Saturday, September 28, 2013

பிரபல பிராப்ள பதிவர்கள் கடும் அதிர்ச்சி...!!!???

நீ கசக்கி எறிந்த காகிதத்தை 
இன்னும் பத்திரமாகதான் வைத்திருக்கிறேன் .அதை கிழித்து ஏறிய மனமில்லை உனக்கு என்ற நம்பிக்கையுடன் 

..######நான் எழுதி கொண்டிருக்கும் *எங்கக்கா மகளே இந்து* என்கிற கவிதை தொகுப்பில் இருந்து...

அஞ்சா சிங்கம்.


நாவல் சீசன் எல்லாம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் திரைப்பட இயக்கம் ஆரம்பம்.

க்ளோசப்பில் அவள் காதலை மறுத்து செல்ல, நாயகன் மிட்ஷாட்டில் சோகத்துடன் திரும்பிப் பார்க்க, அவள் மிட்லாங் ஷாட்டில் நடந்து செல்கிறாள். லாங் ஷாட்டில் வில்லன் அவளை மானப்பங்கப்படுத்த காத்திருக்கிறான். இது தான் சீன் நம்பர் 46A.நான் எடுத்துக் கொண்டிருக்கும் "பாப்பா போட்ட தாப்பா" திரைப்படத்தில் இருந்து

# ஆகிறேண்டா நானும் இயக்குனர்...

ஆரூர் மூனா.
சென்னை, ஈரோடு, மதுரை, கோவை, திருவாரூர், பஹ்ரைன்னு தேடி, தேடி கொலை பண்ணி இருக்கீங்களே!! ஏன் இதுப் போல பண்ணீங்க!?

பழகுன பாசத்துக்காக, மொக்கை கவிதையை ஆஹா! ஓஹோன்னு புகழலாம். டப்பா பட விமர்சனத்துக்கு எங்களை காப்பாத்திட்டீங்கன்னு ஆச்சர்யப்படலாம். புடிச்ச கட்சி தலைவரை திட்டினாலும் கூட நடுநிலையான அலசல்ன்னு கமெண்ட் போடலாம். ஆனா, இப்போ, புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையா, போன வாரம்லாம் அரே சம்பா!ன்னு இம்சை பண்ணானுங்க. இந்த வாரம் நாலு லைன் எழுதிட்டு, எழுதிகொண்டிருக்கும் 

********** நாவல்ல இருந்துன்னு கொலையா கொல்றானுங்க....,

விரைவில் தமிழகம் ஃபுல்லா தினசரிகள்ல வரப் போற ”இம்சைகள் அழிக்கப்பட வேண்டும்” தொடரிலிருந்து...

காந்திமதி.

 [[ஆமாமா ஒரு பயலையும் உயிரோடு விட்டுறப்டாது]]

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையாக தெரிந்த அந்த காட்டில் ஒற்றையாய் நின்றிருந்த ஓலைக்குடிசையில் சிவப்பு விளக்கு ஒன்று எரிய, மஞ்சள் சேலை உடுத்தியிருந்த அவளை வெள்ளையன் என்ற அந்த வெள்ளையத்தேவன் வாரியணைத்து முத்தமிட்டபோது அந்த கருப்பி என்ற கருப்பாயியின் கன்னம் சிவப்பான அதே நேரம் குடிசையின் கூரையிலிருந்து சொயிங் என்று பறந்தது இரண்டு வெள்ளைப் புறாக்கள்..

#தற்போது எழுதிகொண்டிருக்கும் பறந்துவா பஞ்சவர்ணக்கிளி என்ற கிராமத்து கில்மா நாவலில் இருந்து ...

ஆவிப்பா.

அவள் ஸ்கூட்டியை வேகமாக ஸ்டார்ட் செய்து என் பைக் அருகே வந்தாள்... ஸ்கூட்டியை விட்டு இறங்கி நேரே என்னிடம் வந்து என் கையை பிடித்து இழுத்தாள்.

