Wednesday, March 30, 2011

பெப்சி அநியாயம்

மும்பை தாராவியில் கள்ளத்தனமாக உருவாக்கப்படும் பெப்சி.....!!!! நண்பன் மெயில் அனுப்பி இருந்தான் அது உங்கள் பார்வைக்கும்....


மூடிகள் சரியாக தெரிந்தேடுக்கிரார்கள்....




மூடிகள்....




கேஸ் நிரப்புகிறார்கள்....




பாட்டல்கள் கழுவ படுகிறது....




கலர் ஜூஸ் நிரப்புகிறார்கள்...




சரிபார்க்கிறார்கள்....




பெப்சி ரெடி......


டிஸ்கி : Don't say now Yeh Dil Mange More!!!!!



டிஸ்கி : இனி பெப்சி குடிப்பே குடிப்பே குடிப்பே.....

சினிமாய்யா சினிமா

கொஞ்ச நாள் முன்பு என் நண்பன் ஒருவன் அனுப்பிய மெயில் இது. நீங்களும் பார்த்து இருக்கலாம். இருந்தாலும் இதை பார்க்காதவர்கள் பார்த்து ரசியுங்கள்.

எதார்த்தம்...



ஹாலிவூட் சினிமா...




ஹிந்தி சினிமா...




தெலுங்கு சினிமா....



*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

கடைசியாக......

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

தமிழ் சினிமா....


அவ்வ்வ்வ்..........

Tuesday, March 29, 2011

பஹ்ரைன்

பஹ்ரைனில் பங்களாதேஷை சேர்ந்த பங்காளிகள் ஊருக்கு போக தீவிரிக்கிறார்கள்....!!! செத்தாலும் ஊர் போக பிரியபடாத இவர்கள் நாடு திரும்ப தீவிரிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்கள் எம்பசி எப்போதும் ஈ அடிச்சிட்டுத்தான் இருக்கும் ஆனால் இப்போது அங்கே பயங்கரமாக கியூ'வாக இருக்கிறது. நான் ஆச்சர்யமாக சில பங்காளிகளிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆம் இவர்கள் இனி வேலைக்காக போக போவது இந்தியாவாம்....!!! ஏற்கனவே கேரளாவில் பங்காளிகள் வந்து இறங்கி கொண்டிருப்பதாக கேரளா நண்பர்கள் சொன்னார்கள். கூடவே சில இடங்களில் களவும், அதற்காக கொலையும் அங்கே [கேரளா] பங்காளிகள் செய்துள்ளார்களாம். கேரளா
வரை வந்தவர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டுக்குள்ளும் வந்திருக்கலாம் மக்களே உஷாரா இருந்துகோங்க.
பஹ்ரைனில் பங்காளிகளும் நம்ம ஆளுங்களும் ஊர் போவதால் இங்கே ரியல் எஸ்டேட் அடி வாங்கும் என நம்ப படுகிறது. உதாரணம், சிங்கிள் அட்டாச் டூ பாத்ரூம் ரூம்கள் நூறு தினார், நூற்றி இருபது தினார் வரை இருந்த ரூம்கள் இப்போது ஐம்பது தினாருக்கு கிடைப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்...!!! [ஒரு தினார் நம்மூர் ரூபாய்க்கு நூற்றி இருபது சொச்சம் வரும்] 
அடுத்து என் மலையாளி நண்பன் ஒருவன் சொன்ன கமெண்ட்ஸ் : டேய் இனி
அரபி பயலுகளும் நம்மூருக்கு வேலைக்கு வந்துருவானுக கொய்யால அப்பிடி வந்தா 
எங்க தென்னைமர தோட்டத்துல தேங்காய் பறிக்க விடுவேன் பாரு அதுவும் ஒவ்வொரு 
தேங்காயா ஏறி பறிக்க வச்சி பெண்டேடுப்பென்னு [[அடபாவி]]

டிஸ்கி : நானும் ஊர் திரும்புகிறேன் மக்கா....


இது எப்பிடி இருக்கு ஹி ஹி ஹி ஹி...

ஊர்ல எங்க அண்ணன் பொண்ணு பொம்மி'யோட கைபிடிச்சி ஊர்கதை பேசி ஊரை சுத்துனது நியாபகம் வந்துருச்சிலேய்......

