Sunday, November 25, 2012

பதிவர்கள் வர்க்கமும் ஆளும்வர்க்கமும் காமெடி கும்மி...!

கோபலலிதா : இங்கே இந்த மீட்டிங்கை அவசர அவசரமாக கூட்டியதின் காரணங்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நான் மறுபடியும் ஒருமுறை சொல்லிவிடுவதே நல்லது என்று போடாநாடு மீது சத்தியமாக சொல்லிக்கொல்[ள்]கிறேன், 
டிமுக ஆட்சியிலும் எங்கள் ஆட்சியிலும் எத்தனையோ யானைகளும், பானைகளும், யாகங்களும் செய்தும்..... "கரண்டு" வந்தபாடில்லை டமிழகத்துக்கு, கடைசி முயற்சியாக கேரளா கோடாங்கியையும் வரவைத்து உறுமி அடித்துப் பார்த்தும் பிரயோசனமில்லாமல் போன படியால்தான்  பிரபல[!] பதிவர்களாகிய உங்களை அழைத்து ஐடியா கேக்க தோணியது, அமைச்சர்களை விட பதிவர்களிடம் நிறைய ஐடியாக்கள் இருப்பதாக அறிந்தே இந்த கூட்டத்தை கூட்டியுள்ளேன். இனி உங்கள் எண்ணங்களை சொல்லலாம்.

பொ.செல்வம் : மம்மா...டினகரனை கட்சியை விட்டே தூக்கினால்தான் டமில் நாட்டுக்கு மின்சார விமோசனம் கிடைக்குமென்று செங்கல் கோட்டையன் சொல்லசொன்னார்...என்று சொல்ல, மம்மா முறைக்கிறார்..

பசிகலா : அக்கா அக்கா...நான் வேணா மைசூர் போயி சொல்லமாடன் சாமிக்கு கிடாவெட்டி போட்டு குடும்பமாக மங்களம் பாடிவிட்டு வந்துறட்டுமா..? கரண்டு உடனே  வந்துரும்...

சிபி [பதிவர்] : ஆமா உடனே வாயை பொளந்துரும்....பசிகலா வெறியாக அண்ணனை பார்க்க, டேபிளுக்கு கீழே பம்முகிறான்.
பக்கி : ஒன்று செய்யலாம் மம்மா, கேமரூன் காட்டுக்குள்ளே இருக்கும் காட்டுவாசிகளை போடாநாடு அழைத்து வந்து, கும்மாகுத்து நடனம் ஆடச்செய்து, பாம்பில் ஊறவைத்த ஒயின் கொடுத்து தீக்கொளுத்த சொல்வோம், உடனே கரண்டு பப்பரப்பான்னு வந்துரும்.

பக்கத்தில் அமர்ந்திருந்த சிபி ஓங்கி ஒரு கொட்டு கொடுக்க, பக்கி கலவரமாகிறான்.

பவர் அமைச்சர் : மம்மா, இது வேற்காடு ஏழுமுகத்தின் சதி என்றே நினைக்கிறேன், என்னை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தாங்கள் என்னிடம் பேசுவதுபோல மிமிக்கிரி செய்து என்னை செயல்படமுடியாதபடி செய்வதாக எனக்கு ரகசிய தகவல் வந்துருக்கு....இதை சப்பிரமனியன் சுவாமி சொல்லசொன்னார்.
நாஞ்சில்மனோ : அடிங்"கொய்யா"ல"....என்று எழும்பவும், பக்கி டேபிளுக்கு கீழே காலால் ஒரு மிதி கொடுக்க, கலவரமாகி பயத்துடன் நடுங்கியவாறு மெதுவாக, மம்மா..... அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா "கொய்யா" மரத்துல இருந்து கரண்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன் காரணம் இணையதளங்களில் "கொய்யா" என்று சொன்னதுமே பலர் ஷாக் ஆகிறார்கள், எதுக்கும் பப்துல் கலாமிடம் சொல்லி விஞ்ஞானிக்க சொல்லவும்.

பன்னி குட்டி : கோடாங்கியும் சரி, சொல்லமாடனும் சரி, யானையும் சரி, பானையும் சரி, போடாநாடும் சரி, கொய்யாவும் சரி இவைகளால் கரண்டை கொண்டு வரமுடியாது ஆனால்...
கோபலலிதா : ஆனால் என்ன ஆனால்...? சொல்லுங்க சொல்லுங்க மிஸ்டர் பன்னி.....நீங்கதான் வலைத்தளங்களில் அறிவுள்ளவர்னு கேள்விபட்டு இருக்கிறேன்.

நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோ....

பன்னி குட்டி : மனோவை முறைத்தவாறே....மம்மா, அந்த கோடாங்குளம் பணு உலையை திறந்தோம்னா கரண்டு வெடிச்சிரும்..... ச்சே ச்சீ.... கிடைச்சிரும் என்பது என் தாழ்மையில்லாத கருத்துன்னு சொல்லமாட்டேன்னு சொல்லி........ சொல்லாம இருக்கமாட்டேன்.

சரிப்பு போலீஸ் : எட்றா அந்த அருவாளை...

பம்சை அரசன் பாபு : தம்பி அடங்கு, பெரியவிங்க பேசிட்டு இருக்கோம்ல...? 

"பலியுகம்" தினேஷ் : பலாயி போலாயி கோலாகி நொந்து கொசு வந்து கோடியில் ஆடி படியில் வெந்து காலரா போலரா தைங் தக்கா தை ஆடியது...

பரசன் : வேகமாக எழும்பி வந்து தினேஷ் காலில் விழுகிறார் [[கோபலலிதா முறைக்கிறார்]] தெய்வமே...நீங்க இம்புட்டு நாளும் எங்கே இருந்தீக....? கரண்டே வேண்டாம்டா சாமீ ஆளை விடுங்க...என்று தலைதெறிக்க வாசலை நோக்கி ஓடுகிறார்.
கே ஆர் விஜயன் : இங்கே கூடியிருக்கும் அமைச்சர்களால் வாயே திறக்கமுடியாமல் இருக்கிறார்களே இதற்கும் கரண்டுக்கும் என்ன சம்பந்தம், இவர்களை ஏன் மம்மா அவர்கள் அழைத்து இருக்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் யோசித்து கொண்டே இருக்கிறேன்.

பக்கி : யோவ் இதென்ன உம்ம நாகர்கோவில் ஆபீஸ்ன்னு நினைச்சீரா..? "கொய்யால"ன்னு அந்த நாதாரிப் பயலை என்னைக்கோ திட்டுனதை மனசுல வச்சிகிட்டு கொய்யாவுல இருந்து கரண்டுன்னு போட்டு குடுக்குறான் ஓய்...

ஒழுங்கா பியட்னாம் போயி சேருவேனா இல்லை பாஸ்போர்ட்டை புடுங்கிட்டு ஆப்பு அடிப்பானுகளான்னு ஆடிப்போய் இருக்கேன், ஐயோ என் ஆபீஸ்ல ஐந்தாவது வந்து சேர்ந்த அந்த ஸ்டெனோ காத்து இருக்குமே...
பன்னி குட்டி : ஆமா இவரு பெரிய கவர்னரு, டேய் அங்கே இருக்குறதே நாலே நாலு இந்தியாக்காரனுக, அதுகளும் பச்சைபாம்பை பிடிச்சி தின்னுட்டு டவுசரோட அலையுறானுக...இங்கே வேலூர்ல கொஞ்சநாள் இருந்துட்டுப் போய்யா...

