Wednesday, December 8, 2010

களவும் கற்று, தொடர்

கேரளாவில் நடந்த உண்மை சம்பவம். நண்பன் சொன்னது, அவன் வீட்டருகில் உள்ள வீட்டில், கணவனுக்கு கல்ஃபில் வேலை என்பதால் அந்த பெண்ணும் இரண்டு ஆண் [[சிறிய]] குழந்தைகளும் வசித்து வரும் வேளையில் ஒரு நாள் மத்தியான வேளையில், இடுப்பில் மூன்று வயது குழந்தைய சுமந்த படி கூட ஒரு பன்னிரண்டு வயது குழந்தையுமா வந்த தமிழ் பெண் ஒருத்தி குடிக்க தண்ணீர் கேட்டுருக்கிறாள், அந்த வீட்டம்மா மிகவும் இரக்கம் குணம் உள்ள பெண்ணாம், தண்ணீர் எடுக்க உள்ளே போனவள் இரக்கப் பட்டு தண்ணீருக்கு பதில் சர்பத் உண்ட்டாக்கி மூணு கிளாசில் ஊற்றி கொண்டு வெளியே வர, அங்கே பன்னிரண்டு வயது பிள்ளைய காணவில்லை! எங்கே அவள் என வீட்டம்மா கேட்க, அவள் போய் விட்டாள் என்று சொல்லி, சர்பத்தை மூன்று வயது குழந்தைக்கு ஊட்டி விட்டு மீதி இரண்டு கிளாஸ் சர்பத்தையும் அவளே குடித்து விட்டு நன்றி சொல்லி போய் விட்டாள்.
                      இரவு அந்த வீட்டம்மா குழந்தைகளின் டியூஷன் ஹோம் ஒர்க் சாப்பாடெல்லாம் கொடுத்து தூங்க வைத்து விட்டு தூங்கி விட்டாள். அந்த வீட்டில் இரண்டு பெட் ரூம் உண்டு, ஒரு பெட் ரூமில் பிள்ளைகளும் அவளும் உறங்குவது வழக்கம் இன்னொன்று கணவன் வரும் போது உபயோகிக்க, அது சும்மாவே கிடக்கும்,
              அந்த வீட்டம்மா நன்றாக உறங்கும் வேளையில், ஒரு அனர்த்தம் போல உணர்ந்திருக்கிறார், காதை கூர்மையாக்கி கேட்க  ஏதோ யாரோ பேசும் பேச்சு லேசாக கேட்டிருக்கிறது, மெதுவாக எழுந்த இவள் பேனை அனைத்து இருக்கிறாள்,
பேனை அனைத்ததும் பேச்சு சத்தம் பக்கத்து பெட் ரூமில் இருந்துதான் வருகிறது என்பதை தெரிந்து கொண்ட பெண்மணி, மெதுவாக[[தைரியமா]] அங்கே போயி லைட்டை போட்டு விட்டு ரூமை நோட்டம் விட, பெட்டுக்கு கீழே ஒரு கால் மட்டும் தெரிந்திருக்கிறது சத்தம் போடாமல்  லைட்டை மறு படியும் அனைத்து விட்டு வெளியேறி, கதவை வெளியே பூட்டி விட்டு,  அக்கம் பக்கம் உறவினர்களுக்கு போன் செய்ய,
                   போலீஸ் வரவழைக்கப் பட்டது. போலீஸ் கதவை திறந்து சோதனை செய்யும் போது உள்ளே கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தது அந்த பன்னிரண்டு வயது சிறுமி!!!
                போலீஸ் அந்த சிறுமியை வைத்தே அந்த கும்பலை மடக்க, அவர்கள் நம்ம சினிமா வில்லனை போல தண்டி தடியாக இருந்ததும் அல்லாமல், காரில் ஆயிதங்களும் எல்லாரையும் பிடிச்சி உள்ளே தள்ளி விட்டது போலீஸ். பிடிபட்ட கொள்ளை கும்பல் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. கேரளாவில் நிறைய இடங்களில் இப்பிடி கை வரிசையை காட்டியிருக்கிறார்களாம்...

13 comments:

  1. வடை எனக்கே..!!! ஹி..ஹி..

    ReplyDelete
  2. // காரில் ஆயிதங்களும் எல்லாரையும் பிடிச்சி உள்ளே தள்ளி விட்டது போலீஸ். பிடிபட்ட கொள்ளை கும்பல் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. கேரளாவில் நிறைய இடங்களில் இப்பிடி கை வரிசையை காட்டியிருக்கிறார்களாம்...//

    அட கொடுமையே ..!! இப்படியெல்லாம் பண்ணுறாங்களா ..?

    எனக்கு வடையும் போச்சு ..

    ReplyDelete
  3. இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    இவர்களையெல்லாம் என்ன செய்வது?

    அருமையான பதிவு
    தொடருங்கள்........

    ReplyDelete
  4. //வடை எனக்கே..!!! ஹி..ஹி..//


    தந்துட்டா போச்சு...
    ஏம்பா வடையேதான் வேணுமா, இந்த போண்டா பஜ்ஜி எல்லாம் வேண்டாமா?

    ReplyDelete
  5. //எனக்கு வடையும் போச்சு//
    அட பாவமே...:]]

    ReplyDelete
  6. //அருமையான பதிவு
    தொடருங்கள்........ //

    மிகவும் நன்றி நண்பா...

    ReplyDelete
  7. எப்படியெல்லாம் யோசிக்கிரனுங்க...

    நல்ல பகிர்வு சார்..

    ReplyDelete
  8. //அருமையான பதிவு
    தொடருங்கள்........//

    நன்றி மாணவன்..

    ReplyDelete
  9. //எப்படியெல்லாம் யோசிக்கிரனுங்க...

    நல்ல பகிர்வு சார்//
    யோசிக்குரதுல'தான் நம்மாளுங்க கில்லி'யாச்சே...:]]

    ReplyDelete
  10. உள்ளேன் அண்ணா

    ReplyDelete
  11. //உள்ளேன் அண்ணா //
    எங்கே எங்கே....:]]

    ReplyDelete
  12. தமிழர்களுக்கு கெட்டகாலம் போல இருக்கிறது.

    ReplyDelete
  13. //தமிழர்களுக்கு கெட்டகாலம் போல இருக்கிறது//

    ஹா ஹா ஹா ஹா.............

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!