Friday, December 9, 2011

முல்லைப்பெரியார் அணை உடையாமல் இருக்க நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை...!!!

நண்பன் "நல்லநேரம்"சதீஷ்'க்கு முல்லைப்பெரியார் பற்றி வந்த மெயிலை பேஸ்புக்'கில் பகிர்ந்து இருந்தார், வாசித்துவிட்டு இது தமிழர்கள் நாம் எல்லாரும் அறிந்து கொள்ளவேண்டிய காரியம் என்பதால், நான் இந்த பதிவை என் பிளாக்கில் போடட்டுமா என்று சதீஷிடம் கேட்டேன், தாராளமாக போடுங்கள் எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசையும் என்றார். நன்றி மக்கா...


டிஸ்கி : காப்பி பேஸ்ட்'ன்னு சொல்லுற பக்கி விக்கி எல்லாம் நாலடி தள்ளி நில்லு ஹி ஹி...


இன்னொரு உலகப்போர் அதான் 3வது உலகப்போர் நடக்கப்போவுதுன்னா அது தண்ணிக்காகத் தான் இருக்கும்ன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றது சரியாத்தான் ஆகிடுமோன்னு தோணுது. 



சமீப நாட்களாகக் காதுல விழக்கூடிய முல்லைப் பெரியார்ன்னு பேரக் கேட்கும்போது 2000 வருசத்துக்கு முன்னாடியே உலகத்துக்கே கல்லணை மூலமா இப்படித்தான் அணை கட்டணும்னு சொல்லித்தந்த தமிழன இந்த அணை அங்க என்ன நடக்குதுன்னு திரும்பிப் பார்க்க வச்சிருக்கு இன்னைக்கி. குழந்தைக்கு தாயோட தண்ணீர் குடத்தோட தொடங்குகிற போராட்டம் மாதிரி தமிழனோட போராட்டமும் தொடருதே ஏன்? 

இந்தியாவுல ரெண்டே ரெண்டு நதிகள் வடக்கு மேற்கா ஓடுது ஒண்ணு நர்மதை, இன்னொன்ணு பெரியாறு. 



3 மாநிலங்கள்ல நர்மதை நதி ஓடுனாலும் பெரிசா எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா பெரியாறு...? தமிழ்நாட்டுல பிறந்து கிட்டத்தட்ட 300 கிமீ கேரளாவுல ஓடி அரபிக்கடலோட ஐக்கியமாகுது பெரியாறு. 

எங்க பிறந்து? 

தமிழ்நாட்டுல..... பச்சப்பசேல்ன்னு கொட்டிக்கெடக்குற அழகு, அதனால அழகான மலைங்கிற அர்த்ததோட அழைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில உள்ள சுந்தரகிரி. அங்க சிவகி சிகரம். இங்க ஆரம்பிக்குது பிரச்சன. இல்ல இல்ல பெரியாறு. சிவகிரில ஆரம்பிச்சி ஒரு 48 கிமீ நகர்ந்து முல்லைங்கிற ஆறோட சங்கமிக்குது பெரியாறு. இந்த ரெண்டும் சங்கமிக்கிற இடத்துல தான் இருக்குது 


முல்லை பெரியாறு அணை. அந்த நாட்கள் சென்னையில இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் சந்திச்ச ஒரு சவாலான விசயம் வறட்சி. பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள்ல இருந்த கடுமையான வறட்சி, பஞ்சம், பசி, பட்டினி. வைரமுத்துவோட வார்த்தைகள்ல சொல்லணும்னா புலிக்கொடி பொறித்த சோழமக்கள் எலிக்கறி பொறிக்கதுவோ போலத்தான் அந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை, 

