Tuesday, July 12, 2011

விட்டத்தை முறைக்கும் பதிவர்...

௧ : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.......

[[ நஞ்சும் அளவுக்கு மீறினால் அமிர்தம் ஆகுமா...???]]

மும்பை சர்வதேச விமான நிலையம்.....

௨ : தோலை உரிச்சி போடுவேன்......[[கோயம்புத்தூர் குசும்பு]]

[[ நீ என்ன ஷாஜகானா.....??? இல்லை அவன் பரம்பரையா...??? அது இப்போ சாத்தியமா சொல்லு, என் லிஸ்டில் சிபி உட்பட நிறைய பேர் இருக்கானுக.....]]


௩ : தம்பி என்னடா அண்ணன் என்னடா அவசரமான உலகத்துலே.....

[[ ஹெல்மெட் இல்லாமல் அண்ணன் பைக்கையும், தம்பி பைக்கையும் எடுத்துட்டு போறவனுங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை]]


௪ : சாப்பாடு உனக்கு கிடைக்கும் என சும்மா உக்கார்ந்து விடாதே, நீ பட்டினி கிடக்க நேரிடும்....!!!!!


௫ : யாரையும் நம்பி வாழ்ந்து விடாதே நீ தரித்திரன் ஆக நேரிடும்....!!!


௬ : நீ பயந்தால் வாழ்க்கை உன்னை பார்த்து பயப்படும்......!!!


௭ : நீ எழுந்தால் சிங்கம் கூட அடங்கும் உன் முன், உனது நம்பிக்கையில்......!!!


௮ : நீ முன்னேற உன் குடும்பம் கண்டிப்பா உதவவே உதவாது.....!!! நீ நாசமா போக கண்டிப்பா உதவும்....!!!


௯ : மயிரில் கயிற்றை கட்டி மலையை இழு, வந்தா மலை போனா முடி......

[[எதையும் கட்டி எதையும் இழுக்காதே, எதுக்கு வம்பு, முறையாக உழை, மலையே உன் காலின் கீழ்....!!!


௰ : பலத்தால் ஒரு மண்ணும் சாதிக்க முடியாது, புத்தியால் உலகையே வெல்லலாம்.....!!! 

சும்மா போஸ் மட்டும் போட்டோவுக்கு.....

௧௧ : புத்தி உள்ள அப்பன் உனக்கு சொத்து, புத்தி இல்லாத அப்பன் வெத்து வேட்டு.....!!!! ஆனால் நீ கலங்காதே முயற்சியை கைவிடாதே, இதோ உன் காலடியில் உலகம்....!!!


௧௨ : நீ நெகிழ்ந்தால் உன்னை வாழ்க்கை நெகிழ்ந்து விடும், வாழ்க்கையை நீ நெகிழ்ந்தால் வாழ்க்கை உன்னை நெகிழ்ந்து விடும்....!!!


௧௩ : கஷ்டப்பட்டு நீ உழைத்ததை சாப்பிட உனக்கு அருகதை [[சுகர்,பிரஷர் இல்லாமல் சும்மா சிபி மாதிரி ]] இருந்தால் நீ நீ நீ நீ நீ'தான் பாக்கியவான்......!!!!


௧௪ : நீ மகிழ்ச்சியாக இருந்தால், உன் கூட உள்ளவர்களையும் மகிழ்ச்சி ஆக்கு, அதுவே உண்மையான மகிழ்ச்சி.....!!!


௧௫ : கடல் கடந்து ரத்தம் சிந்தி உழைத்து மாதா மாதம் நாம் அனுப்பும் பணத்தில் சுகமாக ஜீவிக்கும் நம்மை பெற்ற தாய் தந்தை, நாடு கடந்து வாழும் நம்மை, ஊர் வரும் போது  [[உள்ளூரில் பெற்ற மகன்கள் மகள்கள் [[இவர்களை வாழ வைத்ததும் நாம்தான்]] இருந்தும்]]ஏளனமாக சிரிக்கும் போது, நண்பனே, நண்பியே நீ கலங்கி சோர்ந்து விடாதே, நீ நீ நீ நீ நீ'தான் உலகை ஜெயிக்க பிறந்தவன் என்பதை உன் நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்.....!!!! இல்லை உன் நெற்றியில் ஒட்டப்பட்டு விட்டது.....!!! நீ நீ நீ ஜெயிக்க பிறந்தவன்.......!!!! 


