Thursday, March 29, 2012

நாசமாப்போன நாட்டு நடப்புகள்......!!!

ஐதராபாத்: விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியது தொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கை குழு சட்சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பலன் அடைந்த பெரும் நிறுவனங்கள் ரெட்டியின் மகன் ஜெகன்மோன் ரெட்டி நடத்தும் நிறுவனங்களில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



# ஆஹா என்னமா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, நடந்தது, எலேய் கொய்யால சண்முகபாண்டி எட்றா அந்த வீச்சருவாளை, இந்திய மக்கள் தொகை 120 கோடி, உலக மக்கள் தொகை 700 கோடி...[[ ஒரு லட்சம் கோடி பெருசில்லையாம் இந்த போக்கத்த நா.......ளுக்கு]]

திருச்சி: திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.


# ஒரு மாஜி முன்னாள் [[பின்னால்'ன்னு கேக்கப்புடாது]] அமைச்சரின் தம்பி கொல்லபட்டதுக்கு பதட்டம்னு எதுக்குய்யா பொது மக்களை பயமுறுத்துறீங்க, அன்னைக்கு தா கிருட்டிணனை கொன்னவணுக இன்னைக்கும் உசிரோட கம்பீரமா சுத்திகிட்டு இருக்கானுக, ஸ்டாலினின் உயிர் தோழன் அண்ணாநகர் ரமேஷை கொன்னவணுக உயிரோடே சுத்திகிட்டு இருக்கானுக, ம்ஹும் பதட்டமாம் பதட்டம், நாங்க [[மக்கள்]] பதட்டம் இல்லாமல்தான் இருக்கோம், நீங்கதான் பதட்டமா இருக்கீங்க அடுத்த கத்தி உங்களுக்கு வந்துருமோன்னு போங்கடா...!!!

மின் உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கூட, சரியாக புரிந்து கொள்ள வக்கில்லாத தி.மு.க.,வினர், மின் உற்பத்தியை பற்றி பேச அருகதை கிடையாது'' என, முதல்வர் ஜெயலலிதா காட்டமாக பேசினார்.


# ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ மேடம் முதல்ல மின்சாரம் பற்றி உங்களுக்கு புரிந்துணர்வு இருக்கான்னு கொடநாட்டுல போயி ரூம் போட்டு யோசிங்க முடியல....!!!

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலைக்கு, அரசியல் காரணமா அல்லது தொழில்போட்டியா என்ற கோணத்தில், ஐந்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியினர் பொறுமை காக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


# ஹே ஹே ஹே ஹே அமைச்சர் மரியம்பிச்சையை கொன்னவனையே இன்னும் பிடிக்கலையாம் இது வேறயா, எல்லாம் டீலிங்ல முடிஞ்சிரும்'ன்னு யார்டா அங்கே சத்தமா சொல்றது ராஸ்கல்.

எம்.ஜி.ஆர். பெயரை தே.மு.தி.க.,வினர் உச்சரிப்பதற்கு அருகதை இல்லை,'' என்று சட்டசபையில் அமைச்சர்கள் தெரிவித்தனர். 


# யார்டா அது, கலைஞரே எம்ஜியார் பெயரை உச்சரிக்கும் போது, உங்க மம்மியே அவர் படத்தை விரும்பாத போது இதென்ன சின்னபுள்ளதனமா இருக்கு..???

தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை,'' என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.


# தமிழ்நாட்டுக்கு கொடுக்க மாட்டானாம் ஆனால் பாகிஸ்தானுக்கு கொடுப்பானாம் என்னே ஒரு உத்தரவாதமான பொழைப்பு, தமிழக மத்திய அமைச்சர்கள் மானம் கெட்டவர்கள் என்று யாராவது சொல்லுங்க பாப்பேம் ச்சே ச்சீ பாப்போம்.