அதிலயும் விவசாயிகள் 97 - 98 ம் வருசத்துல மகாராஷ்டிரா, ஆந்திர மாநில பருத்தி விவசாயிகள் கொத்துக் கொத்தா தற்கொலை செஞ்சிக்கிட்டது மாதிரி தான். ஒரு பக்கம் 44 நதிகள் யாருக்கும் பயன்படாம ஓடி கடல்ல கலக்குற தண்ணி. இன்னொரு பக்கமோ கடுமையான வறட்சி. யோசிச்ச பிரிட்டிஷ் சர்க்கார் அப்போ கேரளாவை ஆண்ட திருவிதாங்கூர் மன்னன் கிட்ட முல்லையும் பெரியாரும் சங்கமிக்கிற இடத்துல அணை கட்டி தண்ணிய தேக்கி வச்சி இங்க வறட்சியான மக்களுக்கு திருப்பி விடலாம்ன்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 25 வருசம் பலமான யோசனைக்க அப்புறம் அவரும் ஒத்துக்கிடுறாரு. 


இப்போ கேரளாவுல இருக்குற அரசியல்வாதிகள் மாதிரின்னா அப்போ ஒரு செங்கலக்கூட பெரியார் அணைக்கி எடுத்து வைக்க முடியாது. அணை கட்ட சம்மதிச்ச திருவிதாங்கூர் மன்னர் அணை கட்டுறதுனால மூழ்கிப்போற 8000 ஏக்கர் நிலத்துக்கு ஒரு ஏக்கருக்கு 5 ரூபாய் வீதம் குத்தகைத் தொகையா கேட்டு 999 வருசம் ஒப்பந்தத்துக்கு குடுக்குறாரு 

அந்த இடத்த. இன்னைக்கும் தைப்பொங்கல் முடிஞ்ச மறுநாள் ஜனவரி 15ம் தேதி நீங்க மதுரையில இருந்து குமுளி வரைக்கும் போனிங்கன்னா நிச்சயமா நீங்க பார்க்காம இருக்க முடியாது


கலர் கலரான 170வது பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ற வால்போஸ்டர்கள. இத்தனைக்கும் அந்த மனுசன் சூப்பர் ஸ்டார்ல ஆரம்பிச்சி இன்னக்கி இருக்குற பவர் ஸ்டாரோ இல்ல. ஆனா அந்த மனுசனோட பிறந்த நாளா அவ்வளவு விமர்சையா தேனி, மதுரை மாவட்ட மக்கள் கொண்டாடுறாங்கன்னா காரணம் இருக்கு. 

அவரு தான் முல்லை பெரியாரு அணைய கட்டுன பென்னி குக். 

நான் இந்தப் புவிக்கு வந்து செல்வது ஒரு முறை தான் ஆகையால் நான் ஒரு நற்செயல் புரிய வேண்டும் அதை தள்ளி வைப்பதற்கோ,தவிர்ப்பதற்கோ வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் மீண்டும் பிறக்கப்போவதில்லை. இன்னைக்கும் அணைக்குப் பக்கத்துல இருக்குற அவரோட சிலையின் கீழிருக்கிற வாசகங்கள். 


அணையோட ஆழத்தப் பத்தி யோசிக்கிற கேரள அரசு ஒரு வெள்ளக்காரனோட வார்த்தையில இருந்த ஆழத்த பாத்துருக்காதுன்னு தோணுது. இதுல இன்னொரு விசயம் முல்லை பெரியாறு அணை கட்டுறப்ப வந்த எதிர்பாராத வெள்ளம் அணைய ஒடைக்குது. அரசாங்கமும் மறுபடியும் அணை கட்ட நிதி தர மாட்டிக்கி. இங்கிலாந்து போய் தன்னோட சொத்துக்கள வித்து சொந்த பணத்துல அணைய கட்டுறாரு பென்னி குக். 


1886ல ஒப்பந்தம் 1895ல அணை கட்டி முடிக்கப்படுது. 152 அடி உயரம்,15,5 டிஎம்சி கொள்ளளவோட. இதுல ஒரு முக்கியமான விசயம் கேரளாவோட ஒப்பந்தச் சரத்தால வந்த ஒண்ணு. அதாவது மத்த அணைகள்ல இருக்குற மாதிரி மதகுகள திறந்து தண்ணீர திறந்து விடுற அம்சம் இதுல இல்ல.


