Friday, May 6, 2011

பதிவரின் முதுகில் டின் கட்ட காத்திருக்கும் அண்ணன்

முன்பு ஒரு சமயம் நான் மும்பையில் இருந்து ஊர் போன போது நடந்த சம்பவம். எங்கள் ஊரிலேயே உள்ள ஒரு பெண்ணை நண்பன் லவ்வி கொண்டிருந்தான். ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் வீட்டில் கடுகடுமையான எதிர்ப்பு. நண்பர்கள் வழக்கம் போல சப்போர்ட் பண்ணி கொண்டிருந்தார்கள். ஓடிப்போகவும் முடியாத நிலை. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...

நண்பர்களை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் கிணற்றுக்கு போனேன், அந்த கிணறு நாங்கள் சிறுபிள்ளைகளில் குதித்து சாடி குளித்த கிணறு அதின் ஆதி அந்தம் நல்லாவே தெரியும் எங்களுக்கு. பிளான் ரெடியானது, அதன்படி...[[ அந்த கிணற்றில் இப்போது யாருமே குளிப்பது கிடையாது, எப்பவுமே அதில் ஆறு எழு அடி தண்ணீர் இருக்கும். ஆனால் அந்த சமயம் இடுப்பளவுதான் தண்ணீர் இருந்தது]]

ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஊரே உறங்கிட்டு இருக்கும் நேரம், நண்பனின் காதலி, ஓ என அலறிக்கொண்டே ஓட....ஊராரும் எழும்ப, காதலி ஓடிபோயி கிணற்றில் குதித்து விட்டாள்....!!! [[எங்கள் நண்பர்கள் குழு தயாராய் பார்த்து கொண்டு இருந்தோம்]]  பின்னாலேயே ஓடி வந்த நண்பன், அவனும் கிணற்றில் குதிக்க ஊரே அல்லோலகல்லோல பட்டது.

அந்த பெண்ணுக்கு நீச்சல் தெரியாது. எப்பிடியோ காப்பாற்றி பெண்ணையும் நண்பனையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பஞ்சாயத்து நடந்தது. எவ்வளவு அன்பு இருந்தால் இந்த பெண் அவனுக்காக கிணற்றில் குதித்து இருப்பாள் என்று நாங்கள் ஸ்துதி ஏற்ற [[ஹி ஹி நாடகாசிரியர் மனோ]] 

இரண்டு வீட்டாரும் சாதி மறந்து சம்பந்தி ஆனார்கள். ஊரே வாழ்த்த கல்யாணம் நடந்தது.

சரி இனி நாடகம் எப்பிடி அரங்கேறியது...??? சொல்றேன். . . . . 

இரண்டு நாள் முன்பே முதலில் நான் கிணற்றினுள் குதித்து ஆழம் எவ்வளவு என பார்த்தேன். தண்ணீர் இடுப்பளவுதான் இருந்தது. காதலனையும் குதிக்க சொன்னென் அவனும் குதித்து ஊர்ஜிதம் செய்தான். அப்புறமா காதலியை ரகசியமாக அழைத்து வந்து, செயல் முறை விளக்கினேன். அவள் பயந்துபோனாள் [[நீச்சல் தெரியாது]] , அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...

அப்புறம்தான் அவளுக்கு தைரியம் [[என் மீது இரக்கபட்டோ என்னவோ]] வந்தது. நாடக அரங்கேற்றமும் வந்தது, அவள் கிணற்றில் குதிக்கும் போது நண்பர்கள் நாங்கள் எல்லோரும் சுற்றி உள்ள மரங்களின் மேலே இருந்தோம் [[ம்ஹும் குரங்கே]] ஊராருக்கு தெரியாது. 

அப்புறம் என்ன டும் டும் டும் டும்தான்....

