Saturday, January 29, 2011

மீனவ நண்பன்

எனக்காக
கடல் ஆழம் தாண்டி
மீன் பிடித்து வந்த
நண்பன்
அதை காய வைத்து
சுட்டு....
உலக்கையால்
இடித்து காரம் கலந்து
அதில் அவர்கள்
அன்பையும் கலந்து
செய்த நண்பனின்
மனைவி [என் தங்கை]
கடல் கடந்து
வாழும் எனக்காய்
நீ கடல் ஓடி
பாசத்தோடும்
நேசத்தோடும்
அனுப்பிய அந்த
மீன் கருவாட்டின்
ருசியை நான்
அறியுமுன்
நீ
சுடப்பட்டு போனாயே நண்பா....
என் தங்கை
கைம்பெண்ணாகவும்
பிள்ளைகள்
தகப்பனில்லாமலும்
தவிக்கும் போது
எனக்கு நீ அனுப்பிய
மீன் பொடியை
நான் எப்படி
உண்பேன் மக்கா
அது
உன் உயிரல்லவா......
[[பிரதமருக்கு அனுப்பும்  சேவ் ஃபிஷர்மென்  அதில் எனது கையெழுத்தின் நம்பர் 1558  ]]

தக்காளி சட்னி


நான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.
 
என்னோடு மூன்று எத்தியோப்பியன், இரண்டு பிலிப்பைன்ஸ், ஒரு மொரோக்கோ வெயிட்டர்ஸ்[பெண்கள்] வேலை செய்து வந்தார்கள். இவர்கள் வேலை என்னவென்றால் டியூட்டிக்கு வந்ததும் எல்லா டேபிளையும் சுத்தம்  செய்து, கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டில், உப்பு, மிளகு இப்பிடிபட்ட இன்னும் பிற அயிட்டங்களையும் கிளீன் செய்ய வேண்டும். இவர்கள் நான் டியூட்டிக்கு வரும் முன்னரே வந்து விடுவார்கள்.
   அப்படி ஒரு நாள் நான் அரை மணி நேரம் முன்பே டியூட்டிக்கு வரும் ஒரு சூழ்நிலை நேர்ந்ததால், பாரினுள் யாருமில்லை. அப்பிடியே கமுக்கமாக பார் கவுண்டரை எட்டி பார்த்தேன். அங்கே நீனா என்கிற பிலிப்பைன்ஸ் வெயிட்டர்ஸ் எனது சேரில் அமர்ந்து கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள். [பார்மேன் சேரில் வெயிட்டர்ஸ் அமர அனுமதி கிடையாது இருப்பினும் நான் கண்டு கொள்ளமாட்டேன் பெண் அல்லவா]
  மெதுவாக சென்று [அங்கே என்னமோ தப்பாக நடக்கிறது என என் உள்மனம் சொன்னதால்] அவள் என்ன செய்கிறாள் என்று அவள் அறியாமல் உற்று பார்த்தேன்......................அவள் கச்சப் [தக்காளி ஸோஸ்] பாட்டிலை ஒப்பன் பண்ணி அவள் விரலில் ஏதோ காயம் பட்டு வந்த ரத்தத்தை அந்த குப்பியினுள் பிழிந்து சொட்டு சொட்டான ரத்தத்தை உள்ளே திணித்து கொண்டிருந்தாள்.....!!! அதிர்ச்சி ஆன நான், கோபத்தின், ஆத்திரத்தின் உச்சத்தில்..... நீனா...................என்று கத்தினேன். இந்த நேரத்தில் என்னை எதிர்பாராத அவளுக்கு பெரும் அதிர்ச்சி. என்ன காரியம் செய்கிறாய் நீ என எவ்வளவு சத்தம் போடணுமோ அவ்வளவு திட்டி விட்டு, கச்சப்பை தூர எறிந்தேன். அவளும் ஒன்றும் சொல்லாமல் கஸ்டமர் டேபிளை கவனிக்க போய் விட்டாள்.
   நாமதான் டியூப் லைட் ஆச்சே....!!! ஒரு மணி நேரம் கழிச்சிதான்  என் மூளைக்கு மின்னல் வெட்டியது................சம்திங் ராங், நேரே முதலாளிக்கு பொன் செய்தேன். [ஜி எம் ஒரு காசுக்கும் ஆகாதவன் அதான் முதலாளிக்கு போன்] முதலாளி சொன்னார் நான் வரும் வரை யாரிடமும் சொல்லாதேன்னு சொன்னார். நான் தூரப்போட்ட பாட்டிலை எடுத்து வைத்தேன் பத்திரமாக, முதலாளி செக்யூரிட்டி அடக்கம் வந்தார்கள். அந்த பெண்ணை நேராக ஹாஸ்பிட்டல் கொண்டு போனார்கள்...................
 ரத்தம் செக் செய்யபட்டது, ரிசல்ட்........எயிட்ஸ்.......................!!!! அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் தூதரகம் மூலமாக ஊருக்கு அனுப்பி விட்டார்கள்.
      இதை நான் ஏன் சொல்ல வர்றேன்னா, நம்ம ஆளுங்க பொதுவா வெளிநாட்டில் இருப்பவர்கள், வெளியே ஹோட்டலில் சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் ஊரில் இருப்பவர்களும் நான் சொல்வதை கடை பிடியுங்கள். பாட்டலில் இருக்கும் கச்சப்போ, சில்லி சொஸ்சோ சாப்பிடாதீர்கள். கவர் செய்த பாக்கெட்டில் இருக்கும் கச்சப்போ, சில்லி ஸோஸ்சையோ சாப்பிடுங்கள் அது பாதுகாப்பானது.
 
 
டிஸ்கி : அப்பாடா  ஏதோ நம்மளால முடிஞ்சது.....
 

