Monday, December 5, 2016

போய் வா வெற்றித் திருமகளே...!



முதலமைச்சர் மாண்புமிகு அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு இதய பூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்...அவர் ஆத்மா சாந்தியடையட்டும்...

கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆறுதலடைய பிரார்த்தனைகள் செய்வோம்.

இந்த நூற்றாண்டின் இரும்பு மகளோடு..

வரலாற்று சிறப்பு மிக்க காலத்தில்தான் நாம் வாழ்ந்திருக்கிறோம்  என்பதில் பெருமையே...!

நாஞ்சில் மனோ.


Tuesday, November 29, 2016

[How To] Pay through Paytm First Payment at Retail Stores, Petrol Pumps ...

Tuesday, November 8, 2016

அந்த கண்டெயினரு பணம் என்னாகும் ?!



சத்தியமாக நான் இதை எதிர் பார்க்கவே இல்லை, எங்கே இதெல்லாம் நடக்கப் போகிறதுன்னு கிண்டலா முந்தாநாள் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்...

கூரைகளிலும், செப்டிக் டேங்குகளிலும், கிணறுகளிலும், பாம் ஹவுஸ்களிலும், பூமிக்கடியில், காடுகளிலும் மறைத்து வைக்கப்பட்ட  1000, 500 ரூபாய் நோட்டுகள்...இனி கணக்கு காட்ட முடியாமலே, திருடனுக்கு தேள் கொட்டின கதையாகிவிடும்...

தொழிலதிபர்கள், அரசியல்வியாதிகள், கள்ளத்தனம் செஞ்ச மொத்தக் களவாணி பயலுகளுக்கும் சரியான ஆப்பை, உருக்கும் உலையில்  அனல் தகிக்க எடுத்து பொச்சக்குன்னு குத்தி வச்சிட்டார் மோடி...

எல்லாத்துக்கும் மேலே... இந்த தீவிரவாதி, பயங்கரவாதி நாய்ங்களுக்கும் சேர்த்து ஆப்படித்திருப்பது மகிழ்ச்சி...

உண்மையிலேயே ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும்....நெஞ்சில் மாஞ்சாவும், கட்சும் உள்ளவர் மோடி என்பதில் சந்தேகமில்லை...!

ஆரம்பத்தில் மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் இது வரவேற்க வேண்டிய விஷயம் என்பதால், நாம் மோடி கரத்துக்கு வலு கொடுக்கத்தான் வேண்டும்.

வாழ்த்துக்கள், ராயல் சல்யூட்டுகளும் இந்திய மைந்தனுக்கு...

நமக்கு 2000 ஓவா  நோட்டு பார்க்கலாம், ஆனால் நோட்டு கட்டுகளை கூகுள்ல மட்டும்தான் பார்க்க முடியும் என்பது கொசுறு...!

அப்புறம் என் கவலையெல்லாம் அந்த கண்டெய்னர் காசெல்லாம் இனி என்னாவும் ?



Sunday, November 6, 2016

அம்மா"வுக்கு முன்பாகவே வந்துவிடும் மயில்கள்...!



தர்மம் பண்ணனும் என்பதுதான் அய்யா வைகுண்டர் போதித்தது, அங்கேயே தர்மம் பண்ணுங்கன்னு பதி ஆளுங்களே உக்காந்து மொய் எழுதுவாங்க, இந்த இடத்தில் மொய் எழுதுகிறார்கள் என்றும், இன்னார் இவ்வளவு தர்மம் கொடுத்தார் என்றும் மைக்கில் அறிவிப்பார்கள்...


பாண்டிக்காட்டுல [நெல்லை மாவட்டம்] இருந்து வண்டி கட்டி குடும்பம் குடும்பமா வருவாங்க, சமைச்சு சாப்பிடுவாங்க...நம்ம ஊரு இளசுக எல்லாம் சைட் அடிக்க மைனர் ரேஞ்சிக்கு ரெடியாக இருப்பானுக...

தோப்புக்காட்டுக்குள்ளே சீட்டு விளையாட்டு நடக்கும், போலீஸ் துரத்தல் நடக்கும், ஊருக்குள்ளே கத்தி குத்து சம்பவம் நடக்கும், கத்தி வச்சிருந்தவன் ஹீரோ ரேஞ்சில் பார்க்கப்படுவான்.

ராத்திரி சைக்கிள்ல லைட் இல்லேன்னு உள்ளூர்காரனையே போலீஸ் பிடிக்கும், அதுக்கு பஞ்சாயத்து பண்ணணு வயசு கூட்டம் கிளம்பும்...

எங்கம்மா பாண்டிக்காட்டுல இருந்து வாரங்கன்னாலே, அம்மா பஸ்ஸில் வந்து இறங்குமுன், பதி"யில் வசித்த மயில்களுக்கு தெரிந்து வீட்டுக்கு வந்துவிடும், மயில்கள் வந்ததை வைத்து நாங்களும் குறிப்பறிந்து பஸ்டாப்பில் போயி காத்திருப்போம் அம்மாவுக்காக...[ஊரில் ஆச்சரியப்படுவார்கள், வேறு எந்த வீட்டுக்கும் அந்த மயில்கள் போகாது] 

பாண்டிக்காட்டில் இருந்து கொண்டு வரப்படும், கம்பு, சோளம், பயிறு வகைகளை எங்களுக்கு முன் அம்மா பரிமாறுவது அந்த மயில்களுக்குத்தான்...!

வருஷத்துக்கு மூன்று திருவிழா என்றாலும், வைகாசி மாசம் திருவிழாதான் களை கட்டும் கூட்டம்.

கிருஷ்ணா விலாஸ் மிட்டாய் கடை ரொம்ப பேமஸ்...மைக்கில் அலறி அலறி அழைப்பார்கள், போட்டி போட்டு...[இப்போவும் இருக்கு] அங்கே லட்டு களவாண்டு கடை ஓனர்கிட்டே கொட்டு வாங்குனதுல ஒருத்தன்தான் அவர் மகளை கல்யாணம் கட்டி அந்த கடைக்கு ஓணரா இருக்கான்.

11 நாள் திருவிழா...மீன் கடை இருக்காது, மீன் யாரும் சாப்பிட மாட்டார்கள்...

நாகர்கோவில் டூ சாமிதோப்பு சிறப்பு பஸ்கள் விடப்படும்.

அருகில் உப்பளம் உண்டு, அதை நம்பி அந்த ஊரில் குடியேறியவர்கள் அநேகர், சமத்துவ புரம் போல எல்லா ஜாதியினரும் ஒன்றாக வாழும் ஊர்.

ஆண்டிப் பண்டாரங்களின் பாசறை, புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கே கொண்டு வந்து விலங்கில் கட்டிப்போடுவார்கள்...

பிச்சைக்காரர்கள் வந்து குவிந்து விடுவார்கள்...வீடுவீடாக பிச்சையெடுக்க வருவார்கள்...

ஸ்கூல் மைதானத்தில், நரிக்குறவர்கள் குடும்பம் குடும்பமாக டெண்ட் அடித்து, ஆமைக்கறி சமைத்து சாப்பிடுவார்கள்...

ராட்டினங்கள், மிருகக்காட்சி சாலை, சர்பத், பாயாசம், சுக்கு காபி, சாக்குல கட்டி பிஞ்சிபோன பேரீச்சம் பழம், காராசேவ், விதவிதமான பண்டங்கள்...

சர்க்கஸ், கன்னாங் கடைகள்...சினிமா....

நான்கு பெரிய நாவல்பழ மரங்கள்...அதில் யானைகளை கொண்டு வந்து கட்டிப்போட்டிருக்கும் அழகு, திடீரென மதம்பிடிக்கும் யானைகள்...

புதிதாக திறக்கும் தோசை, இட்லி  ஹோட்டல்கள்...