டிஸ்கி : நண்பனின் காதலியின் அண்ணனுக்கு ஒரு டவுட்டு வர, தற்செயலாக அந்த கிணற்றை சுத்தி பார்த்திருக்கிறான். அவனுக்கு லேசாக பொறி தட்ட, என் நினைவும் வர டவுட் கிளீயராகிருச்சி. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம்  [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். அண்ணன் காரனுக்கு எங்கள் நாடகம் புரிஞ்சி போச்சு. ஆனால் என்ன ஒரு விஷயம்னா, அதுக்குள்ளே நண்பனுக்கும் காதலிக்கும் கல்யாணம் முடிஞ்சி போயிருந்தது.

டிஸ்கி : பெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் [[வேற எதுக்கு முதுகுல டின் கட்டத்தான் ஹி ஹி ஹி]]  அடகொன்னியா மூணு குழைந்தங்க உன் தங்கச்சிக்கு பிறந்த பிறகும் ஏன் இந்த கொலைவெறி...??? இப்போ இடையில் ஒரு லீவுக்கு போன போது அவனை ஒரு கல்யாண வீட்டில் பார்த்தேன். அவன் என்னோடு பேசவில்லை நானும் பேசவில்லை, ஆனால் அவன் என்னை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான். என் மனைவி அதை கண்டு என்னிடம் சொன்னாள். ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள், ஏன்னா நாங்களும் காதலிச்சிதானே கல்யாணம் செஞ்சோம் [[இரு வீட்டாரின் சம்மதத்தோடு]]....

107 comments:

  1. ஆஹா..அண்ணன் பெரிய்ய்ய்ய ஆளா இருப்பாரு போலிருக்கே!

    ReplyDelete
  2. அட, வடை நமக்குத் தானா?

    ReplyDelete
  3. ஓ...காதல் கதை... காதல் கல்யாணம் ... ! ம்ம்.. நல்லா இருக்கு

    ReplyDelete
  4. எங்கேயும் காதல்!

    ReplyDelete
  5. அடடா நம்ம மனோ அண்ணன முன்னாடியே தெரியாம போச்சே..... வட போச்சே.....!

    ReplyDelete
  6. பஜ்ஜி
    போண்டா
    கிணறு
    குளம்
    எங்கேயும் காதல்!

    --நாங்க ஒன்னும் வடைப் பின்னூட்டம் போடலை...இதுக்குள்ளயும் ஒரு கவிதை ஒளிஞ்சிருக்கு, ஆமா!

    ReplyDelete
  7. ஆஹா..சகதியில் உருளும் சாமியையே முந்திட்டமா?

    ReplyDelete
  8. இந்த மனுசன் கமெண்ட்டுக்குப் பதில் போடாம என்ன பண்ணுதாரு?

    ReplyDelete
  9. இந்த ஜாப் தான் பாக்குறீங்களா.?

    ReplyDelete
  10. காதல் காப்பகன் வாழ்க

    ஹி ஹி இந்த பட்டம் நல்லாயிருக்கே

    ReplyDelete
  11. //செங்கோவி said...
    ஆஹா..அண்ணன் பெரிய்ய்ய்ய ஆளா இருப்பாரு போலிருக்கே!//

    நான் பச்சை புள்ளையய்யா....

    ReplyDelete
  12. //செங்கோவி said...
    அட, வடை நமக்குத் தானா?//

    சாபிடுங்கோ...

    ReplyDelete
  13. இது எல்லாம் கல்வெட்டுல செதுக்க வேண்டிய விசயம் ஆச்சே ...(ஊருக்கு வாங்க உங்கள செதில் செதிலா செதுக்க சொல்லுறேன் ....)

    ReplyDelete
  14. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடடா நம்ம மனோ அண்ணன முன்னாடியே தெரியாம போச்சே..... வட போச்சே.....!//

    ஏன் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பமே போட்டு தள்ளிருக்கலாமேன்னு தோணுதோ மக்கா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  15. #// கவிதை வீதி # சௌந்தர் said...

    காதல் காவலன் வாழ்க..//
    ரிப்பீட்டு!

