Wednesday, December 29, 2010

கல்ஃப் சட்டி

இன்று "அஞ்சு தினார்" கம்மி பண்ணிதான்னு கெஞ்சும் அரபிகள்!!!  
அன்று நடன கிளப்புகளில் [முஜ்ரா] வீசிய தினார்கள்.......!!!!
மூணு மணி நேரத்தில் முப்பத்தி எட்டாயிரம் தினார் எங்கள் ஹோட்டலில்!!!!
என் கையால் [அன்று நான்  கேசியர்] தினாரை அக்கவுண்ட்'டிடம் ஹேன்ட் ஓவர் பண்ணினேன்..!!!
எலே அரபி நாட்டுல இருக்குற மக்காக்களே இதையும் மனசுல வச்சிட்டு வேலை செய்யுங்க...
கல்ஃப் சீக்கிரம் சட்டிய தூக்கிறும்'னே நினைக்கிறேன்...

காதல்

கவிதையின் நூல் பிடித்து வானில் பறந்தேன்
வானில் பறந்தே கவிதையின்  நூல் பிடித்தேன்
வந்தது காதல்....
நீதான் முதலில் சொன்னாய், 
கவிதை அழகென்று,
புரிந்து கொண்டேன், 
நீதான் கவிதையென்று,
வீட்டில் தாலிபான் தாக்குதல் 
நடந்த போதும் நின்றாய், 
உறுதியாய்..... 
நாம் இணைந்தோம்
இப்போது, 
அன்பின் நூல் பிடித்து வானில் பறக்கிறோம்
நாமிருவர் நமக்கு இருவராய்....

Saturday, December 25, 2010

பெண் ஏன் இப்படி?

