Tuesday, April 27, 2021

வாழ்க்கை குறிப்பிலிருந்து மாறாத நினைவுகள்.

 

கொல்லாம்பழம் [முந்திரி பருப்பு பழம்] சீசன்ல எங்க ஊர்ல கலர்கலரா விதவிதமா பழுத்த பழங்கள் கிடைப்பதுண்டு....துண்டுதுண்டா வெட்டிப்போட்டு உப்பும் மிளகும் கலந்து ருசிக்க ருசிக்க ரசித்து சாப்பிடுவதுண்டு....


திகட்டியதும், மிஞ்சிய பழங்களை சாறெடுத்து கண்ணாடி பாட்டல்களில் ஊற்றி மண்ணுக்குள்ளே புதைச்சு ஊறவைப்போம்...ஐந்தாவது நாள் குப்பிகளை வெளியே எடுத்து, புளியங்காயில் உப்பு தேய்த்து அந்த கொல்லாம்பழ சாறை [கள்ளாம்]  குடிப்போம், ஒருமாதிரியா புளிச்சிட்டு சுவையாக இருக்கும்.


ஒருநாள் எங்க அம்மா வீட்டுக்கு பின்னால வீடு பெருக்கினப்போ, கேஸ் முட்டி ஒரு குப்பி மூடி மண்ணுக்குள்ளிருந்து மேலே எழும்பி நிற்க...தோண்டி எடுத்தா...கொல்லாம்பழ கள்ளு...[போதையெல்லாம் இருக்காது]


எங்க ஊர்ல மூன்று தெரு உண்டு...தெருத் தெருவா அவுந்த என் டவுசரை தூக்கி பிடிக்கவச்சி ஓடவிட்டு தோண்டி கயிறால் வெளுத்து விட்டாங்க அம்மா...


ஆனால் அந்த பழ சாறை மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தது எங்க சின்ன அண்ணன் என்பது அம்மாவுக்கு தெரியாது நானும் சொல்லவில்லை...நான் அடி வாங்க வாங்க ரசிச்சிகிட்டே பின்னாடியே ஓடிவந்தான் பாருங்க அந்த வில்லன்ன்ன்ன்ன்...


வாழ்க்கை குறிப்பிலிருந்து மாறாத நினைவுகள்.



Thursday, April 22, 2021

அண்ணே உறுமியடி ஜோசியம்...

 

மும்பையில் பேச்சுலரா ராஜ வாழ்க்கை வாழ்ந்த காலம்...


எங்க ஏரியாவுக்கு தமிழ்நாட்டுல இருந்து அநேக ஜோசியர்கள் விதவிதமா வருவதுண்டு...அந்த நேரத்தில் சும்மா ஐஸ் சாப்புட்டுக்கிட்டே ரோட்டுல நேரம்போக்கிட்டு இருந்தப்போ ஒரு வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு ஜோசியர் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டு...


அந்த வீட்டு பசங்ககிட்டே கேட்டா...


"அண்ணே...உறுமியடி ஜோசியம், சொல்வதெல்லாம் பலிக்கும்ன்னு சொன்னான்னு ஜோசியம் பாத்தோம்ண்ணே...அவன் அந்த "பெயருக்கு" ரெண்டு கல்யாணம் நடக்கும், ரெட்டை பிள்ளைகளா பிறக்கும்ன்னு பொய் சொல்றாம்ண்ணே"


"அவன் பொய் சொல்றான்னு உனக்கு எப்பிடிடா தெரியும் ?"


"செத்துப்போன என் அண்ணன் பெயருக்கு ஜோசியம் பார்த்தோம்ண்ணே"


அந்த காலத்திலேயே நம்மளை வச்சி பண்ணிருக்கானுக பாருங்க...வடிவேலு மாதிரி பில்டிங்கை ஸ்ட்ராங்கா வச்சிக்கிட்டு சுத்தியிருக்கோம்.


மலரும் நினைவுகள்...வாழ்க்கை குறிப்பிலிருந்து...

Thursday, April 8, 2021

பெண்ணென்ற வல்லினம்...

 

20m 
Shared with Public
Public
இலங்கை தமிழ் பெண்ணொருத்தி எங்கள் ஹோட்டலுக்கு வெயிட்டர்ஸாக வேலைக்கு சேர்ந்தாள், அமைதியான சுபாவம் அதிர்ந்து பேசுவதில்லை, கோபப்படுவதுமில்லை புன்முறுவலோடு கடந்தாலும்...அதிகம் பேசுவதில்லை...
ரெண்டு மூன்று நாட்கள் அவளை லேசாக கண்காணித்தேன் எதோ மனசுல ஒரு நெருடல்...நாம பேச முற்பட்டாலும், பேச கூசும் சுபாவம், வேலையில் படு சுட்டி...
இப்படியாக நாட்கள் நகர்ந்தாலும் எனக்கு அந்த நெருடல் இருந்துகிட்டுதானிருந்துச்சு...
ஒருநாள்...
வழக்கம்போல டியூட்டியில் நான் இருந்து கொண்டிருந்தபோது அந்தப்பெண் ஆவேசமாக கிச்சனுக்குள் ஓடுவதை பார்த்தேன், அப்போதே என் நெருடல் விழித்துக்கொண்டது...
போன வேகத்தில் மட்டன் வெட்டும் கத்தியோடு திரும்ப காபிஷாப்பிற்குள் ஓடினாள்...பிறகே நானும் ஓடிப்போய் பார்த்தால்...ஒரு பரபியை வெட்ட ஆக்ரோஷமாக ஓடியவளை மற்ற பணிப்பெண்கள் தடுத்து பிடித்துக்கொண்டிருப்பதை கண்டவுடன், வாக்கிடாக்கியில் செக்கியூரிட்டியை அழைத்து பரபியை பில் பே பண்ண சொல்லி வெளியேற்ற சொன்னேன்.
மேல்மூச்சு கீழ்முச்சாக நின்றிருந்தாள், என்னன்னு ஆங்கிலத்தில் கேட்டதுக்கு இலங்கை தமிழில் பதில் வந்தது..."என்ற உடம்புல கை வச்சிட்டான்"ன்னு...எனக்கு மேட்டர் புரிஞ்சிடுச்சு.
சரி, அந்த பரபி இருக்கானே அவன் மேட்டருக்கு வருவோம்....ரெண்டு வருஷமா அவனை கவனிச்சிட்டு வருகிறேன் அவன் மட்டுமல்ல இன்னும் பலருண்டு...
பெண்களை அவர்கள் மெல்லினமாகத்தான் நினைத்திருக்க கூடும்...இந்த வல்லினத்தை காணும் வரை...
அவன் மட்டுமல்ல அன்று அங்கிருந்த பரபிகளின் முகத்தில் மரண பயம் பீறிட்டு பின்பு விலகியதை அவதானித்தேன் காரணம் அவள் வெட்ட கொண்டு வந்தது மேலே போட்டோவில் பார்க்கும் அதே போலொரு அருவா....
என்னைப் பொருத்தவரை பெண்கள் வல்லினம்தான் மைலார்ட்.

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!