    ReplyDelete
  16. //May 6, 2011 2:43 AM
    செங்கோவி said...
    பஜ்ஜி
    போண்டா
    கிணறு
    குளம்
    எங்கேயும் காதல்!

    --நாங்க ஒன்னும் வடைப் பின்னூட்டம் போடலை...இதுக்குள்ளயும் ஒரு கவிதை ஒளிஞ்சிருக்கு, ஆமா///

    கவித கவித இடைஇடையே மானே தேனே பொன்னே'ன்னு போடுங்க ஹி ஹி ஹி...

    ReplyDelete
  17. //செங்கோவி said...
    ஆஹா..சகதியில் உருளும் சாமியையே முந்திட்டமா?//

    ஐ இந்த பேரு நல்லாயிருக்கே...

    ReplyDelete
  18. //செங்கோவி said...
    இந்த மனுசன் கமெண்ட்டுக்குப் பதில் போடாம என்ன பண்ணுதாரு?//


    நாலு பதிவரையும் தட்டி குடுக்க போகணுமே மக்கா...

    ReplyDelete
  19. //தம்பி கூர்மதியன் said...
    இந்த ஜாப் தான் பாக்குறீங்களா.?//


    நண்பனுக்காக இந்த ஜாப் பாக்கலாம் தம்பி ஹி ஹி...

    ReplyDelete
  20. //Speed Master said...
    காதல் காப்பகன் வாழ்க

    ஹி ஹி இந்த பட்டம் நல்லாயிருக்கே//


    "சகலவன்" அவார்டு குடுத்த எஃபெக்ட்டா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  21. // கவிதை வீதி # சௌந்தர் said...
    காதல் காவலன் வாழ்க..//


    சொறிஞ்சி விடுங்க எசமான் சொறிஞ்சி விடுங்க....

    ReplyDelete
  22. //இம்சைஅரசன் பாபு.. said...
    இது எல்லாம் கல்வெட்டுல செதுக்க வேண்டிய விசயம் ஆச்சே ...(ஊருக்கு வாங்க உங்கள செதில் செதிலா செதுக்க சொல்லுறேன் ....)//

    எலேய் நீ அண்ணனை காப்பாத்துவேன்னு பார்த்தா, நீயுமா அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  23. //சென்னை பித்தன் said...
    #// கவிதை வீதி # சௌந்தர் said...

    காதல் காவலன் வாழ்க..//
    ரிப்பீட்டு!///


    யாத்தே....

    ReplyDelete
  24. நான் நம்ப மாட்டேன் யோவ் நீ இத்தன முறை கெணத்துல இறங்கி இருக்க!...அப்போ தண்ணி எப்படி இருந்திருக்க முடியும்.......டவுட்டு!

    சண்முகம் வண்டிய உட்ரா!

    ReplyDelete
  25. அப்படியே எனக்கும் ஒரு ஐடியா குடுங்க

    ReplyDelete
  26. ///அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு.../////அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...///அப்ப கிணத்தின்ர நிலை

    ReplyDelete
  27. ஆஹா இப்படிலாம் வேற நடக்குதா?? படிக்க சுவராஸ்யமா இருந்துச்சு..

    ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியது,என்னிக்கு இருந்தாலும் உங்களுக்கு பூசை உண்டு,ஹா ஹா ஹி ஹி...

    ReplyDelete
  28. பாஸ் உங்க சேவை தொடர வாழ்த்துக்கள் .)))))

    ReplyDelete
  29. இனி ஆளாளுக்கு ஐடியா கேட்க போறாங்க உங்ககிட்ட,இனி நீங்க பிஸி மனோ ஆகிடுவீங்க...

    ReplyDelete
  30. என்ன நடக்குது இங்க...
    இவரு காதல் காவலனா..
    சூப்பரப்பூ?

    ReplyDelete
  31. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
    Next time adi than. . .//

    நீங்களே காட்டி குடுத்துருவீங்க போல....