104 அடி தண்ணீர் தேங்குன பிறகு வர்ற தண்ணி தான் அணையோட வடக்குப் பக்கமா தோண்டப்பட்ட குகைகள் மூலமா நமக்குக் கெடைக்குது. இப்படி அணை கட்டுன பிறகு 1895 ல இருந்து 60 வருசங்கள் எந்தப்பிரச்சனையும் இல்ல. 1947 சுதந்திரம் இங்க தமிழக அரசு, அங்க கேரள அரசும் வருது. பிரச்சனையும் வருது. பெரியாறு தண்ணி தமிழ்நாட்டுல நுழையிற இடத்தில ஒரு மின் உற்பத்தி நிலையத்த கட்ட ஆசப்படுது தமிழக அரசு. பாசனத்துக்கான தண்ணி மின்சாரமா மாறி பணமா மாறுற இடத்துல பிரச்சனையும் ஆரம்பிக்குது. சரின்னு ஒத்துக்கிட்ட கேரள அரசு அதுவரைக்கும் அஞ்சு ருப்பாய் குத்தகைக்குனு இருந்த எட்டாயிரம் ஏக்கருக்கு முப்பது ரூபாயா ஏத்துது.ரெண்டு லட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் இன்னைக்கும் கொடுக்கப்படுது.


ஆனா அந்த எட்டாயிரம்ஏக்கர் நிலம் பயன்பாட்டில இல்ல ஏன்னாஅணையோட உயரம் 152 அடில இருந்து 136 அடியாகுறைஞ்சு போச்சு . இப்பம் 4677 ஏக்கர் தான்பயன்படுத்துறோம். ஆனாலும் எட்டாயிரம் ஏக்கருக்கும் குத்தகை கொடுக்குறோம். 


ஏன் உயரம் குறைக்கபடுராதுன்னு பார்த்தா 1979 இல இடுக்கிமாவட்டத்தில புதுசா ஒரு அணை கட்ட ஆசைப்படுதுகேரளா முல்லை பெரியாறு தண்ணி தான் அங்கேயும்போகணும்.இதுவும் அணையோட உயர்த்த குறைக்க ஒரு காரணம் இடுக்கி மாவட்டத்தில அணை கட்டும்போது வந்த மிதமான நிலநடுக்கத்த மலையாளத்தின்பிரபலமான பத்திரிகை (மனோரமா) பூதாகரமாக்கி செய்தி வெளியிடுது.


ஏற்கனவே சரியான சந்தர்பத்திற்கு காத்திருந்த கேரளா அரசு அத பயன்படுத்திகிடுது.அணை பாதுகாப்பில்லாம இருக்குபழையது . மத்திய நீர்வள குழுமத்துகிட்ட அணையோட உயரத்தை152 அடில இருந்து 136 அடியா குறைக்கணும் 

அது தான்நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.மத்திய நீர்வளகுழுமம் ஒத்துக்குடுது. வேணும்னா தமிழகஅரசுஅணைய பலப்படுத்தி உயரத்தை அதிகரிக்கலாம்னுசொல்லுது . அணையும் பலப்படுத்தபடுது ஆனாலும்கேரளா அரசு ஒத்துழைப்பு கொடுக்கல.தமிழகம் நீதிகேக்குது உச்சநீதி மன்றமும் உத்தரவிடுது. செவுடன்காதுல ஊதின சங்கா எந்த பிரயோஜனமும் இல்ல ஏற்கனவே 104 அடிக்கு மேல உள்ள தனி தான்தமிழ்நாட்டிற்கு வருது .அதுலயும் 152 லிருந்து 136அடியாக நீர் தேக்கிவைக்கிற அளவு குறைக்கபட்டிருக்கு.


