Thursday, October 6, 2011

நடு இரவில் பதிவரை பயமுறுத்திய மோகினி பிசாசு....!!!!


மும்பை ஏர்போர்டில் பணி புரிந்த சமயம். எங்கள் ரூமில் இருந்த நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் யாராவது ஊரில் இருந்து வந்தால் அவர்களை அரவணைத்து வேலையும் வாங்கி கொடுத்து ஆதரிப்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான் இது. அப்படி வந்த நண்பர்கள் சிலருக்கு ஏர்போர்டில் வேலை வாங்கி கொடுத்தோம். ஏர்போர்டில் இருந்து எங்கள் ரூமிற்கு நடந்து வர போக இருபது நிமிஷம் ஆகும். 


அப்படி போயி வரும் நண்பர்கள் அடிக்கடி குளிர் காய்ச்சலில் படுக்க [சீதோஷ்ணம்] தொடங்கினர். நாங்களும் ஆஸ்பத்திரி கொண்டு போயி குணமாக்குவது வழக்கம். அந்த நேரம் பக்கத்து அம்மன் கோவில் பூசாரி  ஒருவர் சொன்னார்.... இந்த காய்ச்சல் சாதாரணமானது அல்ல அவர்களை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார். 


ஒரு நண்பனை ஒரு நாள் அவரிடம் அழைத்து சென்றோம். அவரும் அருள் [ங்கே] வந்து மங்காத்தா ஆடினார் ஆடி விபூதியை அள்ளி வீசினார். பின்பு சொன்னார் டாய் உன்னை பிடித்திருப்பது மோகினி பிசாசு என்று. எப்பிடி சாமின்னு கேட்டோம். அவர் சொன்னார் இவன் வேலைக்கு போயிட்டு நேத்து ராத்திரி வீடு திரும்பும் போது வரும் வழியில் இருக்கே ஒரு பெரிய ஆலமரம் அதுல இருந்த மோகினி இவனை பிடிச்சிருக்காள் என்றார். காய்ச்சல் நண்பன் இன்னும் கிடு கிடு என நடுங்க தொடங்கினான்....


எல்லா நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் ஒரு உள் வட்டம் உண்டல்லவா..? அப்பிடி எனக்கு மாரி என ஒரு நண்பன் உண்டு அவனை நாங்கள் டுவென்டி'ன்னு கூப்பிடுவோம். அவனுக்கும் எனக்கும் ஆர்வம் பொத்துகிடிச்சி மோகினியை பார்க்க [யப்பா] அவன் கங்கை கொண்டான் பக்கம் இத்திகுளத்தை சேர்ந்தவன் . நிறைய பேய் கதை[பொய்] சொல்லுவான் அவனும் நானும் திட்டம் தீட்டினோம் மக்கா இன்னைக்கு நாம மோகினியை பார்க்க போறோம்னு. 



அவன் சொன்னான் மோகினி சரியாக ராத்திரி பனிரென்ன்டு மணிக்குதான் வரும் என்றான். சரியாக 11:30 மணிக்கு கிளம்புகையில் நண்பன் சொன்னான் மனோ இப்பிடி வெறுங்கையோட போனா மோகினி நம்மளை அடிசிரும் என சொல்லிட்டு என் கையில ஒரு அருவாளை தூக்கி கொடுத்தான் அவன் ஒரு கத்தியை எடுத்து கொண்டான். என்ன அருவா கத்தின்னு கேக்குறீங்களா...?மும்பையில அப்போ  இந்து முஸ்லிம் சண்டை நடந்துட்டு இருந்த நேரமாகையால் பாதுகாப்புக்கு அது எங்களுக்கு தேவையாக இருந்தது [இப்போ அதெல்லாம் இல்லை] கிளம்பியாச்சு மோகினியை பார்க்க, பாழடைஞ்ச பங்களாவும் அருகில் உள்ள ஆலமரத்தையும் நோக்கி. . . .


நாங்கள் போயி அருகில் உள்ள பாழ் அடைஞ்ச பங்களா அருகில் மறைவாக ஆலமரத்தை காணும் வகையில் படுத்து கொண்டோம் அருவாளை அழுத்தி பிடித்துக் கொண்டே. நேரம் மெதுவாக, பயமாக கரைய ஆரம்பித்தது. மணி 12 நடு நிசி ஒரே ஊளைசத்தம் ஆந்தை, கூவை, வவ்வால் எல்லாம் கிடந்து உறுமிக்கிட்டே இருக்கு நாங்கள் மூச்சை கூட மிக மெதுவா விட்டவாறே காத்திருந்தோம்.