கோபலலிதா : பதிவர்கள் என் பொறுமையை சோதிக்க வேண்டாம்...அமைச்சர்கள் போலவே அமைதியாக இருங்கள், பஜயகுமார் குண்டாந்தடியோடும், பளர்மதி மீன் வாலோடும் வாசலில் இல்லை என்பதை இங்கே நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.

கே ஆர் விஜயன் தன் இரு செருப்பையும் கழட்டி கக்கத்தில் வைத்துக்கொள்கிறார்.

ரகசியமாக நாஞ்சில்மனோ காதில்...

"மக்கா, நிலைமை சரியில்லை போல தெரியுது ஓய், அன்னைக்கு எருமைநாயக்கன்பட்டியில் நடந்த அதே களேபரம் இங்கேயும் நடக்கும்னு தோணுது எதுக்கும் பேப்பர் அருவாளை சுருட்டி தூரப்போட்டுட்டு, செருப்பை கழட்டி கையில் வைத்துக்கொள்ளும் ஒய்"
சிபி : மம்மா அவர்களே, உங்கள் அமைச்சர்கள் யாவரும் தனிமையில் மொட்டைமாடியில் நின்று வீரவசனம் பேசுகிறார்களே ஒழிய, எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவே தயங்குகிறார்களா அல்லது பசிகலா'வுக்கு பயப்படுகிறார்களா என்றே தெரியவில்லை, கரண்டு என்னாச்சுன்னு பதிவர்கள் கேட்டா...

வேலூரை தெரியுமா? பாளையங்கோட்டையை தெரியுமா? புழல் தெரியுமா? ஏன் அந்தமானைக் கூடத்  தெரியுமா என்று கேட்கிறார்கள்...?

பக்கி : மனசுக்குள்' இன்னையோட இவன் செத்தான்டா...அப்பாடா இனி ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்டு தமிழனை கொல்ல ஒருத்தன் பிறந்துதான் வரனும் ஸ்ஸ்ஸ் அபா தப்பிச்சுதுடா பதிவுலகம்...சத்தமாக, ஆங்.... சிபி அண்ணன் என்ன சொல்றான்னு எனக்கு கேக்கவே இல்லை மம்மா, அவன் யாருன்னே எனக்குத் தெரியாது, ஆனால் நாஞ்சில்மனோ அவனுக்கு பினாமின்னு கே ஆர் விஜயன் சொல்ல சொன்னாரு.

கே ஆர் விஜயன் : ஆஹா......எருமைநாயக்கன்பட்டியேதான்....
பம்சை அரசன் பாபு : கொய்யாவில் இருந்து "கரண்ட்" என்பது நல்ல விஷயமே மம்மா அவர்களே, டரர் குரூப்பிடம் மற்றும் நாஞ்சில்மனோ நண்பர்களிடமும்  சொன்னால் கொய்யாக்களை அமோகமாக விளைவிப்பார்கள் என்பது என் கருத்து..

பன்னி குட்டி : ஆஹா சொந்த செலவுலேயே தம்பி சூனியம் வைக்குறானே...சத்தமாக, கொய்யா என்பது என்ன...? அதனூடே 'ல' சேரும் போதுதான் ஷாக் அடிக்கிறது என்பது என் தாழ்மையில்லாத கருத்து.

கோபலலிதா : அப்போ "ல" என்ற வார்த்தையில் கரண்ட் இருக்குறதா சொல்றீங்களா மிஸ்டர் பன்னி..?

சின்னவீடு சுரேஷ் : அவருக்கு அம்புட்டு அறிவு பத்தாதுங்  மம்மா, நான் சொல்லுறேனுங்.....இப்போ ஒரு நாயை பாருங்...அப்பிடியே குனிஞ்சி கல்லெடுத்தா நாய் ஷாக் ஆகுதா இல்லையா..? அந்த கல்லு'இந்த "ல" இருக்கு பாருங்க அதான் "ல"வுல கரண்டு இருக்குன்னு சொல்றோமுங்...

கோவை டைம் : அடிங்கொய்யால....மனதுக்குள், டாஸ்மாக் கடையை நாரடிச்சுட்டு வந்து பேசுறப் பேச்சப்பாரு....?


பளர்மதி : மம்மா நான் உள்ளே வரட்டுமா சத்தம் கேட்டாப்ல இருக்கு என்று மீன்வாலை சுருட்ட...சிபி அண்ணன் சுவற்றோடு பல்லிபோல ஓட்டுகிறான்.
பேய் நக்ஸ் பக்கீரன் : மம்மா, பாவம் பயபுள்ள கரண்டு இல்லாம கஷ்டப்படுவானேன்னு நினச்சி விசாரிக்கப் போனை போட்டா, இந்த நாஞ்சில்மனோ போனை எடுக்கவேமாட்றான் மம்மா...இவனுக்கு கரண்டு ஒரு கேடா? [[யோவ் அண்ணே, சரக்கடிச்சா மட்டும் தம்பிக்கு போனா பிச்சிபுடுவேன்பிச்சு]]

சென்னை பவன் : சென்னை பட்டணத்திலே அதுவும் மம்மா பக்கத்தில் நாங்கள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு கவலையேது, மஞ்சாசிங்கம் பாரில் ஏறி சட்டையை கழட்டினால் கரண்டும் நாணும்...கண்ணாடியை சற்று மூக்கில் தூக்கி வைக்குறார் விரலால்...
பன்னி குட்டி : அதென்னடா கொக்காமக்கா வந்ததுல இருந்தே பாக்குறேன் மினிஸ்டர்ங்க ஒரு பயலும் வாயே திறக்கமாட்றானுக, பன்னி குட்டிபோட்ட கணக்கா...? பிச்சிபுடுவேன் பிச்சி, மம்மா இருக்காங்களேன்னு பம்மிட்டு இருந்தா ஓவரா சீனைப் போடுறானுக கம்னாட்டிக பேசாம இருந்து, கொய்யா...ஐயோ மம்மா மன்னிச்சு, பவர் இல்லாத கடுப்புல ஒவ்வொருத்தனுக்கும் பவர்ஸ்டார் படங்களின் டிவிடி"யை பார்சல் அனுப்பி வலுக்கட்டாயமாக பாக்க வச்சிப்புடுவேன் ஜாக்கிரதை.

கோபலலிதா : மிஸ்டர் பன்னி.... கூல்....இப்போ பிரச்சினை கரண்டை பற்றினது...

பன்னி குட்டி : மெதுவாக...ஆமா, இதுக்கு பேசாம சுடுகாட்டுல போயி குடும்பம் நடத்தலாம், சத்தமாக....ஒ...மம்மா...கொய்யா"இருந்து தாராளமா கரண்டு எடுக்கலாம் கேன் யு அப்ரூவல் பிளீஸ்...

