Thursday, April 22, 2021

அண்ணே உறுமியடி ஜோசியம்...

 

மும்பையில் பேச்சுலரா ராஜ வாழ்க்கை வாழ்ந்த காலம்...


எங்க ஏரியாவுக்கு தமிழ்நாட்டுல இருந்து அநேக ஜோசியர்கள் விதவிதமா வருவதுண்டு...அந்த நேரத்தில் சும்மா ஐஸ் சாப்புட்டுக்கிட்டே ரோட்டுல நேரம்போக்கிட்டு இருந்தப்போ ஒரு வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு ஜோசியர் தலைதெறிக்க ஓடுவதைக் கண்டு...


அந்த வீட்டு பசங்ககிட்டே கேட்டா...


"அண்ணே...உறுமியடி ஜோசியம், சொல்வதெல்லாம் பலிக்கும்ன்னு சொன்னான்னு ஜோசியம் பாத்தோம்ண்ணே...அவன் அந்த "பெயருக்கு" ரெண்டு கல்யாணம் நடக்கும், ரெட்டை பிள்ளைகளா பிறக்கும்ன்னு பொய் சொல்றாம்ண்ணே"


"அவன் பொய் சொல்றான்னு உனக்கு எப்பிடிடா தெரியும் ?"


"செத்துப்போன என் அண்ணன் பெயருக்கு ஜோசியம் பார்த்தோம்ண்ணே"


அந்த காலத்திலேயே நம்மளை வச்சி பண்ணிருக்கானுக பாருங்க...வடிவேலு மாதிரி பில்டிங்கை ஸ்ட்ராங்கா வச்சிக்கிட்டு சுத்தியிருக்கோம்.


மலரும் நினைவுகள்...வாழ்க்கை குறிப்பிலிருந்து...

2 comments:

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!