Wednesday, February 19, 2014

காவல் கைதிகளின் விடுதலை !

அம்மிணிங்க தொல்லை தாங்காம ஸ்டாப் ரூம்ல போயி கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு போயி உட்கார்ந்தேன், கொஞ்ச நேரத்தில் பரிச்சயமே இல்லாத மலையாளி சேட்டன் விரைவாக வந்தான்.

என்னைக்கண்டதும்...

"என்ன நலமா ?"ன்னு கேட்டுட்டு என்னை சட்டை செய்யாமல் பக்கத்து ரூமில் உள்ள ச்சூச்சூ இடத்துக்கு போயி மறுபடியும்...

"என்ன சேட்டா நலமா ? என்றான்.

நானும் "சுகம்" என்றேன்...

"ஊர்ல எல்லாரும் எப்பிடி இருக்காயிங்க ?"

"நல்லா இருக்காங்க"

"நாட்டுல மழை உண்டா ?"

"மழை இல்லை ஆனால் நன்றாக குளிர் இருந்தது" மலையாளத்தில் உரையாடல் நடக்குது.

"கள்ளு இப்பவெல்லாம் கடையில ஈசியா கிடைக்குதா ?"

"எங்க ஊர்ல ஈசியா கிடைக்குது ஆனால் உங்க கேரளா தலைநகர்ல கியூவுல நிப்பாட்டி வச்சிட்டாங்க"

"பரமன் பொண்டாட்டி வர்கீஸ் கூட ஓடிப் போயிட்டாளாம் தெரியுமா ?"

" ஆஆ....."

அப்புறமாதான் பின்னாடி போயி கவனித்தேன் ராஸ்கல் போன்ல இயர் போன் வச்சி அவன் நண்பனோடு பேசிட்டு இருந்ததை...

எப்பிடியெல்லாம் கிளம்புறானுக !

---------------------------------------------------------------------

இங்கே இரவு கிளப்புகள் டிஸ்கோ டிஸ்கோதே போன்ற விளையாட்டுகளை இரவு இரண்டு மணிக்கு அடைத்துவிட வேண்டும் என்பது கட்டாய ரூல்ஸ், எங்க ஹோட்டலிலும் இதெல்லாம் உண்டு அதில், இந்தியன் நடன கிளப் உண்டு, அதற்கு ஒரு பெங்களூர்"காரிதான் முதலாளி.

நாள்தோறும் நான்கு மணிவரை ஆட்டத்தை நிறுத்தாமல் கதவை உள்ளே பூட்டி வைத்துவிட்டு கூத்து நடக்கும் நானும் எம்புட்டோ வார்னிங்கும், சத்தம் போட்டாலும் கண்டுகிட மாட்டாள், நானும் பாவம் பொழச்சி போகட்டும்ன்னு கண்ணடைப்பது உண்டு.

இப்போ ஒருவாரமா எனக்கு ஈவ்னிங் ஷிப்ட் டியூட்டி ஆகிருச்சு, இப்பதான் நம்ம வேல்யூ அம்மிணிக்கு தெரிஞ்சிருக்கு, புதுசா இரவு டியூட்டிக்கு வந்த மேனேஜர், அவனின் உண்மையான வேலையை காட்டிவிட அதிர்ந்த அம்மிணி நாந்தானான்னு பார்க்க வந்தவளுக்கு கடும் அதிர்சி, ஆளு வேற பேசவும் முடியாமல்...."மனோ ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டு போனாளாம். [[உங்களுக்கெல்லாம் பட்டாதானே தெரியுது ?]]

இப்போவெல்லாம் ரெண்டு மணிக்கு செக்கியூரிட்டி ரெய்டு விட்டு அலற வச்சிகிட்டு இருக்கோம்.
-------------------------------------------------------------------------

காவல் கைதிகளின் விடுதலை, மனதுக்கு மகிழ்ச்சி, அது அரசியல் காரணகளுக்காக இருந்தாலும் அம்மா"வின் நெஞ்சுரத்தை பாராட்டத்தான் செய்ய வேண்டும் !

இனி வரும் காலங்களில் அவர்கள் சுதந்திரப் பறவையாக பறந்து சுகமாக வாழவேண்டும்.....வாழுவார்கள்...!