பலேசியா சில்வி டீச்சர் : அய்யோடா..."ல"வுல கரண்டா...? நாங்க இங்கே மலேசியாவுல 'ல' போட்டுதான் பேசுவோம்'லா....மேடம், "ல"வுல சத்தியமா'லா கரண்டு'லா இருக்கு'லா....

நாஞ்சில்மனோ : நாசமாபோச்சுபோங்க இனி அங்கேயும் கரண்டு இல்லாம போயிரும் அவ்வ்வ்வ்...

பக்கி : யாருடா அங்கே அழுவுறது..? வாயி'ல' குத்திப்புடுவேன், அய்யூ இங்கேயும் 'ல"வா?

அமைதியாக இருக்கும் சாப்பாடு உலகம் கோபமாக எழும்பும்முன், அவர் பாடிகாட் திவானந்தா சுவாமிகள் எழும்பி உருட்டுகட்டையால் பக்கியை ஒரு போடுபோடுகிறார்... அண்ணன் சைலண்ட் ஆகிறான்.
சிபி : ஆக...... கி'ல்'மா என்றாலும் பதிவுலகம் ஷாக் ஆகிறது ஸோ அதிலும் 'ல' இருக்கிறது என்பதை தாழ்மையாக மம்மாவின் காலை பிடித்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

பன்னி குட்டி : நாதாரி என்னை உள்ளே தூக்கி போட்டுறாதீங்கன்னு கெஞ்சுறதை எப்பிடி நாசூக்கா சொல்லுறான் பாரு....உருப்பட்டுரும் நாடு கொய்யாமக்கா ச்சே ச்சீ கொக்காமக்கா...
கோபலலிதா : 'ல'வில் கரண்டு இருப்பதாக சொன்ன பதிவர்களுக்கு எனது அரசு வரிவிலக்கு[!] அளிக்க சட்டம் கொண்டுவரும், இனி யாருமே பதிவர்கள் கூட 'ல' என்பதை யூஸ் பண்ணக்கூடாது, மீறுபவருக்கு பவர்ஸ்டார் படத்தை தனியாக அமர்ந்து தியேட்டரில் பார்க்கவைக்கப்படுவர் கதற கதற..... 'ல'வில் கரண்டு இருப்பதை கண்டுபிடிக்க பப்துல் கலாம் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு.....

கே ஆர் விஜயன் : மெதுவாக மனோவிடம், எலேய் மக்கா அழுகுன பழச்சாறு நாற்றம் வந்தாப்புல இருக்கே பார்த்தீரா ஓய்..?

நாஞ்சில்மனோ : அட ஆமாய்யா....

விஜயன் கலவரமாகிறார் செருப்பை இறுக பிடித்துக்கொள்கிறார்...

வெளியே கலவரமான சத்தம் கேட்கிறது....வாசலில் நின்ற பளர்மதியும் பஜெயகுமாரும் வாந்தியெடுக்க வாசலைவிட்டு ஓடுகிறார்கள்....

வேகமாக தள்ளாடியபடி உள்ளே வருகிறார் கப்பல் "கேப்டன்"........ அரங்கம் மொத்தமும் டாஸ்மாக் வாடை பரவுது....

"டாய்......ராஜாக்கலு வந்துலு..... டாய்..... ராஜாக்கலு போயிலு....நீயாலு எனக்கு சம்பளம் தாறேலு...? நான் இங்கேலு  ஒரு புதிர் கட்சியாலு  இருந்தும்லு  என்னைக்கேக்காமலு  எப்பிடிலு கூட்டம்லு நடத்தலாம்லு...? 

ஏய்....கேட்டுக்கலு....'ல'...'லு'...'லி' தெலுங்குலு...கரண்டை 'ல"வுல இருந்து எடுக்க விட்டுருவேனாலு பார்ப்போமாலு..."என்று பாட்ட'லை' சுழட்ட....

விஜயன் செருப்பை மனோ மீது எறிந்துவிட்டு அவன் தோளில் மிதித்து ஜன்னல் எட்டிப்பிடித்து தாவி ஓடுகிறார், சிபி....ஒரே ஜம்பில் பக்கி இடுப்பில் ஏறி உட்கார, பக்கி ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுகிறான்...சின்னவீடு உடம்பை தூக்கி ஓடமுடியாமல் நின்று கதகளி ஆடுகிறார்...பன்னி, கேப்டனுக்கு தட்டாமாலை காட்டி அவரை கிர்ர்ர்ராக்கி விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்...

சில்வி டீச்சர் ஹேன்ட் பேக்கை தோளில் போட மறந்து [[பயந்து]] தலையில் மாட்டிக்கொண்டு ஏர்போர்ட் நோக்கி ஓடுகிறார்....சென்னை பவன், மஞ்சாசிங்கம் இவரை தள்ளிட்டு ஓடிய வேகத்தில் காணமல் போன கண்ணாடியை தரையில் தேடுகிறார்...

சாப்பாட்டு உலகம் மெதுவாக எழும்பி வந்து கேப்டன்  முன்பு நின்று அலட்டிக்காமல் ஒரு லுக் விட, கேப்டன் தள்ளாடியபடி சற்று பின்வாங்குகிறார், சாப்பாடு உலகம் பின்னாடியே வந்த திவானந்தா சுவாமி கேப்டனை விரலைக்காட்டி, நாக்கை ரெண்டாக மடித்துக்காட்டி பயமுறுத்துகிறார்....
எதுக்குமே அசையாமல் அமர்ந்திருக்கும் கோபலலிதாவை பார்த்து, சாப்பாடு உலகம் சொல்கிறார்....

நீங்க நல்லா இருப்பீங்க மேடம்..... நல்லா இருக்கனும்... கரண்டைப்போல..வாழ்க வாழ்க....!

டிஸ்கி : சும்மா தமாஷா நினச்சுக்கோங்க ஹி ஹி....

டிஸ்கி : என் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி...

Tuesday, November 20, 2012

அப்பாடா இம்புட்டுதான்ய்யா மருத்துவம்...!

சேனா தலைவர் பால்தாக்கரேயை பலர் தம் தம் பிளாக்கில் போட்டுத்தாக்கினாலும், ஒன்றே ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய காரியமும் உண்டு அது...?

நிழல் உலக தாதாவின் ஆட்சி மும்பையில் படராமல், வேர்விடாமல் தடுத்ததில் பால்தாக்கரேக்கு அதிகமான  பங்கும் உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை, இல்லைன்னா நம்ம டாக்டர் அப்துல்கலாம் இந்தியா 2020ல்  வல்லரசு ஆகி இருக்கும் என்று சொல்லிருக்கமுடியாது, இந்தியா "பல்லரசு" ஆகி பல்லை காட்டியிருக்கும்....அதாவது மும்பை முற்றும் நிழல் உலக கும்பல் கைகளின் கக்கத்துக்குள் போயிருக்கும்...!

@பண முதலைகளுக்கும், அரசியல் வியாபாரிகளுக்கும், நிழல் உலகத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும், ஆளாதவர்க்கத்திர்க்கும் தீராத தலைவலியாக மாறியிருப்பது சமூக இணையத்தளங்கதானாம்...!