அக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என, சசிகலா வெளியிட்ட அறிக்கையை தயாரித்ததே, சசிகலாவின் உறவினர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


# ஆண்டவா தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாத்துய்யா ராசா, சனியனுக ஒழியனும் நாட்டுல மழை தண்ணி [[மொடாஸ் இல்லை]] பெய்யனும் பார்த்து செய் ஆண்டவா.....
,
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் உதயகுமாரின் வீடு மற்றும் அறக்கட்டளையில், டில்லியில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இதில் உதயகுமார் நடத்தி வரும் சாக்கர் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

[[http://www.kousalyaraj.com/2012/03/blog-post_30.html இந்த லிங்கையும் படியுங்க]]

# அய் அய் பிடிக்காதவங்களை பொய் கேசுல பிடிக்கிறதுக்கு என்னமா பாடு படுராங்கப்பா, இந்த வேகத்தை ஆட்சியிலும் மக்கள் நலத்திலும் காட்டுங்கடா வீணா போனவுனு[ளு]களா வெண்ணை பன்னாடைகளா....

நான் தரகர் கிடையாது - குஷ்பு.


# ஹா ஹா ஹா ஹா ஆண்டி இருந்தாலும் உங்க நேர்மை என்ற கருமை எருமை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனாலும் உண்மையை இப்பிடி போட்டு உடைக்கனுமா என்ன..?

டிஸ்கி : பயணங்கள் முடிவதில்லை தொடர் அடுத்த பதிவோடு நிறைவடையும்......!!! 

Wednesday, March 28, 2012

மஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....!!!

டவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அனில் அண்ணனின் அக்காள் மகன் மஞ்சள்காமாலை நோய் வந்து சாககிடந்தவனை [[எவ்வளவோ மருந்து சாப்பிட்டும்]] இங்கே கொண்டு வந்து காப்பாற்றியதை சொன்னது பற்றி ஆபீசரிடமும் நண்பர்களிடமும் சொல்லி ஆச்சர்யப்பட்டேன்....!!!


[[ரிசார்ட் முன்பு என் பார்வையில்]]

மஞ்சள்காமாலை நோய் எவ்வளவு முற்றினாலும் கவலையே படாமல் பாபநாசம் கொண்டு போங்கள் உடனே குணமாகிவிடும், பாபநாசம் போயி யாரிடம் கேட்டாலும் வழி சொல்லி தருவார்கள் டென்ஷனே இல்லை...!


திருநெல்வேலி நோக்கி இனிய பாடல்களுடன் கார் சறுக்கியது சூரியனும் கண்ணை விரிக்க ஆரம்பித்தான், வழியில் ஒரு ஊர்வலம் போனது குழந்தைகள் முதல் வயதானவர்கள் உட்பட நிறைய ஜனங்கள் போயி கொண்டிருந்தார்கள்.

[[ரிசார்ட் பின்புறம் ஒற்றையாக நிற்கும் ஒரு புளியமரம்]]

அதை நடத்தி கூட்டி போய் கொண்டிருந்த ஒரு பாதிரியார் குச்சி ஐஸை சூப்பி கொண்டே நின்றிருந்ததை பார்த்து ரசித்து சிரித்தோம், பின்னே அந்த சூட்டில் அவருக்கும் அது குளு குளுப்பாக இருந்திருக்கும் இல்லையா...!!!

[[சூரியன் கண்ணை கசக்கி வெளியே வரும் நேரம்]]

ஹைவேயை விட்டு கார் சந்துகளில் புகுந்ததும், எனக்கு புரிந்துவிட்டது நெல்லை வந்துவிட்டோம் என்று, சந்துகளில் உருண்டு புரண்டு ஓடியது கார், விஜயனையும் நன்றாக ஒட்டி கொண்டே வந்தோம் ஹே ஹே [[499]]

[[எனது பார்வையில் தலை அணை]]

வழியில் சுதன் இறங்க மிக்க நன்றி சொல்லி புறப்பட்டோம், நேரே கார் திவானந்தா'வின் ஜென்னத் ஹோட்டல் முன்பு வந்து பிரேக் இட்டது பஸ்நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது........!


