Monday, December 29, 2014

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் தொடர் 2...!

முதல் பாகத்தை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்.

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் !
http://nanjilmano.blogspot.in/2014/12/blog-post.html

நண்பர்கள் ஹோட்டல் ரூமில் இருக்கும் போது காற்று வர லேசாக ஜன்னலை திறந்து வைத்திருந்தோம், அப்படியே அவர்கள் போனதும், தெரியாமல் ஜன்னலை அடைக்காமல் தூங்கி விட்டோம், சென்னை கொசு பற்றி தெரிந்தும்...அப்பாடா என்னா கடி என்னா கடி...! 

அதிகாலை நான்கு மணிக்கே எழும்பி [[கொசு தொல்லை]] வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன் மும்பையில் இருந்து வந்த களைப்பு வேற, நாளைய புரோகிராம் எல்லாம் சிவா, பால கணேஷ் அண்ணன், கே ஆர் பி செந்தில் அண்ணன் மற்றும் ஸ்கூல் பையன் சரவணனும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சரி எப்படியும் பத்து பதினோரு மணி ஆகிவிடும் நன்றாக தூங்கி விடலாம் என்று போயி தூங்கினதுதான் தெரிஞ்சிது, காலை ஏழரை மணிக்கே மெட்ராஸ் பவன் சிவா வந்து கதவை தட்ட...

எழும்பி பரபரவென்று குளித்து முடித்துவிட்டு கிளம்புமுன் சிவா பல விஷயங்களை எனக்கு சொல்லிக் கொண்டிருந்தார், "வாங்க மனோ பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு சாப்புட்டுட்டு வருவோம்" என்றதும் போனோம்.

"இந்தியன் குளம்பியகம்" என்று போர்டு இருந்துச்சு, என்னய்யா பெயர் இது என்றேன், காப்பி கடையை இப்படியும் சொல்வதுண்டு என்று சொன்னார் சிவா...!

சாப்பாடு சூப்பராக இருந்தது, கணேஷ் அண்ணன் வர கொஞ்சம் லேட் ஆகும் என்பதால், சிவா அருகில் இருக்கும் அவர் வீட்டுக்கு அழைக்கவே, நான் டவுசர் போட்டிருந்ததால் துணி மாற்றி செல்லலாம் என்றேன், இல்லை மனோ அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க லேட்டாதான் வருவாங்க என்றதும் அவர் வீட்டிற்கு சென்றேன்.

கொஞ்சநேரம் அளவளாவி விட்டு வெளியே வந்ததும், அப்படியே நடக்கலாம் வாங்க மனோ என்று அவர் கூட்டி சென்றது சென்னையின் உயிர்நாடியான மவுண்ட் ரோடு, கிளீனாக இருக்கிறது ஆனால் தூசு ரொம்ப இருக்கிறது, எதிரில் ஒய் எம் சி ஏ காம்பௌண்டையும் காட்டி தந்தார் பச்சை பசேல் என்று இருக்கிறது !
சென்னை மவுன்ட் ரோடும், எதிரில் ஓய் எம் சி ஏ'யும், அருகில் மெட்ராஸ் பவன்"சிவாவும் நானும்.

கணேஷ் அண்ணன் ரெடி என்றதும், அப்படியே காலை சென்னை பித்தன் "தல" வீட்டிற்கு போவதாக பிளான் போட்டிருந்தார்கள், சிவா நான் ஹோட்டல் போயி பேன்ட் சர்ட் மாற்றிட்டு போகலாம் என்றதும் சிவா, "அண்ணே மனோ ட்ரெஸ் குறைவா போட்டுருக்காராம் அதனால ஹோட்டல் போயி துணி மாற்றி ரெடியாகுறோம் நீங்க ஹோட்டல் வந்துருங்க"

நாங்கள் ஹோட்டல் வந்து சேரவும் கணேஷ் அண்ணனும் வந்துவிட்டார், மனோ ட்ரெஸ் குறைச்சல் என்று இழுக்குமுன் "இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்" என்று டைமிங் பஞ்ச் சொல்ல சிரித்து அப்படியே கிளம்பினோம், சிவாவுக்கு தல வீட்டிற்கு போக வழி சொல்லி குடுத்து விட்டு அண்ணன் கிளம்பினார் புல்லட்டில் எங்களுக்கு முன்பாக.

அடையாறு பக்கம் என்பதால் எப்பவோ படித்த அந்த ஆலமரத்தை தேடினேன் அம்புடல, குறிப்பிட்ட இடத்தில் கணேஷ் அண்ணன் காத்திருக்க ஆட்டோவில் போயி இறங்கினோம்.

கணேஷ் அண்ணன், அவர் எழுதிய சிரிப்பு யாணம் மற்றும் சிறுகதைகள் அடங்கிய இரண்டு புஸ்தகம் பரிசளித்து விட்டு தல வீட்டுக்கு அழைத்து சென்றார் அங்கே.....

தொடரும்.....

Friday, December 26, 2014

H2o குறும்படம் விமர்சனம் !

லிபியாவில் பூமிக்கடியில் நீள நதியாக நல்ல தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்த அமேரிக்கா மற்றும் மேலை நாடுகள், குறி வைத்து கத்தாபி என்ற சர்வாதிகாரியை கொன்றதை நாமறிவோம், இன்னும் பல நாடுகளை குறி வைத்து காய் நகர்த்தி வருவதையும் நாமறிவோம்.

அடுத்த உலக யுத்தம் என்றால் அது தண்ணீருக்காகவே இருக்கும்.

அஞ்சாசிங்கம் செல்வின்  இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த குறும்படமும் அதைதான் சொல்கிறது !
மகேஷ், மெட்ராஸ் பவன் சிவகுமார் மற்றும் ஆரூர் மூனா, ஷூட்டிங் ஸ்பாட்.

பாலைவனத்தில் தளர்வாக நடந்து வரும் நாயகன்...தாகத்தால் ஒளித்து வைத்திருக்கும் தண்ணீர் பாட்டலை யாரும் பார்கிறார்களா என்று பயந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ஒரு மூடி தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு ஒளித்து வைக்கிறான்.
நானும் ஆரூர் மூனாவும்...

தண்ணீர் களவாணிகள் அதை பார்த்து பிடித்து நாயகனை மிரட்ட, நாயகனோ இவர்கள் பணம் காசுக்காக தன்னை வளைத்து மிரட்டுகிறார்கள் என்று நினைத்து மொபைல், பர்ஸ், லேப்டாப் என கழற்றி வைக்க...

தண்ணீர் களவாணிகள் லேப்டாப் பேக்கை திறந்து பார்த்தாலும் தண்ணீர் இல்லை, நாயகன் பேன்ட் பின்னாடி தண்ணீரை ஒளித்து வைத்திருப்பதை இன்னொரு தண்ணீர் கள்ளன் கண்டு பிடிக்க...
காட்சியை விளக்கும் டைரக்டர் செலவின்.

இடுப்பில் இருக்கும் தண்ணீரை வலுகட்டாயமாக பிடுங்கி எடுத்து அடுத்த தண்ணீர் கள்ளனிடம் கொடுக்க, நாயகன் அந்த தண்ணீர் பாட்டலை பிடுங்கி ஓட முயல...

தண்ணீர் கள்ளனில் ஒருத்தன் நாயகனை சுட்டு கொல்ல...தண்ணீர் பாட்டலை கெட்டியாக பிடித்துக் கொண்டே நாயகன் உயிரை விடுகிறான்.
முதல்ல இந்தாளைதான் போட்டு தள்ளனும்...கேமரா மேன் விமல்...

வில்லன்களுக்கு காசு பணம் முக்கியமில்லை தண்ணீர் மட்டுமே முக்கியம் என்பதாக முதல் பாகம்...[[இதுல மேலே நான் சொன்ன கத்தாபி கதையும் பொருந்தும்]]

திடீர் என நாயகன் கட்டிலில் இருந்து அதிர்சியாக எழும்ப...மேலே சொன்னது கனவாக தெரிய..... லைட்டை போட்டு விட்டு தண்ணீர் பாட்டலை தேட பாட்டல் அங்கே இருக்கிறது.
கதறி கதறி பழவேற்காடு தீவுக்குள் நடந்துவரும் வெங்கடேஷ் மற்றும் மெட்ராஸ் பவன்.

கட்டிலை விட்டு கீழே கால் வைத்ததும் கீழே தண்ணீர், அலட்சியமாக பாத்ரூம் பைப் தண்ணீரை திறந்து வைத்து விட்டதை நினைத்து பைப்பை அடைத்து வைத்துவிட்டு பாட்டல் தண்ணீரை கொஞ்சம் குடித்து விட்டு தூங்குகிறான் நாயகன்.

படத்தை கொஞ்சம் உறிச்சா...

ஒளிப்பதிவு சூப்பர்...[[இதில் மெட்ராஸ் பவன் சிவாவின் பங்கும் உண்டு என்பது ஆச்சர்யம்]]

ஆரூர் மூனா நிஜமான வில்லனாகவே அசத்தி இருக்கிறார்.

செல்வினின் இயக்கமும் நடிப்பும் அருமை...!

இசை இன்னும் அருமை...

