உன்னை நீ நேசிப்பது போல பிறனையும் நேசி என்று சொல்லி மனிதனின் மனம் மாற செய்த இயேசு, இன்று உயிர்த்தெழுந்த தினம்.
யாவருக்கும் நாஞ்சில்மனோ'வின் இனிய ஈஸ்டர் தினம் வாழ்த்துக்கள்...
இயேசு சொன்னது போல இனி முதல் நாம், நம்மைப் போல பிறரையும் நேசிப்போம்.
---------------------------------------------------------------------------
காலையிலேயே [[2 am]] முகமறியா தம்பி ஒருவன் சாட்டிங்கில் வந்து அலறி ஓடியே விட்டார்....?
"அண்ணே கன்னியாகுமரி எப்பிடி இருக்கு...?"
"கன்னியாகுமரி எப்பவும் இருக்குற இடத்தில் அப்பிடியேதான் இருக்கு, நான்தான் வெளியே போயிட்டேன்..."
இந்த பதிலுக்கு அப்புறம் ஆளைக் காணவே இல்லை, மருத்துவாமலைக்கு ஓடிட்டாரோ என்னமோ ஹி ஹி...
----------------------------------------------------------------------------
கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த [[இலங்கை கிரிக்கெட் வீரர்கள்]] அனுமதிக்காவிட்டால் என்ன, கேரளா இருக்கே....நான் சூனியா பூந்தியின் செருப்பை நக்குறவன் ஆச்சே எனவே கேரளாவில் தாராளமாக நடத்தலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் உம்முன சுண்டி....
ஒ அப்போள் கூடங்குளம் அணுமின் நிலையமும் கேரளா கொண்டு போகான் அனுகிரகம் செய்யனே என்றே பொன்னு சாரே....
---------------------------------------------------------------------------
மாணவ செல்லங்களின் இந்த அருமையான போராட்டத்தை, இனி வரும் தேர்தலுக்கு லாவகமாக பயன்படுத்தி, தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்து கொடுக்க புத்தியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து, ஆனால் தற்கொலை போன்ற எண்ணங்களை அவர்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டியதும் நம் கடமை.
தன்னைக் கொல்வதால் விடிவு கிடையாது, அகிம்சையாக போராடி, புத்தியாக ஈழம் மலரச் செய்யவேண்டும், அவசர புத்தி கூடவே கூடாது என்பதை மாணவர்கள் நன்றாக உணரவேண்டும்.
------------------------------------------------------------------------------
இலங்கையில் இருக்கும் எழுபது சதவீதம் சிங்களர்கள் வட இந்தியர்கள் - இலங்கை அமைச்சர் அறிக்கை
#அடங்கொய்யால இப்பவாவது ஒத்துகிட்டியே சரி சரி அப்போ நீ இலங்கைக்கு வந்தட்டி வருத்தட்டிதானே...? உடனே கிளம்பு உன் நாட்டுக்கு...வரலாறு உன் வாயாலேயே வெளியே வந்துருச்சு பாரு...! ஒண்டவந்தப் பிடரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்.
------------------------------------------------------------------------------
படம் எடுத்தா படமா [[சினிமா]] எடுங்க, பாம்பு படம் எடுத்தாப்புல படம் எடுத்து எங்களை ஓடவைக்காதீங்க சொல்லிப்புட்டேன்" எங்க அண்ணாச்சி பாலபிரஜாதிபதி அடிகளார் அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது...!
மணிரத்தினம் படங்களும் இப்போ அப்படி வருவதைப்பார்த்தால் பயமா மட்டும் இல்லை பேதி ச்சே பீதியாவும் இருக்கு...!
---------------------------------------------------------------------------
மாணவர்கள் சப்போர்ட் வேண்டும் தனக்கு என்பதை லேட்டாக புரிந்து கொண்டு வந்து வாண்டடாக சவுண்ட் கொடுத்த ரஜினிக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள், காரணம் மாணவர்கள் இப்போது புது இரத்தத்தோடும் உலக அறிவோடும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்பதை ரஜினி போன்ற டடிகர்கள் ஸாரி நடிகர்கள் உணரவேண்டும்.
நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன் என்ற டையலாக் எல்லாம் இனி நடக்காது, இணையதளங்கள் உங்களை சும்மாவும் விடாது..!
ரஜினியை நான் ரசித்த, ரசிகனாக இருந்த காலம் அவரை புரியாத அறியாத காலம்...மேலே போட்டோ பாருங்க...! இப்போ அவர் பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னு...!
----------------------------------------------------------------------------
கூட வேலை பார்க்கும் ஒரு மலையாளி மானேஜர், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தவிர்த்து மற்ற எல்லா டிப்பாட்மெண்ட் உள்ளேயும் மூக்கையும் காலையும் நீட்ட, கடும் பின் விளைவுகள் வந்த வண்ணம் இருக்கு அவனுக்கு....
நான் அப்பவே அவனிடம் சொன்னேன், உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய் மற்றவர்களின் வேலைகளுக்குள் செல்லாதே, அது உனக்குத்தான் வெளியில் போன ஓணானை வேஷ்டிக்குள் விட்ட கதையாக இருக்கும் என்று சொல்லியும் கேட்கவில்லை.
இப்போது பிளட் ஃப்ரஷர் அதிகமாகி செக்கப் செய்து கொண்டு பேய்முழி முழித்துக்கொண்டிருகிறான் ரூமில்....
சொன்னாக் கேக்கணும்...வேறென்னத்தை சொல்ல...?