    ReplyDelete
  32. //விக்கி உலகம் said...
    நான் நம்ப மாட்டேன் யோவ் நீ இத்தன முறை கெணத்துல இறங்கி இருக்க!...அப்போ தண்ணி எப்படி இருந்திருக்க முடியும்.......டவுட்டு!

    சண்முகம் வண்டிய உட்ரா!//

    யோவ் நான் நாள்தோறும் ரெண்டு தடவை குளிக்கிற ஆளுய்யா நம்புய்யா....

    ReplyDelete
  33. //jaisankar jaganathan said...
    அப்படியே எனக்கும் ஒரு ஐடியா குடுங்க//

    அப்பிடியே உங்களை பிடிச்சி தண்ணிக்குள்ளே தள்ளி விட்ருவேன் ஹே ஹே ஹே ஹே...

    எப்பிடி இருக்கீங்க ஜெய்..?? பேஸ்புக்'ல மீட் பண்ணியே ரொம்ப நாளாச்சே வாங்க வாங்க...

    ReplyDelete
  34. //கந்தசாமி. said...
    ///அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு.../////அவளுக்காக பத்து பதினஞ்சி முறை நான் மறுபடியும் மறுபடியும் கிணற்றில் குதித்து காண்பிக்க வேண்டியது ஆகிபோச்சு...///அப்ப கிணத்தின்ர நிலை///

    சரி சரி விடுங்கய்யா....

    ReplyDelete
  35. //S.Menaga said...
    ஆஹா இப்படிலாம் வேற நடக்குதா?? படிக்க சுவராஸ்யமா இருந்துச்சு..

    ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியது,என்னிக்கு இருந்தாலும் உங்களுக்கு பூசை உண்டு,ஹா ஹா ஹி ஹி...///


    உங்க கையில அம்புட்டாலே எதை எடுத்து எரிவீன்களோன்னு பயந்துட்டு இருக்கேன். இந்த நிலைமையில அவன் கையில அம்புட்டா சட்னி சாம்பார்தான் போங்க...

    ReplyDelete
  36. //கந்தசாமி. said...
    பாஸ் உங்க சேவை தொடர வாழ்த்துக்கள் .)))))//


    அமாமாமா, இனியும் அடி வாங்க சொல்றீங்களா.....

    ReplyDelete
  37. //S.Menaga said...
    இனி ஆளாளுக்கு ஐடியா கேட்க போறாங்க உங்ககிட்ட,இனி நீங்க பிஸி மனோ ஆகிடுவீங்க...//

    ஐடியா கேட்டு வாரவனை கிணத்துகுள்ளே பிடிச்சி தள்ளிருவேன்....

    ReplyDelete
  38. //வேடந்தாங்கல் - கருன் *! said...
    என்ன நடக்குது இங்க...
    இவரு காதல் காவலனா..
    சூப்பரப்பூ?//

    ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  39. பொது சேவைனா எனக்கும் ரொம்ப பிடிக்கும் .....................

    ReplyDelete
  40. >>ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள்,

    அடப்பாவி.. உன் முழு மேட்டர் சொல்லி இருந்தா .....ஹா ஹா ஏலேய் வேணாம்லே

    ReplyDelete
  41. அய்யா, ஷாஜகான் படத்தில வரும் விஜய் ன்னு நெனப்பா?
    வந்தா பிச்சுபுடுவேன் பிச்சி.,

    ReplyDelete
  42. //அஞ்சா சிங்கம் said...
    பொது சேவைனா எனக்கும் ரொம்ப பிடிக்கும் ........//

    நல்லா அடிவாங்கிருக்கீங்க போல....

    ReplyDelete
  43. //சி.பி.செந்தில்குமார் said...
    >>ஹி ஹி ஹி மேட்டரை நான் சொன்னதும் குஷி ஆகிவிட்டாள்,

    அடப்பாவி.. உன் முழு மேட்டர் சொல்லி இருந்தா .....ஹா ஹா ஏலேய் வேணாம்லே//

    எலேய் கொன்னியா விட்டா, நீயே போட்டுகுடுத்துருவியோ....

