Saturday, November 12, 2011

அடிக்கடி வந்து போகிறவள்.....!!!!

வசந்தமாய் வந்தாள்
என்னைத்தேடி....


பூக்களை அள்ளி தெளித்தாள் 
என்மீது.....


மலர்களின் நறுமணத்தில்
மயங்கிப்போனேன்....


மலர்களின் இளவரசி நீ
உன்னை விட பூக்கள் அழகு அல்ல எனக்கு...


பூந்தோட்டத்தில் ராஜாங்கம்
நடத்தும் மகாராணி நீ...


பூவின் உடல் பளபளப்பின்
கண்ணாடியில் என்னை மறந்தேன்...


பூங்காவிற்கு அழைத்து சென்றாய்
கடற்கரைக்கு அழைத்து சென்றாய்...


காதல் மொழிபேசி 
என்னை உன்னில் சாய்த்தாய்...


பூ இதழ்களால் என்னை வருடி
மணம் கோர்த்து மகிழசெய்தாய்...


பாய்ந்து வரும் நதிக்கு
கடலும் வழிவிட்டு சங்கமித்தது....


ஏனடி பூ"ந்"தேவதையே 
கனவில் மட்டும் வந்து, ஏன் என்னை இம்சிக்கிறாய்...!!!

டிஸ்கி : வெஸ்டன் யூனியன் பேங்கில் எனக்கு லாட்டரி அடித்து, பல்பு வாங்கியதை நாளை சொல்றேன் ஹி ஹி எலேய் தக்காளி, நீ சிரிக்கிறது இங்கே வரை கேக்குது ராஸ்கல்...


22 comments:

  1. என்ன மக்கா இன்னைக்கு கவிதை மழையா கொட்டுது?

    ReplyDelete
  2. வீட்டுக்காரம்மா வெளியூர் போய் இருக்காங்களா?

    ReplyDelete
  3. பூக்களை அள்ளி தெளித்தாள்
    என்மீது.....// பூசணிப் பூ வான்னு சிபி கேட்கச் சொல்றார்..

    ReplyDelete
  4. மலர்களின் நறுமணத்தில்
    மயங்கிப்போனேன்....// ஒரு புல்(full) அளவுக்கு மயக்கம் இருக்குமோ?

    ReplyDelete
  5. ஏனடி பூ"ந்"தேவதையே
    கனவில் மட்டும் வந்து, ஏன் என்னை இம்சிக்கிறாய்...!!!

    // ஒ.. கனவா இது?

    ReplyDelete
  6. நாளைய பல்பு கதைக்கு காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  7. கனவில் மட்டும் வருவதால்தான் இம்சையே!நேரில் வந்தால் !?

    பரிசில பல்பா!பாவமே!

    ReplyDelete
  8. காதல் கவிதையாக கொட்டுகின்றது பாஸ்

    நாளைய பல்ப்புக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  9. பூக்கள் கவிதை..அருமை.. படங்களும் தூள்..!!

    ReplyDelete
  10. பூக்கள் படங்கள் அருமை ,கவித்துவம் அருமை

    ReplyDelete
  11. ஆமா இந்த கவித யாருக்கு? செம கவித பாஸ்...

    ReplyDelete
  12. தலைப்பை பார்த்து பார்ரா....ஹி ஹி ஹி

    படித்தேன் மெய்மறேந்தேன் - ரசித்தேன் மலர்களை - கவிதை கவிதை

    ReplyDelete
  13. இந்த கவிதையில் எதோ உள் குத்து இருக்குன்னு தோனுதுங்கோ

    ReplyDelete
  14. படங்களும் அதற்கான விளக்கமாக அமைந்த
    வாசகங்களும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அண்ணே கவிதா ச்சே கவித கவித (நோ வாமிட்!)...அதான் சொன்னனே கெடைக்கறது கெடைக்காம போகாது...கெடைக்காம இருக்கறது கெடைக்காது ஹிஹி!

    ReplyDelete
  16. படங்களும் அருமை! பதிவும் அருமை!

    ReplyDelete
  17. ரொம்ப மக்களுக்கு தேவையானது

    ReplyDelete
  18. நல்ல காலம் பிழைத்தீர் இம்சை கனவில் வந்ததால். நேரில் வராமல் இருக்க இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete
  19. மக்களே..
    கவிதை
    பூப்பூவா பூத்திருக்கு..
    அழகு அழகு...

    ReplyDelete
  20. வித்தியாசமான படைப்பு.படங்களும் அருமை.

    ReplyDelete
  21. கனவில் மட்டும் வந்து இம்சிக்கும் தேவதை பற்றிய மனோ அண்ணாவின் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லும் கலக்கல் கவிதை! ரசித்தேன்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!