Thursday, September 30, 2010

அத்வானி தலைமையில் பாஜக கூட்டம்!!!

பிரதமர் தலைமையில் பாதுகாப்பு குறித்து  மத்திய அமைச்சரவை கூட்டம்!!!

மக்கள் அமைதி காக்க வேண்டும்: லத்திகா சரண்!!!

வன்முறையில் ஈடுபட கூடாது: ராமதாஸ்!!!

எஸ் எம் எஸ் அனுப்ப தடை!!!!................................................என்னய்யா நடக்குது நாட்டுல??
             மக்கள் நாங்க அமைதியாதானே இருக்கோம். இவங்களுக்கு என்ன ஆச்சு??!! எங்களுக்குள்ளே ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனா தலைவர்களும், முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் ஏதோ உலக மகா கலவரம் நடக்கும் போல பேசி பேசியே கலவரத்தை மறைமுகமாக தூண்டுகிரார்களோன்னு தோணுது!!!!
              என்னை பொறுத்தவரை பிரச்சினையாக இருக்கும் அந்த இடத்தில் மத சார்பில்லாமல் ஒரு பூங்காவையோ, அல்லது ஒரு பொது நூலகத்தையோ திறந்து வச்சிட்டா பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.
                              நாஞ்சில் மனோ.

Wednesday, September 29, 2010

சொன்னா நம்புங்க...... நம்ம மத்திய அமைச்சர் பிரபுல் பாட்டீலை அமெரிக்காவின் சிகாகோ ஏர்போர்ட்ல தடுத்து வச்சி பலமா விசாரிச்சுருக்கு அமெரிக்கன் போலீஸ்!  ஏ நானும் மினிஸ்டர்தான் நானும் மினிஸ்டர்தான் என்று வடிவேலு கணக்கா அலறிபார்த்தும் பலனில்லாமல், இந்தியா தூதரக அதிகாரிகள் [லேட்டாக] வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்!!!
    நம்ம கமல்'ஹசன்'யே இந்த போலீஸ் பயங்கரமா விசாரிச்ச கதையும், நான் ஒரு நடிகன் என்று நடித்து காட்டியும் நம்ப மறுத்த போலீஸ்தான் இந்த போலீஸ்!!!
       சரி விஷயத்துக்கு வருவோம். இந்த அமைச்சர் முறையாக தான் அமெரிக்கா வருவதை முன்பே ஏன் இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்க வில்லை? தெரிவித்து இருந்தால் முன்பே இந்திய அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்து இருப்பார்களே....
      அடுத்து, ஒரு அமைச்சர் ஏன் களவாணித்தனமாக அமெரிக்கா செல்ல வேண்டும்???[[ஏதோ உள் குத்து இருக்கா]]
       இப்போது அவமானப் பட்டது பிரபுல் பாட்டீலா அல்லது அவரை தேர்ந்தெடுத்த இந்திய மக்களா???
       இதுக்கெல்லாம் பதில் என்னன்னா............நம்ம பிரதமர் அங்கே போய் நல்லா விருந்து தின்னுட்டு, பயந்து பம்மி நுனி சீட்ல உக்காந்துட்டு, அமெரிக்காகாரன் சொல்ற இடத்திலே எல்லாம் ஒப்பு வச்சிட்டு வந்தா எவன் நம்மள மதிப்பான்????


       இது இதோட முடியப் போவதில்லை இன்னும் அவமானங்கள் தொடரத்தான் போகிறது!!!!  இப்பிடி களவாணித்தனமாக போனால்......!!??
                                                   நாஞ்சில் மனோ
     

Monday, September 27, 2010



அன்புக்கு அம்மா.....ரசியுங்க சிரிங்க.
   நாஞ்சில் மனோ.

ரசித்தது

கீற்று இனைய தளம் நடத்திய கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படி சொன்னார்,
 'மனிதனுக்கு ஆறறிவு இருப்பதாக நாம்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
இன்னும் ஒரு  நாய்கூட அதை அங்கீகரிக்க வில்லை!'

ரசித்தேன்
நாஞ்சில் மனோ.       

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!