    ReplyDelete
  44. //கக்கு - மாணிக்கம் said...
    அய்யா, ஷாஜகான் படத்தில வரும் விஜய் ன்னு நெனப்பா?
    வந்தா பிச்சுபுடுவேன் பிச்சி.,///


    ஹா ஹா ஹா தயவு செஞ்சி [[ம்க்கும்]] விஜய் பேரை என்னோடு ஒப்பிட்டு என்னை நாறடிக்க வேண்டாம்[[ஆமா இப்போ ரொம்ப மனத்துகிட்டுதான் இருக்கு]]

    ReplyDelete
  45. நாஞ்சில் மனோவின் சேவை - நாட்டுக்கு (காதலர்களுக்கு) தேவை.

    ReplyDelete
  46. ஆமா உங்க கல்யாணத்திற்காக எத்தனை நாடகம் போட்டீர்கள். ஒரு கமெண்ட் போடறதுக்காக என்னோட மவுஸ் வீல் ஒரு கி.மீ சுற்றுகிறது. நான் ரொம்ப லேட்.

    ReplyDelete
  47. //தமிழ் உதயம் said...
    நாஞ்சில் மனோவின் சேவை - நாட்டுக்கு (காதலர்களுக்கு) தேவை.//

    அடபோங்கய்யா அடிவாங்க உடம்புல தெம்பில்லை...

    ReplyDelete
  48. //சாகம்பரி said...
    ஆமா உங்க கல்யாணத்திற்காக எத்தனை நாடகம் போட்டீர்கள். ஒரு கமெண்ட் போடறதுக்காக என்னோட மவுஸ் வீல் ஒரு கி.மீ சுற்றுகிறது. நான் ரொம்ப லேட்.//

    அதுக்கு ஐடியா தந்தது வேறொரு நண்பன். அது மிகவும் சுவாரஸ்யமா இருக்கும். இப்போ அதை பற்றி எழுதினா என் மச்சான்மார் அருவாளோட வந்துருவாயிங்க....

    ReplyDelete
  49. நல்ல அனுப பகிர்வு

    ReplyDelete
  50. காதல் காவியம் நண்பன் கோபம் நல்ல மசாலா

    ReplyDelete
  51. கத்தி படம் எல்லாம் போட்டு செம பில்டப்பு

    ReplyDelete
  52. சூப்பர் ஸ்டார்களின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..,

    ReplyDelete
  53. நண்பா கறுப்புக் கண்ணாடிக்குப்பின் இப்படியான கலகலப்பான விசயங்கள் இருக்கா ! நல்ல படங்கள் ஒரு டிக்கட் ரெடிபன்னுரன் மீண்டும் அந்த அண்ணனை  பார்ப்பதற்கு!

    ReplyDelete
  54. ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன்.


    .....ha,ha,ha,ha... you are a very interesting person.
    இந்த ட்ரிப்லேயும் கலக்கிட்டு வாங்க..... !!! எப்போ ஊருக்கு போறீங்க?

    ReplyDelete
  55. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    நல்ல அனுப பகிர்வு///

    நன்றி சதீஷ்....

    ReplyDelete
  56. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    காதல் காவியம் நண்பன் கோபம் நல்ல மசாலா//

    ஹா ஹா ஹா ஹா.....

    ReplyDelete
  57. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    கத்தி படம் எல்லாம் போட்டு செம பில்டப்பு//


    விடுங்கய்யா விடுங்கய்யா நாம பாக்காததா ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  58. //வீராங்கன் said...
    சூப்பர் ஸ்டார்களின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..,//

    ஐயய்யோ வந்ததும் வராததுமா ஐஸ் மலையையே தூக்கி தலையில வைக்கிறாரே அவ்வ்வ்வ்வ்வ்....

    வரவுக்கு நன்றி வீராங்கன்....