அவள் இழுத்த வேகத்தில் அவள் மீது விழுந்தேன்...தாங்கிப் பிடித்து என் சட்டையை பிடித்து இழுத்து நச்... நச்... என... முத்தம்....

என்னுடைய காதல் வாகனம் என்ற கிரைம் நாவலில் இருந்து சில வரிகள்...

தமிழ்வாசி பிரகாஷ்.

அவள் இடுப்பில் இலையாடை தரித்திருந்தாள்,மார்கச்சையாக பட்டும் படாமல் தாமரைஇலை,அவளுக்கு பெரிய கண்கள்.அந்த கண்கள் அவள் கைகள் பற்றியிருந்த வில்லின் மையத்தில் இழுத்துபிடிக்க பட்டிருக்கும் அம்பில் பதிந்திருந்தன.அவள் குறிபார்த்த திசையில் காதல் மொழி பேசிகொண்டிருந்த இரண்டு சிட்டுகுருவிகள் மரக்கிளையில் அமர்ந்திருந்தன.

விஷ்க்........

சிட்டுக்குருவிகள் திசைக்கொண்றாக பறந்தன,மரக்கிளையில் ஒரு பாம்பின் தலை தைக்கப்பட்டிருந்தது.

எழுதும்"மலையரசி" நாவலில் இருந்து.

மணிவண்ணன்.


இந்தவொரு நொடிக்குத்தன் ஏங்கிக்கொண்டிருந்தான். ஏற்பட்ட இருளில் ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றிய இதேநொடி. வெளிச்சப்புள்ளி ஒன்று நூறாகி, நூறு பல்லாயிரமாய்ப் பெருகப் பெருக, மோன நிலையை எய்துகொண்டிருந்தான்.மௌனங்கலைக்க ஒவ்வா மோனம்.

எனது "எல்லா பாலும் சிக்சர்" என்ற நாவலிலிருந்து.

இலக்கிய செம்மல் வெளங்காதவன்.


சாவனும்னு முடிவெடுத்துட்டா நாங்க மலையா இருந்தாலும் சரி, புளியமரமா இருந்தாலும் சரி, டாஸ்மாக் இருக்குற ஹைவேயா இருந்தாலும் சரி......

பதிவர்களுக்கு குட்மானிங் சொல்லாம சாவமாட்டோம்.....

"விஜய் படத்தை பார்த்துட்டு பன்னிகுட்டியின் ரியாக்ஷன் என்ன...?" என்று நான் எழுதும் புதிய நோவல் ச்சே நாவலில் இருந்து ஒரு பகுதி....

நாஞ்சில்மனோ.
---------------------------------------------------------------------------

டிஸ்கி : ஏம்யா ஏம் இம்புட்டு கொலைவெறியில கெளம்பியிருக்கீங்க ? போயி மலையில இருந்து குதிலேய் மக்கா'ன்னா ஓடிபோயி குதிக்கப் போறேன் அதவிட்டுட்டு, நாவல் எழுதுறாயிங்களாம், தொடர் எழுதப் போராயிங்களாம், டைரக்ஷன் பண்ணப் போறாயிங்களாம் அவ்வ்வ்வ்....
-------------------------------------------------------------------------

நான் இன்று வாசித்த ஒரு செய்தி.....


அமெரிக்காவில் கணவன் வெளிநாடு சென்று திரும்பியபோது, ஆசையாக ஓடிவந்து கட்டிபிடித்த மனைவி, கணவனிடம் இருந்து வந்த ஷாக்கிங்கால் தூக்கி வீசப்பட்டாள்....! [[இது நாங்க வருஷா வருஷம் பார்க்குறதுதானேன்னு யாரோ முனுமுனுப்பது கேக்குது]]



Tuesday, September 24, 2013

நீ வாங்குற அஞ்சி பத்துக்கு இது உனக்கு தேவையா...?