@நஷ்டம்...நஷ்டம் என்று அலறும் விஜய் மல்லையா, மான்யமாக பெறப்போகும் பணம் யாருடையது..? காங்கிரஸ் கட்சியின் "@#$%%^" சம்பாதிச்சு வைத்ததா? மக்களின் பணம்ய்யா மக்களின் பணம்...!

@திடீரென குளிகாலம் ஆரம்பித்ததால் பஹ்ரைனில் ஸ்வெட்டர்களின் விலை தாருமாறாகிவிட்டது மலையாளி சேட்டன்களின் புண்ணியத்தில், ஒரே பிராண்ட் கடைக்கு கடை விலையை மாத்தி மாத்தி சொல்லி விக்குரானுக...!!!

@முகரம் பண்டிகையால் பஹ்ரைனுக்கு வரும் சுற்றுலா பயணிகள்[!!!] எண்ணிக்கை ககககககணிசமாக குறைந்துள்ளது. [[கலவரம் காரணம் அல்லது பயம்]]

@போன வருஷம் பிளாக் எழுதிய கணிசமான பிளாக்கர்ஸ் இந்த வருஷம் அட்ரஸே இல்லாமல் போனதன் மர்மமும் புரியவில்லை, ஏனென்றும் விளங்கவில்லை...!

@இந்தியன் முஜ்ராக்களில் நேப்பாள் பெண்களின் வருகை அதிகமாக இருக்கிறது, இருபது வயசுக்குட்ப்பட்ட பெண்கள், பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது [[பஹ்ரைன்]]


@தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்.

நன்றி : சிவகுமார் சித்தமருத்துவம்

@வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

@தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகி[கனா]யாகவே இருக்கலாம்.


நன்றி : பாட்டி வைத்தியம்.

Monday, November 19, 2012

வெளிநாட்டில் வாழும் சிறகொடிந்த ஏமாளிகள்...!

வளைகுடா நாட்டில் சில குரூரமான புத்திசாலி[!] அண்ணன்களை கொண்ட பங்களாதேசி நண்பர்களின் கதைகளை கேட்கும்போது கண்ணில் ரத்தக் கண்ணீரே வந்துவிடும் அளவுக்கு சோகம் நிறைந்ததாக இருக்கிறது...!

உதாரணத்திற்கு, நான்கு அண்ணன் தம்பிகள் கொண்ட கஷடப்பட்ட குடும்பத்தில், வங்கியில் லோனும் அங்கே இங்கே கடனும் வாங்கி மூத்தவனை வெளிநாடு அனுப்புகிறார்கள் பெற்றோர்கள், அவன் இங்கே வந்து கடுமையாக உழைக்கிறான்.
உழைத்து, கடன்களை கொடுக்காமல் அடுத்து ஒரு தம்பியை வெளிநாடு அழைத்துக்கொள்கிறான், அந்த தம்பியின் சம்பாத்தியம் கொண்டு குடும்பத்திற்கு பணம் அனுப்பிவிட்டு இவன் சம்பாத்தியத்தை புத்தியாக சேமிக்கிறான்...

கேட்டால் நான் உங்களுக்காகவே சேமிக்கிறேன் என்று பொய் சொல்லுகிறான், பாவம் பெற்றோரும் நம்பிவிடுகிறார்கள், அடுத்தும் ஒரு தம்பியை வெளிநாடு வரவைக்கிறான்...!

அவன் சம்பாத்தியத்தையும் சேர்த்து வைத்துகொண்டு இவன் ஊர் செல்கிறான் விரும்பிய பெண்ணை மணம் முடிக்கிறான், மறுபடியும் திரும்பி வெளிநாடு வந்து, கடைசி தம்பியையும் வெளிநாடு வரவைத்துவிட்டு, இவன் குரூரபுத்தியை காட்டுகிறான்...!
அதாவது எப்படியும் ஏழெட்டு வருஷம் ஆகிவிட, தம்பிகள் பணத்தில் நிலம் பூமி கடைகள் என்று எல்லாமே இவன் பெயரில் [[ஏமாற்றி]] வாங்கிக்கொள்கிறான்.

எல்லாம், தம்பிகளே நான் உங்களுக்காகவே செய்கிறேன் என்று தெய்வ சத்தியமும் பண்ணுகிறான், கடைசியில்..சரி இனி நான் ஊர்போய் கடைகளை பார்த்துக்கொள்கிறேன், அங்கே பிஸினஸ் வளர்ந்ததும், ஒவ்வொருத்தனாக ஊருக்கு உங்களை அழைத்து எல்லா தம்பிகளுக்கும் கடைகள் வைத்து தருகிறேன் என்று ஊர் செல்கிறான்.

மூன்று தம்பிகளின் மாதம் வருமானமும், ஊரில் கடைகளின் வருமானமும் அண்ணனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது, இடையில் இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறான்....!
கல்யாணம் முடிந்தது தம்பி வெளிநாடு வந்துவிட, தம்பியின் மனைவியின் மூலம் அண்ணனின் பல கோல்மால்கள் வெளியே தெரிய வருகிறது, கடுப்பான தம்பிகள் அண்ணனிடம் கேள்வி கேட்க....

அதற்குள் தன்னைப் பலப்படுத்திக்கொண்ட அண்ணன், தம்பிகளை மிரட்டுகிறான்..."என்னா செய்யமுடியுமோ செய்துக்கோ போடா" பரதேசியாக போன தம்பிகளுக்கு உள்ளூரில் பலமாக காலூன்றிய அண்ணனிடம் நியாயம் கேட்க திராணி இல்லாமல் போகிறது...! மனதுக்குள் அழுகிறார்கள்...

இனி அடுத்த இரண்டாவது அண்ணன் வருகிறான், எப்பா ஒன்னும் கவலைப்படாதீக அண்ணன் நான் இருக்கேன்ல அவன்தான் ஏமாத்திபுட்டான், இனி எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கண்ணீர் வடிக்கிறான், அவனை நம்பி தம்பிகள் சம்பளங்கள் கிம்பளங்களை கொடுக்கிறார்கள்...!
இனி அடுத்த தம்பிக்கு கோலாகலமாக திருமணம் நடக்கிறது, அதற்குள் இளைய அண்ணன் ஊரில் கடைகண்ணிகள் வாங்கி ஸ்டெடி ஆகிவிடுகிறான், மறுபடியும் அதே ஏமாற்றம், தம்பி பொண்டாட்டி வந்து கேள்விகள் கேட்க...."உங்களால் என்னா செய்யமுடியுமோ செஞ்சிக்கோங்க" டயலாக் வருகிறது அடுத்த அண்ணனிடமிருந்தும், தம்பிகள் ஏமாறுகிறார்கள்...!

அதற்குள் தம்பிமார் வயதும் கூடிவிட, கல்யாணம் ஆஸ்திகள் ஏதும் செய்யமுடியாமலும் ஊரில் ஆதரவு இல்லாமலும் போகின்றனர் தம்பிகள்...! கோபத்திலும், இயலாமையிலுமாக யாரையும் நம்பாமல் வாழ்கின்றனர் தம்பிகள்...!