14 comments:

  1. வணக்கம்
    நல்ல உரையாடலுடன் இறுதில் நல்ல தகவலையும் சொல்லியுள்ளீர்கள்... நீங்கள் சொல்வது உண்மைதான்
    அவர்களின் விடுதலை ஒரு நாடு சுதந்திரம் அடைந்தது போல... அந்த அன்பு நெஞ்சங்கள் எப்போதும் எம்உறவுகள்...இனி அவர்கள் சுதந்திரமாக வாழட்டும்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //அதிர்ந்த அம்மிணி நாந்தானான்னு பார்க்க வந்தவளுக்கு கடும் அதிர்சி, // எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா! :)

    ReplyDelete
  3. //அம்மிணிங்க தொல்லை தாங்காம ஸ்டாப் ரூம்ல போயி கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு போயி உட்கார்ந்தேன்//
    நாங்க நம்பணும்! ஹா ஹா ஹா

    ReplyDelete
  4. முன்னலாம் தானா பேசிக்கிட்டு போனா ஒரு மாதிரி பார்ப்பாங்க, இப்ப நிகமாவே தனியா பேசிக்கிட்டிருந்தா காதுல இயர் போன் இருக்கான்னு பார்க்க வேண்டி இருக்கு.

    ReplyDelete
  5. பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா அப்படி என்று அசரீரி
    கேட்டிச்சா ?..:))) கூத்துக்கார அம்மாக்கள கும்புடு போட வைத்த
    சகோவுக்கு வாழ்த்துக்கள் :)) தூக்குத் தண்டனையில் இருந்து விடுபட்ட
    உறவுகள் இந்தக் கூண்டை விட்டும் வெளியில் வந்து மகிழ்ச்சியுடன்
    வாழ வாழ்த்திடுவோம் .

    ReplyDelete
  6. ஆனா அதுக்கும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஒரு செக் வச்சிருக்கே. சிபிஐ விசாரிச்சி கன்விக்ட் ஆனவங்கள விடுவிக்கிற அதிகாரம் ஸ்டேட்டுக்கு இல்லையாமே. அத்தோட தூக்குத்தண்டனைய ரத்து பண்ணது சரியில்லைன்னு மனு வேற தாக்கல் பண்ணப் போறாங்களாம். அதனால அவங்க வெளியில வர்றதுக்கு இப்போதைக்கு முடியாது போலருக்கு.

    ReplyDelete
  7. ஏம்பா அவங்க பேசறது போன்லன்னு தெரியாம அவங்க பார்வை நம்ம மேலே இருந்தா நம்மக்கூட தான் பேசுறாங்கன்னு எடுத்துக்கிறதா?? ஹே மனோ நானும் இதுப்போல பல்ப் வாங்கினது உண்டு. எங்க ஆபிசுல காதர் இப்டி தான் பேசுவான். நான் பலமுறை என்னாடா சொன்னே அப்டின்னு கேட்டா போன்லன்னு சொல்லுவான். அதனால என்னாச்சுன்னா நேரா என்னிடம் பேச வந்தாலும் ரெண்டு மூணு முறை அவன் என்னிடம் கேட்டால் தான் என்னிடம் தான் பேசறான்னு பதில் சொல்வது. ஆனா அவன் என்ன சொல்லிட்டான்னா அந்த உட்கார்ந்திருக்கே மேடம் அதுக்கு காது சரியா கேட்காது போலிருக்கு காட்டுக்கத்தலா கத்தவேண்டி இருக்குன்னு சொல்லிட்டு போறான்பா..பாத்தீங்களா நிலைமையை?

    நல்லது செய்தாலே தெரியறது இல்லை சிலப்பேருக்கு. அது உங்க முகராசிப்பா... :)

    பெங்களூர்க்காரம்மா அதுக்கப்புறம் உங்கக்கிட்ட மரியாதையா சலாம் போட்டு போறாங்க தானே?

    ReplyDelete
    Replies
    1. ஐயோ மேடம் கொலை கொலையா முந்திரிக்கா விளையாடுறாங்க....[[வந்து அழுதுட்டாங்க காசு பணம் முக்கியம் இல்லையா ? கொஞ்சம் சால்வ் பண்ணி விட்டுருக்கேன் மேடம்]]

      Delete
  8. உங்களை மட்டும் எப்படி இப்படி தேடி வர்றாங்க...?@!

    ReplyDelete
  9. அண்ணனுக்கு மட்டுமே இப்படியெல்லாம் அமையுது... ம்....

    விடுதலைப் பறவைகள் சுதந்திரமாகப் பறக்கட்டும்...

    ReplyDelete
  10. காதுல இயர் போனை மாட்டிக்கிட்டு கலங்கடிக்கிறானுங்க! என்னத்தை சொல்ல! வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  11. அன்றாட நிகழ்வாக இருப்பினும் அதனைத் தாங்கள் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
  12. அண்ணாச்சியை நல்லவன், என்று சொல்லியே கிளப் ஓனர் சேவையா ஓஹோ ஆஹா வா!ஹீ!
    சுதந்திரமாக பறக்கட்டும் உறவுகள் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  13. சில சமயம் நமக்குன்னு இப்படி மாட்டுது பாருங்க! :)

    கைதிகள் விடுதலை - இன்னும் முடிவுக்கு வரவில்லையே இந்த விஷயம் :((((

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!