உன்னை எவனும் அசைக்க முடியாது காரணம் நீ பெற்றோரை மறக்காதவன், அதனால் உன் ஆயுசு நாட்கள் கூடி போகும்....!!!

டிஸ்கி : ஒரு [[பைக்]] போட்டோ தவிர மற்ற எல்லா படங்களும் எங்கள் ஊரை சுற்றி எடுத்தது....!!!

48 comments:

  1. அண்ணே ஆளாளுக்கு இப்படி புழிஞ்சா என்னன்னே பண்றது!

    ReplyDelete
  2. ஹி ஹி ஹி ஹி கொஞ்சம் ஓவரா புழிஞ்சிட்டேனோ....???

    ReplyDelete
  3. நூருல் இஸ்லாம் வண்டியில யாரைண்ணே ஃபாலோ பண்றீங்க? .........அண்ணிகிட்ட சொல்லமாட்டேன் .....

    ReplyDelete
  4. தத்துவம்...

    அட்வைஸ்...

    கலாய்த்தல்...

    பயணக்கட்டுரை...

    பதிவர்...

    தங்களின் லீலைகள்..

    நடத்துமைய்யா நடத்தும்...

    ReplyDelete
  5. ஹி ..ஹி ..கிட்ட தட்ட ரெண்டு வருடம் கழிச்சு குளித்த மனோ அண்ணா வாழ்க ..வாழ்க ..

    ReplyDelete
  6. koodal bala said...
    நூருல் இஸ்லாம் வண்டியில யாரைண்ணே ஃபாலோ பண்றீங்க? .........அண்ணிகிட்ட சொல்லமாட்டேன் ....//

    ஐயய்யோ எனக்கு விரோதமா பயங்கர சதி நடக்குது....

    ReplyDelete
  7. பாட்டு ரசிகன் said...
    தத்துவம்...

    அட்வைஸ்...

    கலாய்த்தல்...

    பயணக்கட்டுரை...

    பதிவர்...

    தங்களின் லீலைகள்..

    நடத்துமைய்யா நடத்தும்...//


    ஹே ஹே ஹே ஹே ரெண்டு ஓட்டு வந்துருச்சி......

    ReplyDelete
  8. இம்சைஅரசன் பாபு.. said...
    ஹி ..ஹி ..கிட்ட தட்ட ரெண்டு வருடம் கழிச்சு குளித்த மனோ அண்ணா வாழ்க ..வாழ்க//

    ஒ அதான் குளம் அந்த நாத்தம் நாறிச்சா.....

    ReplyDelete
  9. தம்பி லேப்டாப் மனோ.. நீ என்ன ஷகீலாவுக்கு தம்பியா? எப்போ பாரு குளிச்சிட்டே இருக்கே? ராஸ்கல்

    ReplyDelete
  10. அட்வைஸ்...
    அட்வைஸ்...
    அட்வைஸ்...
    அனுபவப் பகிர்வு + படங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. நான் சி.பி. சாரை வழிமொழிகிறேன் ..

    ReplyDelete
  12. ஓ!....சிந்தனைச் சிதறலா!.....மிக நல்ல ஐடியா!...பல வழி ஆக்கம்.....வாழ்த்துகள்!
    Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  13. உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு அண்ணாச்சி

    ReplyDelete
  14. raittu,,,உங்க வூர் அழகா இருக்கு..

    ReplyDelete
  15. ௧ : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.......//

    வணக்கம் பாஸ், ஆமா, இது என்ன மும்பை ஏர்ப்போர்ட்டில் சுட்ட மோட்டார் சைக்கிளா?

    ReplyDelete
  16. ௯ : மயிரில் கயிற்றை கட்டி மலையை இழு, வந்தா மலை போனா முடி......//

    அடடா, இது நல்லா இருக்கே....ஆமா எந்த மயிரில்;-)))

    ReplyDelete
  17. பாஸ், குடும்பம், சுற்றத்துக்காக, உழைத்து உழைத்து நொந்து போன ஒரு மனிதனின் உணர்வுகளை இங்கே தத்துவமாகப் பொழிந்துள்ளீர்கள்.

    எல்லாமே வாழ்க்கையில் நாம் எப்படி இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்துள்ளன.

    ReplyDelete
  18. //சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி லேப்டாப் மனோ.. நீ என்ன ஷகீலாவுக்கு தம்பியா? எப்போ பாரு குளிச்சிட்டே இருக்கே? ராஸ்கல்//
    சிபிக்கு கண்டனம்!
    கவிதை வீதியில் மனோவையும், ரஞ்சிதாவையும் கோர்த்து விட்டுட்டு, இங்க வந்து ஷகீலாவை மனோவுடன் கம்பேர் பண்ணி பேசறீங்க!