Wednesday, January 26, 2011

சத்தியம்

ஆர்ப்பரிக்கும் ஆழி அலை போல
ஓயாமல் பொங்குதடி உன் நினைவு
அந்த ஒற்றை பனை மரத்தை சுற்றி
அதுவும் உன்னோடு 
ஏன் எரிந்து போகவில்லை
நம் காதலுக்கு சாட்சி சொல்ல
நீ விட்டு போனாயா,
ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
பகிர்ந்து கொள்ள எனக்காக நீ
விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
காலம் இன்னும் அழிக்கவில்லையடி
என் மனதில் உள்ள காயம் போல....
என் பிள்ளைகளுக்கும் தெரியும்
அந்த ஒற்றை பனை மரத்தை,
அதை கடக்கும் போதெல்லாம் என்
மகள் சத்தமாகவே சொல்கிறாள்
இது என் டாடியின் முன்னாள்
காதலி வாழ்ந்த இடமென்று.....!!!
அக்கணம் பொங்கும் உன் நினைவு
கண்ணீராய் வெளி கொண்டு 
வர முடியவில்லை,
காரணம் நான் அழக்கூடாது என 
நீ வாங்கி கொண்ட சத்தியம்.... 
 

வந்தேமாதரம்

கொடிகாத்த குமாரனா அவரு யாரு
அவரு எங்கே கொடி வித்தாரு
வாஞ்சிநாதனா அவரு யாரு
அவரு எங்கே கஞ்சி குடிச்சாறு
ஆசீர்வாதமா [மும்பை] அவரு யாரு
அவரு எங்கே ஆசீர்வதிக்கபட்டாரு
வ உ சியா அவரு யாரு
அவரு ஏன் செக் எழுதினாரு
என்று
 நக்கல் பண்ணி 
டாஸ்மாக்கில்
லயித்து கொண்டாடும் வாலிபனே
நீ அருந்துவது
மதுவல்ல.....
அந்த மாவீரர்களின்
மனைவி குடும்பத்தின்
தியாகத்தையும்
ரத்தத்தையும்தான் என்பதை
நினைவில் கொள்.....................
 

Tuesday, January 25, 2011

வாலிபம்

வளைகுடா நாடுகளில்
பணி புரியும் பேச்சுலர்களின்
வாலிபம்
தண்ணீர்களில் மூழ்கி
கடலில் கரைகிறது
இது
வாழ்வா
சாபமா.............................

Sunday, January 23, 2011

என்னை தேடி வந்த உறவு


முந்தா நாள் எனக்கு இமெயிலில் ஒரு பதிவு வந்தது கலியுகம் என்ற பெயரில், வாசித்து விட்டு எதேச்சையாக பார்க்கும் போது ஒரு போன் நம்பர், பார்த்தால் அந்த நம்பர் பஹ்ரைன் நம்பர் அடடா நம்ம பக்கத்துலேயே ஒரு பதிவரானுட்டு!!!!! அவர் தளத்தில் போயி படிச்சி கமெண்ட்ஸ் போட்டுட்டு அந்த நம்பரில் போன் செய்தேன். ஹலோ யார் பேசுறது  தினேஷ்தானே...? மறுமுனை : ம்ம்ம்ம்ம்ம் ஆமா நாந்தான் நீ......ங்.......க......? நான் : நான் நாஞ்சில் மனோ பேசுறேன் எப்பிடி இருக்கீங்க...? ம. முனை : அப்பிடியா [நல்ல உறக்கம்] நான் உங்க பதி......., நான் : என்ன உறக்கமா பரவாயில்லை நான் அப்புறமா பேசுறேன்... ம முனை : ச.....ரி....ங்க... கட்...
 சாயங்காலம் எழு மணிக்கே  தூக்கமா கிழிஞ்சுது போ'ன்னு நினச்சுட்டே என் வேலையில் மூழ்கி விட்டேன்...
அடுத்த நாள் [நேற்று] மறுபடியும் போன் செய்தேன் ஹலோ தினேஷ் எப்பிடி இருக்கீங்க...?
 ம முனை : நான் நல்லாயிருக்கேன் சார் நீங்க எப்பிடி இருக்கீங்க..? நேற்றைக்கு ராத்திரி நான் உங்களுக்கு போன் செய்தேன் வேற யாரோ போன் [கம்பெனி மொபைல்] எடுத்தாங்க....
நான் : ஓ அப்பிடியா, இப்பிடி தொடர்ந்து விசாரிப்புக்கு பின் என் ஹோட்டல் அட்ரஸ் கேட்டார் சொன்னேன். அந்தபக்கம் வந்தால் வருவதாக சொன்னார் காலையில். நானும் ஆமா இவுரு சொன்னதும் வந்துற கிந்துற போறாரு நெனச்சிட்டு போனை வச்சிட்டேன்.
அட சாயங்காலம் மறுபடியும் போன் [[மும்பை பார்ட்டிய போட்டு தள்ள ஆட்டோ விட்டுருவாரோனு பயம்]] ஹலோ சார் ஒரு வேலை விஷயமா மனாமா வந்துருக்கேன் அப்பிடியே அங்கே வரட்டுமான்னு கேட்டார். சரி வாங்கன்னு சொல்லி அட்ரசும் கொடுத்தேன். காரில் வருவதாக சொன்னார் அப்பிடியே ஒரு அரை முக்கால் மணி நேரம் ரோடு கன்பியூஷனாகி ஏழெட்டு நேரம் திரும்ப திரும்ப போனில் மாட்லாடி வந்தே விட்டார்....!!!
ஆளு என்னை மாதிரியே ஆறரை அடி உயரம் [!!!] என்னை மாதிரியே நல்ல செவப்பு [!!!] கலர்'ல இருந்தார்.
[[சரி விடுங்க ஹி ஹி ]] எங்க ஹோட்டலுக்கு வெளியே நின்றுதான் பேச முடிந்தது காரணம் ஜி எம் மற்றும் அரபி பயலுக [கெஸ்ட் தான்] ஆபீசில் இருந்தார்கள் [அந்த நேரம் பாத்தா வரணும்]
பல விஷயங்களை பற்றி பேசினோம், மொக்கையன் செல்வா பற்றி, இம்சை ராஜா பாபு பற்றி, அட்ரா சக்கை, பன்னிகுட்டி, சித்ரா மேடம், ஜெய்லானி, பிரவீன் டெரர், சவுந்தர் இப்பிடி நெறைய பேசினோம். சித்ரா மேடம் பற்றி அவர் பதிவுகள் பற்றி தினேஷ் ரொம்ப சிலாகித்து சொன்னார்...இதேர்கிடையில் அந்த அரபி பயலுக போய் விட, உள்ளே வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு நிறைய பதிவின் நுணுக்கங்கள் சொல்லி தந்தார். நேரமில்லாததாலும் நான் டியூட்டியில் இருப்பதாலும் ரொம்ப நேரம் அளவளாவ முடியவில்லை. வியாழன் அன்று சந்திப்பதாக பிரிந்தோம்.
போகும் போது அவர் சொன்னார். [வியாழன் சந்திப்பு உறுதி ஆகிவிட்டது]
மனோ உங்களை சந்திச்சது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா [எனக்கும்தான்] நம்ம ஊர் குடும்பத்தை விட்டு பிரிஞ்சி தனியா இருக்குற நமக்கு வலை தள நண்பர்கள் நட்பு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமான்னு  அவர் நெஞ்சில் கை வைத்து சொல்லும் போது...... என் கண் கசிந்தது....
ஆம் எனக்கும்தான்....
என்னை தேடி வந்த உறவு இது...
 என்னதான் சொந்த பந்தம் இருந்தாலும் நண்பனை போல வருமா என்ன...?
நன்றி மக்கா தினேஷ்....
வியாழன் இரவு ஒன்பது மணிக்கு சந்திப்போம் [எனக்குதான் லீவு கிடையாதே]