காசே இல்லாமல் நாங்கள் என்ஜாய் செய்த காலம் அது...இப்போது எல்லாமே டிஜிட்டல் மாயம்...சகிக்கவில்லை !

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு என்னும் ஊரில் உள்ள அய்யா வைகுண்டர் பதி திருவிழா பற்றி சொன்னேன் !

நாங்கள் இந்து அல்ல.




Sunday, October 23, 2016

அல்லாகு அக்பர்...!


மும்பை, மீரா ரோடு பகுதியில் என் அக்காக்கள் இருவர் குடும்பம் இருப்பதால், லீவுக்கு போகும்போது, அந்தேரி ரயில் நிலையத்தில் போயி மின்சார ரயில் பிடித்து, மீரா ரோடு ஸ்டேசனில் இறங்கி ஆட்டோ பிடித்து செல்வது வழக்கம்...

அந்த ரயில் நிலையத்தில் இரெண்டு கைகால்கள் இல்லாதவர், கண்ணும் தெரியாது.... பயணிகள் பிளாட்பாரம் கடந்து செல்லும் பாலம் நடுவில், வழியில்... தன் தெய்வத்தை நோக்கி சத்தமாக அழைத்துக்கொண்டே இருப்பார், பிச்சை கேட்கமாட்டார்...பிச்சை இட பாத்திரம் வைத்துருப்பார்...

ஒரு பத்து வருஷமாவது போக்கிலும் வரத்திலும் அவரைப் பார்க்காமல் வரமாட்டேன், பிள்ளைகள் கூட வந்தால் என்னையும், அவரையும் எதோ உடன் பிறப்பு பாசம்ன்னு கிண்டல் பண்ணுவார்கள்...

இந்தமுறை போனபோது பரபரப்பாக இயங்கும் மீரா ரோடு ரயில்வே ஸ்டேசன் ரொம்ப அமைதியாக இருப்பதாக உணர்ந்தேன், ஆம்...அவருடைய குரல் அங்கே இல்லை...

மனைவியிடம் கேட்டேன், ஆமா கொஞ்சநாளா அந்த ஆளை இந்தப்பக்கம் காணோம் என்றாள்...அக்கா வீட்டில் போயி சாப்பிட மனசில்லை, "என்னடே சாப்பிடாம மொறச்சிகிட்டு இருக்க, என்னாச்சு அக்கா மேல கோவமா ?"

விவரம் தெரிஞ்சதும் "ஆமா தம்பி கொஞ்சநாளா ஆளைக்காணோம் செத்துருக்கலாம்"ன்னு சொன்னதும், சுருக்குன்னு நெஞ்சில ஒரு குத்தல்...

அக்காக்கள் அங்கே குடிபெயர்ந்தபிறகு மீரா ரோடு என்றாலே அவர் சத்தம்தான் நினைவுக்கு வரும்...ஸ்டேசனின் இரண்டு பக்கமும் அவர் சத்தம் கேட்கும்...

இப்போ அந்த ஸ்டேஷன் போகும்போதெல்லாம், பரபரப்பாக இயங்கும் மும்பையை நான் உணர்வதில்லை, அந்த முதியவரின் "அல்லாகு அக்பர்" சத்தம் மட்டுமே காதில் சன்னமாக கேட்டுக்கொண்டிருக்கும், நீங்களும் அந்த வழியாக போனால் உணரலாம்...

நீர் அழைத்து கூக்குரலிட்ட அல்லா உம்மை நித்தமும் காப்பானாக...

[படத்தில் மேலே ஒரு பாலம் தெரிகிறதல்லவா, அதில்தான் நான் சொன்ன சம்பவம்]


Wednesday, October 12, 2016

அம்மா உங்களுக்கு என்னம்மா ஆச்சு ?


எங்கள் ஊரில், ஸ்கூல் போயிட்டு வார பாதையில ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே, திறந்த இசக்கியம்மன் கோயில் ஒன்று இருக்கு, அந்தப்பக்கம் ஆளுங்க போக வரவே பயப்படுவாங்க...ஆனாலும் அந்த வழியாக போயித்தான் ஆகவேண்டும்...பெரிய காடு...இப்போ சிட்டி ஆகிருச்சு.

ஆலமரத்தின் கீழே சின்ன சின்ன சிலைகளாக இருக்கும், நடுவில் ஒரு பெரிய பயங்கரமான நாக்கை தள்ளிக்கொண்டு சிவப்பு சேலையில் ஒரு பெண்ணின் சிலை...

ஒருநாள், விவரம் தெரியாமல் பள்ளி விட்டு வரும்போது, அந்த சிலையிலுள்ள வளையல்கள் காற்றில் ஆடுவதைக் கண்டு, ஆச்சர்யப்பட்டு,  எல்லாம் உருவிகிட்டு வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடிகிட்டு இருந்தேன்.

எங்கம்மா, இத எங்கே இருந்து கொண்டு வந்தேன்னு கேக்க, சொன்னதும், என்ன நடந்துச்சுன்னே [அடி] தெரியல...அப்புறம் கண்ணைத் தொறந்தப்போ அம்மா இடுப்புல இருக்கேன் அதுவும் அந்தக் கோவில் பக்கத்துல...

அம்மாவுக்கும் உள்ளேப் போகப் பயம்...அந்த ஆலமரத்தடியில் வளையல்களை வீசிவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓட...நாமதான் அம்மா இடுப்புல இருக்கோமேன்னு, பின்னாடி ஏதும் துரத்திக்கிட்டு வருதான்னு பார்த்தா...ஒருத்தருமில்லே...

அம்மா, ஓடாதம்மா பின்னால யாருமே வரலைன்னு சொன்னேனா ? மறுபடியும் கண்ணைக்கட்டிருச்சு [அடிதான்] அப்புறம் கண்ணைத் தொறந்து பார்த்தா, எங்கப்பாரு மடியில இருக்கேன்...

"பயத்துக்கே பயத்த காட்டிட்டியே செல்லம்,நீதாம்டா என் சிங்கக்குட்டி"ன்னு கொஞ்சுறாரு, அம்மா கடுகடுன்னு இருந்தாங்க, இப்பத்தான் புரியுது அது எங்கம்மாவைப் பார்த்து அப்பாரு சொல்லிருக்காருன்னு...

என்னா ஓட்டம்டா...

Friday, August 26, 2016

ஒரு கொலையால் வந்த திகில் அனுபவம்...!


நெல்லையில் இருந்து இரவு லேட்டாக நாகர்கோவில் வந்து கொண்டிருந்தேன், நாகர்கோவில் நெருங்க நெருங்க பயணிகளிடம் படபடப்பும் பயமும் பற்றிக் கொண்டது...

இந்து தலைவர் ஒருவரை [ராமகோபாலன் அல்லது ராஜகோபாலன்னு, சரியா நினைவில்லை 1993 or 1994 ] கொன்று [கொலை] விட்டார்கள், கண்டன போஸ்டர்கள், கடையடைப்பு, பஸ் மறியல் என்றாகிவிட...

குளத்து பஸ்டாப்பபில் வந்து இறங்கினேன், ஊர் போகும் பஸ்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட, பஸ் நிலையத்தில் தங்குவதோ, ஆட்டோ பிடித்து ஊர் போவதோ முடியாத நிலையாகிவிட்டது...

சரி, ஏதாவது ஒரு லாட்ஜில் தங்கலாமென்றால், அவர்களும் ரூம் தரமுடியாது என்று கதவை சாத்த...
குளத்து பஸ்நிலையத்திலிருந்து எல்லா பஸ்களும் டெப்போ நோக்கி கிளம்பி போயி, பஸ்நிலையம் அம்மணமாக நின்றதை அன்றுதான் பார்த்தேன் !

அப்படியே மேலேறி, தைரியமாக அண்ணா சிலையருகே வந்து நின்றேன், மணி நடுநிசியை தாண்டி இருந்தது...ஒரு வாகனத்தையும் காணோம் மொத்தமாக வெறிச்...