இதனால கிட்டத்தட்ட 1 ,25000 ஏக்கர் நிலத்ஹ்டிற்கு கிடைக்க வேண்டிய முல்லை பெரியாறு தண்ணிகிடைக்காம போயிருக்கு, 140 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட பெரியாறு மின்சார உற்பத்திநிலையத்துல 40 % உற்பத்தி குறைஞ்சிருக்கு.இதெல்லாம் நமக்கு நட்டம் தான் ஆனா அணையோட உயரம் அதிகரிக்கபடாததால வெளியிலபோற தண்ணி இடுக்கி அணைக்கு போய் அங்கதயாரிக்கபடுற மின்சாரம் நமக்கே விலைக்குவிற்க்கப்படுது.

இந்த லாப கண்ணோட்டமும் இந்த சிலஅரசியல் காய்நகர்த்தல்களும்தான் இந்தபிரச்சனையின் ஆணிவேர். இது ஒருபக்கம் இருந்தாலும் ஒட்டு அரசியலுக்காகவும்,மக்களை திசை திருப்பவும் அணையுடையும் அபாயம் இருக்கு . 


மூணு மாவட்டங்கள் முழ்கி போகும். லட்சகணக்கான மனுஷங்கள் பலியாவங்கனுவதந்திகள் வேற,ஆயிரகணக்கான வருடங்கள்பழமையான அணைகளே நல்ல பலமா இருக்கும் போதுநூறு வருஷங்கள் மட்டுமே கடந்துருகிற இந்த முல்லைபெரியாறு உடைந்து போகுமா அதனால இந்தபாதிப்புகள் வருமா?சின்னதா ஒரு விளக்கம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க பெரியாறு அணை தொடங்கிவரிசையா 13 அணைகள் இருக்கு. பெரியாறு அணை நிரம்பின பிறகுதான் இந்தஅனைகளுக்கெல்லாம் தண்ணி வந்து 13உம் நிரம்பிஅப்புறம் தான் கடலுக்கு தண்ணி போகுது 



ஒரு வேலைபேச்சுக்கு அணை உடையுதுன்னு வச்சுகிட்டாலும் கூட13 அணைகள் தாண்டி தான் வெள்ளம் ஊருக்குள வரும். இன்னொன்னு சமவெளி நிலங்கள வெறும் 23கிலோமீட்டர் மட்டும் தான் பெரியாறு ஓடுது. மத்தபடி250 கிலோமீட்டர் அடர்ந்த காடு. மலை இதுதான்அதோட பாதை 

இந்த பாதையில் பெரிசா குடியிருப்புகள்எதவும் இல்ல அடங்காத முரட்டு குதிரை போலவெள்ளம் வந்தாலும் அதோட வேகம் அடர்ந்தகாட்டையும் மலைகளையும் தாண்டி சமவெளிக்கு வரும் போது சாதுவா மாறிடும், இதுதான் எதார்த்தம் ஆனா இப்ப அணையின் உயரத்தை அதிகரிக்க விடாதவர்கள் புதுசா அணை கட்டுவாங்கலாம் . 


ஒரு சொட்டு தண்ணி கூட குறையாம தருவாங்கலாம் .

கேக்கிறதுக்கு எப்புடி தெரியுமா இருக்கு!

"கூரையேறிகோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கிழிச்சுவைகுண்டத்தை காட்டுறேன்னு சொன்னனாம்"அப்புடிங்கிற அப்பத்தாவோட பழமொழி தான் நினைவுக்கு வருது..


நாஞ்சில்மனோ'வின் ஆலோசனை : எலேய் மெத்த படிச்ச மலையாளி பக்கிரிகளா இப்பிடி வேணும்னா நான் கட்டி தரட்டுமா, நான் படிச்ச படிப்புக்கு இப்பிடி மேலே இருக்கும் படம் மாதிரி பாதுகாப்பு குடுக்கலாம்னு தோணுது எப்பூடீ வசதி சொல்லு...???!!!