மும்பை ஏர்போர்ட் பக்கத்தில் என் வீடு இருப்பதால் [[நான் லீவில் இருந்த சமயம்]] பஹ்ரைனில் இருந்து வந்த நண்பன் ஒருத்தன், அவனை பிக்கப் பண்ணி உள்நாட்டு விமான [[சாந்தா குரூஸ்]] நிலையத்தில் விடுமாறு சொன்னான்.
ஏர்போர்ட் செக்கிங் எல்லாம் முடிந்ததும் எனக்கு போன் பண்ணு பத்தே நிமிஷத்தில் வந்துருதேன்னு சொன்னேன், அவனும் போன் பண்ணினான் [[மழை சமயம் வேற]]

அவனை பிக்கப் பண்ண வேகமாக ஏர்போர்ட் நோக்கி நடந்து கொண்டிருந்த போது, ஏர்போர்டில் வேலை பார்க்கும் ஒரு சொந்தக்காரர் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தார்.

"என்ன மனோ வேகமா போறாப்புல இருக்கு ?"

நான் மிகவும் பெருமையாக "அமெரிக்காவுல இருந்து என் நண்பன் வந்துருக்கான் அவனை பிக்கப் பண்ண போயிகிட்டு இருக்கேன் அண்ணே" என்றதும் அவர் கேஷுவலாக சொல்லிட்டு போனார்....

"தம்பி இன்னைக்கு அமெரிக்காவுல இருந்து எந்த பிளேனும் வரலை..."

நாக்கை கடிச்சுட்டு நான் ஓடின ஓட்டம் இருக்கே......
நீ வாங்குற அஞ்சி பத்துக்கு இது உனக்கு தேவையான்னு கவுண்டமணி செந்தில்கிட்டே சொல்லும் காமெடி மனசுல ஓடுச்சு.

[[வெளியே வந்த நண்பன் ஏர்போர்ட்டை லேசா திரும்பி பார்த்துட்டு கைய நீட்டிகாட்டி இதாடா உங்க மும்பை ஏர்போர்ட்? என்றான். அவன் கையை காட்டிய இடத்தில் "சத்ரபதி சிவாஜி இன்டர் நேஷனல் ஏர்போர்ட்" என்று எழுதப்பட்ட பெரிய துணி கிழிஞ்சி தொங்கிட்டு இருந்துச்சு..அவ்வ்வ்வ்]]
எப்பிடி எல்லாம் பல்ப் வான்ட்டடா போயி வாங்குறோம் பாருங்க....!
-----------------------------------------------------------------------------------------

சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடவேண்டும் என்று, கட்டப்பஞ்சாயத்து அவங்களுக்குள்ளே நடத்திட்டு இருக்காயிங்க காங்கிரஸ் மேலிடத்து ஆளுங்க, அதனால்தான் நம்ம மண்ணு வாயில இருந்து வார்த்தை வெளியே வந்துருச்சு.
ஏன்னா சமூக வலைத்தளங்களில் நாத்தம் பிடிச்சு நாறுறதே இந்த நாதாரிங்கதானே இல்லையா ?

Thursday, September 19, 2013

ஒரு வடைக்காக பிரபல பதிவரை கழுவி ஊத்திட்டாயிங்க...!

"அண்ணே ஒரு பஞ்சாயத்து....."

ஆஹா இன்னைக்கு எவன்கிட்டே மாட்டப்போறேனோ தெரியலையே மக்கா.....

"அண்ணே நான் இவன்கிட்டே ரெண்டு உளுந்து வடை வாங்கிட்டு வரச்சொன்னேன் ஆனால் இவன் ஒன்னுதான் வாங்கிட்டு வந்துருக்கான் என்னன்னு கேளுங்க"
அடுத்தவன் வடை பொட்டலத்தை பிரித்து "அண்ணே இங்கே பாருங்க, இது ஒரு வடை இது இன்னொரு வடை" ரெண்டு பீசை காட்டுகிறான்,

"அண்ணே ஒன்னு இன்னா இருக்கு இன்னொன்னு எங்கே ?"

"இன்னொன்னு இன்னா இருக்கு" என்று அடுத்ததை தூக்கி காட்டுகிறான்.

நாட்டாமைக்கு பிரஷர் ஏறுகிறது.....