மணி 12:30 மோகினி சேச்சியை காணவில்லை, மணி 1:00 காணவில்லை. நண்பன் மெதுவாக சொன்னான். மோகினி நிர்வாணமாதான் சுத்தும் எனவே நாமும் நிர்வாணமாக ஆலமரத்தை சுத்தினால் நாமும் பேய்தான் என எண்ணிக்கொண்டு மோகினி வெளியே வரும் வா என்றான். 



ஆத்தீ நான் மாட்டேன் என அலற [மெதுவா] நான் மட்டும் போறேன் நீ இங்கேயே இருந்து பாரு என சொல்லிவிட்டு உடைகளை களைந்து என்னிடம் [மொத்த நிர்வாணம்] கொடுத்து விட்டு கத்தியை மட்டும் கையில் வைத்து கொண்டு போனான். எனக்கு திகில், அவன் மெதுவாக ஆலமரத்தை சுத்த ஆரம்பித்தான்.


எனக்கு இப்போ அவன் மனுஷனா பேயான்னு சந்தேகம் வந்து நடுங்க ஆரம்பிச்சிட்டேன். சத்தம் போட்டு கூப்பிடவும் முடியாது, மோகினியையும் காணலை மண்ணாங்கட்டியும் காணலை ஆனா நண்பன் பேயா தெரிய ஆரம்பிச்சிட்டான் ஏன்னா  பேய் வேஷம் மாறியும் வரும்னு பெரியவங்க[நாசமா போவ] சொல்லியிருக்காங்க.


எனக்கு இவன் மேலேயே சந்தேகம் வலுக்க அருவாளை பின்னாடி  இருந்து உருவினேன் வலது கையில் இறுக்கமாக பிடித்து கொண்டேன். அவன் அசராமல் நடந்து கொண்டிருந்தான். பிறகு அவனே சத்தமாக சொன்னான் மனோ மோகினியும் இல்லை ஒரு "......." இல்லைன்னு சொல்லிட்டு என்ன கூப்பிட்டான் எலேய் நீயும் வான்னு, 


எனக்கோ பயம் பயபுள்ள பக்கத்துல வந்து வித்யாசமா எதும்  சமிக்சை தெரிஞ்சா அருவாளை வீச ரெடியானேன். நானும் தைரியத்தை வரவச்சி [கிடு கிடு] அவனை கூப்பிட்டேன் நீ இங்கே வான்னு, வந்தான் அருவா பிடி இறுகியது, வந்தவன் கத்திய கீழே போட்டுட்டு உடைகளை அணிந்தான் நான் ரெடியா....அருவாளோடு ஒதுங்கி நின்றேன்.

படத்தின் இடது பக்கம்தான் அந்தகுளம், புல் மண்டி கிடக்கிறது. இப்போது அந்த இடம் பெரிய கார்பார்க்காக மாறியுள்ளது. நாங்கள் திருடிய தென்னைமரங்களும் அதில் இருக்கிறது.

ஆக்கங்கெட்ட கூவ ஒன்னையும் காணலைன்னு சொன்னான். சொல்லிட்டு கிளம்ப நான் ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னால் போனேன். வெளிச்சத்துக்கு வந்த பின்தான் பயம் போயி அருவா பின்னுக்கு போனது. சரி வந்ததே வந்துட்டோம் த லீலா [THE HOTEL LEELA] ஹோட்டல்ல[ஃபைவ் ஸ்டார்] இளநி களவாண்டு குடிப்போம்னு கம்பி எம்பி சாடி செவ்வெளனி ஒரு குலைய வெட்டி, என்னது யாரு ஹோட்டல் செக்கூர்ட்டியா...? நம்ம கையில சீவலப்பேரி அயிட்டம்லா இருக்கு பக்கத்துல வருவானாக்கும்.