டிஸ்கி : கேரளா எழுத்தாளர் பால் சக்கரியா'வின் மலையாள பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்தேன் ஒரு ஆறேழு வருஷம் முன்பு [[நமக்கு மலையாளமும் வாசிக்க தெரியுமுங்கோ]] 


கேரளாவுக்கு, கறிவேப்பிலையில் இருந்து குருவாயூரப்பா கோவிலுக்கு சாற்றும் பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது, அப்புறமும் ஏன் முல்லைப்பெரியார் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது எனக்கு புரியவே இல்லை"ன்னு சொல்லி இருக்கார்...!!!


டிஸ்கி : நம்ம எழுத்தாளர் ஞானி'யும் முல்லைப்பெரியார் பற்றி விளாசி இருக்கிறார் படிச்சு பாருங்க...




http://malaikakitham.blogspot.com/2011/12/blog-post_09.html?spref=fb

டிஸ்கி : தமிழனுக்கு சூடு பட்ட பிறகுதான் அது தீ என்று உணருகிறான், சூடு படுவதற்கு முன்பே அது தீ என்று உணர்வதே இல்லை....!!! இப்போதாவது விழித்துக்கொள் இல்லையென்றால் தண்ணீர் பஞ்சத்தில், எலிக்கறியையும், நத்தை கறியையும் திங்க இப்போதே பயிற்சி எடுத்துக்கொள்...!!!

நண்பர்களே முடிந்தவரை இந்த பதிவை எல்லாரும் எல்லா தளத்திலும் ஷேர் பண்ணுங்கள் நன்றி....

34 comments:

  1. சரியா சொன்னீங்க .
    பயனுள்ள தகவல் .
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கேரளாவுக்கு, கறிவேப்பிலையில் இருந்து குருவாயூரப்பா கோவிலுக்கு சாற்றும் பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது, அப்புறமும் ஏன் முல்லைப்பெரியார் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது எனக்கு புரியவே இல்லை"ன்னு சொல்லி இருக்கார்...!!!

    //

    அவருக்கு புரியுது புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே?

    ReplyDelete
  3. இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்துல எனக்கு இருந்த சந்தேகங்கள் கொஞ்சம் குறைஞ்சிருக்கு, பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. இதுக்கு ஒரே வழி பாரளும்மன்றத்துல உட்காந்துகிட்டு இருக்குற எம்.பிக்களை கல்லைக்கட்டி தண்ணில எறக்கி விடுங்க எல்லா பிரச்சனைக்கும் வழி பிறக்கும்

    ReplyDelete
  5. முல்லை பெரியாறு அணை பற்றி அனைத்து தகவல்களுக்கும் மிக்க நன்றி,மனோ.

    ReplyDelete
  6. உணர்ச்சி வசப்படாமல் கேரளா மக்கள் யோசித்தால் அவர்களுக்கும் புரியும்... ஆனால் தமிழகமும் புரிய வைக்க முயற்ச்சிக்கவில்லை... கேரளா அரசும் ஆதாயம் தேட பார்க்கிறது...

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள தகவல், பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  8. மிகவும் நல்ல பதிவு அண்ணாச்சி
    பல விசியங்கள்
    அறிந்து கொண்டேன்
    nandri.

    ReplyDelete
  9. போஸ்ட் நல்லாருக்கு, ஆனா விக்கியை இப்படி தாக்கிட்டியே ,அவன் மட்டை ஆகிட்டானே

    ReplyDelete
  10. இரு மாநில அரசுகளும் மனோவின் அறிவுரைகளை கேட்குமாறு உத்திரவிடுகிறேன்..

    ReplyDelete
  11. நிச்சயமாக அடுத்த போர் நீராலதான்... அண்ணாச்சி..

