Friday, April 1, 2011

ஜெயம் பராஜெயம்

இன்னைக்கு  காலையில கன்னியாகுமரில உள்ள என் பால்ய நண்பன் ராஜகுமாருக்கு போன் பண்ணினேன். எங்கள் பேச்சு உங்கள் பார்வைக்கு....
நான் : ஹலோ மக்கா எப்பிடி இருக்கே..?
ராஜ் : நான் நல்லா இருக்கேன் மக்கா நீ எப்பிடி இருக்க..?
நான் : நானும் நல்லா இருக்கேன் மக்கா..
ராஜ் : பஹ்ரைன் நிலவரம் எப்பிடி இருக்கு, நீ எப்போ ஊர் வாரே...?
நான் : பஹ்ரைன் நிலவரம் கொலவரமா அப்பிடிதான் இருக்கு. நான் இந்த மாசம் வந்துருவேன் மக்கா...
ராஜ் : ஓ அப்பிடியா ஓட்டு போட சீக்கிரமா வந்து சேருடே...
நான் : ஆமா எலக்ஷன் நிலைமை எப்பிடி இருக்குலேய்...?
ராஜ் : எங்களுக்கு ஜெயலலிதா ஒரு சீட் [[ஜனதாதளம்]] கூட தரவில்லை. கலைஞரை கேட்டால் இதயத்தில் இடம் தாரேன்னு சொல்றார்....
நான் : ஹா ஹா ஹா ஹா ஹா....
ராஜ் : சிரிலேய் சிரி ஹா ஹா ஹா ஹா...
நான் : ஹா ஹா ஹா அப்புறம் திமுக ஜெயிச்சுருமோ மக்கா...
ராஜ் : மண்ணாங்கட்டி...
நான் : என்னாச்சு நிறைய இலவசங்களை வாரி கொட்டுறாங்களே...
ராஜ் : மக்கா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயா இருந்தாலும், ஒரு கிலோ வத்தல் விலை தொண்ணூறு ரூபாய் இதை போல மளிகை சாமான்களும் [[இவன் மளிகை கடை வைத்து இருக்கிறான் இவன் படித்திருப்பது பிகாம்]] விலை ஏறி கிடக்குறது மக்களை வெகுவாக பாதிச்சிருக்கு அதனால திமுக அவுட்டுதான்...
நான் : ஸ்பெக்ட்ரம் மேட்டர் பாமர மக்களுக்கு தெரியாதே அவர்கள் இந்த இலவசத்துக்கு ஓட்டு போட்டுருவாங்களே...?
ராஜ் : லேய் யார் சொன்னது...நம்ம ஊர் நூற்றி ரெண்டு வயசு கிழவி பொட்டம்மைக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி தெரிஞ்சிருக்கு [[யம்மாடியோ]] உலகமே தெரியாத பாட்டி வரை இந்த மேட்டர் நாறி போயி கிடக்குது மக்கா....!!! அந்த கிழவி என்கிட்டே ஒரு கணக்கு கேட்டுச்சி நானே திணறி போனேன். நூற்றி இருவது கோடி மக்கள் வாழும் இடத்தில் ஒரு லட்சத்தி எழுவத்தி அஞ்சாயிரம் கோடி ரூவாய் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிருக்கான்களே ஆமா அந்த பணத்தை இந்த நூற்றி இருவது கோடி மக்களுக்கும் பங்கிட்டால் ஒரு ஆளுக்கு எம்புட்டு கிட்டும்ன்னு  சொல்லிட்டு போன்னு என்னை பிடிச்சிகிடுச்சி..எனக்கும் தெரியவில்லை ஹி ஹி ஹி ஹி [[நீயெல்லாம் படிச்சவனா த்தூ த்தூ]] ஸோ மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க மக்கா...
நான் : ஆச்சர்யமாக "அப்பிடியா..?
ராஜ் : என்ன நொப்பிடியா வாயை மூடு. அப்புறம் உனக்கு விஷயம் தெரியுமா நம்ம சுசீந்திரம் போலீஸ் ஸ்டேசன் பக்கத்துல கோடிக்கணக்கான பண கட்டுகளை பீஸ் பீசா வெட்டி எறிஞ்சிட்டு போயிருக்காணுக தேர்தல் கமிஷனுக்கு பயந்து...
இடை டிஸ்கி : நம்ம இம்சை அரசன் பாபு'வின் பக்கத்து ஊர்தான் சுசீந்திரம். எலேய் மக்கா பாபு உங்க ஊர்ல இம்புட்டு பெரிய பண முதலைங்க இருக்காங்களோ ஆத்தீ...
நான் :  பணத்தை போட்டவன் முழுசா போடாம இப்பிடி வெட்டி எரிஞ்சிருக்கான்னா அதன் அர்த்தம் "எனக்கு இல்லாதது எவனுக்கும் இல்லாம போகணும்" என்ற அர்த்தம்தானே....
ராஜ் : ஆமாம் அப்பிடிதான்.... ஆக திமுக தோர்ப்பது உறுதி ஆகிவிட்டது....
அவனே தொடர்ந்து மக்கா உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா அதாவது, இந்தியன் ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் அதை வாங்க சன் பிரதர்ஸ் ரெடியாக இருக்கிறார்களாம் இது கூட பாமர மக்களுக்கு தெரிஞ்சிருக்கு....
நான் : அப்போ கலைஞர் குடுத்த இலவச டிவி மூலமாவே பாமர மக்கள் தெளிவடஞ்சிருக்காங்க போல சரியா...
ராஜ் : ஆமா சொந்த செலவுலேயே சூனியம் வச்சிருக்கார் அய்யா....சரி நீ சீக்கிரம் ஊர் வந்து சேருடே..
நான் : சரி மக்கா வச்சிரட்டுமா...
டொக்...
டிஸ்கி : மக்களே ஊர்ல நீங்க வெளியே போகும் போது ரோட்டின் இரு பக்கங்களையும் கவனமாக சோதித்து பாருங்கள் ஒரு வேளை  பணமூட்டைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு 13 ஆம் தேதி வரை.... 