பயம்.... பயம்... கலவர பயம்...திடீரென ஒரு கேரளா பஸ், ஆகாயத்தில் பறந்து வருவது போல வந்து நின்றது, திருவனந்தபுரம் டூ நாகர்கோவில் டூ கன்னியாகுமரி போகும் பஸ்...
மனிதாபிமானம் உள்ள டிரைவர், கண்டக்டராக இருந்திருக்கலாம்..."பேடி இல்லாத்தவர் மாத்திரம் வரு வரு, டைரக்ட் கன்னியாகுமரி போகுன்னு" என்று கத்தினார் கண்டக்டர்...நமக்கு அப்போ மலையாளம் தெரியாதா, கன்னியாகுமரி போகுன்னு"ன்னு சொன்னது மட்டும் புரிய, பயத்தோடு ஏறி அமர்ந்தேன்...

ஹைவேயில் பஸ் காற்றில் பறந்தது என்றுதான் சொல்லவேண்டும்...சாலையோரம் உற்று பார்க்கவே பயம், கல்லெறி விழும் என்ற பயத்தில், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட...

இடையில் பஸ் நிறுத்தப்படலாம், தாக்கப்படலாம் என்ற பயத்திலும், அப்படியே கலவரக்காரர்கள், நிறுத்தி நீ எந்த மதம் என்று கேட்டால் என்ன சொல்லவென்று, நான் தேர்ந்தெடுத்தப் பெயர் "ராம்குமார்" 

பஸ் கன்னியாகுமரி பஸ்நிலையம் செல்லுமுன், கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேசன் முன் நிற்க, அலறியடிச்சு கீழே இறங்கினேன் [குதித்தேன்] பஸ் சிட்டாக பறந்துவிட்டது...

போலீஸ்டேசன் விளக்குகள் ஒன்றுமில்லை, நகராட்சி விளக்குகளுமில்லை, கும்மிருட்டு, கடலலையின் இரைச்சல் எப்போதும் நான் கேட்பதை விட, கோரமாக இருந்தது...

ஊருக்கும் போக முடியாது, என்ன செய்ய என்று யோசிக்க...நண்பன் ஒருத்தன் அங்கே ஒரு லாட்ஜில் வேலை செய்வது நினைவுக்கு வர, பம்மி பம்மி நடந்து சென்றேன்...

லாட்ஜ் விளக்குகள் அணைக்கப்பட்டு, பேய் பங்களா போன்று காட்சி அளிக்க இன்னும் திகில், நண்பன் இல்லையென்றால் என்ன செய்வது ? கண்டிப்பாக கலவரக்காரனென்று போலீஸ் தூக்கி விடுவார்கள்...

மெல்லமாகப் போயி, பலமுறை கதவைத்தட்டியும், ஒரு சத்தமும் இல்லை...ரொம்ப நேரத்துக்குப் பிறகு, இங்கே ரூமில்லை மரியாதையாக போயிரு இல்லன்னனா போலீஸைக் கூப்பிடுவேன்னு, பீதியினில் கூடிய சத்தம்தான் வந்தது.

அதே அதே நண்பனின் குரல்தான்..."லேய் மக்கா நான்தான் மனோ வந்துருக்கேன்"ன்னு சொன்னதும், படாரென கதவு திறக்கப்பட்டு, இரண்டு கரங்கள் என்னை உள்ளே இழுத்து கதவை சாத்தியது.

"ஏலேய் நீ இந்த சாமத்துல இங்க என்னலே பண்ணுத ஊரே கலவரமாயி கெடக்கு ?"

விஷயத்தை சொன்னதும், அடப்பாவி நீ உயிரோடே வந்ததே பெரிய விஷயம், வா வந்து சாப்பிடு என்று சாப்பாடு தந்து, ஜலபுல ஜங் பண்ணிட்டு, "இன்னும் ரெண்டு மூன்றுநாள் நமக்கு ஊர் போகமுடியாது மக்கா, இங்கேதான் இருக்கணும், பஸ், ஆட்டொ, டாக்சி ஒன்னும் வராதுன்னு சொல்லி தூங்கவச்சான்.
அடுத்தநாள் காலம்பரமே எழும்பி, பீச் போயி, தரிசனங்கள் பண்ணிட்டு, வந்தேன், போலீஸ் பாதுகாப்புகள் பலமாக இருந்தது, பகல்ல பயமில்லை, பக்கத்து ஊர்தானேன்னு மனம் ரிலாக்ஸ் ஆச்சு...

ஆனாலும் அந்த சாமத்தில் நாகர்கோவில் குளத்து பஸ்நிலையத்தில் தனியாக நின்றது, இப்போதும் திகிலாகத்தான் இருக்கிறது...!

அடுத்தநாள் செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொலை செய்திகள் வந்து கொண்டிருந்தன...!


Tuesday, August 16, 2016

எங்கள் அரசனின் இண்டமுள்ளு...!


நம்ம அரசனின் "இண்டமுள்ளு" விளம்பரம் அடிக்கடி கண்ணில் பட்டாலும், சிலதை ஷேர் செய்துவிட்டு ஒதுங்கி நின்றதுண்டு,   காரணம் எல்லார் மாதிரியும்தான், வாசிப்புத் தன்மை, பொறுமையெல்லாம் சுத்தமா கொறஞ்சி போனதுதான் உண்மை !

நேற்று இலியாஸ் அபுபக்கரின் [பேஸ்புக்] பதிவு பார்த்துட்டு என்னமோ வித்தியாசமா இருக்கும் போலன்னு விளையாட்டா அந்த புஸ்தகத்தை கூரியர்ல அனுப்புய்யான்னு சொன்னேன், அவர்கிட்டே பிடிஎப் பைல்ல இருந்துருக்கு.

"அண்ணே...அனுப்புறேன் ஆனால் அதற்குண்டான காசு அரசன் கையில போயி சேரனும், இல்லைன்னா கொலைகாரனா மாறிடுவேன்"ன்னு பாசத்துல சொல்லி, மெசேஜ்ல அனுப்பி வச்சார்...

டியூட்டில சமயம் கிடைத்தபோது, இதுல என்ன இருக்கப்போகுதுன்னு நினைத்து [யாருலேய் கல்லெடுக்குறது ?] மெதுவாக இண்டமுள்ளை விரித்தேன்...

"பெருஞ் சொம" பாகம்..... அப்பிடியே "கருவாச்சி காவியம்" மாதிரி அப்பிடியே உள்வாங்கி இழுத்துப் போட்டுருச்சு, ஆத்தீ, இதையாடா மிஸ்  பண்ணுனேன்னு மனசு அலறிக்கிட்டு இருக்கு...அதில் வரும் நாயகனைப்போல [மருதன்] நம்ம மனசும் துடிக்குது பார்வதிக்காக...

சும்மால்ல, நான்குநாள் பேஸ்புக் வராம இலியாஸ் இதை தொடர்ந்து வாசிச்சது, இந்த கிராமத்திய அழகுதான், அருமை அருமை...நெஞ்சை தொட்டுவிட்டது அரசன், வாழ்த்துக்கள்...

"அண்ணே காசு காசுன்னு நான் சொல்றது நூறு இருநூறு பணத்துக்காக அல்ல, இந்தப் படைப்பாளிக்கு நாம் அளிக்கும் கவுரவம் என்பதை மறந்திராதீங்க"ன்னு  இலியாஸ் சொன்னது சத்தியமான உண்மை ! [நான் மறுபடியும் சென்னை போகும்போது என் கையாலேயே பணம் கொடுத்துருதேன் சாமி]
சென்னை போயிருந்தபோது, டிஸ்கவரி புக் பேலஸில் வேடியப்பன் அண்ணனின் ஒரு பதிவர் சந்திப்புக்காக நண்பர்கள் அழைத்து சென்றபோது அரசனை நேரில் சந்தித்துப் பேசினேன், அதிர்ந்து பேசாத குணம், பச்சை குழந்தை போல பவ்யமாக காட்சி அளித்தார், இப்பிடி உள்ளே புயல் இருக்குமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை, வாவ்...!