    ReplyDelete
  12. அண்ணே வணக்கம் .. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. அசத்திட்டே மக்கா

    ReplyDelete
  14. கலக்கல் பதிவு அண்ணே

    ReplyDelete
  15. மனோ சேட்டன் விழிச்சுது மனசிலாயி...விக்கி குட்டன் மட்டையாயோ இனி கமண்ட் ஒன்னும் இடுலியே......வெள்ள அடிச்சது பயங்கர நாத்தமோ நாலடி தள்ளி நில்க்கு பறைஞ்சு...ஹஹஹஹஹ

    ReplyDelete
  16. அசத்தல் பதிவு
    பிரச்சனை முழுவதையும் அறியாதவர்கள்
    மிக்ச் சரியாகஅறிந்துகொள்ளும்படியாக
    படங்களுடன் மிகச் சிறப்பான
    பதிவைத் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. தகவலுக்கு நன்றி....என்னய கலாய்ச்சிட்டாராமாம் ஹிஹி!

    ReplyDelete
  18. சொல்லணும் ன்னு நெனச்சத டிஸ்கி ல நீங்களே சொல்ல்லிடீங்க அண்ணே...

    ReplyDelete
  19. சிங்கமே, கோவத்துல அங்க இருக்குற சேட்டன் யாராச்சையும் அப்பிட போறீங்க!

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றிங்க!!

    ReplyDelete
  21. நல்ல விடயத்தை பகிர்ந்து இருக்கீங்க.... நானும் சேர் பண்ணிக்கிறேன்.... :)

    ReplyDelete
  22. இன்னொன்னு சமவெளி நிலங்கள வெறும் 23கிலோமீட்டர் மட்டும் தான் பெரியாறு ஓடுது. மத்தபடி250 கிலோமீட்டர் அடர்ந்த காடு. மலை இதுதான்அதோட பாதை
    இந்த பாதையில் பெரிசா குடியிருப்புகள்எதவும் இல்ல அடங்காத முரட்டு குதிரை போலவெள்ளம் வந்தாலும் அதோட வேகம் அடர்ந்தகாட்டையும் மலைகளையும் தாண்டி சமவெளிக்கு வரும் போது சாதுவா மாறிடும்,<<<

    பாஸ் அப்படி சொல்லுங்க... நீங்கள் சொல்வதுதான் மிக சரி.... கடவுளே இந்த ஒரு விடயத்திலாவது நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் கடைசி வரை ஒற்றுமையா இருக்கணும்.... இப்பவே உந்த கருணாநிதி அம்மா சாடல் அறிக்கை விட தொடங்கிட்டார்..... அவ்வவ்...

    ReplyDelete
  23. இதுல இம்புட்டு விசஹ்யம் இருக்கா? இத்தனை நாள் தெரியாம இருந்தேன். இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி அண்ணே

    ReplyDelete
  24. வணக்கம் மனோ..!
    இந்த பதிவு எல்லோரையும் போய் சேர ஆசைப்பட்ட உங்களுக்கும் சதீஷ்க்கும் முதல் நன்றி..

    இந்த விடயத்திலாவது தமிழன் ஒற்றுமையா இருந்து நமது  உரிமைகளை விடாது பாதுகாக்கனும்.. செய்வார்களா?

    ReplyDelete
  25. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
    இதில் உள்ள அதி நுட்பமான அரசியல்தான் இப்பொழுது அணை போட்டுக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  26. எல்லோரும் படிக்கவேண்டிய அவசியமான பதிவு. பிரச்சினையை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். இப்போ பல விடயங்கள் புரிந்தது

    ReplyDelete
  27. ஜூனியர் விகடனில் தமிழக எல்லையில் இருந்து கேரளம் சென்று வேலை பார்க்கும் பெண்களை அவர்கள் அசிங்கப்படுத்திய செய்தி கண்டு வேதனைப்பட்டேன். நிலைமை முற்றி விட்டது. முல்லைப்பெரியார் பிரச்னை தீர்ந்தாலும் இந்த கோர வடுக்கள் மறைவது கடினம். முடிந்தால் லேட்டஸ்ட் ஜூனியர் விகடன் படித்து பாருங்கள்.