63 comments:

  1. அடங்கொன்னியா!

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா யோவ் என்னய்யா ஆச்சி...

    ReplyDelete
  3. இதே வந்துட்டேன்.. மக்கா..

    ReplyDelete
  4. உங்களுக்கு ஏதாவது பங்கு வந்ததா....

    உங்களுக்கும் ராஜாவுக்கு அவ்வளவு நெருக்கமா..
    அந்த சிபிஜ கூப்பிடுங்க..

    ReplyDelete
  5. //பாட்டு ரசிகன் said...
    இதே வந்துட்டேன்.. மக்கா..//

    வாங்க வாங்க..

    ReplyDelete
  6. இவரு நக்கீரன் கோவாலு...
    அப்படி கேள்வியால விளையாடுறாரு...

    ReplyDelete
  7. //பாட்டு ரசிகன் said...
    உங்களுக்கு ஏதாவது பங்கு வந்ததா....

    உங்களுக்கும் ராஜாவுக்கு அவ்வளவு நெருக்கமா..
    அந்த சிபிஜ கூப்பிடுங்க..//

    நீங்க எதாவது பங்கு தாங்க மக்கா..

    ReplyDelete
  8. //கவிதை வீதி # சௌந்தர் said...
    குட் மானிங் ஆபிஷர்..//


    கவிஞர் வாங்க...

    ReplyDelete
  9. //கவிதை வீதி # சௌந்தர் said...
    இவரு நக்கீரன் கோவாலு...
    அப்படி கேள்வியால விளையாடுறாரு...
    //

    நான் நாஞ்சில் மனோ ஒய்...

    ReplyDelete
  10. இன்னிக்கு ஊருகாய் யாருங்க...

    ReplyDelete
  11. //கவிதை வீதி # சௌந்தர் said...
    இன்னிக்கு ஊருகாய் யாருங்க...//

    ஒருத்தரும் இன்னும் அம்புடலையே மக்கா...

    ReplyDelete
  12. //மக்களே ஊர்ல நீங்க வெளியே போகும் போது ரோட்டின் இரு பக்கங்களையும் கவனமாக சோதித்து பாருங்கள் ஒரு வேலை பணமூட்டைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு 13 ஆம் தேதி வரை..//

    ட்ராஃபிக்கில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போக வழி!

    ReplyDelete
  13. யோவ்.. நல்லா இருக்கியா மக்கா ?