அப்படியே ஊர்வந்து கல்யாணம் செய்தாலும் இவர்கள் இவர்களுக்கு வருமானம் இல்லாமல் மறுபடியும் வெளிநாடு வர, குழந்தையும் பிறக்க, ஊருக்கு போகமுடியாமலும் தவிக்கும் பெங்காலிகள் ஏராளம்...!

கண்ணீர்களை அவர்கள் எப்படி மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது...!
ஆக இவர்கள் அப்புறமாக யாரையும் நம்பவே மாட்டார்கள், மூத்த அண்ணன் கூட இருக்கும்போது, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அண்ணன் வருவதை கண்டதுமே மரியாதையாக சைக்கிளை விட்டு கீழே இறங்கி நடந்துவரும் தம்பிகள், இம்புட்டு பிரசினை நடந்தபின்பு அதே அண்ணனை காறி துப்புவது இங்கே வாடிக்கையாக இருக்கிறது...!

இருவது வருஷம், பதினைந்து வருஷம், பத்து வருஷமாக ஊர் போகமுடியாமல் போகும் பெங்காலிகளை பார்க்கும்போது மனது ரணமாக வலிக்கிறது...!
மேலே நான் சொன்னது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமே...! வளைகுடா நாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என நினைக்கிறேன்.

நம்ம தமிழ் அண்ணாச்சிகளும் ஒரு சிலர் ஊர் போகாமல் அல்லது ஊர் போகமுடியாமலும் இருந்ததை முன்பு நான் பார்த்ததுண்டு...ஆனால் அவர்கள் குடும்ப நிலவரம் தெரியவில்லை. 

டிஸ்கி : படங்கள் கூகுள் உதவி 

Sunday, November 18, 2012

தமிழன் என்று சொல்லடா நீ சாதித்தும் காட்டடா...!

புதிய கம்பெனியில் நான் வேலைக்கு சேர்ந்ததும் எனக்கு கம்பெனி ரூம் தந்தார்கள், அங்கே என்னோடு பணி புரியும் அடுத்த செக்சன் ஆட்களும் தங்கியிருப்பதால், அவர்களில் சிலர் என் ரூமிற்கும் அடிக்கடி வந்துபோவதுண்டு.

அதில் ஹோட்டலில் ஒரு முக்கிய பொஷிசனில் இருக்கும் சேட்டனும் ஒருவர், நான் லேப்டாப்பில் இருந்துகொண்டு பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும், பிளாக்கிலுமாக அளவளாவியது கண்டு அவருக்கும் பேஸ்புக் ஆசை தொற்றிக்கொள்ள...

டியூட்டியில் இருந்துகொண்டே [[டியூட்டியில்]] அவரும் பேஸ்புக் அக்கவுன்ட் ஒப்பன் பண்ணி தங்கள் நண்பர்களோடு அளவளாவினார், ஆனால் சேட்டனுக்கு "மலையாளத்தில்" டைப் பண்ணும் மேட்டர் தெரியவில்லை, அதற்காக என்னை அவர் ஆபீசுக்கு அழைத்து, பேஸ்புக்கில் என்னென்ன செய்யலாம் என்று கேட்டதை எல்லாம் எனக்கு தெரிந்தவரை சொல்லிக்கொடுத்தேன்.
அப்படியே மலையாளம் டைப்புவதை சொல்லிக்கொடுத்தும், மலையாளம் ஆஃப்சன் இருப்பதையும் எப்படி டைப் செய்யவேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தேன், அதுதான் எனக்கும் "அன்பான" வினையாக போயிற்று.

அதுவரை டியூட்டியில் பேஸ்புக்கில் விளையாடியவருக்கு, டியூட்டி முடிந்தும் அதில் விளையாட ஆசை வந்துவிட, என் ரூமில் வந்து என் லேப்டாப்பை கேட்டு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்...!

இவருக்கு ஒரு குணமுண்டு, காலையில் பாத்ரூம் போனதில் இருந்து இவர் உறங்கும்போது காணும் கனவுகள் வரை மனைவியுடன் பெரிய கதையாக சொல்லி அருகில் இருப்பவர்களை ஓடவைப்பது வழக்கம்.[[அவ்வ்வ்வவ்வ்வ்]]

நானும் தெரியாமல் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை காட்டிகொடுத்துவிட, எனக்கு கொலைகொலையா முந்திரிக்கா கதையாகிவிட்டார். நாள்தோறும் என் ரூமிற்கு வந்து அவர் குடும்பத்தோடும் நண்பர்களோடும் வீடியோ சாட்டிங்கில் பேசி, என் உறக்கத்தையும், என் சாட்டிங், பேஸ்புக், டுவிட்டர், பிளாக் விளையாட்டை கெடுக்கத் தொடங்கிவிட்டார், எனக்கோ தர்ம சங்கடமாகப்போனது.
சொல்லவும் முடியவில்லை, வயதுக்கு மூத்தவர் வேறே, நல்லமனுஷனும் கூட....வருத்தப்பட்டுருவாரேன்னு நினச்சி சில நேரங்களில் இவர் டியூட்டி முடியுமுன்னே நான் ரூமுக்கு ஓடிப்போயி கதவை பூட்டிக்கொண்டு விடுவேன்.

ஆனாலும் இவரும் எனக்குமுன்பே ஓடிவர ஆரம்பித்துவிட்டார், அப்புறம்தான் ஒருநாள் சொன்னேன் நீங்களும் ஒரு லேப்டாப் புதுசாக வாங்கினால் என்னவென்று, இல்லை மனோஜ் எனக்கு லேப்டாப் யூஸ் பண்ணத் தெரியாது....ஐயோ சாதா நீங்கள் கம்பியூட்டர் ஆபரேட் பண்ணுவது போலதான் லேப்டாப்பும் என்று சொல்லி விளக்கினேன்.

அம்புட்டுதான்..... சம்பளம் வாங்கியதும் என்னையும் கூட்டிக்கொண்டு லேப்டாப் கடைக்கு போயேவிட்டார், என் நண்பன் விண்ணரசன் எனக்கு லேப்டாப் வாங்கித்தந்த அதே கடைக்குக் கூட்டிப்போயி, hp கம்பெனி லேப்டாப் ஒன்று வாங்கினோம்.
லேப்டாப் வந்தாச்சு சரி, இன்டர் நெட் கனெக்ஷன் வேணுமே..? zain கம்பெனிக்கு போனால் அங்கே இவர் பாஸ்போர்ட் கேட்க, இவரிடம் இல்லை, எங்கள் கம்பெனியிடம் அதற்க்கு அப்ளை செய்தாலே கிடைக்கும்.

பாஸ்போர்ட்டும் நெட் கனெக்ஷன் டிவைசும் கிடைக்க ரெண்டு நாளாகிவிட, என்பாடு பெரிய போராட்டமாகிவிட்டது, டிவைஸை கொண்டுவந்து மாட்டினவர் என்ன செய்தாரோ தெரியல, நெட் கனெக்ஷன் புட்டுகுச்சு.