Monday, March 28, 2011

மானேஜர்

கீழே நான் எழுதியுள்ள கதை சின்ன வயசுல எங்கயோ படிச்ச நியாபகம். இன்றைய அரசியல் அண்ணாச்சிகளுக்கு பொருந்துமான்னு பாருங்க.....
ஒரு பெரிய கம்பெனியின் மானேஜர், தான்  செய்த களவாணி'தனத்தால் ஒரு நாள் அகபட்டு கொண்டார். முதலாளி அவரை டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனாலும் மனம் தளராத மானேஜர் வலிய வலிய போயி முதலாளியை சந்தித்தார் பேசினார் ஆனாலும் முதலாளி அவனை ஏற்று கொள்ளவில்லை. கடுமையாக யோசித்த மானேஜர், ஒரு முடிவோடு கடைசியா உங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டுமென்று மன்றாடி கேட்டு கொண்டார். முதலாளியும் வந்து தொலைன்னு வேண்டா வெறுப்பாக சொன்னார்.
மறுநாள் முதலாளியை சந்திக்க வந்த மானேஜர் முதலாளியோடு மனம் திறந்து பேசினார். சார் நான் செய்தது தப்புதான் உங்களை ஏமாற்றி விலை உயர்ந்த கார்கள் வாங்கினேன், பங்களா வாங்கினேன், எனது பேங்கில் தாராளமாக பணமும் டெபாசிட் செய்து விட்டேன். அதனால் இனி எனக்கு பணம் தேவை இல்லை, கார் தேவை இல்லை, பங்களா தேவை இல்லை, பேங்க் டெபாசிட் தேவை இல்லை. ஆனால் நீங்கள் புதிதாக சேர்க்க போகும் மனேஜருக்கு வீடு இல்லை, கார் இல்லை, பங்களா இல்லை, பேங்க் டிபாசிட்டும் இல்லை. அவனும் என்னைப்போலவே உங்களை கொள்ளை அடிப்பான். ஆனால் எனக்கு இப்போ எல்லாம் இருக்கிறது இனி நான் கொள்ளையடிக்க தேவை இல்லை ஆகவே என்னையே மானேஜரா வையுங்கன்னு சொன்னார். நன்றாக யோசித்த முதலாளி அவரையே மானேஜராக வைத்து கொண்டாராம். . . .
முதலாளி சொன்னது இதுதான். இவன் ஏற்கனவே எல்லாம் வாங்கியாச்சி [கொள்ளையடிச்சிதான்] அதனால இவனுக்கு இனி கொள்ளையடிக்க தோணாது. ஆனால் புதுசா வர்றவன் மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிப்பானே அதான் பழைய மானேஜரே இருக்கட்டும்னு  சொல்லிட்டார்....!!!
டிஸ்கி : இப்போதைய அரசியல்வாதிகளுக்கு இது பொருந்துமா.... இல்லை நான்தான் தெரியாமல் கேக்குறேனா..?
டிஸ்கி : மேலே இருக்கும் படம் என் நண்பன் சாஜூ'வின் கைவண்ணம் ஹி ஹி ஹி ஹி....

Saturday, March 26, 2011

உன் நினைவு

உன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடித்தாலும் தாகம்
தணியவில்லையடி...
 
உன்னை மறக்க
நினைக்கும் நினைவலைகள்
உன்னோடு சாம்பலாகி விட்டதோ
ஆழியில் கரைந்து விட்டதோ...
 
உன்மத்தம் பிடித்தவனாய்
இருப்பது போல் உணர்கிறேன்
உன் நினைவின் நிறைவு
என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...
 
எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....
 
உன் நினைவை சுமந்து
தினம் தினம்
நான் எரிந்து போவதற்கா
என்னை உயிரோடு வாழ விட்டாய்....
 
நீ வாங்கிய சத்தியம்
என்னில் எரிமலையாய்
அது நான் உறங்கும்
கல்லறையிலும் தொடரும்...
 
இதற்க்கு [நமக்கு]
சாட்சியாக அந்த
ஒற்றை பனை மரம்
ஜீவித்தும்  இருக்கும்....
 
