார், எங்கள் ஹோட்டலுக்கு என்று சில ரூல்ஸ்கள் உண்டு, நீங்கள் எத்தனைபேர் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு [[வயது உட்பட]] அதன் பணத்தை செலுத்தினால் நாங்கள் அதற்க்கான அறை'யை செலக்ட் செய்து வைப்போம்.

நீங்கள் குறிப்பிட்டது இரண்டுபேர், ஸோ அதற்கான அறை'யை மட்டுமே எங்களால் கொடுக்கமுடியும், ஆனால் நீங்கள் வந்திருப்பதோ ஐந்துபேர், எனவே இரண்டுபேர் தங்கும் அறையில் ஐந்துபேர் தங்கவைக்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை, வேண்டுமானால் இன்னொரு ரூம் உங்களுக்கு தருகிறேன் அதற்க்கான பணத்தை செலுத்துங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை, நாங்கள் ஒரே ரூமில் அட்ஜஸ் செய்து கொள்கிறோம் என்றே சாதித்தார்கள். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன் [[இருந்தாலும் மனசு கேட்கவில்லை]] 

எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி உங்களுக்கு ஒன்று செய்கிறேன் இரண்டு எக்ஸ்ட்ரா பெட் கொடுத்து ஒரே ரூமில் [!!!!] அடைக்கிறேன் ஸாரி கொடுக்குறேன் ஆகவே இரண்டுபேருக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சார்ஜ் டிஸ்கவுன்ட் போட்டுத்தருகிறேன் என்று சொன்னதும் ஓகே சொன்னார் சேட்டன்.
எழுத்தில் நடந்த சம்பவங்களை சரியாக விளக்க இயலவில்லை ஆனால் நடந்தது மோசமான அனுபவம் எனவேதான் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இதை சொல்கிறேன்...சில ஹோட்டல்களில் வேறு அறைகள் இல்லாவிட்டால் இப்படிபட்டவர்களுக்கு ரூமும் கொடுக்க இயலாது, எக்ஸ்ட்ரா குழந்தைகளை அனுமதிக்கவும் முடியாது...[[நடுரோட்டுல இன்னொரு நாட்டுல]]

மனிதாபிமான முறையில் என் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் எனக்கு நிர்வாகத்திடம் இருந்து வார்னிங் மெமோ வந்துவிட்டது, இன்னும் சிலபல கடுமைகளை சந்தித்தேன்.

சரி போகட்டும் விடுங்கள்...

இனி நண்பர்களுக்கு இதன் மூலம் சில ஆலோசனைகள் சொல்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஹோட்டலில் ரூம் புக் செய்பவர்கள், அல்லது டிராவல் ஏஜென்சியில் புக் செய்பவர்கள், அது வெளிநாடாக இருக்கட்டும் அல்லது உள்நாடாக இருக்கட்டும், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் நீங்கள் எத்தனை பேர்கள் தங்கப்போகிறீர்கள், ஆண்கள் எத்தனைபேர் பெண்கள் எத்தனைபேர், குழந்தைகள் அவர்கள்தம் வயது முதலியவற்றை தெளிவாக குறிப்பிட்டு அதற்கான ரசீதையும் மறக்காமல் [[கன்பர்மேஷன் நம்பர்]] வாங்கி கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சேட்டன் வந்ததுபோல நீங்களும் போயி எங்கேயாவது மாட்டிக்கொள்ளாதீர்கள், கம்பெனி அனுப்புவதாக இருந்தாலுமே ஜாக்கிரதையாக இருங்கள், நான் நினைத்து இருந்தால் அன்றைக்கு அந்த குடும்பத்தை தங்கவிடாமல் செய்து, நான் நல்லபெயர் எடுத்திருக்க முடியும், நாமதான் எங்கே போனாலும் கைப்புள்ள ஆச்சே ஹி ஹி....!

டிஸ்கி : நீங்கள் பார்த்த மூன்று ரிசப்ஷன் படத்தில் ஒன்று எங்கள் ஹோட்டல்...!

14 comments:

  1. செய்யுற தப்பையும் செஞ்சிட்டு எப்படி சாதிக்கிறாங்க பாருங்க.. சேட்டனோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  2. நம்ம நாட்டுக்காரங்களுக்கு நல்லபடியா உதவி செய்யத்தானே நாம இருக்கோம்.

    ReplyDelete
  3. ”நாங்க இருக்கோம்ல”- இது எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கா மனோ. :)

    ReplyDelete
  4. என்ன ஒரு மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளீர்கள், அதற்கு ஒரு மெமோவா! நல்லா வருவாங்க! ஹா ஹா ஹா

    ReplyDelete
  5. இப்படி வந்தது முழுக்க முழுக்க அவங்க தவறு. அதுவும் பெண்பிள்ளைகளை அழித்துக்கொண்டு இப்படி அசட்சியம் காட்டுவது சிக்கல்களில்தான் முடியும்.
    வேறு ஏதாவது ஹோட்டலில் இப்படி போயிருந்தால் அடுத்த அறை(இருந்தால்) ஒதுக்கு அதுக்கும் முழுப்பணமும் வாங்கியிருப்பார்கள்.

    மனோ நீர் இம்புட்டு இளகின மனசுக்காரராய்யா..... :-))

    ReplyDelete
  6. அழித்துக்கொண்டு = அழைத்துக்கொண்டு

    ReplyDelete
  7. மாம்ஸ்...அப்ப்டியே உங்க ஹோட்டல் அட்ரஸ் சொன்னா நானும் இங்கே இருந்து புக் பண்ணிட்டு வருவேன்...உங்க கூட ஒரு நாள் ஊர் சுத்துவேன்ல...

    ReplyDelete
  8. இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா இடத்திலும் மனோ வந்து ஹெல்ப் பண்ண முடியுமா?

    ReplyDelete
  9. தவறு செய்தது அவர்கள் ஆனால் தர்க்கம் பண்ணுகிறார்களே.இந்தியர்களிடம் சிலவேளைகளில்(இங்கேயும்)உள்ள குறை இதுதான் மனோ.

    ReplyDelete
  10. மற்றவர்களுக்கும் உபயோகமான தகவல் நல்ல உதவி செய்தீர்கள்.

    ReplyDelete
  11. இப்படி உதவி பண்ணி உதை படுறதே உங்க பொழப்பா போயிருச்சே! என்ன இருந்தாலும் மனிதாபிமானத்தோட நடந்துகிட்ட உங்க குணம் ரொம்ப பிடிச்சிருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சரியான அட்வைஸ்....

    உள்ளூரிலேயே இது மாதிரி நிறைய பேர் வந்து விட்டு தர்க்கம் செய்வதைப் பார்த்திருக்கிறேன் - எனது பயணங்களின் போது...

    ReplyDelete
  13. உபயோகமான தகவல். உங்க ஹோட்டல் 3-வது ரிசப்சன் படம் சரியா...... எப்பூடி........?

    ReplyDelete
  14. "நான் தமிழன்யா" என்று நிரூபித்து விட்டிர்கள்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!