தொடரும்...............

[[நண்பன் ராஜகுமாருடன் விஜயன்]]

டிஸ்கி : ஒரு நாதாரி லகுடபாண்டி ராத்திரி ரெண்டு மணிக்கு போன் போட்டு என்னை கலாயிக்க நினைச்சவருக்கு பல்பு...............நான் போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வைத்து விட்டேன் ஹே ஹே எப்பூடி.....

Monday, March 26, 2012

ஒரு பதிவரை சந்திக்க முடியாமல் ஏமாந்த தல அஜித்....???!!!!!

மும்பை ஏர்போர்ட் முன்புள்ள கீரை தோட்டத்தில் நானும் நண்பன் கிருஷ்ணாவும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் போனவாரம், அப்படியே நண்பர் ரவியை [[சினி ஃபீல்டில் அசிஸ்டென்ட் காமெரா மேன்]] பற்றி பேச்சு வந்தது அரைமணி நேரத்துக்குள் எழாயிரம் ரூபாய் சீட்டு விளையாடி தோற்றுப்போன கதையை கேட்டு மனம் நொந்து போனேன்.


[[கிருஷ்ணா, ரவி, நான்]]

சரிய்யா போனை போடு இப்போ எங்கே இருக்கிறான் ஆளை பிடிப்போம்னு சொன்னதும் கிருஷ்ணா போனை போட்டான் ரவிக்கு, அண்ணே எங்கே இருக்கீங்க'ன்னதும், டேய் நான் பில்லா 2 சூட்டிங் இங்கே ஆரேகாலனியில் நடந்துட்டு இருக்கு, தல அஜித்தும் ஸ்பாட்ல இருக்கார் மனோ'வை கூட்டிட்டு வான்னு சொல்லவும்....


கிருஷ்ணா அண்ணே வாங்க போயி பார்த்துட்டு வருவோம்னு சொன்னான் லஞ்ச் பிரேக்கில் அஜித் இருந்ததால் சாயங்காலம் வந்தால் நல்லது என ரவி சொல்லவும் ஓகே சொல்லிட்டு வீட்டுக்கு சாப்பிட கிளம்பினோம். கீரை தோட்டம் நிம்மதி ஆனது...!


மூன்று மணிக்கு சூட்டிங் ஸ்பாட் நோக்கி நானும், கிருஷ்ணாவும் என் மகளும், மகளின் நண்பியுமாக கிளம்பினோம், குழந்தைகளை ஒரு பூங்காவிற்கு அழைத்து செல்வதாக ஏற்பாடு, எனவே அவர்களுக்கு வேண்டிய திண்பண்டங்களை காரில் ஏற்றி பறந்தோம்...!


ஆரேகாலனியில் உள்ள சூட்டிங் ஸ்டுடியோவில்தான் சூட்டிங் நடந்தது யாருக்குமே அனுமதி இல்லை, ஆனால் நண்பன் வெளியே வந்து எங்களை உள்ளே அழைத்து சென்றான்.


உள்ளே போனால் அஜித் இல்லாமல் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது, கோவா ரெஜிட்ரேஷன் ஜிப்சி வேனில் மிலிட்டரி ஆட்களும், நேவி ஆபீசர்களுமாக வேனை வேகமாக கொண்டு வந்து நிறுத்தி, வேகமாக இறங்கி துப்பாக்கிகளை நீட்டி கொண்டிருந்தார்கள்.

[[பில்லா 2 அசுரவேகத்தில் சூட்டிங்]]

யப்பா இந்த ஒரு சீனை ஒரு நூறு தடவையாவது மாத்தி மாத்தி எடுந்தாங்க பாருங்க நொந்து போனேன், யோவ் தல'யை கூப்புடுய்யா பார்த்துட்டு கிளம்புறேன்னு சொன்னதுக்கு, இல்லை அவர் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார் இப்போ அவர் வருகிற நேரம்தான் பொருய்யா என்றான் நண்பன்.