விமர்சனம் சிம்பிள்...h2o..."super"

படத்தை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் பண்ணவும்.

https://www.facebook.com/selwin.anand/posts/10204838450374292

வலைத்தளம் பதிவர்கள் இப்போது குறும்படம் பக்கமாக மேலே வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது !

Saturday, December 20, 2014

சிங்கார சென்னையில் நண்பர்களுடன் இரு நாட்கள் !


அண்ணே தி நகர் அருணா ஹோட்டல்ல ரூம் போட்டு வச்சிருக்கேன், நேரே அங்கே போயிருங்க நாங்கல்லாம் அங்கே வந்துருதொம்ன்னு ஸ்கூல்பையன் மற்றும் மெட்ராஸ் பவன் சிவாவும் சொல்ல, ஆட்டோ விரைந்தது அருணாவை நோக்கி ச்சே அருணா ஹோட்டலை நோக்கி...
அங்கே ரிஷப்சனில் நாஞ்சில்மனோ பெயர்ல ரிசர்வேஷன் இருக்கா பாருய்யான்னு சொன்னதும் மேலே கீழே பார்த்துட்டு இல்லை சார்ன்னு சொல்லிட்டான் [[பெரிய அவமானம் அவ்வவ்..]]


அப்புறம் சரவணன்னு [[ஸ்கூல்பையன்]] இருக்கா பாருய்யான்னு சொன்னதும் ஆமா சார்ன்னு சொல்லி ரூம் தந்தான் ஸ்ஸ்ஸ் அபா நம்ம பெயருக்கு இப்பிடி வல்லமை இல்லாம போச்சே..

தி நகர் அருணா ஹோட்டலில் ரூம் போட்டதும், மெட்ராஸ் பவன் மற்றும் ஸ்கூல் பையன் போன்கள் வந்த வண்ணமே இருந்தன, ரெண்டு பேரும் மற்ற நண்பர்களுக்கு தகவல் கொடுத்த வண்ணம் இருக்க...

கே ஆர் பி செந்தில் அண்ணனுக்கு அஞ்சாசிங்கம் செல்வின் எதேயாச்சையாக போன் செய்து "அண்ணே நான் ஒரு குறும்படம் எடுக்கிறேன் அதில் வில்லன் ரோலுக்கு நம்ம நாஞ்சில்மனோ அண்ணன் மாதிரி ஒரு அருவா கேரக்டர் இருக்கு அண்ணனை மாதிரி அருவா பார்ட்டி ஒரு ஆள் வேணுமே" என்று கேட்க...

"மாதிரி என்ன மாதிரி ஒரிஜினலே இங்கேதான் இருக்கார்" என்று சொன்னதாக சொல்லி நம்மளையும் வில்லனா நடிக்க வச்சதை அப்பாலிக்கா சொல்றேன்.
நான், மெட்ராஸ் பவன் சிவா, ஸ்கூல் பையன் சரவணன் மற்றும் கே ஆர் பி செந்தில் அண்ணன்.

ஹோட்டலுக்கு என்னை பார்க்க வந்த சிவா, சரவணன், கே ஆர், பி செந்தில் அண்ணன், மற்றும் பால கணேஷ் அண்ணன், ரெண்டே நாள்தான் சென்னையில் தங்குவதாக சொன்னதால், நான்கு பேரும் எனது [[அவர்களது]] புரோகுராம்களை மாற்றினார்கள்.

பதிவர்கள் யாவருக்கும் ஒரு மீட்டிங் வேடியப்பன் அண்ணன் வைப்பதாக இருந்ததை அடுத்த நாளே வைக்கும்படி கேட்டு, மற்ற எல்லா பதிவர்களுக்கும் தகவல்கள் தந்து கொண்டிருந்தார்கள்.

நன்றாக மகிழ்சியாக அளவளாவி விட்டு அடுத்தநாள் சந்திப்பதாக கலைந்தோம்.

ரொம்பநாள் நண்பர்கள் போல கட்டி பிடித்து அன்பு கொண்டதை பார்த்துக் கொண்டிருந்த நண்பன் மகேஷ் அசந்து போனான் "எப்பிடிண்ணே இது ? ஒருகாலும் பார்க்காம இப்பிடி அன்னியன்னியோமாக இருக்கீங்க எல்லாரும் ?" என்று கேட்டான், "பொறு தம்பி இன்னும் இருக்கு" என்றேன்.

ஆஆ...ன்னு வாய் பிளந்து மல்லாக்க படுத்தவன்தான் அடுத்தநாள் காலையில் மெட்ராஸ் பவன் சிவா வந்து எழுப்பிய பின்தான் எழுந்தான் !

தொடரும்....


Wednesday, October 22, 2014

"கத்தி" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...!

காலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேகத்தோடு தியேட்டர் போனால் அங்கே கியூ...படம் வந்துருச்சுன்னு சொன்னாங்க.

"கலியுகம்" தினேஷுக்கு போனைப்போட்டேன் வாறியாய்யான்னு "இல்லைண்ணே தீபாவளி பொங்கல் வச்சு எனக்காக வீட்டுல காத்திருக்காங்க நீங்க பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க"ன்னு சொல்லிட்டார்.

படம் பார்க்க வந்தவர்களில் 25 சதவீதம் மலையாளிகள் என்பது குறிப்பிட தக்கது !

சரி இனி கத்தி"யை தீட்டுவோம்...

ஒரு காலத்தில் தண்ணீர் ஊற்றாக பொங்கியதால் அந்த ஊருக்கு "தண்ணூற்று" என்று பெயர், விவசாயம் அமோகமாக நடந்த அந்த பூமி காலபோக்கில் வறண்ட நிலமாகி விவசாயம் இல்லாமல் போகிறது, தற்போது படித்த இளைஞன் ஒருவன் பூமிக்கடியில் பெரிய நதியே ஓடுவதை கண்டறிகிறான்,

அவன் கூடவே இருக்கும் ஒரு பேராசிரியர் அதை கார்பரேட் கம்பெனிக்கு காட்டி [[துரோகம்]] குடுக்க, கார்பரேட் கம்பெனி குறுக்கு வழியில் உள்ளே புகுந்து வேலையையே ஆரம்பிக்கிறார்கள், அதை நம்ம ஹீரோ எப்படி ஜெயித்து அந்த கிராமத்து மக்களை வாழ வைத்தான் என்பதே கதை.

சரி இனி உள்ளே போவோம்...

இளைய தளபதி என்றே போர்டு போட்டு தப்பித்து கொண்டார்கள், படம் ஆரம்பம் கொல்கத்தா மத்திய சிறையில் ஆரம்பிக்கிறது, கைதி ஒருவன் ஒரு போலீசை போட்டு தள்ளிவிட்டு ஓட...சிறை அதிகாரிகள் அவனை பிடிக்க முடியாமல் தவிக்க...

ஒரு போலீஸ் சிறையில் இருக்கும் விஜயால்தான் முடியும் என்று கூற [[அப்பவே எனக்கு சங்கந்து போச்சு]] விஜய் ஜெயில் மேப்பை காட்ட சொல்ல, மேப் வருகிறது, விஜய் அந்த மேப்பை ஒரு  கோணத்தில் பார்க்க...விசிலடிச்சான் குஞ்சிகள் கும்மி அடிக்கிறார்கள்.

அவனை வெளியே வர விரட்டி வந்து போலீசுக்கு பிடித்து கொடுத்துவிட்டு விஜய் எஸ்கேப் ஆகி சென்னை நண்பன் வீட்டுக்கு வந்து விடுகிறார், நண்பன் அவருக்கு பேங்காங்க போக போலி பாஸ்போர்ட் [[இப்பவும் இருக்கா ?]] செய்து கொடுத்து ஏர்போர்ட் வர அங்கே...

சமந்தாவை கண்டு டாவுகிறார், அங்கே நடக்கும் சம்பவங்கள் விஜய் படங்களில் வரும் நார்மல் சீன்கள்தான். [[அப்பவும் நடுக்கம் எனக்கு வர ஆரம்பிச்சிது]] சமந்தாவும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி போன் நம்பர் கொடுக்க...

அப்புறம் என்ன ? எனக்கு அவ வேணும்டா என்று டிக்கெட்டை வீசி எறிந்து விட்டு வெளியே வருகிறார்கள், விஜய் நண்பனாக வரும் காமெடி நடிகர் பெயர் தெரியவில்லை ம்ம்ம்ம் பரவாயில்லை, சந்தானம் மாதிரி முயற்சிகிறார்.

சென்னையில் ஒரு பாலத்தில் இருந்து சமந்தாவுக்கு போன் பண்ணும் போது அது நாய் காற்பரேஷனுக்கு போக, கடுப்பாக இருக்கும்போதே கீழே ஒரு கார் விபத்துக்குள்ளாக, எட்டி பார்கிறார்கள், அடுத்த காரில் வந்த ஐந்துபேர் விபத்துக்குள்ளான காரில் இருப்பவரை சராமாரியாக சுட்டு தள்ளி செல்கிறார்கள்.