கருவாச்சி காவியத்திற்கு பிறகு, கிராமிய மணம் கமழும் இண்டமுள்ளு, நம்ம அரசனை "மண்வாசனையின் அரசனாக" உயர்த்தி விட்டது...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அரசன்...!

வாசிக்க வாசிக்க அதன் ருசியை உங்களுக்கும் தருவேன்...




Sunday, August 14, 2016

மஞ்சக்காமாலைக்கு ஒரு மரணம் வராதா ?


கல்யாணமான புதிது...நல்லா சாப்பிட்டுக்கிட்டு இருந்த எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை, பசியும் இல்லை...

வீட்டம்மா அவள் அம்மாவிடம் சொல்ல, அவங்களும் வந்து ருசியா சமைச்சு தந்தாலும், சாப்பாடு இறங்கவில்லை, கவலையான அவர்கள் என்னெல்லாமோ கைமருந்து கொடுத்து என் வயிறை அதகளமாக்கினார்கள்.

ஆனாலும் சரியாகவில்லை, அப்போ எதேச்சையாக இதைக் கேள்விப்பட்ட உறவினர் ஒருவர், மஞ்சகாமாலை இருந்தாலும் சாப்பிட மனசு இருக்காதென்று சொல்ல, இரவு சிறுநீரில் சோற்றை இட்டு, காலையில் பார்த்தால் மஞ்சளாக இருக்க...

மும்பையில் எங்கள் ஏரியாவில் [அந்தேரி கிழக்கு] கோல்டோங்கிரி என்ற இடத்தில் ஒரு மூதாட்டி, காசுக்காக இல்லாமல் ஒரு தொண்டாகவே மருந்து கொடுப்பதாக சொல்ல கேள்விப்பட்டு...அங்கே போனோம்.

போனது சாயங்கால வேளையாக இருந்த படியால் அந்த பாட்டி, நாளைக்கு காலை சூர்ய உதயத்திற்கு முன்பு வரவேண்டுமென்று சொல்ல...

அடுத்தநாள் சென்றோம் அதிகாலையில்...கியூ இருந்தது...

உக்கார வச்சு, மூக்கில் [நாம படிக்கும்போது நிப்பில்ல இங்க் ஊத்துவோமே பென்னில்] நிப்பிள் வச்சு மருந்தை உறுஞ்சி உள் மூக்கில் ஊற்றுகிறார், சுர்ரென்று பிடிக்கும், மூன்று நான்கு முறை ஊற்றி விட்டு, கொஞ்சூண்டு குடிக்க சுடவச்ச நெய் தருகிறார்...முடிந்தது.

ஒருமணி நேரம் கழித்து சோடா வாங்கி குடிக்க சொல்கிறார், அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து வந்து காட்ட சொல்கிறார், என்ன...சோடா குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினதும், சற்று நேரத்திற்கெல்லாம் தும்மல் வர ஆரம்பிக்கிறது...

தும்மலோடு மூக்கில் சளி வர தொடங்க...அப்பிடியே கொஞ்ச நேரமானதும், மூக்கில் சொறிச்சல் மாதிரி வர ஆரம்பிக்கும், சீந்த சீந்த மஞ்சள் மஞ்சளாக சளி கொட்டிக்கிட்டே இருக்கும், கடுப்பாக இருக்கும், மூக்கு காந்தும்...

நாலைந்து மணிநேரம் கழிச்சு அப்பிடியே நார்மல் ஆகி, படிப்படியாக குறைந்து, அப்புறம் லேசாக சளி கட்டியாக போக ஆரம்பிச்சு ஸ்டாப் ஆகிரும், பத்தியம் கிடையாது, அன்று முழுவது புளிப்பு மட்டும் சாப்பிடக்கூடாது, வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்.

இரண்டுநாள் கழித்து போனதும், ஆளைப் பார்த்ததுமே பாட்டி [நோயின் தன்மையை] கண்டு பிடிச்சிருது, மறுபடியும் அதே மருந்தை ஊற்ற, மறுபடியும் சளி பிச்சிகிட்டு மஞ்சள் மஞ்சுளா கொட்டுச்சு...

மறுபடியும் போனோம், இப்போ குணமாக்கிருச்சுன்னு சொல்லுச்சு பாட்டி...

ஆக, முத்திப் போச்சுன்னா ஆறேழு தடவை மருந்து ஊத்தவேண்டி வரும், எங்கள் குடும்பம் மற்றும் சுற்று வட்டார ஏரியா மக்கள் யாவரும் போயி பயன் பெரும் இடமது, பாட்டியின் கணவர் உயிரோடு இருந்தபோது செய்த தொண்டு, இறக்கும் தருவாயில்தான் இந்த மருந்தின் பார்முலாவை கிழவிக்கு சொல்லிக் கொடுத்தாராம்.

அதேப்போல பாட்டியும் மரிக்கும் தருவாயிலதான், சொந்த மகனுக்கு கூட சொல்லிக் குடுக்காம மருமகளுக்கு பார்முலாவை சொல்லி கொடுத்துட்டு இறந்து போயிருக்கு...!

பாட்டி மருமகள்தான் இப்போ அங்கே டாக்டர், நாம் கொடுக்கும் காசை வாங்கி கொள்கிறார்கள்...!

என் அனுபவம்...பசிக்காமல், சாப்பிடப் பிடிக்காமல் வயிறு எப்போதுமில்லாமல் ஒரு புது மார்க்கமாக தெரிய வந்தால், உடனே மஞ்சக்காமாலை வைத்தியரையும் மறக்காமல் சென்று பாருங்கள்.
-------------------------------------------------------------------------------------------
[[கேரளா நண்பனின் அக்காள் மகனுக்கு மஞ்சகாமாலை முற்றி, வைத்தியர்கள் கைவிட்டு விட்டார்கள், இனி மரணம்தான் என்று...

யாரோ ஒருவர், சாவக்கிடந்தாலும் "பாபநாசம்" கொண்டுபோ பிழைக்க வைத்துவிடுவார்கள் என்று உறுதியாக சொல்ல...
அப்போதே காரில் தூக்கிப்போட்டு பாபநாசம் விரைந்து வந்து, மருந்து கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
பாபநாசம் பஸ்நிலையத்தின்  அருகில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் வழி.
சிம்பிள் மருத்துவம் இருந்தும், மனிதர்கள் விழிப்புணர்வு இல்லாமல் மரணத்தை தழுவுவது மனதுக்கு சஞ்சலமாக இருக்கிறது.]]

கவிஞர் நா முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.


Tuesday, July 26, 2016

தனது அடுத்தப் படத்தின் பெயர் "ஈழன்"



பஜினியின் அடுத்த படம் பெயர் "ஈழன்"...ஹீரோ யாருன்னு நான் சொல்ல வேண்டியதில்லை, தயாரிப்பு கண்டிப்பா லைக்கா"வாத்தான் இருக்கும் இருக்கணும்...கதை என்னான்னா...?

ரெண்டு தலைமறைவுக்கு ச்சே ரெண்டு தலைமுறைக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து சிலோனுக்கு போன குடும்பத்துல இருந்து "ஒருத்தர்" கிளம்புறார், எங்கேன்னு கேக்கப்டாது...

அவர் பெயர் "கருணா ஈழன்" அங்கே நடந்த கலவரத்தில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார், மனைவி பிள்ளைகளை தொலைத்து அனாதையாகிறார், இதனிடையே சில பல இயக்கங்களில் சேர்ந்து இவரது கொள்கை அவர்களுக்கு பிடிக்காததால் இவரை பல இடங்களில் இருந்து நாயைவிட கேவலமாக துரத்தி விடுகிறார்கள்...

