Sunday, May 29, 2011

எங்கள் பெண்மணிகளின் கண்ணீர்




நான் வளர்க்கும் டேபள் ரோஜா செடி......!!!
மரம்தான் வளர்க்க முடியலை செடியாவது வளர்ப்போம் ம்ஹும்...

பேஸ்புக்'ல நான் டேபிள் ரோஜா செடி படம் போட்டு மேலே சொன்ன கமெண்ட்ஸ் போட்டுருந்தேன். அதுக்கு வந்த கண்ணீர் கமெண்ட்ஸ் என் நெஞ்சை விம்ம வைத்து விட்டதுமல்லாமல், இயலாமையை நினைத்து கூனி குறுகி போனேன்....
கீழே வரும் ஒரு [[பல]] சகோதரியின் கண்ணீரை பாருங்கள்....!!! 

Swathi Swamy 
 இதை ஜப்பான் ரோஜா என்று சொல்வார்கள் எங்கள் ஊரில். மண்ணில் நட்டால் கொடியாக படர்ந்து அடர்ந்து வளரும். பல வர்ணங்களில் இந்த ரோஜாவை யாழ்ப்பாணத்தில் வைத்திருந்தேன். கடும் சூரிய ஒளி இதற்கு ஆகாது. அதே போல் கோழியும் இதன் இலைகளை கொத்தி கொத்தி தின்று செடியை மொட்டையாக்கிய பரிதாபமெல்லாம் எனக்கு அனுபவம். அதன் பின் கம்பி வலையால் அதை சுற்றி வேலி போட்டு தடிகள் ஊன்றி கொடியாக படரவிட்டு தந்தார் என் அப்பா. அந்த அயலில் எல்லாரின் வீட்டிலும் என்னுடைய ஜப்பான் ரோஜாவின் துளிர்கள் நடப்பட்ட வரலாறும் உண்டு.. ! :):)



Swathi Swamy ஊரில் எதெது எல்லாம் ஆசை ஆசையாக செய்தோமோ அதையெல்லாம் இங்கு இத்தனை வசதியிருந்தும் செய்ய முடிவதில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கும்..எனக்கு ஒரே ஒரு காரணம் தான் என்னுடைய ஆன்மா இன்னும் என்னுடய யாழ்ப்பாண வீட்டை விட்டு அமெரிக்காவுக்கு குடிவரவில்லை என்பது மட்டும் தான்.. :(



நாஞ்சில் மனோ செடிகளை இவ்வளவு நேசிக்கிரீங்களா வாவ் சூப்பர்....!!!!



நாஞ்சில் மனோ ‎//என்னுடைய ஆன்மா இன்னும் என்னுடய யாழ்ப்பாண வீட்டை விட்டு அமெரிக்காவுக்கு குடிவரவில்லை என்பது மட்டும் தான்.. :(// கவலை படாதீர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு காலம் கண்டிப்பாக வரும்....விடியலும்.....



Vanathy Ravi Oh! now I remember this plant's name. Japan Rose. Thanks, Swathy. Uncle, you r a kind man!



Swathi Swamy 
 என்னுடைய வீட்டு முன் முற்றம் முழுவதும் பூக்களாகவே இருக்கும்..பின் பக்க வளவு மா மரம், பனைமரம், மிளகாய், துளசி, தக்காளிச் செடி என்று இருக்கும். எனக்கும் அப்பாவுக்கும் செடி வளர்ப்பு அப்போது வெறி பிடித்த பொழுது போக்கு. கடைசியாக 1989ல் ஊர் போன போது அந்த வீடும் இல்லை..தரைமட்டமாகிவிட்டது; பூத்துக் குலுங்கிய வளவெல்லாம் புதரும் புல்லும்.. பனைமரங்கள் மொட்டையாக விமானத்தாக்குதலில் பட்டுப் போய்...நல்ல வேளை அதைப் பார்க்காமலே அப்பா இறந்து போனார்.. அவர் ஆசை ஆசையாய் ஒவொரு கல்லாக கட்டிய வீடும் வளவும்...அவருக்கு இன்னொரு பிள்ளை மாதிரி நேசித்தார்,.