    ReplyDelete
  19. அனுபவத்தில் ஆழ்ந்தெடுத்த முத்துக்கள். அத்தனையும் உண்மை. சிபி கமெண்ட்ஸ் தவிர எல்லாமே சூப்பர்!

    ReplyDelete
  20. நல்ல ஊரை சுத்தி இருகிங்க ....

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் மனோ.

    ReplyDelete
  22. சும்மா போஸ் மட்டும் போட்டோவுக்கு.....//பார்த்தா அப்புடி தெரியலையே!!! ஏதோ ஒரு கொலை வெறிலை இருக்காப் போல இருக்கே???!!!!

    ReplyDelete
  23. என்ன மாப்பிள நானும் ஒரு பதிவர்ன்னு கூவுறன் என்ர பக்கமும் வரலாமே சேர்ந்து கும்மியடிக்கலாம் ..!? எல்லா வீட்டு கதவையும் தட்டிறீங்க நான் கதவ திறந்து வைச்சிருக்கன் காத்து வரட்டுமெண்டு நீங்கள் தட்டாமலே வீட்டுக்க வரலாம் வாங்க மாப்பிள வங்க...!?

    ReplyDelete
  24. நீ எழுந்தால் சிங்கம் கூட அடங்கும் உன் முன், உனது நம்பிக்கையில்......!!!
    /////////////////////////////////////

    ஹி ஹி ஹி..............டமாசு டமாசு ......
    ஆமா தெரியாம தான் கேக்குறேன் நான் ஏன் அடங்கணும் ...........?

    ReplyDelete
  25. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி லேப்டாப் மனோ.. நீ என்ன ஷகீலாவுக்கு தம்பியா? எப்போ பாரு குளிச்சிட்டே இருக்கே? ராஸ்கல்//

    நீயே எனக்கு அண்ணனா இருக்கும் போது ஷகீலா ஒன்னும் பெரிய மேட்டர் இல்லைடா பன்னி......

    ReplyDelete
  26. இராஜராஜேஸ்வரி said...
    அருமையான அனுபவப் பகிர்வுப் பாடங்களுக்கு பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி மேடம்...

    ReplyDelete
  27. சே.குமார் said...
    அட்வைஸ்...
    அட்வைஸ்...
    அட்வைஸ்...
    அனுபவப் பகிர்வு + படங்களுக்கு பாராட்டுக்கள்.//

    நன்றி மக்கா..........

    ReplyDelete
  28. அரசன் said...
    நான் சி.பி. சாரை வழிமொழிகிறேன் ..//

    அடப்பாவிகளா.............

    ReplyDelete
  29. kavithai said...
    ஓ!....சிந்தனைச் சிதறலா!.....மிக நல்ல ஐடியா!...பல வழி ஆக்கம்.....வாழ்த்துகள்!//

    நன்றி நன்றி....

    ReplyDelete
  30. தமிழ்வாசி - Prakash said...
    mudiala.... makkaa.... unga settaiya
    //

    கேப்டனை கூப்பிடட்டுமா....ஹி ஹி....

    ReplyDelete
  31. A.R.ராஜகோபாலன் said...
    உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு அண்ணாச்சி//

    நன்றி மக்கா.........

    ReplyDelete
  32. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    raittu,,,உங்க வூர் அழகா இருக்கு..//

    யோவ் படத்தை மட்டும் பார்த்துட்டு கமேண்டா பிச்சிபுடுவேன்....

    ReplyDelete
  33. நிரூபன் said...
    ௧ : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.......//

    வணக்கம் பாஸ், ஆமா, இது என்ன மும்பை ஏர்ப்போர்ட்டில் சுட்ட மோட்டார் சைக்கிளா?//

    தமிழ்நாடு ரேஜிட்றேஷன் நம்பர்ல மும்பையில் பைக் ஓட்டுறது நான் மட்டும்தான் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  34. நிரூபன் said...
    ௯ : மயிரில் கயிற்றை கட்டி மலையை இழு, வந்தா மலை போனா முடி......//

    அடடா, இது நல்லா இருக்கே....ஆமா எந்த மயிரில்;-)))//

    எலேய் மக்கா பப்ளிக் பப்ளிக்....

