Thursday, April 8, 2021

பெண்ணென்ற வல்லினம்...

 

20m 
Shared with Public
Public
இலங்கை தமிழ் பெண்ணொருத்தி எங்கள் ஹோட்டலுக்கு வெயிட்டர்ஸாக வேலைக்கு சேர்ந்தாள், அமைதியான சுபாவம் அதிர்ந்து பேசுவதில்லை, கோபப்படுவதுமில்லை புன்முறுவலோடு கடந்தாலும்...அதிகம் பேசுவதில்லை...
ரெண்டு மூன்று நாட்கள் அவளை லேசாக கண்காணித்தேன் எதோ மனசுல ஒரு நெருடல்...நாம பேச முற்பட்டாலும், பேச கூசும் சுபாவம், வேலையில் படு சுட்டி...
இப்படியாக நாட்கள் நகர்ந்தாலும் எனக்கு அந்த நெருடல் இருந்துகிட்டுதானிருந்துச்சு...
ஒருநாள்...
வழக்கம்போல டியூட்டியில் நான் இருந்து கொண்டிருந்தபோது அந்தப்பெண் ஆவேசமாக கிச்சனுக்குள் ஓடுவதை பார்த்தேன், அப்போதே என் நெருடல் விழித்துக்கொண்டது...
போன வேகத்தில் மட்டன் வெட்டும் கத்தியோடு திரும்ப காபிஷாப்பிற்குள் ஓடினாள்...பிறகே நானும் ஓடிப்போய் பார்த்தால்...ஒரு பரபியை வெட்ட ஆக்ரோஷமாக ஓடியவளை மற்ற பணிப்பெண்கள் தடுத்து பிடித்துக்கொண்டிருப்பதை கண்டவுடன், வாக்கிடாக்கியில் செக்கியூரிட்டியை அழைத்து பரபியை பில் பே பண்ண சொல்லி வெளியேற்ற சொன்னேன்.
மேல்மூச்சு கீழ்முச்சாக நின்றிருந்தாள், என்னன்னு ஆங்கிலத்தில் கேட்டதுக்கு இலங்கை தமிழில் பதில் வந்தது..."என்ற உடம்புல கை வச்சிட்டான்"ன்னு...எனக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சு.
சரி, அந்த பரபி இருக்கானே அவன் மேட்டருக்கு வருவோம்....ரெண்டு வருஷமா அவனை கவனிச்சிட்டு வருகிறேன் அவன் மட்டுமல்ல இன்னும் பலருண்டு...
பெண்களை அவர்கள் மெல்லினமாகத்தான் நினைத்திருக்க கூடும்...இந்த வல்லினத்தை காணும் வரை...
அவன் மட்டுமல்ல அன்று அங்கிருந்த பரபிகளின் முகத்தில் மரண பயம் பீறிட்டு பின்பு விலகியதை அவதானித்தேன் காரணம் அவள் வெட்ட கொண்டு வந்தது மேலே போட்டோவில் பார்க்கும் அதே போலொரு அருவா....
என்னைப் பொருத்தவரை பெண்கள் வல்லினம்தான் மைலார்ட்.

7 comments:

  1. "மாட்னா ஓரே வெட்டு..." இப்படித்தான் பயம் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. Replies
    1. வல்லினத்தின் மெல்லினம்ன்னும் சொல்லலாம்.

      Delete
  3. இப்படித்தான் இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்குத் தான் பொறுமையாக இருப்பது! பொங்கி எழ வேண்டியது தான்!

    ReplyDelete
  4. //எனக்கு அந்த நெருடல் இருந்துகிட்டுதானிருந்துச்சு//
    இனி நெருடல் வரும்?

    ReplyDelete
  5. பொருளாதாரம் ஈட்ட வந்தால் பெரும் அரபிகள் தங்களின் பெரும் ஆசைக்கு ஆட்கள் தேடுறாங்கள். நல்லபயத்தை காட்டியிருக்கின்றாள்§

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!