விஜய்யும் நண்பனும் கீழே ஓடி வந்து காருக்குள் இருக்கும் நபர் உயிரோடே இருக்கிறாரா என்று எட்டி பார்க்க...ஆத்தே...இன்னொரு விஜய் அங்கே, அப்பவே தமிழ் மகனா எழும்பி ஓட கால் பரபரத்தது எனக்கு, ஆனால் சமந்தா பாவமுல்ல அவ்வவ்...

சரி அடிபட்டவர் பெயர் ஜீவானந்தம், பாக்கெட் திருடன் பெயர் கதிர்...ஜீவானந்தம் சாகவில்லை என்றதும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் பாக்கெட்டில் இவர் பர்ஸை வைத்து கொல்கொத்தா போலீஸ்கிட்டே மாட்டிவிட்டுகிட்டு எஸ்ஸாகிறார் கதிர்.

சும்மா ஜாலியா ஒருநாள் ரோட்டில் நிற்கும்போது கலக்டர் பார்த்துவிடுகிறார், வண்டியில் ஏற்றி கொண்டு இருபத்தைந்து லட்சம் பணத்தின் செக்கை குடுத்து, ஒரு முதியோர் [[ஆண்கள்]] இல்லத்திற்கு அழைத்து செல்கிறார்.

ஆனால் அங்கே இருக்கும் முதியோர்கள் கலெக்டரை எதிர்கிறார்கள் கலக்டரை, கதிரிடம் கொடுத்த அந்த செக்"கையும் ஒருவர் கிழித்து எறிகிறார், ஆட்டையை போடலாம் என்று இருந்த கதிருக்கு ஏமாற்றம், அந்த முதியோர் இல்லத்தார் கதிரை ஜீவானந்தம் என்றே நம்புகிறார்கள்.

மறுபடியும் கலெக்டர் கதிரிடம், அடுத்த வாரம் இதே செக்"கை உனக்கு தருகிறேன் என்று சொல்லிப்போக, பணத்தை ஆட்டையை போட்டுகிட்டு பேங்காங் போக கதிர் திட்டமிடுகிறார்.

அங்கேயே தங்கி விட்ட நேரத்தில், வெளிநாட்டு மீடியா ஒன்று ஜீவானந்தத்தை பேட்டி எடுக்க வருகிறது [[கதிர்]] இரண்டு வெளிநாட்டு பெண்கள் வந்து மைக் எல்லாம் செட் செய்ய, கதிரும் பேட்டி குடுக்க ரெடியாகும் நேரத்தில் கேமரா ஸ்டான்ட் கத்தியாக வெளியே வர, செம ஃபைட்...இரண்டு பெண்களுடன் வீராவேச சண்டை சூப்பரோ சூப்பர் !

வில்லனின் மிரட்டல் அழைப்பில் செல்லும் கதிர், வில்லனும் கதிரை ஜீவா என்றே நம்பி டீல் பேசுகிறான், தண்னூற்று முதியவர்களை கையெழுத்திட்டு கேஸை வாபஸ் பெற செய்தால் உனக்கு இருபத்தைந்து கோடி பணம் தருவதாக சொல்ல, விஷயம் புரியாமல் ஒகே சொல்லி, ஐந்து கோடி அட்வான்ஸ் வாங்கி செல்கிறான்.

இதற்கிடையில் சில காமெடிகளில், தாத்தாவை பார்க்க வரும் சமந்தாவை கரண்டில்லாமல் யாரென தெரியாமல் கதிர் அடித்துவிட...கரண்ட் வந்ததும் அலறுவது செம காமெடி, அப்புறமென்ன கதிர் அங்கேயே தங்க முடிவெடுத்தாலும்...

ஜீவானந்ததிற்கு வாழ்த்து தெரிவிக்க லயன்ஸ் கிளப் முடிவெடுத்து அழைத்து நான்கு லட்சம் நன்கொடை கொடுக்க அழைக்க..."டேய் அதான் நம்மகிட்டே ஐந்து கோடி இருக்கே" என்று நண்பன் சொல்ல..."அந்த நான்கு லட்சத்தை பேங்காங்ல டிப்ஸ் கொடுக்கலாம்" என்று போகிறார்.

அங்கேதான் உண்மையான பிளாஷ் பேக் மேட்டர் கதிருக்கு தெரிய வருகிறது, மீடியா கவனத்தை ஈர்க்க அதாவது யாருமே கண்டு கொள்ளாததாலும் ஜீவாவை ஜெயிலில் அடைத்ததாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் மீடியா கேமரா முன்பு, இனி மேலே உள்ள என்ன கதை என்பதை வாசிக்கவும்.

மனதில் குத்தபட்ட கதிர் மனம் மாறுகிறார், ஐந்து கோடியையும் வில்லனுக்கு திருப்பி தர, கடுப்பாகிறான் கார்பரேட் வில்லன், உடனே ஐம்பது அடியாட்களை அனுப்புகிறான் கதிரை [[ஜீவா]] கொல்ல, அந்த சண்டை கொஞ்சம் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கிறது, கொய்ன்ஸ் போட்டு போட்டு கரண்டை ஆன் ஆஃப் செய்து கலக்குகிறார்.

வில்லன் போன் செய்து உன்னை கொன்னுபுடுவேன் என்று கதிரை மிரட்ட...நானே வந்து உன்னை கொல்வேன் என்று சொன்னதும் கதிர் சிரித்து விட்டு "ஐயம் வெயிட்டிங்" என்று சொல்கிறார், நல்லாத்தான் இருக்கு...

இடைவேளை...

கோர்டில் கேஸ் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது, அதாவது அந்த கிராமம் கார்பரேட் கம்பெனிக்கா அல்லது கிராமத்துக்கா என்ற விசாரணை, தீர்ப்பு வர இன்னும் மூன்று, ஐந்து நாட்கள்தான் இருக்கும் நிலையில், ரெண்டாயிரத்துக்கும் மேலான தண்னூற்று  இளைஞர்கள் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு கார்பரேட் நிறுவனம் வேண்டும் என்று லெட்டர் அனுப்பியதாக மனு தாக்கல் செய்கிறார் வில்லன், எல்லாமே பொய் ஆனால் கோர்டில் செல்லுபடியாகும்.

ஐந்து நாட்களுக்குள் தீர்ப்பை மாற்ற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் ? என்று கதிர் யோசித்து ஒரு முடிவெடுக்கிறார், அதாவது மக்களுக்கு நம்ம விவசாயிகள் நிலைமையை மீடியாக்கள் வெளியிடாத பட்சத்தில் ஒரு அதிரடியை செய்கிறார்.

இதற்கிடையில்  ஜீவானந்தம் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.

சென்னைக்கு வரும் எல்லா ஆற்று குழாய்களையும் மூன்று நாட்கள் திறக்க விடாமல் குழாய்க்குள் போயி முதியவர்கள் பெட்ரோல் குண்டை கையில் வைத்து போலீஸ் உள்ளே வரமுடியாமல் போராட்டம் நடத்துகிறார்கள், காரணம் சிட்டியில் உள்ளவர்கள் கிராமம் விவசாயம் என்றால் என்ன என்று தெரிய வைப்பதற்கு மற்றும் தண்னூற்று மேட்டரும் இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காக.

சென்னை சிட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க, மொத்த மீடியாவும் பரபரப்பாகிறது, சென்னை மக்கள் தண்ணீருக்காக தவிகிறார்கள் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை...நட்சத்திர ஹோட்டலுக்குள் புகுந்து நீச்சல் குளம் தண்ணீரெல்லாம் களவாடப்பட்டு போகும் போது ஒருவர் ஆங்கிலத்தில் திட்ட...

நம்ம முருகதாஸ் வந்து செமையா திட்டுகிறார், அந்த திட்டு இணைய தளங்களுக்கான திட்டான்னு எனக்கு மைல்டா ஒரு டவுட்டு.

சென்னை மக்கள் செம கடுப்புடன் இருக்கும் அதே வேளையில் ஜீவா வில்லனால் கடத்தப்படுகிறார், காலை எட்டு மணிக்கு ஜீவா பிரஸ்'க்கு பேட்டி குடுக்க வெளியே வருகிறார் என்றதும் ஒரே பரபரப்பு, வில்லனோ எகத்தாளமாக சிரிக்குறான், ஏன்னா ஜீவா அவன் அண்டரில்...

வில்லன் மற்றும் மீடியா, மக்கள் அந்த நேரத்தை நோக்கி காத்திருக்கிறார்கள், வில்லன் மிக ஆர்வமாக இருக்கிறான் காரணம் ஜீவா வந்து பேட்டி கொடுத்தால் தீர்ப்பு தண்னூற்று விவசாயிகளுக்கு சாதகமாகி விடும் என்பதே.

ஆர்வமாக வில்லன் காத்திருக்கும் நேரம் கதிர் வெளியே வர வில்லன் கலவரமாகிறான், ஜீவா கதிரை நினைத்து பெருமை கொள்கிறார், வெளியே வந்த கதிர் கிராமம் பற்றியும், விவசாயம் பற்றியும் விரிவாக விவரித்து, தீர்ப்பை தண்னூற்று கிராமத்திற்கு சாதகமாக்குகிறார்.