    ReplyDelete
  59. //Nesan said...
    நண்பா கறுப்புக் கண்ணாடிக்குப்பின் இப்படியான கலகலப்பான விசயங்கள் இருக்கா ! நல்ல படங்கள் ஒரு டிக்கட் ரெடிபன்னுரன் மீண்டும் அந்த அண்ணனை பார்ப்பதற்கு!//

    நான் வேண்டாம்ன்னு சொன்னாலும் அடிவாங்க வச்சிருவீன்களோ.....

    ReplyDelete
  60. //Chitra said...
    ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன்.


    .....ha,ha,ha,ha... you are a very interesting person.
    இந்த ட்ரிப்லேயும் கலக்கிட்டு வாங்க..... !!! எப்போ ஊருக்கு போறீங்க?//

    நன்றி சித்ரா....

    இங்கே பஹ்ரைன்'ல பிரச்சினை சால்வ் ஆகிட்டு இருப்பதால், ஃபாரினர்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க ஸோ பிசினஸ் ஆரம்பிச்சிடுச்சி. ஆக ஆகஸ்ட் போகலாம்னு இருக்கேன்....

    ReplyDelete
  61. //எப்பிடி இருக்கீங்க ஜெய்..?? பேஸ்புக்'ல மீட் பண்ணியே ரொம்ப நாளாச்சே வாங்க வாங்க...
    //

    எல்லாம் ஆணி தான் தல. இப்போ சரியாகிடுச்சு

    ReplyDelete
  62. எப்படி இவ்வளவு பொருத்தமாக நெட்டில் படங்களை சுடுகிறீர்கள்...
    திறமைசாலி தான் போங்கள்..

    ReplyDelete
  63. //ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். //

    நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.
    நாஞ்சில் மனோ காரியமும் அதுபோலத்தானோ?

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  64. நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே..//

    நீங்க தான் அந்த நண்பனுக்கே பிளேட்டாலை கீறினால் அவள் ஓக்கே சொல்லுவாள் என்று ஐடியா கொடுத்ததாக பேசிக்கிறாங்க உண்மையா.

    ReplyDelete
  65. எல்லாம் சரி
    கடைசியில் எதுக்கு அவ்வளவு பெரிய கத்தி
    பதிவு பிரமாதமாகத்தானே இருக்கு
    மதுரைக்காரங்க சரி
    அடுத்த ஊர்க்காரங்க பயந்துர மாட்டங்களா?
    சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  66. அண்ணே அட்ரெஸ் ப்ளீஸ் விரைவில் தொடர்புகொள்கிறேன்
    உங்கள் சேவை எங்கள் ஊருக்கு தேவை

    ReplyDelete
  67. நடத்து மக்கா இப்படித்யே பண்ணிட்டு இருந்தா முதுகில் டின் கட்டிடுவாங்க

    ReplyDelete
  68. காதல் காவலன் மனோ-
    கவனிக்கவும் காதலர்கள்!

    ReplyDelete
  69. காதலுக்கு காவல் இலவசம்,
    கான்டாக்ட்: மனோ!
    செல்: , , , , , , , , ,
    மெயில்: . . . . . . . .

    ReplyDelete
  70. காதலை வாழ வைத்த தியாகி மனோ வாழ்க!

    ReplyDelete
  71. நம்ம ஊர் படங்களை எல்லாம் மிஞ்சிவிடும் போல இருக்கிறதே....

    ReplyDelete
  72. எனக்குதான் கடைசி பஜ்ஜி....

    ReplyDelete
  73. //நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...//

    எங்களுக்கு சொல்லிதான் தெரியனுமா? ஒசாமா எழுதுன டைரிய ஒழுங்கா அமெரிக்கா கிட்ட குடுத்துருங்க.

    ReplyDelete
  74. நாடோடிகள் படம் ரெண்டாம் பாகம் எடுக்கறாங்களாம். சசி உங்கள தேடிக்கிட்டு இருக்காரு.