என் மலையாளி நண்பன் ஒருவன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இது :
      பெயர் சுபாஷ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் பெங்களூரில் படித்து விட்டு அவன் அப்பா இங்கே பஹ்ரைனில் இஞ்சினியர்'ரா வேலை பார்ப்பதால் இங்கே வந்து நான் வேலை பார்க்கும் ஹோட்டலில் கேப்டனாக வேலை செய்து வந்தான் நல்ல பாரம்பரிய மிக்க குடும்பம் என்பது அவன் பேச்சில் தெரிந்தது, அவன் அப்பா ஒரு பெரிய கம்பனியின் பொறியாளர் என்பதால், நல்ல வசதியான குடும்பம்.
எங்களோடு நல்ல நட்பாகி விட்டான்.
    பிறகு இரண்டு வருடம் கழித்து அவனுக்கு கல்யாண ஏற்பாடு நடந்தது, இவன் ஊர் போனான் பெரியோர்கள் முன்னிலையில் பொண்ணுக்கும் இவனை பிடித்ததாக சொன்னாள் இவனுக்கும் அவளை பிடித்து போனது. எனவே இரு வீட்டாரும் நிச்சயம் செய்தார்கள், கல்யாண நாள் குறிக்க பட்டது. எங்களுக்கு போன் செய்தான் சந்தோஷமாக நாங்களும் அவன் சந்தோசத்தில் பங்கு கொண்டு சில பல ஐடியாக்கள் கொடுத்தோம், அதில் ஒன்று, மொபைல் கிஃட் கொடுத்து தினமும் அவளோடு பேசு என்றோம் அவனும் சந்தோஷமாக வாங்கி கொடுத்துள்ளான். நாள்தோறும் பேசி யாருக்கும் தெரியாமல் காபிஷாப், ஐஸ்கிரீம் ஷாப், பூங்காக்கள்'ன்னு சுத்தி திரிந்தார்களாம்,
     முத்தமெல்லாம் பகிர்ந்து கொண்டார்களாம்.
அப்பிடி இப்பிடியா கல்யாண நாளும் வந்தது,  பெரிய குடும்பத்தின் முதல் கல்யாணம் என்பதால் பெரிய ஆடம்பரமாக நடந்துள்ளது. கல்யாணம்  முடிந்து முதலிரவு பெண்ணின் வீட்டில், என பெரியவர்கள் சொல்ல அப்படியே முதலிரவு பொண்ணின் வீட்டில்.....
இனி நடந்ததை என் நண்பன் சொன்னதை அப்பிடியே கீழே.....
     எடா நான் பெட்ரூமில் அவள் வருகைக்காய் பெட்டில் பல ஆசைகளுடன் காத்திருந்தேன், ரூமில் பழங்களும் பழ ரசங்களும் சினிமாவில் பார்ப்பது போலவே அழகாக செய்திருந்தார்கள். பெட்ரூமை சுற்றிலும் கண்ணாடி [[ஆஹா] அருமையாக இருந்தது. ரசிச்சிகொண்டே நான் இருக்கும் போது என் அழகு தேவதை என் வாழ்க்கை துணை தோழிகளுடன் உள்ளே வந்தாள் கையில் பால் சொம்புடன்....
பின்பு ஒரு அம்மச்சி வந்து அவள் தோழிகளை வெளியே விரட்டி விட்டு கதவை பூட்டினாள். எனக்கோ இந்த அழகு தேவதையை கட்டி அணைக்க விரகதாபமுமாய் தவித்து [[அவன் சொன்ன விதம் ஏ ரகமாக்கும்]] கொண்டிருக்கும் வேளையில், அவள் என்  காலில் விழுந்து காலை தொட்டு கும்பிட்டாள், நானும் அவளை தூக்கி  விட்டு அணைக்க முற்பட அவள் திரும்பி  பால் சொம்பை எடுத்து கிளாசில் பாலை ஊற்றி குடிக்க தந்தாள்... நான் பாலை குடித்து கொண்டிருக்கும் போதே அவள் ஓடி போயி கதவை உள்ளே பூட்டினாள் எனக்கோ சந்தோசம் ஆனால் இதற்குள்  இரண்டு மூன்று முறை வெளியே பைக் ஹாரன் சத்தம் கேட்டது. நான் பாலை குடிக்கும் முன் பெட்ரூமின் இன்னொரு கதவை திறந்தாள் [[நான் ஒரு கதவுனுதான் நினைச்சிருந்தேன்]] சர சரவென வெளியே ஓடினாள் எனக்கு ஒன்னுமே புரியலை [[ங்கே]] அங்கே வெளியே அதாவது வீட்டின் பின் புரம் ஒருவன் பைக்கில் நிற்க இவள் ஓடி போயி ஏறிக்கொள்ள பைக் பறந்தே விட்டது. நான் பிரமித்து போயி நிற்க எல்லாமே ஒரு இருபது நிமிஷத்துக்குள் நடந்து விட்டது.
எடா எனக்கு வானமே இடிஞ்சி என் தலையில விழுற மாதிரி இருந்துச்சு நான் ஒன்றுமே சொல்லாமல் பெட்ரூமுக்கு திரும்பி வந்தேன் சற்று நேரம் அமர்ந்து அழுதேன். எத்தனை சினிமா பாத்துருக்கோம் என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சி போச்சு...
இவள் இன்னொருத்தனை காதலித்திருக்க வேண்டும் அதை இவள் வீட்டார் தடுத்திருக்க வேண்டும் அந்த பாவத்துக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்... ஆனால் ஒன்னு மட்டும் புரியவில்லை இவள் கல்யாணத்துக்கு முன்பு என்னோடு சுற்றியது, முத்தங்கள் பகிர்ந்தது எல்லாம் ஏன்? நாசூக்கா சொல்லியிருக்கலாமே நானே முன்னின்று இவர்கள் கல்யாணத்தை நடத்தியிருப்பேனே, ஏன் என்னை இப்படி செய்தாள் என்று அழுதேன்...
அப்புறமா மெதுவா வெளியே போயி விஷயத்தை சொல்ல..... இரண்டு வீட்டாருக்கும் ஆடு புலி ஆட்டம் ஆரம்பிச்சி அடங்கும் போதுதான் இன்னொரு விஷயமும் தெரிஞ்சிருக்கு அது....
அந்த பெண் காதலித்த விஷயம் அவள் வீட்டாருக்கும் தெரியாதாம்!!!
 எனவே வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களே ஜாக்கிரதையும் உஷாருமா இருங்க...
இப்போ அந்த நண்பனுக்கு வேறொரு கல்யாணமாகி இரண்டு குழந்தைகளும் சந்தோஷமுமாக இருக்கிறார்கள் இங்கே குடும்பமாய் பஹ்ரைன்'லதான் இருக்கான்.
இப்போ இந்த கதை எங்கள் நண்பர்களிடம் பிரபல ஜோக்காகி விட்டது நண்பனை நண்பர்கள் குளு சேரும்போது செமையாக கலாயிப்போம் அவனும் ரசிப்பான். காரணம் அந்த பெண்ணையே இவன் கட்டியிருந்தால் உன் நிலை என்ன என்று அவனை தேற்றவே இப்படி பேசி பேசியே அது காமெடி ஆகிவிட்டது... அது அப்பிடி அப்பிடி டெவலப் ஆகி இப்போ "ஏ" காமெடி ஆகிவிட்டது...
டிஸ்கி : இன்னைக்கு கிறிஸ்மஸ், அதே நண்பன் எங்கள் பஹ்ரைன் நண்பர்கள் சர்க்கிளை பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்கான்....நண்பேண்டா.