"அண்ணே....இது ஒரு வடை ஓகே, இன்னொரு வடை எங்கே ?"

டென்ஷனான நாட்டாமை "இன்னொரு வடை இன்னா இருக்குடா கொய்யால கொன்னேப்புடுவேன்..."
நாட்டாமை கையில் இருந்து வடையை பிடுங்கி காட்டி...

"நீயெல்லாம் ஒரு நாட்டாமையாடா ? சொல்லு நீயெல்லாம் ஒரு நாட்டாமையா ?" [[என்னாது டா'வா ?]]

ஆஹா....என்னமோ வில்லங்கம் இருக்கு போலேயே....."நாட்டாமைக்கும் வடைக்கும் என்னடா சம்பந்தம்...?"

"இந்த வடையில ஓட்டை இருக்கு அதான் உளுந்து வடை, அந்த வடையில ஓட்டை இல்லை அதனால அது வடை இல்லை...நாட்டாமையாம் நாட்டாமை போடா அங்கிட்டு..." [[அண்ணே'ன்னு கூப்பிட்டவன் கடைசில கழுவி ஊத்திட்டானே...]]

"அவ்வ்வ்வ்வ்"
வடையை சுட்டவன்  என் கையில அம்புட்டாம்னா கொன்னேப்புடுவேன், அந்த ஒரு வடைக்கு மட்டும் ஏன்டா ஓட்டை போடாம விட்டே...? ச்சே நாட்டாமையை கேவலப் படுத்திட்டானே...!

Wednesday, September 18, 2013

கேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண்கள்...!

திருவனந்தபுரம் பஸ் நிலையமும் ரயில்வே ஸ்டேசனும் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு ஒரு நாளில் செந்நாய்கள் நிறைந்த காட்டுப் பகுதி ஆகும், கள்ளர்களின் கூடாரமாக திகழ்ந்த காட்டுப் பகுதியும், பெண்களை கற்பழித்து கொன்று வீசும் திகில் பிரதேசமாக இருந்த அந்த காட்டை சூப்பரான சிட்டியாக மாற்றியவர் ஒரு தமிழர்....! திருவனந்தபுரத்தின் முந்தய பெயர் : தம்பானூர்...!

கேரளா இடுக்கி அணை கட்டப்படும் போது, காலில் ஏதோ தட்டுபட, தோண்டி பார்த்தால், இந்த இடத்தில் அணை கட்டலாம் என்ற கல்வெட்டு கிடைத்திருக்கிறது, அணை கட்டலாம் என்று முன்பே கண்டு பிடித்தவரும் அதே தமிழர்தான்...! அவர் பெயர்.....

சர் சி பி இராமசுவாமி 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் அக்டோபர் 8, 1936 - ஆகஸ்ட் 16, 1947

அதேபோல திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனை இருக்கும் இடமான பத்மநாபபுரம் என்ற பெயர் வர [[சூட்ட]] காரணமென்ன ? இந்த லிங்கை தட்டிப் பாருங்கள்...! அவரும் ஒரு தமிழன்தான்...!
---------------------------------------------------------------------------------------------------------

பஜாரில் கால்குலேட்டர் வாங்கும் போது அது சரியாக இயக்கத்தில் உள்ளதா என்று அறிய அதில் 12345679 என்ற எண்ணை 8 ஆல் பெருக்கிப் பாருங்கள் இப்பொது விடை 98765432 என்று வந்தால் அது நல்ல கால்குலேட்டர் என்று அர்த்தம்! செக் பண்ணிப் பாருங்கள்! 

செல்போனை சட்டைப் பாக்கெட்டில் வைப்பவர்கள் அதன் முன் பகுதி வெளியில் பார்த்த மாதிரி வைத்தால் போனில் இருந்து வரும் கதிர்வீச்சு பாதிப்புக்களை குறைக்கலாம். பொதுவாக சட்டைப் பாக்கெட்டில் வைப்பதை தவிர்த்தல் நலம்.