பின்னே என்ன ? வழக்கமான விஜய் சண்டை கிளைமாக்ஸ், வில்லன்களை அழித்து ஜீவாவை காப்பாற்றி கொண்டு வருகிறார்.

ரசித்த வசனங்கள்...

விஜயிடம் அவர் தங்கை "அண்ணா கம்னியூசம்'னா என்ன அண்ணா ?" "நம்ம பசிக்கு சாப்புட்டுட்டு அதுக்கு மேலே சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் அடுத்தவங்களுடையது"

"பூசணிக்காய் கொடியில காய்க்குதா மரத்துல காய்க்குதான்னு சிட்டியில் இருப்பவர்களுக்கு தெரியுமா?"

மீடியா பேட்டியில் விஜய்...."ஐயாயிரம் கோடி பேங்கில் கடன் வாங்கிய பீர் கம்பெனி முதலாளி அதை கட்ட முடியாமல் தற்கொலை செய்யவில்லை, கடன் கொடுத்த அதிகாரிகளும் தற்கொலை செய்யவில்லை, ஒரு விவசாயி வெறும் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்கிறான் [[பயங்கர கிளாப்ஸ்]]

2g அலைக்கற்று விஷயத்தில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம்கோடி  ரூபாய் ஊழலும் நம்ம நாட்டுலதான் நடக்கிறது" என்று சொல்லி நம்ம தாத்தாவையும் அந்த பீர் ஆளையும் காலை வாரிருக்கார் செம கிளாப்ஸ் ஆடியன்ஸ்...!

அடுத்து...

விஜய் கூட சமந்தா நடனம், சூப்பரு, விஜய் பற்றிதான் நமக்கு தெரியுமே.

ரெண்டாவது பாட்டுக்கு ஏழெட்டுப்பேர் தலைதெறிக்க வெளியே ஓடுவது பார்த்து மிரண்டு போனேன்.

செல்ஃபி பாட்டு செமையா இருக்கு நடனமும், சமந்தா ஆட்டத்தை [[செம]] பார்த்து என் பக்கத்தில்  இருந்தவன் பாப்கான் கோப்பையை கீழே போட்டு தடவினான் பாருங்க அவ்வவ்...

விஜய்யின் மேனரிசம் கொஞ்சம் அழகாகவே இருக்கிறது அவரும்.

சமந்தாவை இப்போதான் பார்கிறேன் அழகோ அழகு, நடிப்பில்லை இருந்தாலும் வழக்கம் போல வந்து போகிறார்.

இன்றைய இளைய தலைமுறைகள் விவசாயம் பற்றி அறிந்து கொள்ள இந்த படத்தை பார்க்கலாம்.

மொத்தத்தில் கத்தி "கத்தாமல் பார்க்கலாம்"

வாழ்கையில் ஒரு படத்தை முதல்நாள் முதல் ஷோ நான் பார்த்ததும் இந்த படம்தான் !

Wednesday, September 24, 2014

மதுரை பதிவர்கள் மாநாடு ஜாலி ஜாலி கும்மி 2 !


பாலகணேஷ் அண்ணன் உள்ளே இருந்து வேகமாக வெளியே ஓடி வருகிறார்..."எலேய் மனோ என்னலேய் பண்ணிகிட்டு இருக்கே ?"

"என்னண்ணே  ஆச்சு ?"

என்ன ஆச்சா ? சிபி"யை மரியாதை இல்லாம வரவேற்றதா, விக்கியை கலாயிச்சதா சரவணன் கையை பிடிச்சு இழுத்ததா, டீச்சரை வம்புக்கு இழுத்ததா கம்பிளைன்ட் வந்துருக்கு..."

"ஆஆ அதுக்குள்ளேயா ?"

"நொன்ன அதுக்குள்ளே வாயில குத்திபுடுவேன் மரியாதையா எல்லாரையும் வரவேற்கணும், இது எருமைநாயக்கன் பட்டி மீட்டிங் மாதிரி ஆக்கிபுடாதே ஜாக்கிரத"

"ஓகே டீக்கே பம்மிங் பம்மிங் அண்ணே..."

சின்ன வீடு சுரேஷ் வருகிறார்...
 

"வாங்க வாங்க சுரேஷ் எப்பிடி இருக்கீங்க பதிவுலகம் பக்கத்துலையே ஆளை காண முடியலையே ?"

ஒத்தை விரலை தூக்கி காட்டி "யோவ் நீரு [[யாரு]] மட்டும் ரொம்ப யோக்கியமோ ? எத்தனை தடவை திருப்பூர் வாரும் வாரும்"ன்னு கூப்பிட்டுருப்பேன் வந்தீரா வந்தீரா" ன்னு விரலை அப்பிடியே மடக்கி குத்த வர...

"யோவ் பொறுய்யா...அதுக்காக நாகர்கோவில் போயிகிட்டு இருக்குற ரயிலை திருப்பூருக்கு எப்பிடிய்யா திருப்ப முடியும் ?"

"மனமிருந்தால் மார்கபந்து ச்சே மார்கமுண்டு"

"ஆரம்பிச்சிட்டான்...ராசா அடைமொழி பெயருக்கு அர்த்தம் சொல்லிட்டு போ ராஜா..."

ஒரு விரலை மறுபடியும் நீட்டி, ரெண்டாவது விரலையும் தூக்கி காட்டிட்டு..."அண்ணே எனக்கு ரெண்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதான் சிம்பாலிக்கா சின்னவீடுன்னு வச்சிருக்கேன்"

"ரெண்டு சின்ன வீடா...சொல்லவே இல்ல..."

தமிழ்வாசி பிரகாஷ் ஒரு கையை இடுப்புல வச்சிகிட்டு லேசா நொண்டி நொண்டி நடந்து வருகிறார்...
 

"என்னய்யா ஆச்சு உங்க ஊர்ல தெருதெருவா கிட்னி களவு நடக்குறதா சொன்னாங்க, அப்பிடி ஏதும் ?"

"இல்லை மக்கா, யாருகிட்டேயும் சொல்லாதீங்க கொஞ்சம் காத காட்டுங்க"
"சொல்லுங்க"

"பைக்ல வந்துகிட்டு இருந்தேனா...ஒரு சூப்பர் ஃபிகர் நின்னுகிட்டு இருந்துச்சா...அப்பிடியே யூ டர்ன் அடிச்சு போயி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு மட்டும்தான் மக்கா சொன்னேன், பின்னாடி இருந்த அண்ணனுங்க அழகா ஆடாம அசையாம ரோட்டுல சரிச்சி கிடத்தி வச்சி மிதிச்சானுங்க பாருங்க ஸ்ஸ்ஸ் அபா முடியல..." என்று உள்ளே போக...

"யோவ் நில்லுய்யா.."

"யோவ் மக்கா ஏற்கனவே மூச்சு விட முடியாம இருக்கேன் அடைமொழியை நானே சொல்லிருதேன், தமிழ் வாசிடா வாசிடான்னு எங்க தமிழ் வாத்தியார் அடி பின்னி எடுப்பாருண்னே என்ன செய்யலாம்ன்னு மண்ணுல உருண்டு ரோசித்ததுல, தமிழ்வாசி"ன்னு என் பெயரை நானே மாத்திகிட்டேன்"

"இதுக்கு மண்ணுல வேற உருளனுமா வெளங்கிரும், உள்ளே போங்க சாமீ"

நாய் நக்ஸ் நக்கீரன் அண்ணன் ஒரு பாட்டலோடு வரவும்....
 

"அண்ணே அண்ணே ஆல்கஹால் உள்ளே அனுமதி கிடையாது, ஆபீசரும் கணேஷ் அண்ணனும் உள்ளே இருக்காவ அடி பின்னிபுடுவாயிங்க"

"இங்கே வா தம்பி என்னாதிது ?"

"அண்ணே குவாட்டரை வாங்கி தண்ணீர் பாடடலுகுள்ளே மிக்ஸ் பண்ணி இருக்கீங்க"

அந்த பாட்டலை தூக்கி காட்டி...ஒ என்று அழுகிறார்...

"டேய் மனோ...நான் தண்ணிய நேற்றைக்கே விட்டுட்டேன் தெரியுமா ? [[அவ்வ்வ்வ்]] வயிறு சரியில்லை அதான் வீட்டம்மா சீரக தண்ணீர் கொடுத்து விட்டுருக்கா அவ்வ்வ்வ்"

"அண்ணே அழாம மெதுவா உங்க அடைமொழியை சொல்லிட்டு போங்க பிளீஸ்"

"ம்ம்ம்ம் அது வந்து [[திடீர்ன்னு ஆவேசமாக]] நீ நாய்கிட்டே கடி வாங்கிருக்கியா வாங்கிருக்கியா ?" என்று விரலை கண்ணுக்குள்ளே குத்த வர...

"யோவ் இது என்னய்யா ஆரஞ்சு மிட்டாய் வாங்கிருக்கியான்னு கேட்ட மாதிரி இருக்கு ?"