Thursday, December 23, 2010

INDIAN TEAM IDEAS FOOT BALL WORLD CUP




Sunday, December 19, 2010

கடிஜோக்

பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட் டிரைவருக்குதான்.



என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும்  கடிக்க முடியாது.

குவாட்டர் அடிசிட்டு குப்புற படுக்கலாம், ஆனால் குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியாது.

ரயில்வே ஸ்டேசனில் போலீஸ் ஸ்டேசன் இருக்கலாம், ஆனால் போலீஸ் ஸ்டேசனில் ரயில்வே ஸ்டேசன் இருக்க முடியாது.

என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.

ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், .......... உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.

மின்னலை பார்த்தால் கண்ணு போயிடும், பாக்கலன்னா மின்னல் போயிடும்..

நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.

மண்ணிலிருந்து மன்னண்ணை எடுக்கலாம்,   கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா.................?

போலீஸ் ஸ்டேசனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்,  ரயில்வே ஸ்டேசனுக்கு போன் போட்டா ரயில் வருமா ??

தண்ணியில கப்பல் போனா ஜாலி,   கப்பல்ல தண்ணி போனா காலி.

ஹோட்டலில் காசு கொடுக்கலேன்னா மாவாட்ட சொல்லுவாங்க,  ஆனா பஸ்சுல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவங்க்களா??
 யானை மீது நாம உக்காந்தா சவாரி,  நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி.

அம்மா அடிச்சா வலிக்கும், போலீஸ் அடிச்சா வலிக்கும், பிரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...................... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

வாயால நாய்னு சொல்ல முடியும்,....... ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.

டீ ஸ்பூனால டீ கலக்கலாம்,     டேபிள் ஸ்பூனால டேபிளை கலக்க முடியுமா?

என்னதான் ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை போல இருந்தாலும், அவ நெகட்டிவ்ல பூதம் போலத்தான் இருப்பாள்!!!!

நீயும் நானும்-
நான் நெருப்பு - நீ பருப்பு
நான் ஆகாயம் - நீ வெங்காயம்
நான் இரும்பு - நீ எறும்பு
ஹி ஹி ஹி ஹி ஹி

முக்காலியில உக்காரலாம், நாக்காலியில்  உக்காரலாம்.................. தக்காளியில் உக்கார முடியுமா?

