Monday, May 3, 2021

மக்கள் நாயகன்...


 

கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கம்பு சுழட்டி தங்கம் கடத்தல் பிராதில் இணைத்து பேசினாலும் மனுஷன் அசரவேயில்லை, குடுமிதான் அவர் கையில் முழு தேங்காயும் இருந்தது பிஜேபி ஆளுங்க கையில் என்பதால்...அந்த வழக்கு தனக்கு தண்ணீர் பிரம்பு என்று கூலாக சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க போய்விட்டார்.


அடுத்து காங்கிரசில் இப்போ பெயர் சொல்லும் அளவுக்கு முன்னிலையாக யாருமே வராததும் ஒரு காரணம், உள்ளுக்குள்ளே டவுசரை [வேஷ்டியல்ல] கழட்டுறதிலேயே பிசியாக இருக்கிறார்கள்.


பினராயியின் பணி சிறப்புகளில் ஒன்று, அரசு பள்ளிகளின் வளர்ச்சி, தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படுகிறது என பினராயியை விரும்பாதவர்களே ஒத்துக்கொள்கிறார்கள், பிஜேபியின் சங்கி [என் நண்பன்] ஒருவரே தன மகளை அரசுப்பள்ளியில் சேர்த்துக்கொண்டு சாட்சியாக இருக்கிறார்.


ஆக...கூட்டிக்கழிச்சி பார்த்துதான் கேரளா மக்கள் தெளிவாக வாக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.


தமிழ்நாட்டிலோவென்றால்....தாடியையும் சந்தான பாரதியையும் தாங்கி முட்டுகுடுக்கவே அவர்களுக்கு போதிய நேரமில்லாமலிருந்து !


சுடலை வந்து என்ன செய்வாராம் ?


இப்போவே கரண்டுக்கு கண்ணை கட்டிக்கிட்டு வருதாம், சென்னையை சிங்கார சென்னையாக்கி சிங்கப்பூரா மாத்துவேன்னுட்டு சென்னை மேயரானார் சுடலை, அப்போ தி நகர் அருணா ஹோட்டல்ல கொசுவை சமாளிக்கமுடியாமல் நான் அலறுனது ஒரு தனிக்கதை !



No comments:

Post a Comment

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!