Monday, December 6, 2010

அரசியல்

 வைகோ, பழ நெடுமாறன், கி வீரமணி, நம்ம சீமான், தா பாண்டியன், ராம[[கோப]]தாஸ் எல்லாரும் "பயங்கரமா" போராட்டம் பண்றாங்க, என்ன பிரயோஜனம்?
ஒரு மண்ணும் நடக்கப் போவதில்லை, அரசு இவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை மரியாதை கொடுப்பதும் இல்லை, விஜய் காந்த் கொஞ்சம் சவுண்ட் விட்டா அரசு சற்று திரும்பியாவது பார்க்கும்னு பாத்தா ஐயா [[பண்ருட்டி ராமசந்திரன் அட்வைஸ்]] பிளாட் ஆயி கிடக்கார்!! [[நம்ம ராஜீவ் காந்தி இலங்கையில் அடி வாங்கிய போது இவரும் உண்டு என்பது தனி கதை, யாரு? பண்ருட்டியேதான்]]
                           கிரிகெட்டில் நடக்கும் முறைகேடுகள், அநியாயங்கள பார்த்தா பேசாம பிஜேபி சொல்ற மாதிரி அரசே எடுத்து நடத்தலாம் [[காசப்பு காசு]] நாங்கல்லாம் ஒரு லட்ச ரூபா வட்டிக்கு வாங்கிட்டு நாலு வருஷமா அசலை கொடுக்க முடியாமல் வட்டி கொடுத்திட்டு இருக்கோம், அதுவும் கல்ப்ல [[பஹ்ரைன்]] வேற இருக்கோம்!!
                                     சுவிஸ் பேங்க்ல இருக்கிற எழுபது லட்சம் கோடி கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வருவோம்னு நம்ம பிரதமர் முழங்கினாரே அந்த விஷயம் என்னாச்சுய்யா? கிடப்புல போட்டாச்சுல்ல பாருங்கய்யா ஒரு பய இப்ப வாய திறக்க மாட்டேன்றான்!!! [[காங்கிரஸ் காரன் பணம் அல்லவா கூடுதலாக இருக்கிறது!]]
                                     பவர் கட்டுக்காக ஜெயலலிதா போராடுறாங்க, முல்லை பெரியாருக்காக வைகோ போராடுறார், கம்யுனிஷ்ட் போராடுது, திருமா  வேற அங்கயும் இல்லாம இங்கேயும் இல்லாம போராடுறாரு, இன்னும் நிறைய கட்சிகள் போராடுது ஏய் யப்பா எல்லா போராட்டமும் பிசு பிசுத்து போகிறதே!!! இதுல ஏதாவது உள் குத்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு சுப்பனுக்கும் குப்பனுக்கும்,
                       சசிதரூர் பதவிய ராஜினாமா பண்ணினார் சரி,
ஆனா அந்த பணம் எங்கே?!
ஆ ராசா விஷயத்திலையும் இதுதான் நடக்க போகுது....!!!!

2 comments:

  1. கலக்கலாக உள்ளது
    தொடருங்கள்....

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. //கலக்கலாக உள்ளது
    தொடருங்கள்....

    பகிர்வுக்கு நன்றி//
    நன்றி

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!