"நான் வாங்கிருக்கேன் நான் வாங்கிருக்கேன் பல தடவை வாங்கிருக்கேன், பல விதத்துல வாங்கிருக்கேன், பல ரூபத்துல வாங்கிருக்கேன், அதுக்கு பிறகுதான் இந்த யோசனை வந்துச்சு "நாய் நக்ஸ்"ன்னு வச்சிட்டேன் இப்போ ஒரு நாயும் என் பக்கத்துல வாறதில்லை"

"அண்ணே போங்க போங்க"
 

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" பாட்டோடு தூரத்தில் "என் ராஜபாட்டை"ராஜா வெறியோடு வருவதை பார்த்து மனதினுள் "ஆஹா ஆபீசர் வீட்டு கல்யாணத்துக்கு வந்து அருகில் இருந்து "அண்ணே இங்கே நாங்க ரெண்டே ரெண்டுபேர் மட்டுமே ஹீரோ எப்பிடின்னு சொல்லுங்க பார்க்கலாம் ?"

"வாத்தி இங்கே ஒரே ஒரு ஹீரோதான் அது மாப்பிளை மட்டும்தான்"

"நான் சொல்லட்டுமா ?"

"சொல்லி தொலை"

"மாப்பிளை பேரும் ராஜா, என் பெயரும் ராஜா"ன்னு சொல்லி காதுல ரத்தம் பார்த்தவனாச்சே..."

"வா வா வா வாங்க வாத்தி நலமா ?"

"அண்ணே நாம இருக்குறது மதுரை..."மறித்து 

"பிச்சிபுடுவேன் பிச்சி, மரியாதையா அடைமொழிக்கு அர்த்தம் சொல்லிட்டு அப்பிடியே உள்ளே போயிரு ஆமா..."

முட்டுல கைவைத்து குனிந்து நின்று யோசிக்குறார்.

"நம்மளை நாமே என்னைக்கும் தாழ்த்திக்க கூடாது என்பதற்காக...அது என்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்பது என் ஆசை அதன் விளைவு இந்த பெயரு, அண்ணே அந்த மதுரை..."

"போய்யா போ கிளம்பிட்டாங்க..." என்று அலற...

"என்ன சத்தம் அங்கே ?" ஆபீசர் ஓடி வர..."
 

"என்ன மனோ ஒரே சத்தமா இருக்கு யாரோ அடிச்ச மாதிரி ?"

"ஆஹா இது வேறயா ஆபீசர்ர்ர்ர்ர் அது ஒண்ணுதான் பாக்கி, பஹ்ரைன்ல இருந்து வல்கரா தூக்கிட்டு  வந்து மாட்டிகிட்டு முழிக்குறேன்...இன்னும் எதெல்லாம் வந்து வயித்தை கலக்கப் போகுதோ..."

"அதோ தூரத்துல வாறது நம்ம மெட்ராஸ் பவன் சிவா மாதிரி இருக்கே மனோ..."

"அய்யய்யோ ஆபீசர், போன்லயே நான்ஸ்டாப்பா பேசுவானே ஆபீசர், இன்னைக்கு என்னவாகபோகுதோ ?"

தொடரும்...

நோ சீரியஸ் கூல்....

Friday, September 19, 2014

மதுரை பதிவர்கள் மாநாடு ஜாலி ஜாலி கும்மி !

மதுரை வலையுலக மாநாட்டில் பதிவர்களை வரவேற்று அவர்கள் அடைமொழி பற்றி கேள்வி கேட்கப் படுகிறது.

அதாவது வரவேற்பு வாசலில் நின்று கொண்டு அவர்கள் அடைமொழியின் அர்த்தம் கேட்டு மைக்கில் உள்ளே இருக்கும் அரங்கத்திற்கு தகவல் கொடுக்கும் பணி நாஞ்சில் மனோ"வுக்கு...



முதலில் முகத்தில் நான்கு கிலோ பருப்புடன் ஸாரி பவுடருடன் உள்ளே நுழைவது சிபி அண்ணன்...
 "வணக்கம் அண்ணே...பார்த்து ரொம்ப நாளாச்சு எப்பிடி இருக்கே ?"

"நான் நல்லா இருந்தா என்ன நல்லா இல்லாட்டா என்னடா, எனக்கு ஒரு போன் பண்ணுனியா ? இல்ல ஊருக்கு வரும் போகும்போது என்ன வந்து பார்க்க சொன்னியா ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சு..."

"அதெல்லாம் அப்புறம் பேசலாம் அண்ணே இப்போ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அஸைன்மென்ட் என்னன்னா..." இடைமறிக்கிறான்.

"அட்ரா சக்கை"தானே ?"

"ஆமாண்ணே ஆமா"

"அட்ரா"ன்னா சூப்பர் ஃபிகரு, சக்கை"ன்னா சப்பை ஃபிகரு [[ஹிந்தி தெரிஞ்சவிங்க கமுக்கமாக சிரிக்கவும்]] போதுமா ?"ன்னு உள்ளே போறான். [[ம்ஹும் இது திருந்தாது]]

விக்கி அண்ணன் டொம் டொம் என்று தரை அதிர நடக்க முடியாமல் [[அம்புட்டு வெயிட்டு]] நடந்து வருகிறான்...

"வா அண்ணே வா..."

"ஆரம்பமே சரியில்லையே...உன்னை யாருய்யா இங்கே நிப்பாட்டினது ?"

"அது கமிட்டி மெம்பர்ஸ் உத்தரவு அண்ணே"

"அப்போ நானு ?"

"நீயும் உறுப்பினர்தான்"

"அப்போ என்னிடம் கேட்காமல் உன்னை எப்பிடி இங்கே நிறுத்தலாம்"

"தூக்கிப்போட்டு மிதிச்சிபுடுவேன் மிதிச்சு [[தூக்க முடிஞ்சாத்தானே]] மரியாதையா உன் அடைமொழி பெயரை சொல்லிகிட்டு சிபி அண்ணன் பக்கத்துல போயி பம்மிரு"

"அது வந்து அண்ணே....[[விட்டத்தை பார்த்து யோசிக்கிறான்]] எனக்கு விக்கல் வக்கலா ச்சே விக்கலா அடிக்கடி வரும்டா அண்ணே அதான் "விக்கி உலகம்"ன்னு நானா ரோசிச்சு வச்சேன்"

அரங்கத்துக்கு மைக்ல தகவல் போகுது...

"சரவண பவன் ஹோட்டலை காலி [[சாப்பாட்டை]] பண்ணிட்டு விக்கலோடே விக்கி அண்ணன் வாறான் பராக் பராக்" அங்கே எல்லாரும் கலவரமாகிறார்கள்.

கே விஜயன் பவ்யமாக வந்து...
"ஓய் நீர் எப்ப ஓய் இங்கே வந்தீரு என்கிட்ட சொல்லாம ?"

கண்ணீரோடு "மக்கா, சென்னை வாறேன் வாறேன்னு டிமிக்கி குடுதேம்ல்லா அதான் சென்னை பார்டிங்க கூலிப்படை அனுப்பி தனி வி"மான"த்துல தூக்கிட்டு வந்துட்டாவ அவ்வவ்"

"சரி சரி அழாதேயும் ஓய்"ன்னு தொப்பை வயிறு வெளியே தெரியாமல் இருக்க சட்டையை கீழே இழுத்து விடுகிறார்.

"உங்க அடைமொழி பற்றி சொல்லுங்க ?"

"எருமைனாயக்கன் பட்டியில் நடந்த பதிவர் சந்துப்பு மாதிரி ஆகிறாதுல்ல ? அன்னைக்கு சன்னல் ஏறி குதிச்சதுல கால் முறிஞ்சி போச்சு ஓய், இப்போ இங்கே உம்மை பார்க்கும் போதே குலை நடுங்குது ஓய்...

மனதில் நின்றவை" என்பது யாதெனில் "போட்டோவில் நின்றவை" என்றும் சொல்லி சொல்லாமல் நானிருந்தால் இந்த நாடு என்னை கல்லெறியும் தக்காளி எறிஞ்சி  ஆஸ்பத்திரியில் படுத்து சூப்பர் ஸ்டார் கையால பூரிகட்டை..." கமல் போல புலம்ப...இடைமறித்து. 

"சரி சரீஈஈ உள்ளே போரும் ஓய்" நெஞ்சை கையில் பிடித்து செல்கிறார்.

"ஸ்கூல் பையன்" சரவணன்  வெடைப்பாக வேகமாக ஓடி வருகிறார்.


மனோ"வை அலட்சியமாக பார்த்துவிட்டு உள்ளே நுழைய முயற்சிக்க...

"ஹலோ ஹல்லல்லொ ஸ்டாப் ஸ்டாப்...இங்கே ஒருத்தன் வெறைப்பா நின்னுகிட்டு இருக்கேன்ல ?"

"ஹாங்.... பஹ்ரைன்ல இருந்து உம்மை தூக்கிட்டு வந்ததே நாங்கதான் நியாபகம் இருக்கட்டும்" மேலேயும் கீழேயும் பார்கிறார்.

"மெதுவா சொல்லுய்யா யாரும் கேட்டுற போறாயிங்க அண்ணன் பாவமில்ல"

"இப்போ உமக்கு என்ன வேணும் ?"

"எண்ணய்தான் வேணும் ச்சே அடைமொழி அர்த்தம் சொல்லுய்யா முதல்ல"

"ஊ....ஊ..... ஒ.... ஒ.... ஒ.... அவ்வவ்...." அழுது தரையில் உருள...