Thursday, January 20, 2011

சாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால்

என் நண்பன் ஒருவன் நன்றாக புகைக்க கூடியவன், புகையை குறைக்க சொல்லி பார்த்து பார்த்து முடியாமல் அப்பிடியே விட்டு விட்டோம் திருந்துனாதானே....! 
தனியாக என்னோடு அவன் இருக்கும் போது, நான் நெட்டில் படித்த ஒரு தகவலை சொன்னேன். அதாவது, சாப்பிட்ட உடன் சிகரெட் புகைத்தால் அது பத்து சிகரெட்டுக்கு உண்டான கேட்டை உடம்புக்கு உண்டாக்கும் ஆகவே இனி சாப்பிட்ட உடன் புகைக்காதேன்னு சொன்னேன் அவனும் அப்பிடியானு கேட்டுகிட்டான்.
 ரொம்ப நாளைக்கு பின் ஒரு நாள் மதியம் சாப்பாடு அவனுடன் சாப்பிட நேர்ந்தது, சாப்பாட்டு ரூமில் சாப்பாடு இருந்தது இருவருக்கும்....ரெண்டு பேரும் அந்த அறையில் போயி சாப்பாட்டின் முன் அமர்ந்தோம். அப்போது திடீரென நண்பன் இதோ வருகிறேன்னு எழும்பி வெளியே போனான். எனக்கோ பசி, இப்போ ஏன் இவன் எழும்பி போகிறான்னு  எனக்கு சந்தேகம் வர, போயி பார்ப்போம்னு வெளியே வந்தேன் அங்கே அண்ணாச்சி சிகரெட்டை சுவாரஸ்யமாக இழுத்து கொண்டிருந்தான்...!! 
  டேய் என்னடா இது சாப்பாட்டு நேரத்துல இப்பிடி புகைச்சிட்டு இருக்கேன்னு கோபமாக கேட்டேன். அவன் சொன்னான், என்னங்கடா நீதானே சொன்னாய் சாப்பிட்ட பின் புகைத்தால் பத்து மடங்கு எஃபக்ட்னு...... அதான் சாப்பாட்டுக்கு முன்பே புகைக்கிறேன்னு சொன்னான்ய்யா....... நான் "ங்கே"..............................நீங்க..............???
   இவனுங்களை பத்து விவேக் என்ன ஆயிரம் விவேக் வந்தாலும் திருத்த முடியாது.....

Wednesday, January 19, 2011

இன்று காதல் இறந்த நாள்...


காதலுக்காய்
தீயில் கரிந்து போன உனக்காய்
அழுதால் கரைந்து விடும்
உன் நியாபகம் என்பதால்
அதை உன் நியாபகமாய்
என்னுள்ளில் வைத்துள்ளேன்
பத்திரமாய்..........
இன்று காதல் இறந்த நாள்...

காதல் நினைவு நாள்

என்னவளே,
நம் காதலுக்காக
தீயில் கருகி போனாயே
என்னை கோழையாக்கி விட்டு
நீ எரிந்து
அன்றே சாம்பலானாய்
நானோ
தினம் தினம்
எரிந்து கொண்டிருக்கிறேன்
காதல் தீயில்.........
உன் சுற்றம் சிரிக்கிறது
என்னை பார்த்து
என்னவளே.....
என்னை ஏன் கோழையாக்கினாய்...?
நீ கோழை ஆகாமல்
தப்பிப்பதற்கா...
எரி பிணமாய் இன்று நான்
உன் நினைவில்......
 

Sunday, January 16, 2011

வரலாற்றின் நாயகன்களில் ஒருவர்

முல்லை பெரியார் அணையின் நாயகன் "பென்னி குக்"கை வாழ்த்துவோம்.....
அணை பாதி கட்டபட்டு பிரிட்டிஷ் அரசால் கைவிடப்பட்ட அந்த அணைக்காக தன் சொந்த  சொத்துகளை விற்று, நம் மக்களுக்காக தியாகம் செய்த அவரை தலை வணங்குவோம்.
வாழ்த்துவோம்....
வரலாற்று நாயகனே.....இதோ...........
நாஞ்சில் மனோவின் கிரேட் ராயல் சல்யூட்..............