யப்பா நின்னு நின்னு குழந்தைகள் கடுப்பாக ஆரம்பிச்சுருச்சு, வெயில் வேற கொடுமையா அடிக்குது, ஆனால் மடக்கி மடக்கி சூட்டிங்க எடுத்த அந்த மக்களை நினைச்சா கண்ணுல ரத்த கண்ணீரே வந்துரும் போல இருந்தது, வெயில்ல அம்புட்டு உழைப்புய்யா அம்புட்டு உழைப்பு....!!

[[பின்னால் சூட்டிங்]]

ஒரு சினிமா வந்துச்சுன்னா அம்பது ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்து மட்டமாக விமர்சனம் எழுதுறவங்க கொஞ்சம் சூட்டிங் ஸ்பாட்டையும் போயி பார்க்குறது நல்லது, ஏன்னா ஒரு சினிமா எடுக்க அவங்க படுற கஷ்டம் இருக்கே அது சொன்னால் புரியாது, அது அவர்களுக்கு பிரசவ வேதனை, சுகபிரசவம் ஆகவே பிரயாசபடுகிறார்கள்.

[[இடம் மாற்றி மாற்றி சூட்டிங்]]

வெயில் கொடுமை தாங்கமுடியாமல் கிளம்பினோம் பொறுமை இல்லாமல் ஏன்னா தல'யை இன்னும் காணோம், நண்பன் சொன்னான் நில்லுய்யா இப்போ வந்துருவார்னு சொல்லியும் ஆளை காணாமல் கிளம்பியே விட்டோம். குழைந்தைகளுக்கு அஜித்தும் வேண்டாம் விஜய்யும் [[பன்னிகுட்டி மன்னிக்க]] வேண்டாம் பூங்காவில் விட்டால் போதும்னு அலறியே விட்டார்கள்.


கார் பூங்காவை நோக்கி சீறியது, திடீரென ரவி இடமிருந்து போன், யோவ் தல வந்துட்டாருய்யா சீக்கிரம் வாங்க'ன்னு கூப்பிட, போய்யா நாஞ்சில்மனோ'வை சந்திக்க தல'க்கு கொடுத்து வைக்கவில்லை ஸாரி சொல்லிரு அவரிடம் [[?!]] என்று போனை கட் பண்ண கிருஷ்ணா சிரிச்ச சிரிப்பு இருக்கே முடியல....!!!

இன்னும் பல போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு......

 மகள் ஜோய் அன்ட் அவள் நண்பி மின்னு என்ற மினல்.....


 பின்னால் சூட்டிங் நடக்கிறது...

 எத்தனை ஷாட்'டுய்யா எடுப்பீங்க முடியல போங்க...








 பூங்காவில் குதிரை பயணம்...

 கிருஷ்ணாவும் குழந்தைகளும்...

 குழந்தைகள் மட்டும்தான் குதிரை ஏறனுமா ஏன் நான் ஏறப்புடாதா எனக்கேட்டு வல்கரா குதிரை மேல ஏறி டுர்ர்ர்ர் டுர்ர்ர்ர் புர்ர்ர்ர் என கத்துகிறான் கிருஷ்ணா, ஆனால் சத்தியமா குதிரை நகரவே இல்லை ஹா ஹா ஹா ஹா...



கிருஷ்ணாவின் இன்னோவா கார் அருகில்....

டிஸ்கி : பயணங்கள் தொடர் அடுத்த பதிவில் தொடரும்.....

டிஸ்கி : ஒரு நாதாரி லகுட பாண்டி ஒருத்தர் ராத்திரி ராத்திரி போன் பண்ணி தாளிக்குராறேன்னு ஒரு நாள் நானும் ஆபீசரும் போட்ட போடில் அடங்கினார், ஆனால் இப்போ ஸ்கைப் என்னும் போனில் வந்து கொல்லோ கொல்லுன்னு கொல்லுறார் முடியலை, யோவ் போனை போட்டா பேசணுமா வேணாமா..?