"ஆய்யே அழாதேய்யா அழாம சொல்லுங்க"

"அண்ணே என் பையனை ஸ்கூல் கூட்டிட்டு போகும்போது ஒருநாள் மழை பெய்ய, நான் அப்பிடியே மழையில் நனைஞ்சி சந்தோஷமா உருண்டு புரண்டு ரோட்டுல பாட்டு பாடினதை பார்த்து, பையன் வீட்டுல போட்டு குடுத்துட்டான், வீட்டம்மிணி பூரிகட்டையால சாத்தினது கூட பரவாயில்லை அண்ணே...

"ஸ்கூல் பையன்" மாதிரி ரோட்டுல உருளுவியா உருளுவியான்னு சொல்லி அடிச்சது என் மனசை ரொம்ப பாதிச்சுருச்சு அண்ணே அதான்"ன்னு  விக்கி விக்கி அழுதுட்டே போறார் பாவம்.

குடு குடு"ன்னு நல்லா "சிகப்பான" உருவம் ஒன்று ஹெண்ட் பேக்கை தலையில் வச்சிகிட்டு முகத்தையும் மூடிகிட்டு ஓடிவர...
"ஹல்லோ மேடம் யார் நீங்க ?"

"என்னாது யாரா...?" என்று பேக்"கை நகர்த்த...ஆஆ...செல்வி டீச்சர்...

ஜெர்க் ஆகி கால் கை தலை எல்லாம் கிர்ர்ர்ர்ர்ர்ர்...."டீச்சர் நீங்க இங்கே எப்பிடிலா ?"

ஆள்காட்டி விரலை உயர்த்தி "பிச்சிபுடுவேன் பிச்சி...நானும் பதிவர்தான் ஆமா..."ன்னு சொல்லிட்டு உள்ளே நுழைய...

"பிளீஸ் ஸ்டாப்  உங்க அடைமொழி சொல்லிட்டு போங்க டீச்சர்"

காதில் மெதுவாக.."மனோ அன்னிக்கு பதிவர்கள் சந்திப்பில் நடந்த மாதிரி கலவரம்...?"

"நோ நோ டீச்சர் நம்ம ஆபீசர் இருக்கார் கூடவே பிரகாஷும் இருக்காப்ல"

"அன்னைக்கு கலவரம் ஆனதுக்கே பிரகாஷ்தானே"டா"[[அவ்வவ்]]  காரணம் மனோ ? சரி, அதாவது நான் ஒருகாலும் [[ரெண்டு கால் ஆச்சே]] தரையில், மண்ணில், நிற்பவள் கிடையாது, எனது காலும். கையும். ஏன் மனசும் கூட வானில் பறந்து கொண்டேதான் இருக்கும், அதான் "என் மன வானில்"ன்னு வச்சிருக்கேன், போதுமா ?

"சரி சரி பார்த்துக்கலாம் போங்க டீச்சர்"

 [["யாருலேய் அங்கே வானில் பட்டம்"ன்னு கத்துறது ?]]
தொடரும்...

மனதின் கற்பனைதான் இது தப்பாக எடுக்காமல் நல்லா சிரியுங்க...

Monday, August 18, 2014

பாசம் என்பது யாதெனில்...!

நானும் நண்பனும், நண்பனின் அண்ணனும் என் அண்ணனும்...
ஒரு நன்னாளில் [[அப்போ]] ராத்திரி சரக்கு வாங்கி வந்து பாழடைந்த பங்களாவில் வெள்ளாவி ஆரம்பிக்க...ஆரம்பம் முதலே அந்த அண்ணன் தம்பிங்கதான் பேசிட்டே இருந்தாங்க, இவன் அவனை புகழ்றான் அவன் இவனை புகழ்றான்...

எங்க அண்ணன் எனக்கு கண்ணை காட்டிட்டானா...ஆட்டம் முடியுற வரைக்கும் பாசத்தை பொழிஞ்சுட்டு போனாங்க...

அடுத்தநாள் மத்தியானம் நாகர்கோவில்ல போயி ஒரு சினிமா பார்த்துட்டு பைக்கில் வரும் வழியில் வடக்கு தாமரை குளம் பக்கமாக பைக்கில் வந்த நண்பனின் அண்ணன்காரன் என்னை நிறுத்தும் படி சைகை காட்டினான்,

மண்டை வாயிலெல்லாம் ரத்த காயம்...

"அவனெல்லாம் ஒரு மனுஷனாடே ?"

"யாருண்ணே ?"

"ஒங் கூட்டுகாரன், [[தம்பி]] நேற்று ராத்திரியே அவன் பொண்டாட்டிகிட்டே போட்டு குடுத்துட்டான், அவ வந்து என் பொண்டாட்டி கூட மல்லுக்கு நிக்கா ?"

"சரி என்னத்த போட்டு குடுத்தான் ?"

"ட்வ்க்ப்வ்க்ட்ப் எஹெஹ் எப்ஜ்வேர் ஜெப்ப்கே"

"ஓகே ஓகே திட்டாதீங்க..."

"அவனை கொல்லாம விட மாட்டேன் போயி சொல்லிரு" போயிட்டார்.
சரி அண்ணன்காரனுக்கே இப்பிடி மண்டை வீங்கி இருக்கே தம்பிகாரனை போயி பார்ப்போம்ன்னு போனா...அங்கேயும் செம் பிளட்...மண்டை வீங்கி காயங்களுடன்..அவனிடம் கேட்டாலும் அண்ணன்காரன் சொன்ன அதே டையலாக்..."அவன் ஒரு மனுஷனாடே ?"

கடைசிவரை ரெண்டு பயபுள்ளையும் உண்மையை சொல்லல.

எங்க அண்ணன்கிட்டே வந்து கேட்டேன் என்னாச்சுன்னு "சின்னவன் அவன் பொண்டாட்டிகிட்டே எங்க அண்ணன் உங்க குடும்பத்தை "..." இப்டி திட்டினான்னு சொல்ல, காலையிலேயே பொண்டாட்டியும் பொண்டாட்டியும் சேலையை கிழிச்சு, இவனுகளையும் கட்டி உருள வச்சிட்டாங்க..."

"மரியாதையா நீ மும்பைக்கு பெட்டியை கட்டு போலீஸ் கீலிஸ் வந்துச்சுன்னா வெளிநாட்டு காரன்னு உன்னை பிடிச்சு வச்சு காசை புடுங்க போறானுக"

எனக்கு அண்ணனும் நண்பனும் எங்க அண்ணன்தான், சுள்ளான் மாதிரிதான் இருப்பான் ஆனாலும் பக்கத்துல நிக்க பயமா இருக்கும், படார் படார்ன்னு அடிச்சிருவான், இப்பவும்...

கல்யாணம் கட்டி குழந்தை பிறந்து குழந்தை சைக்கிள் படிச்சிட்டு இருக்கும் போது [[மும்பையில் இருந்து ஊர் போனபோது]] ஒரு சண்டையை விலக்கு பிடிக்க போனபோது, "எலேய் போவாத போவாத"ன்னு சொல்லியும் கேக்காம போனதுக்கு...

எங்க மாமியார் மனைவி முன்னிலையில் எனக்கு அடி விழுந்துச்சு பாருங்க, ரெண்டு பேரும் மிரண்டு போயிட்டாங்க, இம்புட்டுக்கும் மும்பைல நம்ம ஏரியாவையே அடங்க வச்ச இவனான்னு இப்பவும் சொல்வாங்க ஹி ஹி...

என்னமோ அண்ணன் அடிச்சா எனக்கு வலிக்கிறதே இல்லை, சின்ன பிள்ளையில இருந்து பழக்கமாகிருச்சு, சின்ன பிள்ளையில எங்கே போனாலும் என் கையை பிடிச்சுதான் கூட்டிட்டு போவான், என்னைவிட மூன்று வருஷம் மூத்தவன்.

ஆனால் எங்க அக்காவை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது, விவரம் தெரியும் வரையில், அவனுக்கும் மூத்தவள் அக்கா..அக்காவை என்னை தொடவே விடமாட்டன், அடிதான்...!

எப்பவும் அண்ணன் கூடவே இருக்கணும் போல இருக்கு, ஒரு கவலை இல்லாமல் அவன் கூட இருக்கலாம்...

ஐ மிஸ் யூ அண்ணே...

Thursday, August 14, 2014

இருப்பாய் தமிழா இந்தியனாய்...!

சுதந்திரமான தன் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு, தேசிய கொடியை எரிப்பதும், உச்சா போவதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்...!

அது, உண்ட பாத்திரத்தில் துப்புவதற்கு சமமாகும்.

சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறுவோம், எல்லையில் நமக்காக நம் தாய் மண்ணிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள் ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துவோம்...

இன்னமும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வீர வணக்கம் சொல்லுவோம்...

யாவருக்கும் இனிய சுதந்திர தினம் வாழ்த்துக்கள்...

---------ஜெய் ஹிந்த்---------







Tuesday, July 22, 2014

நீர் என்னை காண்கிற தெய்வம் !