மறுபடியும் எனக்கு தலைவலி தொடங்க, என்னை தூங்கவிடாமல் படுத்திவிட்டார், நெட் கனெக்ஷன் என்ன பிரசினைன்னு பல நண்பர்கள், எங்கள் ஹோட்டலுக்கு வரும் டெக்னீஷியன்கள் என்று யாரையும் இவர் விடவில்லை, ஒருத்தனும் இவருக்கு சரியானபடி சொல்லி கொடுக்கவில்லை.
நடுவில் என்னையும் போட்டு உருட்ட ஆரம்பித்தார், எனக்கோ மனசு கேக்கவில்லை, அவருக்கு என்ன மனைவி பிள்ளைகள் கூட எப்பவும் பேச ஆசையாக இருக்கிறாரே என்று சொல்லி, 

குடும்பத்தை ஊரில் இருந்து கொண்டுவந்து ஒருவாரமே ஆன நண்பன் விண்ணரசனுக்கு [[மனசே இல்லை பாவம் அவன்]] போன் போட்டு விஷயத்தை சொன்னேன், அதுக்கு என்ன அண்ணா நான் நாளை காலையிலேயே உங்க ரூமிற்கு வந்து செய்து கொடுத்துவிடுகிறேன் கவலைவேண்டாம் என்றான்.

ஆனாலும் சேட்டன் நம்பவில்லை, ம்ஹும் நான் பார்க்காத ஆளா, டெக்னீஷியனா..? ஒரு தமிழன் வந்து எனக்கு நெட் கனெக்ஷன் செய்து தருவதா நாங்கள் என்ன அம்புட்டு அறிவில்லாதவர்களா என்ற தொனியில்தான் அவர் பேச்சும் இருந்தது...! நான் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தநாள் விண்ணரசன் ஓடோடி வந்தான், லேப்டாப்பை செக் பண்ணினான், டிவைஸை குத்தினான், வேலை செய்யவில்லை, நேரே zain கஸ்டமர் சர்வீசுக்கு போனைப்போட்டான் விசாரித்தான், பத்தே நிமிஷம் நெட் ஒப்பன் ஆனது, அண்ணா நான் கிளம்புறேன்னுட்டு நன்றிகளை எதிர்பார்க்காமல் ஓடிப்போனான் அவன் வீட்டுக்கு...!

சேட்டன் பிளந்த வாயை மூடமுடியாமல் நின்றிருந்தார்....!

"ஹலோ என்னாச்சு சேட்டா?"

"எடே, பல மலையாளி பன்னாடை பரதேசிங்க எல்லாம் பெரிய பெரிய டெக்னீஷியன்னுட்டு பீலா விட்டுட்டுதான் திரியுறானுக போல, ஐந்து நட்சத்திர ஹோட்டல் டெக்னீஷியங்க கூட வந்து பார்த்துட்டு, ஒன்னும் தெரியலைன்னுட்டு போனானுக, இவன் வந்தான் பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் முடிச்சுட்டு போயிட்டானே"ன்னு மூக்கில் விரலை வைக்க....!

நான் ஒன்றும் சொல்லாமல் போயி தூங்கிவிட்டேன்.
நான் டியூட்டியில் இருக்கும்போது [[ரெண்டுபேருக்குமே ஒரே நேரம்தான் வேலையும்]] என்னிடம் வந்தவர் சொன்னார், "உலகத்துலேயே கம்பியூட்டர் கில்லாடிங்க தமிழனுகதான்னு என் கேரளா நண்பர்கள் பலபேர் பலமுறை என்னோடு சொன்னதுண்டு, ஆனால் நான் அதை நம்பவில்லை, இன்றைக்குத்தான் நேரில் பார்த்தேன், எஸ்.... தமிழன் கில்லாடிகளுக்கெல்லாம் கில்லாடிகளே ஒத்துக்கொள்கிறேன்" என்றாரே பார்க்கலாம்...!

காலரை [[டை கட்டியிருந்தாலும்]] ஒருமுறை தூக்கிவிட்டுக்கொண்டேன்...!

ஸ்பெஷல் நன்றி : விண்ணரசனுக்கு...

Sunday, November 11, 2012

நடு தண்டவாளத்துல கிடத்தி வச்சிட்டு சிரிக்க சொல்றாயிங்க...!

@சற்றே குளிர்ந்தாலும் உறைந்தால் அதுவே உண்மையான தேங்காய் எண்ணெய்...!

@வித விதமான பட்ஷனங்கள் இருந்தாலும், மனமிருந்தால் மட்டுமே சாப்பிடமுடியும்...!

@கோழிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

@இந்தியர்களின் பெருமான்மையையும் ஒற்றுமையையும் பிரிடிஷாருக்கு காட்டவே, திலகர் கணபதி தினத்தை பெரும் விழாவாக அறிமுகப்படுத்தினார்...!

@எம்புட்டுதான் மனசு கஷ்டத்தில் இருந்தாலும், அவ்வேளைகளில் சிலரின் நடைமுறைகளையும் அவர்களின் டென்ஷன்களையும் பார்க்கும்போது மனம்விட்டு சிரித்து விடுகிறேன், இது எனக்கு மட்டுமா இல்லை உங்களுக்கும் இப்பிடித்தானா...?
@நம்ம ஹோட்டல் சாப்பாட்டில் கைவைத்துவிடாதே ராஜா, இதோ நான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் பழங்களை சாப்பிடு வயிற்றுக்கு நல்லது, என்று சொல்லும் உடன்வேலைப் பெண்களின் அன்பு சிலவேளை அம்மாவின் நியாபகத்தை நினைவுப் படுத்தி கண்ணில் கண்ணீர் வந்து விடுகிறது...!

@வாக்கிடாக்கியில் தமிழில் "அண்ணா காப்பாத்து அண்ணா"ன்னு அலறியவனுக்கு [[தமிழன்]] இனி வயர்லெஸ்சில் ஆங்கிலம் தவிர வேற்று மொழி பேசக்கூடாது என்று வார்னிங் லெட்டர் கொடுத்தும், நானிருக்கும் தைரியத்தில் நைட் டியூட்டியில் இருக்கும்போது தமிழில் பாட்டுபாடி எல்லாரையும் கலவரப்படுத்தி, என்னையும் சிரிக்க வைத்துவிடுகிறான், என்னாத்தை சொல்லி ஆக்சன் எடுக்கன்னே தெரியலை அவ்வ்வ்வ்....!

@தகுந்த நேரத்தில் செய்யும் உதவியே தர்மம் எனப்படும், தண்ணியில் சாகக்கிடக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட அவனை முதலில் தூக்கிவிடுவதே தர்மம் எனப்படும், அதுவே நம்மை காக்கவும் செய்யும் இல்லையா...!
@மெக்கானிக்கும், டெய்லரும், சலூன்காரனும் எளிதில் ரவுடியிசம் கற்றுகொள்கிறார்கள்...!