Vanathy Ravi Swathy your story sounds like mine too.





நாஞ்சில் மனோ மனசு கலங்க வச்சிட்டேனோ சாரிப்பா......:[





Vanathy Ravi uncle, kannai thodainga. enga smile pannuga... cute





நாஞ்சில் மனோ என் மனசும் கலங்கி போச்சு மக்கா...





Kalpana Rajendran hi swathi sagothari .. ninalvugal valiyaai irupinum sila samayangalil ninavugal pokkisham pontrathu.. nitchayam neengal vazntha vazhvu ungaku virivil kidaikkum .. :))) dont feel .. we are with u .....





Swathi Swamy அதெல்லாம் இல்லை சார்...இது எங்களுக்கு பழகிப் போனது தான்..யாழ்ப்பாண நினைவு கலங்கிப் போக வைத்தாலும் அவை தான் எங்களைப் போன்றோரை இயக்கிக் கொண்டுமிருப்பவை...





Swathi Swamy நன்றி கல்பனா...





Kalpana Rajendran that's spirit..nice .. nice to meet u sago..





Swathi Swamy nice to meet you sis...



டிஸ்கி : என் கண்ணீரால் இந்நிலை மாறுமின், நாளெல்லாம் அழுவேனே.......!!!

டிஸ்கி : மனிதன்தான் கல்லாகி போனான்...!!!
ஆண்டவனே நீயும் கைவிட்டாயோ..???


ஏ வானமே அகன்று போ...
ஏ பூமியே நீ சுழல்வதை நிறுத்து...
ஏ மேகமே நீ பொழிவதை நிறுத்து...
எங்கள் பெண்மணிகளின் 
கண்ணீரே பொழிகிறது ரத்தமாய்...
ஏ கடலே நீ உலர்ந்து போ...
எங்கள் கண்ணின் கண்ணீரால்
உனை நிரப்பி விடுவோம்...
ஏ தென்றலே உன் சுகம் வேண்டாம் எனக்கு 
நீ போய் உனது பண்டகசாலையில்
ஒளிந்து கொள்..
ஏ புயலே பயந்து நடுங்கு 
எம் பெண்மணிகளின்
பெருமூச்சு உன்னை ஒடசெய்யும்...
ஏ சூறாவழியே சுருட்டி கொண்டு ஓடு
எங்கள் இருதயம் 
பெரும் சூறாவளியாய் 
கனன்று கொண்டிருக்கிறது...
ஏ ஆறுகளே உங்கள் 
ஓட்டத்தை நிறுத்துங்கள்
நீங்கள் அருகதை அற்றவர்கள்...
ஏ வனங்களே எரிந்து போங்கள் 
எங்கள் பெண்மணிகளின் 
கண்ணீரை கொண்டு 
உங்கள் அக்கினியை அமர்த்துவோம்...!!!

கண்ணீருடன் நாஞ்சில் மனோ.....

பேஸ்புக் லிங்க் கீழே...

32 comments:

  1. யோவ் நிருபன்.... இது ஞாயமா? மனோ சீரியஸ் பதிவு போட்டிருக்கார்! நீ கும்முறியே.... ஞாயமா?

    ReplyDelete
  2. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    யோவ் நிருபன்.... இது ஞாயமா? மனோ சீரியஸ் பதிவு போட்டிருக்கார்! நீ கும்முறியே.... ஞாயமா?//

    மிஸ்டர் நாராயணன்,
    கொஞ்சம் மேலே பார்க்கிறது;-))

    நான் எங்கே கும்மினேன்,
    அதான் தப்புச் செய்தால் தடயமிருக்கப் படாதில்லே.

    ReplyDelete
  3. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    யோவ் நிருபன்.... இது ஞாயமா? மனோ சீரியஸ் பதிவு போட்டிருக்கார்! நீ கும்முறியே.... ஞாயமா?//

    இது உங்களுக்கே நியாயமா?
    என்னையை விட்டுட்டு, நான் ஆன்லைனில் இல்லா டைம் பார்த்து நீங்க, மனோ எல்லோருமா சேர்ந்து சிபி ப்ளாக்கில் 110 அடிப்பீங்க, நான் மட்டும் என்னவாம் அழுகிறதா.