நேற்று ரூம் இருக்கா என்று கேட்டு ஹோட்டல் நிலவரம் பற்றி அம்மிணியிடம் விசாரித்து கொண்டிருந்த ஒரு இந்தியர்...நான் எட்டி பார்த்தபோது எங்கயோ பார்த்த நியாபகம் பட்டென்று நியாபகம் வரவில்லை...
 

அவருக்கு தெரியாமல் நானும் எனக்கு தெரியாமல் அவரும் உற்று பார்த்துக் கொண்டோம், பிடி கிடைக்கவில்லை....அப்புறம் லேசா நியாபகம் வந்து போயி மெதுவா...

"மிஸ்டர் ஷா..." என்று மெல்ல அழைத்தேன்.

"எஸ் யூ....?"

"ஐயம் மனோஜ், பிஃபோர் வொர்க்கிங் ஃபால்கன் இண்டர்நேசனல் ஹோட்டல்"

"வாவ் மை காட்...மனோஜ் ஹவ் ஆர் யூ ?"

"நலம் சார் நீங்க எப்டி இருக்கீங்க எங்கே இருக்கீங்க ?"

"நான் அதே ஹோட்டலில்தான் இருக்கேன் மனோஜ், நீ இம்புட்டு உசரத்துக்கு வருவேன்னு எனக்கு முன்பே தெரியும் உன் கண்களின் பிரகாசம் அதை உணர்த்தியது உண்டு எனக்கு, காட் பிளஸ் யூ..."

காபி ஷாப்பில் போயி காப்பி குடித்தவாறே பரஸ்பரம் விசாரித்து விடை பெற்றார்.


பனிரெண்டு வருஷம் பின்னோக்கினேன்...அதாங்க பிளாஷ் பேக்...

ஃபாலகன் இன்டர் நேசனல் இரண்டு நட்சத்திர ஹோட்டல்...நாப்பது ரூம்ஸ்...ஒரு ஆங்கில டிஸ்கோ...ஒரு இந்தியன் டிஸ்கோ...ஒரு அரபி டிஸ்கோ...ஒரு பார்...காபி ஷாப் வித் ரூம் சர்வீஸ்...

அனைத்து கேரளா நடிக நடிகைகளும் கேரளா விவிஐபிகளும் வந்து போன இடம்...நான் ரூம் சர்வீஸ் வெயிட்டர்...ஷா சார் ஆல் ஹோட்டல் இன்சார்ஜ் !

தெய்வ அனுகிரகத்தால் இன்று நான் நான்கு நட்சத்திர ஹோட்டலின் இன்சார்ஜ், ஷா சார் இப்பவும் அங்கே அதே பதவியில்...!

 பதிமூன்று மணி நேரம் வேலை, லீவில்லாமல் இரண்டு வருஷம் வேலை பார்த்துட்டு லீவுக்கு ஊருக்கு போனபோது ஐந்துநாள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கின போது கேலி செய்தனர் குடும்பத்தினர், நம்ம உழைப்பு அவங்களுக்கு எங்கே தெரியப் போகுது ஆனால் நம்மை படைத்த தெய்வம் நம் உழைப்பை காணுகிறான் !

காலம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது இல்லையா !

கண்ணீரோடு என்னை படைத்தவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்...

Sunday, July 20, 2014

பெண்களின் சின்ன சின்ன ஆசைகள் !

காய்கறி வாங்க மார்கெட்டுக்கோ அல்லது மளிகை கடைக்கோ போனது கிடையாது, அப்பிடியே போனாலும் அம்மா கூட அல்லது வீட்டம்மா கூட டைம்பாஸ் ஆக போறது உண்டு, அவிங்க என்ன எடுக்குறாங்களோ வாங்குறாங்களோன்னு பராக்கு பார்ப்பதோடு சரி...


இடையில் நண்பர்கள் போன் வந்துச்சுன்னா ஒரே ஓட்டமா ஓடிருவேன்.


ஒருநாள் சும்மா பார் போயிட்டு திரும்பும் போது மார்கெட் களை கட்டி இருக்க, சும்மானாச்சும் ஏதாவது காய்கறி வீட்டுக்கு வாங்கி போகலாம்னு கிளம்பினேன்.


தக்காளி கிலோ 20 ரூபாய் 


வெங்காயம் கிலோ 20 ரூபாய் 


கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய் 


முருங்கைக்காய் கிலோ 40 ரூபாய் 


கோவைக்காய் கிலோ 30 ரூபாய் 


வெள்ளரிக்காய் கிலோ 35 ரூபாய் 


மிளகாய் 5 ரூபாய்க்கு மட்டும் 


உருளை கிழங்கு கிலோ 20 ரூபாய் 


வெண்டைக்காய் கிலோ 30 ரூபாய் 


இஞ்சி ஐந்து ரூபாய்க்கு மட்டும் 


எலுமிச்சை பழம் ஒன்று இரண்டு ரூபாய் 


கறிவேப்பிலை ஓசி

ஆப்பிள் கிலோ 140 ரூபாய் 


பப்பாளி பழம் ஒன்று 60 ரூபாய் 


சீத்தாப்பழம் கிலோ 80 ரூபாய் 


வாழைப்பழம் டஜன் 50 ரூபாய் 


மாம்பழம் கிலோ 80 ரூபாய் 


இம்புட்டையும் வாங்கியாச்சா...இனி ஒன்னரை கிலோ மீட்டர் நடந்தாதான் வீட்டுக்கு போகமுடியும் ஆட்டோகாரங்க பக்கத்துல என்பதால் வரமாட்டாங்க, எனக்கு இத்தனையும் தூக்கிட்டும் போக முடியாது.


சுத்து சுத்தி பார்த்தேன் யாராவது வெட்டியா இருக்கானான்னு, ஒருத்தன் அம்புட்டான், தம்பி இதை தூக்கிட்டு வந்தியன்னா அம்பது ரூபாய் தாரேன் வாறியான்னு கூப்பிட்டேனா அவனோ...


"அட போய்யா இருநூறு ரூபாய் தந்தியன்னா வாறன் அதுவும் இப்பவே தரனும்"ன்னு சொல்ல வேற வழியே இல்லாம போச்சா...


அவனை கூட்டிகிட்டே வீடு பக்கத்துல வந்ததும் அவனிடம் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி நான் தலையிலும் கையிலும் வைத்து விட்டு அவனை போக சொல்ல...ஒரு மாதிரி என்னை பார்த்து விட்டு சென்றான்.


வீட்டுக்கு நான் வந்த கோலத்தை பார்த்த வீட்டம்மாவுக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம், என் மகள் ஐஈஈ என்று பைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து பார்க்க...


வீட்டம்மா முகத்தில் வழிந்த சந்தோசம் பார்க்கணுமே அப்படியே பூரித்து போனாள், "எப்பா என்னால நம்பவே முடியல நீங்களா வாங்கிட்டு தூக்கிட்டு வந்தீங்க ?!"


சாயங்காலம் வீட்டம்மாவின் மராட்டி தோழி வீட்டுக்கு வந்தபோது "எடி எம்மாப்பிளை காய்கறி பழம்ன்னு நிறைய வாங்கி தூக்கிட்டே வந்துருக்கார் எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை" என்று இவள் சொல்ல...


"ஆங்...வாங்கிட்டு வந்தான்னு சொல்லு தூக்கிட்டு வந்தான்னு சொல்லாத கூட ஒரு ஆளு சுமந்துகிட்டு வந்தான்" [[பலமாத்தான் வாட்ச் பண்ணுறாங்க போல]]
அப்புறமென்ன வாயிலேயே அடி விழுந்துச்சு, "அய்யோ இனி மார்கெட்டுக்கு நான் தனியா போகணுமே"ன்னு மராட்டிகாரி புலம்பிகிட்டே போனாள்.


இப்போவெல்லாம் ஊருக்கு போனால் ஆர்டர் வந்துரும் அத்தான் இன்னிக்கு இது இல்லை அது இல்லைன்னு வாங்கிட்டு வர சொல்லிருவாங்க, நமக்கும் ஒரு வகையில வசதியா போச்சு, பின்னே அந்த கேப்ல ஸ்மல் இல்லாத சரக்கா சாத்திட்டு வந்துருவொம்ல்ல, எங்கே போனேன்னு கேக்க முடியாதே.


இந்த தடவை ஊருக்கு [[கன்னியாகுமரி]] போன போது இதே போல அம்மாவுக்கு காய்கறி வாங்கிப் போனேன் [[முதல் தடவை]] அம்மாவுக்கு கண்ணுல நீரா கொட்டிருச்சு "எலேய் மக்ளே தம்பி....... நீயாலேய் வாங்கிட்டு வந்தே"ன்னு ஆர்வமா பைகளை பிரிச்சு ஆச்சர்யமாக பார்த்தாங்க...


சிம்பிளான சில சந்தோஷங்களை அவர்களுக்கு கொடுக்க தவறிவிட்டோம் என்ற உண்மை அப்படியே முகத்தில் அறைந்து விட்டது !

Thursday, July 10, 2014

போலீஸின் கொசு மருந்தடித்தல் !

ம்ம்ம் இன்னைக்கு "கும்கி" படம் பார்த்தேன்....செங்கோவி ஸ்டைல்ல படத்தை உரிச்சா...

