Saturday, November 5, 2011

அண்ணன் வைகோ'வின் ஆவேசம்.....!!!!

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்புக்கு ஆதரவாக அண்ணன் வைகோ உண்ணாவிரதம் இருந்தார். அப்போது எடுத்த சில புகைப்படங்களை நண்பன் கூடல்'பாலா எனக்கு மெயிலில் அனுப்பியுள்ளார், அல்லாமலும் வைகோ பேசிய உரைகளை வீடியோ மூலம் பார்க்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்...!!!

http://www.youtube.com/watch?v=64xigegkhyQ&feature=share







இன்னைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அணுமின் நிலையத்தை சுற்றி பார்க்க போயிருக்கிறார் ஆனால் போராட்டம் நடத்தும் மக்களை போய் பார்க்கும் திட்டம் அவர் பயணத்தில் இல்லை...!!! அழிக்கும் சக்தியை கண்டுபிடிக்கும் இவர்கள், மக்களை பாதுகாக்கும் விஷயத்தில் "முட்டை"யாக இருப்பது ஏன்??? ஆச்சர்யமாக இருக்கிறது....!!!

டிஸ்கி : என் உயிர் இஸ்லாமிய நண்பர்களுக்கு என் இனிய ஈத் முபாரக் வாழ்த்துக்கள்....

படங்களுக்கு நன்றி : கூடல்பாலா.



18 comments:

  1. இன்குலாப் ஜிந்தாபாத்...

    ReplyDelete
  2. இன்னும் ஒரு முடிவு கிடைக்காமல் நீடித்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது..

    விரைவில் சரியான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்..


    அப்துல் கலாம் ஆய்வு குறித்து போராட்ட குழுக்கு நம்பிக்கை இல்லைஎன்றே கருதப்படுகிறது..

    மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு செவிக்கெர்டுத்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  3. ஒரு பதிவர் சொல்வது போல், மின்சாரம் தயாரிக்க என்றால் கேட்ப்பார்கள், வேறு எதோ என்றால் எப்படி கேட்ப்பார்கள் என்கிறார்...

    ReplyDelete
  4. வை.கோ. வின் பேச்சு ஆவேசமாக இருந்தது...
    அப்துல்கலாம் சுற்றி பார்த்துவிட்டு சப்பைக்கட்டு கட்டுவார்...
    எல்லாம் தெரிந்தது தானே..
    இதுதானே நடந்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  5. என் உயிர் இஸ்லாமிய நண்பர்களுக்கு என் இனிய ஈதல் பெருநாள்
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. எல்லா நாடுகளும் அணு உலைகளை மூடி வருகையில் இந்தியா ஏன் இப்படி அடம்பிடிக்கிறதோ. ஆபத்து இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி நிகழ்ந்தால் மக்களுக்கு 100% முழுவீச்சுடன் நிவாரணப்பணிகளை இந்திய அரசு செய்யும் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. அதனால்தான் இப்போராட்டம் என்பது தெரிந்தும் அதை முடக்கப்பார்ப்பது சரியல்ல.

    ReplyDelete
  7. அப்துல் கலாம் ஒரு பகடைக் காயாக இல்லாமல் இருந்தால் சரி!

    ReplyDelete
  8. இந்தியர்களின் கனவு நாயகன் இந்த விசயத்தில் இப்படி செய்து விட்டாரே?

    ReplyDelete
  9. கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவும் ஈகை பெருநாள் வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  10. எனக்கு இந்தப்பிரச்சனை புரியவில்லை மக்கள் பாதிப்பு என்கின்றார்கள்,ஆனால் அப்துல் கலாம் இப்படி சொல்கின்றார்...

    எங்களைபோல வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு இந்தபிரச்சனை பற்றி யாராவது இந்தியப்பதிவர் தெளிவாக எழுதுங்க..அப்பதான் எங்களுக்கு உண்மை புரியும் இல்லை என்றால் நாங்கள் யார் சொல்வதை நம்புவது...

    ReplyDelete
  11. எது எப்படியோ மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரி

    ReplyDelete
  12. வைகோவின் பேச்சு வழமையாகவே அனல் தெறிக்கும் இப்போது சொல்லவா வேண்டும்....

    ReplyDelete
  13. உயிர் தமிழுக்கு!
    உடல் மண்ணுக்கு! -ன்ற தோரணையில டிஸ்கிய படிச்சி தொலைச்சிட்டேன்.

    டிஸ்கி இன்னும் வெவரமா போடுங்க அப்பு.

    ReplyDelete
  14. இந்த கூடங்குளம் பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி வெச்சிடலாம்ணே!

    பாராளுமன்றத்தை (கூட்டத்தோட) கூடங்குளத்துக்கு மாத்திட்டு, ’அந்த’ நாதாரிப்பய கூட்டத்தை கூடங்குளத்துல வசிக்கச் சொல்லிடலாம்ணே!

    ’அவங்களோட’ நேரடி பார்வையிலயே அனு உலை இயங்கிட்டு போவுது.

    ReplyDelete
  15. நல்லதே நடக்கட்டும்!
    இஸ்லாமிய நண்பர்களுக்கு தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. வணக்கம் அண்ணே,

    நல்லா இருக்கிறீங்களா

    சுய நலவாதிகளாக எல்லோரும் இருக்கிறார்களே தவிர, பொது மக்கள் விடயத்தில் அக்கறை கொள்கிறார்கள் இல்லையே?

    ReplyDelete
  17. உங்கள் அனைவரோடும் சேர்ந்து நானும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளை வாழ்த்துகிறேன்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!