    ReplyDelete
  14. சீக்கிரம் வீட்டுக்கு வாங்கய்யா?

    ReplyDelete
  15. //FOOD said...
    மனோ சார், அது ஒங்க ஊரு பார்ட்டி, ஆர்.பி.ஐ. ல வாங்குன பிழையுள்ள நோட்டுக்கள். அழிப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் அருகில் கவன குறைவாக விட்டு சென்றவை என்ற தகவலும் இன்றைய செய்தி தாள்களில் காணப்படுகிறது.//

    ஒ அப்பிடியா மேட்டரு...

    ReplyDelete
  16. நானும் பார்த்தேன் மக்கா அந்த நியூஸ் ..ஆனா எவனோ ஒருத்தன் கிழிந்த ரூபாய் ரெசெர்வ் பேங்க் ல இருந்து எடுத்து எரிப்பதற்கு பதில் இந்த வேலை செய்து விட்டதாக ..பேப்பர் ல போட்டு இருக்காங்க ...

    ReplyDelete
  17. //சென்னை பித்தன் said...
    //மக்களே ஊர்ல நீங்க வெளியே போகும் போது ரோட்டின் இரு பக்கங்களையும் கவனமாக சோதித்து பாருங்கள் ஒரு வேலை பணமூட்டைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு 13 ஆம் தேதி வரை..//

    ட்ராஃபிக்கில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்குப் போக வழி!//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  18. நானும் வீட்டுக்கு போகும் போது பார்கிறேன் .. எதுவும் கிடைக்க மாட்டேங்குது மக்கா?

    ReplyDelete
  19. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    யோவ்.. நல்லா இருக்கியா மக்கா ?//

    நல்லாயிருக்கேன் மக்கா...
    நேத்திக்கு நடந்ததின் உள்குத்து இல்லியே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  20. போற போக்கில அந்த மூட்டை ய பாபு தான் போட்டன ன்னு சொல்லுவா போல இருக்கே ...
    இப்படி தான் நீ சொன்ன ன்னு ஒரு மூட்டை கீழ ரோடு ஓரத்துல கிடைத்தது பிரிச்சு பார்த்த ..கசாப்பு கடைல கோழி ..ஆடு எல்லாம் வீதி மீதி இருந்த குடலு ..ரெக்கை எல்லாம் இருந்துச்சு ..........

    ReplyDelete
  21. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    சீக்கிரம் வீட்டுக்கு வாங்கய்யா?//


    வந்துட்டே இருக்கேன் மக்கா...

    ReplyDelete
  22. //இம்சைஅரசன் பாபு.. said...
    நானும் பார்த்தேன் மக்கா அந்த நியூஸ் ..ஆனா எவனோ ஒருத்தன் கிழிந்த ரூபாய் ரெசெர்வ் பேங்க் ல இருந்து எடுத்து எரிப்பதற்கு பதில் இந்த வேலை செய்து விட்டதாக ..பேப்பர் ல போட்டு இருக்காங்க ...//

    ஓஹோ அப்பிடியா சங்கதி...

    ReplyDelete
  23. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    நானும் வீட்டுக்கு போகும் போது பார்கிறேன் .. எதுவும் கிடைக்க மாட்டேங்குது மக்கா?//

    கிடைச்சா எனக்கும் பங்கு வேணும் ஆமா...

    ReplyDelete
  24. //இம்சைஅரசன் பாபு.. said...
    போற போக்கில அந்த மூட்டை ய பாபு தான் போட்டன ன்னு சொல்லுவா போல இருக்கே ...
    இப்படி தான் நீ சொன்ன ன்னு ஒரு மூட்டை கீழ ரோடு ஓரத்துல கிடைத்தது பிரிச்சு பார்த்த ..கசாப்பு கடைல கோழி ..ஆடு எல்லாம் வீதி மீதி இருந்த குடலு ..ரெக்கை எல்லாம் இருந்துச்சு ..........//

    பார்த்துய்யா எவன் தலையாவது இருக்க போகுது ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  25. //FOOD said...
    இங்கிட்டு ஒட்டகம் ஒண்ணும் இல்லன்னாக!//

    ஒட்டகம் இல்லன்னா இருக்கவே இருக்குது ஆடு மாடு ஹே ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  26. //FOOD said...
    நான் சொன்னது அறுத்து சாப்பிடறதுக்கு இல்ல. ஹி ஹி ஹி//

    நான் சொன்னது மேயிப்பதர்க்காக அல்ல ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  27. //FOOD said...
    வாங்கையா வாத்தியாரையா! வரவேற்க வருவோமையா!//


    வேடந்தாங்கல்'ல ஒரு வாத்தி அருபட்டுட்டு இருக்கார்....