Saturday, January 15, 2011

மும்பை

என் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.
மும்பையில் என்னோடு வேலை செய்து ஊர்  திரும்பிய என் நண்பர்கள் சிலர், கொஞ்ச நாள்[ஒரு வருஷம்] கழித்து என்னையும் மற்ற நண்பர்களையும்  காண்பதற்காக, அவர்கள் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு மும்பை வந்திருந்தார்கள்....நல்லா ஊர் சுற்றி காண்பித்தோம். அப்பிடி ஒரு நாள் ஊர் சுற்றி முடிச்சுட்டு மாலையில் எங்க ஏரியா பார்'ல ஏறி உக்கார்ந்து சரக்கடிச்சுட்டு லேடிஸ் பார்[முஜ்ரா] போவதாக ஏற்பாடு. நல்லா சரக்கடிச்சுட்டு [[அது அப்போ, இப்போ நான் ரொம்ப நல்லவன்]] பாரை விட்டு நாங்கள் வெளியே வந்த போது லேடீஸ் பார் போக ரிக்ஷாவை கூப்பிட ரிக்ஷாகாரர் எங்கள் கோலத்தை பார்த்து வரமுடியாதுன்னு [[ரஃப்பா.....நாங்க அதை விட ரஃப்பால்லா  இருக்கோம்]] சொல்ல, என் நண்பன் விட்டான் பளார் அடி [[காரணம் மதராசின்னு அவன் கேவலமா ஒரு லுக்கு விட்டதுதான்]] நண்பர்களின் அடி தொடர் அடியாக மாற ஆட்டோகாரர் ஆட்டோவோடு ஓடினார், அடுத்த ஆட்டோகாரனிடம் கேட்க்க அவனும்  ஓட தொடர் அடி அடி அடி அடி....
     பொதுவாக மும்பையில் அப்போ எங்கள் கொள்கை!! என்னன்னா பிரச்சினை பண்ணனும்னா பத்து நிமிஷத்துக்குள்ளே [[நண்பனுக்காக]] காரியத்தை முடிச்சிட்டு கெளம்பிடுரதுதான் வழக்கம்!! மக்கள் சுதாரிக்குரதுக்கு முன் எஸ்கேப் ஆகிரனும் இல்லைன்னா மும்பைவாலாக்கள் எலும்பை எண்ணி விடுவார்கள். [[ஆனா இப்போல்லாம் அது நடக்காது எங்கெங்கும் போலீஸ்....சுட்டே விடுவார்கள் சூட்டிங் ஆர்டர் உண்டு]]
நண்பர்களை நான் துரிதபடுத்தியும் அவர்கள் அசையவில்லை காரணம் மும்பை அனுபவம் இல்லாத தமிழ்நாட்டு நண்பர்கள், அதிலும் ஒருவன் தமிழ்நாடு போலீஸ்!!
   ஆக நம்ம போலீஸ் அண்ணாச்சி வந்தே விட்டார்கள், எழு பேரையும் ஒரே ஜீப்பில் அள்ளி போட்டு ஸ்டேசன்[சின்ன] கொண்டு போயி விசாரிக்க, யாரடா உங்க தலைவன்னு ஒரு போலீஸ் கேட்க்க நாசமா போன நண்பன் ஒருவன் என்னை கை காட்ட....எகரை மொகறையா எனக்கு கசாப்பு  கிடைத்தது...அதில் அந்த தமிழ்நாடு போலீஸ் நண்பனுக்கு ஹிந்தி தெரியாது...அவன் நானும் போலீஸ் நானும் போலிஸ்னு தமிழ்ல சொல்ல மும்பை போலீஸ் அவன் திட்டுறதா நினச்சி அவனுக்கும் கசாப்பு கொடுக்க, அவன் ஐடி'யை எடுத்து காட்ட முற்பட நான் தடுத்தே விட்டேன் காரணம் அவன் எதிகாலம் கருதி.... அப்புறம் ஒரு வழியா சாகர் ஏர்போர்ட் போலீஸ்[பெரிய] ஸ்டேசனுக்கு கொண்டு போனார்கள்..அங்கே இருக்கும் போலீஸ் எல்லாமே எனக்கு தெரிந்தவர்கள் காரணம் நான் ஏர்போர்ட்டில் வேலை செய்பவன், அவர்கள் என்னை தம்பி என்றே அழைப்பார்கள்.
என்னை பற்றி அவர்களுக்கு தெரிஞ்சதாலே ஆளுக்கு ஐம்பது ரூபா அபதாரம் அடிச்சுட்டு விட்டு விட்டார்கள்....
  ஆமா நாங்க எங்கே போக கிளம்பினோம்..? ஆங் லேடீஸ் பார்.
தமிழன்னா இளப்பமாடான்னு வெறி [ஏற] வர, நேரே வீட்டுக்கு போயி வேணும்னேதான் எல்லோரும் லுங்கிக்கு மாறினோம்.
லுங்கி கட்டியவனேல்லாம் மதராசின்னுதான் சொல்லுவாங்க இங்கே, அதான் லுங்கி!!! கட்டிட்டு ஆட்டோ பிடிச்சு [பாவம்] லேடீஸ் பார் போக, அங்கே இருந்த செக்கூர்ட்டி தடுக்க அங்கேயும் ஒரே ரகளை....ஒரு வழியா உள்ளே விட்டுட்டாங்க....ஆஹா ஒரே ஆட்டம்தான் லுங்கிய தூக்கி  கட்டிட்டு ப்பூப்ப்....!!!!!
அங்கே  வந்தவன்  எல்லாம் ஏதோ ஆதிவாசி காட்டுக்குள்ளே வந்த பீலிங்குல இருந்துருப்பானுவளோ...
ஆக அன்னைக்கு செலவாகிய பணம் ஒம்பது ஆயிரம் ரூபா.....எல்லாரும் சேர்ந்தே கொடுத்தோம்...ரெண்டு மணிக்கு பார் பூட்டியதும் வெளியே வந்து எங்களை  மதராசின்னு தடுத்தானே செக்கூரிட்டி அவருக்கும் எனிமா கொடுத்து விட்டார்கள் நண்பர்கள். ஆனா இந்த முறை பாஸ்ட் எஸ்கேப்....
அந்த தமிழ்நாடு போலீஸ் நண்பன் இப்ப  சப் இன்ஸ்பெக்டர்'ரா   இருக்கான் நெல்லை மாவட்டத்தில்!!!! போலீசுக்கே கசாப்பு ஹா ஹா ஹா மறப்பானாக்கும்.....!!!
    நான் என்ன சொல்ல வர்றேன்னா நாங்க செய்தது எல்லாமே தப்புதான்  இல்லையா...?
இருந்தாலும், அதிலும் மும்பையில் அந்த நாட்களில் எனக்கு இருந்த தைரியம், வேகம், வாழ்க்கை பற்றிய அலட்சியம், நண்பனுக்காக அடி வாங்குறது, கொடுக்குறது, எதையும் சந்திக்க நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்துவது.................!!!! [[ஒரு வேளை இந்த அனுபவம்தான் மும்பையில் செட்டில் ஆக தைரியத்தை தந்ததோ]]
ஆத்தீ........... இப்போ நினைச்சா  கனவு போல ஆச்சர்யமா இருக்குதுய்யா...!!! இப்போ போலிசை ஒரு கிலோமீட்டர் தூரத்துல கண்டாலே வேற வழியா போயிடுறேன்...!!! எந்த தகராறோ பிரச்சினையோ பண்ண துணிவில்லை, அது தேவையும் இல்லைன்னு மனசு சொல்லுது "துஷ்டனை கண்டால் தூர விலகு" அப்பிடிதான் இப்போ நானும் நண்பர்களும்....!!!
 