 
 
.
 
 
 
 
 

Thursday, March 24, 2011

"லிபியா" அதிபர் கத்தாஃபியும் அவரின் பெண் கமாண்டோக்களும்

இன்று என் நண்பன் "அனில் அண்ணன்"  என்னிடம் கேட்டார் நான் நேற்று உனக்கு அனுப்பிய மெயில் பார்த்தியா என்று. ஆமா பார்த்தேன் "லிபியா" அதிபர் கத்தாஃபியும் அவர் கூட நிறைய பெண்களும் இருந்த போட்டோதானே'ன்னு சொன்னதும் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு சொன்னார் [[நாம'தான் டியூப் லைட்டாச்சே]] டேய் கத்தாஃபி கூட இருக்கும் பெண்கள், அவரின் மெய்காப்பாளர்கள் எதற்கும் துணிந்த கமாண்டோக்கள், கத்தாஃபி ஆண்களை நம்புவதில்லையாம் அதான் அவரை சுற்றி பெண் கமாண்டோக்களை [[டேஞ்சர்]] வைத்து இருக்கிறாராம் அந்த போட்டோதான் அது [[மனசுக்குள்ளே நல்லா திட்டி இருப்பாரோ அவ்வ்வ்வ்]]  என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
நானும் ஆர்வமாக மெயிலை திறந்து பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது!!!! இதோ அதை நீங்களும் கண்டு களியுங்கள்....
 

















 
அம்மாடியோ.........!!!!!
 
 
 
டிஸ்கி : சத்தியமா நான் அவங்க கூட்டத்து ஆளு இல்லீங்கோ அவ்வ்வ்வவ்வ்வ்.....
 

நண்பன் சாஜூ'வின் கைவண்ணம் இது....
 

Wednesday, March 23, 2011

தமிழா இது உனக்கான கடைசி தருணம்

படித்தவர்கள் அதிகம் வாழும் சென்னையை விட்டுட்டு ஊருக்கு வெளியே போயி திமுக போட்டி இடுவதை பார்த்தால் சம்திங் ராங்......[படிச்சவனுக்கு இவனுக தகடுதத்தம் நல்லா புருஞ்சிடுச்சி போல] மக்களே உஷாரா இருங்கள்.....ஸ்பெக்ட்ரம் ஊழல் மறந்து விடாதீர்கள்.....ஈழத்தமிழ் மக்கள்
கொல்லப்படும் போது சட்டி நிறைய இட்லியை தின்னுட்டு அரை நாள் உண்ணா விரதம் இருந்ததை மறந்து விடாதீர்கள்.....சாதிக் பாட்ஷா தற்கொலை செய்யபட்டதை மறந்து விடாதீர்கள்....சாதிக் பாட்ஷா
உடலை போஸ்ட்மாட்டம் செய்த டாக்டர் ராஜினாமா [என்ன நிர்பந்தமோ] செய்ததை மறந்து
விடாதீர்கள்...இந்த சில நாதாரிகள் தரும் பிச்சை பணத்துக்காக.....
அம்மையாரும் உன்மத்தம் பிடித்தவராக கிளம்பி இருக்கிறார் தேர்தல் பிரசாரத்துக்கு..... ஒ தமிழனே
விழித்துக்கொள்... இது உனக்கான கடைசி தருணம். ஒன்று படு. வைகோ'வை தேர்தலில் நிற்க விடாமல் தடுத்ததில் ராஜபக்ஷே என்னும் ஓநாயின் கரமும், தூத்துக்குடியில் தடை செய்ய பட்ட ஒரு ஆலையின் அதிபர் கையும், கர்நாடகாவின் ஒரு தொழில் அதிபரின் கையும் இருக்கிறதாம்!!!! ஆக தமிழனுக்கு விரோதமாக ஒரு பெரிய நெட் ஒர்க்கே செயல்படுகிறது அப்பட்டமாக தெரிகிறது!!!!
தமிழா நாம்தான் நம்மை காத்து கொள்ள வேண்டும்.....காத்து கொள்வாயா அல்லது பிச்சை காசுக்கு மயங்கி விடுவாயா காலம் பதில் சொல்லட்டும். 

