Monday, February 29, 2016

நீ கொடுத்தால் நான் வேண்டாமென்றா சொல்வேன் கண்ணே...!

காலையில டியூட்டிக்கு வரும்பாதையில் ஒரு லிப்டன் டீக்கடை இருக்கு, டீ நல்ல மணமாக இருக்குமென்பதால், ஒரு டீ ஆர்டர் பண்ணி குடித்துக்கொண்டிருந்தேன்...


என்னை மலையாளி என்று நினைத்து இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்...

பேச்சு அப்படியே அரசியல் பக்கமா போச்சு...காதை  கூர்மையாக்கினேன்...

அதிமுக, திமுக, எல்லாம் வேஸ்ட்டு, வெள்ளப்பாதிப்புல இவங்க உடனே வந்து செயல்படவோ, மக்களுக்கு உதவவோ செய்யவேயில்லை, கடைசியில்தான் வந்தாங்க, வந்தாலும் ஒன்னும் உருப்படியா செய்யல ஆனால்...

த மு மு க கட்சிகாரங்க ஆரம்பத்துல இருந்து கடைசிவரை ஓடி ஓடி உதவினார்கள், சாப்பாடு, தண்ணீர், துணிமணிகள் என்று அவர்கள் உதவியதை மக்கள் நன்றியோடு மனதில் வைத்திருக்கிறார்கள்...

கண்டிப்பாக சென்னை, அதிமுக'வுக்கோ திமுக'வுக்கோ சாதகமா இருக்காது'ன்னு சாதாரணமா பேசிட்டு இருக்காயிங்க !

சரி இவங்க ஊர் எந்தப்பக்கம்ன்னு காதைக் கொடுத்தா...முதுகுளத்தூர்...!

//திமுக..... ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் குடுக்குற நியூஸ் இன்னிக்கு இவங்க பார்க்கலை போல\\

//அடுத்து அதிமுக என்னவெல்லாம் குடுக்கப் போகுதுன்னு பார்ப்போம்\\


Tuesday, February 23, 2016

கணவன் மனைவி 18+...

நேற்றிரவு...


தினம்தோறும் பலமணி நேரமாக இரவு வீட்டம்மாகூட போன் பேசிகிட்டு இருப்பார் பக்கத்து ரூம் மலையாளி சேட்டன், என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும், சமையல் எல்லாம் அவர்தான் பண்ணித்தருவார், என்னை எதுவுமே செய்ய விடமாட்டார். [[தெரிஞ்சாதானே]] 

இங்கே மணி இரவு பத்து என்றால் ஊரில் மணி இரவு பனிரெண்டரை, அதுவும் கேரளா கிராமங்களில் ஏழு எட்டு மணிக்கே ஆளரவம் இருக்காது தூங்கிவிடுவார்கள்...

இவர் வீட்டம்மா தூங்காமல் அப்பிடி என்னதான் பலமணி நேரமா பேசுறாங்கன்னு கேக்க [[ஒட்டுதான்]] ஆசையாகிருச்சு நேற்று...

"காம்பௌண்ட் கேட்டை மூடினாயா ?"

"..........."

"ஸ்கூட்டரை கவர் போட்டு மூடினாயா ?"

".........."

"மெயிண்டோர் கதவை பூட்டியாச்சா ?"

"பிள்ளைங்க ரூம் கதவையெல்லாம் சாத்திட்டியா ?"

"அப்பா அம்மா தூங்கியாச்சா ?"

"கியாஸ் பூட்டுனியா ?"

"நம்ம ரூமுக்கு வந்துட்டியா ?"

"கதவை தாழ்பாள் போட்டுட்டியா ?"

"பெட்ஷீட் தலையணை எல்லாம் கிளீனா இருக்கா ?"

"................."

அப்புறம் எல்லாமே 18+ ங்கோ...கொய்யால எனக்குத்தூக்கமே போச்சு...

வெளிநாட்டு மனித வாழ்க்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்று...

நண்பர் ஒருவர் சொன்னார், ஒற்றைத் தலையணை வாழ்க்கை சரியானதல்ல"வென்று...சரிதான் !

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!