 டிஸ்கி : இப்போ மும்பை ரொம்ப மாறிடிச்சி அமைதி அமைதி...ஆனா என்ன  இடையிடையே குண்டு மட்டும் வெடிக்கும், அதையும் மும்பைவாலாக்கள் சகஜமாக பழகி கொண்டார்கள்...!!!

Thursday, January 13, 2011

மலையாளி சேட்டன்

நான்கு வருடம் முன்பு பஹ்ரைனில் எனக்கு நடந்த சம்பவம்.
நான் அப்போ ஹோட்டலின் வரவேர்ப்பாளராக பணி புரிந்த நேரம்,
பொதுவாக சவூதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் என்ஜாய் பண்ணுவதற்கு பஹ்ரைன் வந்து போவதுண்டு, அப்பிடி ஒரு மலையாளி இஞ்சினியர் எங்கள் ஹோட்டலில் தங்கி இருந்தார். நான் டியூட்டியில் இல்லாத சமயம் அவர் வந்ததால் நான் அவரை பார்க்கவில்லை. மறுநாள் நான் வேலைக்கு [மாலை டியூட்டி] போன போது, எனது வேலையில் மும்முரமாக இருந்து கொண்டிருந்தேன்....
நீங்கள் சினிமாக்களில் பார்த்திருப்பீங்க அதாவது ஹோட்டல் ரிஷப்ஷனில் வேலை செய்பவர்களின் தலை, முகம் எப்போதும் கவுண்டருக்குள்ளேயே இருக்கும் பரபரப்பாக எதையோ செய்து கொண்டிருப்பார்கள்....வெளியே இருந்து பார்க்கும் நமக்கு அவர் ரொம்ப பிஸியா இருப்பதாக தோன்றும், ஆனால் உண்மையில் அது அவ்வளவு உண்மை இல்லை... ரிஷப்ஷனில் உள்ள அண்ணாச்சியோ அல்லது அண்ணாச்சினியோ வீடியோ கேம் அல்லது சாட்டிங் இன்னும் பிற விஷயங்களில் மும்முரமா இருப்பாங்க [ஏன் எங்க ஹோட்டலில் நீல படம் பாத்தவனையும் பிடிச்சிருக்கேன்]  
                    சரி நாம் நம்ம விஷயத்துக்கு வருவோம், அந்த மலையாளி இஞ்சினியர் ரிஷப்ஷனில் உள்ள என்னிடம் வந்தார் [மப்பில்] வந்து என்னிடம் கேட்ட முதல் கேள்வி நீ மலையாளிதானே..? [இவங்க எங்கே போனாலும் இப்பிடித்தான் போல] நான் இல்லைஎன்று "மலையாளத்தில்" பதில் சொன்னேன்...அவரு ஷாக்காகி என்னை மேலேயும் கீழேயுமாக பார்த்தார் [இஞ்சினியர் ஆச்சே] அவருக்கு நான் கிண்டல் பண்ணுவது போல் தோன்றியது போல, இதுக்கு இடையில் நாசமா போன என் மலையாளி நண்பன் ஒருவனின் போன் வந்து தொலைக்க நான் மலையாளத்தில் சரளமாக உரையாட வந்தது வினை..இதை கவனித்த  மலையாளி சேட்டன் கோபத்தின்  உச்சாணி கொம்பில் ஏறி....ஏறி என்ன ஏறி சப்பணம் போட்டு உக்காந்தே விட்டார்....."விளிக்கிடா நின்றே மேனேஜரை" என மலையாளத்தில் சொல்லி விட்டு இங்கிலிபீஸில் காட்டு கத்தல் கத்த ஆரம்பிச்சிட்டார்.. இங்கிலிபீஸில் ஹோட்டலை பற்றி பல கேள்விகள் [கத்தல்கள்] கேட்டார் நானும் பொறுமையாக பதில் சொன்னேன். அப்புறம் திடீரென ஹிந்தியில் கேள்வி கேக்க நானும் ஹிந்தியில் பதில் சொல்ல அவருக்கு நான் செமத்தனமாக கேலி செய்கிறேன்னு நினைச்சிட்டாரு...இதற்கிடையில் செக்கூரிட்டி மேனேஜரை அழைத்து விட....
    மேனேஜரும் வந்தார் அவரிடமும் அதே கேள்வி நீ மலையாளியா [நான் மனசுக்குள்ளே செமத்தனமா ரசிச்சுட்டு இருக்கேன் ஏன்னா நான் மலையாளி இல்லைன்னு உண்மையத்தானே சொன்னேன்] மேனேஜர் : ஆமா நான் மலையாளிதான் என்னாச்சுன்னு மலையாளத்திலே உரையாடல் [சண்டை] தொடங்கியது....இஞ்சினியர் என்னை கை காட்டி இவன் என்னை கிண்டல் செய்கிறான், நான் யாரு என் பேக்ரவுண்டு, பிரண்ட் ரவுண்டு என்ன.............ன்னு கத்தி தீர்க்கு மட்டும் பொருத்து விட்டு என்ன கிண்டல் செய்தான் என்று கேட்டார், அதுக்கு இஞ்சினியர் கோபமாக அவன் மலையாளிதானே..? நான் கேட்டதுக்கு அவன் மலையாளி இல்லைன்னு "மலையாளத்தில்" சொல்லுறான்னு  சொல்ல.. மேனேஜர் வெடி சிரிப்பு சிரிக்க, இஞ்சினியர் "ங்கே".....
          இஞ்சினியர் சேட்டன் முழிக்க, பிறகு மேனேஜர் சொன்னார் சாரே அவன் தமிழன், ஆனால் பஹ்ரைன் வந்து நல்லா மலையாளம் கத்து கொண்டான் எழுதவும் படிக்கவும் கூட தெரியும்னு .இங்கே இப்போ நடந்த மேட்டர் எங்களுக்கு  புதுசில்லே..!!! பல முறை பல மலையாளிகள் இவனிடம் இதே மாதிரி கேட்டு பிரச்சினை நடந்ததுண்டு....அவன் ஆங்கிலத்தில் பேசினாலும் பிரச்சினை பண்ணுகிறார்கள்..அப்பிடி சொல்லி இஞ்சினியரை சமாளித்து அனுப்பினார்...போகும் போது சேட்டன் திரும்பி பார்த்து என்னை பார்த்து முறைச்சார் பாருங்க ஒரு முறைப்பு....ஆத்தீ இன்னும் நான் அவரை கிண்டல் பண்ணுவது போலவே பார்த்தார்....ஆனால் அவர் சந்தேகம்கடைசி வரை  தீரவே இல்லை என்பது அவர் முறைப்பில் தெரிந்தது....
டிஸ்கி 1: பங்காளியிடம் மலையாளம் பேசிய சேட்டன்மார் பல பேர பார்த்துருக்கேன்....
டிஸ்கி 2 : ஏன் எனக்கு மட்டும் இப்பிடி நடக்குது....
       