பக்கத்துல ஒரு குளம் உண்டு [இப்போ அந்த இடம் பெரிய கார்பார்க்கிங்] அங்கே போயி இளநிய வெட்டி குடிச்சுட்டு மோகினி கதைய சொல்லி சிரிச்சி அவனை பேயாக நான் நினச்ச கதையும் பேசி சிரி சிரின்னு சிரிக்கும் போது சொன்னான். இனி என் வாழ்கையில உன்ன மாதிரி ஒருத்தன்கிட்டே அருவாளை கொடுக்க மாட்டேன்னு சபதம் செய்தான் [ஹா ஹா ஹா] அப்பிடியே ரூம் வந்து படுத்து விட்டோம்.



 மறுநாள் பெரும் பரபரப்பு.....எங்க ரூமில், என்னாச்சுடான்னு  எழும்பினேன். மனோ நம்ம காளியப்பனுக்கு காலையிலே குளிர் காய்ச்சல், அதான் பூசாரிகிட்டே கூட்டிட்டு போகணும் நீயும் வான்னான். சரின்னுட்டு நம்ம டுவென்டி'யையும் எழுப்பிட்டு கூட போனோம். காளியப்பன் குளிர் காய்ச்சல்'ல நடுங்கிட்டு இருந்தான்.

படத்தின் இடது பக்கம்தான் எங்கள் ஏரியா, இப்போ எல்லாம் பில்டிங்காக மாறியாச்சு.

 பூசாரி வீட்டு சாமி படம் முன்பு இவனை உக்காறவச்சி அவர் சாமி ஆடினார்  ஆக்ரோஷமாக. விபூதியை வீசினார் பின்பு கேட்டார் அவனிடம் நேற்று ராத்திரி எங்கேயும் போனியான்னு. காளியப்பன் சொன்னான் ஆமா சாமி நான் நேற்று பாத்ரூம் போக குளத்து பக்கம் போனேன் அங்கே இருட்டுல ரெண்டு பேயிங்க உக்காந்து என்னத்தையோ வெட்டி வெட்டி தின்னுட்டு இருந்துச்சி அதை பாத்து நான் பயந்துட்டேன் சாமீன்னு கதருனான்.


 நம்ம நண்பன் டுவென்டி என் கையை அழுத்தினான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் சிரித்துகொண்டோம். "அந்த பேயே நாங்கதானே" அங்கே சொன்னால் களவாணித்தனம் [இளநி] வெளியே வந்துருமே...வெளியே வந்து நானும் டுவெண்டியும் சிரிச்ச சிரிப்பு இருக்கே......அட ஆக்கங்கெட்ட கூவைகளா.................

டிஸ்கி : இது எனது பதிவில் இருந்து மீள் பதிவு.

"மனோ"தத்துவம் : உரியவருக்கு நன்றி சொல்வதற்கு காசு பணம் கொடுக்க தேவையில்லை, எனவே தாராளமாக நன்றியை சொல்லி வாழ்த்துவோம்.




76 comments:

  1. நல்ல பேய் கதை ஹா ஹா ஹா

    நல்ல வேளை பயந்து போய் நண்பனை வெட்டலை,ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. ஹி ..ஹி...நல்ல பேய் கதை !!!

    ReplyDelete
  3. இன்னிக்கு நான் முதல் ஆளா

    ReplyDelete
  4. M.R said...
    நல்ல பேய் கதை ஹா ஹா ஹா

    நல்ல வேளை பயந்து போய் நண்பனை வெட்டலை,ஹா ஹா ஹா//

    பாவம் தப்பிச்சிட்டான்...

    ReplyDelete
  5. NAAI-NAKKS said...
    ஹி ..ஹி...நல்ல பேய் கதை !!!//

    ஹி ஹி அண்ணே...

    ReplyDelete
  6. M.R said...
    இன்னிக்கு நான் முதல் ஆளா//

    ஆமாங்கோ...!

    ReplyDelete
  7. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Ha . . Ha . . Sema comedy boss//

    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  8. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Final thought super//

    நன்றி நன்றி நன்றி....

    ReplyDelete
  9. நல்ல லூட்டி தான் போங்க!!!!!!!!!!!!!

    ReplyDelete
  10. RAMVI said... 21 22
    நல்ல லூட்டி தான் போங்க!!!!!!!!!!!!!//

    ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  11. உங்க பேய் கதை முனி 3வது பாகம் பார்த்த மாதிரி இருந்துச்சு...