@எங்கள் நாடு தனக்குதானே பாம் வைத்து அந்தப் பழியை அடுத்த நாட்டின் மீது போட்டுவிடும் பழக்கம் உண்டு என்று என் பாகிஸ்தான் நண்பன் [[முன்னாள் இன்டெலிஜென்ஸ் இன்ஸ்பெக்டர்]] அடிக்கடி சொல்வதுண்டு என்று சொல்லியும் நம்பாத நண்பர்களும் உண்டு...!
@டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமியின் தளத்திற்கு போயி நலமா என்று [[விளையாட்டாக]] கேட்டதுக்கு, நலமே, நீங்க இருப்பது மும்பையிலதானே"ன்னு அவர் கேட்டதுக்கு நான் எடுத்த ஓட்டம்....ம்ம்ம்ம்ம்ம்....இன்னும் நிக்கவே இல்லை ஓடின்டே இருக்கேன் அவ்வ்வ்வ்...! [[இதான் வேலிக்குள்ளே போற ஓணான் கதை சொன்னாயிங்களோ நம்மாளுங்க]]
@ரெண்டு வருஷம் கழித்து லீவில் ஊருக்கு போன நண்பன், மனைவி வீட்டில் உள்ள தென்னைமரங்கள் இன்னும் வளராமல் நிற்பதை கண்டு, தரையை நன்றாக கொத்தி, உப்பு பொட்டாசியம் இன்னும் அவனுக்கு தெரிந்த உரம் வகைகளை கலந்து தென்னைக்கு போட்டுவிட, ரெண்டே நாளில் அவனை மனைவி ஊரில் இருந்து இவன் அம்மா ஊருக்கு விரட்டி இருக்கிறார்கள், ஒன்னுமே புரியாமல் மனைவியிடம் வடிவேலு கணக்கா அழுது கரைந்து கேட்க....கொய்யால இவன் தென்னைக்கு மருந்து வச்ச அடுத்தநாளே அந்த ஊரில் உள்ள கோழிகள் அனைத்தும் செத்துபோச்சாம் [[மருந்தை தின்னகோழிகள்]]

@பிங்க் கலர் பெண்களுக்கு ஃபேவரிட் என்றால், ஆண்களுக்கு...? எனக்கு ஜெர்மன் சிகப்பு பிடித்தமான கலர்...!

@வெட்கம் பெண்களுக்கு அழகென்றால், கோபமும் அழகுதான், நாம் எட்டி நிற்கும்போது...!

@கையில் காசு இருந்தால் என்றைக்கும் தீபாவளியே....ஒரு நண்பனின் வாதம்...!

@நிறைய பேசினால் உன் விலையை நீயே களைகிறாய்...!

@எட்டப்பனுக்கும் தொண்டைமானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை பெயர்களைத் தவிர...!
@கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் ஊர் நடுவே ஓடும் நதியின் பெயர் பழையாறு இல்லை "பாழாறு" என்னப்படும், அதாவது சுசீந்திரத்தில் இருந்து இந்நதி கடலில் கலக்கும் இடம்வரை "பாழாறு" என்றே அழைக்கப்படுகிறது, எங்க ஊர் பெருசுகள் சொன்னது...! [[இதுக்கு ஒரு தனிக்கதையும் உண்டு பிரிட்டிஷார் காலத்தில்]]
@என்னையாடா சமூகவலைத்தளங்களில் கிண்டல் பண்ணுறீங்க கொய்யால, என் படத்தை மட்டும் பார்த்துட்டு உயிரோடு வெளியே வந்துருங்க பார்ப்போம் வெறியில் பஜய் சபதம்...! [[அண்ணா நான் இல்லீங்ணா...]]

Tuesday, November 6, 2012

ஓடவைத்த கவிதையும், ஒரு சமையலும்...!

நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்பிடின்னு சொல்லிதரட்டுமா சிம்பிள்தான், ஒருகிலோ நெல்லிக்காய் வாங்கி வந்து நன்றாக சட்டியில் போட்டு தண்ணீரில் கழுவவேண்டும்.

அப்புறம் நல்ல தண்ணீர் சட்டியில் ஊற்றி நெல்லிக்காயை சற்று சூடு பண்ண வேண்டும், உப்பு கொஞ்சம் தாரளமாக போடவேண்டும், தண்ணீர் கொதிக்க கூடாது, கொஞ்சம் வெள்ளைப்பூண்டு, ஒரு பத்து பீஸ் மிளகாயும் உள்ளே போடவும் [[சட்டிக்குள்ளே]]
சற்று சூடாகியதும் அடுப்பை அணைத்து விடவும், நன்றாக சூடு ஆறியதும் கொஞ்சூண்டு வினிகர் ஊற்றி ஒரு பெரிய பாட்டலில் அடைத்து ஃபிரிஜில் வைக்கவும், ரெண்டு மூன்று நாள் கழித்து எடுத்து சாப்புட்டுப் பாருங்க கண்ணு தெளியுறது நல்லாவே தெரியும்...!

ஒரு கோவா'க்கார நண்பன் சொல்லித்தந்தது, நெல்லிக்காய் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி இப்படி செய்து நான் சாப்பிடுவது வழக்கம்...!
------------------------------------------------------------------

எங்கள் ஹோட்டலுக்கு வந்த ஒரு நண்பனிடம்...

"ஒரு கவிதை சொல்லுய்யா பார்ப்போம்...?"

"அண்ணே மூடுல இருந்தாதான் அது வரும், நான் போயிட்டு வரும்போது சொல்லவா...?" [[பார்"க்கு]]

"சரி"

திரும்பி வரும்போது...
"அண்ணே நீங்க கேட்டதை இதுல எழுதி இருக்கேன் லல்லா இழுக்கா பால்து லொல்லுங்க" [[சொல்லுங்க]]

# கலங்களில் அவாள் வாசந்தம் 

காலைகளிலே ஆவாள் வாவியம் 

மதங்களில் அவாள் மால்கழி 

மாலர்களிலே ஆவாள் மெல்லிகை...

"அண்ணே அரகா இழுக்கா...?"

எடுத்தேன் பாருங்க ஓட்டம், எங்கேயும் நின்னு திரும்பிக்  கூட பாக்கலியே...

இவனெல்லாம் கம்பியூட்டர் இஞ்சினியராம் டேய்....!
--------------------------------------------------------------------
சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன்,கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது
.அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது.
-------------------------------------------------------------------
திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
-------------------------------------------------------------------

வீட்டுக்குப் போறவனை நிப்பாட்டி வச்சி எங்கே போறேன்னு கேட்டுட்டு, குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்"னு சொல்லும் ஃபிகர்கள், சொல்லவருவது என்ன...?
[[யாருலேய் அங்கே குனிஞ்சி கல்லைத் தேடுறது?]]
டிஸ்கி : புறநானூறு மற்றும் பாளையங்கோட்டை தகவலுக்கு "விக்கிபீடியா"வுக்கு நன்றி.


Sunday, November 4, 2012

நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் ஏழைகள்...!

ஊருக்கு போகும்போதெல்லாம்  எங்கம்மாவின் நச்சரிப்பில் ஒன்று, எலேய் தம்பி அதோ அவனைப்பாரு இப்போதான் வெளிநாடு போனான், பதினைந்து லட்சம் ரூபாய்க்கு வீடு வைத்து இருக்கிறான், இதோ நம்ம சொக்காரன் அவனப்பாரு முப்பது லட்சம் ரூபாய்க்கு வீடு போட்டுருக்கான், இதோ நம்ம பக்கத்து வீட்டுக்காரனை பாரு வெளிநாடு போயி ரெண்டே வருஷத்துல இருவது லட்சம் ரூபாய்க்கு வீடு வச்சிருக்கான்.
நீயும் வெளிநாடு போயி பல வருஷம் ஆச்சே மக்களே......இதோ இந்த ஓட்டு வீடு குடிசையில்தானே இன்னமும் அம்மாவை வச்சி இருக்கே..? அம்மாவின் புலம்பல் இது....!