சரி இனி மனைவி பிள்ளைகளோடு வாழ்வோம் என்று தனது பெயரை "ஈழன்" என்று சொல்லி, அவர்களை தேடி அலைகிறார், பாடல்கள் அதிர்கின்றன, "ஈழன்டா...பருப்புடா...கஜினிடா...பெட்ரோல்டா"ன்னு...

ஈழன் என்று சொல்லியும் தன் குடும்பத்தை கண்டுபிடிக்க இயலாமலும், ஒருவேளை கூஜபக்ஷே குடும்பத்தை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க, உடனே தன் பெயரை "கருணா" என்று மாற்றுகிறார்...

"கண்ணையாடா...நான் பச்சோந்திடா...பிச்சிப்பாருடா...தேங்காய் நாருடா"ன்னு பிண்ணனி பாட்டு போட்டு பிச்சு எடுக்கிறார்கள்...

கருணாவாக மாறி கூஜபக்ஷே வீட்டுக்குள்ளேயே போயி "ஜாகை"யை மாற்றுகிறார்.

அப்புறம் [வேற என்ன இருக்கப் போகுது ?] மனைவி பிள்ளையை கண்டுபிடித்தாரா ? கலவரத்தில் தன் குடும்பத்தைக் கடத்திக் கொண்டு போன கூஜபக்ஷேவை என்ன விதமாக த[க]ண்டித்தார் ? என்பதை வெண்திரையில் காண்க... 

சிரிக்க மட்டுமே.


Friday, May 20, 2016

நோட்டாவுக்கு கிடைத்த வெற்றியும் 17 தொகுதிகளும்...

சென்னை: நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, அதனால என்ன பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா" என்று கிண்டலடித்தவர்கள் பலர் ஆனால் சில தொகுதிகளில் அந்த நோட்டா, வெற்றி தோல்விகளை தீர்மானித்திருக்கிறது

சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா, 1687 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்திருப்பது 4048 ஓட்டு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இத் தொகுதியில் நோட்டாவுக்கு 1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன

கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 441 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 3595.

ஆவடியில் தி.மு.க., வேட்பாளர் நாசர், 1395 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி . இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 4994

பர்கூர் தொகுதியில் தி.மு.க., கோவிந்தராசன் 982 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1392 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 1507 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 1724

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் குறிஞ்சி பிராபகரன் 1332 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 3884.

கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 428 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2350.

மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சச்சிதானந்தம் 2222 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2715

ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி 491 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2612 ஓட்டுக்கள் கி டைத்தன.

பெரம்பூர் தொகுதியில் தி.முக., கூட்டணியில் போட்டியிட்ட தனபாலன், 519 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கு நோட்டாவுக்கு 3167 ஓட்டுக்கள் கிடைத்தன.

பேராவூரணியில் தி.மு.க., வேட்பாளர் அசோக் குமார் 995 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1294 ஓட்டுக்கள் கிடைத்தன.

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1821 ஓட்டுக்கள் கிடைத்தன.

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 462 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3391 ஓட்டுக்கள் கிடைத்தன.

திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் விஸ்வநாதன் 950 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 2116 ஓட்டுக்கள் கிடைத்தன.

தி.நகரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.என்.கனிமொழி 3155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3570 ஓட்டுக்கள் கிடைத்தன.

விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 2333 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3897 ஓட்டுக்கள் கிடைத்தன.

இப்படி நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள், கட்சிகளுக்கு மாறியிருந்தால் முடிவுகளும் மாறியிருக்கும்.

ஆக, இந்தத் தேர்தலில் நோட்டாவும் வாக்குளைப் பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.

ஆக...45'235 ஓட்டுகள்...!!

நன்றி  தினமலர் 


Advertisement
சென்னை: நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, அதனால பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா" என்று கிண்டலடித்தவர்கள் பலர் ஆனால் சில தொகுதிகளில் அந்த நோட்டா, வெற்றி தோல்விகளை தீர்மானித்திருக்கிறது
சென்னை அண்ணா நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா, 1687 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்திருப்பது 4048 ஓட்டு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இத் தொகுதியில் நோட்டாவுக்கு 1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன

கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 441 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகள் 3595.

ஆவடியில் தி.மு.க., வேட்பாளர் நாசர், 1395 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி . இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 4994

பர்கூர் தொகுதியில் தி.மு.க., கோவிந்தராசன் 982 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1392 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 1507 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 1724

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் குறிஞ்சி பிராபகரன் 1332 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 3884.

கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 428 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2350.

மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சச்சிதானந்தம் 2222 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் 2715

ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி 491 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இங்கு நோட்டாவுக்கு 2612 ஓட்டுக்கள் கி டைத்தன.

பெரம்பூர் தொகுதியில் தி.முக., கூட்டணியில் போட்டியிட்ட தனபாலன், 519 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கு நோட்டாவுக்கு 3167 ஓட்டுக்கள் கிடைத்தன.

பேராவூரணியில் தி.மு.க., வேட்பாளர் அசோக் குமார் 995 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1294 ஓட்டுக்கள் கிடைத்தன.

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 1821 ஓட்டுக்கள் கிடைத்தன.

தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி நாடார் 462 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3391 ஓட்டுக்கள் கிடைத்தன.

திருப்போரூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் விஸ்வநாதன் 950 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 2116 ஓட்டுக்கள் கிடைத்தன.

தி.நகரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.என்.கனிமொழி 3155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3570 ஓட்டுக்கள் கிடைத்தன.

விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் 2333 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவுக்கு 3897 ஓட்டுக்கள் கிடைத்தன.

இப்படி நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள், கட்சிகளுக்கு மாறியிருந்தால் முடிவுகளும் மாறியிருக்கும்.

ஆக, இந்தத் தேர்தலில் நோட்டாவும் வாக்குளைப் பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது.

Friday, April 22, 2016

சிறைகள் தூங்குவதில்லை !

சிறையில் இருந்தபோது ஒருநாள் நள்ளிரவில்...
பாகிஸ்தானியும், ஒரு சீனா'காரனும் ரகசியமாக பேசிகிட்டே...சாப்பாட்டுத்தட்டை வாயால் கடித்து, மடக்கி, கத்தி போல கூர்மையாக்கி...
என்னை நோக்கி வந்தார்கள், என் செல்லுக்குள் யாருமே இல்லை, ஏசி'யின் கடும் குளிர் வேறு, விளக்குகள் எறிந்தாலும் மையான அமைதி காத்தன...
அவர்கள் இன்னும் அருகில் வந்துவிட்டார்கள், ஓட முடியாதவாறு உன்மத்தம் பிடித்தவனாக நின்று கொண்டிருந்தேன்...
என்னருகில் வந்தவர்கள்...என் இரண்டு கைகளையும் மடக்கி பின்னே ஒருவன் பிடித்துக்கொள்ள...எரியும் விளக்கொன்று அப்பவே உயிர் விட்டது...
ஒருத்தன் கூர்மையாக்கப்பட்ட சாப்பாட்டு கத்தியை என் முகத்துக்கு நேராக கொண்டு வந்து காண்பித்து..."உனக்கு காஷ்மீராடா வேண்டும் ? இதோ" என்று விலாவில் பாயசினான்...
இனி அடுத்தவன் "உனக்கு அசாமாடா வேணும் ?" என்று அடுத்த விலாவில் கத்தியை பாயசினான்...
ஐயோ என்று அலறினேன்...
சிறையிலும் கனவு...
மலரும் நினைவுகள்.

Friday, April 15, 2016

சாப்பிடும் விதமும் ஒரு கலைதான்...!!!