    ReplyDelete
  12. இந்த பேய் கதை நல்லா இருக்கு! :)

    ReplyDelete
  13. பேய் கதை சூப்பர் பாஸ்

    அதிலும் முடிவு சூப்பர்

    ReplyDelete
  14. ஹஹஹா காளியப்பன் பிளைச்சுட்டாரா ))))

    ReplyDelete
  15. மனோ இப்பிடி வெறுங்கையோட போனா மோகினி நம்மளை அடிசிரும் என சொல்லிட்டு என் கையில ஒரு அருவாளை தூக்கி கொடுத்தான்///

    makkaa அருவா அப்பவே தூக்கியாச்சா?

    ReplyDelete
  16. மக்கா பேய் கத சூப்பரு... எங்க போனாலும் மனோ கூட அருவாளும் போகுமா?

    ReplyDelete
  17. S.Menaga said... 25 26
    உங்க பேய் கதை முனி 3வது பாகம் பார்த்த மாதிரி இருந்துச்சு...//

    பேசாம சினிமாவா எடுத்துறலாமோ...

    ReplyDelete
  18. வெங்கட் நாகராஜ் said...
    இந்த பேய் கதை நல்லா இருக்கு! :)//

    கதை இல்லைய்யா உண்மை சம்பவம்..

    ReplyDelete
  19. வைரை சதிஷ் said...
    பேய் கதை சூப்பர் பாஸ்

    அதிலும் முடிவு சூப்பர்//

    ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  20. கந்தசாமி. said...
    ஹஹஹா காளியப்பன் பிளைச்சுட்டாரா ))))//

    கொஞ்சநாள் கழிச்சி மேட்டர் லீக்காகி ஒரே சிரிப்பு....

    ReplyDelete
  21. பாருங்கப்பா ஒரு பேயே பேய் கதை சொல்லுது ஹிஹி!

    ReplyDelete
  22. தமிழ்வாசி - Prakash said...
    மனோ இப்பிடி வெறுங்கையோட போனா மோகினி நம்மளை அடிசிரும் என சொல்லிட்டு என் கையில ஒரு அருவாளை தூக்கி கொடுத்தான்///

    makkaa அருவா அப்பவே தூக்கியாச்சா?//

    என்ன செய்ய நம்ம பொழப்பு அப்பிடி...

    ReplyDelete
  23. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா பேய் கத சூப்பரு... எங்க போனாலும் மனோ கூட அருவாளும் போகுமா?//

    ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  24. விக்கியுலகம் said...
    பாருங்கப்பா ஒரு பேயே பேய் கதை சொல்லுது ஹிஹி!//

    நாமெல்லாம் ஒரே குடும்பம்னு சொல்ற ம்ம்ம் சரிடே மக்கா ஹி ஹி...

    ReplyDelete
  25. // பூசாரி வீட்டு சாமி படம் முன்பு இவனை உக்காறவச்சி அவர் சாமி ஆடினார் ஆக்ரோஷமாக. விபூதியை வீசினார் பின்பு கேட்டார் அவனிடம் நேற்று ராத்திரி எங்கேயும் போனியான்னு. காளியப்பன் சொன்னான் ஆமா சாமி நான் நேற்று பாத்ரூம் போக குளத்து பக்கம் போனேன் அங்கே இருட்டுல ரெண்டு பேயிங்க உக்காந்து என்னத்தையோ வெட்டி வெட்டி தின்னுட்டு இருந்துச்சி அதை பாத்து நான் பயந்துட்டேன் சாமீன்னு கதருனான் //

    அருமை மனோ சார்!

    ReplyDelete
  26. ஓஹோ இப்பிடிஎல்லாமும் நடந்துருக்கா ஹய்யோ ஹய்யோ...!!

    ReplyDelete
  27. அந்த அருவாளை எதுக்குய்யா அப்பிடி சாச்சி வச்சிருக்கீங்க..??

    ReplyDelete
  28. குடிமகன் said...
    // பூசாரி வீட்டு சாமி படம் முன்பு இவனை உக்காறவச்சி அவர் சாமி ஆடினார் ஆக்ரோஷமாக. விபூதியை வீசினார் பின்பு கேட்டார் அவனிடம் நேற்று ராத்திரி எங்கேயும் போனியான்னு. காளியப்பன் சொன்னான் ஆமா சாமி நான் நேற்று பாத்ரூம் போக குளத்து பக்கம் போனேன் அங்கே இருட்டுல ரெண்டு பேயிங்க உக்காந்து என்னத்தையோ வெட்டி வெட்டி தின்னுட்டு இருந்துச்சி அதை பாத்து நான் பயந்துட்டேன் சாமீன்னு கதருனான் //

    அருமை மனோ சார்!//

    ஹா ஹா ஹா என்னாத்தை சொல்ல போங்க...

