Monday, March 23, 2015

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் 4

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் ! பாகம் 3
http://nanjilmano.blogspot.in/2015/01/3.html

முந்தய பதிவு மேலே.

நுங்கம்பாக்கம் ரஹீம் கஸாலி ஆபீஸ் போனதும், வரவேற்று எங்களை நலம் விசாரித்து அமர வைத்தார் கஸாலி, ஆளைப்பார்த்தால் அப்படி ஒரு அமைதி, அவர் எழுத்துக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாமல் தெரிகிறது இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு அக்கினி இருப்பதும், பூவுக்குள் புயல் இருப்பதும் நன்றாகவே உணர்ந்தேன்.
 அவர் ஆபீசிலேயே டிராவல் எஜன்சியும் இருப்பதை தெரிந்து கொண்டேன், பல விஷயங்கள் பேசினோம், சாயங்காலம் வேடியப்பன் அண்ணன் பிளாக்கர் மீட்டிங் வைத்திருப்பதை சொன்னதும் அவருக்கு வேலை இருப்பதால் நீங்கள் போங்க என்று சொல்லிவிட்டார்.

அடுத்தநாள் ஊர் கிளம்ப இருந்ததால் அங்கேயே டிக்கட் எடுக்கலாமேன்னு சிவாவிடம் [[மெட்ராஸ் பவன்]] சொன்னதும் தாராளமாக எடுங்க மனோ என்று சொன்னார், போயி வால்வோ பஸ்சில் போக விலை கேட்டோம், கையில் அவ்வளவு பணம் கொண்டு போகாததால் [[கொஞ்சம் பணம்தான் கையில் இருந்தது, ஹோட்டலில் வைத்து வந்துவிட்டேன்]] இதுக்கென்ன ஹோட்டல் போயி சிவாவிடம் கொடுத்து விடுங்கள், இப்போது டிக்கெட்டை எடுங்கள் [[கொடுங்கள்]] என்று கஸாலி டிராவல்ஸ் ஏஜென்டிடம் சொல்லி விட்டார்.

போட்டோக்கள் மாறி மாறி எடுக்கும்போது சிவா, "என்னையே மாறி மாறி போட்டோ எடுக்காதீங்க"ன்னு சலித்துக் கொண்டார் [[ஏம்யா ஏம்]] மதியம் சாப்பாட்டு நேரம் கடந்து கொண்டிருக்க, கஸாலி, சரி வாங்க சாப்பிடப் போகலாம், என்ன சாப்பாடு சொல்லுங்க வெஜ் அல்லது நான்வெஜ் எது சாப்பிடலாம் ? என கேட்க, முதலில் கையை தூக்கியது நான்தான் "நான்வெஜ்", கிளம்பினோம் சாப்பிட...

அவர் ஆபீசில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அசைவ ஹோட்டல், எப்போதும் பிஸியாக இருக்கும் போல நானும் சிவா, மகேஷ் மற்றும் கஸாலி போய் அமர்ந்ததும், என்ன சாப்பிடலாம் ? என்று யோசிக்குமுன் சிக்கன் பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவானது.

பேரர் வந்ததும், நான்கு சிக்கன் பிரியாணி என்றார் கஸாலி, பேரர் : பிரியாணியா இல்லை ஸ்பெஷல் பிரியாணியா ?" என்று கேட்க, உடனே கஸாலி ஸ்பெஷல் பிரியாணி தாங்க...ஆமா ஸ்பெஷல் பிரியாணின்னா ? என்று கேட்டோம், சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் உள்ளே வச்சி தருவோம்ன்னு சொல்லும் போதே நாங்க உஷார் ஆகிருக்கணும்...
[[நான், ரஹீம் கஸாலி, ஸ்கூல் பையன் சரவணன் [[கடைசியாக வந்தார்]] மெட்ராஸ் பவன் சிவா.]]

சரி கொண்டாங்க என்று சொல்லி காத்திருந்தோம், வந்தது நான்கு பிளேட் பிரியாணி, ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு கிண்ணியில் பிரியாணி சாப்பிட தனியாக நான்கு பிளேட், கரண்டியில் எடுத்து பிரியாணியை பிளேட்டில் இட்டு சாப்பிட்டாலும் அவ்வளவாக சாப்பிட இயலவில்லை எங்களுக்கு...

சரி போதும் என்று சாப்பாடு எல்லாவற்றையும் மீதி வைத்தோம்...ஆனால்...கஸாலி செய்த ஒரு "காரியம்" என் மனதில் வடுவாக பதிந்து விட்டது, எவ்வளவு பெரிய தவறை இவ்வளவு நாட்கள் நான் செய்திருக்கிறேன் என்று என்னை செவியில் அறைந்தால் போல் சொல்லிற்று...!

சில மனிதர்களிடம் சில பாடங்களை கற்கலாம் என்று நான் சொல்வதுண்டு, ஆனால் என் நண்பன் ஒருத்தன் "எல்லா மனிதர்களிடமும் சில பாடங்களை நாம் கற்கலாம்" என்று சொல்வான்...அது எவ்வளவு சத்தியமான வார்த்தை தெரியுமா...

தொடரும்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!