ஹோட்டல்ல போயி, சதீஷ் சங்கவி ஸ்டைல்ல [[ஒருநாளும் அப்பிடி சாப்பிட்டதில்லை]] ரெண்டு பரோட்டா வாங்கி, பீஸ் பீஸா பிளேட்டில் பிச்சிப் போடும்போதே, அருகில் இருந்தவன் ஒரு மாரியா என்னைப் பார்த்தான் 

[[அதெல்லாம் வெக்கமேப் படப்டாதுன்னு சங்கவி சொல்லிட்டாப்ல]]
ஒரு சிக்கன் சுக்கா'வும் ஆர்டர் பண்ணினேன், கொஞ்சூண்டு சால்னா தந்தான் ஒரு சின்ன பிளேட்ல, இது போதாது இன்னும் ஒரு பிளேட் கேட்டேன் [[ஆக்சுவலி இன்னும் ரெண்டு பிளேட் சால்னா வேணுமா இருந்துச்சு, சங்கவி கணக்குப்படி]] தந்தான்.
பிச்சிப்போட்ட பரோட்டா மீது தோசை மாதிரி சால்னாவை ஊற்றி ஊறவச்சேன்...பக்கத்துல இருந்தவன் மெல்ல இருக்கை நுனிக்கு வந்துவிட்டான்.
எப்பிடியும் சிக்கன் சுக்கா ரெடியாகி வர பத்து நிமிஷமாவது ஆகும், ஊற வைத்த பரோட்டா முன்பு, ராம்தேவ் மாதிரி கண்களை மூடிவாறு அமர்ந்திருந்தேன், லேசா கண்விழித்துப் பார்த்தபோது, பக்கத்திலிருந்தவனைக் காணோம்.
ஆஹா...இனி ஃபிரியா சாப்பிடலாம் என நினைத்தபோதே, என்னருகில் வந்தமர்ந்த இன்னொருத்தன், என் நிலைமை "கண்டு" அடுத்த டேபிளுக்கு ஓடினான்.
சுக்கா சிக்கன் வரவும், பரோட்டாவும் சால்னாவில் நன்றாக ஊறிவிட்டது, அங்கிட்டும் இங்கிட்டுமா லேசா பரோட்டாவை கிளறி விட்டு, ஒவ்வொரு பீஸா சாப்பிடலாம்ன்னா...நன்றாக ஊறி விட்டதால் சாதம் ரேஞ்சிக்குத்தான் வாரி சாப்பிட முடிஞ்சுது, ஏற்கனவே உக்காந்து ஜெர்க்காகி அடுத்த டேபிளுக்கு ஓடினவன் என்னையே பார்த்துட்டு இருக்காப்டி இருந்துச்சு, சடேர்ன்னு திரும்பி முறைத்தேன், அப்புறம் அவனைக் காணவே இல்லை.
ஊறவச்ச பரோட்டா சால்னா இதமாக தொண்டையில் இறங்குச்சு, புதிய ருசி, பரோட்டா மீது இருந்த வெறுப்பும் மாறிப்போச்சு...முன்பு பரோட்டா கண்டாலே ஓடிப்போயிருவேன்...
இனி பரோட்டா அடிக்கடி சாப்பிடனும், சும்மாயில்லை போல, எங்க ஊர் பதி"யில இப்பவும் "பரோட்டா சாமியார்"ன்னு ஒருத்தர் இருக்கார் !!
சாப்பாடுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், சாப்பிடும் விதமும் ஒரு கலைதான் இல்லையா...சங்கவி"க்குத்தான் நன்றி சொல்லணும்.


Sunday, April 10, 2016

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...!!!

வாயில் வடை சுடும் சில ஐ டி ஆளுங்க...
இன்டர்நெட் ரூம் கனெக்டிங் பிரசினையை பார்க்க சொன்னா...நெட்'காரனைக் கூப்பிடு அங்கேதான் பிரசினை'ன்னான், அடேய்...டவுன்லோட் ஸ்பீடு அளவுக்கும் மீறி இருக்கும்போது...எப்பிடிடா நெட்'காரன் பிரச்சினையா இருக்கப்போகுது ?ன்னு கேட்டா...கூலா போயி உக்காந்துகிட்டு...ஊருக்கு போன்ல பொண்டாட்டிக்கு போன் போட்டு..."பால் குடுத்தியா ?"..............."
"...டி கழுவினியா ? அய்யயோ சின்ன பிள்ளையாச்சே கழுவப்டாது, டிஷு வச்சி தொடைக்கணும்.."
நாறுமேன்னு பதில் வந்துருக்கும் போல, கெக்கேபிக்கேன்னு சிரிக்கான்...
"தம்பி இங்கே தங்கியிருக்கும் ஹோட்டல் விருந்தாளிகள் என்னை பேதி போக வச்சிருவாயிங்க, பிளீஸ் வந்த வேலையை முதல்ல கவனி..."
"அதான் சொன்னேன்ல நெட்'காரன் கனெக்ஷன் பிரச்சினைன்னு..."
நிறைய வாயால வடைசுட்டு அவன் கிளம்பும்போது...வடிவேலு வாய்சில்..தம்பி...உன்னை தப்பா வேலைக்கு சேர்த்துருக்காயிங்க எதுக்கும் நல்ல சீனியராப் பார்த்து கொஞ்சநாள் அசிஸ்டெண்ட் வேலை செய்யப்பாரு"ன்னு சொன்னதுக்கு, அதே மனோபாலா பதில்தான் பார்வையில்..."எனக்குத்தெரியும் போடா"
சரி போகட்டும்ன்னு வேறோருத்தனைக் கூப்பிட்டேன்...அவனும் அவனால முடிஞ்சளவு வாயில வடை சுட்டான்...இவன் கொஞ்சம் வித்தியாசமா சொன்னான்ய்யா...கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்'ன்னான்...[[சம்பளம் பிரச்சினையா இருக்குமோ ?]]
அவனும் போயி உக்காந்துகிட்டு ஏதோ ஒரு நாதாரிக் கூட போன்ல கடலை போட்டுட்டு இருந்தான்...
"தம்பி வந்த வேலையைக் கவனியுங்களேன் பிளீஸ்"
"அதான் சொன்னேன்ல கம்பெனி டெக்னிகல் பிராப்ளம்ன்னு ?"
"இல்லியே...இந்த வயர் கனேக்ஷன்ல்லதானே பிரச்சினை போல இருக்கு ?"
என்னை மேலேயும் கீழேயும் பார்த்தான்...போகும்போது..."தம்பி...உன்னை தப்பா...." "தெரியும் போடா " மூவ்மெண்டேதான்...
என்ன செய்ய...? இன்னொருத்தனைக் கூப்பிட்டேன்...வந்தான், பார்த்தான்...ரோசிச்சான்..."ஒரே ஒரு" வயரை கழட்டினான்...இன்னொரு இடத்தில் மாட்டினான், அந்த வயரை இங்கே மாட்டினான்...பிராப்ளம் சால்வ் !!!
"தம்பிக்கு எந்த ஊரு ?"
"நீங்க தமிழா சார் ? எப்பிடி சார் நான் தமிழ்ன்னு கண்டு பிடிச்சீங்க ?"
"அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டி வச்சிருக்கே"
"நான் மதுரை சார், உங்களை மலையாளி"ன்னு நினைச்சிட்டேன்" [[அவ்வ்வ்வவ்]]
நம்மாளுங்க நல்ல உத்திரவாதமாத்தான் வேலை செய்யுறாங்க ம்ம்ம்ம்...முதல்ல நான் கூப்பிட்ட ரெண்டு பேரும் மலையாளிங்க...அவங்க வாங்குற சம்பளம், 60 ஆயிரம் ரூபாய், நம்மாளு வாங்குற சம்பளம், 30 ஆயிரம் ரூபாய்...!
இனி முதல் பாராவை மறுபடியும் படியுங்க.

Thursday, April 7, 2016

அமேரிக்கா பணமா கொக்கா !