    ReplyDelete
  28. பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு

    ReplyDelete
  29. //goma said...
    பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு//

    என்ன கோமதி மேடம் திடீர்னு பாட்டு பாடினா மாதிரி இருக்கு ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  30. அருமையான அலைபேசி உரையாடல்கள் தலைவா..!!! நகைச்சுவையுடன் உரையாடிய விதம் அருமை. ஹி.... ஹி.... ஹி...

    ReplyDelete
  31. //பிரவின்குமார் said...
    அருமையான அலைபேசி உரையாடல்கள் தலைவா..!!! நகைச்சுவையுடன் உரையாடிய விதம் அருமை. ஹி.... ஹி.... ஹி...//

    நன்றிலேய் மக்கா...

    ReplyDelete
  32. //பணத்தை போட்டவன் முழுசா போடாம இப்பிடி வெட்டி எரிஞ்சிருக்கான்னா அதன் அர்த்தம் "எனக்கு இல்லாதது எவனுக்கும் இல்லாம போகணும்" என்ற அர்த்தம்தானே....//
    ரைட்டு...!!! கெடுவான் கேடுநினைப்பான்...! அப்படிபோடுங்க... தல..!!!

    ReplyDelete
  33. //பிரவின்குமார் said...
    //பணத்தை போட்டவன் முழுசா போடாம இப்பிடி வெட்டி எரிஞ்சிருக்கான்னா அதன் அர்த்தம் "எனக்கு இல்லாதது எவனுக்கும் இல்லாம போகணும்" என்ற அர்த்தம்தானே....//
    ரைட்டு...!!! கெடுவான் கேடுநினைப்பான்...! அப்படிபோடுங்க... தல..!!!//


    கரிக்ட்டு மக்கா...

    ReplyDelete
  34. யார்கிட்டயும் சொல்லிடாதிங்க. ரெண்டு முட்டை பணத்தை நா நேத்து தான் எடுத்தேன்.

    ReplyDelete
  35. //தமிழ் உதயம் said...
    யார்கிட்டயும் சொல்லிடாதிங்க. ரெண்டு முட்டை பணத்தை நா நேத்து தான் எடுத்தேன்.//

    என்கிட்டே சொல்லிட்டீங்கல்ல அப்போ எனக்கும் பங்கு வேணும்....

    ReplyDelete
  36. //டிஸ்கி : மக்களே ஊர்ல நீங்க வெளியே போகும் போது ரோட்டின் இரு பக்கங்களையும் கவனமாக சோதித்து பாருங்கள் ஒரு வேலை பணமூட்டைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு 13 ஆம் தேதி வரை....//

    வீட்டுப்பக்கத்துல எடுத்துவந்து பணமூட்டைகள் கொட்டினாலும் மக்கள் அதை சீண்ட மாட்டாங்க.. தல. ஏன்னா கிராமத்துல அதுபோன்ற தகவல் காற்றுல பரவிடும்..!! தேர்தல் ஆணையத்திற்கு போக எவ்வளவு நேரமாகும்...!!!??

    ReplyDelete
  37. பக்கங்களையும் கவனமாக சோதித்து பாருங்கள் ஒரு வேளை பணமூட்டைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு 13 ஆம் தேதி வரை...///
    நீங்களும் கவனமா பருங்க. பணம் இருந்தா பாதி எனக்கு.

    ReplyDelete
  38. ஆமா.......ஊருக்கு வந்த ஒட்டு போட கார்டு இருக்கா?
    இல்ல..சும்மா உதார்தானா??

    ReplyDelete
  39. //vanathy said...
    பக்கங்களையும் கவனமாக சோதித்து பாருங்கள் ஒரு வேளை பணமூட்டைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு 13 ஆம் தேதி வரை...///
    நீங்களும் கவனமா பருங்க. பணம் இருந்தா பாதி எனக்கு.//

    நான் இருக்குற இடத்துல அப்பிடி குனிஞ்சி பாத்தேம்னா ரப்பர் புல்லட்டால சுட்டு புடுவான்களே...