    ReplyDelete
  4. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    யோவ் நிருபன்.... இது ஞாயமா? மனோ சீரியஸ் பதிவு போட்டிருக்கார்! நீ கும்முறியே.... ஞாயமா?//

    இது உங்களுக்கே நியாயமா?
    என்னையை விட்டுட்டு, நான் ஆன்லைனில் இல்லா டைம் பார்த்து நீங்க, மனோ எல்லோருமா சேர்ந்து சிபி ப்ளாக்கில் 110 அடிப்பீங்க, நான் மட்டும் என்னவாம் அழுகிறதா.

    ReplyDelete
  5. கண்ணீருக்குள்ள வலிமையினை கவிதையின் மூலம் உணர்த்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. நல்ல பதிவு மனோண்ணே.

    ReplyDelete
  7. இவ்ளோ நல்லவரா நீங்க???
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  8. ம் முடியல.... நல்ல சிறந்த நடிகன்.

    ReplyDelete
  9. அட மனோ மாஸ்டர் மனசுக்குள்ளேயும் ஒரு பூ மலர்ந்து போய் இருக்கோ,,, உங்களுக்கு பூ மனசு தான் போங்க )

    ReplyDelete
  10. மனோ, கவிதை அழகு.
    கடவுளே! என் பெயரை அனானிமஸ் என்று போட்டிருக்கலாம். நான் உளறியதை இங்கே போட்டு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    ReplyDelete
  11. :( (((((

    நினைவுகள்… ம்… என்ன சொல்வது நண்பரே… படித்ததும் கலங்கியது மனது.

    ReplyDelete
  12. வலிகள் நிறைந்த வரிகள்.

    ReplyDelete
  13. நம்ம மனோவுக்கு எத்தனை நல்ல மனசு? மனோ நீர் வாழ்க.

    ReplyDelete
  14. அக்னி அணைந்து வரலாறு திரும்பும் வழியுண்டா.?

    ReplyDelete
  15. ஈரமுடன் செல்கிறேன்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

    நாமே ராஜா, நமக்கே விருது-8
    http://speedsays.blogspot.com/2011/05/8.html

    ReplyDelete
  16. முகப் புத்தகத்தில் கலக்குகிறீர்களே!

    ReplyDelete
  17. உங்க பதிவே படிச்சாலே உற்சாகமா இருக்கும்..இந்த பதிவு வேதனையாகவும் இருக்கு...

    ReplyDelete
  18. கவிதை நன்றாக, உள்ளது.

    ReplyDelete
  19. ////மனிதன்தான் கல்லாகி போனான்...!!!
    ஆண்டவனே நீயும் கைவிட்டாயோ..??////

    அவரது மண் பற்றுக் கண்டு வியந்து போனேன்... உணர்வுகள் உறவுடனேயே வாழுமுங்க..

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

    ReplyDelete
  20. ஃஃஃஃஃகடைசியாக 1989ல் ஊர் போன போது அந்த வீடும் இல்லை..தரைமட்டமாகிவிட்டது; ஃஃஃஃ

    இப்போ மனிதர்களே அரிது சகோதரி..

    ReplyDelete
  21. அடடா நம்ம அங்க கும்மாளம் போட்டது இங்க சீரியஸ் பதிவா மாறிடுச்சா ?????

    ReplyDelete
  22. பூக்களை கூட
    சக மனிதனாய் சிநேஹித்த
    மாண்பு அற்புதம் மனோ சார்

    ReplyDelete
  23. கவிதை அழகு.நல்ல பகிர்வு நண்பரே.

    ReplyDelete
  24. கல்லுக்குள் ஈரம்

    ReplyDelete
  25. உணர்வு பூர்வமான பதிவு மனோ.

    ReplyDelete
  26. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html

    ReplyDelete
  27. அண்ணே நானு லேட்டு ஹிஹி!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!