அழகானப் பெண்

ஒரு அழகானப் பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை உணர்ந்தாள்,
பயந்தாளா??  அதான் இல்லை! நவீன உலகத்து பெண், தன் அன்னையிடம் செய்தியை சொன்னாள்.
அவளுடைய அன்னை மிரண்டு போனதுடன், அதீத கோபத்துடன், காட்டுக் கத்தலுடன் அவளிடம் கேட்டாள்,
"உன்னுடன் பழகும் எந்த பன்றி இந்த காரியத்தை செய்தது?"
"இரு, நானும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று அமைதியாக சொன்னவள்: தன் கைபேசியை எடுத்து பேசினாள்,
அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டு வாசலில்,மிகவும் விலை உயர்ந்த சிவப்பு கலர் பெராரி கார் வந்து நின்றது, அசத்தலான தோற்றத்துடன் ஒரு இளஞ்சன் வண்டியை விட்டு இறங்கினான், விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தான், ஊரையே தூக்கும் அளவுக்கு  நறுமணம் அவனுடன் சேர்ந்து வந்தது, வீட்டுக்குள்ளே பவ்யமாக வந்தான்.
வந்தவன், அந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் அவளுடன், வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தான்,
சற்றும் யோசிக்காமல், கவலை படாமல், பேசினான்,
"உங்கள் பெண் சற்று முன் என்னுடன் தன்னுடைய புது பிரச்சினையை சொன்னாள்.
நான் என்னுடைய சில சொந்த மற்றும் குடும்ப பிரச்சினைகளால் நான் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது, ஆனாலும் நடந்த தவறுக்கு நான் பொருபேர்கிறேன்,
பெண் குழந்தை பிறந்தால், அடையாறில் ஒரு பங்களா, அண்ணா சாலையில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி வைப்பு தொகை தருகிறேன்.
"ஆண் குழந்தை பிறந்தால், வாரிசு சிக்கல் வரகூடாது, சென்னை புற நகரில் எங்களுக்கு உள்ள  தொழிற்சாலைகளில் இரண்டை எழுதி தருகிறேன், இரண்டு கோடி ரூபாய் வங்கி வைப்பு தொகையாக தருகிறேன்"
"இரட்டை குழந்தைகள் என்றால், சொன்னவற்றை இரண்டு மடங்காக தருகிறேன்"
"அதே சமயம், இடையில் கர்ப்ப சிதைவு ஏற்ப்பட்டாலோ அல்லது குழந்தை பிறப்பு சிக்கல் ஆகி, குழந்தை உயிருடன் பிறக்காவிட்டாலோ,   நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்...
                                                                                         *
*
*

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இந்த இடத்தில் அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்த பெண்ணின் தந்தை, எழுந்து நின்று, அவனுடைய தோளில் ஆறுதலாக தட்டி கொடுத்து விட்டு சொன்னார்..

                               என்ன சொன்னார்?
கீழே உள்ளது . படித்து பாருங்கள்

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
                                           "You can try again !!!"
##########################௩####௩#######
 [எழுதிய நண்பருக்கு நன்றி]

சிரித்த முகம் வேணும் அதனால ஆயுசு கூடும்.


சிரித்த முகம் வேணும் அதனால ஆயுசு கூடும்.

"இந்த பஸ்ல எத்தனை வருஷமா கண்டக்டரா இருக்கீங்க??
"ஐந்து வருஷமாக இருக்கேங்க"
"நானும் பல காலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிட்டிருக்கேன்
எவளவோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப் படாம, சிரிச்ச முகத்தோட பயனிகள்ட்ட கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை நான்  பாத்ததே இல்லை"
"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார் அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் என்ன சொல்றாங்க  தெரியுமா?
"என்ன சார் சொல்றாங்க??
"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி , நியுரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம், இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிபட்டவங்கதான் ஆரோக்கியமா அதிக நாள் வாழ்றாங்கலாம்... அது மட்டும் அல்ல... பொறாமை, ஆசை, கோபம், எல்லாத்தையும் கட்டுபடுத்தினா, ஆயிசு  இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது, உயிர் போற நேரத்துல கூட பயப்பட கூடாது சார்"
"அடேங்கப்பா இவளவு தெரிஞ்சி வச்சிருகிறதால தான் நீங்க எப்பமும் பதற்றப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"
"ஆமாங்க"
ஆனா உங்ககிட்டே இருக்கிற இந்த நிதானம் உங்க டிரைவர்ட்ட இல்லன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க???"
"இப்ப இந்த பஸ் எப்படி போய்கிட்டு இருக்குன்னு பாருங்களேன், தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது, நீங்களாவது முன் பக்கம் போய் ப்ரேக் கிரேக் கழண்டு விழுந்திடுச்சான்னு பார்த்துட்டு வாருங்களேன் ப்ளீஸ்!"
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பார்த்துட்டு வந்துதான் உங்ககிட்டே பேசிட்டு இருக்கேன், வர்ற வழியில்தான் எங்கேயோ விழுந்திருக்கனும்னு நினைக்கிறன்!"
"எது.... பிரேக்கா?
"இல்லை........ டிரைவர்!"
யாரோ எழுதியது [எழுதிய நண்பருக்கு நன்றி]