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. //aisankar jaganathan said...
    //எப்பிடி இருக்கீங்க ஜெய்..?? பேஸ்புக்'ல மீட் பண்ணியே ரொம்ப நாளாச்சே வாங்க வாங்க...
    //

    எல்லாம் ஆணி தான் தல. இப்போ சரியாகிடுச்சு///


    ஹா ஹா ஹா ஹா இனி அதிரடி ஆரம்பம்....

    ReplyDelete
  77. //மனோவி said...
    எப்படி இவ்வளவு பொருத்தமாக நெட்டில் படங்களை சுடுகிறீர்கள்...
    திறமைசாலி தான் போங்கள்..//

    நன்றி மனோவி...

    ReplyDelete
  78. //May 6, 2011 11:21 AM
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஏன்னா நான் ஊருக்கு போகும் போதெல்லாம் [[இப்பவும்]] எப்பவும் ஒரு பிரச்சினை நடந்துருக்கும், இல்லைனா நடக்கும் [[அதுவும் நல்ல காரியங்கள்தான்]] நாந்தான் அதின் தலைமை பொறுப்பில் இருப்பேன். //

    நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.
    நாஞ்சில் மனோ காரியமும் அதுபோலத்தானோ?

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk///


    நன்றி அய்யா.....

    ReplyDelete
  79. //May 6, 2011 11:27 AM
    நிரூபன் said...
    நண்பன் பிளேடால் கைகளில் கீறி கொண்ட காயங்களை பார்த்து நொறுங்கி போனேன். யோசிக்க ஆரம்பித்தேன் ஹி ஹி ஹி ஹி நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே..//

    நீங்க தான் அந்த நண்பனுக்கே பிளேட்டாலை கீறினால் அவள் ஓக்கே சொல்லுவாள் என்று ஐடியா கொடுத்ததாக பேசிக்கிறாங்க உண்மையா.//

    என்னய்யா இது..? அவள் அண்ணன் ஏற்கெனவே அருவாளோடு சுத்திட்டு இருக்கான், அதுல இது வேறயா...

    ReplyDelete
  80. //Ramani said...
    எல்லாம் சரி
    கடைசியில் எதுக்கு அவ்வளவு பெரிய கத்தி
    பதிவு பிரமாதமாகத்தானே இருக்கு
    மதுரைக்காரங்க சரி
    அடுத்த ஊர்க்காரங்க பயந்துர மாட்டங்களா?
    சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    நம்மாளுங்க சூராதி சூரங்க, அருவாளையே பிஸ்கோத்து மாதிரி டீல் பண்ராயிங்க குரு ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  81. //siva said...
    அண்ணே அட்ரெஸ் ப்ளீஸ் விரைவில் தொடர்புகொள்கிறேன்
    உங்கள் சேவை எங்கள் ஊருக்கு தேவை///

    மனோ இப்போ ஆஃப் லைன்.....

    ReplyDelete
  82. //எல் கே said...
    நடத்து மக்கா இப்படித்யே பண்ணிட்டு இருந்தா முதுகில் டின் கட்டிடுவாங்க//

    நீங்களும் என் கூட வாங்க, சேர்ந்தே டின் வாங்குவோம்....

    ReplyDelete
  83. //FOOD said...
    காதல் காவலன் மனோ-
    கவனிக்கவும் காதலர்கள்!

    May 6, 2011 7:04 PM
    FOOD said...
    காதலுக்கு காவல் இலவசம்,
    கான்டாக்ட்: மனோ!
    செல்: , , , , , , , , ,
    மெயில்: . . . . . . . .///

    எனக்கு அடி வாங்கி கொடுத்தே தீரனும்னு சுத்துற கூட்டத்தில் ஆபீசரும் ஒருவர். ஆபீசர் ஒழிக...

    ReplyDelete
  84. //middleclassmadhavi said...
    காதலை வாழ வைத்த தியாகி மனோ வாழ்க!//

    மெதுவா சொல்லுங்க, அந்த அண்ணன் காதுல கேட்டுற போகுது.....