    ReplyDelete
  29. kumarapuram anil said...
    ஓஹோ இப்பிடிஎல்லாமும் நடந்துருக்கா ஹய்யோ ஹய்யோ...!!//

    ஒருகாலத்துல இப்பிடியும் இருந்துருக்கோம் அண்ணே...

    ReplyDelete
  30. kumarapuram anil said...
    அந்த அருவாளை எதுக்குய்யா அப்பிடி சாச்சி வச்சிருக்கீங்க..??//

    சிபி மாதிரி நாதாரிங்களை பயங்காட்டுரதுக்கு அண்ணே...

    ReplyDelete
  31. பேய்னு நினச்சி நண்பனை வெட்டி இருந்தா என்னாகிருக்கும் தம்பி இப்போ கம்பி எண்ணிட்டு இருந்துருப்பார் இல்லையா, நல்லவேளை தப்பிச்சார்..!

    ReplyDelete
  32. எப்பிடியோ நமக்கும் கொஞ்சம் சிரிச்சி ரிலாக்ஸ் ஆனாப்ல இருக்குய்யா..

    ReplyDelete
  33. இதுவே அசல் பேய்க் கதை!ஹா,ஹா!

    ReplyDelete
  34. துரைராஜ் said...
    பேய்னு நினச்சி நண்பனை வெட்டி இருந்தா என்னாகிருக்கும் தம்பி இப்போ கம்பி எண்ணிட்டு இருந்துருப்பார் இல்லையா, நல்லவேளை தப்பிச்சார்..!//

    ஹி ஹி என்னாத்தை சொல்ல...

    ReplyDelete
  35. துரைராஜ் said...
    எப்பிடியோ நமக்கும் கொஞ்சம் சிரிச்சி ரிலாக்ஸ் ஆனாப்ல இருக்குய்யா..//

    மிக்க நன்றி...

    ReplyDelete
  36. சென்னை பித்தன் said...
    இதுவே அசல் பேய்க் கதை!ஹா,ஹா!//

    ஹா ஹா ஹா ஹா தல.....

    ReplyDelete
  37. ஆஹா!இனிமே இருட்டனதுக்கப்புரம் யாரையாவது பாக்கப்போனா தகவல் சொல்லிட்டுப்போங்க.
    பாவம் அவங்களுக்கும் குளிர் காய்ச்சல் வந்துடப்போகுது!ஹா ஹா

    திர்ல்லான ச்டோரிங்கோ!!!

    ReplyDelete
  38. கோகுல் said...
    ஆஹா!இனிமே இருட்டனதுக்கப்புரம் யாரையாவது பாக்கப்போனா தகவல் சொல்லிட்டுப்போங்க.
    பாவம் அவங்களுக்கும் குளிர் காய்ச்சல் வந்துடப்போகுது!ஹா ஹா

    திர்ல்லான ச்டோரிங்கோ!!!//

    ஹா ஹா ஹா ஹா ஆமா ஆமாம்...

    ReplyDelete
  39. தம்பி லேப்டாப் மனோ, மீள் பதிவுன்னு போட்டா போதாதா? என் பதிவில் இருந்து மீள் பதிவுன்னு போடனுமா? ஹி ஹி

    ReplyDelete
  40. படங்களுடன் பேய்க்கதை சூப்பர்
    ரசித்துப் படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 10

    ReplyDelete
  41. என்னது மீள் பேயா?

    அட! மீள் பதிவா! அதானே பாத்தேன்.

    ReplyDelete
  42. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி லேப்டாப் மனோ, மீள் பதிவுன்னு போட்டா போதாதா? என் பதிவில் இருந்து மீள் பதிவுன்னு போடனுமா? ஹி ஹி//

    ஹி ஹி தமிழ்மணம் பீவர் ஹி ஹி....

    ReplyDelete
  43. Ramani said...
    படங்களுடன் பேய்க்கதை சூப்பர்
    ரசித்துப் படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 10//

    ஹா ஹா ஹா ஹா நன்றி குரு...