Wednesday, January 12, 2011

நீக்ரோ அண்ணாச்சி

 நான் மும்பை சர்வதேச ஏர்போர்டில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். நம்ம வைகோ'வின் தம்பி முறையில் ஒருவர்தான் ஏர்போர்ட் மேனேஜரா மும்பை ஏர்போர்ட்டை கலக்கிட்டு இருந்தார். பெயர் நியாபகம் இல்லை, அங்கே ரெண்டாவது மாடியில்தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.ஒரு நாள் நானும் நண்பன் சண்முகமும் [இவன் இப்போ எங்கே இருக்கான்னே தெரியலை] வேலைக்கு போக லிஃப்ட் வர காத்திருந்தோம் கிரவுண்ட் ஃப்ளோரில், சற்று தாமதம் ஆகியது அதே நேரம் ஒரு வாட்ட சாட்டமாக ஒரு நீக்ரோ வந்து அவரும் லிஃப்ட்க்காக வெயிட் பண்ணிட்டு, லிஃப்ட் வந்தது மூணு பேரும் ஏறிக்கொண்டோம், என் நண்பன் சற்று குறும்புக்காரன், அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டுவியந்தவனாக  நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன் கையின்னு, அவ்வளவுதான் நம்ம நீக்ரோ அண்ணாச்சி அவர் ரெண்டு கையையும் மடக்கி காட்டிட்டு சொன்னார் "இப்ப என்ன செய்யணும்"ன்னு, அதுவும் பச்சை தமிழில்........எங்க ரெண்டு பேருக்கும் குலை நடுங்கி போச்சு, அதற்குள் பர்ஸ்ட் ஃப்ளோர் வர செக்கன்ட்  ஃப்ளோர் போகவேண்டிய நாங்க பர்ஸ்ட் ஃப்ளோர்லையே அலறியடித்து வெளியேறி டிப்பாச்சர் ஏரியாவுக்கு வந்து சிரி சிரி என சிரித்தோம் காரணம் நம்ம நீக்ரோ தமிழ் பேசியது!!! நாங்க சிரிப்பதை பார்த்த பிரயாணிகள் எங்களை விநோதமாய் பார்க்க அருகில் இருந்த போலீஸ் அண்ணாச்சி [அவருக்கு எங்களை தெரியும்] எங்களை துரத்த நாங்க படி வழியா ஏறி மேலே ஓடினோம், அங்கே போயும் சிரிப்பு அடங்கலை.....
  கொஞ்சம் ஆசுவாச படுத்திட்டு அப்புறமாதான் ரோசிச்சொம் இவனுக்கு தமிழ் எப்பிடி தெரிஞ்சதுன்னு.... மக்கா அவனை பாத்து கேட்டே ஆகணும்னு ரெடி ஆனோம் அந்த நீக்ரோ கையில இருந்த ஏர் டிக்கெட் கே எல் எம் ஏர்வேஸ்.. ஓடினோம் அந்த போர்டிங் கார்ட் வாங்குற இடத்துக்கு. ஆளைக்காணோம் அங்கும் இங்குமாக அலைந்து அண்ணாச்சிய கண்டே பிடிச்சுட்டோம்!!
     ஒரு பேங்க் கவுண்டர் பக்கம் உள்ள சேரில் அமர்ந்துருந்தார்...அந்த சேர் மூன்று பேர் அமர கூடிய இருக்கை ஆகும். நாங்களும் மெதுவாக அவர் அருகில் போனோம்.... நல்லா ஜாலியான மனுஷன் போல அவரே கேட்டார், நீங்க தமிழா'ன்னு, பதில் சொல்லாம[ஆச்சரியத்தில்]மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சோம்.... அவர் ஓ சாரின்னுட்டு புக் படிக்க ஆரம்பிச்சார்... பிறகு நாங்க ஆமாம்  நாங்க தமிழ்தான் என சொல்ல...சாதாரண நல விசாரிப்புகள்...நடந்தது தமிழில்.....!!!
    பிறகுதான் கேட்டோம் உங்களுக்கு தமிழ் எப்பிடி தெரியும்னு....
அவர் சொன்னார் மதுரை உசிலம்பட்டி அரசியல்வாதி  [பெயர் மறந்துடிச்சு] ஒருவரின்  அக்காவுக்கு பாடிகார்டா இருந்தாராம்!!!! இவர் மட்டும் இல்லையாம் இன்னும் மூணு பேர் வேலை செய்யுறாங்கன்னு சொன்னார்....இன்னும் நிறைய பேசினார்.
அவர் அழகிய தமிழில் பேசியது அருமையாக இருந்தது....
ம்ஹும் எந்த நாட்டுகாரனா இருந்தா என்ன அவர்கள் தமிழ் பேசினால்,
என் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா...
கடைசிவரை அவருடன் இருந்து வழி அனுப்பினோம்,
டிஸ்கி : டியூட்டிக்கு போயி மேனேஜர்ட்ட வாங்கி கட்டினது வேற [லேட்] விஷயம்....