    ReplyDelete
  40. //கக்கு - மாணிக்கம் said...
    ஆமா.......ஊருக்கு வந்த ஒட்டு போட கார்டு இருக்கா?
    இல்ல..சும்மா உதார்தானா??//

    எது மக்கா சிபிஆர் தானே....[[பஹ்ரைன் ஐடி]]

    ReplyDelete
  41. //கக்கு - மாணிக்கம் said...
    ஆமா.......ஊருக்கு வந்த ஒட்டு போட கார்டு இருக்கா?
    இல்ல..சும்மா உதார்தானா??//

    ஒட்டர் கார்டு முதல் பான்கார்டு வரை இருக்கு வேற எதுவும் வேணுமா வோட்கா தக்கீலா ஷக்கீலா மாதிரி....ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  42. நான் இருக்குற இடத்துல அப்பிடி குனிஞ்சி பாத்தேம்னா ரப்பர் புல்லட்டால சுட்டு புடுவான்களே...//hahaa....
    நல்ல வேளை ஏ.கே 47 இல்லைன்னு சந்தோஷப்படுங்க!!

    ReplyDelete
  43. கிழிக்காமல் போட்டிருக்கலாம் ..............படுபாவி பசங்க விடு மக்கா ..........ஒரு பக்கார்டி விட்டு மனசை ஆத்திகிறேன் ..............

    ReplyDelete
  44. நானும் தெருவோரமா தான் போறேன்...ஒன்னுமே... கிடைக்கைலையே... இன்னும் 13 நாள் இருக்கே பார்ப்போம்... (இப்படி அல்ப்ப தனமா அலையாம வேலைய பார்ப்போங்க)

    ReplyDelete
  45. //vanathy said...
    நான் இருக்குற இடத்துல அப்பிடி குனிஞ்சி பாத்தேம்னா ரப்பர் புல்லட்டால சுட்டு புடுவான்களே...//hahaa....
    நல்ல வேளை ஏ.கே 47 இல்லைன்னு சந்தோஷப்படுங்க!!//

    நான் குண்டடி படுறது வானதிக்கு அம்புட்டு சந்தோஷமா அவ்வ்வ்வ்வ்வ் நான் ஊருக்கு போறேன்....

    ReplyDelete
  46. //அஞ்சா சிங்கம் said...
    கிழிக்காமல் போட்டிருக்கலாம் ..............படுபாவி பசங்க விடு மக்கா ..........ஒரு பக்கார்டி விட்டு மனசை ஆத்திகிறேன் ..............//

    சூடு நேரம் பக்கார்டி குடிக்கபிடாது, விஸ்கி'தான் குடிக்கணும் தெரியுமில்லே....

    ReplyDelete
  47. //சிநேகிதி said...
    நானும் தெருவோரமா தான் போறேன்...ஒன்னுமே... கிடைக்கைலையே... இன்னும் 13 நாள் இருக்கே பார்ப்போம்... (இப்படி அல்ப்ப தனமா அலையாம வேலைய பார்ப்போங்க)//

    ஹா ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  48. ஹா ஹா ஹா panam kidaththaal enakkum panku kodunka

    ReplyDelete
  49. அடப்பாவிகளா கொஞ்சம் எனக்கு போன் பன்னிருந்தா நான் வந்து பணத்தைவாங்கியிருப்பேனே

    ReplyDelete
  50. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    thakaval களஞ்சியம் mano vazhka//

    ஒரு அவார்டு குடுத்து இருந்தா பிளாக்'ல ஒட்டி வச்சிருப்பேனே மக்கா...

    ReplyDelete
  51. //Speed Master said...
    அடப்பாவிகளா கொஞ்சம் எனக்கு போன் பன்னிருந்தா நான் வந்து பணத்தைவாங்கியிருப்பேனே//

    அப்பிடியா ஜெயில் போக ரெடி ஆகிட்டீன்களா மக்கா...