Tuesday, March 22, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 3

இதயசாரல்...
 
 
காற்றானாலும் உயிர்
ஊற்றானாளும் செந்தமிழே..!
உன்னையே சுவாசிப்பேன்.
 
இவர் ஒரு தமிழ்காதலன் இவரின் கவிதைகள், தமிழ் தேன்பொழியும் தேனூற்று...மனசுக்கு இதமாகவும் வலியாகவும், உவமை கொள்வதாகவும் இருக்கும்.
 
உணவு உலகம்...
குடிக்கும் தண்ணீரை பற்றி சாடியும், ஆலோசனையும் தந்திருக்கிறார். இவர் எழுத்தில் அதிகம் சமுதாயத்தை பற்றிய அக்கறை இருக்கும் இவருக்கு ஒரு ராயல் சல்யூட்....
 
 
பன்னிகுட்டி ராமசாமி....
 
வருங்கால சூப்பர் ஸ்டார் யாரென்று மிக சரியாக அடையாளம் காட்டிவிட்டார் இந்த ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...அப்பாடா ஏதோ நம்மால முடிஞ்சது.
 
அட்ரா சக்க....
சி பி செந்தில்குமார்...
 
எவ்வளவுதான் குண்டாந்தடி, உருட்டுகட்டை அடி வாங்கியும் மனுஷன் அசராமல் சினிமா விமர்சனம் போட்டு, சினிமா பார்ட்டிகளுக்கு எனிமா குடுத்துட்டு இருக்கார்னா ஆச்சர்யமா இருக்கு..!!! அதுவுமில்லாம அரசியல் சாக்கடைகளையும் போட்டு தாக்குறாரு....
 
ரோஜா பூந்தோட்டம்...
 
வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?

அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?
 
டிஸ்கி : இவர் வைகோ'வை பல கேள்விகளும், ஆலோசனையும் சொல்கிறார்.

கடைசி டிஸ்கி போட்டோ பன்னிகுட்டி'யை கடுப்பேத்த....



டிஸ்கி : பஹ்ரைனில் பதற்றம் குறைந்து நார்மல் நிலவரம் ஆகி வருகிறது. எங்களுக்காக துடித்த என் நண்பர்கள் தோழிகள் யாவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் நன்றி நன்றி மக்கா.....

 
 
 

Sunday, March 20, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங் பார்ட் 2

தமிழா தமிழா....
வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் காங்கிரஸ
கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என வேண்டுகிறேன்.
டிஸ்கி : நாங்க யாருக்கு ஓட்டு போடணும் அதையும் சொல்லுங்கோ...

ரஹீம் கஸாலி...
தேர்தலை புறக்கணிக்கிறோம்; சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை : வைகோ அதிரடி"

டிஸ்கி : வாங்குன நாப்பது கோடிக்கும் மேலேயே கூவிட்டாரோ வைகோ # டவுட்டு.....
உருப்படியா தென்  மாவட்டங்களில் நிற்கலாமே.... டப்பு இல்லை போல ம்ம்ம்ம்...

வேடந்தாங்கல்...
அதுக்கு "நோ" சொன்ன தீபிகா படுகோனே....]
டிஸ்கி : அவங்களுக்கு பெரிய மனசு...

சங்கவி...
 

கதாநாயகியின் இலவச கவர்ச்சி....


திருச்சி,மதுரையில் மனநல மருத்துவமனை அமைக்கப்படும்..

டிஸ்கி : திமுக வந்தால் கண்டிப்பா மேற்சொன்னது தேவை படும்...


டக்கால்டி....


பழைய தளம் கிடைத்து விட்டது....


டிஸ்கி :
எடுலேய் அந்த வீச்சருவாளை டக்கால்டி தளத்துல விளையாடினவனை போட்டு தள்ளிருவோம்...

ஸ்பெஷல் டிஸ்கி : நம்ம பன்னிகுட்டி ராம்சாமிக்கு கீழே இருக்கும் படம் சமர்ப்பணம் ஹே ஹே ஹே ஹே...