என்னடா லட்சம் லட்சம் ரூபாய்க்கு இவிங்க வீடு வைக்க இவனுகளுக்கு பணம் எங்கிட்டு இருந்து வருதோன்னு நானும் நினைப்பதுண்டு, ஆனால் சற்று உன்னிப்பாக இவர்களில் சிலரை கவனிக்க தவறிவிட்டேன் பலகாலமாக...!

இந்தமுறை ஊர் போனபோது என் மனைவியின் முன்பாக என்னை குத்திகாட்ட நினைத்த அம்மா, இதே டயலாக்கை சொல்ல....என் மனைவிக்கும் சற்றே சந்தேகம் வர, அதான் நான் மும்பையில் சொந்தவீடு வாங்கி இருக்கேனேன்னு சொன்னாலும் அவள் கொஞ்சம் சந்தேகமாகவே பார்க்க...எனக்கு மனசில் வலி...!
ஒருநாள் எங்க சித்தப்பா, மற்றும் உறவினர்கள் என்னை பார்க்க வந்தபோதும் அம்மா என்னை அவர்கள் முன்னிலையில் குற்றப்படுத்தினார்கள், அவமானப்பட்டுப்போனேன், பேங்கில் போயி [[ஏற்கனவே]] வீடு கட்ட கடன் கேட்டதுக்கு அந்த பேங்க் டேமேஜர் பிச்சைக்காரனைப் பார்ப்பதுபோல் பார்த்த நியாபகம் எனக்கு வந்துபோக.....கோபமாகி கொதித்துபோனேன்.

எங்கள் தெருவில் வெளிநாடு போயி இரண்டே வருஷத்தில் இருபது லட்சம் ரூபாய்க்கு வீடு வைத்தவன் ஒரு கொத்தனார், கொத்தவேலைக்கு போயி [[சவூதி]] ரெண்டே வருஷத்தில் பேங்க் லோன் இல்லாமல், அப்பன் பாட்டன் சொத்தும் இல்லாமல் [[ஒன்னும் கிடையாது]] எப்படி இது சாத்தியமாகிற்று...? என்று என் சித்தப்பாக்களிடம் ஒரு கணக்கு சொன்னேன்...

கொத்த வேலைக்கு வளைகுடா நாடுகளின் சம்பளம் என்பது ஒருநாளைக்கு ஐநூறு ரூபாயிலிருந்து எழுநூறு வரை உண்டு, கஷ்டப்பட்டு ஓவர்டைம் பார்த்தாலும் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று வைத்தாலும், இவன் சாப்பாடு செலவு, டெலிபோன் செலவு எல்லாம் கணக்கு பார்க்கும்போது, ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபாய் என்றே வைத்தாலும், அடுத்து வாரவிடுமுறைகள்...சரி அதை விடுங்க....
ஒரு நாளைக்கு எண்ணூறு ரூபாய் சம்பளமேன்றால் மாசம் எவ்வளவு..? 24'000 rs

அப்போ ஒரு வருஷத்துக்கு? 2'88000rs

ரெண்டு வருஷத்துக்கு? 5'76000rs இதுல பாதிகூட மிச்சம் வராது என்பது என் கணிப்பு, இப்படி இருக்க இவன் எப்படி ரெண்டே வருஷத்துல இருவது லட்சம் ரூபாய்க்கு வீடு வைக்க முடியும் என்று நான் கேள்வி எழுப்ப.....சித்தப்பனுக யோசிக்க......

நீங்களும் யோசிங்க.....எப்பிடி...?

கொய்யால அவன் "களவு" செஞ்சிருப்பான்ய்யா இது சம்பாதிச்சு வந்த பணத்துல கட்டுன வீடு இல்லவேயில்லை என்று சொல்ல, எங்க அம்மா விஷயம் புரிந்து விழிக்க...சித்தப்பாக்களுக்கு விஷயம் தெரியவர...இது ஊர்முழுக்க பரவிடுச்சு, அந்த வீட்டுக்காரனை நட்பாக நண்பர்கள் மூலம் பிடித்து [[தண்ணி]] விசாரிக்க...
இவன் கொத்தவேலை செய்யாமல் சவுதியில் ஒரு கன்ரக்ஷன் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை செய்யுமிடத்தில் இரும்பு, விலையுயர்ந்த கேபிள் வயர்கள் அப்படி இப்படியென்று களவாண்டு வித்துருக்கான் என்பது தெரிய வந்தது...! [[இப்போ அந்த ஊரை காலிபண்ணிட்டே ஓடிவிட்டான் பாவம், அந்தவீடும் சாபம் பிடித்தாற்போல் இருக்கிறதாம் அம்மா சொன்னார்கள்]]

அதுக்கப்புறம் எங்கம்மா வீடு பற்றி பேசுவதே இல்லை, நானும் பணம் வரும்போது கட்டலாம் என்று சொல்லிவிட்டேன்.

வெளிநாடு போயிட்டு லட்சம் லட்சம் ரூபாய்களுக்கு வீடுகட்டுறவனை நல்லா உத்துப்பாருங்க நல்லாவே தெரியும் அண்ணன் எப்பிடிபட்டவன்னு, நாங்களும் நாயா பேயா உழைக்குறோம் ஒன்னும் மிஞ்சவில்லை சாப்பாட்டைத்தவிர....!
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் பந்தாவாக தெரிவோம் ஆனால் எங்கள் வறுமைகள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, வெளி உலகுக்கு தெரியாது...!

கருப்பு பணம் ஆறாக பாய்ந்தோடும் நாட்டில் இருக்கும் நண்பனிடம் நானும் சொல்வதுண்டு, "ஏண்டா உன் ஊர் வழியாகத்தானே நம்ம பணம் எல்லாம் சுவிஸ் போகுது அதுல கொஞ்சம் நண்பனுகளுக்கு கொடுத்து உதவலாம்தானே...?"

"ஓஹோ அப்பிடியா, ராஸ்கல் நோகாம நோம்பு கும்புடப்போறியாக்கும்" என்று அடிக்கடி என்னை கேப்பான், அதன் அர்த்தம் என்ன "உழைக்காமல் சாப்பிட ஆசையா என்பது" 
நான் எல்லாரையும் சொல்லவில்லை களவானிகளை சொன்னேன், மற்றபடி உழைத்து கடன் உடன் வாங்கி வீடுகட்டும் அன்பர்களும் உண்டு...!

இனி இந்த தடவை ஊர்வரும்போது எங்க ஊர் பேங்க் டேமேஜருக்கு இருக்கு ஆப்பு....கொய்யால முறையா வெளிநாட்டுவாசிகளுக்கு வீட்டு கடன் தரலைன்னா தர்ணா போராட்டமே நடத்தி குலுங்க வைக்கனும்னு இருக்கேன்...!

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!