Tuesday, October 29, 2013

காந்தி பிறந்த மண்ணில் இருந்து ஒரு தலைவன்....!

ஒரு நாட்டை நாறடிக்க வேண்டும் என்றால் இந்த காங்கிரஸ் கட்சி ஒன்றே போதும், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பம் நடத்தும் அழிச்சாட்டியங்களை இந்திய மக்கள் மட்டும்தான் அனுபவிக்கிறார்கள்...!

இது வேறெந்த நாட்டிலும் இல்லாத அநியாயம், ராஜீவ் பூந்தியை கொன்னது யாருன்னு கூட இன்னமும் தெரியாமல், ஒரு இனத்தையே கருவறுத்தவர்களின் உண்மை முகம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

மனதில் வஞ்சம் வைத்து, வெளியே இன்முகம் காட்டும் அன்னை, முசோலினி, நாடு பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன்களின் பரம்பரையில் வந்தவருக்கு இங்கே மிகப் பெரிய சக்தியாக உருவாக வழி அமைத்துக் கொடுத்தது யாரு ?

உலக மக்கள் தொகையே 700 கோடிதான், ஆனால் இவர்கள் களவாண்ட மக்கள் பணமோ [[ஸ்பெக்ட்ரம்]] ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் கோடி....! உலகளவில் தமிழனின் வீரம் தெரியப்பட்டதும் அல்லாமல், களவாங்குறதிலேயும் நாங்க கில்லாடிடான்னு, காட்டிட்டான் தமிழன்...!

ஆட்சியை தன் கையில வச்சிகிட்டே "எங்க பாட்டி, அப்பா மாதிரி நானும் கொல்லப்படலாம்"னு கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூவுது ஒரு ஆக்கங்கெட்ட கூவ....!

அடுத்து...

தமிழ்நாட்டுல ஒரு குடும்பம் தமிழ்நாட்டை மொத்தமா வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்று பிரிச்சு ஊரை அடிச்சி உலையில போட்டுகிட்டு இருக்கு....!

அடுத்து தலைநகரை கைப்பற்றும் கட்சி கூட கூட்டு வைக்க பலமான சிந்தனையில் இருக்கு இவங்க தலைமை, பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அதுவும் மோடி பிரதமராக வரும் பட்சத்தில் "பழம் மொழி" களி திங்க மறுபடியும் திகார் போகவேண்டி வரும்...!
அதான் என்னடா பண்ணலாம் என்கிற யோசனையில் இருக்கு தலைமை, காங்கிரஸை விட்டுட்டு போலாம்னாலும், காங் இவிங்களை விடுறதா இல்லை, ரெண்டு மூன்று தடவை முயற்சித்தும், காங்கிரஸ் பயங்கரமான மறைமுக தாக்குதல் நடத்தியதும் அடங்கி விட்டார்கள்.

ஆக புலி வால் பிடித்த கதையாக உடன்பிறப்புகள் இருக்கிறார்கள், என்ன இனி இவிங்க ஜெயிச்சு வாறது என்பது என்னைப் பொறுத்தவரையில் கானல் நீர்தான், பேசாம இருக்குற காசை எடுத்துட்டு போயி பேரிக்காவில் செட்டில் ஆகச் சொல்லுங்கள்.

காங்கிரஸ் கட்சி வேரும் வேரடி மண்ணோடும் சா[ய்க்க] யவேண்டும் என்பது என் பிரார்த்தனை, வேண்டுதல்.... இவர்களைக் கொண்டு நாட்டுக்கு ஒரு பிரயோசனம் இல்லை, மெத்த படித்த பொருளுதார மேதை அன்னையின் காலில் மண்டிபோட்டுகிட்டு கேவலமே இல்லாம இருக்காம்ன்னா மக்கள் கதி ?
மக்களே இனியாவது யோசிப்போம் செயல்படுவோம், பத்து வருஷம் பட்டது போதும், இனியாவது ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்....!

ஓ....நம்ம கவலை இனி விஜய்"யின் ஜில்லா பற்றியும், அஜித்"தின் ஆரம்பம் பற்றியும்தானே இருக்கப் போகுது ?!!!

அடபோங்கப்பா......


10 comments:

  1. இனியாவது ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்...

    ReplyDelete
  2. மக்களே இனியாவது யோசிப்போம் செயல்படுவோம், பத்து வருஷம் பட்டது போதும், இனியாவது ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்...
    >>
    இப்படித்தான் ஒவ்வொரு தேர்தல் போதும் சபதம் எடுத்துக்கிட்டு அதே களவாணிகளை கொண்டு வரோம்.

    ReplyDelete
  3. என்று தணியும் காங்கிரசின் ஆதிக்கம்
    என்று எண்ணியிருந்த வேளையிலே ..
    உதிக்கிறது ஓர் ஆதவன்
    காந்தி பிறந்த மண்ணிலிருந்து...
    சிந்தித்து செயல்படுவோம்...

    ReplyDelete
  4. மேலோட்டமாக கிண்டலாக இருந்தாலும் ஒவ்வொருவரின் இன்றய மன நிலையை எளிதாக கட்டிய "செல்லம் "மனோவுக்கு வாழ்த்துக்கள்.



    சில நேரங்களில் நம்ம ஆளுங்க கூட நல்லாவே பதிவு எழுதுறாங்க ......இல்ல?// மனோ ..நா ஒன்னிய சொல்லுவனா ?

    ReplyDelete
  5. நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்...

    ReplyDelete
  6. ஆட்சி மாற்றம் அவசியம் தேவைதான்!

    ReplyDelete
  7. ஆஹா சிங்கம் ஒன்று குரல்கொடுக்க புறப்பட்டதே !ஹீ இனி எத்தனை உள்குத்தோ! இங்கே...!ஹீ இன்னும் பலர் சிந்திக்க வேண்டும் இந்தியாவில் மனோ நடக்குமா...??..ம்ம்

    ReplyDelete
  8. அன்பின் மனோ - ஆதங்கம் புரிகிறது - இருப்பினும் என்ன செய்வது ? நடப்பது நடந்தே தீரும் - நல்லதாக நடக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. சிந்திப்பது மட்டுமல்ல அந்த சிந்தனை வாக்குகளாக உருமாற்றம் பெறவேண்டும்...அப்பொழுது..அபொழுதுமட்டுமே நமது தேசம் இந்த பாவிகளிடமிருந்து காப்பாற்றப்படும்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!