    ReplyDelete
  52. //tamilbirdszz said...
    ஹா ஹா ஹா panam kidaththaal enakkum panku kodunka//


    எனக்கு கிடைச்சா கண்டிப்பா பங்கு தருவேன். போலீஸ் அடியையும் நீங்க என்கூட ஷேர் பண்ணிக்கணும்....

    ReplyDelete
  53. எங்களுக்கு ஜெயலலிதா ஒரு சீட் [[ஜனதாதளம்]] கூட தரவில்லை. கலைஞரை கேட்டால் இதயத்தில் இடம் தாரேன்னு சொல்றார்....//

    ஆஹா.. ஆஹா.. என்ன ஒரு வித்தக வரிகள். கலைஞர் கேட்டால் உங்களை அழைத்து ஒரு பாராட்டு விழாவே நடாத்திப் போடுவாரு.

    ReplyDelete
  54. நூற்றி இருவது கோடி மக்கள் வாழும் இடத்தில் ஒரு லட்சத்தி எழுவத்தி அஞ்சாயிரம் கோடி ரூவாய் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிருக்கான்களே ஆமா அந்த பணத்தை இந்த நூற்றி இருவது கோடி மக்களுக்கும் பங்கிட்டால் ஒரு ஆளுக்கு எம்புட்டு கிட்டும்ன்னு சொல்லிட்டு போன்னு என்னை பிடிச்சிகிடுச்சி..//

    என்ன ஒரு கண்டு பிடிப்பு.. பாட்டி நீயும் இப்போ நம்ம அரசியலை வைச்சுக் காமெடி பண்ண வெளிக்கிட்டியா? வருக வருக!

    ReplyDelete
  55. என்னய்யா இது உங்க ஊரு பாட்டி வரைக்கும் ஸ்பெக்ட்ரம் போய் சேந்துடுச்சா....?

    ReplyDelete
  56. இதுல காமெடி கீமெடி இல்லியே?

    ReplyDelete
  57. /////இடை டிஸ்கி : நம்ம இம்சை அரசன் பாபு'வின் பக்கத்து ஊர்தான் சுசீந்திரம். எலேய் மக்கா பாபு உங்க ஊர்ல இம்புட்டு பெரிய பண முதலைங்க இருக்காங்களோ ஆத்தீ...//////

    அப்போ நம்ம பாபுவும் பெரிய மொதல தானாற்றுக்கு. அடடா....இது தெரியாம நானும் நாலஞ்சு தடவ கிராஸ் பண்ணிட்டேனே.....?

    ReplyDelete
  58. /////இந்தியன் ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் அதை வாங்க சன் பிரதர்ஸ் ரெடியாக இருக்கிறார்களாம் இது கூட பாமர மக்களுக்கு தெரிஞ்சிருக்கு....////////

    அட நீ வேற... அவங்க அடுத்த தடவ வந்தா கெவருமெண்ட்டையே வாங்க போறதா கேள்வி......!

    ReplyDelete
  59. //////MANO நாஞ்சில் மனோ said...
    //அஞ்சா சிங்கம் said...
    கிழிக்காமல் போட்டிருக்கலாம் ..............படுபாவி பசங்க விடு மக்கா ..........ஒரு பக்கார்டி விட்டு மனசை ஆத்திகிறேன் ..............//

    சூடு நேரம் பக்கார்டி குடிக்கபிடாது, விஸ்கி'தான் குடிக்கணும் தெரியுமில்லே.... ///////

    நோட் பண்ணிக்கிறேன்....

    ReplyDelete
  60. ////இம்சைஅரசன் பாபு.. said...
    போற போக்கில அந்த மூட்டை ய பாபு தான் போட்டன ன்னு சொல்லுவா போல இருக்கே ...
    இப்படி தான் நீ சொன்ன ன்னு ஒரு மூட்டை கீழ ரோடு ஓரத்துல கிடைத்தது பிரிச்சு பார்த்த ..கசாப்பு கடைல கோழி ..ஆடு எல்லாம் வீதி மீதி இருந்த குடலு ..ரெக்கை எல்லாம் இருந்துச்சு .......... /////////

    யோவ் நீதான் அம்மா கிட்ட இருந்து பொட்டி வாங்கிட்டல்ல, இதையாவது மக்களுக்கு விட்டு வைய்யா........! (அதெல்லாம் இருக்கட்டும், நேத்து என்ன போட்டி சாப்பாடா?)

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!