Saturday, March 19, 2011

பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங்

இன்றைய ஐந்து பதிவர்களின் பதிவை படித்து வந்த ஃபீலிங்....
"கவியரசி" கல்பனா ராஜேந்திரன்....
 
சகாக்களின் முன் உண்ண பயந்து
நிழல்கடந்து உண்ட நாட்கள் பல!
சமயத்தில் விரதநாட்கள் சில!!
டிஸ்கி : இவிங்க சாப்பாட்டை கண்டு நண்பர்களுக்கு பயம்னு சொல்லாம சொல்றாங்க..
நான் பேச நினைப்பதெல்லாம்....
ஆனாலும் என்னிடம் உனக்கு

அன்பு அதிகம்தான்!

சிறுவர்கள் சீண்டினால் சீறுவாய்

பைக் இளைஞர்களை நீ சாடுவாய்!

கலகலப்பாய் இருந்த வீதி

இன்று களையிழந்து நிற்கிறது!

நீ இல்லாத வீதி வெறிச்சோடிக் கிடக்கிறது!
கார்ப்பரேஷன் நாய் வண்டி
நேற்றுன்னைப் பிடித்ததில்...
டிஸ்கி : என்னமோ சூப்பரா லவ்வுகிறார் போலன்னு படிச்சா கார்ப்பரேஷன் வண்டி நாயை பிடிச்சுட்டு போயிட்டான்னு ஃபீலிங் பண்ணி சிரிக்க வச்சுட்டார் தல...
கவிதை வீதி...
நடிகர்களுக்கு நடிப்பைத் தொடர திருமணம் ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் நடிகைககள்தான் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள். பெரும்பாலானவர்கள் மீண்டும் நடிக்கு வந்து விடுகிறார்கள். கலையார்வத்தைக் கட்டுப்படுத்த முடியவிலல்லை என்பதே இவர்களிடம் இருக்கும் ரெடிமேட் பதில். இந்த சினிமா நியதிக்கு உட்படாத நடிகைகள் யாராவது இருக்கிறார்களா என்றால்... ம்ஹூம் ரொம்பக் கம்மி(ராதாவும் நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டார்)! அந்த வகையில் ஜோதிகாவும் இப்போது நடிக்க வந்து விட்டார்.
டிஸ்கி : கவிதைக்கு பதில் இன்னைக்கு சினிமா தகவல் அவ்வ்வ்வவ்வ்வ்வ்....
கே ஆர் பி செந்தில்...
புதியவை                        :  சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து                             : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி                              : பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு 

                                               பாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம் 
                                              இன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட் 
                                              கம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை 
                                              உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி 
                                              நிற்கிறான்..
டிஸ்கி : திமுக'வின் பயோடேட்டாவை  போட்டு கிழிச்சிருக்கார்....
விக்கியின்- நாம் காண்பது நிஜமா பொய்யா...

தம்பி சிகரட் பிடிக்காதே உடம்புக்கு நல்லதல்ல -இந்த அறிவுரை கோடான கோடி பேர் அவரவர்மொழியில் 
தினமும் செய்யும் அறிவுரை (இதில்மதுவும் அடக்கம்).
டிஸ்கி : சில அறிவுரைகள் சொல்கிறார்....
சரி நான் சொல்றேன் சிகரெட் குடிச்சி தொலைக்கும் நண்பர்களுக்கு என்னதான் அட்வைஸ் சொன்னாலும் நீங்க கேக்க போறதில்லை அதனால் தினமும் வெள்ளரிக்காய் தின்னு தொலையுங்க நிக்கொடினின் கெடுதலை கொஞ்சம் குறைய செய்யும் இந்த வெள்ளரிக்காய்...
டிஸ்கி : நம்ம  சில பதிவர்களுக்கு கலைஞர் கவிஞர் என்ற சொல் சரியாக டைப் செய்ய தெரியாததால் அவர்களுக்கு  kalaignar கலைஞர் kavignar கவிஞர் இப்பிடி டைப் பண்ணுங்க சரியா....
கோமாளி செல்வா....
டிஸ்கி : எலேய் மொக்கையா உன்னை தினமும் இப்பிடி ஒருத்தன் காலை வாருறானாமே அப்பிடியா.....

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!