HOTELICOPTER THE WORLD'S FIRST FLYING HOTEL

ஹோட்டலிகொப்டர்







Wednesday, December 15, 2010

PARKING IN GERMANY

PARKING IN GERMANY









பெலம் பார்ப்போமா

தமிழ் மும்பைவாசிகளுக்கு தெரிந்த பழைய தமாஷ்தான் இது,
தெரியாதவர்களுக்கு,
 தமிழ்நாடு டூ மும்பை ரயிலில் ஒரு மராட்டி'காரனும் ஒரு தமிழனும் பிரயாணம் செய்தார்கள் அப்போது, தமிழர் ஒரு சாக்கு மூட்டைய தூக்க முடியாமல் தவிக்க, மராட்டி அண்ணாத்த அதை ஒரே ஜம்ப்'ல தூக்கி மேலே வச்சிட்டு சொன்னார் சப்பாத்தி துன்னு அப்பத்தான் பெலம் வரும்னு, மறுபடியும் நம்ம ஆளு ஒரு சில லக்கேஜ்'களை தூக்க முடியாமல் தவிக்க மறுபடியும் மறுபடியும் மராட்டி அண்ணாத்த ஒரே ஜம்ப்'ல எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு சொன்னான், சப்பாத்தி துன்னு பெலம் வரும்னு,  நம்மாளுக்கு அவமானமா போச்சு, அப்புறம் நம்ம ஆளு கொஞ்சம் ரோசிச்சார், திடீரென எழும்பி அபாய சங்கிலிய இழுக்குற மாதிரி பாவ்லா செய்ய, மராட்டி அண்ணாத்த ஓடி வந்து சங்கிலிய ஒரே இழுப்பாக இழுத்துட்டு சொன்னான் சப்பாத்தி துன்னு பெலம் வரும்னு,
 ரயில் நின்று அதிகாரிகள் வந்து விசாரிச்சிட்டு, மராட்டி அண்ணாத்தே'வுக்கு அபராதம் போட்டாங்க,
எல்லாம் முடிஞ்சி மராட்டி அண்ணாத்தே பணம் போச்சே'ன்னு சோகமா இருந்தார். அப்போ நம்மாளு பக்கத்துல வந்து சொன்னார் "சோறு துன்னு அறிவு வரும்னு"
டிஸ்கி : இப்போ சோறு துன்னா சுகர் வருதாம் அப்பிடியா....

Monday, December 13, 2010

ARMY

RUSSIAN ARMY
ISRAEL ARMY
INDIAN ARMY

BRAZILIAN ARMY
KOREAN ARMY

&FINALLY THE BEST ONE
!

!

!

!

!

!

!

!

!

!

!

!

!

!

!

!

PAKISTAN ARMY

போலாம் ரைட்

DHOOM 3 !!!


!!


!!


!!


!!


!!!


!!!



!!!



!!!!



!!!!




!!!!!



!!!!!



!!!!!!



Sunday, December 12, 2010

புத்தியுள்ள மன்னன்

எனக்கு மெயிலில் வந்த கதை இது :
ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால்
போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு

ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ;

அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''
தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''
அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''
தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''
பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''
அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே
இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!
இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!
இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.
அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!
எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
----------------------------------------------------------------
நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு...



 

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!