நன்றி : தளிர் 
----------------------------------------------------------------------------------------------------------

ஆண் புத்தி பெண் புத்தி பற்றி ஒரு காமெடி....காமெடிதான் ஆமா....

ஸ்கூட்டியில் வந்த இளம் பெண்ணும் பைக்கில் வந்த ஆணும் நேருக்கு நேராக மோதிவிட, ஆண் பயங்கரமாக அவளை திட்டுகிறான், அவள் சாந்தமாக பேசுகிறாள்,  கேட்கிறாள், கெஞ்சுகிறாள், ஆனாலும் இவன் விடாமல் திட்டுகிறான்.

அவள் பொறுமையாக காத்திருந்து விட்டு, இவன் திட்டி சோர்ந்தபின் மறுபடியும்  கேட்கிறாள்.

மனம் இளகி போன இவன், "சரி நான் மன்னித்துவிட்டேன், ஆனால் ஒரு கண்டிஷன்"

"என்ன சொல்லுங்க ?"

"நாம் சமாதானம் ஆகிவிட்டோம் இல்லையா அதனால என்கிட்டே ஒரு ஷாம்பெயின் பாட்டல் இருக்கு அதை ரெண்டு பெரும் பாதி பாதி குடித்து என்ஜாய் பண்ணவேண்டும் சரியா ?"

"சரி ஓகே நான் ரெடி" பெண் 

பாட்டலை திறந்து ஆண் பாதியை குடித்துவிட்டு அவளுக்கு கொடுக்குறான். ஆனால் அவளோ....

"ஏன்டா நாதாரி நன்னாறிப் பயலே குடிச்சுட்டாடா வண்டி ஓட்டுறே ? குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதும் அல்லாமல், என் மேலயும் வந்து மோதி இருக்கே ராஸ்கல்...."

ஆண்....

"அய்யய்யோ மேடம் மன்னிச்சுருங்க மன்னிச்சுருங்க....போலீசை கூப்பிட்டுறாதீக...."

"நீ ஷாம்பையினை திறந்ததுமே போலீசுக்கு போன் பண்ணிட்டேன்டா டுபுக்கு...."

Saturday, September 14, 2013

ஹெர்பல் என்றால் அது இதுவா ?

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. 

ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.


நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.

காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.
இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.

நன்றி : இயற்கையின் படைப்புகள்.

டிஸ்கி : இந்தப் பதிவு எனது நன்மைக்காக பிரார்த்திக்கும் நண்பருக்கு சமர்ப்பணம்.

Monday, September 9, 2013

இது அமெரிக்காவின் ராஜ தந்திரமா குள்ளநரி தந்திரமா ?

இந்திய பணத்தின் வீழ்ச்சியினால் நாம் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் திட்டிக் கொண்டு இருக்கிறோம் இல்லையா ? ஏன் நமக்கும் அதில் அலட்சியம் தாங்கும் பங்கும் இருக்கிறது என்பதை எனது சிற்றறிவு மூலம் சொல்கிறேன்.

நமது இந்திய பணம் [[நோட்டு]] தங்கத்தில் இன்வெஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது, உதாரணத்திற்கு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் பேங்கில் எனக்கு இந்த நோட்டு [[பணம்]] வேண்டாம் என்று கொடுத்தால், அதற்க்கு சரி நிகரான தங்கம் ரிசர்வ் பேங்க் தரவேண்டும், அதற்க்கு உத்திரவாதமும் நோட்டில் எழுதப் பட்டு இருக்கிறது...!
[[ I PROMISE TO PAY THE BEARER THE SUM OF TEN RUPEES ]]

அடுத்து....

வளைகுடா நாடுகள் மொத்தமும் பெட்ரோலை அமெரிக்கன் டாலரில் வர்த்தகம் செய்வதால் அமெரிக்கன் டாலர் நிலை தடுமாறாமல் மேல் நோக்கி நகர்கிறது.