    ReplyDelete
  35. நிரூபன் said...
    பாஸ், குடும்பம், சுற்றத்துக்காக, உழைத்து உழைத்து நொந்து போன ஒரு மனிதனின் உணர்வுகளை இங்கே தத்துவமாகப் பொழிந்துள்ளீர்கள்.

    எல்லாமே வாழ்க்கையில் நாம் எப்படி இருக்க வேண்டும் எனும் வகையில் அமைந்துள்ளன.//

    ஆமாங்கோ......

    ReplyDelete
  36. FOOD said...
    //சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி லேப்டாப் மனோ.. நீ என்ன ஷகீலாவுக்கு தம்பியா? எப்போ பாரு குளிச்சிட்டே இருக்கே? ராஸ்கல்//


    சிபிக்கு கண்டனம்!
    கவிதை வீதியில் மனோவையும், ரஞ்சிதாவையும் கோர்த்து விட்டுட்டு, இங்க வந்து ஷகீலாவை மனோவுடன் கம்பேர் பண்ணி பேசறீங்க!//


    இந்த மூதேவி, பன்னி [[பன்னிகுட்டி அல்ல]] திருந்தவே மாட்டான் ஆபீசர்......

    ReplyDelete
  37. FOOD said...
    அனுபவத்தில் ஆழ்ந்தெடுத்த முத்துக்கள். அத்தனையும் உண்மை. சிபி கமெண்ட்ஸ் தவிர எல்லாமே சூப்பர்!//

    எலேய் நாதாரி சிபி, உனக்கு ஆபீசர் ஆப்பு வச்சிட்டார் ஹை ஹை ஜாலி ஜாலி......

    ReplyDelete
  38. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    நல்ல ஊரை சுத்தி இருகிங்க ....//

    ஊர்தான் என்னை சுத்துதுங்கோ....

    ReplyDelete
  39. Rathnavel said...
    வாழ்த்துக்கள் மனோ.//

    நன்றி அய்யா.....

    ReplyDelete
  40. vanathy said...
    சும்மா போஸ் மட்டும் போட்டோவுக்கு.....//பார்த்தா அப்புடி தெரியலையே!!! ஏதோ ஒரு கொலை வெறிலை இருக்காப் போல இருக்கே???!!!!//

    ஐயோ பாவம் அந்த அண்ணாச்சி, இந்த போட்டோவை மட்டும் அவர் பாத்தாருன்னா அருவாளோட வந்துருவாரு வீட்டுக்கு ஹி ஹி....

    ReplyDelete
  41. காட்டான் said...
    என்ன மாப்பிள நானும் ஒரு பதிவர்ன்னு கூவுறன் என்ர பக்கமும் வரலாமே சேர்ந்து கும்மியடிக்கலாம் ..!? எல்லா வீட்டு கதவையும் தட்டிறீங்க நான் கதவ திறந்து வைச்சிருக்கன் காத்து வரட்டுமெண்டு நீங்கள் தட்டாமலே வீட்டுக்க வரலாம் வாங்க மாப்பிள வங்க...!?//

    வாரம்னே வாரேன்....

    ReplyDelete
  42. அஞ்சா சிங்கம் said...
    நீ எழுந்தால் சிங்கம் கூட அடங்கும் உன் முன், உனது நம்பிக்கையில்......!!!
    /////////////////////////////////////

    ஹி ஹி ஹி..............டமாசு டமாசு ......
    ஆமா தெரியாம தான் கேக்குறேன் நான் ஏன் அடங்கணும் ...........?//

    அண்ணே நான் சிங்கத்தை சொன்னேம்னே ஹி ஹி ஹி.....

    ReplyDelete
  43. mee the firstu..

    engal thalaivar naanjil mano
    anja singam vaalga vaalga

    ReplyDelete
  44. படங்களும் உங்கள் அனுபவ தொகுப்பும் சுப்பர் /
    தொடர்ந்து பல பதிவுகளில் நீங்கள் குளிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன அண்ணே

    ReplyDelete
  45. குடும்பத்துக்காக பிரிஞ்சு  அவங்களை வாழவைப்பதும் நாம் இது 100% உண்மை மாப்பூ! கலக்கல் பதிவு !

    ReplyDelete
  46. புத்தி உள்ள அப்பன் உனக்கு சொத்து, புத்தி இல்லாத அப்பன் வெத்து வேட்டு.....!!!! ஆனால் நீ கலங்காதே முயற்சியை கைவிடாதே, இதோ உன் காலடியில் உலகம்....!!!

    ஆமாங்க மாய உலகம்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!