Saturday, January 8, 2011

கோமாளி செல்வாவின் பதிவில் எனக்கு பிடித்தது...


குறுந்தகவல் சிரிப்புகள் :

நீங்கள் அவர்களை பூவை கொண்டு எறியுங்கள்.!
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் .,
பூ தொட்டியைக் கொண்டு எறியுங்கள் , சாவட்டும் .!

*.அப்பா : அம்மா அடிச்சதுக்கு ஏன்டா அழுற ..?
மகன் : சும்மா இருங்கப்பா ..! உங்கள மாதிரி எல்லாம்என்னால அடி தாங்க முடியாது...!!

*.ஒரு குளத்தில் 22 எறும்புகள் குளித்துக் கொண்டிருக்கு ...
அப்போ ஒரு யானை வந்து குளத்தில் ட்ய்வ் அடிக்குது ...
அந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 21 எறும்புகள்
கரைல போய் விழுந்திருச்சு .. ஒரு எறும்பு மட்டும் யானைதலைல போய்
விழ்ந்திருக்கு ... அத பார்த்த கரைல இருந்த ஒரு எறும்புசொல்லிச்சாம்..
"கொய்யால அவன அப்படியே தண்ணிக்குள்ள அமுக்குடாமாப்ள ..."

*.மகன் : "அப்பா ஓவரா என்னை பக்கத்து வீட்டு பொண்ணோட கம்பர் பண்ணி பேசிக்கிட்டே இருப்பியே ... இப்ப பார்த்தியா அது 470, நான் 480 மார்க்! "
அப்பா : அட நாயே .. அவ 10TH , நீ +2..

*.அப்பா : "அப்பா சொல்றத கேக்கணும் .. இல்லனா உருப்படமுடியாது ...!"
மகன் : "அதுக்கு இப்ப பீல் பண்ணி என்ன பிரயோஜனம் ...தாத்தா சொல்லும் போதே கேட்டிருக்கணும் ...!"
அப்பா : .....?

*.முடி வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் ..!
ஆனா அறிவு வளர்ந்தா வெட்ட முடியுமா ...?

கவலை படாதிங்க உங்க நல்ல மனசுக்கு அப்படி எல்லாம்ஆகாது ...!

*.ஒரு மனிதர் ரயில் இல் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி இறங்கி
ஏறிக்கிட்டே இருந்தாரம் ...
அத பார்த்த ஒருத்தர் "ஏன் ஒவ்வொரு ஸ்டேஷன் ஆகஇறங்கி ஏறுரீங்கஅப்படின்னு கேட்டராம் .
அதுக்கு அந்த மனிதர் சொன்னாரம் " டாக்டர் நீண்ட தூரபயணம் போகதிங்கனு சொல்லிருக்கார் . அதான் ஒவ்வொருஸ்டேஷன் ஆக இறங்கி ஏறுறன்".

*.காற்றில் அவள் துப்பட்டா என்மீது விழுந்தது... எனக்குபயங்கர சந்தோசம்..
பைக் துடைக்க துணி கிடைத்தது என்று ..!

*.எப்பவெல்லாம் உங்களுக்கு படிக்கனும்னு தோணுதோஅப்ப ..
ஒரு அமைதியான அறைய தேர்ந்தெடுங்க.. கொஞ்சம்ஆசுவாசப்படுத்திக்குங்க ..
ஒரு முறை மூச்சை இழுத்து விட்டுக்குங்க ... அப்புறம்கன்னத்துல போட்டுக்குங்க .. " ராஸ்கல் இது என்ன புதுபழக்கம் ( படிக்கறது )..!"

*.உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது ..!
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் ..!
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால ..!
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க ..!
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க ..!
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் ..!

*.சத்தம் இல்லாமல் உன் இருப்பிடம் தேடி குட் நைட்சொல்ல வந்த என் எஸ்.எம்.எஸ் இனை சத்தம் போட்டுகாட்டிக் கொடுத்தது உன்னோட
ஓட்ட மொபைல் ...!

*.உயிர் இல்லாத மலரை கூட நாம் நேசிக்கிறோம் ...ஆனால் நமக்காக உயிரையும் கொடுப்பவர்களை நேசிக்கஏன் யோசிக்கிறோம் ..!? அதனால நேசிங்க ...
கோழி , ஆடு ,மீன் ...

*.அப்பா : என்னடா பேப்பர்  ரிசல்ட் வந்திருக்கு ..உன்னோட நம்பர் வரல ...?
மகன் : நமக்கு இந்த விளம்பரம் எல்லாம் பிடிக்காதுப்பா...!

*.உங்கள தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும் .. ஆனா செய்தி முக்கியமானது .. உண்மையா சொன்னா நாங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம் .. அதுல ஜோக்கேர் கார்டு காணாம போய்டுச்சு .. அதனால உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பேன் ப்ளீஸ் ....