 என்று சவுதியோ அல்லது குவைத்தோ அந்த டாலர் வர்த்தகத்தை ஈரோ பணத்தில் செயல்படுத்தும் பட்சத்தில் அமேரிக்கா [[டாலர்]] அட்ரசே இல்லாமல் போகும். [[குவைத் ஏற்கனவே ஈரோவில் டிக்ளேர் செய்யாமல் அங்கே வர்த்தகம் செய்வதாகவும் ரகசிய செய்திகள் உண்டு]]

வளைகுடா நாடுகளின் வர்த்தகம் காரணம் அமேரிக்கா டாலர் நோட்டுகளை அச்சடித்து கொண்டே போகிறது, இதே நான் சொன்னதுபோல இந்திய பணத்திற்கு தங்கம் கிடைக்கும், ஆனால் அமெரிக்க டாலருக்கு வேல்யூவே கிடையாது.

அமெரிக்கன் பேங்கில் டாலரை கொண்டு போயி கொடுத்துவிட்டு இதற்க்கு நிகராக என்ன தருவாய் என்று கேட்டால் "போடா கொய்யால அதை கொண்டுபோய் குப்பையில் போடு" என்றுதான் சொல்வான்.

அமெரிக்க டாலரில் அந்த பணத்திற்கு எந்த ஒரு உத்திரவாதமும் எழுதப்படவில்லை மாறாக கேரண்டி இல்லை என்றே எழுதபட்டுள்ளது.
[[THIS NOTE IS LEGAL TENTER FOR ALL DEBTS, PUBLIC AND PRIVATE]]
  
சரி அது போகட்டும் நான் சொல்ல வந்ததை சொல்லிருதேன்....

நாம் நம்முடைய [[இந்திய]] பணத்தை மேல் நோக்கி நகர்த்த என்னால் முடிந்த ஆலோசனை என்னவென்றால், நம் இந்திய மக்கள் வீடுகளில் ஒரு அறுபது சதவீதம் பைக், ஒரு நாப்பது சதவீதம் கார்கள் உள்ளவர்கள், ஒரு வாரத்திற்கு தனது காரையோ, பைக்கையோ உபயோகிக்காமல், அரசாங்க பஸ்களில் அலுவல் செல்வோம்.

கொஞ்சம் கொஞ்சம் தூரத்திற்கு போகவேண்டுமானால் பைக்கில் போகாமல் நடந்து செல்வோம், நம்மாளுங்க பக்கத்து வீட்டுக்கு போகனும்னாலே பைக்லதான் போறான் இல்லையா ?

அந்நிய நாட்டு பொருட்கள் அதாவது சோப்பு சீப்பு கண்ணாடி ஷாம்பூ பேஸ்ட் பூஸ்ட் கோலா பெப்சி மிராண்டா துணிகள் [[புரியும்னு நினைக்கிறேன்]] எதுவாக இருந்தாலும் நம் உள்நாட்டு நம்ம இந்திய பொருட்களையே உபயோகிப்போம், இந்துஸ்தான் லிவர் கம்பெனி என்று பெயர் வச்சிருப்பான் ஆனால் அது இந்திய கம்பெனி கிடையவே கிடையாது....!

இதை மட்டும் செஞ்சிட்டோம்னா ஒரு வாரத்தில் டாலர் வேல்வியூ சர்ர்ர்ர்ன்னு கீழ் நோக்கி சரிவதை நேரிடையாகவே காணலாம், ஆனால் என்ன........ அமெரிக்கன் நேவி கப்பல் இந்தியா பக்கம் திரும்பலாம்....!

ராமர் பிள்ளையின் பெட்ரோல்ல என்ன பிரச்சினைன்னு யாருமே தெளிவாக இதுவரை சொல்லவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது....!

இனியும் ஒரு கோணம்....

கள்ள நோட்டுகள் அதிகமாக புழங்குவது ஆயிரம், ஐநூறு ரூபாய் நொட்டுகளில்தான் இல்லையா ? திடீரென ரிசர்வ் பேங்க் அவைகளை தடை செய்ய போகிறோம் ஆகவே பக்கத்தில் உள்ள வங்கிகளில் இத்தனாம் தேதிக்குள் உங்கள் பணம்களை மாற்றியோ, டிபாசிட்டோ செய்து விடுங்கள் என்று சட்டம் வந்தால்.....