    ReplyDelete
  44. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஹி ..ஹி..

    October 6, 2011 4:27 AM


    நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஹி ..ஹி..//

    ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  45. சத்ரியன் said...
    என்னது மீள் பேயா?

    அட! மீள் பதிவா! அதானே பாத்தேன்.//

    மார்'கெட் சரியில்லை....ஹி ஹி...

    ReplyDelete
  46. அண்ணே அன்னிக்கு நீங்க புல் மேக் அப் பில போனதால தான் உங்களை பேய்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு

    ReplyDelete
  47. where is டுவென்டி?

    ReplyDelete
  48. where is டுவென்டி?

    ReplyDelete
  49. அருவாளுடன் நிற்பது அண்ணன் நீங்களா ?

    ReplyDelete
  50. suryajeeva said...
    அண்ணே அன்னிக்கு நீங்க புல் மேக் அப் பில போனதால தான் உங்களை பேய்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு//

    ஹே ஹே ஹே ஹே அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  51. என் ராஜபாட்டை"- ராஜா said...
    where is டுவென்டி?

    October 6, 2011 5:48 AM


    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    where is டுவென்டி?//

    டுவென்டி என்பது ஒரு ஆள்தாம்ய்யா, நீங்க ரெண்டு தடவை கேக்குறீங்க...

    ReplyDelete
  52. என் ராஜபாட்டை"- ராஜா said...
    அருவாளுடன் நிற்பது அண்ணன் நீங்களா ?//

    ஹி ஹி ஹி ஹி உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லையாக்கும்...??

    ReplyDelete
  53. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இன்று என் வலையில் ..//

    உங்க வலையில் என்னல்லாம் கபடி விளையாடனுமோ விளையாடிட்டு எப்பமோ வந்துட்டேன் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  54. நல்லவேளை நண்பனை பாக்குறப்போ பேயாட்டம் தெரிந்தபோது
    நீங்க எடுத்த கத்திக்கு வேலை கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள் .
    இல்லையின்னா நினைத்துக்கூட பார்க்க முடியாது .மனோ சார்
    அதெப்புடி நீங்க பேய் பார்க்கப்போய் இன்னொரு ஆளுக்கு பேய்
    பிடித்தமாதிரி ஆகிடிச்சா?........ அருமை!.....வித்தியாசமான பகிர்வு
    மிக்க நன்றி சார் பகிர்வுக்கு ..................

    ReplyDelete
  55. எல்லா ஓட்டும் போட்டாச்சு ......வாழ்த்துக்கள் சார் .

    ReplyDelete
  56. மீள் பதிவா இருந்தாலும் நல்லா இருக்குலே....

    ReplyDelete
  57. ஆமா மோகினி இப்ப என்னண்ணே பண்ணிட்டு இருக்கு.....?

    ReplyDelete
  58. FOOD said...
    Nice post.//

    ஆபீசர் இம்புட்டு பிஸியிலயும் கமென்ட் போட்டுருக்கர்....!!! நன்றி ஆபீசர்...

    ReplyDelete
  59. அம்பாளடியாள் said...
    நல்லவேளை நண்பனை பாக்குறப்போ பேயாட்டம் தெரிந்தபோது
    நீங்க எடுத்த கத்திக்கு வேலை கொடுக்காமல் விட்டுவிட்டீர்கள் .
    இல்லையின்னா நினைத்துக்கூட பார்க்க முடியாது .மனோ சார்
    அதெப்புடி நீங்க பேய் பார்க்கப்போய் இன்னொரு ஆளுக்கு பேய்
    பிடித்தமாதிரி ஆகிடிச்சா?........ அருமை!.....வித்தியாசமான பகிர்வு
    மிக்க நன்றி சார் பகிர்வுக்கு ................//

    பேய் பார்க்க போறவனுக்கு பேய் பிடிக்கலை, எங்களை பார்த்தவனுக்கு பேய் பிடிச்சிருக்கு, ம்ஹும் நாங்க என்ன அம்புட்டு கொடூரமாவா இருந்தோம் அவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  60. அம்பாளடியாள் said...
    எல்லா ஓட்டும் போட்டாச்சு ......வாழ்த்துக்கள் சார் .//

    மிகவும் நன்றி நன்றி....