*.டாக்டர் : மாடில இருந்து எப்பிடி விழுந்திங்க ...?
நோயாளி : ஐயோ அம்மா னு கத்திகிட்டே விழுந்தேன்டாக்டர் ..!

*.உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!

*.இந்த உலகத்தில சில விசங்களை யாராலும் மாற்ற முடியாது ..
காளிபிலோவேற தலை ல வைக்க முடியாது ..
கோல்ட் பில்டேற அடகு வைக்க முடியாது ..
கோல மாவுல தோசை சுட முடியாது ..
இந்த மாதிரி வெட்டி எஸ்.எம்.எஸ் வந்தாலும் உங்களால படிக்காம இருக்க முடியாது ...

*.எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ..
எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் ..
எங்கே வலி இருக்கிறதோ அங்கே ..
"IODEX" தடவுங்க ..வலி போய்டும் ..!

*.முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு..
அதுல ஆமை 80% , முயல் 81% மதிப்பெண் வாங்கிச்சு ..
இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன் இக்கு போனது ..
அங்க வந்து கட் ஆப் மார்க் 85%. ஆமை அட்மிசன் ஆகிடுச்சு.. எப்படி ..?
உங்களுக்கு நியாபகம் இருக்கா..? நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே .. அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...?
ஸ்போர்ட்ஸ் கோட்டா ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ...



*."கொஞ்சமா பேசு ! அதிகமா கேள் " அப்படின்னு பெரியவங்க ஏன் சொன்னாங்க தெரியுமா ...?
 incoming free.. outgiong kaasu.. அதனாலதான் ..

*.பெண் 1  : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..!!
  பெண் 2  : உளுந்து போடுறாங்களா ...??
  பெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க ..
*.ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்.,
http://www.koomaali.blogspot.com/   போயி பாருங்க கோமாளியின் லொள்ளுகளை...

Friday, January 7, 2011

அரபிக்காரன்

அடடா அரபிக்காரன் சீக்கிரம் ரோட்டுக்கு வந்துருவானோ,
செக் அவுட் நேரம் அம்பது தினார் ரூம் ரெண்ட் தந்துட்டு,
வண்டியில பெட்ரோல் இல்லை பெட்ரோல் போட ஒரு தினார் கொடுன்னு கெஞ்சுரான்யா......பாவமா இருக்கு.....!!!

Tuesday, January 4, 2011

வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...

வேல் மகேஷின் பதிவில் நான் ரசித்தது...
சுறு சுறு ப்பாய் இரு ..ஆனால் படபடப் பாய் இராதே.

பொறுமையாய் இரு ...ஆனால் சோம்பலாய் இராதே

சிக்கனமாய் இரு... ஆனால் கருமியாய் இராதே

அன்பாய் இரு ...ஆனால் அடிமையாய் இராதே

இரக்கமாய் இரு... ஆனால் ஏமாந்து விடாதே

கொடையாளியாய் இரு... ஆனால் ஓட்டாண்டியாய் இராதே

வீரனாய் இரு... ஆனால் போக்கிரியாய் இராதே

இல்லறத்தானாய் இரு ஆனால் காமவெறி யனாய் இராதே

பற்றற்று இரு ஆனால் காட்டுக்குப் போய் விடாதே

நல்லோ ரை நாடு ஆனால் அல்லோரை வெறுக்காதே...

Sunday, January 2, 2011

ஸ்பெல்லிங்

லீவுக்கு ஊர் [மும்பை] போயிருந்தப்ப நடந்தது,
 அவசரமா ஒரு 30.000 ரூபாய் தேவை பட்டதால் பேங்கில் பணம் எடுக்க கிளம்பினேன்.
செக் புக்கை எடுத்து எழுத முயன்ற போது thirty க்கு ஸ்பெல்லிங் மறந்து போச்சு, வீட்டம்மா சொன்னாள் பையன்ட்ட கேளுங்கன்னு அவன் நல்லா உறங்கிட்டு இருந்தான். எழுப்ப மனமில்லை
 [[காலை மணி ஒன்பது]] இருந்தாலும் என் மனைவி எழுப்பினாள். அவன் உறக்க சோம்பலில் இருந்தான். அவனிடம் சொன்னேன் மோசஸ் டாடிக்கு thirty க்கு இங்கிலீசுல ஸ்பெல்லிங் மறந்து போச்சு இந்த பேப்பர்ல எழுதி காட்டேன்'ன்னு சொல்லி ஒரு பேப்பரையும் பென்னையும் கொடுத்தேன். அவன் கூலா வாங்கி வெறும் 30 ன்னு எழுதி குடுத்துட்டு மறுபடியும் தூங்கிட்டான்!!
நான் "ங்கே" மனைவி சிரியோ சிரின்னு சிரிக்குறாள்...நானும் ரசிச்சி சிரிச்சுட்டு பையனுக்கு சொன்னப்புறம் thirty ன்னு எழுதி தந்தான் அதுக்கு பிறகு எப்போ thirty எழுதினாலும் இந்த சம்பவம் நினைவுக்கு வரும். மனதில் பரவசம் படரும்....ம்ம்ம்ம்ம்ம்ம் சிறு பிள்ளைகள் செய்யும் குறும்புகளை ரசிக்க நமக்கு கூடுதல் கொடுப்பினை வேணும்.
 ரெண்டு மாசம் லீவில் என்னத்தை ரசிக்கிறது....
 
டிஸ்கி : இனி thirty ய மறப்பே மறப்பே மறப்பே.....

லீவு லெட்டரை ரெடி பண்ணு

என் கோபத்தில் அமைதி
என் சந்தோஷத்தில் புன் முறுவல்
என் வளர்ச்சியில் உன் பங்கு
என் பிள்ளைகளின் தாய்
எனக்கு நீ யார்...?
ஆம் என்னவளே...
 நீயும் என் தாய்தான்...
உன் மடியே
என் ஆறுதல்...
போனில்தான் நம் வாழ்க்கை
கரைகிறது...
[[சரி சரி அழாதே அழாதே, லீவு லெட்டரை ரெடி பண்ணு, வீட்டம்மாவுக்கு போனை போடு]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!