முன்பு மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம், காலை எட்டு மணி முதல் மூன்று மணி வரை பிளேன் வரத்துப் போக்கு ரொம்ப குறைவாக இருக்கும், அந்த நேரத்தில் வேலைகள் இல்லாமல் இருப்பதால் கொஞ்சம் தூங்கலாம் என்று, ட்ரான்சிட் பயணிகள் தூங்கும் இடத்துக்குப் போயி, ஏர்போர்ட் பாஸை கழட்டி பாக்கெட்டுல வச்சிகிட்டு தூங்குவது உண்டு, ஏர்போர்ட் மேனேஜர் செக்கிங் வந்தால் நாங்களும் பயணிகள் என்று போய்விடுவார்.

அன்று [[எப்போவும்]] வழக்கம்போல தூங்குனப்போ, ஏசி குளிர் கொஞ்சம் கூடுதலா இருந்ததால ரெண்டு கையும் குளிர்ல நடுங்கியதும், ஏதாவது இடுக்குகுள்ள கைவிரல்களை சொருகலாம்ன்னு தூக்கத்திலேயே பெட்டில் தடவிய போது, ஒரு இடுக்கில் கைபோனது...

உள்ளே என்னமோ இருக்குபோலன்னு  உணர்ந்தாலும், தூக்கத்தில் தூங்கிவிட்டு எழும்பி போயி முகம் கழுவிகிட்டு இருக்கும்போதுதான், அந்த நினைவு  வந்துச்சு...திரும்பவும் ஓடிப்போயி கைவிட்டுப் பார்த்தால் ஏதோ பேப்பர் சுருட்டுனாப்ல இருக்கவே, வெளியே எடுத்தேன்...அமெரிக்கன் டாலர் மாதிரி தெரியவே...எடுத்து விரித்துப் பார்த்தேன்...ஆத்தி...மூன்று நூறு டாலர் நோட்டுகள்...

அப்போது டாலர் ரேட் 33 ரூபாய்...ஆக மொத்தம் கிடைத்தது 9900 ரூபாய்...

அப்புறம் எங்கே உக்காந்தாலும் இந்தப்பழக்கம் தொத்திகிச்சு, ஏர்போர்ட் என்பதால் அதுவும் செக்கியூரிட்டி செக்கிங் [[முன்பு, இப்போ பிச்சிபுடுவான் மிலிட்டிரிக்காரன்]] நடக்கும் முன்பு பயணிகள் ஆசுவாசமாக அமரும் இடம் என்பதாலும், அடிக்கடி இப்படி காசு கிடைப்பதுண்டு, பென்"கள் நிறைய கிடைக்கும், மலையாளிகள் அதிகம் போகையில் நம்ம ரூபாய் வெளிநாட்டில் செல்லுபடி ஆகாதுன்னு [[அப்போ]] இப்படி ஒளித்து வைத்து செல்வதுண்டு...!

சரி அன்னிக்கு கிடைச்சுதே டாலர், அதை என்ன செய்தாய்ன்னு கேக்குறீங்களா ?

இலவசமா கிடைத்ததை இலவசமாக கொடு பாலிசிதான்...மூன்று மணி நேரத்தில் மும்பை லேடீஸ் நடன பாரில் நண்பர்களோடு என்ஜாய்...பத்தாயிரம் [[அப்போ]] காலி...!

எங்க அண்ணன் இப்பவும் என்னைப் பார்த்து கவலையும்  வேதனையுமாக சொல்லும் டையலாக் "உனக்கு பணத்தோட அருமை இன்னும் தெரியவில்லை மனோ"

இப்போல்லாம் அப்பிடி முடியுமா ஆத்தே...?!!! [[இது கல்யாணத்துக்கு முந்தி நடந்தது சாமிங்களா, போட்டுக் குடுத்துராதீக]]

குடிசையில் பிறந்து வளர்த்தவனே இப்பிடின்னா குபேரனின் பிள்ளைங்க...? ஸ்ஸ்ஸ் அபா...சோடா பிளீஸ்...

Monday, March 28, 2016

சொல்ல மறந்த தேவதை !


நான்கு வருடங்களுக்கு முன்பு நான் வேலை பார்த்த ஹோட்டல் பக்கம் ஒரு ஹாஸ்பிட்டல் இருந்தது, கொஞ்சமே கொஞ்சம் தூரத்தில் ஒரு பாகிஸ்தான் கேண்டீனும் இருந்தது, நான் உள்ளே இருப்பதால் கண்ணாடி வழியாக வெளியே பார்க்கலாம், வெளியே உள்ளவர்கள் உள்ளே பார்க்கமுடியாது.

மத்தியானம் சாப்பாட்டு நேரம் அடிக்கடி ஒரு பெண் கேண்டீன் பக்கமாக போயி பார்சல் வாங்கி திரும்புவதை கவனித்தது உண்டு, பேசனும்ன்னு நினைப்பேன், ஏதாவது தப்பா நினைச்சிரக் கூடாதுன்னு பேசவில்லை பல நாள்...

ஒரு வெள்ளிகிழமை, மதியம் எனக்கு சாப்பிட ஸ்பெஷல் பிரியாணி வந்திருந்தது, பிஸி காரணமாக நான் சாப்பிடாமல் அப்புறமா சாப்பிடலாம் என்றிருந்தேன், ஒரு மூன்று மணி இருக்கும், அந்தப்பெண் கேண்டீன் பக்கமாக போவதைக் கண்டேன்...
இன்று கேண்டீன் பூட்டாச்சேன்னு உன்னிப்பாக கவனித்தேன், போய் பார்த்துவிட்டு ஏமாற்றமாக முகம் வாடியவளாக திரும்புவதைக் கண்டேன், பக்கத்தில் வேறு சாப்பாடு ஹோட்டல்களும் இல்லை...

சரி இதுதான் சான்ஸ் என்று, வெளியே வந்து என்னாச்சுன்னு ஹிந்தியில் கேட்டதும், நீங்க தமிழா ? [[பார்ரா]] என்று கேட்டாள், ஆமாம் என்றேன், தமிழில் அவள் பேசியதுமே [[பேசியது மலையாளம்]] தமிழை கொன்னுறாதே தாயி'ன்னு நான் மலையாளத்தில் பேச...

"என்னாச்சு சாப்பாடு கிடைக்கலையா ?"

"உங்க பெயர் என்ன ?" [சுத்தம்]

"மனோஜ்"

"உங்கப் பெயர் ?" [விட்டுருவோமா ?]

"ஆயிஷா" [மாற்றம்]

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை"

"கொஞ்சம் பிஸியா இருந்துச்சு, அதான் சாப்பாடு வாங்க லேட்டாகிருச்சு, கேண்டீனைப் பூட்டிகிட்டு போயிட்டாங்க போல..."

"கேண்டீனைப் பூட்டிகிட்டு போகலை, வெள்ளிகிழமை கேண்டீன் கிடையாது, நீ வீட்டுல சமைக்குறது இல்லையா ? இங்கே வந்து சாப்புடுறே ?"

"எனக்கு இந்த பாகிஸ்தானி சமைக்கும் பிரியாணி ரொம்ப இஷ்டமானு, [[நீயும் பிரியாணி கேஸா ஆ ஆ ஆ]] அதான் மெனக்கெட்டு இங்கே வந்து வாங்கிட்டுப்போறேன்"

"சரி இப்போ சாப்பாடு ஸாரி பிரியாணி கிடைக்கலியே என்னாப் பண்ணுவே ?"

"கட்டன் சாயா வித் பிஸ்கட் ஓவர்" என்று பிரியாணி போச்சே ஃபீலிங்கில் சொன்னாள்...நாம விட்டுருவோமா என்ன ? எனக்கு வந்த பிரியாணியை தூக்கி கொடுத்துட்டு, கொண்டுபோயி சாப்பிடு என்றேன்...

"அப்போ உனக்கு ?"

" எனக்கு இருக்கு நீ கொண்டுபோ" என்று அனுப்பிட்டு...நான் கொலைப்பட்டினி....