    ReplyDelete
  61. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆமா மோகினி இப்ப என்னண்ணே பண்ணிட்டு இருக்கு.....?//

    ஹே ஹே ஹே ஹே டுவென்டி பாளையங்கோட்டை ஜெயில்ல களி தின்னுட்டு இருக்கானாம் இது இப்போதைய தகவல், மோகினி இருந்த இடத்துல [[ஆலமரம்]] பெரிய ஏஜன்சி கம்பெனி வந்துருக்கு ஹி ஹி மோகினி என்கேன்னுதான் பிரியலை [[தெரியலை]] ஹி ஹி....

    ReplyDelete
  62. இராஜராஜேஸ்வரி said...
    "மனோ"தத்துவம் : உரியவருக்கு நன்றி சொல்வதற்கு காசு பணம் கொடுக்க தேவையில்லை, எனவே தாராளமாக நன்றியை சொல்லி வாழ்த்துவோம்.

    வாழ்த்துக்கள்.//

    ஹா ஹா ஹா நன்றி சொல்றதுக்கு காசா பணமா இல்லையா..?? நன்றிங்க மேடம்...

    ReplyDelete
  63. //////// MANO நாஞ்சில் மனோ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆமா மோகினி இப்ப என்னண்ணே பண்ணிட்டு இருக்கு.....?//

    ஹே ஹே ஹே ஹே டுவென்டி பாளையங்கோட்டை ஜெயில்ல களி தின்னுட்டு இருக்கானாம் இது இப்போதைய தகவல், மோகினி இருந்த இடத்துல [[ஆலமரம்]] பெரிய ஏஜன்சி கம்பெனி வந்துருக்கு ஹி ஹி மோகினி என்கேன்னுதான் பிரியலை [[தெரியலை]] ஹி ஹி..../////////

    யோவ் நான் கேட்ட மோகிணி வேற.....

    ReplyDelete
  64. பன்னிக்குட்டி ராம்சாமி said... 141 142
    //////// MANO நாஞ்சில் மனோ said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஆமா மோகினி இப்ப என்னண்ணே பண்ணிட்டு இருக்கு.....?//

    ஹே ஹே ஹே ஹே டுவென்டி பாளையங்கோட்டை ஜெயில்ல களி தின்னுட்டு இருக்கானாம் இது இப்போதைய தகவல், மோகினி இருந்த இடத்துல [[ஆலமரம்]] பெரிய ஏஜன்சி கம்பெனி வந்துருக்கு ஹி ஹி மோகினி என்கேன்னுதான் பிரியலை [[தெரியலை]] ஹி ஹி..../////////

    யோவ் நான் கேட்ட மோகிணி வேற.....//

    யாரு...? நீங்க சேச்சியை மட்டும் கேக்கலைன்னு எனக்கு நல்லா புரியுது ஹி ஹி...

    ReplyDelete
  65. இனிய இரவு வணக்கம் அண்ணாச்சி,

    உங்களுக்கேயுரிய நடையில் காமெடி கலந்து சுவையாகப் பேய் விரட்டப் போயி இளநீர் குடித்த கதையினை எழுதியிருக்கிறீங்க.

    ரசித்தேன்.

    ReplyDelete
  66. வணக்கம் மனோ மற்றவர்களுக்கு மீள்பதிவா இருக்கலாம் எனக்கு புதுசு.. அருமையா இருக்கு... மனோவே ஒரு மனோதத்துவ டொக்குத்தரா..!!? ஹி ஹி நன்றி மாப்பிள..

    ReplyDelete
  67. மீள்பதிவே இப்பிடி ஹிட்டாச்சுதே வாழ்த்துக்கள் ஓட்டு போடமுடியல டெலிபோனில் பிறகு பார்கிறேன்..!!

    ReplyDelete
  68. வணக்கம் மனோ!

    என்ன இது பேயெல்லாம் விரட்டப் போயிருக்கீங்க போல! அம்புட்டு துணிச்சலான ஆளா மனோ??? ஹா ஹா ஹா ஹா !!!!

    ReplyDelete
  69. கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஒரு மொக்க டவுட்டு, உங்க நன்பன மோகினி பிடிச்சிருந்தா, மோகினி அவருகூட தானே இருக்கணும், அப்புறம் நீங்க எதுக்கு ஆலமரத்துகிட்ட போனீங்க அத தேடி?

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!