கள்ள நோட்டுக்கும் ஆப்பு, கருப்பு பணம் பதுக்கி வச்சிருக்கவனுக்கும் ஆப்பு, சரியா இல்லையா ?

யோசிப்போம் செயல்படுவோம் நம் நாட்டை நாமே காப்போம் யார் தயவும் தேவை இல்லாமல், நன்றி....!


Wednesday, September 4, 2013

பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்....!


@ இது எங்கள் ஹோட்டல் ரூல்ஸ் இதை மீறி உங்களுக்கு என்னால் ஏதும் செய்ய இயலாது என்று அழுத்தி சொல்லும்போது பதிலுக்கு அவர்கள் "தேங்க்யூ" என்று அழுத்தி சொல்லும் வார்த்தைக்கு அர்த்தமென்ன ?

@ உலகமே அழிந்த பின் ஒருத்தன் மட்டும் உயிரோடு இருப்பான், கனவில் [[ஹி ஹி]]

@ நரகத்தில் அமலாபால்'க்கு தண்டனை - ஓமகுச்சி நாராயணனுடன் நடனம் [[பேச்சு பேச்சாத்தான் இருக்கனுன் ஆமா]]

@ சொர்க்கத்தில் ரஜினிக்கு சந்தோசம் - சரோஜாதேவியுடன் நடனம் [[சரீ சரீ]]

@ ஆசாரி வீட்டு கதவு பேந்து [[உடைந்து]] இருக்கும், ஏசி மெக்கானிக் வீட்டு ஏசி உயிரே இல்லாம இருக்கும், என்று ஒரு அரபி நண்பன் சொல்றான் ஆக நாம வாத்தியார் வீட்டு பிள்ளை மக்குன்னு சொல்றோம் இல்லையா?

@ பேன்ட் அணிந்து பனியன் அணிந்து சட்டையை இன் செய்து, டை கட்டிவிட்டு, கோட்டை உடம்பில் அணிந்து நிலை கண்ணாடியில் திரும்பி பார்த்தால் சும்மா ஜிவ்வுன்னு இருக்கே, மனசும் உடம்பும் சும்மா பரபர என்று சுறுசுறுப்பாக எகத்தாளம் இடுகிறதே....!!!

அதே போல வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து வேஷ்டியை தூக்கி கட்டியதும் மனசு இன்னொன்றையும் தேடுதே [[சத்தியமா அருவா இல்லை ஹி ஹி]] கண்டாங்கி சேலை கட்டிய மனைவி [[கண்டாங்கி சேலையை கண்டாலே ஒடுறாயிங்கலெய்]]


@ ஹனிமூன் கொண்டாட யாராவது பஹ்ரைன் வருவாங்களா என்ன ? இங்கே [[எங்க ஹோட்டல்ல]] ஒருத்தன் வந்துட்டு "கொல்றாயிங்க கொல்றாயிங்க"ன்னு கத்திகிட்டே ஓடுறான் கொய்யால, ஹனிமூன் கொண்டாடனும்னா இந்தியா, ஐரோப்பா, அமேரிக்கா பக்கம் போகவேண்டியதுதானேன்னு பர்சனலா சொல்லி விட்டுருக்கேன் பாவம்....!

@ சரக்கடிச்ச மாதிரி நடிக்க [[குடிக்க]] தெரியாத நடிகர்கள் [[டைரக்டர்கள்]] தெரிந்து [[அறிந்து]] கொள்ளவேண்டியது என்னான்னா.....நேரே கன்னியாகுமரி கடலுக்குள் போயி இடுப்பளவு கடலில் நிற்கவும், அலைகள் வந்து மோதும்போது நீங்கள் எப்படி அசைகிறீர்களோ [[தள்ளாடுகிரீர்களோ]] அதுதான் நேச்சுரல் சரக்கடிச்சுட்டு நடப்பது [[ஹி ஹி பத்த வச்சிட்டியே பரட்டை]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!