வேலை இருக்கு எனக்குன்னு ஓடவேண்டியது, ஆமா உமக்கு மட்டும்தான் வேலை இருக்காக்கும் ராஸ்கல் எங்களுக்கு வேலை இல்லைன்னு நினைப்பா பிச்சிபுடுவேன் பிச்சி லகுட நரக பாண்டி....!



Sunday, March 25, 2012

அரசின் அடக்கு முறைக்கு ஒரு அளவில்லையா...?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு
இடம்:பத்திரிகையாளர் மன்றம்.
நாள் - 22-03-2012, வியாழன்

அருள் எழிலன் கருத்துரை 

http://www.youtube.com/watch?v=GvLotfwKFu4

பா.செயபிரகாசம் கருத்து

http://www.youtube.com/watch?v=-58prUXyMns

அ.மார்க்ஸ் கருத்து

http://www.youtube.com/watch?v=vE2ijK_wbUU

மனுஷ புத்திரன் கருத்து

http://www.youtube.com/watch?v=b4N9fKEfSrY

சீனிவாசன் கருத்து

http://www.youtube.com/watch?v=rvYwlajDtQw

ஞானி கருத்து

http://www.youtube.com/watch?v=CsGzeRaF7dM

பாஸ்கர் சக்தி கருத்து

http://www.youtube.com/watch?v=wQfX0U1oSFc

அஜயன் பாலா கருத்து

http://www.youtube.com/watch?v=r7a723CSzag

அமுதன் கருத்து

http://www.youtube.com/watch?v=O7n0n8RcC1w

சுந்தர்ராஜன் கருத்து

http://www.youtube.com/watch?v=aWmDNUJ2Cfw

கேள்வி பதில் - சலசலப்பு

http://www.youtube.com/watch?v=GIA_l74MTUM

http://thamizharparai.blogspot.in/2012/03/blog-post_23.html

தமிழர் பறை நண்பர்கள் எனக்கு அனுப்பிய மெயில்இது......!

Friday, March 23, 2012

இயற்கையை ரசிக்காத இரண்டு லகுட பாண்டிகள்....!!!

தொடரும் பயணம் ஒன்லி நாங்கள் ரசித்த இயற்கை காட்சிகளும் கூடவே கமெண்ட்சும்....[[ச்சே தப்பிச்சிட்டாயிங்கப்பூ]]

 சீசன் நேரத்தில் பொங்கி ஓடும் ஆறும், தூரத்தில் தலை அணை'யும், சுதனும், திவானந்தா'வும்....

 கற்பாறையில் எறும்பு குழி தோண்டி இருக்கும் அதிசயம்...!

 இலை இல்லாத அழகான பூ......!

 மலையில் பறித்த ஒருவித பழம், திவானந்தா கையில் வைத்துக்கொள்ள விஜயன் எடுத்த படம்...!


 நாங்கள் தங்கி இருந்த ரிசார்ட்'டும் டவேரா காரும்......!

 முதுகை காட்டும் குரங்கு.....






 சண்முகபாண்டி......

 ஆஹா அழகான சூர்யோதயம், வளைத்து வளைத்து போட்டோ எடுத்துள்ளார் விஜயன் எல்லாமே அழகு.....!!!










 தூரத்தில் அழகாக பாயும் அருவி, இந்த அருவிதான் அகஸ்தியர் அருவியாக பாய்கிறது கீழே......


 

கீழே கல்யாண தீர்த்தம் அருவியும், ஒரு அம்மன் கோவிலும்.......

பயணம் தொடரும்......

டிஸ்கி : தலைப்புக்கு தன்னிலை விளக்கம் என்னான்னா, இரண்டு நண்பர்கள் நான்.............. நான் ரசித்த போட்டோக்களை ரசிக்காமல் என்னை ரோதனை செய்ததால் இன்று முதல் அவர்கள் "லகுட பாண்டிகள்" என அழைக்கபடுகிறார்கள்.

டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு...!


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!