Friday, October 8, 2010

பாதுகாப்பு கிலோ என்ன விலை?

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படு கொலை, திமுக பிரமுகர் படுகொலை, முன்னாள் முதல்வருக்கு பத்து முறை கொலை மிரட்டல், முன்பு முன்னாள் சட்ட அமைச்சராக இருந்த ஆலடி அருணா படு கொலை, கொம்பன்ஏந்தல்லை சேர்ந்த சக்தி வாய்ந்த திமுக பிரமுகர் படுகொலை, இரண்டு அமைச்சர்கள் முன்பு துள்ள துடிக்க செத்துப்போன இன்ஸ்பெக்டர், கொலை கொலை கொலை கொலை.......[கண்ணை கட்டுதே...]
            எங்கே போகிறது இந்த பாதை........?
அமைச்சர்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது, சாமானியநியனின் பாதுகாப்பு....?
அரசின் இந்த அளட்சியம்தானே ஒரு மும்பை அட்டாக்கிற்கு காரணமாக இருந்தது.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்??? விழாக்களில் முத்து குளித்து கொண்டிருக்கிறார்!!!!
        இங்கே பாமரன் நடுங்கி கொண்டு வாழ வேண்டிய நிலை. இனி அமைச்சர் பெருமக்களும் தொடை நடுங்கி கொண்டுதான் வாழ வேண்டும்!!!
       இதனிடையே திருச்சி வரும் இத்தாலி அம்மையாரின் பாதுகாப்புக்கு குண்டு துளைக்காத காராம்!!!
         கொலை செய்யப் பட்ட முன்னாள் அமைச்சரின் ஊரை சுற்றி உள்ள ஐம்பது கிராமங்களில் கலவர சூழ்நிலை பதற்றம் நிலவுகிறது, ஆயுதபடைகள் குவிப்பு இந்த நியூசை பிரதானமாக வெளியிட்டு இருப்பது நம்ம நக்கீரன்[[திமுக ஆதரவு]]தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்!!!!



பாதுகாப்புன்னா கிலோ என்ன விலை????????

2 comments:

  1. நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.காவல் துறைக்கு அரசியல்வாதிகளை பாதுகாக்கவும்,எதிர்க்கட்சிகளை நோட்டம் போடுவதற்க்கும்,பலி வாங்கவுமே நேரம் சரியாய் இருக்கும்.எல்லா கட்சி அரசுகளும் இதற்க்கு விதிவிலக்கல்ல.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீங்க புலி குட்டி...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!