    ReplyDelete
  85. //May 6, 2011 8:10 PM
    NKS.ஹாஜா மைதீன் said...
    நம்ம ஊர் படங்களை எல்லாம் மிஞ்சிவிடும் போல இருக்கிறதே....

    May 6, 2011 11:19 PM
    NKS.ஹாஜா மைதீன் said...
    எனக்குதான் கடைசி பஜ்ஜி....///


    நீங்க படம் தயாரிங்கய்யா நான் சூப்பர் சூப்பரா அனுபவ கதைகள் வச்சிருக்கேன் ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  86. //May 6, 2011 11:19 PM
    ! சிவகுமார் ! said...
    //நம்ம மண்டைதான் கிரிமினல் ஆச்சே...//

    எங்களுக்கு சொல்லிதான் தெரியனுமா? ஒசாமா எழுதுன டைரிய ஒழுங்கா அமெரிக்கா கிட்ட குடுத்துருங்க///


    அம்மாடியோ இதென்ன புது கதையா இருக்கு...

    ReplyDelete
  87. //y 7, 2011 1:01 AM
    ! சிவகுமார் ! said...
    நாடோடிகள் படம் ரெண்டாம் பாகம் எடுக்கறாங்களாம். சசி உங்கள தேடிக்கிட்டு இருக்காரு.///

    என் செவிலு பிஞ்சிரும், நான் இந்த விளையாட்டுக்கு வரலை.....

    ReplyDelete
  88. மனோ அண்ணன் ராக்ஸ் :-))

    ReplyDelete
  89. //கோமாளி செல்வா said...
    மனோ அண்ணன் ராக்ஸ் :-))///

    நீ தம்பி ராக்ஸ்.....

    ReplyDelete
  90. நீங்க இம்புட்டு நல்லவரா?......

    ReplyDelete
  91. நடிகர் விஜய்க்கு அடுத்து காதலர்களை சேர்த்து வைக்க புறப்பட்ட சிங்கம்..(இது சூர்யா படம்னு மறந்துடுச்சு) மன்னிச்சிக்குங்க காவலன் நீங்க தான்! :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  92. //M.G.ரவிக்குமார்™..., said...
    நீங்க இம்புட்டு நல்லவரா?......//

    என்னய்யா ரவி மீட் பண்றேன்னு சொல்லிட்டு, ஆளையே காணோமே....?

    ReplyDelete
  93. //Lali said...
    நடிகர் விஜய்க்கு அடுத்து காதலர்களை சேர்த்து வைக்க புறப்பட்ட சிங்கம்..(இது சூர்யா படம்னு மறந்துடுச்சு) மன்னிச்சிக்குங்க காவலன் நீங்க தான்! :)///

    ஐயய்யோ விஜய் கூட என்னையும் கம்பேர் பண்ணி கொல்றாயிங்களே அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  94. ஃஃஃஃபெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் ஃஃஃஃ

    ஏன் அவனுக்கு வேற தங்கச்சி இருக்கா ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  95. நல்ல சேவை தானே. அண்ணனின் கையை குலுக்கிட்டு வந்திடுங்கோ அடுத்த தடவை ஹிஹி....

    ReplyDelete
  96. //ம.தி.சுதா♔ said...
    ஃஃஃஃபெண்ணின் அண்ணன் இப்போதும் எனக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள் ஃஃஃஃ

    ஏன் அவனுக்கு வேற தங்கச்சி இருக்கா ?//

    அடபாவி....

    ReplyDelete
  97. //சி.பி.செந்தில்குமார் said...
    mano.. hi hi//

    உள்குத்து இருக்கு....

    ReplyDelete
  98. //vanathy said...
    நல்ல சேவை தானே. அண்ணனின் கையை குலுக்கிட்டு வந்திடுங்கோ அடுத்த தடவை ஹிஹி...//

    அவன் என்னை மொத்தமா குலுக்க காத்திருக்கான்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!