    ReplyDelete
  28. 13 அணைகள், சிறு சமவெளிபரப்பு, காடுகளை தாண்டும் போது வீரியம் குறையும் என்பது இன்று தான் தெரிந்துக்கொண்டேன். நல்லதொரு கட்டுரை. நியாயம் வெல்லட்டும்

    ReplyDelete
  29. நல்ல பதிவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி
    மனோசார் ரெளத்திரம் பழகு என்ற பதிவில் சேட்டனை வெளுத்துவாங்கிய நீங்கள் ஒரு நடை கேரளாவிற்கு போய் சேட்டனிடம் காட்டிய அன்பைஅங்குள்ளவர்களுக்கும் காண்பித்து வருமாறு கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  30. ஸலாம் சகோ.மனோ,
    நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சகோ.

    ReplyDelete
  31. மனோ!நலமா?

    முல்லைப்பெரியாறு கூகிள் தேடலில் பிடித்தேன்.முதல் பெயரே உங்களுடையதுதான்.

    மிகவும் எளிதாக தமிழகத்தில் பட்டி தொட்டியில் இருப்பவர்களுக்கும் புரிகிறமாதிரி இருக்கிறது எழுத்து.இந்த நயத்தை ஆங்கிலத்திலோ அல்லது கேரளாக்காரர்களிடம் வாதாடுவதிலோ கொண்டு வர தவறவிடுவது நம்மிடமுள்ள குறை என்று நினைக்கின்றேன்.எல்லோருமா சாய்ந்தால் சாய்கிற மாதிரி யோசிப்பார்கள்?மாற்றுக் கருத்துக்கள் அவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.பதிலாக கேரள ஊடக புத்தி திசை திருப்புதல் மட்டுமே மிகுந்து கிடைப்பதால் அவர்களை இரு பிரிவாக நம்மால் பிரிக்க இயலவில்லை.மாறாக நம்ம தமிழக கட்சிகளோ சொல்லவே வேண்டாம்.

    தென்னிந்தியாவில் ஏனைய மாநிலங்களை விட கலாச்சார,மொழி ரீதியாக தமிழகமும்,கேரளமும் ஒன்றாக இணைந்தவை.தற்போதைய லட்சக்கணக்கில் பணம் தருகிறோம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.நமக்கு நீர்வளம் தேவையென்பதால் மீட்டரை ஏற்றி புதிய ஒப்பந்தந்திற்கோ அல்லது நெய்வேலி மாதிரி சுய அதிகாரம் கொண்ட நிறுவனமாக முல்லைப்பெரியாரை உருவாக்குவது மாத்திரமே சூட்டைத் தணிக்க வழி வகுக்கும்.கூடவே உச்சநீதிமன்றம் என்ன சொல்ல்ப்போகிறதென்பதையும் பார்த்து விடுவோம்.நன்றி

    ReplyDelete
  32. அருமையான தகவல்கள்! பென்னி குக் பற்றி முன்னரே படித்திருக்கிறேன். அநேகமாக விகடனில்தானென்று நினைக்கிறேன்! நன்றி பகிர்தலுக்கு!

    ReplyDelete
  33. இவ்வளவு எளிமையாக, படங்களுடன் முல்லைபெரியாறு பற்றிய பதிவினை முதன்முறையாக நான் காண்கின்றேன். திரு. ராஜ. நடராஜன் கூறுவது போல இது போல் ஆங்கிலத்தில் இதுபோன்ற தகவல் கொண்ட கட்டுரை இருப்பின் தெரிவிக்கவும். என் கேரள நண்பர்களுக்கு அனுப்பிவைப்பேன். தங்களின் பதிவு காலத்தின் தேவை! கலக்கிட்டீங்க...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!