அடுத்த நாளில் இருந்து அடிக்கடி என்னைப் பார்க்க வந்துபோவாள்...அப்படியே நல்ல நண்பி ஆகிப்போனாள்...கல்யாணம் ஆகிருக்கவில்லை, மலையாளி நண்பிகளுடன் [[பேச்சுலளி]] தங்கியிருந்தாள்...முக்கியமான நாட்களில் ஸ்பெஷல் சாப்பாடுகள் பார்சல் கொண்டு தருவாள்...ஊரிலிருந்து வரும் பண்டங்கள் தருவாள், முக்கியமாக உப்பில் ஊற வைத்த நெல்லிக்காய் எனக்கு பிடிக்கும் என்று அவள் அப்பாவிடம் சொல்லி அனுப்ப சொல்லி தருவாள், நட்பு நீடித்த நேரம்...விதி விளையாட ஆரம்பித்தது...ஆம் இங்கே கலவரம் ஆரம்பமானது...

நான் ஊருக்கு செல்ல, ஆறுமாதம் கழித்துதான் திரும்பி வந்தேன், அதற்குள் போன் நம்பர் கேன்சல் ஆக, புது நம்பர் போட்டு அவளுக்கு போனடித்தால் அங்கேயும் கேன்சல் ஆகிருந்தது...அப்புறம் அப்பிடியே மறந்தும் போனேன்.

நேற்று அவசரமாக ஒரு இடத்திற்கு போவதற்காக பஸ் வருகைக்காக காத்திருந்தேன், பஸ் வர லேட்டாகியதால்...சுற்று புறமாக கண்களை மேய விட்டபோது...ஆயிஷா"வைப்போல ஒரு பெண் ரோட்டை கிராஸ் செய்வதைப் பார்த்ததும் உன்னிப்பாக பார்த்தபோது, அது அவளில்லை...ரோட்டைக் கடந்து போனாள்...

அவள் சென்ற பக்கமாக போயி நின்று பழைய நினைவுகளை மென்ற சமயம்...ஓ...மை...காட்...எதிர் திசையில் இருந்து எனக்கு நேராக ரோட்டை கிராஸ் செய்து வருகிறாள்...அதே...அதே...ஆயிஷா'வேதான்...மை காட்...நினைச்சுக்கூட பார்க்கவில்லை, அதிசயம்தான்...!

பேச வார்த்தைகளில்லை...கையைப் பற்றிக் கொண்டாள்...அதற்குள் பஸ்சும் வந்துவிட பஸ்ஸில் அமர்ந்து பேசிக்கொண்டும், போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் வந்தோம், வருந்தி வீட்டிற்க்கு அழைத்தாள், அவசரமாக போகவேண்டும் இன்னொருநாள் பார்க்கலாம் என்று விடை கொடுத்தேன்...

கல்யாணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், குடும்பமாக இங்கே இருப்பதாகவும் சொன்னாள்...

காலம் எப்படி மாறிப் போகிறது பாருங்கள்...வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் போல...




Thursday, March 10, 2016

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் என்பது யாதெனில்...!


பெண் போல கொண்டை வைத்திருந்த நண்பனுக்கும், ஆம்பிளை மாதிரி கிராப் வச்சிருந்த பிலிப்பைனி பெண்ணுக்கும், வேலை செய்யுமிடத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட...[[அவனுக்கு ஊர்ல கல்யாணமாகி குழந்தைகள் இருக்கு]]
சேர்ந்தே வசித்தார்கள் இங்கே...எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு, பத்து வருஷமா...
நேற்று திடீரென அவனைப் பார்க்க நேர்ந்தது...முடியெல்லாம் வெட்டி ஆம்பிளையாகிருந்தான்[!]...
"என்னப்பா உன் ட்ரேட் மார்க் முடிக்கு என்னாச்சு வெட்டிட்டே?"
"சலூன்ல செட்டிங் பண்ண சொன்னா, எசகு பிசகா பண்ணுனதுல மொத்த முடியையும் எடுக்க வேண்டியதா போச்சு, அதான்..."
"சரி, மே [[மேரி'யை நாங்கள் மே என்று கூப்பிடுவோம்]] எப்பிடி இருக்காள் நலமா ?"
"அதையேன் கேக்குற அது முடிஞ்சிபோச்சு, அவ இப்போ வேற ஆள்கூட செட்டில் ஆயிட்டாள்"
"உன்னை மிகவும் லவ் பண்ணுனாளேடா..."
"ஆமாடா நானும்தான் காதலிச்சேன், ஆனா அவ இந்த ம...ர காதலிச்சிருக்கா...முடியை வெட்டிட்டு ரூமுக்குப் போனதும், ரூமுக்குள்ளேயே விடம்மாட்டேன்னு ஒரே சண்டை..."
"அப்புறம் ?"
"அப்புறமென்ன அப்புறம், நானும் ஒதுங்கிட்டேன்..."
ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டு இருந்தபோது, அவள் இவன் தலைமுடியைப் பற்றியே சிலாகித்தாள், இவனும் ஆண் பெண் கலந்த அந்த தலை முடியைப் பற்றியே சிலாகிப்பான்...[[பயபுள்ளைங்க ஒரு மார்க்கமாத்தேன் இருந்துருக்காங்க]]
ஆக...ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி இப்பிடித்தான் உருவாகிருக்கு...
இந்த டேஸ்'க்குத்தாண்டா என்னை விரும்பிருக்கான்னு அவன் மலையாளத்துல சொன்ன ஸ்லாங் கேட்டு இன்னமும் சிரிச்சிட்டு இருக்கேன்...


Sunday, March 6, 2016

கிரிக்கெட் என்னைப் போடா வெண்ணை என்றது !


இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்ச் நடக்குறப்போ வெளில எங்கேயும் [[கடைகளுக்கு]] போயிறாதேன்னு நண்பர்கள் சொல்வதுண்டு இங்கே...[[பஹ்ரைன்]]
[[நமக்குதான் கிரிக்கெட்"ன்னா வேப்பங்காய் ஆச்சே...]]
அது தெரியாம நேற்று பெங்காலி லாண்டரி கடையிலப் போயி மூன்று நாளைக்கு முன்பு கொடுத்த துணிமணிகளைக் கேட்டேன்...
ரெடியாக இல்லை என்றான்...ஒரே நாள்ல ரெடியாகிருமே, நான் கொடுத்து மூன்று நாளாச்சே...என்றேன்...பத்து நாளானாலும் முடிஞ்சா தருவேன் இல்லைன்னா தரமாட்டேன், என்ன செய்யனுமோ செய் போ என்றான் கோபமாக...
எனக்கு கண்ணைக்கட்டிருச்சு பிரஷர் ஏறிடுச்சி...விட்டுருவோமா என்ன...?
பேசாம திரும்பி வந்துட்டேன்.
அப்புறமாத்தேன் தெரிஞ்சுது, நான் அங்கே போன நேரம்தான் இந்தியா ஜெயிச்சிருக்கு அவ்வவ்...
இப்பிடித்தான் முன்பு ஒருமுறை பெங்காலி ஹோட்டல்ல போயி சாப்புட்டுகிட்டு இருந்தேன், பெங்காலிங்க கூட்டமா இருந்து டீவில மேட்ச் பார்த்துட்டு இருந்தாங்க...
இந்தியா - பங்களாதேஷ் மேட்ச்...நான் ஒருவன்தான் இந்தியன், பாதி சாப்புட்டுகிட்டு இருக்கும்போதே...பங்களாதேஷ் ஜெயிச்சிருச்சு, அம்புட்டுப் பேரும் என் பக்கமா எழும்பி நின்னு கைத்தட்டி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கே, அசடு வழிந்த வண்ணம் சீக்கிரமா கை அலம்பிவிட்டு வெளியேறின சம்பவமும் உண்டு !
நீதி : இடம் பொருள் ஏவல் தெரிஞ்சி செயல்படனும்.


நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!