கிளைமாக்ஸ்ல யானை செத்துரும்ன்னு யானை லாரியை விட்டு இறங்க மறுக்குறப்பவே  தெள்ள தெளிவா தெரிஞ்சிருது.

எங்கப்பனை குடிக்க வச்சே கொன்னது நீதானென்னு சொன்னதில் இருந்தே தம்பி ராமய்யாவின் காமெடி அவுட்டே.

ஹீரோ எப்பவுமே சீரியஸாவே இருக்கார், அந்த கேரக்டராகவே மாறி இருக்கார் விக்ரம் பிரபு.

ஹை பண்ணு மாதிரி பொண்ணு.... [[கதாநாயகி]] கொஞ்சம் நடிக்கவும் செய்யுது.

"அய்யய்யோ" பாட்டு செம மெலடி ரொம்ப நாளைக்கு பிறகு காதுக்கு இனிமை.
காமெரா சான்சே இல்லை கண்ணுக்கு குளிர்ச்சியோ குளிர்ச்சி, அதுவும் அந்த அருவியின் மேலிருந்து கேமரா...எனக்கே தலை சுற்ற அப்பப்பா !

மூன்று வில்லன், ஒன்று காட்டு யானை அடுத்து அந்த கிராம தலைவரும் கிராமமும், இன்னொன்னு ஃபாரஸ்ட் அதிகாரிகள்.

ஆக மொத்தத்தில் காதல் தோல்வி [[கிளைமாக்ஸ் சொதப்பல்தான், காதலர்களை பாரம்பரியத்தை மீறி கிராமத்தை காத்த யானைக்காகவும், ஹீரோவின் நண்பன் மற்றும் மாமாவுக்காக அனாதையான ஹீரோவுக்கு ஊர் தலைவரின் பொண்ணை சேர்த்து வைத்திருக்கலாம், ம்ஹும் அதானே நம்ம சினிமா பண்பாடு ?]]

விமர்சனம் சிம்பிள்...."யானை"
---------------------------------------------------------------------------------------------------

அப்பிடியே போனா எப்பிடி இதையும் படிச்சுட்டு போங்க...


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போலீஸ், உளவுத்துறை போன்றவைகள் குற்றவாளிகளை வலைவீசி பிடிக்கும் விதத்தின் பெயர் என்ன தெரியுமா ?
"கொசு மருந்தடித்தல்"

தெருவுல மருந்தடிச்சா கொசு வீட்டுக்குள்ளே வந்து ஒளித்துக் கொள்ளும், வீட்டுக்குள்ளே மருந்தடித்தால் கொசு வெளியே ஓடிவிடும் !

அப்படிதான் இவர்களும் பத்திரிக்கைகளுக்கு நியூஸ் கொடுப்பார்கள், பெரும் குற்றம் செய்தவன் எவனும் பத்திரிக்கை பார்க்காமல் இருக்க மாட்டான் இல்லையா ?

"இதோ குற்றவாளியை சுற்றி வளைத்து விட்டோம் [[புரளிதான்]] என்றால் குற்றவாளி கலங்கிய குளத்தின் மீனாவான், ஒரே அமுக்கு...
அப்புறம்...

குற்றவாளி தன் முகத்தில் மாற்றம் கொண்டு வந்துவிட்டான் அவனை கண்டு பிடிக்க மிக சிரமமாக இருக்கிறது என்றால், குற்றவாளி பக்கத்தில் இருக்கிறான் என்று அர்த்தம், அவனும் சந்தோஷமாக வெளியே வருவான் ஒரே அமுக்கு...

அப்புறம்...?

அப்புறம் என்ன அப்புறம் ? என்கவுண்டர்தான் அப்புறம் !
கூட்டி கழிச்சு பாருங்க நான் சொல்றது சரியான்னு ?

ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ ஆபீசர் அவ்வ்வ்வ்....

Monday, June 30, 2014

அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலி !

https://www.facebook.com/ngomathi?fref=ts பிரபல பதிவுலக எழுத்தாளர் கோமதி நடராஜன்.

ஐயோ அக்கா....நெஞ்சம் பொறுக்குதில்லையே...இனிய எழுத்துகளால் என்னை உரிமையோடு கொஞ்சி கலாயித்து மகிழ்வித்த தாயே...உன்னை பார்க்காமலேயே என்னை பிரிந்து விட்டாயே அக்கா...

அக்கா போனில் பேசிய உங்கள் சப்தம் என்றும் என் நெஞ்சில் இருக்கும்...

தம்பியின் ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலியும், சொர்க்கத்தில் நாமும் சந்திப்போம் நிச்சயமாக...

எங்கள் அக்கா கோமதி நடராஜன் அவர்களின் மறைவை அடுத்து, நாஞ்சில் மனோ வலைத்தளங்கள் யாவும் கண்ணீரோடு இரண்டு நாள் மவுனம் கொள்கிறது மிகுந்த கண்ணீரோடு....

அக்கா.....அக்கா....அக்கா.........................


உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Tuesday, June 24, 2014

பத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ?

பத்து கேள்விகளுக்கு நீங்களும் பதில் சொல்லுங்க இல்லைன்னா கனவுல வந்து கண்ணை குத்திருவேன்னு ஏஞ்சல் மேடம் சொன்னதால, உண்மையாவே கனவுல வந்துறப்பிடாதே அதான் உடனே பதில் சொல்லிட்டேன்.


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
    கொண்டாட விரும்புகிறீர்கள்?


கலைஞர் போல [[அவரது குணமல்ல குடும்பம்]] கொண்டாடுவேன்.

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கப்பல், ரயில் மற்றும் விமானம்...... ஹி ஹி......சரி விடுங்க...கிட்டார் இசை மற்றும் டிரம்ஸ் அப்புறம் பெண்களின் மனசு !

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

பெண்களுடன் பணி புரிவதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை, எனக்கு சிரிப்பு வந்தால் இழவு வீட்டுலேயும் சிரிச்சு தொலைச்சிருவேன், சீரியஸான இடங்களுக்கு போனால் ஒன்று என் அக்காள் என் கூட இருந்து கவனிச்சுப்பாங்க, இல்லைன்னா வீட்டம்மா.

சிரிச்சு செமையா வாங்கி கட்டியிருக்கேன் !

விழுந்து விழுந்து சிரிச்சதுன்னா நம்ம விஜயன் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டது, அதாவது....

மலேசிய அரசாங்கம் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வந்துருக்காம் "முஸ்லீம் அல்லாதோர் அல்லா என்று சொல்ல கூடாதாம்" அதுக்கு விஜயன் பதில்..."செத்தாண்டா மலையாளிகள்" என்று...ஏன்னா ஒரு நாளைக்கு எந்த மலையாளியாக இருந்தாலும் சராசரி நூறு தடவையாவது அல்லா [[இல்லை]] என்ற வார்த்தையை பிரயோகிப்பார்கள்...

மலேசியாவின் தண்டனை தெரியும்தானே ?


4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?


இங்கே [[பஹ்ரைன் மற்றும் மும்பை]] பவர்கட் இருப்பது இல்லை அப்படியே ஊரில் இருந்தாலும் வெளியே காற்று வாங்க மற்றும் தோப்பு காட்டில் சிறிய வேலைகள் செய்துவிட்டு லேஸா மப்பும் ஏத்திகிட்டு வர வேண்டும்.


5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 


ஆஆ...முப்பத்தி ஒன்பதுதானே தாண்டியிருக்கு அவ்வ்வ்வ்....
என்னைப்போல நாடோடியாக வாழாதீர்கள், அருகில் தாய் தந்தை ஆதரவும் அன்பும், மனைவி பிள்ளைகளின் அன்பு இல்லாமல் அப்பா வாழ்ந்து விட்டேன் [[இருக்கிறேன்]] நீங்கள் அப்படி இல்லாமல் சேர்ந்தே வாழுங்கள்.


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?


ஏழ்மை மற்றும் நோய்கள் !


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பலரிடமும் கேட்பதுண்டு அதில் என் மனதை அசைத்த ஒரு அட்வைஸ் விஜயன் மற்றும் நம்ம ஆபீசரும் சொன்னது, "மனோ எப்போதும் ஒருப்போல இருக்காது நாலு காசு சேர்த்து வைக்கனும் நமக்கு வயசாகிட்டு இருக்கு என்பதை நினைவு கொள்ள வேண்டும்" என்றதுதான், உஷாரா இருக்கேன் ஆண்டவர் கிருபையில்...!


8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

கேள்வியே இல்லை தூக்கிப்போட்டு மிதிதான்...[[பயந்துராதீக]]


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு ? நண்பனுக்கு நண்பனின் மனசு நன்றாகவே தெரியும் கட்டிபிடிக்கும் பொது ஆறுதலாக உணர்வான்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

சத்தம் காட்டாமல் நண்பர்களுக்கு போன் போட்டு வர செய்து பாட்டல் பற பற...சாப்பாடு நற நற...அப்புறம் வீட்டம்மா வந்து தர தர அவ்வ்வ்வ்....

தொடர ஆசைப்படுபவர்கள் தொடரலாம்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!