Tuesday, February 23, 2016

கணவன் மனைவி 18+...

நேற்றிரவு...


தினம்தோறும் பலமணி நேரமாக இரவு வீட்டம்மாகூட போன் பேசிகிட்டு இருப்பார் பக்கத்து ரூம் மலையாளி சேட்டன், என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும், சமையல் எல்லாம் அவர்தான் பண்ணித்தருவார், என்னை எதுவுமே செய்ய விடமாட்டார். [[தெரிஞ்சாதானே]] 

இங்கே மணி இரவு பத்து என்றால் ஊரில் மணி இரவு பனிரெண்டரை, அதுவும் கேரளா கிராமங்களில் ஏழு எட்டு மணிக்கே ஆளரவம் இருக்காது தூங்கிவிடுவார்கள்...

இவர் வீட்டம்மா தூங்காமல் அப்பிடி என்னதான் பலமணி நேரமா பேசுறாங்கன்னு கேக்க [[ஒட்டுதான்]] ஆசையாகிருச்சு நேற்று...

"காம்பௌண்ட் கேட்டை மூடினாயா ?"

"..........."

"ஸ்கூட்டரை கவர் போட்டு மூடினாயா ?"

".........."

"மெயிண்டோர் கதவை பூட்டியாச்சா ?"

"பிள்ளைங்க ரூம் கதவையெல்லாம் சாத்திட்டியா ?"

"அப்பா அம்மா தூங்கியாச்சா ?"

"கியாஸ் பூட்டுனியா ?"

"நம்ம ரூமுக்கு வந்துட்டியா ?"

"கதவை தாழ்பாள் போட்டுட்டியா ?"

"பெட்ஷீட் தலையணை எல்லாம் கிளீனா இருக்கா ?"

"................."

அப்புறம் எல்லாமே 18+ ங்கோ...கொய்யால எனக்குத்தூக்கமே போச்சு...

வெளிநாட்டு மனித வாழ்க்கையின் விநோதங்களில் இதுவும் ஒன்று...

நண்பர் ஒருவர் சொன்னார், ஒற்றைத் தலையணை வாழ்க்கை சரியானதல்ல"வென்று...சரிதான் !

10 comments:

  1. ஆகஸ்டுக்கு அப்புறம் இன்னைக்குத்தான்
    சொந்த வீட்டுக்கு வர்றீங்க...
    வாங்க.. வாங்க
    வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப கேப் விட்டுப்போச்சு, இனிதான் அக்சிலேட்டரை கொஞ்சம் வேகமா அமுக்கணும், மிக்க நன்றி...

      Delete
  2. வணக்கம்
    நல்ல உரையாடல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைட்டும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. போனில் தாம்பத்தியம் என்னத்த சொல்ல...

      Delete
  3. எப்படியோ வலையை தூசுதட்டிவந்தாச்சு இனி இன்னும் பல 18+ எழுதுங்கள் .பிரிவு என்பதும் துயரம் தான் .

    ReplyDelete
    Replies
    1. தட்டனும்ல்லா ? தேர்தல் வேற நெருங்குது...

      Delete

  4. உங்க பக்கத்து ரூம் சேட்டங்கிட்ட கேட்ட நானெல்லாம் அப்படி பண்ணல மனோதான் அப்படி பண்ணுறான்னு சொல்லி அழுகுறாறே இதுல யார் சொல்லுறதை நம்புறது ஹும்ம்ம்

    ReplyDelete
  5. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு. தொடர்ந்து எழுதுங்கள் மனோ.

    ReplyDelete
  6. makkaa... அப்படியே அந்த மொராக்கோ காரி என்னாச்சுன்னு சொன்னா நல்லா இருக்குமே..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!